ஞாயிறு, டிசம்பர் 19, 2010

மலையாளத்தில் என் சிறுகதை தொகுதி




கேரளத் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு கடந்த 16, 17, 18 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தில்லி பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியர் நாச்சிமுத்து, கேரள பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலமோகன் தம்பி, திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முனைவர் நயினார், செயலர் வானமாமலை, கேரள தமிழ்ப் பேரவையின் இணைச் செயலர் வீராணம் முருகன், எழுத்தாளர் நீல.பத்மமநாபன், ச.தமிழ்ச் செல்வன், கவிஞர் அ.வெண்ணிலா... பேசியவர்களில் சிலர்.
என்னுடைய எட்டாயிரம் தலைமுறை, மீன் மலர் சிறுகதை தொகுதிகளில் இருந்து பதினோறு சிறுகதைகள் தேர்வு செய்து சைலஜா ரவீந்திரன் மலையாளத்தில் மொழிபெயர்த்திருந்தார். அவை காலபிம்பம் என்ற தலைப்பில் சிறுகதை தொகுதியாக வெளியிடப்பட்டது.
மொழிபெயர்க்கப்பட்ட விதம் தமிழுக்கு நெருக்கமாக இருப்பதாக கவிஞர் யூமாவாசுகி அபிப்ராயம் சொன்னார். என்னுடன் அவரும் திருவனந்தபுரம் வந்திருந்தார். என் மைத்துனர் விவேகானந்தன், நண்பர்கள் கோவர்தன், விஜய்தீபன் ஆகியோரும் சென்னையிலிருந்து என்னுடன் வந்திருந்து எனக்குக் கிடைத்த பெருமையால் மகிழ்ந்தனர்.


விழாவுக்குச் செல்வதற்கு முன் நாகர்கோவிலில் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தது இனிமையான அனுபவம். அதைப் பற்றி நாளை...

2 கருத்துகள்:

ஆதவன் சொன்னது…

great sir. malayalathil ungal nool velivaruvathil enakku perumagizhchi.

RAGUNATHAN சொன்னது…

1964-இல் தமிழ்மகன் சென்னையில் ஜெனிச்சு....
கால பிம்பம் வெற்றி பெற வாழ்த்துகள் சார் :)

LinkWithin

Blog Widget by LinkWithin