செவ்வாய், பிப்ரவரி 12, 2008

மம்முத திருவிழா


குட்டிப் பெண்ணாய் ஜெயா டி.வி.யில் 9 வயதில் "கிட்' நியூஸ் வாசித்துக் கொண் டிருந்தபோதே "அட' சொல்ல வைத்தவர் ஸ்ரீதேவி. இப்போது அந்த வயதை இரட்டிப் பாக்கிக் கொள்ளுங்கள். "அடடா' சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், நாட்டியத்தாரகை, பொதிகையில் டி.வி. காம்பியர், சோஷியாலஜி மாணவி என்று பல முகங்கள் இவருக்கு.

முகம் 1: டி.வி.யில் இருந்து ஆரம்பிப்போமா? பொதிகையில் "கதை கதையாம் காரண மாம்' நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி.
பழைய திரைப்படம் ஒன்றை ஒரு வாரத்துக்கு அலசுவோம். அது எப்படி ஒரு படத்தையே ஒரு வாரத்துக்கு அலசுவது? தினமும் இரவு 9 மணிக்குத் துவங்கும் இந்த அரைமணிநேர நிகழ்ச்சியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு சம் பவங்கள், நடிகர்- நடிகைகள் பற்றிய குட்டித் தக வல்கள், தொழில்நுட்பத் தகவல்கள் என ஒவ் வொரு நாளும் சுவாரஸ்யமாக வழங்குகிறோம்.
இந் நிகழ்ச்சி மறுநாள் மதியம் 2 மணிக்கு மறு ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இதைத் தவிர திரைவிமர்சனம் நிகழ்ச்சியை யும் தொகுத்து வழங்கி வருகிறேன். தொகுப்பா ளினியாக ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடு இருப்பதால் நான் அவற்றைத் தவிர்த்து வருகி றேன்.

முகம் 2: பரத நாட்டிய ஈடுபாடு ஏற்பட்டது எப் படி? மூன்று வயது முதலே எனக்கு பரத நாட்டியத்தில் ஆர்வம்தான். பள்ளிக்குச் செல் வதற்கு முன்பிருந்து நாட்டிய வகுப்புக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். எனக்குத் தொழில் நாட்டியம் என்று அப்போதே பெற் றோரும் முடிவு செய்துவிட்டார்கள். இப் போது சுதாராணி ரகுபதியின் பரதாலியா நாட் டியப் பள்ளியில் பயின்று வருகிறேன். நாட்டி யத்தில் பரீட்சார்த்த முயற்சிகள் செய்வதில் ஆர் வம் காட்டிவரும் அவருடைய மாணவியாக இருப்பது மிகுந்த பெருமையாக இருக்கிறது.
நாட்டிய நாடகங்களாக அவர் அமைத்த நிகழ்ச் சிகளில் அவருடன் பங்கு பெற்று பலருடைய பாராட்டையும் பெற்றேன்.

முகம் 3: என்னென்ன நாட்டிய நாடகங்களில் இதுவரை பங்கு பெற்றிருக்கிறீர்கள்? சிலப்பதிகாரம் நாட்டிய நாடகம்தான் நான் முதலில் பங்கு பெற்றது. அதில் எனக்கு மாதவி வேடம். சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற நாட்டிய நாடகம் இது.
கடந்த ஆண்டில் மமுதா நாட்டிய நாட கத்தை அரங்கேற்றினோம். மன்மதா என்பதன் மரூவுதான் மமுதா. ரதி- மன்மதனின் காதல் காவியத்தை கிராமங்களில் "மம்முத திருவிழா' என்றுதான் அழைக்கிறார்கள். சில கிராமங்க ளில் 15 நாள்களுக்கு மம்முத திருவிழா நடக்கும் என்பார்கள். இந்த நாட்டிய நாடகத்தில் பரதம், தெருக்கூத்து, கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பல அம்சங்கள் கலவையாக இடம் பெறும். பாட்டாக மட்டும் இல்லாமல் இடை யிடையே வசனங்களும் இடம் பெறும். இதில் நான் ரதியாக நடித்திருந்தேன். என் குரு மன்மத னாக நடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு டிசம்பர் சீஸ னில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மத்திய அரசின் சென்டர் கல்சுரல் ரிúஸôர்ஸ் ட்ரெய்னியாகவும் தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் கிளாஸிகல் ஆர்ட் விழிப்பு ணர்வு பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கி றேன். அத்துறைகள் சார்பில் அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். தில்லி, கரூர், சிவகாசி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை.

முகம் 4: கல்லூரியில் உங்களின் இந்தக் கலைத் துறை ஆர்வங்களை எப்படி எடுத்துக் கொள் கிறார்கள்? மிகவும் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.
சில டெஸ்ட் நேரங்களில் நான் வெளியூர் நிகழ்ச்சிகளில் இருக்க வேண்டியிருந்தால் அந் தத் தேர்வைத் தனியாக எழுத அனுமதிக்கிறார் கள். கல்லூரி சார்பாக என்னைப் பல போட்டி களுக்கு அனுப்புகிறார்கள்.
சோஷியாலஜி படிப்பு எனக்குச் சமூகப் பார் வையை ஏற்படுத்தியிருக்கிறது. சோஷியல் சர் வீஸ் செய்யும் ஆர்வமும் இன்னொரு பக்கம் மெல்ல மொட்டுவிட ஆரம்பித்திருக்கிறது.
அனாதை குழந்தைகள் என்று முன்னாடி வார்த் தையாக அறிமுகமாகியிருந்தார்கள். இப் போது அவர்கள் வாழ்க்கையாக அறிமுகமாகி யிருக்கிறார்கள். நிச்சயம் ஏதாவது செய்வேன்.
தமிழ்மகன்

LinkWithin

Blog Widget by LinkWithin