வியாழன், ஜூலை 28, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து

அன்பு தமிழ்மகன்


விருது பெற்றதற்கு வாழ்த்துகள்,


உங்கள் நாவலை இரண்டு மாதங்களுக்கு முன்பே வாசித்துவிட்டேன், சமகால தமிழக சூழலை மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள்,
நாவலின் ஊடாக வெளிப்படும் பகடியும் உள்ளார்ந்த கோபமும் அசலானவை


எனக்கு நாவலை மிகவும் பிடித்திருந்தது,


மிக்க அன்புடன்
எஸ்ரா

புதன், ஜூலை 27, 2011

வெட்டுப்புலி' நாவலுக்கு ரங்கம்மாள் விருது



கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு நான் எழுதிய "வெட்டுப்புலி' நாவல் தேர்வாகியுள்ளது.
÷இதுகுறித்து கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வெளியிட்டுள்ள செய்தி:
÷இலக்கிய முன்னேற்றத்துக்காக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த தமிழ் நாவலுக்கு, திருமதி ரங்கம்மாள் பரிசு வழங்கப்படுகிறது. 2009, 2010-ம் ஆண்டுகளில் வெளியான 20 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வரப்பெற்றன. இதில் தமிழ்மகன் எழுதிய "வெட்டுப்புலி' நாவல், பரிசுக்குத் தேர்வாகியுள்ளது.
÷இதில் நாவலாசிரியர் தமிழ்மகனுக்கு பரிசுத் தொகையாக ரூ. 20 ஆயிரம், இந்த நாவலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
÷தமிழ்மகனின் "வெட்டுப்புலி' நிகழ்கால சரித்திரத்தை பதிவு செய்யும் முறையில் அமைந்த நாவல். சமூக வரலாறை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. 1910-2010-க்கு இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகளைச் சுவையுடன் படைக்கப்பட்டுள்ளது.

புதன், ஜூலை 06, 2011

வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு

காலை(6.7.11)யில் கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தேன்.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்கள் எழுதிய வெட்டுப் புலி இரண்டாம் பதிப்பு வெளிவந்துவிட்டது என்றார்.

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் ஒரு ஆண்டுக்குள் ஒரு நூல் இரண்டாம் பதிப்பு வெளியாவது இதுவே முதல்முறை என்றும் சொன்னார்.
ரொம்ப பெருமையாக இருந்தது.
பிளாகில் எழுதிவரும் இளம் எழுத்தாளர்களின் பங்களிப்பே இந்த நூலின் விற்பனைக்குப் பெரும் பங்கு வகித்தது.
யுவகிருஷ்ணா, ஆதிஷ, கிருஷ்ண பிரபு, கேபிள் சங்கர், தனிமையின் இசை அய்யனார், ரோமியோ, சுரேஷ், சிவராமன், கிழக்கு ஆர். முத்துக்குமார், சொல்வனத்தில் எழுதிய க.குணசேகரன், புத்தகம் பேசுது இதழில் எழுதிய ஆய்வு மாணவர் ஐ. சிவகுமார், தமிழ் ஸ்டூடியோ அருண் போன்ற பலர் வெட்டுப்புலி நாவல் குறித்து தங்கள் விமர்சனங்களை, பாராட்டுகளை பகிர்ந்து கொண்டார்கள்

யுகமாயினியில் கவிஞர் மதுமிதா எழுதிய நீண்ட ஆய்வும் வடக்கு வாசலில் பேராசிரியர் எம்.ஏ. சுசீலா ஆய்வும் பெருமை சேர்ப்பவை. புதுச்சேரி பேராசிரியர் ராஜ்ஜா, எழுத்தாளர் பாரதிவசந்தன், நாடகக் கலைஞர் பாரதி மணி, விமர்சகர் வெங்கட் சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் போன்றோரும் நாவலைப் படித்துவிட்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர்.
எழுத்தாளர் ஜெயந்தன் நினைவுப் போட்டியில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த எழுத்தாளர் பிரபஞ்சனிடம் என் நன்றியைத் தெரிவித்தபோது இத்தனை அரிய நாவலைத் தந்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியது பெருமையிலும் பெருமை.
நாவலை வெளியிட்டுச் சிறப்பித்ததோடு நாவல் எழுதவதற்கு முன் பேசியிருந்தால் இன்னும் நிறைய தகவல்களைச் சொல்லியிருப்பேன் என நெகிழ வைத்த எங்கள் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், அண்ணாவின் வாழ்க்கை வரலாறை பென்குவின் பதிப்பகத்துக்காக எழுதிய கண்ணன் என ஊக்கமளித்தவர்களை பட்டியல் இட்டால் பெரிய பெயர் பட்டியலாகிவிடும்.
பாதிநாவல் படித்தேன். அண்ணன் படிப்பதற்காக வாங்கிச் சென்றார்.. முழுதும் படித்துவிட்டு எழுதுகிறேன் என்று சொன்ன எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன், உங்கள் நாவல் பற்றி கேள்விப்பட்டேன்.. விரைவில் படிக்கிறேன் என்று சொன்ன எழுத்தாளர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தினத்தந்தி, இந்து, தினமணி, தினமலர், ஆனந்தவிகடன் இதழ்களில் வெளியான விமர்சனமங்கள் நாவலை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றின.
காலச்சுவடு இதழில் கவிஞர் பெருந்தேவி விமர்சனம் எழுத இருக்கிறார்... பெரும்பாலும் அடுத்த இதழில் வெளியாகலாம் என்று சொன்னதற்காக அதன் பொறுப்பாசிரியர் தேவிபாரதிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், ஜூலை 04, 2011

துமரியா

இந்த வார கல்கி(10.7.11)யில் என் சிறுகதை










இ‌ந்​த‌க் க‌தை எ‌ந்த ஆ‌ண்​டி‌ல் நட‌க்கிற‌து, எந்த நாட்டில் நடக்கிறது எ‌ன்​ப‌து என‌க்கு அ‌த்த‌னை ‌து‌ல்லியம‌ாக‌த் ‌தெரியவி‌ல்‌லை. இ‌ப்போதிரு‌க்கிற அரசிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் பலர் அ‌ப்போது சி‌லையாக‌வோ, பு‌கை‌ப்படமாகவோ ம‌ட்டு‌மே எ‌ஞ்சியிரு‌ந்தன‌ர்.

பாராளும‌ன்ற‌த்தி‌ன் ம‌ாடி அறையி‌ல் ஒரு ‌பொறு‌ப்ப‌ான பதவியி‌ல் இ‌த்த‌னை அவ ந‌ம்பி‌க்கையோடு நி‌ன்று ‌கொண்டிரு‌ப்பத‌ற்கு வரு‌த்தம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. அரசிய‌ல் ‌நெரு‌க்கடி. எ‌தை‌க் ‌கே‌ட்ட‌ாலு‌ம் என‌க்கு‌த் ‌தெரிய‌ாது எ‌ன்பதை‌யே பதில‌ாக‌ச் ‌சொல்ல ‌வே‌ண்டிய நி‌ர்ப‌ந்த‌ம். கூ‌ட்டணி‌க் க‌ட்சிகளி‌ன் ‌தொல்‌லை அதிகமாகிவி‌ட்ட‌து. எ‌ல்ல‌ாவ‌ற்று‌க்கு‌ம் பணி‌ந்‌து ‌போக ‌வே‌ண்டிய க‌ட்ட‌ாய‌ம். பிரதம‌ர் த‌ன் தொப்பியை‌க் கழ‌ற்றி ‌வை‌த்துவி‌ட்டு க‌ண்ண‌ாடி வழி‌யே பாராளும‌ன்ற ஜ‌ன்னலு‌க்கு ‌மே‌ல் இரு‌ந்த சூரியத் தடு‌ப்பை‌ப் பார்‌த்த‌ார். அ‌ந்த‌ப் புற‌ாக்க‌ள் இன‌ப் ‌பெரு‌க்க ‌வே‌ட்கையோடு ஒ‌ன்‌றை ‌நோக்கியெ‌ன்று மூ‌ச்‌சை இழு‌த்துவி‌ட்டபடி உ‌க்கு‌ம் ‌கொட்டி‌க் ‌கொண்டிரு‌ந்தன.
அறைக்குள் இருக்கும் குளிரைவிட வெளியே அதிகமாக இருக்கும் என்ற சிந்தனையை ஜன்னலோரத்திலேயே முடித்துவிட்டு இருக்கைக்கு வந்தார்.
குடியாட்சி பெற்று 12- வது பிரதமர் வரை நாடு ஓரளவுக்கு ‌ஸ்திரம‌ாக‌த்த‌ான் இரு‌ந்த‌து. குறிப்பாக 13-வது பிரதமர் எதிர்க் கட்சிகளின் அத்தனைக் குற்றச்சாட்டுகளுக்கும் பணத்தாலேயே பதில் சொன்னார். அது ஒரு விபரீத ருசியை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சிகள் தினம் குற்றம் கண்டு பிடித்தனர். அதுவுமின்றி அவர்களுக்கு சிரமம் வைக்காமல் நாட்டில் அத்தனைக் குற்றங்கள் இருந்தன. கமிஷன் வாங்காமல் எந்த ஒப்பந்தத்தையும் போட முடிவதில்லை. எவ்வளவு கமிஷன் வாங்கினாலும் எதிர் கட்சிகளுக்கு அதில் பாதிக்கு மேல் செலவிட வேண்டியிருக்கிறது. கமிஷன் வாங்கவில்லையென்றால் உடனே ஆட்சியைக் கலைத்துவிடுகிறார்கள். சரியானபடி கமிஷன் வாங்காததால்தான் கடந்த முறை ஆட்சியிலிருந்த கட்சி கலைக்கப்பட்டது என்பது கடைகோடி பிரஜைக்கும் தெரியும். இந்த சாதுர்யம்கூட இல்லாத இவனெல்லாம் எதற்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஹேலோகிராமில் கார்ட்டூன் போட்டார்கள்.
அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க அடுத்து வந்த பிரதமர்களிடமும் எதிர்க் கட்சிகள் அதிக குற்றச்சாட்டை வைத்தன. ஆள்வதைவிட குற்றச்சாட்டுகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லோருமே எதிர் கட்சியாக செயல்படவே விரும்பினர். வேறு வழியே இல்லாமல் ஜெயிப்பவர்தான் ஆட்சியை நடத்தித் தொலைக்க வேண்டியிருந்தது. ​ ஆ‌ட்​சி‌க் க‌ôல‌ங்​க​ளி‌ல் பிர​த​ம​ரு‌க்​க‌ôன பிடி​ம‌ô​ன‌மே இ‌ல்​ல‌ô​ம‌ல் ‌பே‌ô‌ய்​வி‌ட்​ட‌து.​ பண‌ம் ‌பேசி​ய‌து.​ ல‌ஞ்​ச​மு‌ம் ஊழ​லு‌ம் ‌பேசி​ய‌து.​ பிர​த​ம‌ர் ‌பேசு​வ​த‌ற்கு ஒ‌ன்​று​ஒன்​று​மில்​லா​மலா​கி​விட்​டது.​
தகா​ரி​லும் புரி​சா​வி​லும் நிலைமை கட்​டுப்​பாட்​டில் இல்லை.​ இன்னமும் அந்தப் பகுதிகளில் கம்யூனிஷ முழக்கங்கள் இருந்தன. மூன்று மணிக்கு ராணுவ அதி​கா​ரி​க​ளு​டன் முக்​கி​ய​மான கூட்​டம்.​ இது​வரை அங்கு மூன்று ரயில்​கள் கொளுத்​தப்​பட்​டு​விட்​டன.​ பாலங்​கள் பல தரை​மட்​ட​மா​கி​விட்​டன.​ ராணு​வத்தைக் கள​மி​றக்​கு​வதைத் தவிர வேறு வழி​யில்லை.​
நட​வ​டிக்கை​கள் எப்​படி அமைய வேண்​டும் என்று திட்ட வரையறை செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இரண்டு முப்​பது ஆகி​விட்​டது.​ உத​வி​யா​ளர் ராணுவ அதி​கா​ரி​கள் வந்து​விட்​டதை​யும் உள்துறை அமைச்​சர் இன்​னும் சில நிமி​டங்​க​ளில் வந்து​வி​டு​வார் என்று கூறி​விட்​டுச் சென்​றார்.​ தன்​னிறை​வைான கிரா​மங்​க​ளின் அவ​சி​யத்​தைப் பற்றிய புத்தகத்தின் பக்​கங்​களை மீண்​டும் படிக்க ஆரம்பித்தார் பிரதமர். நாட்டின் குடியாட்சிக்காகப் பாடுபட்ட மகத்தான தலைவர் எழுதிய நூல் அது. அவருடைய நிறைய கொள்கை​கள் நடை​முறை சாத்​தி​ய​மில்​லா​மல் போய்​விட்​டன.​ மனச் சோர்வான நேரத்தில் அதைப் படிக்கும்போது நகைச்சுவை ஊற்றெடுக்கும்.
உத​வி​யா​ளர் மீண்​டும் வந்​தார்..​ ​
"வந்​தாச்சா?'' பிர​த​ம​ரின் குரலைக்​காட்​டி​லும் சைகை​யால் கேட்​டதை வைத்துத்​தான் உதவியாளர் ஆமோ​தித்​தார்.​​ உள்ளே வரச்​சொல்​லுங்​கள் என்​பதை​யும் மெல்​லிய தலை​ய​சைப்​பில் உணர்த்​தி​விட்டு தொப்பியைத் தலை​யில் பொருத்​திக் கொண்​டார்.​
மொத்​தம் ஆறு​பேர் உள்ளே வந்து பிர​த​ம​ருக்கு வந்​த​னம் சொல்லி,​​ இருக்கையை நோக்கி அவர்​கை​காட்​டி​யதும் அமர்ந்​த​னர்.​ ஒரு துண்டு அமை​திக்​குப் பிறகு ஃபீல்ட் மார்ஷல் தொண்டையைச் செறு​மி​னார்.​ அறை​யில் இருந்த மீதி அனை​வ​ரும் அவரை நோக்க ஆரம்​பித்​த​னர்.​ அவர் ஆரம்​பிக்​கட்​டும் என்ற வழி​வி​டல் அது.​
"மக்​கள் நிறைய பலி​யாவதைத் தவிர்க்க முடியாது.​ ஆனால் அதைப் பற்றி கவலைப்​ப​டாமல் தீவி​ர​வா​தி​களை ஒடுக்க வேண்​டி​யி​ருக்​கும்.​ மூன்று ரயில்​கள் இந்த இரண்டு மாதத்​தில் தட​ய​மில்​லா​மல் எரிந்து போயி​ருக்​கின்​றன.​ அதி​லி​ருந்த மக்​களோடு.​ காவல்​துறை​யி​னர் யாரும் அந்​தப் பிராந்​தி​யத்​தில் இனி இருக்க முடி​யாது.​ உயிர் பிழைத்து இருக்க வேண்​டு​மா​னால் காக்கி அணிந்த தாவ​ரம்​போல இருக்க வேண்​டி​யி​ருக்​கி​றது.​ மக்​க​ளின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​ மருத்து​வம் இல்லை,​​ கல்வி இல்லை,​​ நல்ல குடி​நீர் இல்லை,​​ உணவு இல்லை...​ மக்​கள் செத்துக்கொண்​டி​ருக்​கி​றார்​கள்...​ அல்​லது அலை அலை​யாக பஞ்​சம் பிழைக்க வெளியே தப்​பிச் செல்​கி​றார்​கள்.​ நம்​மு​டைய ஆபரே​ஷ​னில் சிலர் மடிய வேண்​டி​யி​ருப்​பது அவர்​க​ளின் நன்​மைக்​காக....​ அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.​''
பிர​த​மர் உள்​துறை அமைச்​சரை நோக்​கி​னார்.​ "என்ன செய்​ய​லாம்?'
"மக்​க​ளுக்​குப் பாதிப்பு ஏற்​ப​டா​மல் செய்ய முடி​யாதா...​ அதா​வது முடிந்த அள​வுக்கு...​'' அமைச்சரின் தொனி​யில்​ நம்​பிக்கை​யில்லை.​ ஒரு கடமைக்​கா​கத்​தான் கேட்​டார்.​
"முடிந்த அள​வுக்கு என்​பதை நீங்​கள் சொல்ல வேண்​டி​யதே இல்லை.​ தேவை​யில்​லா​மல் ஒரு உயி​ரும் பிரி​யாது.​''
பிர​த​மர் நாட்​டின் நிலையை விளக்க எதி​ரில் இருந்த குறிப்​புக் காகி​தங்​களை கையில் எடுத்து வைத்துக்கொண்டுபேச ஆரம்​பித்​தார்.​ "நாம் செய்து கொண்​டி​ருக்​கும் ஒப்​பந்​தப்​படி ஆண்​டுக்​குக் குறைந்​த​பட்​சம் எட்​டா​யி​ரம் டன் யுரே​னி​யத்தை துமரியாவுக்கு ஏற்​று​மதி செய்ய வேண்​டும்.​ இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு நாம் மகத்​தான சாதனை​யைச் செய்​தோம்.​ ஆஸ்​திரே​லி​யாவே அதிர்ந்து​போ​னது.​ அவர்​க​ளுடைய யுரே​னிய சாம்​ராஜ்​ஜி​யம் பற்றி உங்​க​ளுக்​குத் தெரி​யும்.​ அந்த ஆண்​டில் மட்​டும் பனிரெண்​டா​யி​ரம் டன் அனுப்பி வைத்​தோம்.​ புரட்சியாளர்​கள் தீவி​ரம் அதி​க​மா​ன​தும் கடந்த ஆண்​டில் அது பாதி​யா​கக் குறைந்தது.​இந்த ஆண்டு சுத்​த​மாக வேலையே நடக்​க​வில்லை.​ யுரே​னி​யம் மொத்​த​மும் பிரச்னை​யாளர்​கள் இருக்​கும் அந்த இடத்​தில்​தான் இருக்​கி​றது.​ இனி ஒரு கிராம் யுரே​னி​யத்தை எடுக்க வேண்​டு​மா​னா​லும் எங்​கள் எல்​லோரை​யும் கொன்​று​விட்​டுத்​தான் எடுக்க முடி​யும் என்று சூளு​ரைக்​கி​றார்​கள்.​"
"அவர்கள் நமக்கு எவ்​வ​ளவு காலம் அவ​கா​சம் தரு​வார்​கள்?'' ஜென​ரல் கேட்​டார்.​
"சொல்​லப்போனால் அவர்​கள் கெடு முடிந்து​விட்​டது.​ அவ​கா​சமே கொடுக்​க​வில்லை.​ கொடுக்​க​வும் மாட்​டார்​கள். கேட்​க​வும் முடி​யாது'' அவ​கா​சத்தைப் பற்​றியபேச்​சுக்கே இட​மில்லை என்​பதைத்​தான் பிர​த​மர் அப்​படி உணர்த்து​வ​தற்கு முயற்சி செய்​தார்.​
"ஒப்​பந்​தத்தை முறித்துக்கொள்​வ​தற்கு ஏதா​வது வழி இருக்​கி​றதா?'' ஒப்​பந்த ஷரத்து​கள் பற்றி நன்​றா​கத் தெரிந்த அமைச்சரே இப்​ப​டியொரு கேள்​வியைக்கேட்​பது அனை​வ​ருக்​குமே ஆச்​சர்​ய​மா​கத்​தான் இருந்​தது.​ அமைச்சரே தொடர்ந்​தார்..​ "அணு ஒப்​பந்​தத்தோடு நம்​முடைய இரு​நாட்டு நல்​லு​ற​வும் சம்​பந்​தப்​பட்​டி​ருப்​பது தெரி​யும்.​ இரு​நôட்டு வர்த்​தக உற​வு​கள் பல​வும் பாதிக்​கும்.​ நம் சொந்த மக்​களேயே நாம் பலி​யாக்​கு​வதை​விட அந்த பதிப்பு குறை​வு​தானே?''
"இல்லை மினிஸ்​டர்.​ துமரியாவைப் பற்றி அப்​படி எடை​போ​ட​தீர்​கள்.​ அமெரிக்காவைவிட மோசமானவர்கள். பெட்ரோல் இருந்​தது வரை வளை​குடா நாடு​களுக்கு ராணு​வத்தை அனுப்பி வைக்க ஏதா​வது நொண்டி சாக்​கு​கள் சொன்னார்​கள் நினைவிருக்கிறதா? ஆப்​கா​னிஸ்​தான்,​​ ஈரான்,​​ ஈராக், எகிப்து...​ வரி​சை​யாக எல்லா நாட்​டி​லும் தள​வா​டங்​களைக் கொண்டு போய் நிறுத்​தி​யது போல இங்கும் நடக்கும்.​ அமைதி குலைந்து போய்​விட்ட நாடு​க​ளில் அவர்​கள்​தான் அமைதி ஏற்​ப​டுத்து​வார்​கள். புரிகிறதா? அவர்களின் அகராதியில் இருக்கும் அமைதி. நாடே ரண​க​ள​றி​யா​கும்.​ மறு​படி எழுந்​தி​ருக்க நூறு வரு​ஷம் ஆகும்.​ அல்​லது எழுந்​தி​ருக்​கா​மலே​யே​கூட போக​லாம்.​ சாம் மாமா மூக்கை நுழைக்க கார​ணங்​களே தேவைப்​ப​ட்டதில்லை. துமரியா அவர்களையே மிஞ்சிவிட்டார்கள்.​ அவர்​கள் ஏற்​ப​டுத்​தும் அமை​தியைத்​தான் எதிர்​பார்க்​கி​றீர்​களா?''
பிர​த​மர் கையை உயர்த்தி ஜென​ரலைக் கட்​டுப்​ப​டுத்தி,​​ "அவர்​கள் உள்ளே வந்து அமை​திப்​ப​டுத்து​கிறவரை நாம் சும்மா இருக்​கப் போவ​தில்லை.​ நம்முடைய போர் சாதனை​கள் எல்​லாம் எங்​க​ளுக்கு நினை​வி​ருக்​கின்​றன'' என்​றார்.​
அது​தான் பிர​த​ம​ரின் சாதுர்​யம்.​ ராணு​வத்​தின் பெருமையை ராணு​வத் தள​ப​தி​யி​டமே சொல்​லு​வது அவரை சட்டென கட்​டுப்​ப​டுத்த உத​வி​யது.​ "போர் என்​றால் தயங்​கு​ப​வர்​கள் இல்லை.​ ரிஸர்வ் ட்ரூப்பை​யும்சேர்த்து இரண்டு கோடிக்​கும் அதி​க​மான சிப்​பாய்​கள் எந்த நேர​மும் தயா​ரக இருக்​கி​றார்​கள்.​ ஆனால் அதற்​குத் தேவை​யி​ருக்​கு​மா​னல் அது நாம் இப்​போது திட்​ட​மிட்​டி​ருக்​கும் ஆபரே​ஷனை​விட அதிக பாதிப்​புடை​ய​தா​கத்​தான் இருக்​கும்.​ முதல்​கட்​ட​மாக நாம் தீவிரவாதி​களை சரிக்​கட்​டு​வது உத்​த​மம்'' உப தள​பதி முதல்​முறை​யா​கப் பேசி​னார்.​
"நிலைமை போருக்கு உகந்​த​தாக இல்லை.​ ஏற்கெனவே ஆயுதம் வாங்குவதில் கமிஷன் வாங்கி எதிர் கட்சியாளர்கள் அத்தனைப் பேருக்கும் பலமுறை கொடுத்தாகிவிட்டது. நம்பிக்கை தராத ஆயுதங்கள். நாம் கட்​டுப்படுத்தவேண்​டி​யது உள்​ளூர் பிரச்​னை​யா​ளர்​க​ளைத்​தான்.​ அவர்​க​ளுக்கு ஆரம்​பம் முதலே யுரே​னிய சுரங்​கங்​கள் அமைப்​ப​தில் எதிர்ப்பு இருந்​தது.​ பூமிக்​குள் இருக்​கும் மிகப் பெரிய பொக்​கி​ஷம்.​ நாட்​டின் வளமே அதில்​தான் புதைந்து கிடந்​தது.​ நாடு அதை வெளிக் கொண​ரு​வ​தில் உறு​தி​யாக இருந்​தது.​ மக்​க​ளுக்கு பெரும் வேலை வாய்ப்பை ஏற்​ப​டுத்​திக்கொடுத்தோம்.​ ஒட்​டு​மொத்த மாநி​லத்​தின் வறட்​சியை,​​ வறுமை​யைப் போக்க இரு​ப​தா​யி​ரம் பேருக்கு வேலை கொடுத்து​விட்​டால் மட்​டும் போதாது.​ விரை​விலேயே புதி​தாக வேலை​யில்​லா​த​வர்​கள் உற்​பத்​தி​யா​கி​விட்​டார்​கள்.​ சொற்​பம் பேர் வேலை​தேடி வெளி​மா​நி​லத்துக்​குச் சென்​றார்​கள்.​பெரும்​ப​குதி காட்​டுக்​குள் இருக்​கி​றார்​கள்,​​ ​ தலை​மறைவு பயிற்சி எடுத்துக்கொண்டு.​ நிலைமை கையை மீறிப்போய்​விட்​டது.​ அதன் பிறகு அங்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைப்​பதும்​கூட இய​லா​த​தா​கி​விட்​டது.​ முக்​கி​ய​மாக "பசுமை தகார் திட்​டம்'.​ அதை அவர்​கள் நம்ப மறுத்து​விட்​டார்​கள்.​''
அவர்​களை நம்​பிக்கை இழக்​கச் செய்​ததுயர் குற்​றம் என்ற சந்தே​கம் பேசிக்கொண்​டி​ருந்த பிர​த​மர் உற்​பட ஏழு​பே​ருக்​கும் ஒரே நேரத்​தில் உதித்​தது.​
"முதல் கட்​ட​மாக ஐம்​பது பட்​டா​லி​யன் கள​மி​றங்கவேண்​டி​யி​ருக்​கும்..​ ஆரம்​பமே அவர்​களை கதி​க​லக்​கச் செய்ய வேண்​டும்.​ மிரட்​டலே போதும் பாதி உயி​ரி​ழப்​பைத் தவிர்க்க செய்​யும்.​ அவர்​கள கட்டை விட்டு வெளியே ஓட ஆரம்​பித்​து​வி​டு​வார்​கள்.​''
மார்​ஷல் தனது போர்​தந்​தி​ரங்​களை விவ​ரிக்க ஆரம்​பித்​தார்.​ ஜன்​ன​லுக்குவெளியே அமை​திக்​கான சின்​ன​மான புறாக்​கள் இரண்டு குதூ​க​ல​மா​கக் கொஞ்​சிக் கொண்​டி​ருப்​பதை​யும் பார்த்​தர்.​ இனிய முரண்​பாட்டை ரசித்​தா​லும் அவ​ருடைய இஸ்​தி​ரி​போட்ட முறுக்​கிய மீசைக்​குக் கீழே புன்​னகை தவ​ழ​வில்லை.​
​விளக்கு வெளிச்​சத்​தில் கூட்​ட​மாக உறங்​கிக் கொண்​டி​ருந்​த​னர்.​பெரிய குடி​லில் தோரா​ய​மாக இரு​பது முதல் நாற்​பது வய​தி​னர்.சிறிய கட்டி​லில் தலை​வர் அமர்ந்​த​படி பேசிக் கொண்​டி​ருந்​தார்.​ அவ​ருக்கு அருகே மூவர் மட்​டும் மரத் துண்​டின் மீது கூர்மை​யான கவ​னத்து​டன் செவி​ம​டுத்துக் கொண்​டி​ருந்​த​னர்.​ நடு​நிசி. வனப்பூச்​சி​க​ளின் ரீங்​கா​ரங்​கள் கேட்​டுக் கொண்​டி​ருந்​தன.
"நம்மை ஒடுக்க ராணு​வம் வரப்​போ​வ​தாக தகவல் வந்​தி​ருக்​கி​றது​.
பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடிதான் காரணம். அரசு எந்திரத்தின் மக்கள் விரோதபோக்குக்கு இன்னுமொரு அடையாளம்'' என்றார் தலைவர்.
"நாம் இங்கிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர வேண்டியிருக்குமா?'' ~ஒருதோழர் கேட்டார்.
"விலைமதிப்பில்லா தியாகத்துக்குத் தயாராகவேண்டிய கட்டாயம். போராட வேண்டிய களத்தில்தான் நிற்கப் போகிறோம். ஆனால் காட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை. நாட்டுக்குள் இருப்போம். மக்களோடு மக்களாக. அதிகபட்சம் மூன்று பேருக்கு மேல் ஓர் இடத்தில் யாரும் இருக்கக் கூடாது. காட்டுக்குள் நம்மைத் தேடிவரும் ராணுவத்துக்கு ஒரு தடயமும் கிடைக்கக் கூடாது. பிரிந்து இருப்போம். உணர்வுகள் இணைத்துவைத்திருக்கும். ஆயுதங்களைப் பதுக்கி வைக்க இடம் தேர்வு செய்தாகிவிட்டது.''
மொத்தம் 40 குழுக்களாக தகாரின் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்களுக்கும் தகவல்கள் அனுப்ப வேண்டும். பல இடங்களில் குழந்தைகளும் சிறுவர்களும் இருந்தனர். பெண்கள் பெரும் அவதியிலும் உடல் பிணியிலும் குழந்தை பராமரிப்பையும் ஆயுதப் பயிற்சியையும் மேற் கொள்ள வேண்டியிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போதிய மருத்துவ வசதியும் போஷாக்கும் இல்லாமல் பதினாறு குழந்தைகள் இறந்துபோய்விட்டன. நகருக்குள் சென்று வருவது ஒவ்வொரு முறையும் சில உயிரிழப்புகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
மூவரில் தலைவருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தவன் புரட்சிக் கூட்டத்தின் முக்கிய போராளி. கடந்த சில தினங்களாக அவனுக்குத் தொடர்ச்சியான இருமல். சளியோடு ரத்தமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
"நாம் நம் கோஷத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால் ராணுவ முற்றுகையை அவர்கள் ஒத்தி வைப்பார்ர்கள் அல்லவா?''​ இருமலின் ஊடே அவன் சொன்னான்.
"நம் அச்சம் அவர்களை மேலும் ஆவேசமாக ஒடுக்குவதற்குத்தான் உதவும். இது நாம் உறுதியாக நம் நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம். செர்னோபிள், ஃபுகுஷிமா என்று எத்தனை ஆபத்துகள் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனைப் பற்றி ஒருபோதும் அக்கறை இருப்பதில்லை. லாபத்தை மட்டும் குறிவைக்கும் கேவலமான தரகர்களுக்கு நிகராக மாறிவிட்டார்கள். தமிழ்நாடு என்ற பிராந்தியத்தில் இரண்டாவது முறையாக சுனாமி வந்தபோது என்ன பயங்கரம்? அந்த மாநிலத்தின் இரண்டு பக்கமும் அணுக்கரு உலை. இரண்டும் அந்த நேரத்தில் நொறுங்கிவிடப் போகிறது உலகமே பதறியது... அப்படியாகியிருந்தால் அங்கு யாராவது மிஞ்சியிருப்பார்களா? அதன் பிறகும் புத்தி வரவில்லை... அந்த மாநிலத்திலேயே மூன்றாவது அணுக்கரு உலை துவங்கப் போகிறார்களாம். லாபம், அதைக் கொண்டு மேலும் லாபம்.. மனிதர்கள் அத்தனை பேரையும் கொன்று முடித்தப் பின்னும் அந்த வெறி அடங்காது. லாபம் முக்கியமா மனிதர்கள் நலன் முக்கியமா என்பதை தீர்மானிப்பதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்கிறது. அவர்கள் செய்கிற முட்டாள்தனத்தால் சாவதைவிட நாமே தேர்ந்தெடுக்கும் இந்த மரணம் மகிழ்ச்சியானது?''
விளக்கம் கேட்டவன் அமைதியாக இருந்தான்.
"நாம் எந்த ரயிலையும் எரிக்கவில்லை. பழியை நம்மீது போட்டு போராளிகளைத் தீர்த்துக் கட்டும் பணியை முடுக்கிவிடுவதற்காகத்தான்... மக்களிடம் நமக்கான விரோதத்தை வளர்ப்பதற்கு. பத்திரிகைகளும் அதை பூதாகரமாக்குகின்றன. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. அனுபவப் பாடங்கள் ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். இன்று நம் ராணுவம்.. ஆட்சிகள் மாறும், காட்சிகளும் மாறும். மக்கள் நலன்தான் முக்கியம். நாளை ஐ.நா. ராணுவம் வரும்... அப்போது நம்நாடும் சேர்ந்து புழுங்க வேண்டியதுதான்.. ஸ்திரத் தன்மையில்லாத நாடு. உலக அமைதிக்கே பங்கமாக இருக்கிறது என்பார்கள்... மக்களுக்கான உண்மையான ஊழியர்களாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உயிரிழப்பைக் குறைத்துக் கொள்ளத்தான் நாம் பிரிகிறோம்... உரிமைகளைக் குறைத்துக் கொள்வதற்காக அல்ல. உலக நாடுகளையெல்லாம் தம் காலடியில் போட்டுக் கொள்ள நினைப்பவர்களுக்கு அப்போது ஆளுவதற்கு மண் இருக்கும். மனிதர்கள் இருக்க மாட்டார்கள்'' தலைவரின் பேச்சு கிரீச் கிரீச் என்ற சுவர் கோழியின் சப்தத்துக்கு இடையே கேட்டுக் கொண்டே இருந்தது. லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.


ஃபீல்ட் மார்ஷல் உறுதியாக இருந்தார். மலை முகட்டில் இருந்தது அந்த ராணுவ தலைமையகம். பெரிய சுருட்டை வாயில் வைத்திருந்தார். ஜன்னல் கண்ணாடியை இறக்கி சாம்பலைத் தட்டும்போது பரவசமாகப் பார்த்தார் மார்ஷல் . மக்காக் குரங்கு ஒன்று மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தபோது பதிலுக்குச் சிரிப்பது போல இருந்தது. மிக அழகான குரங்கு. இத்தனை நாள் இந்தப் பிராந்தியத்தில் மக்காக் எதையும் பார்த்ததில்லை. மிக தூரத்தில் நுரையால் செய் மாலை போல அருவி தெரிந்தது. காட்டுத் தீ பூக்கள் கிழக்குப் பள்ளத்தாக்கு முழுதையும் செக்கச் சிவப்பாக்கியிருந்தன. இன்னும் இரண்டு மாதங்கள் சிவப்பாக இருக்கும் அந்தப் பகுதி, பின் பச்சைப் பசேலென மாறிவிடும். ஆண்டுக்கு ஒரு புத்தாடை.
ஜன்னலருகே இன்னஉம் ஐந்து நிமிடம் நின்றால் கவிஞனாகிவிடுவோமோ என்று அவருக்கு பயமாக இருந்தது.மீண்டும் அறைக்குள் நடந்து மறு எல்லைக்கு வந்தார்.
உள்ளூர் கலவரத்தை அடக்க உலக தாதா வந்துவிடாமல் அமர்க்களம் இல்லாமல் காரியமாற்ற வேண்டும். பிரச்னை கை மீறிப் போனால், போக வேண்டியதே இல்லை} அப்படிச் சொல்லுவதற்கு சந்தர்ப்பம் தந்தாலே போதும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். ஆற்றல் உற்பத்திக்கான ஒரே சாதனம் அணுக்கரு உலை என்று ஏற்றுக் கொண்டாகிவிட்டது. புரட்சியாளர்கள் இல்லை என்கிறார்கள். உலகில் பல நாடுகள் அணுக்கரு உலையை மூடிவிட்டன. துமரியாவிடம் குடுமியைக் கொடுத்தாகிவிட்டது. அப்படித்தான் ஆட்டுவான்.
பொறுப்பாக சமாளிக்க வேண்டியிருந்தது. முதல் கட்டமாக காட்டுக்குள்தான் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.
"பிரதமர் லைனில் இருக்கிறார்''
டெல் திரையில் செயற்கை குரல் அறிவிப்புடன் பிரதமர் அலுவலக எண் ஒளிர்ந்தது.
"சொல்லுங்கள் திரு. பிரதமர் ..''
"அங்கிருந்து கேட்கிறார்கள். ராணுவ உதவி வேண்டுமா என்று..''
"நாம் நடவடிக்கை எடுக்கப் போவது அவர்களுக்கு எப்படித் தெரியும்?''
"நம்முடைய நடவடிக்கை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.. யுரேனியம் கிடைப்பது தாமதமாவதால் உதவி வேண்டுமா என்கிறார்கள். ஆனால் உளவுத்துறையில் சில சந்தேகங்கள் தெரிவித்தார்கள். நாம் பேசும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உடனுக்குடன் கிடைத்துவிடுகிறதாம். ''
"எதை வைத்துச் சொல்கிறார்கள்?''
"நாம் அன்று பேசியது ஒரு அட்சரம் பாக்கியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது''
"நம் ஆறு பேரில் ஒன்று கருப்பாடு?''
"எனக்கு யார் மீதும் சந்தேகமில்லை. யாரை நம்புவதென்றும் தெரியவில்லை... இந்த மாதிரி நேரத்தில் பிரதமராக இருப்பது தண்டனை போலத்தான்.. அடுத்த முறையாவது எதிர்கட்சி வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை'' பிரதமரின் பேச்சில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.
மீண்டும் சாம்பலைத் தட்ட ஜன்னலுக்கு வந்த போது மக்காக் மரக்கிளையில் உட்கார்ந்திருந்தது. மரக்கிளை ஒன்று முதுகில் கிழித்திருக்க வேண்டும். காயம் இரண்டு அங்குலத்துக்குக் கிழிந்து... பக்கு கட்டிப் போய் இருந்தது. இதுவரை ஒருமுறையும் அது சொறிந்து கொள்ளவில்... சட்டென்று தன் மேல் பாக்கெட்டில் இருந்த "பென்மென்' ரிவால்வரை எடுத்து குரங்கை நோக்கிச் சுட்டார். குரங்கின் மேல்பாகம் பஞ்சுபோல பறக்க, சொத்தொன்று ஓர் எலக்ட்ரானிக் டிவைஸ் கீழே விழுந்தது.
துமரியாவுக்கு அடுத்த நாட்டை நோட்டம் பார்ப்பதில் அத்தனை ஆர்வம்... பிரதமருக்குப் போன் செய்து அந்த ஜன்னல் புறாக்களைச் சுட்டுவிடும்படி சொன்னார் மார்ஷல்.


LinkWithin

Blog Widget by LinkWithin