செவ்வாய், நவம்பர் 07, 2006

ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிவரும் 'சிவாஜி' திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் வேளையில் குங்குமம் வார இதழில் வெளியான இப்பேட்டியும் பரபரப்புக்குள்ளானதில் வியப்பொன்றும் இல்லை...





வியாழன், செப்டம்பர் 21, 2006

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

சென்ற இதழ் தொடர்ச்சி

பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!

"சிந்தனையாளர்' வே.ஆனைமுத்து

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும் பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும் பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்களே?

பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.

அதிபர் ஸ்டாலினை சந்திப்பதற்காக பெரியார் ரஷ்யா சென்றிருந்தார். அந்த நாளில் அவர் எழுதிய டைரி குறிப்புகள் உங்களிடம் இருப்பதாக ஒரு தகவல் அறிந்தோம்... அது பற்றி?

பெரியார் ரஷ்யாவுக்குப் புறப்பட்டது 1931-ம் ஆண்டு நவம்பர் மாதம். 1932-ம் அண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை ரஷ்யாவில் தங்கியிருந்தார். 90 நாட்கள். அதில் எனக்குக் கிடைத்தது முப்பது நாள் டைரி மட்டுமே. அதில் எந்தெந்த ஊருக்குப் போனேன். யார், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று எழுதியிருக்கிறார். இவர் அங்கு சென்றிருந்த நாளில் மாதா கோவிலை புல்டோசர் வைத்த இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கோவிலையும் இடித்துத் தள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அப்புறம் இடிப்பதை நிறுத்திவிட்டார்களாம். அதை குடோனாகவோ, லைப்ரரியாவோ, பள்ளிக்கூடமாகவோ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதையெல்லாம் பெரியார் எங்களிடம் சொன்னார். ஆனால் கோவில்களுக்கு சொத்து இருக்கக் கூடாது என்று பறிமுதல் செய்து விட்டார்கள்.சில கோவில்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அங்கு நரைத்த தலையர்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

அப்போது மாதா கோவிலை இடித்தவர்கள், பிறகு லெனின் சிலையையும், ஸ்டாலின் சிலையையும் இடித்தார்களே...

அதன் பிறகு வந்த தலைவர்கள் கொள்கையைத்தக்க வைப்பதைவிட, பதவிகளை தக்கவைப்பதை முதன்மையாகக் கொண்டார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். அதையும் ரஷ்யாவில் அனுமதித்தார்கள். மதம் உள்ளே நுழைந்ததும் அது சோவியத் அரசாங்கத்தையே மாய்க்க காரணமாகிவிட்டது. இப்போது அங்கிருந்து வருகிறவர்கள் நாங்கள் அங்கே மிகவும் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். விபசாரம் நடக்கிறது, கொலை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது...

பெரியாருடன் பழகியதில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்லுவீர்கள்?

பெரியார் நூல்களை தொகுக்கும் பணியில் இருந்தபோது, "இரங்கல் செய்திகள்' என்று ஒரு பகுதியைத் தொகுத்தேன். இரங்கல் செய்திகள் என்றால் தலைவர்கள் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கைகள். காந்தி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கையைப் படித்துக் கொண்டு வந்தபோது, திடீர் என்று, ""நாகம்மாள் செய்தி இதில் இல்லையா?''னு கேட்டார். "கவனக் குறைவாக விட்டுவிட்டோமே' என்று வருத்தப்பட்டு, அன்று இரவே அதை தேடி எடுத்து எழுதிக் கொண்டு வந்து படித்துக் காட்டினேன். நான் படித்துக்காட்டியது 73 ஜூலை மாதம், இவர் நாகம்மைக்கு இரங்கல் கடிதம் எழுதியது 33 மே மாதம். 40 வருஷ இடைவெளி. என்ன ஆச்சர்யம்!நான் முதல் பாராவைப் படிக்கிறேன். இவர் இரண்டாவது பாராவை அப்படியே சொல்கிறார். "'நாகம்மையார் மறைவு எனக்கு துணை போயிற்றென்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற் றென்று சொல்வேனா? அதரவு போயிற்றென்று சொல்வேனா? அடிமை போயிற்றென்று சொல்வேனா? எல்லாம் போயிற்றென்று சொல்வேனா?'' என்று சொல்லிக் கொண்டே அழுதார். எனக்கும் அழுகை வந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

"பெரியார்' என்ற பெயரிலேயே திரைப்படம் தயாராகிறதே...?

அந்தப் படம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஞான ராஜசேகரன் என்னுடன் கலந்து பேசினார். அவர் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கேட்டார். 2005ல் திருவனந்தபுரத்தில் அவர் பதவியில் இருந்தார். அப்போது நான் அங்கு வைக்கம் போராட்டம்பற்றி ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போதும் சந்தித்தார்.

-தமிழ்மகன்
படங்கள்: பாலா

வெள்ளி, செப்டம்பர் 08, 2006

பெரியார் சிந்தனைகள் மீண்டும் வெளிவரும்

பெரியாருடன் பழகிவந்த தொண்டர்களில் குறிப்பிடத் தக்கவர், சிந்தனையாளர் தோழர் ஆனை முத்து. பெரியார் எழுதிய கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாகப் பதிவு செய்த பெருமை அவருக்கு உண்டு.
"பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த மூன்று தொகுதிகள் இன்றும் பெரியாருக்கான ஆதார பொக்கிஷமாக விளங்கி வருகின்றன. ஜெராக்ஸ் போன்ற வசதி இல்லாத காலகட்டத்தில் கைகளால் எழுதி, தொகுத்து வெளியிடப்பட்ட சுமார் 3400 பக்கங்கள் கொண்ட நூல் அது. அந்தத் தொகுதிகளை பெரியார் சரிபார்த்துக் கொடுத்த அந்த நெகிழ்ச்சியான, முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எற்பட்டது?

1970-ம் ஆண்டு திருச்சியில் சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். அதை பெரியார்தான் துவக்கி வைத்தார். (07.03.1970)
பெரியாரை தலைப்புவாரியாகப் பேசவைத்து அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். மீண்டும் 72-ல், அதையே விரிவாகச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். பெரியாரின் பேச்சு, எழுத்து அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தனையாளர் கழகம் மூலம் தீர்மானம் போட்டோம்.
பொருளடக்கம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் காண்பித்தேன். அது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது தெரிந்து, மீண்டும் ஒரு மாதம் ஆலோசித்து மற்றொரு பொருளடக்கம் தயாரித்துக் காண்பித்தேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. "ஆரம்பிச்சுடுங்க' என்றார்.
திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார்.
72 ஜனவரியில் ஆரம்பித்து 73 செப்டம்பர் 13-ல் முடித்தேன்.
இடைவிடாமல் படித்து எதை எதை பதிப்பிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்வேன். அச்சுக்குப் போகவேண்டிய பத்திகளை சிவப்பு மையால் "மார்க்' செய்து விடுவேன். அவ்வளவையும் நானே எழுத வாய்ப்பில்லையே. அவற்றையெல்லாம் நகல் எடுக்கிற வேலையை 73 பேரை வைத்து செய்தோம். அதை பெரியாரிடம் காட்டினேன். அதை சில இடங்களில் படிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் அப்படி கேட்ட 500 பக்கங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். கடைசி பக்கத்தில் "சிந்தனையாளர் கழகம் இதை நூலாக வெளியிட உரிமை அளிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உரிமை எழுதிக் கொடுத்தது ஆகஸ்டில். அச்சுக்குக் கொடுத்தது செப்டம்பர் 17-ல்.
நவம்பர் 30-ம் தேதி வாக்கில் 400 பக்கங்கள் அச்சாகியிருந்தது. இந்தப் பக்கங்கள் வரை பெரியார் பார்த்து விட்டார். இந்தப் பக்கங்களைப் பெரியார் பார்த்தது கடலூரில் வக்கீல் ஜனார்த்தனம் வீட்டில். பின்னர் அவர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகி, இப்போது சென்னையில்தான் இருக்கிறார்.
அடுத்த 25 நாட்களில் பெரியார் இறந்துவிட்டார் (24.12.73).
பிறகு 74-ஜூலையில் "ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்' மூன்று தொகுதிகளை வெளியிட்டோம். புத்தகம் தயாரிக்க நாங்கள் இரண்டு முறைகளைக் கையாண்டோம். ஒன்று நன்கொடை வசூலிப்பது. இரண்டு, முன்பதிவு செய்வது. முன்பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம். இரண்டுக்குமே ஒத்துழைப்பு இல்லை. வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் அச்சிட வேண்டியதாக இருந்தது. மூவாயிரம் பிரதிகள் அடிக்க 60 ஆயிரம் ரூபாய் ஆனது. இரண்டு ரூபாய் வட்டி. புரோநோட்டு எழுதிக் கொடுத்து தலைவர், பொருளாளர், செயலாளர் கையெழுத்துப் போட்டோம்.
79- ஆண்டுதான் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. கடனை அடைத்து, மீதி இருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து மலையாளத்தில் 200 பக்க அளவில் பெரியார் சிந்தனைகளை வெளியிட்டோம். அதற்குத் தலைப்பு "நானும் நீங்களும் -பெரியார் ஈ.வெ.ரா.' திருவனந்தபுரத்தில் வெளியிட்டோம். விற்பனை உரிமையை அங்கிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் கொடுத்தோம். 2000 பிரதிகளுக்கு 20 அயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவரோ, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனாலும், பொருளாதார வசதி இல்லாததாலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
1980 -ல் நிறையபேர் ஈ.வெ.ரா. சிந்தனைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். எப்படியும் அடுத்த அண்டில் "பெரியார் சிந்தனைகள்' தொகுதிகள் மறுபதிப்பு உறுதியாக வெளிவரும்.

பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் நீங்கள். அந்த அனுபவங்களையும் அதன் பயன்களையும் விவரிக்க முடியுமா?

மத்திய அரசு பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், சட்டத்திலேயே அதில் இடம் இருப்பதை முதன்முத-ல் நான்தான் எடுத்துச் சொல்ல அரம்பித்தேன். சட்ட நூல்களில் எனக்கிருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். 1975-ல் இதைச் சொன்னேன். அதை யாரும் அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.
1978ல் இந்தியா முழுக்க இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினேன். 1982 வரை நான்கு அண்டுகள் இடைவிடாமல் இந்தியா முழுவதும் சுற்றினேன். எல்லா கட்சித் தலைவர்கள், மந்திரிகள், எம்.பி.க்களைச் சந்தித்து இப்படி சட்டத்தில் இடம் இருப்பதையும், நாம் முயற்சி செய்தால் பெற்றுவிடலாம் என்றும் விளக்கிச் சொன்னேன்.
பி.பி. மண்டல் என்பவரைத்தான் முதலில் சந்தித்தேன். அரியானாவைச் சேர்ந்தவர். அவர் அப்போது எம்.பி.யாக இருந்தார். அடுத்து தனிக்லால் மண்டல் என்ற மாகாண அமைச்சரைச் சந்தித்தேன். அவர் பீகார் ஜமீந்தார். ஜனதாதள அமைச்சர். அமைச்சர் நான் சொன்ன கருத்தை எற்றுக்கொண்டு, நான் சென்னையில் போட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்து பானுபிரதாப் சிங் என்ற விவசாய அமைச்சரைச் சந்தித்தேன். அரியானா, பஞ்சாப், உ.பி., பீகார் எம்.பி.க்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன்.
எங்களின் மார்க்சிய, பெரியாரிய பொது உடைமைக் கட்சிதான் சென்னையில் 78-ம் அண்டு ஜூன் 24-ந் தேதி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் மாநாட்டை நடத்தியது. பிறகு 79 மார்ச்சில் புதுடில்யில் பெரிய ஊர்வலம் நடத்தினேன். அதே அண்டு நவம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றும் டில்லியில் நடத்தினேன். 2000 பேர் கைதானோம்.

வடமாநிலங்களில் இருந்தபோது எங்கு தங்குவீர்கள்?

சத்திரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், எம்.பி. வீடுகளிலும் தங்கினோம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டோம். நான்கு ஆண்டுகள் ஓடின. சந்நியாசி வாழ்க்கைதான். எப்படியாவது இட ஒதுக்கீடு சம்பந்தமான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும் என்று போராடினேன்.

இங்கிருந்து இதற்காகப் புறப்பட்டுப் போனது எத்தனை பேர்?

சேலத்தில் சித்தையன் என்று ஐரு பெரியவர் இருந்தார். இப்ப இறந்து விட்டார். பெரியாருடைய அண்ணனின் மருமகன் சேலம் ராஜு, முத்துச்சாமி என்று ஒருவர், இவர்களுடன் நான். நான்கு பேரும்தான் சுற்றுவோம். அதற்காக லாபம் என்னவென்றால் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இப்போது கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக 1991-ல் இருந்து போராடி வருகிறோம்.

"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும், பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும், பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற அரம்பித்திருக்கிறார்களே?

(அடுத்த வாரம்)

செவ்வாய், செப்டம்பர் 05, 2006

அபசகுனம்

அபசகுனம்

குறுக்கே பாய்ந்த பூனையை
லாரி அடித்துப் போட்டுவிட்டது
பூனைக்கு நேரம் சரியில்லை

புதன், ஆகஸ்ட் 30, 2006

பெரியாரைப் புரிந்து கொள்ளுதல்

விஷால் என்பவர் நான் எழுதிய பெரியார் படத்தின் நேர்காணலுக்கு மறு மொழி அளித்துள்ளார். பெரியார் தன் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட சாதியைத் தாக்குவதன்றி உருப்படியாக ஒன்றும் செய்ததில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்தக் கட்டுரை.
ஆறாம்திணை இணைய இதழில் வெளியான கட்டுரை இது.




ஈ.வெ.ரா. எனும் பெரியார்


-மதுசூதனன்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தும் ஏதேனும் ஓர் இயக்கத்தின் தலைமையில் இருந்தவர் எனலாம். அவர் இறப்புக்குப் பின்னரும் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்றவற்றின் முகிழ்ப்புக்கும் -யக்கநிலைக்கும் நிலைபேறாக்கத்துக்கும் பெரியார் வழிவந்த ஆளுமை முக்கிய இடம் பெறுகிறது. தமிழக அரசியலின் சமகால திசைப்போக்கு திமுக x அதிமுக இடையிலான உறவு x முரண் என்னும் தொடர்ச்சியின் ஓட்டத்துக்கும் கூட பெரியார் என்னும் ஆளுமை பயன்பட வேண்டியுள்ளது. அதாவது பெரியார் என்ற சிந்தனையாளரின்- தலைவரின் கீழ் இயங்கிய தொண்டர்களின் தோன்றல்களில் தான் இன்றைய திராவிட அரசியலின் நீட்சி. இதனால்தான் திமுக x அதிமுக x மதிமுக என தொடரும் கட்சிகளில் 'பெரியார்' திருவுருவம் இன்றுவரை லேபிலாக பயன்படுகிறது.
பெரியாரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பெரியார் குறித்த ஒரே மாதிரியான பிப்பத்தையே கட்டமைக்கின்றனர். அதாவது நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், இடஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர், பெண்விடுதலை பேசியவர் என்பவைதான் இந்த பிம்பத்தின் மூலம் வெளிப்படும் பெரியாரின் பரிமாணங்கள். இதுவரையான விவாதங்களும் சர்ச்சைகளும் இந்த அம்சங்களில் மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அல்லது சுருக்கப்பட்டுவிட்டன.
பெரியார் உருவான சூழலை, அவர் தீவிரமாக இயக்கிய தமிழ்ச்சூழலை பின்னோக்கில் பார்க்கும்போது பெரியாரை அவ்வளவு எளிதாக மேற்குறித்த அம்சங்களுக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அவரது வாழ்வும் சிந்தனையும் அதன் வழியிலான செயற்பாடுகளும் ஒரே தன்மையிலான நேர்கோட்டுப் பாதையில் அமையவில்லை. சிக்கலான முரண்கள் நிறைந்த ஆனால் பலபரிமாணங்கள் நிரம்பியவையாகவே உள்ளன. எந்த ஒற்றைவரையறைக்குள் ஆட்படாத கலகத்தன்மை வாய்ந்த பண்பைக் கொண்டிருந்தது. நிலவும் ஆதிக்க அதிகார சித்தாந்தப்பிடிமானங்களுக்கு எதிராக -யக்கும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. இந்தத் தீவிரம் அவரது வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் கன்னட தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய கன்னட பலிஜா நாயுடு வகுப்பினர் 'நாயக்கர்' பட்டப் பெயர்பூண்டு குடியேறிய இடத்தையே தாய் நாடாகக் கருதி வாழ்ந்து வந்தனர். இம்மாதிரி குடும்பத்தில் வந்தவர்தான் வேங்கடப்ப நாயக்கர். -வர் ஈரோடு நகரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே ரொம்பவும் சிரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையின் உயரத்துக்கு வந்தவர். சிறந்த வியாபாரியாக எல்லோராலும் பாராட்டப்படும் நபராக வளர்ந்தார். இவரது மனைவி சின்னத்தாய் அம்மாள். -வர்களுக்கு மகனாக 1879 செப் 17-ல் பெரியார் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஈ.வே. ராமசாமி. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் -ரண்டு சகோதரிகள் உடன்பிறந்தோர்.
சிறுவயதிலேயே செல்லமாக வளர்ந்தார். ஆனாலும் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக வளர்ந்து வந்தார். வேங்கடப்ப நாயக்கரின் சிறிய தாயார் ஈவெராவைத் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். சிறிது காலம் அவரது வளர்ப்பில் வளர்ந்தார். ரொம்பவும் சிரமப்பட்ட வாழ்க்கையை அவருடைய சிறிய தாயார் வீட்டில் வாழ்ந்தார். கட்டுப்பாடற்று திரிந்து கொண்டு வந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். அங்கு படிக்க வந்த பலதரப்பட்ட மாணவர்களுடனும் சாதிபேதமின்றி சகஜமாக பழகி வந்தார். செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்த பையன் அந்தஸ்தும் பெருமையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து முரடனாகி திரிகிறான் என்று அவருடைய பெற்றோர்கள் கவலைக்கொண்டனர். பாட்டியிடமிருந்து மகனை மீண்டும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். இவரைத் திருத்துவதற்காக பல தண்டனை முறைகளை கடைப்பிடித்தனர். ஆனால் இவர் தனக்கு சரியென்று பட்டதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்.
மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவதை இவர் நிறுத்ததாதல், தண்டனைகளும் நிறுத்தப்படவில்லை. எதையும் சகித்துக் கொள்ளும் மனவலிமையை சிறுவயது முதல் வளர்த்துக் கொண்டார். ஓருமுறை பிற்காலத்தில் சிறுவயது காலத்தை இவ்வாறு நினைவுபடுத்தினார். "காலில் விலங்கு இடப்பட்டேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாட போய்விடுவேன்''
இது போன்ற மனவுறுதி சிறுவயது முதல் ஈ,வே.ராவுக்குள் வளர்ந்து வந்தது. சிறிது காலம் ஆங்கில வழிப் பாடசாலையில் ஈ.வே.ரா சேர்க்கப்பட்டார். ஆனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. புராணம் தலைவிதி பக்தி போன்றவை குறித்து ஏதாவது விவாதம் செய்து கொண்டேயிருப்பார். பக்திமான்களை வம்புச்சண்டைக்கு இழுப்பார். பக்திமான் குடும்பத்தில் இப்படி ஒரு பிள்ளையா? என்று எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் ஈ,வே.ராவிடம் விவாதம் செய்வது அதனோடு தனது ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்பது இயல்பாக வளர்ந்து வந்தது. 12 வயதிலிருந்து 19 வயதுக்குள் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை தூண்டிவிடப்பட்டு வளர்ந்து வந்தது.. ஈ.வே.ரா சிந்தனையில் நாத்திகக் கொள்கை படிப்படியாக உருப்பெறத் தொடங்கியது.
தந்தையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். தனது திறமையால் வியாபாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார். தனியே வியாபாரத்தை கவனித்து அதைப் பெருக்க ஆரம்பித்தார். அதேநேரம் இளைஞனுக்குரிய மைனர் விளையாட்டுகளிலும் ஈடுபடத் தொடங்கினார். ஈ.வே.ராவின் தவறான போக்கை தடுத்து நிறுத்த அவருக்கு கால்கட்டு போட வேண்டுமென முடிவு செய்தனர். ஆனால் ஈ.வே.ரா மாமன் மகள் நாகம்மாவையே தான் திருமணம் செய்ய முடியுமென உறுதியாக இருந்தார். அதன்படி அவரையே திருமணமும் செய்துக் கொண்டார். மேலும் வர்த்தகம் பெருகியது. ஈ.வே.ராவுக்கு நண்பர்கள் கூட்டமும் பெருகியது.
தனது 25வது வயதில் ''தந்தையிடம் கோபித்துக் கொண்டு துறவறம் மேற்கொண்டார். காசியில் சில காலம் வாழ்ந்தார். இந்த வாழ்வு அவரது சிந்தனையில் பகுத்தறிவில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தியது. புராண இதிகாசங்களை ஆழ்ந்து படிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் அவருக்கு கற்றுக் கொடுத்தது. பின்னர் ஒருவாறு வீடு திரும்பினார்.
முற்றிலும் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1905-1919 வரையிலான காலம் ஈ.வே.ராவுக்கு 'வர்த்தகம்' சமூக ஊழியர் என்ற தகுதிகளை வழங்கியது. பல்வேறு பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வரத்தொடங்கின. ஈரோட்டில் ஈ.வே.ரா முக்கியமான நபராக உயர்ந்தார், வளர்ந்தார். நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 24 பதவிகளில் ஈ.வே.ரா முக்கிய பொறுப்புகளில் இருந்தார். வர்த்தகம் பொதுத் தொண்டு இவற்றின் மூலம் ஈ.வே.ரா ஆக்கபூர்வமான தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரஸ் கொள்கையில் படிப்படியாக ஆர்வம் கொண்டார். 1914ஆம் ஆண்டிலிருந்து ஈ.வே.ரா ஈரோட்டிலும் சென்னையிலும் காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார். சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இதே நேரம் நீதிக்கட்சியினருடன் கூட ஦ருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். அக்கால முக்கியமான தலைவர்கள் அனைவருடனும் நெருங்கி பழகி வந்தார். பிரமாணர் x பிரமாணரல்லாதார் என்ற சிந்தனை நீதிக்கட்சியினரால் ஆழமாகவே அன்று முன்வைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கையாகவும் சிந்தனையாகவுமே இயங்கத் தொடங்கியது.
சென்னை மாகாணத்தை குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலைப் பாதித்த காரணங்களால் பிராமணர் x பிரமாணரல்லாதார் பிரச்சனை முக்கியமானதாக இருந்தது. இது பல்வேறு தளங்களிலும் வெளிப்பட்டது. பிராமணர் அல்லதார் நலன்களைக் காக்கும் பிரதிநிதியென்று ஜஸ்டிஸ் கட்சிக்குமிடையில் வேற்றுமை நிலவியது மட்டுமல்லாது, காங்கிரசுக்குள்ளும் பிராமணர் அல்லாதார் தேசியம் என்று குறிப்பிடக்கூடிய உட்போக்கு ஒன்றும் -ருந்தது. ஆக இந்த சமூக முரண்பாட்டுத்தன்மை ஈ.வே.ராவின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே பின்னர் அமைந்தது.
1919ஆம் ஆண்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ஈ.வே.ரா செயல்பட்டார். மேலும் தேசிய அரசியலிலும் முக்கியமான நிகழ்வுகள் அன்றைய காலக்கட்டத்தில் நடைப்பெறத்துவங்கின. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இது மக்களிடையே பலத்த கிளர்ச்சியை உருவாக்கியது. ஈ.வே.ரா ஈரோடு நகரசபை தலைவர் பதவி உட்பட 29 பதவிப் பொறுப்புகளிலிருந்து -ராஜினாமா செய்தார். அதே போன்று சேலம் நகரசபைத் தலைவர் பொறுப்பை ராஜாஜியும் ராஜினாமா செய்தார்.
ஈ.வே.ரா காங்கிரசில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். தனது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு காந்தி பக்தராக மாறினார். கதராடை அணியத் தொடங்கினார். ஈ.வே.ரா குடும்பமே சமூக சேவைக் குடும்பமாக மாறியது. 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இங்கு தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் முடிவை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல தீவிரமாக -றங்கினார். மேலும் கள்ளுகடை மறியலிலும் தீவிரமாக பங்குக் கொண்டார். ஒருமாத சிறைத் தண்டனையும் பெற்றார்.
இதன்பிறகு ஈ.வே.ரா தீவிர சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். அதற்கேற்ற மனவுறுதியையும் சிந்தனையும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். காந்திஜி , ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகி தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார். 1924ஆம் ஆண்டில் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஈரோட்டு இல்லத்தை அலுவலகமாக்கிச் செயற்பட்டார். இதனால் ஈரோடு அரசியலில் முக்கிய இடம் பெறத் தொடங்கியது.
1924 மேயில் திருவனந்தபுரம் வைக்கம் நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நடமாடவோ அவற்றை கடந்து செல்லவோ உரிமை கிடையாது. இதற்கு எதிராக இந்த மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் வேகம் கொண்டது. ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். இந்த வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற வேட்கையை வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த சமூகநீதி சமூக சமத்துவம் பற்றிய விருப்பமும் போராட்ட மனவுறுதியும் செயலாக வெளிப்பட்டது.
வ.வே.சு. ஐயர் காந்திய வழிப்படி நெல்லை மாவட்டம் சேரமாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். இங்கு பிராமணப்பிள்ளைகளுக்கு தனிச்சாப்பாடு, பாயசம் என்றும் பிராமணர் அல்லாத பிள்ளைகளுக்கு சோறும், சாப்பாடும் மட்டும்தான் என்று தனிதனியாக பந்தி பரிமாறப்பட்டு வந்தது. இது ஒரு பெரும் பிரச்சனையாக காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.
வவேசு ஐயர் இப்பிரச்சனையில் தனது நிலையில் உறுதியாக இருந்தார். பாரபட்சம் காட்டுவது நியாயம் என்றே கருதிவந்தார். ஈ.வே.ரா, திருவிக உள்ளிட்ட தலைவர்கள் குருகுலத்தில் நடைபெறும் இந்த இழிச்செயல் கண்டு கொதித்தார்கள். இது வெறுமனே சமபந்தி போஜன விஷயம் மட்டுமல்ல, இது ஒரு சாதி இன்னொரு சாதியைவிட உயர்ந்ததென்ற பிரச்சனை. இந்த வேறுபாடு ஒழிய வேண்டும். பிராமணர், பிரமாணரல்லாதவரிடையே ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் போதாது, அவர்களை பஞ்சமர்களும் தங்களைச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டும் என ஈ.வே.ரா வாதிட்டார். ஆனால் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இப்பிரச்சனையில் கொள்கை சார்ந்து செயற்பட பின்வாங்கியது.
இந்த குருகுலப் பிரச்சனை ஈ.வே.ரா வாழ்க்கையிலும் சிந்தனையிலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பாதையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வே.ரா விலகிச் செல்லும் போக்கை துரிதப்படுத்தியது. மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். அதற்குத்தான் பாடுபட வேண்டுமென்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. வைக்கம் பேராட்டம், குருகுலப் போராட்டம் ஈ.வே.ராவின் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
தமிழ்நாட்டில் தன் கருத்துகளை வெளியிடுவதற்காக 1925 முதல் 'குடியரசு' என்ற பத்திரிகையை தொடங்கினார். சமூகநீதி, சமூக சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய நோக்கங்களைக் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மேற்கிளம்ப குடியரசு தனது கடமையாகக் கொண்டு செயற்பட்டது.
1926ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியிட்ட குடியரசு இதழில் ஈ.வே.ரா எழுதிய சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்னும் தலையங்கம் அவருடைய கொள்கைப் பிரகடனமாகக் கருதலாம். இதையடுத்து சுயமரியாதை -யக்கம் தொடங்கினார். 1928லிருந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் இறங்கினார். 1927ஆம் ஆண்டில் 'நாயக்கர்' என்ற சாதிப்பெயரை ஈ.வே.ராமசாமி கைவிட்டதிலிருந்து ஈ.வே.ரா என்றே அழைக்கப்பட்டார்.
"ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் -ருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். -தைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு -ல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்'' என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்க எவ்வெவ்வழியில் பாடுபட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அனைத்து வகையான அடிமைத்தனங்கள், கட்டுத்தளைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு புதிய சமுதாயம் சமத்துவ சமுதாயம் சுயமரியாதை சமுதாயம் உருவாகவேண்டுமென்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
''நமது நாடு -ன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் -ருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் மதஅமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.
இதையெல்லாம்விட மோசம் மிகமிக் கீழ்த்தரமான மூடநம்பிக்கை அமைப்பிலேயே நமதுநாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்குப் போதிய கல்வி -ல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பிலும் நமது நாடு இருந்து வருகிறது.
இவ்வளவு பேதநிலை அமைப்பு உள்ள நாட்டில் ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. அதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?''
இவ்வாறு 'சமுதாய மாற்றம்', 'விடுதலை, சுதந்திரம்' பற்றிய சிந்தனைகளை உரத்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் மக்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கம் தமிழ்ச்சமுதாயத்தில் அதுவைர ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
''நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரில்தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையென்றால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.'' என ஈவெரா தெரிவிக்கும் கருத்தில் உள்ள நியாயத்தை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
1926-30 இடையிலான காலம் ராமசாமியின் அரசியல் சாதிஒழிப்பு பற்றிய சிந்தனை இலட்சிய வடிவம் பெற்றது. 1931-1937காலக்கட்டம் அவரது வாழ்க்கையில் வேறுபட்ட பரிமாணம் பெற்றது எனலாம். 11 மாதங்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சோவியத் ரஷ்யாவின் அனுபவங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின்பால் தீவிர ஈர்ப்புக் கொண்டவராகவும் அவரது சிந்தனயை஢லும் செயற்பாட்டிலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
13.11.1938-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெராவுக்கு 'பெரியார்' என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். பெண்ணினத்தின் விடுதலைக்காக அவரளவு சிந்தித்த சிந்தனையாளர் வேறுயாரும் இருக்க முடியாது. தீவிர பெண்ணியவாதிக்குரிய உத்வேகம் கலகம் அவரிடம் அன்றே இருந்தது. பெண் ஏன் அடிமையானாள்? என்ற அறிவியல் பூர்வமான நூலை 1934ல் எழுதி வெளியிட்டார். 1930ல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக் துண்டறிக்கையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று துணிவாக அழைப்புவிடுத்தவர். மேலும் கர்ப்பப் பைகளை எடுக்கச்சொல்லி பெண்களுக்கு அன்றைக்கே அறைகூவல்விடுத்த தீவிர பெண்ணியவாதியாகவும் இருந்துள்ளார்.
1938-ல் ராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் அரசு இந்தியை கட்டாய பாடமாக்க அதனை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்தினார்.. கிளர்ச்சியின் இறுதியில் தனிநாடுக் கோரிக்கையும் எழுகிறது. இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்று 1939 டிசம்பரில் விடுதலை பெறுகிறார். தொடர்ந்து திராவிடக் கோரிக்கையை வலியுறுத்துகிறார். நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவரது செல்வாக்கால் சிறிது காலம் நீதிக்கட்சி உயிர்வாழ்கிறது. ஆனாலும் படிப்டியாக நீதிக்கட்சி தனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறது. -ந்நிலையில் 1944-ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
1947 சுதந்திரதினத்தை துக்கநாளாக அனுசரிக்கும்படி ஈவெரா கோருகிறார். ஆனால் -ந்தக் கருத்தில் அண்ணாதுரை உடன்பாடு கொள்ளவில்லை. அவர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார். 1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திமுக தோன்றுகிறது. 1950-ல் வகுப்புரிமையை வலியுறுத்தி ஈவேரா இயக்கம் நடத்துகிறார். 1952ல் ராஜாஜி தலைமையிலான ஆட்சி வருகிறது. அப்போது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1954ல் ராஜாஜி பதவி விலக வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகிறது.
1954ல் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ஈவெரா காமராஜருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956ல் மொழிவாரி மாநில உருவாக்கம் நடைபெற்றமையால் தமிழ்நாடே திராவிட நாடு என்கிற நிலைக்குச் செல்கிறார். தொடர்ந்து 1957ல் அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறைச்சென்றார். 1960களில் தமிழ்நாடு தமிழருக்கே என்று அறிவிப்பு செய்கிறார். இந்திய தேசியப்படம் எரிக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மீண்டும் கைதாகிறார். தொடர்ந்து பல்வேறுவகையிலான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். 1967-ல் காங்கிரஸ் தோல்வி அடைந்து திமுக ஆட்சிக்கு வருகிறது.
பின்னர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனாலும் ஈவெரா 24.12.1973-ல் மரணமுற்றார்.
ஆக பெரியாரின் ஐம்பது ஆண்டுகால -யக்கத்தின் களம் மிக விரிவானது. அதனூடு வளர்ந்த அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழகச் சூழலில் பெரும் தாக்கம் செலுத்தியது. பகுத்தறிவு என்கிற ஒளியால் எங்கும் ஒளிப்பாய்ச்ச முற்பட்டார்.
''பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்'' என்று பகுத்தறிவின் தேவையை உணர்ந்து தனது செயற்பாடுகளின் சிந்தனையின் மூலச் சரடாகவும் பகுத்தறிவை ஒவ்வொரு கணமும் பகுத்தறிவின் ஒளி கொண்டும் எதையும் பரிசோதித்து முன்னேறிக் கொண்டிருந்தார்.
பெரியாரது வாழ்வனுபவங்களும் அரசியல் செயற்பாடுகளும் எப்போதும் கலகத்தன்மைக் கொண்டதாகவே உள்ளது. ஆட்சி அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு அயோக்கியவானாக வாழ்வதை அடியோடு வெறுத்தார். அதனால் தான் அவர் கடைசி வரை தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவு கொண்ட விளக்கம் கொடுத்தார். விடுதலையின் விரிதளம் நோக்கிய செயற்பாட்டுக்கு எப்போதும் தீவிரமாகவும் துணிவாகவும் உழைக்க வேண்டுமென்பதில் உறதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
திராவிட அரசியல் வழிவந்த தலைவர்களுள் பெரியார் அவரது வாழ்வனுபவத்தாலும் சொல்-செயல் இரண்டாலும்கூட மற்றையவர்களில் இருந்து வேறுபட்டவராகவே -ருந்துள்ளார். மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்கச் சொல்லும் நபராகவே இருந்துள்ளார். விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்று மட்டும் குறிப்பிடுகிறார். ''உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம்தான் உண்மையாய் வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுவதில் இருந்து அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது புலப்படும்.
தமிழ்நாட்டு சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஈவெ.ராமசாமி என்ற பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னோக்கிப் பார்க்கும் போது அவர் எளிதாக எந்தவொரு குறித்த வரையறைக்குள்ளும் சிறைபிடிக்கக்கூடியவர் அல்லர் என்பது நிதர்சனமான உண்மை.

செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006

குறுங்கதை- கடவுளின் கருணை!

குட்டிக் கதை என்றால் அது குழந்தைகளுக்கான கதைகள் என்றும் டெக்காமரான் கதைகளை சொல்ல ஆரம்பித்து அது வேறுமாதிரியான 'குட்டிக் கதைகளாக உறுமாறிப் போனதாலும் இதைக் குறுங்கதை என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு குட்டி கதைக்கு இவ்வளவு நீளமான விளக்கம் தேவையா என்று யோசிக்க வேண்டாம். இனி தொடர்ந்து நான் எழுதப் போகும் எல்லா குட்டிக் கதைகளுக்கும் சேர்த்து இது...

கடவுளின் கருணை!

''கணவன் மனைவிதான் என்று உறுதி செய்துவிட்டீர்களா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''பண்ணிட்டோ ம் சார். ஹஸ்பண்ட் உயிர் இப்பதான் பிரிஞ்சது. சாகறதுக்கு முன்னாடி அவரே சொன்னார்.'' பைக் ஆக்ஸிடண்டில் இறந்தவர்களின் முகத்தைத் திறந்து காட்டியபடியே பதில் சொன்னார் கான்ஸ்டபிள்.லாரி டயருக்கு அடியில் ரத்தம் இன்னும் ஈரம் காயாமல் இருந்தது.
''ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தர் தவிக்காம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் செத்துப் போனதும் கடவுளோட கருணைதான்'' ஆகாயத்தைப் பார்த்து நன்றி சொன்னார் இன்ஸ்பெக்டர்.
திடீரென செல்போன் ஒலி. இறந்து கிடந்தவரின் பாக்கெட்டிலிருந்து சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் எடுத்தார். ''அரை மணிநேரத்தில வர்றோம்னு சொல்லிட்டு எங்கப்பா போனீங்க? தம்பி இங்க அழுதுகிட்டே இருக்கான்'' என்றது ஒரு சிறுமியின் குரல்.

சனி, ஆகஸ்ட் 12, 2006

பெரியார் படங்கள்


யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.



பெரியார் படத்தில் பெரியாராக சத்யராஜ் நடிக்கிறார். சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கைப் பதிவு என்பதால் பல அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப் பிடிக்கவேண்டிய நெருக்கடி இயக்குநர் ஞான. ராஜசேகரனுக்கு.
கல்கி, ராஜாஜி, கோவை ராமராதன், நாகம்மை, கண்ணம்மை போன்றவர்களின் வேடங்களுக்கு ஆட்கள் கிடைத்துவிட்டார்கள், அண்ணா வேடத்துக்கு இன்னும் ஆள் கிடைக்கவில்லையாம்.கிடைத்தவரைக்கும் இதோ:-
யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.

திங்கள், ஆகஸ்ட் 07, 2006

""மூன்று விதமான மனிதர்களின்
வாழ்க்கையை, பெரியார் வாழ்ந்திருக்
கிறார்.
வியாபாரி, காங்கிரஸ்காரர்,
சுயமரியாதை போராளி. இதுதான்
அந்த மூன்று கட்டங்கள். அவருடைய 95
அண்டு கால வாழ்க்கையில் முக்கி
யமான சம்பவங்களைத் தொகுத்து
இரண்டரை மணி நேர சினிமாவுக்குள்
அடக்கு வது மிகப் பெரிய
சவாலாகத்தான் இருக்கிறது.

பெரியாரின் கதை நீண்டதாக இருந்தாலும் «அதற்கு திரைக்கதை
அமைத்து வசனம் ஊழுதுகிற சிரமமான வேலையை எங்களுக்கு பெரியாரே
செய்து கொடுத்து விட்டார்'' என்று பேச ஆரம்பித்தார் "பெரியார்'
இயக்குநர் ஞான.ராஜசேகரன்."

"என்னது, அவருடைய கதைக்கு அவரே திரைக்கதை, வசனம் ஊழுதி
விட்டாரா?'' என்று ஆர்வமானோம்.

சிரித்துவிட்டுத் தொடர்கிறார்.
""தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை முக்கிய சம்பவங்களையும் அவரே மிக அழகான மொழி நடையில் திரைக்கதை போல எழுதியிருக்கிறார்
என்பதைத்தான் அப்படிச் சொன்னேன். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை
என்பதற்கு ஒரு உதாரணத்தைச் செல்றேன். பெரியார் காசியிலே சாமியா
ராகச் சுற்றித்திரிந்தார் என்று ஒரு தகவல் கேள்விப்பட்டிருப்பீர்கள். தான்
சாமியார் ஆனதற்கான காரணத்தையும் அவரே விவரித்திருக்கிறார்.

பிராமணர்களுக்கு விருந்து எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விருந்தில் உரை எமாற்றிக் கொண்டிருக்கும் நபர்
ஒருவர் கலந்து கொள்ள வந்திருப்பது தெரிகிறது. அவரைக் கையும் க
ளவுமாகப் பிடித்துத் தாக்கினேன். தீட்டுப்பட்டு விட்டதாக பிராமணர்கள்
சாப்பிடாமல் சென்றுவிட்டனர். விஷயம் என் தந்தை வெங்கட நாயக்கரிடம் செல்கிறது. அந்த அன்னதானத்தை
எற்பாடு செய்தவரே அவர்தான். ஒன்றும் நடக்காதது போல் நேராக மண்டிக்கு வந்து அமர்ந்திருந்த என்னிடம்
விசாரித்தார்.."ஒ.சி. சாப்பாடு சாப்பிட வந்தவர்கள்
தானே? சாப்பிடாமல் போனால் என்ன?' என்றேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. செருப்பைக் கழற்றி 7 அல்லது 8 அடி
அடித்தார்'
என்று விவரித்திருந்தார் பெரியார்.

அந்தக் கோபத்தில் காசியில் சுற்றித் திரிந்துவிட்டு ஆந்திராவில் தந்தையின்
நண்பர் எலூர் சுப்ரமணியம் என்பவரின் வீட்டில் வந்து தங்கியிருந்த போது
அவருடைய தந்தை அங்கு அவரைத் தேடி வந்ததைப் பற்றி எழுதுகிறார்.

மகனைப் பிரிந்த வேதனையில் அவர் தேடாத ஆடமில்லை. பிள்ளையை பறி
கொடுத்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்து விடுகிறார். ஆனால் பிள்ளையைப் அந்தத் தவக்கோலத்தில் பார்த்ததும்
அவருக்கு சிரிப்பு வந்தது. பதிலுக்கு தானும் சிரித்ததாக எழுதியிருக்கி
றார். பிறகு "செருப்பால் அடிச்சதாலதானே ஒடி வந்துட்ட? நாங்கள்
விசாரிக்காத ட்ராமா கம்பெனி இல்ல, தாசிவீடு இல்லை' என்று அழ
ஆரம்பிக்கிறார் தந்தை.
ஆக, படம் எடுப்பதற்கு அதன் ஹீரோவே எங்களுக்கு முழு ஸ்கிரிப்டையும் டயலாக்கோடு தந்திருக்கிறார். ஆதுதான் என்னைப் படமெடுக்கத் தூண்டியது -
இயக்குகிறது' என்று பரவசப்படுகிறார் ராஜசேகரன்.

அனால் ஆந்தக் காட்சியைப் படமெடுப்பதற்குப் பட்டபாடு இன்னொரு
சுவாரஸ்யம்.""இந்தக் காட்சியில் பெரியாராக
சத்யராஜும், தந்தை வெங்கட நாயக்கராக தெலுங்கின் முன்னணி
நடிகர் சத்யநாராயணாவும் நடித்தார்கள்.இருவருமே அந்தக் கேரக்டரை
உள்வாங்கிக் கொண்டு, பிரிந்தவர் கூடிய நெகிழ்ச்சியில் உணர்ச்சி
வசப்பட்டு அழுகிறார்களே தவிர, பெரியார் வர்ணித்ததுபோல சிரித்துக்
கொள்ள முடியவில்லை.

"இந்தக் காட்சியில் என்னால் சிரிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள்'
என்கிறார் சத்யநாராயணா. காரணம், அவர் பெரியாரின்
தந்தையாகவே மாறிவிட்டார். வேறுவழியில்லாமல் சிரித்துக் கொள்வது
போல் இல்லாமல் கண்கலங்கிப் போவதை மட்டுமே படம் பிடித்தோம்''
என்று கூறி விட்டு, படத்தில் ""நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சம்
இருக்காது. பெரியார் எவ்வளவு சீரியசான மனிதரோ, அந்த அளவுக்கு
நகைச்சுவை உணர்வும் மிக்கவராக இருந்தார்'' என்றார்.
பெரியார் வீட்டைவிட்டுப் போகும்போது அணிந்திருந்த அத்தனை நகைகளையும் தந்தையிடம் திருப்பிக் கொடுக்கிறார். "எல்லா நகையும் அப்படியே இருக்கே... எப்படி சாப்பிட்டே இவ்வளவு நாளா?'
என்று கேட்கிறார் தந்தை. மகன் அளிக்கும் பதில்: "நீங்களும்,
அம்மாவும் இரோட்டில் செய்த அன்னதானம் அத்தனையையும் வட்டியும்
முதலுமா வசூல் செஞ்சுட்டேன்.''"

"பெரியார் பெரிய சிந்தனையாளராக இருந்தார். ரஸ்ஸல் சொன்னார்,
இங்கர்சால் சொன்னார், வள்ளுவர் சொன்னார் போன்ற மேற்கோள்களைப்
பயன்படுத்தாமல் ஒவ்வொரு பிரச்சினையிலும் தான் எற்படுத்திக்
கொண்ட அபிப்ராயங்களையே சிந்தனைகளாகச் சொல்-வந்தார்.மகாத்மா காந்தியிடம் அவர் வர்ணாசிரம கொள்கை எதிர்ப்பு
காரணமாகத்தான் பிரிகிறார். படத்தில் முக்கியமான காட்சி இது.அவருடைய நண்பர் ராமநாதனுடன் மாட்டு வண்டியில் போய்க்
கொண்டிருக்கிறார்.

காந்திஜி, வர்ணாசிரமத்தை ஆதரிச்சுப் பேசியிருக்காரே...? பேப்பரைப் பார்த்
தீங்களா...? என்கிறார் ராமநாதன்.""படிங்க... கேட்கலாம்'' என்கிறார்
பெரியார். ராமநாதன் பேப்பரைப் படிக்கிறார்.""ஒவ்வொரு குலத்தார்களும்
அவர்களுக்கான தொழிலைச் சரிவரச் செய்தாலே அவர்கள் உயர்ந்தவர் அ
கிறார்கள். இதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது?''

பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்- அங்கே போய்க்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.அவனிடம் "தம்பி எனக்கு ஒரு
சந்தேகம். ஒழுங்கா செருப்பு தைக்கிறவன், ஒழுங்கா க்ஷவரம் செய்றவன்,
ஒழுங்கா மந்திரம் சொல்றவன் ஊல்லாம் ஒண்ணா?' என்று கேட்கிறார்.""தாத்தா ஈனக்கு மூளை கெட்டுப்
போச்சா? மந்திரம் சொல்றவங்க ஒசத்தி. க்ஷவரம் பண்றவர் அவருக்குக்
கீழே, செருப்பு தைக்கிறவர் அதற்குக் கீழே'' என்கிறான் சிறுவன்.உடனே பெரியார் பெங்களூரில் தங்கி இருந்த காந்திஜியை சந்திக்கிறார்.

"நீங்க உயர்ந்த எண்ணத்தில் சொல்றீங்க. ஆனா ரோட்டில் நடக்கிற
சின்னப் பையன் கூட இதை நம்பமாட்டான்' என்கிறார்.பெரியார் தன் ஆசைகளை தத்துவங்களாகச் சொன்னதில்லை.
நாட்டு நடப்பைத்தான் தன் சிந்தனையாகச் சொன்னார் என்பதற்கு ஆது
ஐரு உதாரணம்.

காந்திஜி, பெரியார் பேச்சு தொடர்கிறது. "உயர்ஜாதியில் ஒரு நல்லவர் கூடவா இல்லை?' என்கிறார் காந்தி."எனக்குத் தெரியலை' என்கிறார்
பெரியார்."என் கோபால கிருஷ்ணகோகலே
இல்லையா?' என்கிறார்.
"தங்களைப் போன்ற மகாத்மாவுக்கே ஒருத்தர் தான் நல்லவரா தெரிகி
றார்...' என்று பதில் தருகிறார்.காந்திஜிக்கு பெரியார் கருத்தில்
சம்மதமில்லை. "நாம் எல்லாம் சேர்ந்து நம் சமுகத்தில்
இருக்கும் குறைகளை நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது' என்கிறார்.
"மதத்தை வைத்துக் கொண்டு நிரந்தர சீர்திருத்தம் எதையும் செய்துவிட
முடியாது. அப்படி ஐரு சீர்திருத்தம் செய்ய நினைத்து அது மேல்சாதி
க்காரர்களின் நலனுக்கே எதிராக அமைந்தால் அவர்கள் உங்களை
உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள்' என்கிறார்.

1948-ல் காந்திஜிக்கு அதுதான் நடந்தது''என்றார் ஆயக்குநர்
ஞான.ராஜசேகரன்.
ராஜசேகரன் "பாரதி' படத்தைப் போல பலமடங்கு ஆதாரங்களுடன் படத்தை
உருவாக்கி வருவது அவருடைய பேச்சில் தெரிந்தது.-பர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ருவாகி வரும் இப்படத்துக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்கிறார்.
லெனின் எடிட்டிங் செய்கிறார்.
வித்யாசாகர் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். கலையை
ஜே.கே.வும், ஆடை வடிவமைப்பை சகுந்தலா ராஜசேகரனும் செய்கி
றார்கள்.இடுபாடும், திறமையும் உள்ள கலைஞர்களின் கூட்டணியில் வளர்ந்து வருகிறார் பெரியார்.

காரைக்குடியில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
அடுத்து இரோட்டிலும் காசியிலும் படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள்."நிழல்கள்' ரவி கோவை அய்யாமுத்துவாகவும், இயக்குநர்
ஆர்த்தி குமார் ராஜாஜியாகவும், ஊல்.ஏ.சி. நரசிம்மன் திரு.வி.க.வாகவும்
சந்திரசேகர் ராமநாதனாகவும் நாகம்மையாக ஜோதிர் மயி, தங்கை
கண்ணம்மையாக லாவண்யா, தாயாராக மனோரமாவும் நடிக்கி
றார்கள். காந்திஜியாக கேரளாவைக் சேர்ந்த ஜார்ஜ்பால் நடிக்கிறார்.பெரியாருக்கு சினிமா பிடிக்காது,
ஆனால் "பெரியாரை' சினிமாவுக்குப் பிடித்துவிட்டது தெரிகிறது.
- தமிழ்மகன்

காரைக்குடியில் பெரியார்


காரைக்குடியில் படுவேகமாக வளர்ந்து வருகிறார் "பெரியார்'. முதல் கட்டப் படப்பிடிப்பாக அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது.பெரியாரின் 25 வயது முதல் 95 வயது வரையிலான வயது பருவத்தில் சத்யராஜ் நடிக்கிறார். அதுபற்றி சத்யராஜிடம் கேட்டபோது, ""பெரியாராக நடிக்க பொருத்தமான வயது இப்போது எனக்கு. ஆப்போது 52 வயது அகிறது. இப்போதும் நான் ஹீரோ வேடம் போடுவதை மக்கள் எற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் 25-30 வயது பெரியராக அரம்பித்து 95 வயது வரை பயணிக்க அதுதான் பொருத்தமான வயது என்று சொன்னேன்.பெரியாரின் மீது இருந்த இடுபாடு அந்த பொருத்தத்தை அதிகப்படுத்துகிறது. அதற்காக பெரியாரின் வீடியோ கிளிப்பிங்ஸ் சிலவற்றைப் பார்த்தேன். அவர் சொற்பொழிவின் அடியோ கேசட்டுகளையும் போட்டுப் பார்த்தேன். சற்றே வயதான ரகுவரனின் குரல் போல யூகிக்க முடிகிறது'' (வசனம் ஐன்றை பேசிக் காட்டுகிறார்). ஒரு பிஸினஸ்மேனாக சேர்மன் பதவியில் இருந்தபோது இருந்த கெட்டப், காசியில் சாமியாராக மொட்டை அடித்து காவி உடுத்தியிருந்த கெட்டப், பிறகு காங்கிரஸ்காரராக, திராவிட சிந்தனையாளராக பல் வேறு பரிமாணங்களில் அவர் எப்படி தன்னையே புடம் போட்டு வளர்த்துக் கொண்டார் என்பதை அதற்கான சம்பவங்களோடு படமாக்கி வருகிறார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்."பாரதி' வேடத்துக்கு இந்திப் பட வில்லன் நடிகரான சாயாஜி ஷின்டேவைக் கண்டெடுத்தது போல, "பெரியார்' படத்துக்காகவும் அதில் வரும் வரலாற்றுத் தலைவர் பாத்திரங்களுக்கான நடிகர்களை வெவ்வேறு மூலங்களில் இருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். திரு.வி.க.வாக எல்.ஐ.சி. நரசிம்மன், கோவை அய்யாமுத்துவாக "நிழல்கள்' ரவி, ராமநாதனாக சந்திரசேகர் நடிக்கிறார்கள். ராஜாஜியாக நடிப்பவர் சத்யராஜ் நடித்த "சவுண்ட் பார்ட்டி'யை இயக்கிய ஆர்த்திகுமார். தாடியும், நீண்ட தலைமுடியுமாக இருந்த அவருக்குள் ஒரு ராஜாஜியை கண்டு பிடித்தது சத்யராஜ்தான்! காந்திஜி வேடத்தில் கேரளத்தைச் சேர்ந்த மேடை நடிகர் ஜார்ஜ் பால் நடிக்கிறார். நாகம்மையாக ஜோதிர்மயி நடிக்க பெரியாரின் தங்கை கண்ணம்மையாக லாவண்யா நடிக்கிறார். பெரியாரின் பெற்றோர்களாக இ.வி.வி.சத்ய நாராயண - மனோரமா நடிக்கிறார்கள். காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் பாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேடி வருகிறார்கள். மின்விளக்குகள் இல்லாத இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒளிப்பதிவை தங்கர்பச்சானும், காலத்தைத் தன் கலைநுட்பத்தால் காக்கும் பணியை அர்ட் டைரக்டர் ஜெ.கே.வும் செய்து வருகிறார்கள். படத்தில் அரசியல் சிந்தனைகளையும், சமூக சிந்தனைகளையும் வலுவாக சொல்லயிருப்பது போலவே சிலவற்றை வேடிக்கையாகவும் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் - நாகம்மை திருமணம் நடக்கிறது. புது மணப் பெண்ணிடம் தாலியை கழற்றி விடுமாறு கூறுகிறார் பெரியார். "தாலி புருஷனுக்கு சமம். நான் கழற்ற மாட்டேன்' என்கிறார் நாகம்மை. ""அதனால தான் கழற்றச் சொல்கிறேன். புருஷன்கூட இருக்கும்போது தாலி போட்டுக்கிட்டு இருந்தா ரெண்டு புருஷன்னு கணக்காகிடும். புருஷன் வெளியூர் போயிருக்கும் போது தாலி கட்டி யிருந்தா போதும்'' என்ற லாஜிக்கை சொல்லி நாகம்மையை நம்ப வைத்து விடுகிறார் பெரியார். மறுநாள் மாமியார் தாலி இல்லாததைப் பார்த்து மருமகளிடம் கேட்கிறார். நாகம்மை நடந்ததை விவரிக்கிறார். பெரியாரின் சேட்டை புரிகிறது இருவருக்கும். இப்படி இருந்த நாகம்மை பெரியாருடன் கள்ளுக்கடை மறியலில் இடுபட்டு பெரும் போராளியாக மாறுகிறார். பிரிட்டீஷ் அரசாங்கம், காந்திஜியை சந்தித்து கள்ளுக்கடை ஒழிப்பால் அரசு வரிப் பணம் இல்லாமல் தத்தளிப்பதாக முறையிடுகிறது. காந்திஜி சொல்கிறார்: ""கள்ளுக் கடை மறியலை நிறுத்துவது இப்போது என் கையில் இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் நாகம்மை நினைத்தால்தான் முடியும்'' என்கிறார். இப்படியான எகப்பட்ட சம்பவக் கோர்வையாக உருவாகி வருகிறது "பெரியார்' படம்."பெரியார்' 21-ம் நூற்றாண்டிலும் தன் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கிறார், இந்த முறை சினிமா மூலமாக.

-தமிழ்மகன்

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

I am not suffering from any disease- Simran

She is in love with Raju Sundaram.She breaks away with Raju Sundaram.Raju - Simran in love despite pressures from their families.Simran is getting married.End of Raju - Simran relationship.Simran is drunk and misbehaves in the airport.Simran dismissed her manager.Confusions galore in Simran’s call sheets.Blue film starring Simran.Simran is afflicted with AIDS.
These are some of the cine headlines that appeared within a period of last three months. May be in the last 70 years of the history of Tamil cinema no other actress than Simran would have got embroiled in the rumour mill running around Kollywood. And finally Simran thought that she has had enough of it and called for a press meet last Sunday. No doubt she tried to remain calm and answer all the questions patiently. But she could not control her emotions completely. She smiled now and then and was angry many a time. However, she tried to remain and appear calm and collected. Here are the questions put to her and her answers to them.
Are you in love with Raju Sundaram?When I get married I will certainly announce it well ahead of the date. It is only you, the press people, who have conducted my marriage several times in the past even before I got the scent of it.
Are you in love with Raju Sundaram or not?Whoever be I am in love with. I will get married only after telling you all and inviting you all.
Is there any truth at all in the news items that appeared that you are in love with Raju Sundaram, or are they utter falsehood?Yes. It is true that I am in love with him
When are you getting married?It has not yet been decided.
But, only you have been speaking about being in love with Raju. He is not opening his mouth on this…Only he has to answer this question.
It is said that his mother has put a condition that you should not act in movies after the marriage and also that your mother has not agreed to this….Nothing to this effect has happened.
Have your parents and Raju’s parents spoken among themselves about your marriage?No. My mother and his mother have not met as yet.
When the entire Tamil film industry participated in the funeral of Sivaji, you were missing. Why was it you were missing?When I came to know of his death, I was in Hyderabad in a shooting. The circumstances did not permit the cancellation of the shooting immediately, to enable me to attend his funeral. And when I returned to Chennai, the funeral ceremonies were over by that time.
It was not only you. No actress from Mumbai in general, participated in the funeral.I do not about others. I respect him very much. I have acted in the film ‘Once more’ with him and I am proud of it. Please understand my situation. I could not attend the funeral because I was in a film shooting which could not be cancelled. This becomes an issue only if I was in Chennai and did not attend.
There have been scores of negative information about you for the past three months. What do you wish to say about them?That I am in love with Raju is an old news. But I was very much affected by the one that said that I am afflicted with some disease. Just think of it. How will you all be affected if your own sister or wife is rumoured about in this manner? I am not suffering from any disease and I did not undergo treatment for anything whatsoever.
Then what could be the reason for the rumour mill to run so? Do you think that this may be the handiwork of managers who were working for you till recently?May be. I am led to believe that. See, I appoint a manager only to look after my call sheet and receivables. I sent them out because they did not perform it properly. May be they were provoked by that and are spreading such rumours. But it would have been better if the press people checked them with me before publishing them.
But you are not accessible for us to do any verification…I have taken necessary action to see that it doesn’t happen any more. Please check such items with me before publication.
The role you have played in 12B has neither been considerable nor impressive…That was the role given to me in the movie.
There was an announcement that you are acting in ‘Three Roses’. But later you were not in the movie. What happened?I did not like the story. They are basing the movie on the English film, ‘Charlie Angel’. In the first instance, I was not impressed with the English movie itself. That’s the only reason for my not acting in ‘Three Roses’.
Are you playing the role of a liberation tiger in ‘Kannathil Muthamittal’, directed and produced by Mani Ratnam?No I am not. I am playing the role of a TV newsreader. Nandita Das is playing that role.
What are the other movies in which you are acting now?‘I Love You daa.’ This is a movie about cricket match fixing. Then, ‘Paarthaale Paravasam’ by K. Balachander, Pammal K. Sambandham with Kamal, ‘Tamil’ with Prashanth, ‘Udhaya’ with Vijay, and another with Mohanlal - a Nassar movie.
Rehman is scoring music for ‘Kannathil Muthamittal’, ‘Paarthaale Paravasam’ and ‘Udhaya’. The delay is due to the time that the music director takes. And then naturally some dates get postponed. In effect, it is Simran who becomes responsible for any delay and is blamed of bounced call sheets.
am acting in Telugu with Chiranjeevi, in ‘Daddy’ and another with Balakrishna. I am acting in the Hindi remake of ‘Thulladha manaum thullum’. Apart from all this, I will be doing an English movie directed by Dura Savar. It is about the deva dasis who lived in 1930s. The film will be shot in Thanjavur.
What is the problem with your sister Monal? You are living in separate houses…There is absolutely no problem. She is living alone because she wants to. It is her liking. There is no problem in our family. Me, my sisters (apart from Monal there is another sister by name Jothi, who will soon make her entry into filmdom) and my brother Sumith are all amiable, loving and affectionate.
Simran finished the press meet and started for her shooting in New Zealand. (Of course, she did not pick up any quarrel in the airport!) She conveyed her best wishes for Deepavali to all her fans.
(2000)
--TamilmaganTr. By Hari Krishnan

Awards are secondary for me -Vikram

Vikram belongs to that cadre of actors to whom dedication comes first before the self and would go to any extent to play it realistically. He reduced his weight by 16 Kgs for the sake of ‘Sethu’ and now he is playing the role of a sight-impaired for ‘Kasi.’ We met Vikram in the sets of ‘Kasi.’
‘When I saw the Malayalam movie, ‘Vasanthiyum, Latchumiyum pinna naanum,’ I was thrilled,’ said Vikram, ‘and decided that moment that I should play the role which Kalabhavan Mani did in that movie. He had played the role of a sight-impaired so impressively well. But it was not easy for me to keep the pupil of my up under the eyelid, as did Kalabhavan Mani. Then I thought ‘when it was possible for Mani, why not me?’ and trained myself regularly with single-minded devotion, daily.’
‘It was only after I could do it convincingly well that I approached director Vinayan and told him that I would play the role in the Tamil version of the movie.’ But Vinayan came out with another idea. He said that there was no need for me to go through such a difficult job. I can better wear contact lens, specially available for the purpose and play the role. I could not accept this. That would affect a realistic portrayal.’
‘And then when the shooting started, I faced difficulty of another kind. If I concentrated on dialogue delivery, the pupil of the eye would not remain in place; and if I concentrated on that, I would lose out on dialogue.’ (Laughs)
‘We therefore stopped with the shooting of first scene. Then I underwent an intense self-training. I could do it only with regular and continued training. It was very painful initially. But when I got used to it and did it without much effort, half the movie was shot already. May be, if I am asked to play a second innings now, I won’t find it that difficult!’
‘Since you have played the role of a visually-handicapped there is no doubt that you will earn the sympathy of the audience,’ we told him and asked, ‘But the people want action heroes. Do you think that the role of a visually impaired would fulfil their expectations convincingly?’
‘Sure. For certain. This is a real good role. But ‘Kasi’ would be a real hero, throughout the movie.’
You reduced your weight for ‘Sethu’ and now you have gone through a really difficult training - that too with respect to your eyes. What makes you take such kind of risks?’ we asked him.
‘It is my yearning for the applause from my audience,’ said Vikram. ‘I was told when acting for ‘Kasi’ that there was no use in putting in extra efforts and overstraining for the movie, because Kalabhavan Mani had already received a national award for playing the role. Moreover, this was only a remake. A remake doesn’t stand a chance of getting any award.’
‘As far as I am concerned, I would be happy if I am the recipient of an award. But it is more important for me to win the approval of my audience. More over, I have lost the Best Actor award for my performance in Sethu. I therefore do not attach much importance to it now.’
‘How did you reduce 16 Kgs for Sethu?’
Simple. I stopped eating. I survived on fruit juice and nothing else. My blood pressure dropped and doctors warned me about low-pressure. I did not pay any heed to that. I was firm till the end of the movie.’
‘There was an English movie by name Cast Away. Its hero would reach an uninhabited island. He would suffer without food and would become skinny. They adopted scientific methods. He consulted a doctor and reduced his intake as advised by him and reduced 8 kgs for the movie. But the method that I adopted was very ‘local’. Just stop eating. That’s all. I was amply rewarded for my efforts. The press paid rich tributes. ‘Sethu’ was called the ‘movie of the century.’ That’s enough for me!
TamilmaganTr. by Hari Krishnan

புதன், ஆகஸ்ட் 02, 2006

Looking for changes and challenges- singer vasundhra das

Long time since seeing a girl going pink? Just ask Vasundra ‘Why don’t you participate in the Miss World contest’ and wait for a moment. Roses blossom on her cheeks. She belongs to a Vaishnavite family from Bangalore and is trained and talented in Carnatic, Hindustani and Bharata Natyam. Unfortunately, she is popular only for songs like ‘katti pudi katti pudida’‘and ‘ayyo paththikichu…’ ‘I am disappointed at the tendency to brand me as best suited for such songs alone’ she adds with a tinge of remorse. Understandably!
‘Ok. Why then did you moan and purr and make all sorts of ‘suggestive’ sounds for the song ‘katti pudi katti pudida.’ The roses blossomed on her cheeks moments ago turn redder, now with anger. ‘It’s not me! I just rendered that song. All the other sounds were by some other artiste, recorded separately and mixed. This was done without my knowledge. I would not have accepted the assignment had I had the faintest idea that this would be the final product. At least they should have given the name of the other artiste. I just left it at that and forgot the whole thing.’
‘Have you spoken to director Surya about it?’ ‘No. What for? It is all over now and nothing can be reversed. Just drop it…’
Are you singing in Surya’s next film, ‘New’? ‘They have not called me. I don’t have an assignment for the movie.’
She sparkled as Mythili in 'Hey Ram'. However, she has not been around, on the screen for a long time after that. ‘I have been busy, singing,’ says Vasundara. I have so far sung for 17 Tamil films; 3 Telugu and 2 Hindi movies. I did an album, ‘Meri Jaan’ for Magna Sound. Really busy flying from Bangalore to Hyderabad and Bangalore to Mumbai.’
‘I have been receiving offers for roles in movies. But I want to be careful and choosy. I don’t want to be branded again that Vasundara can do only Hey Ram type roles – conventional and traditional. Presently I am acting with Ajit in Citizen. A really challenging role. I just love that role. Meantime, I acted in Monsoon Wedding, an English movie by Meera Nair.’
‘I have sung a couple of melody numbers for Samurai and Badri. Meri Jaan gave me a different kind of exposure with a lot of variety like symphony, western, Arabian and Latin American. Hope at least now the ‘katti pudi katti pudida’ branding goes!’
What is she doing now? Planning to bring out a video dance album. I need lots of male and female dancers for it.
‘I continue to be the happy-go-lucky girl that I have been, otherwise. Same old pastimes of college days and same old friends and all…’ She said bye with a big, sparkling parting smile.
-By Tamil MaganTr. by Hari Krishnan

I missed the bus - Sivaji ganesan

It so happens that some of the best talents are neglected by every society. Either the government neglects them or the people do so. The artiste lives with a burdened heart and his feelings rarely find a vent. That Sivaji Ganesan lived with such a tumultuous heart can be seen from this interview that appeared in the Deepavali Malar of Dinamani in the year 1998. He gives free expression to the hurts and wounds that he had suffered deep in his heart in the interview. We republish this with the intention of making his feelings more widely known so that no other artiste of talent is pushed into the dark chambers of negligence, untended and ignored, as it happened in the case of Sivaji.
What, in your opinion, is the kind of recognition that satisfies an artiste? Of course, awards and titles are not the complete or ultimate recognition. Nonetheless, they are important too. An award, if not given at the appropriate time, loses its value and it agonises the artiste. How about you?
Any actor finds his reward only when the people recognise him. Actually, he can perform well only if he understands the role he is supposed to play and puts his heart and soul into it. Only his performance speaks for him. After all, there are ever so many artistes. Not all of them are accepted as the best talent by the people. People’s recognition is therefore the ultimate for any artiste.
You see, there is no connection between recognition by people and receipt of an award. An award is given to please someone or because someone pleases somebody. There is the Arjuna award, Bharat award, etc. Not all the recipients receive them because they deserve them. Most of the time, it depends on who has a better lobbyist.
Truly speaking, awards should be given at the time when an artiste is climbing up the steps in his career. That would give him the much-needed fillip to excel his earlier milestones. There are so many youngsters now who deserve these awards - Kamal, Rajini, Sathyaraj, Prabhu, etc. I am past that age.
But I have to express my feelings on this. The fact that these awards were not given to me at the right time has pained me. I have gone through yearning and indeed sorrow in my life. After all, I am human too. If I say that I was not pained, I would be less than honest.
You should have received the Palke award long back. What do you feel is the reason behind the delay for you receiving it after the passage of such a long time, now? Do you feel that partiality and politics have a role to play in this?
Partiality… may be there is. But I do not think there is politics behind it. After all, I was in politics too. If I accuse that the interference of politicians was responsible for it, it would not be fair. More over, I am not sure to what extent it is true that politics has played a role in it.
Palke award is a much respected recognition. As far as my knowledge goes, I understand that there is committee to recommend the names of deserving artistes. And then it is forwarded to the Minister concerned. He should be a dispassionate person, if the artiste recommended by the committee is to receive the award. If he is not, well, it goes to the person named by the minister. I don’t know how far it is true. I understand this from the government officials in Delhi.
The award that came to me this year did not find its route that easily. I was informed that it was to have reached someone else, but found its way to me.
It is said that the French Government decided to honour you with its Chevalier title. But that it was also delayed because the Pondicherry Government did not show much interest in it…
A panel of nine judges recommend the name of the person for conferment of the title Chevalier. They have seen almost all my movies. In fact, I received the title before a Hollywood star could receive it.
I mean to say that the recognition was given to me first. The panel decided my name and forwarded it to the Pondicherry government. But Pondicherry was not so very keen in sending the recommendation to France. And then it so happened that the Indian citizens in France were consulted and then it was decided in my favour. It was sent to me through the French ambassador.
I understood later that the French Government intended to honour me with its title much earlier - at least 3 years earlier. But their attempts were stopped. I don’t know who stopped them. I came to know that it happened in Pondicherry only.
The title Chevalier is not given to all and sundry. There are three categories in that title. What has been given to me is the top grade title. In fact, I didn’t know the value of the title when I received it. Nobody here knew it either. It so happened that Radhika’s husband who was a foreigner and who knew how valuable the title is, came to know of this. He had asked Radhika about why there is no public function even after I have received the coveted title. Then Radhika spoke to Kamal, Rajini and others and it was thus that its value was made known to all. That led to AVM Saravanan and others joining together to convene a public function for me to receive the title. The French Ambassador in Delhi came to Chennai to give the title.Which was the most challenging role that you have played so far? A role that was challenging and satisfying…
Kappalotiya Thamizhan was a challenging and demanding role. Va. Vu. Ci’s son saw that movie. He embraced me saying, ‘I saw my father in person.’ What is a better award that I can ask for? Remember you asked in the beginning - ‘which is the greatest award for an artiste? This is it. There cannot be a better recognition that an artiste can receive.
You have acted in more than 300 movies and played hundreds of roles. Moulding oneself into a character must have been a real mental exercise. What was your experience?
Not a big thing. It comes by practice. Whenever time permits, you should think of the character that you are playing. Where do we get time! Only in the toilet or in the bathroom. That is the only place where you will not be disturbed by anyone. I used to think of the role that I was going to play during those times. And then during makeup. Of course, during the catnap I have after lunch… I used to think of the character that I was playing at that time and constantly whet, polish and hone the presentation. You can be an actor only if you train your mind this way. Theists call this as ‘god’s gift. In the ordinary parlance, I call it with lots of gratitude, ‘it’s all due to my teacher. A good teacher. I owe it to my guru and the training that I received from him.
Who was your guru?
I have only one guru, as far as acting is concerned. Chinna Ponnusamy Padayaachi was his name. I joined the drama company of Yadhartham Ponnusamy Pillai. My guru was employed in that company. Since the name of the boss and my guru were the same, my guru was known as Chinna Ponnusamy. I joined them at a very young age. He trained me from my seventh year. I had the benefit of his training for five years.
In those days I used to play girls’ roles. My guru used to play feminine roles too. Playing the ‘sthree part’ enables one to learn all the nuances and finer points and helps him to become an all rounder and a good actor.
Did you not think that it was good for you - at least when you had considerable influence in politics - to play only ‘clean roles’ like MGR did?
No. I did not think that there was any connection between the roles I played and the role I was supposed to play in politics. But the people thought that way! They thought that there was some connection! And that’s how MGR was a grand success in politics. He did it and I missed the bus.
But politics was only secondary for me. I played the drunkard, loafer, womaniser, murderer, rowdy…every conceivable anti-hero roles. That’s why I could do 300 and more films.
I have to mention a fact here. I understood only much later that people did not want to see me play the politician in real life. They wanted me to see me onscreen only as an actor. So many actors enter politics and not all become leaders. And there are some who could not shine well in acting and turn politicians instead.
It sounds like a comment on your political career of the past…
No no no. Don’t look at it as mere history. It is what is happening today and what would happen tomorrow.
At one time you were accused of overacting. What do you feel about it, now?
It was only Idhayam Pesukiradhu Manian who wrote that way. He even went to the extent of writing that the Sivaji era had ended. He was chief among those who disseminated false information on the Dravidian movement.
There was a meeting convened to felicitate Manian, presided by Kalaignar Karunanidhi. I attended the meeting because he came in person and invited me. Well, Manian during his speech mentioned that I had nothing to do with politics, or that I was not more than a novice. In my address I mentioned that this was the person who criticised the Dravidian movement and this was the same person who was felicitated in Arivaalayam, by Kalaignar. One could understand the kind of politics he was capable of playing, I said. Manian refused it meekly. Forget it. Just forget it.
You see, there would be four or five writers around a bad actor. What is the established method of projecting him as a good actor? Deprecate daub the one with good acting skills as an over-actor! It is a general practice in our place to belittle the other rather than to project one’s talent. That’s how I was branded as an over-actor.
Which actress who played the heroine with you, do you think matched your skills?
No doubt it was Puppi (Padmini). She is a talented dancer. A beautiful woman. She excelled in whatever she did, be it character-role or comedy or dance… what not! She is an all rounder. Puppi and I are known to each other right from our younger days. We have a good intellectual, respectable and divine friendship between the two of us. May be we are one among the pairs who have acted together in the highest number of films in the world.
What is the toughest role for an actor to play - comedy, character-role or the villain?
Comedy. Creativity is at its best when one plays the comedian. The present trend is that if one bends his brows cruelly and laughs loudly, he is a villain. If he is handsome, and is able to dance and throws a few punches on the villain and his team, that person is called a hero. But comedy cannot be that simple. I can play a comedian’s role very well. But who is prepared to give it to me! (Voice turns jovial and jocular) And if I play that role, what happens to dialogue delivery, exploding in emotions and all? What use there is to the glycerine in stock! You see, I am the only one available for them to make use of it all! (Laughs heartily.)
-Tamilmagan (1998)

வெள்ளி, ஜூலை 28, 2006

தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?


தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?

தமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.
நீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:
இது இரவா பகலா?
நாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா?''
அடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...
இது வனமா மாளிகையா?
''நீ மலரா ஓவியமா?''
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?''
இதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா?'' என்று நவீனப்பட்டிருக்கிறது.
நாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.
தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.
வைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்?'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்லடி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.
வாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.
''காதல் வெப் சைட் ஒன்று கண்டேன் கண்டேன் நானும்'' பாடலில் ''ஹார்ட்வேர் உள்ளம் கெட்டுப் போனதென்ன? சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன?'' என்ற பாடல் வரிகள் இடம் பெருகின்றன. 'காதலர் தினம்' படத்தில் வரும் பாடலில் ''மனசை விட்டு மவுசை தட்டு மாட்டிடும் பதினெட்டு'' என்று எழுதியிருக்கிறார்.
பழனிபாரதி தன் பாடல்களில் நிறைய ஆங்கிலப் பிரயோகம் செய்தாலும் அவை விஞ்ஞான குறிப்புகள், விஞ்ஞான ஒப்புமைகள் தன்மையில் இடம்பெறுமா என்பது சந்தேகமே. 'பூக்கள் அவளிடம் ஆட்டோ கிராப் கேட்டன' பாணியில் அவருடைய ஆங்கிலப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.
இப்போது வந்திருப்பவர்களில் பா.விஜய் அறிவியலோடு பாடல் எழுதிவருகிறார். 'தெனாலி' படத்தில் இடம்பெற்ற ''சுவாசமே சுவாசமே'' பாடல் பல அறிவியல் செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்கிறது. ''அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்...'', ''இயற்கையின் கோளாய் இயங்கிய என்னை செயற்கை கோளாய் உன்னை சுற்ற வைத்தாய்..'', ''இசைத்தட்டாக இருந்த என்னை பறக்கும் தட்டாக மாற்றினாய்'',''நிலவு இல்லாத புதன் கிரகம் நானே முழு நிலவாக எனக்காக வந்தாய்...'' என்று சொல்லிக் கொண்டே போகிறார்.
இதற்கெல்லாம் முன்னோடி என்.எஸ்.கே. இதற்கெல்லாம் வெகு காலங்களுக்கு முன்பே ''விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி'' பாடல் மூலம் பார்முலா போட்டுக் கொடுத்தார் என்பது சாலப் பொருந்தும். ''பட்டனைத் தட்டிவிட்டா தட்டுல இட்டிலியும் காபியும் பக்கத்தில் வந்துடனும்'' என்றார்.
அதற்கும் மிகவும் முன்னால் சங்க இலக்கியப் பாடலில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த தலைவியின் காதுகளில் இருந்த தொங்கட்டான் ஊஞ்சலைவிட வேகமாக ஆடிக் கொண்டிருந்ததாகக் கவிஞன் வியந்திருக்கிறான்.
ஆரம் குறையக் குறைய அலைவு அதிகரிக்கும் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் அறிவித்திருக்கிறார்கள். என்ன செய்வது நம் தமிழ்க் கவிஞன் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதைக் கண்டு பிடித்துவிட்டு அதை மேற்கொண்டு இட்டுச் செல்லாமல் அதற்கடுத்து மூக்குத்தி எப்படி ஜொலித்தது என்று வியக்கப் போய்விட்டான். பூமி சுழல்கிறது என்று கலிலியோ வந்த பிறகுதான் தெரிந்தது. சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்றார் வள்ளுவர்.
நம் கவிஞர்கள் இலக்கியத்தோடு அறிவியலையும் வளர்த்து வருகிறார்கள், அது சினிமா பாடல்களிலும் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. சினிமா கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பவர்களும் இதைக் கணக்கில் கொள்ளலாம்.
-தமிழ்மகன்

வியாழன், ஜூலை 27, 2006

சின்னத்திரை சித்திகளின் கையில்...


சின்னத்திரை சித்திகளின் கையில்

''அகநானூறு, புறநானூறு போல சித்தி நானூறு'' என்று 'சித்தி' தொலைக்காட்சி தொடரை வாயாரப் புகழ்ந்திருக்கிறார் (முன்னால்) முதல்வர் கலைஞர்.
'சித்தி' தொடர் நானூறு நாட்களாக - விறுவிறுப்பாகத் தமிழர்களின் -ல்லங்களில் வெளியானதை அகநானூறுடன் ஒப்பிட்டது அவருடைய சமயோசித புத்திக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் ஏறத்தாழ எல்லா தொடர்களுமே சித்திக்கு அடுத்தபடியாகத் தமிழர்களால் ஏகமனதாக வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. தொடர்களுக்கு இல்லங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து பல ரிடையர்ட் நடிகைகள் களமிறங்கியிருக்கின்றனர்.
குட்டி பத்மினி, கே.ஆர். விஜயா, ஸ்ரீ ப்ரியா, ராதிகா, ரேவதி, நளினி, யுவராணி, ரூபஸ்ரீ, தாரணி, அனுஷா, ராகசுதா உள்ளிட்டோர் பட்டியலின் சமீப வரவு, குஷ்பு. மருமகள், கோடீஸ்வரி தொடர்கள் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
சராசரியாக இவர்கள் நடிக்கும் எந்தத் தொடருக்கும் காலவரையறை நிர்ணயிக்கப்பட்டதாகத் தகவல் -ல்லை. ஆரம்பத்தில் எல்லா மெகா தொடரையும் 52 வாரம் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கு ஏற்படும் விளம்பரமும் பரபரப்பும் 40 வாரங்களுக்குப் பின்புதான் சூடு பிடிக்கிறது. ஆகவே மேற்கொண்டு 50 வாரங்களாவது தொடராவிட்டால் டிவி தயாரிப்பாளர்களின் ஆத்மா சாந்தியடையும் வாய்ப்பு இல்லை.

ஆகவே எல்லா தொடருமே நூற்றுக்கணக்கான வாரங்களுக்குத் தொடர்கிறது.
'மங்கை', 'அண்ணி', 'சொந்தம்', 'வாழ்க்கை', 'குடும்பம்', 'கோகிலா எங்கே போகிறாள்?', 'கிருஷ்ணதாசி', 'தோழிகள்' உள்ளிட்ட பெண்ணுரிமைத் தொடர்கள் எல்லாவற்றையும் ஒரு பொதுத் தன்மையில் அடைக்கலாம்.
எல்லாவற்றுக்கும் ஏறத்தாழ ஒரு குடும்பப் பாடல் உண்டு. பெரும்பாலும் அத் தொடரின் தலைப்பை பலமுறை வலியுறுத்துவதாக இருக்கும். (மக்கள் மனத்தில் பதிய வேண்டாமா?)

எல்லா தொடரிலும் துன்பங்களைச் சுமக்கும் ஒரு இளம்பெண்ணோ, அல்லது தனக்கு இழைக்கும் அநீதிக்குப் பழிவாங்கும் இளம்பெண்ணோ அவசியம். சில நேரங்களில் இரண்டு பெண்களும் ஒரே தொடரில் இருப்பார்கள்.
தன்னால் தட்டிக் கேட்க முடியாத அநீதிகளையெல்லாம் எம்.ஜி.ஆர். போன்ற ஒரு கதாநாயகன் தட்டிக் கேட்கும்போது இளவட்டங்கள் எப்படி ஆர்ப்பரித்தனரோ அதே நிலை இப்போது வீட்டில் உள்ள பெண்களுக்கு. மாமியாரைத் தட்டிக் கேட்கும் தொடர்கள், காதலித்து ஏமாற்றியவனைப் பழிவாங்கும் தொடர்கள், பெண்குழந்தையை வெறுக்கும் ஆண்களைத் தோலுரிக்கும் தொடர்கள் உள்ளிட்ட பெண்களுக்கான பிரச்சனைகளின் மாயத் தீர்வாக -ன்றைய தொடர்கள் உள்ளன. பெண்களுக்கு உளவியல் ரீதியான மன நிறைவையும் சில நேரங்களில் பழிவாங்கிய திருப்தியையும்கூட இத்தகைய தொடர்கள் தருகின்றன.

ஆண்கள் ஸ்டார் மூவிஸையும் பெண்கள் 'சித்தி' தொடரையும் ஒரே நேரத்தில் ஒரே டிவியில் பார்க்கப் போட்டி போட்டு பல வீடுகளில் உள்வீட்டுக் குழப்பங்கள். இறுதியில் தொடரைப் பார்ப்பதில் பெண்களே வெற்றி பெற்று ஆண்களைப் பழிதீர்க்கிறார்கள் என்பது என் அக்கம்பக்கத்து விசாரணையில் தெரியவந்த உண்மை. (என்னுடைய சொந்த அனுபவமும்தான்.)
இத்தகைய தொடர்களால் பெண்களின் மன உணர்வுகளில் சற்றே போராட்ட உணர்வுகள் ஊட்டப்பட்டு, பின்னர் அதற்கு ஒரு மானசீகமான தீர்வும் வழங்கப்பட்டுவிடுகின்றன. சின்ன வயசிலேயே காணமல் போய் வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் கோடீஸ்வர சித்தப்பா மூலமாக எல்லா பிரச்சனையும் தீர்ந்ததாகவோ, அவளுடைய நல்ல மனதைப் புரிந்து கொண்டு குடும்பமே அவளிடம் மன்னிப்பு கேட்பது போலவோ காட்டி சீரியலை முடிக்கிறார்கள்.

சினிமா ஆண்கள் கையில் என்றால் சின்னத்திரை பெண்கள் கையில்... அது ஆண்களால் தயாரிக்கப்பட்டலும்.
சினிமாவில் கதாநாயகனுக்குக் கிடைக்கிற வெற்றி போல, சின்னத்திரையில் பெண்களுக்கு வெற்றி நிச்சயம்.
-தமிழ்மகன்
(2001)

செவ்வாய், ஜூலை 25, 2006

missed the bus... சிவாஜியின் ஏக்கம்

missed the bus... சிவாஜியின் ஏக்கம்
ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால். ஓயாத அலைகளைப் போலான மனக் குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின் போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேர விடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது....

ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கீகாரம் எனறு எதை நினைக்கிறீர்கள்? விருது மட்டும் திறமைக்கான முழு அங்கீகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே...உங்கள் விஷயத்தில் எப்படி?

ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக் கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கீகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் அதில் முழுமையாக ஒரு நடிகன் வெளிப்பட முடியும். அதுதான் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள். ...எல்லோரையுமா சிறந்த நடிகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?
அங்கீகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக் கொடுத்திருக்கிறார்கள். எல்லாருமா அதற்குத் தகுதியானவர்கள்? 'லாபி' செய்து விருது வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.
ஒரு கலைஞனுக்கு விருது என்பது, அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவன் அதைக் கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன்.
ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே......இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? விருது வழங்குவதில் அரசியல் தலையீடு, பாரபட்சம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பாரட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்கும் என்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன். அப்படிச் சொன்னால் அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது. அது ஏன் இத்தனை நாள் எனக்குக் கிடைக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தபோது.....எனக்குக் கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசாபாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவருக்குக் கிடைக்கும். இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரைக்கும் இப்படித்தான் நடந்தது என்று - எனக்குத் தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்யோகஸ்தர்கள் சொல்கிறார்கள் எனக்கு இந்த வருடம் விருது கிடைத்ததே... அதுவும் சாதாரணமாகக் கிடைக்கவில்லை... வேறு ஒருவருக்ககுப் போய்விட்டுத்தான் என்னிடம் திரும்பி வந்திருக்கிறது. இதையும் அந்த சர்க்கார் உத்யோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே... உண்மையா?

ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டதட்ட எனது படங்கள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான் ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.
அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை. புதுவையை ஒருகாலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்சுக்காரன் நம்மை ஆட்டிப் படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு.! பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம் விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ் நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.
எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்சு அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதைக் கழிச்சுக் கட்டிட்டாங்க. அது யாருன்னு, எனக்குத் தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.
செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. அதிலேயே 1,2,3 என மூன்று வகையான விருதுகள் உண்டு. எனக்குக் கிடைத்தது முதல்தர விருது உண்மையச் சொன்னால் அந்த விருது எவ்வளவு மதிப்ப மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது.
சகோதரி நடிகை ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே.. அது வந்த பிறகும் சிவாஜியை இன்னும் நீங்க யாரும் கண்டு கொள்ளவில்லையே... என்று கேட்டிருக்கிறார். ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களிடம் பேச அதற்குப் பிறகுதான் அந்த விருதின் மதிப்பு பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.

இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது? உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே.......அங்கீகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவாக இருக்கமுடியும். எனக்கு முழுத் திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
கிட்டத்தட்ட 300 படங்களில் நூற்றுக்கணக்கான பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக உங்களை மாற்றிக் கொள்வது typical mental exercise இருந்திருக்குமே.....அதை நிங்கள் சமாளித்தது எப்படி?

அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில் வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் யாரும் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்தச் சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கெண்டிருக்கும்போது.... மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்த்து இருக்கும் போது... இது மாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். கிடைக்கிற அரை மணிநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட தீவட்டின்னு சொல்லுங்க.... என்னைப் பொருத்தவரையில், ஆஸ்திக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்குக் கிடைத்தது - நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.

உங்கள் குரு யார்?

நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கே தான் எனது குரு பொன்னுசாமி படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால். முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருஷங்கள் எனக்குப் பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா, நான் ஒரு பெண் வேஷக்காரன் என்பதை. தலைமைப் பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் பெண் வேஷக்காரர்தான் பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாகப் பரிமளிக்க முடியும்.

நீங்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலாவது, எம்.ஜி.ஆர் போல நாமும் நல்ல பாத்திரங்களிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லையா?

இல்லை. நடிப்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லையென்று நான் நினைத்தேன். ஆனால் சம்பந்தம் உண்டு என மக்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால் தான் எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றிபெற்றார். He did it. I missed the bus, எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான் நான் குடிகாரனாக பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில் நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க முடிந்தது.
அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய்விடுவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அரசியலில் எனக்குப் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சீ! இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்வதாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்...
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். மக்கள் என்னை அரசியல்வாதியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் பின்னாளில் தான் புரிந்துகொண்டேன். அவர்கள் என்னை நடிகனாக மட்டும்தான் பார்க்க விரும்பியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்... அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.

இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?

கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க...நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்கப் போகிறது.!

ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே.... இப்போது அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது என்று எழுதியதும் அவர்தான். திராவிடப் பாரம்பரியம் பற்றி தப்புத் தப்பாக எழுதியவர்களில் முக்கியமானவர் மணியன். அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டுவிழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்ததே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாரம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்குப் பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்தே அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.
Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளைப் பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நான்றாக நடிப்பவனை ஓவர் ஆக்டிங் என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் யாருமே தான் நல்லவன்னு சொல்லமாட்டானே..அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.

உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமை வெளிப்படுத்தியவர் யார்?

நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம், what not? எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகி வருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிகப்படங்களில் நடித்த ஒரே ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.

காமெடி, குணச்சித்திரம் வில்லன் - இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?

காமெடிதான். காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் அழகா இருந்து. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு டான்ஸ் ஆடி, இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்கிறார்கள். காமெடி அப்படியில்லை, அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும் ஆனால் கொடுக்கமாட்டாங்க.. வசனம் பேசுவது, 'எமோஷன்' எல்லாம் என்னாவது? வைத்திருக்கும் கிளிசரீன் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்... (சிரிக்கிறார்)
-தமிழ்மகன்
(1998)

திங்கள், ஜூலை 24, 2006

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ் ?




இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியச் சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகள் தினமும் காட்சிகள் போல நடைபெறத் துவங்கிவிட்டன. தமிழ்நாட்டில் கமல், ரஜினி, சரத்குமார், விஜய், பிரசாந்த், குஷ்பு, தேவயானி, ரம்யா கிருஷ்ணன், நக்மா, ரோஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், எஸ்.பி. பாலசுப்ரமணியம் என அனைத்துத் தரப்புக் கலைஞர்களும் வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என்று பார்த்தால், அபஸ்வரம் ராம்ஜி, எஸ்.வி. ரமணன், தியாகராஜன் (பிரசாந்த்), கங்கை அமரன், இசையமைப்பாளர்கள் தேவா, சின்னி ஜெயந்த் ஆகியோரைச் சொல்லலாம். கடந்த ஆண்டில் இந்தியாவில் ஷாரூக்கான், சல்மான்கான், தபு, அனில் கபூர் உள்ளிட்ட பலர் ஐரோப்பிய நாடுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

கேரளத்திலிருந்து பாசில் தலைமையில் ஒரு குழு துபாய்க்குப் படையெடுத்தது. ஆந்திர நடிகர்களும் கலை நிகழ்ச்சிகள் மூலம் காசு கொழிக்கிறார்கள். ''இந்தக் கலைநிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் பணமும் புகழும்தான்.... நடிகர்களின் இந்த ஆர்வத்துக்குக் காரணம்'' என்கிறார் அபஸ்வரம் ராம்ஜி. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் குறித்து அவரிடம் பேசியதிலிருந்து : ''இந்தி நடிகர்கள்தான் இதைப் பிரமாதமாய்ப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஷாரூக்கான் இப்போது நம்பர் ஒன் நடிகர். பிஸியாக -ருக்கிறார். ஆனால் அவர் கலந்து கொள்ளாத கலை நிகழ்ச்சிகள் மிகவும் குறைவு. (வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சியில் பல கோடிகள் சம்பாதித்திருப்பதாக அவர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது.) விளம்பரப் படங்களிலும் நடிக்கிறார். இங்கிருப்பவர்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கெளரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். பிரபுதேவா 'பீக்'கில் இருந்தபோது உலகத் தமிழர்கள் பலரும் அவருடைய கலை நிகழ்ச்சிக்காகப் போட்டி போட்டார்கள். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இப்போது அஜீத்தின் நேரம். அவரும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனா 'பீக்' ல இருக்கிற நடிகர்களைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் பிரசாந்த் இதை நல்லா பயன்படுத்திக்கிறார். அவர் செய்வதுதான் சரி. நான் முதன்முதலாக 77'ல ஸ்டார் நைட் நடத்த ஆரம்பிச்சேன். அப்ப ஜெய்சங்கர்தான் எங்க நிகழ்ச்சியின் சென்டர் பிகர். அதுக்கப்புறம் 60-70 வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடத்தியிருக்கேன். நடிகர்-நடிகைகளை மையமா வெச்சு நிகழ்ச்சிகளை நடத்தறது இன்னொரு வகை. நாங்க நடத்தினதிலேயே அதிக கேட் கலெக்ஷன்னு சொன்னா அது சிங்கப்பூர்ல கமல் தலைமையில் நடந்த நிகழ்ச்சிதான். ஒரு கோடியே 14 லட்சம் கலெக்ஷன் ஆச்சு. இதே மாதிரி ரஜினியை வெச்சு என் அண்ணன் எஸ்.வி. ரமணன் லண்டன்ல நடத்தின நிகழ்ச்சியும் மிகப் பெரிய கலெக்ஷனைத் தந்தது. வெளிநாட்டு ஜனங்க கடந்த 10 வருஷமா கேட்டுக்கிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்னா அது கவுண்டமணி, செந்தில். ரெண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்த சம்மதிச்சா அதுக்குப் பெரிய வரவேற்பு இருக்கும்!'' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒரு 'க்ளு' கொடுக்கிறார் ராம்ஜி.

'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள நினைக்காதது ஏன்?' அஜீத்திடம் கேட்டோ ம். ''என்னுடைய லட்சியமெல்லாம் சினிமா, சினிமா, சினிமாதான். விளம்பரப் படங்களில் நடிப்பது, வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்று கவனத்தைத் திருப்ப விரும்பவில்லை. மற்றவர்களுக்கு நேரம் எப்படியோ. எனக்கு அடுத்த ஆண்டு வரை எந்த நிகழ்ச்சிக்கும் தேதி தர முடியாத அளவுக்கு 'டைட்' ஆக இருக்கிறது. நான் கூச்ச சுபாவம் உள்ளவன். மேடையில் தோன்றி நடிப்பதோ, நடனம் ஆடுவதோ என்னால் ஒருபோதும் முடியவே முடியாது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்'' என்று காரணங்களை அடுக்கினார் அஜீத். ''வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவது பணம், புகழுக்காக மட்டுமல்ல. கடல் கடந்து பரவியிருக்கும் தமிழர்களுக்கு கலைஞர்கள் தரும் மன திருப்தி'' என்கிறார் தொடர்ந்து வெளிநாட்டுக் கலைநிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் தியாகராஜன். ''வடநாட்டில் இருந்து செல்லும் நடிகர்களாகட்டும், தென்னிந்தியாவில் இருந்து கலை நிகழ்ச்சி நடத்தச் செல்லும் நடிகர்களாகட்டும் யாரும் இந்தியக் கலையை அங்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சி என்பது ஃப்ளைட் ஏறிப் போய் நடத்தப்படும் நாகரிகமான ரெக்கார்ட் டான்ஸ்'' என்கிறார் கலைநிகழ்ச்சிகளில் விருப்பமில்லாத ஒரு நடிகர்.

-தமிழ்மகன்

படிக்காவிட்டால் போதுமா?


சினிமாவில் சில விஷயங்கள் தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. 'உச்' கொட்டினால் நாய்கள் இரண்டு முன்னங்கால்களையும் தூக்கிக் கொண்டு நிற்பதைப் போன்றோ, குரங்குகள் 'ஆட்றா ராமா' என்று பிரம்பைக் காட்டினால் ஆடுவது போலவும் ரசிகர்களை ஒருவகைப் பழக்கத்துக்கு ஆட்படுத்தி வைத்திருக்கிறார்கள், சினிமா துறையினர்.
பல சமயங்களில் சமூகம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகளுக்கும் (அல்லது சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கங்களுக்கும்) இதற்கும் இமாலய வித்தியாசமிருக்கும். குறிப்பாகக் கல்வி என்பது குறித்து சினிமாவில் சித்திரித்து வரும் வேடிக்கைகள் வேதனையானவை. படித்தவனை அயோக்கியனாகச் சித்தரிப்பது தமிழ் சினிமாவின் வாடிக்கை. 'படிக்காத மேதை' என்று பெயர் வைப்பார்கள். படிக்காதவன் கள்ளம் கபடமற்றவன் என்பது அவர்களின் தீர்மானம்.

கர்மவீரர் காமராஜர் படிக்காத மேதையாக இருந்ததற்காக படிக்காமல் இருப்பதை ஒரு தகுதியாக்கிவிட முடியுமா? அதை காமராஜர்தான் விரும்புவாரா? அப்படி விரும்பியிருந்தால் 14 ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்திருப்பாரா? படித்தால் மட்டும் போதுமா? என்ற சந்தேகமும் சினிமாகாரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. படிக்காதவன் வெகுளியாக எல்லா துன்பங்களையும் ஏற்றுக் கொள்வான், தியாகத் திருவுறுவாக இருப்பான். படித்த அவனுடைய அண்ணனோ இல்லாத தில்லுமுல்லு வேலைகளையும் செய்வான். தன் சுயநலத்துக்காகச் சுற்றயிருப்பவர்களை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் வஞ்சிப்பான்.

மேலை நாடுகளில் படித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பும் 'ரத்தக் கண்ணீர்' எம்.ஆர். ராதா பெற்ற தாயை எட்டி உதைப்பார். காமுகனாக கண்டவளோடு சுற்றுவார். சிகரெட் பிடிப்பார். பெரும்பாலும் வில்லன்கள் எல்லோரும் படித்தவர்களாக இருப்பது சினிமாவில் வலியுறுத்தப்பட்டு வரும் நடைமுறை. நம்பியாரும் அசோகனும் எம்.ஆர். ராதாவும் கோட்டு சூட்டு போட்டபடி சதிவேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பதை உணரமுடியும். படித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று வாதிடுவதல்ல நமது நோக்கம். எழுத்தறிந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்படும் நமது நாட்டில் கல்வியின் மேன்மையை வலியுறுத்தும்படியான படங்களைவிட இத்தகைய படங்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இந்தக் கட்டுரை.

பாரதிராஜா வந்தார். கிராமத்துப் பெண்ணை ஏமாற்றும் காமுகனாக ஒரு மருத்துவரைச் சித்திரித்தார். சமீபத்தில் வெளியான 'கடல்பூக்கள்' படத்திலும் ஒரு மீன் ஆராய்ச்சி மாணவனால் ஒரு குப்பத்துப் பெண் ஏமாற்றப்படுகிறாள். பாரதிராஜாவுக்குப் படித்தவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட வேண்டும் என்கிற நோக்கமில்லை. ஆனால் சினிமாவை சினிமா பார்த்ததன் மூலமாகவே உருவாக்குவதால் நிகழ்ந்த விபத்து இது.

-- தமிழ்மகன்

சனி, ஜூலை 22, 2006

மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...


மாண்புமிகு நடிகர்களும் மாண்புமிகு மக்களும்...

'சினிமா நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் இல்லையென்றால் இனிமேல் எங்களால் படமெடுக்க முடியாது' என்று ஒற்றைக்காலில் நிற்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம். 'ஓடுகின்ற குதிரையின் மீதுதானே பணம் கட்டுகிறீர்கள். தரமில்லாத சரக்கு என்றால் எதற்காக அதற்குப் போட்டி போடுகிறீர்கள்?' என்கிறது நடிகர் சங்கம். ஒரு படம் கருவாகி, உருவாகி, வெளியாகி ஓடுவதற்கு எத்தனை பிரிவினரின் உழைப்பு தேவைப்படுகிறது? பட்டியல் இடுவோம். கதாசிரியர், இயக்குநர், வசனகர்த்தா, உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவாளரின் உதவியாளர்கள், லைட்மேன்ஸ், ஆர்ட் டைரக்டர், அவருடைய உதவியாளர்கள், ஸ்டன்ட், நடனக் கலைஞர்கள், துணை நடிகர்கள், புரொடக்ஷன் ஆட்கள், புரொடக்ஷன் மேனேஜர், வாகனம் ஓட்டுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள், பரிமாறுகிறவர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடுபவர்கள், பேசுபவர்கள், ஆடை வடிவமைப்பவர்கள், பத்திரிகைத் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் ஏஜெண்டுகள்... இன்னும் சொல்ல மறந்த எத்தனையோ பேரின் உழைப்பு சினிமா வெற்றிக்குத் துணை நிற்கிறது.

இவ்வளவு உழைப்புக்கும் பணம் செலவிடுகிற தயாரிப்பாளர், அவருக்குத் துணை நிற்கிற விநியோகஸ்தர்கள், சினிமா தியேட்டர் அதிபர்களின் திரையீடு உத்திகளும், திறமைகளும், பணம் புரட்டப் படும் பாடுகளும் உழைப்பின்றி வேறென்ன? மேலே குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினரின் உழைப்பு, நடிகர்களின் உழைப்புக்குச் சற்றும் சளைத்ததில்லை. அப்படியென்றால் இத்தனை குதிரைகள் இழுத்துக் கரை சேர்க்கும் சினிமா தேரை, நடிகர்கள் மட்டும் இழுத்துக் கரை சேர்த்ததாகச் சித்திரிப்பது, எந்த வகையில் நியாயம்?

லைட்மேன் 'குதிரை'யின் மீதோ, வட இந்திய நடிகர்களுக்குக் குரல் கொடுத்து அந்தப் பாத்திரத்துக்கு உயிரூட்டும் பின்னணிக்குரல் தரும் 'குதிரை'யின் மீதோ யாரும் பணம் கட்டாதது ஏன்? அஜீத்தும், விஜய்யும், ரஜினிகாந்தும், ஜோதிகாவும் மட்டுமே முழுப் படத்தின் வெற்றியைச் சுவைப்பது எப்படி நியாயம்? இது தமிழ் நடிகர்களுக்கு மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்களுக்குமான நியாயமாகவே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு, பழக்கத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டது.
ஆம்! வெறும் பழக்கம்தான். வாழ்க்கையே சில பழக்கங்களின் தொகுப்பு எனும்போது இது மட்டும் பழக்கமாக இருக்கக்கூடாதா? நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் பழக்கமும், அவர்களுக்கு விதம்விதமான பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி விருதுகள் வழங்கும் பழக்கமும், நடிகர்களின் காதல்களையும் கல்யாணங்களையும், விவாகரத்து விவகாரங்களையும் தலைப்புச் செய்திகளாக்கிய பத்திரிகைகளின் பழக்கமும், குழந்தைகளுக்குக் கடவுள், தேசத் தலைவர், மகான்களின் பெயர்களை விட நடிகர்களின் பெயர்களைச் சூட்டி மகிழும் பழக்கமும், அவர்களைப் போலவே ஆடையும், அலங்காரமும் செய்து கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதுதான் நடிகர்களை முன்னுதாரணப் பிரதிநிதிகளாக்கியிருக்கிறது. அவர்கள் பேசும் சினிமா வசனங்கள் பொன்மொழிகளாக - ஆட்டோ வாசகங்களாக - மனக் கல்வெட்டாக மாறும்போது அந்த உயர்ந்த மனிதர்களுக்கு உயர்ந்த ஊதியமும் வழங்குவதில் தவறு இல்லைதானே? எந்தக் கலெக்டருக்கு, காவல் துறை அதிகாரிக்கு மக்கள் ரசிகர் மன்றம் அமைத்தனர். நல்லவர்கள் போற்றப்படுவதில்லை. ஊழல் செய்யும் ஒன்றிரண்டு அதிகாரிகளைக் கிழிகிழி என்று மீடியாக்கள், லஞ்சமே வாங்காதவர்களுக்குக் 'காலமானார்' பகுதியில் கூட இடம் தருவதில்லையே... நடிகர்கள் சிறந்த நடிகர் விருது வழங்கும் அமைப்புகள்தான் எத்தனை? மத்திய அரசும், மாநில அரசும் மட்டும் இதில் விதிவிலக்கா? சிறந்த விவசாயியையோ, சிறந்த விஞ்ஞானியையோ, சிறந்த எழுத்தாளரையோ இப்படி போட்டி போட்டுக் கொண்டு அமைப்புகள் கெளரவிக்கின்றனவா? நடிகர்களின் வீட்டில் மட்டும் கேடயங்கள் அணிவகுப்பு ஏன்? சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பாலிவுட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் எல்லாம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நகரின் மிகப் பெரிய அரங்கில் விழா. அனைத்துப் பிரபலங்களும் விழாவுக்கு வந்து போக விமான ஏற்பாடுகள், கார் ஏற்பாடுகள்,

''நடிகர்களை இத்தனைச் சிறப்பாகக் கெளரவிப்பதில் இந்த விழாவை நடத்தும் சினிமா பத்திரிகைக்கு என்ன லாபம்?'' என்று என்னிடம் கேட்டார் விழாவில் விருது பெற்ற ஒரு நடிகை.
''பத்திரிகைக்கு பெரிய விளம்பரம் கிடைக்கும்'' என்றேன். ''அதற்காக எவ்வளவு செய்கிறார்கள்?''
''ஏறத்தாழ ஒன்னரை கோடி ரூபாய்" ''அவ்வளவு பணம் திரும்பக் கிடைக்குமா?''
''கிடைத்து விட்டது''
''எப்படி?''
''ஒரு இரண்டு சக்கர வாகனம் தயாரிக்கும் கம்பெனி ஸ்பான்சர் செய்திருக்கிறது"
''அவர்கள் அந்தப் பணத்தைப் திரும்ப எடுத்து விடுவார்களா?''
''இந்நேரம் எடுத்திருப்பார்கள்'' நடிகையின் புருவம் உயர்ந்தது
''எப்படி?''
''ஒன்னரை கோடி என்பது அந்த நிறுவனத்தின் 100 வண்டிகளின் விலை. இந்த விழா விளம்பரங்கள் மூலம் அவர்களுக்கு 500 வண்டிகளாவது விற்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செலவு செய்தது மாதிரி ஐந்து மடங்காகப் பணம் திரும்பும்...''
''அப்படியானால் இவ்வளவு செலவையும் எற்றுக் கொள்பவர்கள்?...''
''வேறு யார்? மக்கள்'' என்றேன்.
பக்கத்தில் இருந்த என் நண்பர் திருத்தினார் : ''வழக்கம் போல...''
-தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin