வியாழன், பிப்ரவரி 23, 2012

ரெட்டைவால் விமர்சனம்

ரெட்டைவால் என்ற வலைப்பூவில் ஆண்பால் பெண்பால் விமர்சனம்


விமர்சனத்தில் ஒரு பகுதி

கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.

1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு - வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.

2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ்மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள்.

வியாழன், பிப்ரவரி 16, 2012

எம்ஜிஆரின் ஆவி!

ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து அதிஷா எழுதியிருக்கும் விமர்சனத்தில் இருந்து சில பகுதிகள்....



முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.

கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!

எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!

ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!

அதிஷாவின் முழு விமர்சனம்

திங்கள், பிப்ரவரி 13, 2012

இது பாம்புக் கதை அல்ல

‘‘பாம்பு ரெண்டு நாளா சாப்பிடல சார்.. ஏதாவது தர்மம் பண்ணுங்க சார்’’ என்ற குரல் பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் இருந்து வந்தது.
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.

ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’

அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.

சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.

இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.

இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.

வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.

நன்றி:விகடன் பிப்.2012

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

Men are from Mars, Women are from Venus

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதாமுரளிதரன் உயிர்மைக்காக எழுதிய விமர்சனம்

இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.

எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.

முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.

கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.

அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.

ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.

ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.

இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.

இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.

என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.

புதன், பிப்ரவரி 01, 2012

அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?

அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.

நன்றி: சுட்டி விகடன் feb 1-15

LinkWithin

Blog Widget by LinkWithin