ஆட்டோராணியின் கதை!
சினிமாவுக்குக் கதை பண்ணுவது தனிக்கலை. அதாவது தமிழ்ச் சூழலில் (தெலுங்குச் சூழலிலும்) அப்படித்தான் நம்பப்பட்டு வருகிறது. நண்பர் புகழேந்திதங்கராஜின் மூலம் மீண்டும் இயக்குநர் வி.சி.குகநாதனுக்கு ஒரு திரைக்கதை செய்வதற்குக் குழுமினோம். எங்களுடன் எழுத்தாளர் பிரபஞ்சனும் இணைந்தார்.
வி.சி.குகநாதன் ஒரு கதையைச் சொன்னார். உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் கதாபாத்திரம். குடும்பமே அவளை நம்பித்தான் இருக்கிறது. அவளை எதிர்க்கும் வில்லன் கூட்டம். அந்தப் பெண்ணின் சகோதரனே வில்லன்களின் வலையில் விழுந்து தன் அக்காவுக்கு எதிராக நிற்கிறான். ஆனால் அந்தப் பெண்ணின் காதலனும் அந்தக் காதலனை ‘ஒருதலை'யாகக் காதலிக்கும் ஆட்டோ ராணி என்ற பெண்ணும் நம் கதாநாயகிக்கு உதவுகிறார்கள். வில்லன்களை வீழ்த்திவிட்டு ஒரு தலைக்காதலோடும் தியாக உணர்வோடும் அந்த ஆட்டோ ராணி பெருந்தன்மையாக விலகிச் செல்கிறாள்.
என் ஞாபகம் சரியாக இருந்தால், இந்த மாதிரி ஒரு கதை. அவர் சொல்லி முடித்ததும் நானும் பிரபஞ்சனும் தற்செயலாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கதைதான் ரெடியாகிவிட்டதே அப்புறம் எதற்குக் கதை செய்ய வந்திருக்கிறோம் என்ற கேள்வி.
இதைப் புரிந்து கொண்டவர் போல எங்களிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதை விளக்கினார்.
கதாநாயகன், நாயகி, ஆட்டோ ராணி போன்றவர்களின் அறிமுகக் காட்சிகளுக்கான சம்பவங்களைக் கேட்டார்.
சொன்னோம்.
முதலில் நாயகி.. "நாயகி கோயிலில் இருந்து வெளியே வருகிறாள். பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுகிறாள். ஒரு பிச்சைக்காரன் நன்றாக இருக்கும் காலை சட்டென்று ஊனம் போல மடக்கி வைத்துக் கொண்டு நாடகமாடுகிறான். அநீதியைத் தட்டிக் கேட்கும் நம் நாயகி அவன் கன்னத்தில் ஓங்கி அறைவிடுகிறாள்.'
இப்படித்தான் கதையை உருவாக்கினோம். வி.சி.குகநாதன் 150 திரைக்கதைகளுக்கு மேல் உருவாக்கியவர். தெலுங்குப் பட உலகில் அவருக்கு அப்படியொரு மவுசு உண்டு.
'நாயகியின் தம்பி பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறான் என்று சொன்னால் போதாது. அதற்கு ஏதாவது காட்சி வேண்டும்' என்றார்.
"பத்தாம் வகுப்பு பெயில் ஆகிவிட்டு மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்துவரும் தம்பி. சம்பாதிக்கும் காசை வீட்டுக்குத் தருவதில்லை. அவன் செலவுக்கே போதவில்லை. வீட்டிலிருந்தும் திருடுகிறான். அக்கா இரண்டு மூன்று முறை கண்டிக்கிறாள்.''
நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது குகநாதனின் முகம் பிரகாசிக்கவில்லை. "கதை சொல்லாதீர்கள்.. காட்சி சொல்லுங்கள்'' என்றார்.
சட்டென்று ஒரு காட்சியைச் சொன்னேன். இரவு எல்லோரும் தூங்கிய பிறகு தம்பி வீட்டுக்கு வருகிறான். அக்கா எழுந்து வந்து சாப்பாடு போட வருகிறாள். தம்பி மீது வினோத வாசனை. முகம் சுளித்துக் கொண்டு தட்டை எடுத்துவைத்து சோறு போடுகிறாள். திடீரென்று பவர் கட் ஆகிறது. அக்கா விளக்கேற்றுவதற்குத் தீப்பெட்டி தேடுகிறாள். தம்பி, தம் பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்து சர்ரென்று கிழிக்கிறான்.
"வெரிகுட்'' என்றார்.
கதையைப் படித்துப் பார்த்துவிட்டு முடித்துவிட்டு "ஆட்டோராணி கேரக்டர் எதற்கு என்பதுதான் புரியவில்லை'' என்றோம்.
"படத்துக்கே ஆட்டோராணி என்று வைக்கலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் அந்தக் கேரக்டரே எதற்கு என்கிறீர்களே..? படத்தில் அவளுக்கு மூன்று ஃபைட் இருக்கிறது. இரண்டு கவர்ச்சி நடனம் இருக்கிறது. கடைசியில் நாயகனையும் நாயகியையும் சேர்த்துவைத்துவிட்டுப் பிரிந்து செல்கிற காட்சி டச்சிங்காக இருக்கும்'' என்றார்.
புரியத்தான் இல்லை.
லைலா- விக்ரமன் டிஸ்யூம்!
சினிமா நடிகை என்றால் அதற்கு ஏற்றார் போல பெயர் இருக்க வேண்டும் என்பது சினிமா உலகச் சட்டம். மும்பையில் இருந்து வந்து சேரும் ஒரு பெண்ணுக்கு முதல் கட்டமாக பெயர் வைக்கும் சடங்கு நடக்கும். ‘கள்ளழகர்' படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமான லைலாவுக்கு இயற்பெயரே அதுதான் என்றார்கள்.. படித்த குடும்பம். அவருடைய அண்ணன் ஒரு பல் மருத்துவர். லைலா பாலே நடனம் கற்றவர். செல்லமாகப் பேசும் இயல்பு அவருக்கு. குழந்தைத்தனம் முகத்தில் அப்படியே இருக்கும். பெரிய வதந்தி எதிலும் சிக்காமல் தப்பிக்க அது அவருக்குக் கை கொடுத்தது.
இதே போல இயக்குநர் விக்ரமன் எந்த விவகாரத்திலும் சிக்காமல் வந்தவர். செலவில்லாமல் படம் எடுப்பவர். அவருடைய படங்களில் வரும் கேரக்டர் போலவே எதையும் பொறுத்துக் கொண்டு செயலாற்றுபவர். விக்ரமன் இயக்கிய ‘உன்னை நினைத்து' படத்தில் நடித்தார் லைலா. அந்தப் படப்பிடிப்பின் போது லைலாவுக்கும் விக்ரமனுக்கும் பிரச்சினை என்றார்கள். ஒரு பாடல் காட்சி படமாகும் வரை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வரவில்லையாம் விக்ரமன்.
இவர்களுக்குள் எப்படி பிரச்சினை ஏற்பட முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.
அப்படியென்ன கோபம் என்று லைலாவைச் சந்தித்துக் கேட்டேன்.
"அந்தப் பாடல் காட்சிக்கு அவர் சொன்ன காஸ்ட்யூமை நான் போட்டுக் கொள்ளவில்லை என்று அவருக்குக் கோபம்'' என்றார்.
"ஏன் அவர் கொடுத்த காஸ்ட்யூம் ரொம்ப செக்ஸியான தோற்றம் தருவதாக இருந்ததா?''
"இல்லை.. நான் போட்டுக் கொண்டு நடித்த காஸ்ட்யூம் மிகவும் செக்ஸியாக இருந்ததாக அவருக்கு வருத்தம்.''
விவகாரம் புதிதாக இருந்தது. வழக்கமாக நடிகைகள் கவர்ச்சியாக நடிக்க மறுத்து படப்பிடிப்புத் தளங்களில் பிரச்சினை ஏற்படும். லைலா கவர்ச்சியான ஆடையைப் பயன்படுத்தினார் என்பதற்காக விக்ரமன் கோபித்துக் கொண்டு பாடல்காட்சி முடிகிற வரை படப்பிடிப்புத் தளத்துக்கே வராமல் தவிர்த்தது தமிழ்சினிமாவில் முதலும் கடைசியுமான சச்சரவாகத்தான் இருக்கும்.
லைலாவை நான் எடுத்த இந்தப் பேட்டிக்கு, சம்பந்தப்பட்ட அந்த காஸ்ட்யூமில் லைலா தோன்றிய புகைப்படத்தையே தேடிப்பிடித்துப் பிரசுரித்தேன். புகைப்படத்தைப் பார்த்தபோது பெரிய ஏமாற்றமாக இருந்தது. முதுகுப்பக்கம் சற்றே இறக்கித் தைக்கப்பட்ட ஒரு சுடிதார் அது. அதில் என்ன கவர்ச்சி இருந்ததாக விக்ரமன் நினைத்தாரோ? அதைத்தான் அணிவேன் என்று லைலா ஏன் அடம் பிடித்தாரோ?
என்ன செய்வது இரண்டு நல்ல மனசுக்காரர்கள் இணைந்தால் இப்படியான பிரச்சினைதான் வருமோ?
சேரனின் போர் கொடி
சேரன் இயக்குவதாக இருந்த ‘பாரசீக ரோஜா' படத்தின் கதை என்ன என்று பத்திரிகையாளர் பிஸ்மி ஒருமுறை வண்ணத்திரையில் எழுதியதற்காக சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் குழுவினரோடு அலுவலகத்தில் வந்து ஆக்ரோஷப்பட்டார் சேரன்.
உணர்ச்சிவசப்படுதலின் உச்சக்கட்டம் என்றால் நான் அறிந்த வரையில் அது இயக்குநர் சேரன். ‘பொற்காலம்' படப்பிடிப்பு நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது "என்ன ஸார் மீனாவுக்கும் உங்களுக்கும் காதலாமே?" என்று கேட்டதற்கு சட்டென வெடித்து, அழுது பிரஸ் மீட் கேன்சல்.
இன்னொரு முறை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதம் குறித்து தலா ஒரு சினிமா பிரபலத்திடம் கருத்து கேட்கச் சொல்லியிருந்தார்கள். அஜீத், சுவலட்சுமி, சேரன் என் ஐந்து பேரை அணுகி ஆளுக்கொரு பூதம் பற்றி கேட்டேன். குமுதத்தில் ஆளுக்கொரு பக்கம் சொல்வதாகத் திட்டம். சேரன் நிலம் பற்றிச் சொல்லியிருந்தார். பத்திரிகை வெளியானபோது போன் செய்து ஐந்து நிமிடம் உணர்ச்சி பொங்கப் பேசினார்.
"நிலம் என்பது இப்படி ஒரு பக்கத்தில் முடிகிற விஷயமா?'' என்றார். இது கான்ஸப்ட். தனியாக உங்களுடைய பேட்டி என்றால் மூன்று நான்கு பக்கம் வரும், இது அப்படியானது அல்ல என்று போராடினேன்.
அடுத்து ஒருமுறை நானும் தினமணி இதழாசிரியர் இளையபெருமாளும் சந்திக்கச் சென்றிருந்தோம். என்னைப் பற்றி தினமணியில் ஒரு தலையங்கமாவது எழுதினீர்களா? என்றார். அதிர்ந்து போய் தனி நபர் பற்றியெல்லாம் எழுத மாட்டார்கள் என்றார் இளையபெருமாள். அப்படியென்றால் ‘தேசிய கீதம்' படத்தைப் பற்றியாவது தலையங்கம் எழுதலாமே? என்றார். சேரனின் ஆதங்கமும் அதற்கு இதழாசிரியரின் பதிலும் ஈர்ப்பான விஷயமாக இருந்தது. சினிமாவைப் பற்றியும் தலையங்கம் எழுதுகிற பழக்கமில்லை என்றார் பெருமாள். உரத்தகுரலில் இருவரும் ஆவேசமாக விவாதித்தனர். ஏன் நல்ல விஷயங்களை எழுதினால் என்ன, சினிமா என்றால் எழுதக்கூடாதா? என்றெல்லாம் அவர் கேட்க இவர் பதிலளிக்க... திரும்பி வந்தோம்.
ஏறத்தாழ சேரன் சம்பந்தமாக எப்போதும் எது எழுதினாலும் ஒரு விவாதம் இருக்கும். பத்திரிகை, சமூகம், அரசியல் என்று சகலத்தின் மீதும் அவருக்கு எப்போதும் எரிச்சல் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அவர் சார்ந்திருக்கிற சினிமாமீதும் அவருக்கு எரிச்சல் இருந்தது. அவர் சொல்வதுதான் நியாயமா? நமக்குத்தான் அவரைப் பற்றி எப்படி எழுதவேண்டும் என்பது தெரியவில்லையா என்றுகூட சில நேரத்தில் எண்ணியதுண்டு.
சனி, மார்ச் 14, 2009
புதன், மார்ச் 11, 2009
ஞாயிறு, மார்ச் 08, 2009
திரைக்குப் பின்னே- 23

ஒரு விமர்சனம்!
எனக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் ஏற்பட்ட முதல் பேச்சு வார்த்தை ஒரு சண்டையில் முடிந்தது. அப்போது அவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்தார். ‘உயிரே' வெளியான போது நான் எழுதிய விமர்சனம் அவருக்குக் கடும் கோபத்தை உண்டுபண்ணியது. காலையில் வீட்டுக்குப் போன் செய்து "பேனா கையில இருந்தா என்ன வேணா எழுதிடுவீங்களா?'' என்றார்.
படத்தில் இரண்டு விஷயங்களைக் கண்டித்திருந்தேன். ஷாரூக்கான் மீடியா மனிதராக வருகிறார். திரிபுராவில் ரேடியோவில் செய்தியாளராக வேலைக்கு வரும் அவர், அங்கு ஏன் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடக்கிறது, எதற்காக தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் மோதிக் கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாகக் கேட்பார். திரிபுராவில் துப்பாக்கிச் சூடு என்பது ஒரு தினசரிச் செய்தி. அது எதற்காக என்பதும் சாதாரண அளவிலாவது ஒரு செய்தியாளருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் அந்த மாநிலத்துக்கே செய்தியாளராகச் செல்கிறவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். நாயகனோ ‘சய்யா.. சய்யா' என்று பாட்டு பாடிக் கொண்டு தன் பொறுப்பையும் சூழலையும் புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய தவறு இது என்று எழுதியிருந்தேன்.
இரண்டாவது, படத்தில் இடம் பெறும் ஒரு பாடல். காதலின் சிறப்பைச் சொல்லும் பாடல் வரியில் காதலில் மரணம்தான் உயர்ந்த நிலை என்று சொல்லப்பட்டிருக்கும். காதல் தோல்வி மரணங்கள் நிறைந்த ஒரு நாட்டில், இது ஆபத்துக்கு வழி வகுக்கும் என்று எழுதியிருந்தேன். அவருடைய கேள்விக்கு, பதிலுக்கு நான் ஏதோ சொல்ல, அவர் பதிலடி கொடுக்க.. நான்.. பதி... அவர் படாரென்ற சத்தத்தோடு போனை வைத்துவிட்டார்.
அதன் பிறகு ஒரு நாள் குமுதம் வார இதழின் இயக்குநர் வரதராஜன் என்னைச் சந்திக்க விரும்புவதாக போன். பத்திரிகையாளர் மணா பேசினார். வரதராஜன், மணா இருவரும் அண்ணாசாலை பாலிமர் ஹோட்டலில் சந்தித்துப் பேசினர். வரதராஜன் குமுதம் இதழில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றார். நான் யோசித்துச் சொல்வதாகச் சொன்னேன். அடுத்து அவர், "நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு வரவில்லை என்றாலும் உங்களை நேரில் பார்த்ததே எனக்குப் பெருமைதான்'' என்றார். என்னை நேரில் பார்ப்பதில் அவருக்கு அப்படி என்ன பெருமை என்று புரியவில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம் என்று அவருடைய பர்ஸனல் நம்பரைக் கொடுத்தார்.
நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழகத்தின் முன்னணி வார இதழின் உரிமையாளர் இப்படியொரு வார்த்தை சொன்னால் ஒரு பத்திரிகையாளனுக்கு வேறென்ன மரியாதை வேண்டும்? நான் உடனே வந்து சேருகிறேன் என்று ஒப்புதல் சொல்லிவிட்டேன்.
ஆனால் குமுதத்தில் ஆறேழு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வெளியே வந்த பின்னர் மீண்டும் சுசி கணேசனிடம் இருந்து போன். "என்ன தலைவா... உங்களை நான்தான் குமுதத்துக்குச் சிபாரிசு செய்தேன். இப்படி அவசரப்பட்டு வந்துவிட்டீர்களே?'' என்றார் மிகுந்த நட்போடு.
இவர் சண்டைக்காரராயிற்றே... இவர் எப்படி? அவரிடமே கேட்டேன்.
"தலைவா, அப்ப நான் மணி ஸார் அஸிஸ்டென்ட். அவருக்காக வாதாடினேன். அதே சமயத்தில் நானும் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் உங்களைப் போன்ற பத்திரிகையாளனை அடையாளம் காட்ட வேண்டியது என் கடமை'' என்றார். இந்தப் படிப்பினையை என் பாடத்தில் சேர்த்துக் கொண்டேன்.
ஷகிலா என்ற பள்ளி மாணவி!
மலையாளப்படங்களில் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த செக்ஸ் குயின் ஷகிலாவைத் தெரிந்திருக்கும். கோடம்பாக்கத்தில் யுனைட்டெட் இந்தியா காலனியில் சிறிய அடுக்குமாடி வீட்டில் பத்தாம் வகுப்பு மாணவியாக இருந்தபோது அவரைப் பற்றி முதன் முதலில் அறிந்தேன். பாப்பாங்குளம் பாரதி என்ற சினிமா நிருபர் அந்தப் பெண்ணின்ஒரு புகைப்படத்தைக் கொடுத்து ஏதோ படத்தில் புதுமுகமாக நடிக்கிறார் என்று ஒரு துணுக்குச் செய்தி தந்தார். முஸ்லிம் குடும்பப் பின்னணி. அவருடைய தந்தை சினிமா துறையில் சம்பந்தப்பட்டவர்தான். ஒல்லியான சின்னப் பெண். அவர் முதலில் நடிப்பதாகச் சொன்ன படம் வெளிவந்ததாகத் தெரியவில்லை. அடுத்து வேறு ஏதோ படத்தில் நடிப்பதாகச் செய்தி. படத்தில் துண்டு வேடம். கவுண்டமணிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் குட்டி, குட்டிச் செய்திகள் வந்தன. குட்டிப் பெண்ணாக இருந்த ஷகிலா சற்றே அகலமாகவும் உருண்டையாகவும் மாறிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அவருடைய தங்கையும் நடிக்கக் களம் இறங்கினார்.

இரண்டு பெண்களிடத்தும் ஏதோ வசீகரம் இருந்தது. ஆனால் ஏனோ எதிர்பார்த்த இடத்தைப் பிடிக்கவில்லை.
கொஞ்ச நாள்கழித்து மிகக் குறைந்த ஆடையில் ஷகிலாவின் புகைப்படங்கள் வெளியாகின. மலையாளப் பட உலகில் பிஸி என்றார்கள்.
கவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ச்சி பெரிதாக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவியாக அறிமுகமான பெண், கண் முன்னாலேயே இப்படி வேறொரு அவதாரம் எடுத்தது ஜீரணிக்க முடியாததாகத்தான் இருந்தது. போஸ்டர்களில் பாவாடையைக் கக்கம் வரை தூக்கிக் கட்டிக் கொண்டு எப்போதும் குளித்துக் கொண்டிருந்தார். வண்ணத்திரையின் நடுப்பக்கத்தின் பிரதான நாயகியானார். அவருடைய பள்ளித் தோற்றம் மெல்ல மனதில் இருந்து மறைந்து அவரை சதைகளால் மட்டும் ஆன பெண்ணாகப் பார்க்கப் பழகிய நாளில் அவருடைய சகோதரி என்ன ஆனார் என்று விசாரித்தேன்.
அவர் நடிக்க வந்த சில நாளிலேயே இறந்து போய்விட்டார் என்றார்கள். எப்படி என்று பதறியபோது அது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
வைரமுத்து எழுதிய கடிதம்!

சிறுவயதில் புரசைவாக்கம் பகுதியில் குடியிருந்தவன் என்கிற ஒரு காரணமே கவிஞர் வைரமுத்துவின் மீது எனக்கு அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரும் தம் கல்லூரி நாள்களில் புரசை பகுதியில் தங்கியிருந்தார் என்கிற காரணம்தான். கந்தப்ப கிராமிணி தெருவைப் பற்றியும் தாணா தெருவைப் பற்றியும் அவருடைய வாழ்க்கைத் தொடரில் ‘தன் ராத்திரி நேரத்து ராஜ பாட்டை' என்று வர்ணித்தபோது, நான் எழுத வேண்டியதை அவர் எழுதிவிட்டதுபோல சிலிர்த்துப் போனேன்.
அப்போது எஸ்.அறிவுமணி, ஞானராஜ் போன்ற புரசைவாக்கத்துப் பேனாகாரர்களிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தபோதும் நான் வைரமுத்துவைச் சென்று சந்திக்கத் தயங்கினேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர் என்பதைவிட நான் சிறிய பையனாக இருந்தேன் என்ற தயக்கம் இருந்தது.
எண்பதுகளின் இறுதியில் பெரியார்தாசனோடு அவரைச் சந்தித்தபோதும் பேச நினைத்தது எதையும் பேசாமலேயே வந்தேன். பத்திரிகை நிருபரான பின்னும் ஏனோ தயக்கம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருடைய வளர்ச்சி மலைக்க வைக்கும் பிரமாண்டமாக இருந்தது. பத்திரிகை நிருபராக பதினைந்து ஆண்டுக்காலம் ஆனபின்னும் நான் சந்திக்காத திரையுலகப் பிரபலம் வைரமுத்து மட்டும்தான்.
‘திரைப்பாடல் இலக்கியம் ஆகுமா?' ஒரு வாசகரின் கேள்விக்குப் பதில் அளிக்கும்விதமாக வைரமுத்துவின் திரைப் பாடல் ஒன்றை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் இளைஞன் தன் முறைப் பெண்ணுக்கு எழுதும் கடிதம்போல அமைந்த பாடல்வரி அது.
"ஐத்தையும் மாமனும் சுகம்தானா?
ஆத்துல மீனும் சுகம்தானா?
அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம்தானா?''
-என்ற வரியைக் குறிப்பிட்டு இதெல்லாம் இலக்கியச் சுவையுள்ள வரிகள்தான் என்று எழுதினேன். மறுநாள் வைரமுத்து எனக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு பூரிப்பு.

அவரைச் சந்திக்கும் தைரியம் வந்து, நான் எழுதிய சில புத்தகங்களை அவரிடம் கொடுத்தேன். பார்த்துவிட்டு, "நிறைய எழுதுங்கள். நிறைய படியுங்கள். விதையிலிருந்து ஆரம்பத்தில் இலைகள்தான் வரும். பிறகுதான் பூக்களும் பழங்களும்வர ஆரம்பிக்கும். நம் புத்தகங்கள் பேசப்படவில்லையே என்று வருந்த வேண்டாம். எழுதிக் கொண்டே இருங்கள்'' என்றார். மிகவும் நெருக்கமாக அரைமணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசிக் கொண்டிருந்தார்.
பதினைந்து ஆண்டு தயக்கம் தீர்ந்தது.
வியாழன், மார்ச் 05, 2009
ஒரு அழைப்பு
அன்புடன் அழைக்கிறேன்
எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி
பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா
இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6
நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை
வரவேற்புரை திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்
அறிமுகவுரை திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புரை பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்
மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு
வாழ்த்துரைகள் திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்
ஏற்புரை திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை
நன்றியுரை திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்
நன்றி, அனைவரும் வருக!
போட்டி முடிவுகள்
சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:
முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா
ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது
எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி
பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா
இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6
நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை
வரவேற்புரை திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்
அறிமுகவுரை திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புரை பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்
மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு
வாழ்த்துரைகள் திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்
ஏற்புரை திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை
நன்றியுரை திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்
நன்றி, அனைவரும் வருக!
போட்டி முடிவுகள்
சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:
முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா
ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது
செவ்வாய், மார்ச் 03, 2009
திரைக்குப் பின்னே- 22
சொன்னது நீ தானா?
"கரகாட்டக்காரன்', "தாலாட்டு கேட்குதம்மா' போன்ற படங்களுக்குப் பிறகு கனகாவின் புகழ் உச்சத்தில் இருந்தது. "நெஞ்சில் ஓர்
ஆலயம்', "வானம்பாடி' படங்களைப் பார்த்து தேவிகாவின் மீதிருந்த மயக்கம் சற்றே கனகாவின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது.
ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கிற சந்தர்ப்பம். மிடுக்கான பழைய வீடு.
கதவைத் தட்டியதும் கனகாதான் கதவைத் திறந்தார். ஜீன்ஸ் பேண்டும் டி சர்ட்டும் போட்டிருந்தார். புடவையில் மட்டுமே பார்த்திருந்த
அவரை இப்படி எதிர்பார்க்காததுதான் அதிர்ச்சிக்குக் காரணம். போதாததற்கு மூக்குக் கண்ணாடி வேறு அணிந்திருந்தார். அவர் இப்படி
இருந்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ஒரு நடிகை ரசிகனின் எதிர்பார்ப்பைப் புறந்தள்ளிவிட்ட ஏமாற்றம் அது.
உள்ளே வரவேற்பறையில் அமர வைத்தார். தேவிகா வந்தார். கனத்த சரீரம். ""நீ இதுக்கு முன்னாடி வந்திருக்கே இல்லையாப்பா?''
என்றார். பத்திரிகையாளர்களிடம் வழக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணி அது. கண்களில் துறுதுறுப்பும் நாணமும்
தென்படாத அவருடைய உருவத்தையும் மென்மையற்ற குரலையும் ஒரு வயதான தாய்க்கான அடையாளம் என உடனடியாக ஏற்றுக்
கொள்ள மனம் தயங்கியது.
எதிரில் வந்து அமர்ந்த தேவிகா, நான் கேட்க வந்த கேள்விகளை அலட்சியம் செய்துவிட்டு அவர் ஏதோ பேச ஆரமம்பித்தார். "அந்தப்
படுபாவி. குடிகாரன். இப்ப இது என் பொண்ணு என்கிட்டதான் இருக்கணும்னு சொல்றானே.. நியாயமா சொல்லு? பெத்து வளர்த்து
ஆளாக்கி இவ்வளவு தூரம் வந்த பிறகு எங்க இருந்து வந்தான் அவன். (கனகாவைக் காட்டி) இவ பொறந்தப்ப விட்டுட்டுப் போன
வம்பா. இப்ப நடிகையாகி சம்பாதிக்கிறான்னு தெரிஞ்சதும் பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சாக்கும்.... ஏம்மா அந்த ஸ்டூலை எடுத்து
முன்னாடிப் போடு.. காலை இப்படி கீழே தொங்கவிட்டு வெச்சிருந்தா வீங்கிப் போவுதுப்பா. இப்படி மேல வெச்சுக்கிறேன்... ம்.. என்ன
சொன்னேன்? குடிகாரன்... குடிகாரன். எதுக்குச் சொந்தம் கொண்டாட்றான் இப்ப வந்து?''
அவர் திட்டிக் கொண்டிருப்பது கனகாவின் அப்பாவை என்பது கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. எந்தவித முன்னறிவிப்பும்
இல்லாமல் திட்ட ஆரம்பித்ததில் எனக்கு நேராகவே காலை நீட்டி உட்கார்ந்திருந்ததில் சற்று நிலைகுலைந்து போனேன். என் கன
வெல்லாம் சரிந்து தரைமட்டமாக விழுந்தது. மாலை ஆறரைக்கு அவர் வீட்டுக்குப் போனவன் இரவு எட்டு மணிக்கு வெளியே
வந்தேன். எனக்குப் பழக்கமில்லாத பகுதி அது.இருண்ட தெருக்கள் வழியாக ஏதோ வாழ்க்கையின் தாத்பர்யம் புரிந்து போனவன் மா
திரி நடந்தேன்.அங்கே இங்கே சுற்றி தேனாம்பேட்டை சிக்னல் வந்ததும்தான் எனக்கு வழி விளங்கியது.
அடுத்த ஆண்டில் தேவிகாவும் இறந்துபோக, கனகாவைப் பேட்டி எடுக்க நினைத்தபோது ஒரு அட்வகேட் எண்ணைக் கொடுத்து
அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்கள். அந்த எண்ணில் பேசினேன். நீங்கள் யார், எதற்காகப் பேச வேண்டும்? என்ன பேச
வேண்டும்? என்று நிறைய கேள்வி கேட்டார்கள். அதன் பிறகு கனகாவை சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. பொது நிகழ்ச்சிகளி
லும் பார்க்கமுடியவில்லை.
அந்த வீட்டையும் பார்க்கவில்லை.
மணிவண்ணன் அலுவலகத்தில்
சத்யராஜ் சொன்ன விஷயம் இது. "கோயமுத்தூர் கல்லூரியில் பி.எஸ்ஸி. படிக்க விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று
கொண்டிருந்தபோது ஒரு மாணவர் எந்த கோர்ஸில் சேருவதென்றே முடிவெடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். "அட்வான்ஸ்
இங்கிலீஷ் என்கிறார்களே அது என்ன கோர்ஸ்' என்றார் அந்த மாணவர் என்னிடம். ஆளைப் பார்த்தால் என்ன சொன்னாலும் நம்புவார்
மாதிரி இருந்தது. "இப்ப ஒரு வீடு வாங்கணும்னா அட்வான்ஸô கொஞ்சம் பணம் தர்றதில்லையா.. அந்த மாதிரி இங்கிலீஷ்
கத்துக்கறதுக்கு முன்னாடி அட்வான்ஸô கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடுப்பாங்க' என்று ஒரு போடு போட்டேன். என்னை ஏற
இறங்க பார்த்துட்டு மனசார நம்பி அதற்கு விண்ணப்பித்தார். ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா என்று ஆங்கில இலக்கியம் ஆரம்பித்ததும்
இரண்டாவது மாசமே படிப்பை மூட்டைக் கட்டிவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
இயக்குநர் ஆனார். அவர்தான் டைரக்டர் மணிவண்ணன். அவர் டைரக்டர் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்றால் அவர் கோபித்துக்
கொள்ள மாட்டார்.''
ஒரு முறை அவரைச் சந்திக்க அவருடைய தி.நகர். அலுவகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு தமிழகத்தில் வெளியாகும்
பெரும்பான்மையான நாளிதழ்கள் இருந்ததைப் பார்த்தேன். டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. "அப்ப திரிபாதி( திரிபாதியாகவோ
அது போன்றதொரு வட இந்தியத் தலைவராகவோ இருக்கலாம்.) சொன்னது மட்டும் சரிங்கிறீங்களா?'' என அப்ரப்ட்டாக ஆரம்பித்தார்
. எனக்கு சுதாரிக்கச் சில வினாடிகள் ஆயின. டி.வி.யில் அப்போது அவர் சம்பந்தமாக ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. திரிபாதியைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்; எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்; அவர் என்ன சொல்லியிருந்தார்;
இப்போது டி.வி.யில் அது சம்பந்தமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... சுத்தம்... ஒன்றுமே விளங்கவில்லை. "ஒரு நியாயம்
இருக்கா பாருங்க.. பேசறதெல்லாம் பேசிட்டு இப்படி பல்டி அடிச்சா ஜனங்க என்ன இளிச்ச வாயனுங்களா?'' என்று ஆவேசமாகக் கூ
றினார். பேந்த, பேந்த விழித்தேன். அவரோ, அது பற்றி என்னுடைய அபிப்ராயத்தை எதிர்பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். குப்பென்று
அவர் பற்றிய மதிப்பு உயர்ந்தது. சத்யராஜ் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு இவரை எடைபோடக்கூடாது என்று தெரிந்தது.
மிகப்பாதுகாப்பாகப் பேசினேன். அவர் சொல்வதற்கெல்லாம் "ஆமாம் சார். யாருக்கு சார் அக்கறை..? அரசியல்வாதிகிட்ட என்னத்தை
எதிர்பார்க்க முடியும்?' என்று பேசிவிட்டு தப்பித்து வந்தேன்.
இந்திய அரசியல் பற்றி அவருக்கு நல்ல ஞானம் உண்டு. ஓயாமல் படிக்கிறவராக இருக்கிறார். பதிப்பகங்களை நாடி வந்து புத்தகம்
வாங்குகிற பண்பு உள்ளவர் அவர். சினிமா இந்த மாதிரி ஆட்களை கோமாளிகள் போல சித்திரிப்பதும் அதே சமயம் ஹீரோவானவர்
எல்லா சமூக சிக்கலுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுபவராகவும் இருப்பது விபரீதமான முரண்பாடுதான்.
புதுமைப்பித்தன்
பார்த்திபனிடம் நேர்த்தியான ரசனையைப் பார்த்து வியப்பேன். வாழ்த்து சொல்பவர்கள் பொக்கே கொடுத்துப் பார்த்திருக்கிறேன். இவர்
பழங்களால் ஆன பாக்கெட்டை கொடுப்பார். நடிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இவர் தரும் பரிசுகள் அவருடைய தனி
கைவண்ணத்தோடு இருக்கும். யாருக்கும் அவசர அடியாக கடையில் போய் ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருகிற ஆள் இல்லை
அவர். மீனாவுக்கு அவர் தந்த பரிசு ஒன்றை மீனாவின் வீட்டில் பார்த்தேன். மீனாவின் கண்ணை குளோசப்பில் படமாக்கி "கண்ணே
மீனா...' என்று ஆரம்பித்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. கீழே அடுத்த வரி "மீனே கண்ணா?'... இப்படியாக இருக்கும் அவர் வழங்கும்
பரிசுகள். மேடையில் ஒரு நிமிடம் பேசுவதென்றாலும் ஏதாவது புதுமையிருக்கும்.
ஒருமுறை அவருடைய மனைவி சீதாவைப் பேட்டி காணச் சென்றேன். காலையிலேயே வரச் சொல்லியிருந்தார். சீதா தஞ்சாவூர்
ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார். அதைப் பற்றித்தான் பேட்டி காண வந்திருந்தேன்.
எங்கோ படப்பிடிப்பில் இருந்த பார்த்திபனும் ஓடிவந்து பேட்டியைச் சுவாரஸ்யப்படுத்தினார். (திருமதி இயக்குநர் என்ற தலைப்பில்
சீதாவையும் இயக்குநர் வசந்தின் மனைவி ரேணுகாவையும் பேட்டி எடுத்திருந்தேன். ரேணுகா இன்டீரியர் டெகரேஷன் துறையில் தாம்
செய்திருந்த புதுமைகளைப் பற்றிச் சொன்னார்.) அவர் வீட்டில் "கருப்பி' என்றொரு நாய் இருந்தது. பேட்டரியில் ஓடும் காரை
தமிழ்நாட்டில் முதலில் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும்.
பார்த்திபனின் அலுவலகத்தில் "உங்கள் பாதுகைகளைக் கழற்றித் தாருங்கள்} பரதன்' என்று எழுதியிருக்கும் இடத்தில் செருப்பை விட
வேண்டும். காலிங் பெல்லுக்கு பதில் ஒரு பெரிய காண்டா மணியைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். உள்ளே நுழைந்ததும் ஒரு
எலக்ட்ரானிக் சென்ஸர் மூலம் நம் வரவை அறிந்து குருவி பொம்மை ஒன்று கத்தும். வாழ்க்கையை அணுஅணுவாக ரசிப்பது
என்பார்களே அது அவருக்கு மட்டுமே சாத்தியம் என்று பொறாமையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் அவரும் சீதாவும் மன வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். அதில் புதுமை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
"கரகாட்டக்காரன்', "தாலாட்டு கேட்குதம்மா' போன்ற படங்களுக்குப் பிறகு கனகாவின் புகழ் உச்சத்தில் இருந்தது. "நெஞ்சில் ஓர்
ஆலயம்', "வானம்பாடி' படங்களைப் பார்த்து தேவிகாவின் மீதிருந்த மயக்கம் சற்றே கனகாவின் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது.
ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கிற சந்தர்ப்பம். மிடுக்கான பழைய வீடு.
கதவைத் தட்டியதும் கனகாதான் கதவைத் திறந்தார். ஜீன்ஸ் பேண்டும் டி சர்ட்டும் போட்டிருந்தார். புடவையில் மட்டுமே பார்த்திருந்த
அவரை இப்படி எதிர்பார்க்காததுதான் அதிர்ச்சிக்குக் காரணம். போதாததற்கு மூக்குக் கண்ணாடி வேறு அணிந்திருந்தார். அவர் இப்படி
இருந்திருக்கவே கூடாது என்று நினைத்தேன். ஒரு நடிகை ரசிகனின் எதிர்பார்ப்பைப் புறந்தள்ளிவிட்ட ஏமாற்றம் அது.
உள்ளே வரவேற்பறையில் அமர வைத்தார். தேவிகா வந்தார். கனத்த சரீரம். ""நீ இதுக்கு முன்னாடி வந்திருக்கே இல்லையாப்பா?''
என்றார். பத்திரிகையாளர்களிடம் வழக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாணி அது. கண்களில் துறுதுறுப்பும் நாணமும்
தென்படாத அவருடைய உருவத்தையும் மென்மையற்ற குரலையும் ஒரு வயதான தாய்க்கான அடையாளம் என உடனடியாக ஏற்றுக்
கொள்ள மனம் தயங்கியது.
எதிரில் வந்து அமர்ந்த தேவிகா, நான் கேட்க வந்த கேள்விகளை அலட்சியம் செய்துவிட்டு அவர் ஏதோ பேச ஆரமம்பித்தார். "அந்தப்
படுபாவி. குடிகாரன். இப்ப இது என் பொண்ணு என்கிட்டதான் இருக்கணும்னு சொல்றானே.. நியாயமா சொல்லு? பெத்து வளர்த்து
ஆளாக்கி இவ்வளவு தூரம் வந்த பிறகு எங்க இருந்து வந்தான் அவன். (கனகாவைக் காட்டி) இவ பொறந்தப்ப விட்டுட்டுப் போன
வம்பா. இப்ப நடிகையாகி சம்பாதிக்கிறான்னு தெரிஞ்சதும் பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சாக்கும்.... ஏம்மா அந்த ஸ்டூலை எடுத்து
முன்னாடிப் போடு.. காலை இப்படி கீழே தொங்கவிட்டு வெச்சிருந்தா வீங்கிப் போவுதுப்பா. இப்படி மேல வெச்சுக்கிறேன்... ம்.. என்ன
சொன்னேன்? குடிகாரன்... குடிகாரன். எதுக்குச் சொந்தம் கொண்டாட்றான் இப்ப வந்து?''
அவர் திட்டிக் கொண்டிருப்பது கனகாவின் அப்பாவை என்பது கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது. எந்தவித முன்னறிவிப்பும்
இல்லாமல் திட்ட ஆரம்பித்ததில் எனக்கு நேராகவே காலை நீட்டி உட்கார்ந்திருந்ததில் சற்று நிலைகுலைந்து போனேன். என் கன
வெல்லாம் சரிந்து தரைமட்டமாக விழுந்தது. மாலை ஆறரைக்கு அவர் வீட்டுக்குப் போனவன் இரவு எட்டு மணிக்கு வெளியே
வந்தேன். எனக்குப் பழக்கமில்லாத பகுதி அது.இருண்ட தெருக்கள் வழியாக ஏதோ வாழ்க்கையின் தாத்பர்யம் புரிந்து போனவன் மா
திரி நடந்தேன்.அங்கே இங்கே சுற்றி தேனாம்பேட்டை சிக்னல் வந்ததும்தான் எனக்கு வழி விளங்கியது.
அடுத்த ஆண்டில் தேவிகாவும் இறந்துபோக, கனகாவைப் பேட்டி எடுக்க நினைத்தபோது ஒரு அட்வகேட் எண்ணைக் கொடுத்து
அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றார்கள். அந்த எண்ணில் பேசினேன். நீங்கள் யார், எதற்காகப் பேச வேண்டும்? என்ன பேச
வேண்டும்? என்று நிறைய கேள்வி கேட்டார்கள். அதன் பிறகு கனகாவை சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. பொது நிகழ்ச்சிகளி
லும் பார்க்கமுடியவில்லை.
அந்த வீட்டையும் பார்க்கவில்லை.
மணிவண்ணன் அலுவலகத்தில்
சத்யராஜ் சொன்ன விஷயம் இது. "கோயமுத்தூர் கல்லூரியில் பி.எஸ்ஸி. படிக்க விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்று
கொண்டிருந்தபோது ஒரு மாணவர் எந்த கோர்ஸில் சேருவதென்றே முடிவெடுக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார். "அட்வான்ஸ்
இங்கிலீஷ் என்கிறார்களே அது என்ன கோர்ஸ்' என்றார் அந்த மாணவர் என்னிடம். ஆளைப் பார்த்தால் என்ன சொன்னாலும் நம்புவார்
மாதிரி இருந்தது. "இப்ப ஒரு வீடு வாங்கணும்னா அட்வான்ஸô கொஞ்சம் பணம் தர்றதில்லையா.. அந்த மாதிரி இங்கிலீஷ்
கத்துக்கறதுக்கு முன்னாடி அட்வான்ஸô கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடுப்பாங்க' என்று ஒரு போடு போட்டேன். என்னை ஏற
இறங்க பார்த்துட்டு மனசார நம்பி அதற்கு விண்ணப்பித்தார். ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா என்று ஆங்கில இலக்கியம் ஆரம்பித்ததும்
இரண்டாவது மாசமே படிப்பை மூட்டைக் கட்டிவிட்டு சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
இயக்குநர் ஆனார். அவர்தான் டைரக்டர் மணிவண்ணன். அவர் டைரக்டர் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்றால் அவர் கோபித்துக்
கொள்ள மாட்டார்.''
ஒரு முறை அவரைச் சந்திக்க அவருடைய தி.நகர். அலுவகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு தமிழகத்தில் வெளியாகும்
பெரும்பான்மையான நாளிதழ்கள் இருந்ததைப் பார்த்தேன். டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. "அப்ப திரிபாதி( திரிபாதியாகவோ
அது போன்றதொரு வட இந்தியத் தலைவராகவோ இருக்கலாம்.) சொன்னது மட்டும் சரிங்கிறீங்களா?'' என அப்ரப்ட்டாக ஆரம்பித்தார்
. எனக்கு சுதாரிக்கச் சில வினாடிகள் ஆயின. டி.வி.யில் அப்போது அவர் சம்பந்தமாக ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. திரிபாதியைப் பற்றி
எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்; எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்; அவர் என்ன சொல்லியிருந்தார்;
இப்போது டி.வி.யில் அது சம்பந்தமாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்... சுத்தம்... ஒன்றுமே விளங்கவில்லை. "ஒரு நியாயம்
இருக்கா பாருங்க.. பேசறதெல்லாம் பேசிட்டு இப்படி பல்டி அடிச்சா ஜனங்க என்ன இளிச்ச வாயனுங்களா?'' என்று ஆவேசமாகக் கூ
றினார். பேந்த, பேந்த விழித்தேன். அவரோ, அது பற்றி என்னுடைய அபிப்ராயத்தை எதிர்பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார். குப்பென்று
அவர் பற்றிய மதிப்பு உயர்ந்தது. சத்யராஜ் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு இவரை எடைபோடக்கூடாது என்று தெரிந்தது.
மிகப்பாதுகாப்பாகப் பேசினேன். அவர் சொல்வதற்கெல்லாம் "ஆமாம் சார். யாருக்கு சார் அக்கறை..? அரசியல்வாதிகிட்ட என்னத்தை
எதிர்பார்க்க முடியும்?' என்று பேசிவிட்டு தப்பித்து வந்தேன்.
இந்திய அரசியல் பற்றி அவருக்கு நல்ல ஞானம் உண்டு. ஓயாமல் படிக்கிறவராக இருக்கிறார். பதிப்பகங்களை நாடி வந்து புத்தகம்
வாங்குகிற பண்பு உள்ளவர் அவர். சினிமா இந்த மாதிரி ஆட்களை கோமாளிகள் போல சித்திரிப்பதும் அதே சமயம் ஹீரோவானவர்
எல்லா சமூக சிக்கலுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டுவிடுபவராகவும் இருப்பது விபரீதமான முரண்பாடுதான்.
புதுமைப்பித்தன்
பார்த்திபனிடம் நேர்த்தியான ரசனையைப் பார்த்து வியப்பேன். வாழ்த்து சொல்பவர்கள் பொக்கே கொடுத்துப் பார்த்திருக்கிறேன். இவர்
பழங்களால் ஆன பாக்கெட்டை கொடுப்பார். நடிகர்களுக்கும் நண்பர்களுக்கும் இவர் தரும் பரிசுகள் அவருடைய தனி
கைவண்ணத்தோடு இருக்கும். யாருக்கும் அவசர அடியாக கடையில் போய் ஒரு பரிசுப் பொருளை வாங்கித் தருகிற ஆள் இல்லை
அவர். மீனாவுக்கு அவர் தந்த பரிசு ஒன்றை மீனாவின் வீட்டில் பார்த்தேன். மீனாவின் கண்ணை குளோசப்பில் படமாக்கி "கண்ணே
மீனா...' என்று ஆரம்பித்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. கீழே அடுத்த வரி "மீனே கண்ணா?'... இப்படியாக இருக்கும் அவர் வழங்கும்
பரிசுகள். மேடையில் ஒரு நிமிடம் பேசுவதென்றாலும் ஏதாவது புதுமையிருக்கும்.
ஒருமுறை அவருடைய மனைவி சீதாவைப் பேட்டி காணச் சென்றேன். காலையிலேயே வரச் சொல்லியிருந்தார். சீதா தஞ்சாவூர்
ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார். அதைப் பற்றித்தான் பேட்டி காண வந்திருந்தேன்.
எங்கோ படப்பிடிப்பில் இருந்த பார்த்திபனும் ஓடிவந்து பேட்டியைச் சுவாரஸ்யப்படுத்தினார். (திருமதி இயக்குநர் என்ற தலைப்பில்
சீதாவையும் இயக்குநர் வசந்தின் மனைவி ரேணுகாவையும் பேட்டி எடுத்திருந்தேன். ரேணுகா இன்டீரியர் டெகரேஷன் துறையில் தாம்
செய்திருந்த புதுமைகளைப் பற்றிச் சொன்னார்.) அவர் வீட்டில் "கருப்பி' என்றொரு நாய் இருந்தது. பேட்டரியில் ஓடும் காரை
தமிழ்நாட்டில் முதலில் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும்.
பார்த்திபனின் அலுவலகத்தில் "உங்கள் பாதுகைகளைக் கழற்றித் தாருங்கள்} பரதன்' என்று எழுதியிருக்கும் இடத்தில் செருப்பை விட
வேண்டும். காலிங் பெல்லுக்கு பதில் ஒரு பெரிய காண்டா மணியைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார். உள்ளே நுழைந்ததும் ஒரு
எலக்ட்ரானிக் சென்ஸர் மூலம் நம் வரவை அறிந்து குருவி பொம்மை ஒன்று கத்தும். வாழ்க்கையை அணுஅணுவாக ரசிப்பது
என்பார்களே அது அவருக்கு மட்டுமே சாத்தியம் என்று பொறாமையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் அவரும் சீதாவும் மன வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். அதில் புதுமை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
வெள்ளி, பிப்ரவரி 27, 2009
சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:
சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு
தினமணியில் செய்தி 27.02.09
சென்னை, பிப். 26: மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட "அறிவியல் புனைகதை-2009' போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு (ரூ.20 ஆயிரம்) கிடைத்துள்ளது.
2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றது.
தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார். நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெüஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.
பரிசளிப்பு விழா மார்ச் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதுநிலை உதவி ஆசிரியர்
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், மாக்சிம், அஞ்சலி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மகன், க.பாலகிருஷ்ணன்-பார்வதி தம்பதியின் மகன் ஆவார்.
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு
தினமணியில் செய்தி 27.02.09
சென்னை, பிப். 26: மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட "அறிவியல் புனைகதை-2009' போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு (ரூ.20 ஆயிரம்) கிடைத்துள்ளது.
2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றது.
தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார். நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெüஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.
பரிசளிப்பு விழா மார்ச் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதுநிலை உதவி ஆசிரியர்
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், மாக்சிம், அஞ்சலி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மகன், க.பாலகிருஷ்ணன்-பார்வதி தம்பதியின் மகன் ஆவார்.
வியாழன், பிப்ரவரி 26, 2009
எனக்குப் பரிசு ௨0,000
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டிபோட்டி முடிவுகள்
சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:
முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா
ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது
பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன.
மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html
சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:
முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா
ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது
பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன.
மேலதிக விவரங்களுக்கு
ஆழி பதிப்பகம்
12, முதல் பிரதான சாலை
யுனைட்டட் இந்தியா காலனி
கோடம்பாக்கம்
சென்னை 600024
தொலைபேசி: 1-44-4358 7585
செல்பேசி: 91-99401 47473
மின்னஞ்சல்: sujatha.scifi@gmail.com
வலையகம்: www.aazhipublishers.com/sujatha.html
செவ்வாய், பிப்ரவரி 24, 2009
திரைக்கு பின்னே- 21
வழி தவறிய ஆட்டுக்குட்டி!
"ஈரமான ரோஜாவே' படத்தில் தயாரிப்பாளர்; இயக்குநர் கே.ஆர். மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் மோகினி.
மைலாப்பூரில் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் அவரை முதன் முதலாகச் சந்திக்கச் சென்றேன். என் அனுமானத்தில் அங்கு இருந்த அத்தனை குடும்பங்களுமே பிராமணக் குடும்பங்கள்தான். அந்த மாதிரியான சூழலில் ஒரு நடிகை குடியிருப்பது சற்றும் பொருத்தமில்லாததாக இருந்தது. வத்தல், வடாம், துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காயப்போடப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் நடிகையா? சரியான முகவரிதானா என்ற ஐயத்தோடு அங்கு குடியிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தேன். அவர் தம் குடியிருப்பில் இப்படியொரு நடிகை குடியிருப்பதையும் அவரைத்தேடி சினிமா கார்களும் சினிமாக்காரர்களும் வந்து போய்க் கொண்டிருப்பதை விரும்பாதவராக இருப்பார்போலும். ஒரு வீட்டைக் கை காட்டிவிட்டு டம்மென்று கதவை அறைந்து சாத்தினார். நான் மேற்கொண்டு எந்தவீட்டுக் கதவையும் தட்டி விசாரிக்காமல் மோகினி வீட்டின் கதவைச் சரியாகக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
நான் தட்டிய கதவுக்கு மறுபுறத்தில் மோகினி நின்றிருந்தார். "ஈஸியா கண்டுபிடிக்க முடிந்ததா?'' என்றார்.
திரையில் இருந்த எந்த ஆடம்பரமும் இல்லாத ஆடை. நெற்றியில் திருநீறு. பவுடர் கூட போட்டிருப்பாரா என்று தெரியவில்லை. அத்தனை எளிமை. கையில் ஒரு வெள்ளை பேப்பரைச் சுருட்டிக் கொடுத்தால் பத்தாம் வகுப்பு முடித்து டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் செல்லும் மாணவி போல இருந்தார்.
இவர் எதற்கு நடிக்க வரவேண்டும் என்று இருந்தது. இனம் புரியாத அச்சம்கூட இருந்தது. வழி தவறி வந்துவிட்டவர் மாதிரி தோன்றியது. மறுபடியும் ஸ்கூலில் சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவேன் போல தவித்தேன். நடிகையிடம் வழக்கமாகக் கேட்கும் எந்தக் கேள்வியையும் கேட்க முடியவில்லை. அவரும் இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.
கிளம்பும்போது அந்த வீட்டில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மொட்டையடித்த பெண்மணியைப் பார்த்தேன். திடீரென்று அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற தேவையில்லாத பயம் தொற்றியது.
பிறகு என்ன சூழலோ, அவர் ஒரு பிரஸ்மீட் வைத்து "கிளாமராக நடித்தால் என்ன தவறு? ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்று அறிவித்தார். நவீன ஆடைகளில் போட்டோ எடுத்து விநியோகித்தார். பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்தியப் பெருமையையும் பண்பாட்டையும் பேசும் அந்த நடிகை திடீரென்று கிருஸ்துவ மதத்தில் சேர்ந்து.. மத சேவை செய்யப் போவதாக அதே மயிலாப்பூரில் அறிவித்தார். நான் எதிர்பார்த்தது போல அவர் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் மாணவியாகவே இருந்திருந்தால் இந்த மதமாற்றத்துக்கு அவசியம் இருந்திருக்காதோ?
மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன்!
பத்திரிகையில் சுவாரஸ்யமான செய்திகளுக்காக நிருபர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.
மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை எழுதித்தந்தார் நிருபர் ஒருவர்.
ராமராஜன் வரிசையான வெற்றிப்படங்களைத் தந்துவிட்டு இளையராஜாவோடு ஏதோ மனஸ்தாபம் எற்பட்டு படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த நேரம் அது. மணிரத்னமோ, "ரோஜா', "பம்பாய்' என... ஏறுமுகத்தில்.
ஏதோ வித்தியாசமான கதையம்சத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறது என்று செய்தியைப் படித்த பலரும் பேசிக் கொண்டார்கள். சிலர் போனில் தொடர்பு கொண்டு உண்மையா சார் என்றோ... தலைப்பு என்ன சார் என்றோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ராமராஜன் அலுவகத்தில் இருந்தே ஒரு போன்... "மணிரத்னம் அறிவித்தாரா?'' என்று அவர்கள் விசாரித்தபோதுதான் விபரீதம் புரிந்தது. ராமராஜனுக்கும் தெரிவிக்காமலா இந்தச் செய்தி வெளியே கசிந்தது? என்ற சந்தேகம். சீக்கிரத்திலேயே மணிரத்னம் அலுவகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். ராமராஜனை வைத்து படம் எடுக்கப் போவதாக உங்களுக்கு யார் சொன்னது நிறைய பேர் போன் செய்து விசாரிக்கிறார்கள் என்றனர்.
அதன் பிறகுதான் அந்த நிருபரை விசாரித்தேன். முதலில் "யாரோ சொன்னார்கள்.. பேசிக் கொண்டார்கள் என்று சொன்னவர்.. கடைசியில் பரபரப்பா இருக்குமேன்னு எழுதினேன் சார்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார். ஒருவாரம் பத்திரிகையைப் பேச வைத்த சந்தோஷம் இருந்தாலும் மேலுக்குக் கடிந்து கொண்டேன்.
"யார் கண்டது சார்... மணிரத்னம் அவரை வெச்சி ஒரு படம் எடுத்தாலும் எடுப்பார் சார்... எடுத்தா நல்லா இருக்கும் சார்'' என்றார்.
"பலிக்கட்டும்'' என்றேன்.
எழுத்துத் திருத்தம்!
பாண்டு என்ற நடிகரை ஞாபகப்படுத்துவது சுலபம். வாயை அஷ்ட கோணலாக்கி "ஆங்', "ஊங்" என்று அவர் செய்கிற சேட்டை அத்தனை பிரபலம்.
பிரபலமில்லாத செய்தி.. அவர் குமுதம் இதழில் நெடுங்காலம் பணியாற்றிய எழுத்தாளர் புனிதனின் மருமகன். கேபிடல் லெட்டர்ஸ் என்ற விளம்பர எழுத்து பலகை நிறுவனம் நடத்தி வருகிறார் அவர். குங்குமம், சன் டி.வி., தினகரன் உள்ளிட்ட பித்தளை எழுத்துககளை உருவாக்கி வடிவம் தந்தவர்.
ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கலைஞர் மீது அவருக்கு அதீத பாசம். கலைஞர் மாளிகை என்று ஒரு அரசு நிறுவனத்துக்குப் பெயர்ப் பலகை செய்து தந்ததைச் சொன்னார். ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து அந்தப் பெயரை நீக்கச் சொல்லிவிட்டு, அதற்குப் பெரியார் மாளிகை என்று பெயரிட்டுவிட்டார்கள். அந்த ஆர்டரும் இவருக்கே வந்தது. நாம் செய்த கலைஞர் பெயரை நாமே நீக்க வேண்டியதாகிவிட்டதே என்று வருத்தமாக இருந்ததாம். "சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கலைஞர் மாளிகை என்ற அந்த எழுத்துகளை உருக்கி அதையே பெரியார் மாளிகை என்று ஆக்கினேன். பெரியாருக்குள் கலைஞர் அடக்கம்தானே?'' என்றார் சந்தோஷத்தோடு .
ஆங்!
"ஈரமான ரோஜாவே' படத்தில் தயாரிப்பாளர்; இயக்குநர் கே.ஆர். மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் மோகினி.
மைலாப்பூரில் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் அவரை முதன் முதலாகச் சந்திக்கச் சென்றேன். என் அனுமானத்தில் அங்கு இருந்த அத்தனை குடும்பங்களுமே பிராமணக் குடும்பங்கள்தான். அந்த மாதிரியான சூழலில் ஒரு நடிகை குடியிருப்பது சற்றும் பொருத்தமில்லாததாக இருந்தது. வத்தல், வடாம், துவைத்துப் போட்ட துணிகள் எல்லாம் காயப்போடப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் நடிகையா? சரியான முகவரிதானா என்ற ஐயத்தோடு அங்கு குடியிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தேன். அவர் தம் குடியிருப்பில் இப்படியொரு நடிகை குடியிருப்பதையும் அவரைத்தேடி சினிமா கார்களும் சினிமாக்காரர்களும் வந்து போய்க் கொண்டிருப்பதை விரும்பாதவராக இருப்பார்போலும். ஒரு வீட்டைக் கை காட்டிவிட்டு டம்மென்று கதவை அறைந்து சாத்தினார். நான் மேற்கொண்டு எந்தவீட்டுக் கதவையும் தட்டி விசாரிக்காமல் மோகினி வீட்டின் கதவைச் சரியாகக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
நான் தட்டிய கதவுக்கு மறுபுறத்தில் மோகினி நின்றிருந்தார். "ஈஸியா கண்டுபிடிக்க முடிந்ததா?'' என்றார்.
திரையில் இருந்த எந்த ஆடம்பரமும் இல்லாத ஆடை. நெற்றியில் திருநீறு. பவுடர் கூட போட்டிருப்பாரா என்று தெரியவில்லை. அத்தனை எளிமை. கையில் ஒரு வெள்ளை பேப்பரைச் சுருட்டிக் கொடுத்தால் பத்தாம் வகுப்பு முடித்து டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் செல்லும் மாணவி போல இருந்தார்.
இவர் எதற்கு நடிக்க வரவேண்டும் என்று இருந்தது. இனம் புரியாத அச்சம்கூட இருந்தது. வழி தவறி வந்துவிட்டவர் மாதிரி தோன்றியது. மறுபடியும் ஸ்கூலில் சேர்ந்து படியுங்கள் என்று சொல்லிவிடுவேன் போல தவித்தேன். நடிகையிடம் வழக்கமாகக் கேட்கும் எந்தக் கேள்வியையும் கேட்க முடியவில்லை. அவரும் இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தார்.
கிளம்பும்போது அந்த வீட்டில் தலையில் முக்காடு போட்டு அமர்ந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மொட்டையடித்த பெண்மணியைப் பார்த்தேன். திடீரென்று அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற தேவையில்லாத பயம் தொற்றியது.
பிறகு என்ன சூழலோ, அவர் ஒரு பிரஸ்மீட் வைத்து "கிளாமராக நடித்தால் என்ன தவறு? ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்று அறிவித்தார். நவீன ஆடைகளில் போட்டோ எடுத்து விநியோகித்தார். பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. இந்தியப் பெருமையையும் பண்பாட்டையும் பேசும் அந்த நடிகை திடீரென்று கிருஸ்துவ மதத்தில் சேர்ந்து.. மத சேவை செய்யப் போவதாக அதே மயிலாப்பூரில் அறிவித்தார். நான் எதிர்பார்த்தது போல அவர் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிட்யூட் மாணவியாகவே இருந்திருந்தால் இந்த மதமாற்றத்துக்கு அவசியம் இருந்திருக்காதோ?
மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன்!
பத்திரிகையில் சுவாரஸ்யமான செய்திகளுக்காக நிருபர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் இது.
மணிரத்னம் இயக்கத்தில் ராமராஜன் என்ற தலைப்பிட்டு ஒரு செய்தியை எழுதித்தந்தார் நிருபர் ஒருவர்.
ராமராஜன் வரிசையான வெற்றிப்படங்களைத் தந்துவிட்டு இளையராஜாவோடு ஏதோ மனஸ்தாபம் எற்பட்டு படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த நேரம் அது. மணிரத்னமோ, "ரோஜா', "பம்பாய்' என... ஏறுமுகத்தில்.
ஏதோ வித்தியாசமான கதையம்சத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறது என்று செய்தியைப் படித்த பலரும் பேசிக் கொண்டார்கள். சிலர் போனில் தொடர்பு கொண்டு உண்மையா சார் என்றோ... தலைப்பு என்ன சார் என்றோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ராமராஜன் அலுவகத்தில் இருந்தே ஒரு போன்... "மணிரத்னம் அறிவித்தாரா?'' என்று அவர்கள் விசாரித்தபோதுதான் விபரீதம் புரிந்தது. ராமராஜனுக்கும் தெரிவிக்காமலா இந்தச் செய்தி வெளியே கசிந்தது? என்ற சந்தேகம். சீக்கிரத்திலேயே மணிரத்னம் அலுவகத்தில் இருந்து தொடர்பு கொண்டார்கள். ராமராஜனை வைத்து படம் எடுக்கப் போவதாக உங்களுக்கு யார் சொன்னது நிறைய பேர் போன் செய்து விசாரிக்கிறார்கள் என்றனர்.
அதன் பிறகுதான் அந்த நிருபரை விசாரித்தேன். முதலில் "யாரோ சொன்னார்கள்.. பேசிக் கொண்டார்கள் என்று சொன்னவர்.. கடைசியில் பரபரப்பா இருக்குமேன்னு எழுதினேன் சார்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார். ஒருவாரம் பத்திரிகையைப் பேச வைத்த சந்தோஷம் இருந்தாலும் மேலுக்குக் கடிந்து கொண்டேன்.
"யார் கண்டது சார்... மணிரத்னம் அவரை வெச்சி ஒரு படம் எடுத்தாலும் எடுப்பார் சார்... எடுத்தா நல்லா இருக்கும் சார்'' என்றார்.
"பலிக்கட்டும்'' என்றேன்.
எழுத்துத் திருத்தம்!
பாண்டு என்ற நடிகரை ஞாபகப்படுத்துவது சுலபம். வாயை அஷ்ட கோணலாக்கி "ஆங்', "ஊங்" என்று அவர் செய்கிற சேட்டை அத்தனை பிரபலம்.
பிரபலமில்லாத செய்தி.. அவர் குமுதம் இதழில் நெடுங்காலம் பணியாற்றிய எழுத்தாளர் புனிதனின் மருமகன். கேபிடல் லெட்டர்ஸ் என்ற விளம்பர எழுத்து பலகை நிறுவனம் நடத்தி வருகிறார் அவர். குங்குமம், சன் டி.வி., தினகரன் உள்ளிட்ட பித்தளை எழுத்துககளை உருவாக்கி வடிவம் தந்தவர்.
ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கலைஞர் மீது அவருக்கு அதீத பாசம். கலைஞர் மாளிகை என்று ஒரு அரசு நிறுவனத்துக்குப் பெயர்ப் பலகை செய்து தந்ததைச் சொன்னார். ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்து அந்தப் பெயரை நீக்கச் சொல்லிவிட்டு, அதற்குப் பெரியார் மாளிகை என்று பெயரிட்டுவிட்டார்கள். அந்த ஆர்டரும் இவருக்கே வந்தது. நாம் செய்த கலைஞர் பெயரை நாமே நீக்க வேண்டியதாகிவிட்டதே என்று வருத்தமாக இருந்ததாம். "சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. கலைஞர் மாளிகை என்ற அந்த எழுத்துகளை உருக்கி அதையே பெரியார் மாளிகை என்று ஆக்கினேன். பெரியாருக்குள் கலைஞர் அடக்கம்தானே?'' என்றார் சந்தோஷத்தோடு .
ஆங்!
திங்கள், பிப்ரவரி 16, 2009
திரைக்குப் பின்னே- 20
"தெனாலி' டைமண்ட் பாபு!
டைமண்ட் பாபு என்ற பெயரை பலரும் அறிந்திருக்கலாம். "தெனாலி' என்ற படத்தில் ஜோதிகாவுக்கு மாப்பிள்ளையாக வரும் மதன் பாப் என்ற நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் என்று சொல்லக்கூடும். இது வெறும் உலகில் இருக்கும் தமிழர்களுக்கு. சினிமா உலகத்தில், டைமண்ட் பாபு என்ற திரைத்துறை பத்திரிகை தொடர்பாளர் மிகவும் பிரசித்தம்.
சினிமாவின் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இவர் இருப்பார். சினிமா துறையினரும் விழாவுக்கு இவர் வந்துவிட்டாரா என்று தெரிந்து கொண்டு புறப்படுவதும் நடக்கும். எத்தனை ரசிகர் மத்தியிலும் பிரமுகர்களை இவர் மேடைக்கு அழைத்துவருவதும் மீண்டும் அவர்களை வழியனுப்பி வைப்பதும் அத்தனை லாவகமாக இருக்கும்.
ஒருமுறை பத்திரிகையாளர் சிலருடன் நான் ராதாரவி வீட்டு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் அவ்விழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்ததால் எல்லா நடிகர்களும் அக் கூட்டத்தில் நீந்தி மேடையை அடைவதற்கு ஒரே ஆபத்பாந்தவனாக டைமண்ட் பாபுவைத்தான் நம்பினார்கள். மனிதர் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்ந்துவிட்டார்.
"இனி தாக்குப் பிடிக்க முடியாது'' கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.
அப்போது இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடமிருந்து டைமண்ட் பாபுவுக்கு போன். "பாபு... எங்க இருக்கீங்க? நானும் ரோஜாவும் கல்யாணத்துக்கு வந்திருக்கோம்'' என்றார் செல்வமணி.
"அப்படியா? என்ட்ரன்ஸ்லயே இருங்க. இதோ வந்திட்றேன்'' என்றார் பாபு.
வடபழனியில் இருந்து எப்படி கலைவாணர் அரங்கத்துக்குப் போக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் எங்களிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமணியிடமிருந்து போன்.
"எங்க இருக்க பாபு..? இங்க முரளி வந்தாரு. அவர் கூட உள்ள வந்துட்டேன்''
"அப்படியா? சரி.. சரி. இப்பத்தான் தேவா வந்தாரு... அவரை அனுப்பிவைக்க வெளிய
வந்துட்டேன். சரி போங்க நான் உள்ள வந்திட்றேன்...''
கொஞ்சநேரம் சகஜமாக எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் செல்வமணி...
"ஸ்டேஜ்லதான் நிக்கிறேன்...''
"நான் உங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் நிக்கிறேன். இறங்கி வாங்க... உங்க கார்கிட்ட வந்திட்றேன்...''
பாபு மறுபடியும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் போன்... "கார் கிட்ட வந்துட்டேன் பாபு'' என்றார் ரோஜா.
"மினிஸ்டர் வந்துட்டார்... ரெண்டு நிமிஷம் நிக்க முடியுமா? இல்ல நீங்க கிளம்பிடுங்க... காலைல வந்து பாக்றேன்.'' என்றார் பாபு கூலாக.
"சரி பாபு. ரொம்ப தாங்க்ஸ்... நாளைக்குப் பேசறேன்'' என்றபடி ரோஜாவும் போனை வைத்தார்.
சம்பவ இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் ரோஜாவையும் செல்வமணியையும் அவர் அழகாக அழைத்து வந்து வழியனுப்பி வைத்த அழகு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியான ஆதரவுக்காகத்தான் சினிமா உலகினருக்கு டைமண்ட் பாபு தேவைப்படுகிறார். சாரிங்க நான் அப்பவே கிளம்பிட்டேனே என்று அவர் கூறியிருந்தால் ரோஜாவும் செல்வமணியும் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழைய பயந்து திரும்பிப் போய் இருக்கலாம். குறைந்த பட்சம் மனதில் தடுமாற்றம் எற்பட்டிருக்கும். உளவியல் ரீதியாக அவர்களை செலுத்தியது பெரிய சாதனைதான். தெனாலி என்ற விகடகவியின் புத்திசாலிதனத்தோடு ஒப்பிட்டால் தப்பில்லைதான்.
கூவாத கோழி!
"கோழிகூவுது' விஜி என்று அறியப்பட்ட விஜியை முதல் முதலில் சந்தித்தது கோடம்பாக்கத்தில் மாதவன் நாயர் தெருவில் அவருடைய இல்லத்தில். சினிமா நிருபராக என் ஆரம்ப சந்திப்பு அது.
ஒரு சினிமா நடிகையை இவ்வளவு அருகில் நேரில் பார்க்கிறோம் என்ற பரவசம்தான் அதிகமாக இருந்தது. நடிகர்களை வெள்ளித்திரையிலும் மவுண்ட்ரோடு பேனர்களிலும் பிரம்மாண்டமாக 20 அடி 30 அடி உயர உருவங்களாகப் பார்த்துவிட்டு நேரில் அவர்களைப் பார்த்து நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள் என்கிற வியப்பும் அதில் இருந்தது. பலர் நான் எதிர் பார்த்ததைவிட சிறிய உருவமாக இருந்தார்கள். சுடிதாரில் சின்னப் பெண்ணாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருந்தார் விஜி.
சினிமா நட்சத்திரங்களின் வீடுகளும் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் காட்டியது போல ஒரே மாடிக்கு இரண்டு படிவரிசை வைத்துக் கட்டியது போல இல்லாமல் இருந்தது. பலர் அபார்ட்மென்ட்டில் குடியிருந்தார்கள். விஜியும்.
அடுத்த சில ஆண்டுகளில் அவர் முதுகில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டார்.
மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க பொறுப்பில் இருந்ததால் உடனடியாகத் தலையிட்டு மருத்துவ ரீதியான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். அடுத்து அவர் நடித்த படம் ஒன்றிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
அடுத்தடுத்து விஜிக்கு விஜயகாந்த் செய்த இந்த உதவிகளைத் தொகுத்து விஜி நெகிழ்ந்து போகிற மாதிரி.. ஒரு செய்தி எழுதினேன்.
இதழ் வெளியான அன்று கடுங்கோபமாக அவரிடம் இருந்து போன். இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றேன். என்னையும் அவரையும் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என்றார். உதவி செய்வது எப்படி இணைத்து எழுதுவதாக இருக்கும் என்றேன்.
அடுத்து "விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு தந்தார் என்று எப்படி எழுதலாம்'' என்று சத்தம் போட்டார். "கொஞ்சம்கூட தகுதி இல்லாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்ததாக எழுதலாம். எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்ததால் நடிக்க அழைத்திருக்கிறார். நான் நடித்தால் அந்தக் கேரக்டர் பேசப்படும் என்பதால்தான் நடிக்க வைத்திருக்கிறார்.'' என்றார்.
இவ்வளவு சென்ஸிட்டீவாக இருக்கிறாரே என்று நினைத்தேன். சினிமாவில் சில வார்த்தை பிரயோகங்களை அப்படியே எழுதி பழகிவிட்டதுதான் காரணம். "இயக்குநர் அமீர் கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்' என்று எழுதுவது பழக்க தோசமான வாக்கியச் சேர்ப்புதான். விஜி அதற்கு இந்த அளவுக்கு வருத்தப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் மற்ற நடிகைகள் இப்படி வருத்தமோ, கோபமோ படவில்லை என்று யோசனையாகிவிட்டது.
அடுத்த சில மாதங்களில் விஜி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தந்தை தற்போது திருவண்ணாமலையில் விஜியின் பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்திவருகிறார்.
சண்டையும் சமாதானமும்!
விஜய் நடித்த "மின்சார கண்ணா' படத்தை திருட்டு வீடியோ எடுத்தவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக பத்திரிகையாளரிடம் அறிவித்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். திருட்டுவிடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் மருமகன் மீது. அவசரப்பட்டு பழி சுமத்துவதாகச் சொன்ன ஒரு பத்திரிகையாளர் மீது கோபப்பட்டார் சந்திரசேகரன்.
கே.பி.யின் மருமகன் கந்தசாமியோ, தான் சினிமா நிகழ்ச்சிகளை விடியோ எடுத்து வெளிநாட்டில் சில டி.வி. சானல்களில் ஒளிபரப்புவதாகச் சொன்னார். சென்னை உதயம் தியேட்டரில் "மின்சார கண்ணா' திரையிட்ட அன்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தான் படமாக்கினேன். தியேட்டருக்குள் ரசிகர்கள் விஜய் தோன்றும் காட்சியில் நடனமாடுவதாகக் கூறவே கேமிராமேன் உள்ளே சென்று பதிவு செய்ய ஆரம்பித்தார்'' என்று விளக்கம் அளித்தார்.
யார் சொன்னது உண்மையென்பது ஒரு பக்கம். இதில் தேவையில்லாமல் பாலசந்தர் தலை உருண்டது. பாலசந்தரின் மருமகன் திருட்டு விசிடி தயாரித்ததாகவே எழுதினார்கள். இதனால் பாலசந்தர் கண்டனம் தெரிவிக்க வேண்டியதானது. பதிலுக்கு சந்திரசேகரன் பாலசந்தரைத் தாக்க... இந்த நேரத்தில் பாலசந்தரைச் சந்தித்தபோது, யார் யாரை பழி சொல்வது என்று விவஸ்தை வேண்டாமா.. வேதனைப்பட்டார். சந்திரசேகரனைச் சந்தித்தபோதும் படத்தைத் திருட்டுத்தனமா காப்பி பண்ணிட்டு எப்படிலாம் நாடகம் ஆட்றாங்க என்று கொதித்தார். இரண்டு தரப்பிலும் அப்படியொரு காயம். இணையவே முடியாத இரண்டு துருவங்களாக மாறிப் போய்விட்டதைக் கண்டேன்.
விரைவிலேயே பாலசந்தர் தயாரிப்பில் விஜய் நடித்த "திருமலை' என்ற படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. சண்டைக்கு ஒரு காரணம் இருந்தது போல சமாதானத்துக்கு ஒரு காரணமும் சொல்லப்படவேயில்லை இரண்டு தரப்பிலும்.
டைமண்ட் பாபு என்ற பெயரை பலரும் அறிந்திருக்கலாம். "தெனாலி' என்ற படத்தில் ஜோதிகாவுக்கு மாப்பிள்ளையாக வரும் மதன் பாப் என்ற நடிகரின் கதாபாத்திரத்தின் பெயர் என்று சொல்லக்கூடும். இது வெறும் உலகில் இருக்கும் தமிழர்களுக்கு. சினிமா உலகத்தில், டைமண்ட் பாபு என்ற திரைத்துறை பத்திரிகை தொடர்பாளர் மிகவும் பிரசித்தம்.
சினிமாவின் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இவர் இருப்பார். சினிமா துறையினரும் விழாவுக்கு இவர் வந்துவிட்டாரா என்று தெரிந்து கொண்டு புறப்படுவதும் நடக்கும். எத்தனை ரசிகர் மத்தியிலும் பிரமுகர்களை இவர் மேடைக்கு அழைத்துவருவதும் மீண்டும் அவர்களை வழியனுப்பி வைப்பதும் அத்தனை லாவகமாக இருக்கும்.
ஒருமுறை பத்திரிகையாளர் சிலருடன் நான் ராதாரவி வீட்டு திருமண விழாவுக்குச் சென்றிருந்தோம். கலைவாணர் அரங்கில் நடைபெறும் அவ்விழாவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருவதாக இருந்ததால் எல்லா நடிகர்களும் அக் கூட்டத்தில் நீந்தி மேடையை அடைவதற்கு ஒரே ஆபத்பாந்தவனாக டைமண்ட் பாபுவைத்தான் நம்பினார்கள். மனிதர் ஒரு கட்டத்துக்கு மேல் சோர்ந்துவிட்டார்.
"இனி தாக்குப் பிடிக்க முடியாது'' கிளம்பிவிட்டார். நாங்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தோம்.
அப்போது இயக்குநர் ஆர்.கே. செல்வமணியிடமிருந்து டைமண்ட் பாபுவுக்கு போன். "பாபு... எங்க இருக்கீங்க? நானும் ரோஜாவும் கல்யாணத்துக்கு வந்திருக்கோம்'' என்றார் செல்வமணி.
"அப்படியா? என்ட்ரன்ஸ்லயே இருங்க. இதோ வந்திட்றேன்'' என்றார் பாபு.
வடபழனியில் இருந்து எப்படி கலைவாணர் அரங்கத்துக்குப் போக முடியும்? எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் எங்களிடம் ஏதோ பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்வமணியிடமிருந்து போன்.
"எங்க இருக்க பாபு..? இங்க முரளி வந்தாரு. அவர் கூட உள்ள வந்துட்டேன்''
"அப்படியா? சரி.. சரி. இப்பத்தான் தேவா வந்தாரு... அவரை அனுப்பிவைக்க வெளிய
வந்துட்டேன். சரி போங்க நான் உள்ள வந்திட்றேன்...''
கொஞ்சநேரம் சகஜமாக எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் செல்வமணி...
"ஸ்டேஜ்லதான் நிக்கிறேன்...''
"நான் உங்களைப் பார்த்துக்கிட்டுத்தான் நிக்கிறேன். இறங்கி வாங்க... உங்க கார்கிட்ட வந்திட்றேன்...''
பாபு மறுபடியும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மீண்டும் போன்... "கார் கிட்ட வந்துட்டேன் பாபு'' என்றார் ரோஜா.
"மினிஸ்டர் வந்துட்டார்... ரெண்டு நிமிஷம் நிக்க முடியுமா? இல்ல நீங்க கிளம்பிடுங்க... காலைல வந்து பாக்றேன்.'' என்றார் பாபு கூலாக.
"சரி பாபு. ரொம்ப தாங்க்ஸ்... நாளைக்குப் பேசறேன்'' என்றபடி ரோஜாவும் போனை வைத்தார்.
சம்பவ இடத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் ரோஜாவையும் செல்வமணியையும் அவர் அழகாக அழைத்து வந்து வழியனுப்பி வைத்த அழகு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இப்படியான ஆதரவுக்காகத்தான் சினிமா உலகினருக்கு டைமண்ட் பாபு தேவைப்படுகிறார். சாரிங்க நான் அப்பவே கிளம்பிட்டேனே என்று அவர் கூறியிருந்தால் ரோஜாவும் செல்வமணியும் அந்தக் கூட்டத்தில் உள்ளே நுழைய பயந்து திரும்பிப் போய் இருக்கலாம். குறைந்த பட்சம் மனதில் தடுமாற்றம் எற்பட்டிருக்கும். உளவியல் ரீதியாக அவர்களை செலுத்தியது பெரிய சாதனைதான். தெனாலி என்ற விகடகவியின் புத்திசாலிதனத்தோடு ஒப்பிட்டால் தப்பில்லைதான்.
கூவாத கோழி!
"கோழிகூவுது' விஜி என்று அறியப்பட்ட விஜியை முதல் முதலில் சந்தித்தது கோடம்பாக்கத்தில் மாதவன் நாயர் தெருவில் அவருடைய இல்லத்தில். சினிமா நிருபராக என் ஆரம்ப சந்திப்பு அது.
ஒரு சினிமா நடிகையை இவ்வளவு அருகில் நேரில் பார்க்கிறோம் என்ற பரவசம்தான் அதிகமாக இருந்தது. நடிகர்களை வெள்ளித்திரையிலும் மவுண்ட்ரோடு பேனர்களிலும் பிரம்மாண்டமாக 20 அடி 30 அடி உயர உருவங்களாகப் பார்த்துவிட்டு நேரில் அவர்களைப் பார்த்து நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள் என்கிற வியப்பும் அதில் இருந்தது. பலர் நான் எதிர் பார்த்ததைவிட சிறிய உருவமாக இருந்தார்கள். சுடிதாரில் சின்னப் பெண்ணாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இருந்தார் விஜி.
சினிமா நட்சத்திரங்களின் வீடுகளும் "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் காட்டியது போல ஒரே மாடிக்கு இரண்டு படிவரிசை வைத்துக் கட்டியது போல இல்லாமல் இருந்தது. பலர் அபார்ட்மென்ட்டில் குடியிருந்தார்கள். விஜியும்.
அடுத்த சில ஆண்டுகளில் அவர் முதுகில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிபட்டார்.
மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க பொறுப்பில் இருந்ததால் உடனடியாகத் தலையிட்டு மருத்துவ ரீதியான உதவிகளுக்கு ஏற்பாடு செய்தார். அடுத்து அவர் நடித்த படம் ஒன்றிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
அடுத்தடுத்து விஜிக்கு விஜயகாந்த் செய்த இந்த உதவிகளைத் தொகுத்து விஜி நெகிழ்ந்து போகிற மாதிரி.. ஒரு செய்தி எழுதினேன்.
இதழ் வெளியான அன்று கடுங்கோபமாக அவரிடம் இருந்து போன். இதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்றேன். என்னையும் அவரையும் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என்றார். உதவி செய்வது எப்படி இணைத்து எழுதுவதாக இருக்கும் என்றேன்.
அடுத்து "விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு தந்தார் என்று எப்படி எழுதலாம்'' என்று சத்தம் போட்டார். "கொஞ்சம்கூட தகுதி இல்லாதவர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுத்ததாக எழுதலாம். எனக்கு அந்த வேடம் பொருத்தமாக இருந்ததால் நடிக்க அழைத்திருக்கிறார். நான் நடித்தால் அந்தக் கேரக்டர் பேசப்படும் என்பதால்தான் நடிக்க வைத்திருக்கிறார்.'' என்றார்.
இவ்வளவு சென்ஸிட்டீவாக இருக்கிறாரே என்று நினைத்தேன். சினிமாவில் சில வார்த்தை பிரயோகங்களை அப்படியே எழுதி பழகிவிட்டதுதான் காரணம். "இயக்குநர் அமீர் கஞ்சா கருப்புவுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்' என்று எழுதுவது பழக்க தோசமான வாக்கியச் சேர்ப்புதான். விஜி அதற்கு இந்த அளவுக்கு வருத்தப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் மற்ற நடிகைகள் இப்படி வருத்தமோ, கோபமோ படவில்லை என்று யோசனையாகிவிட்டது.
அடுத்த சில மாதங்களில் விஜி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தந்தை தற்போது திருவண்ணாமலையில் விஜியின் பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்திவருகிறார்.
சண்டையும் சமாதானமும்!
விஜய் நடித்த "மின்சார கண்ணா' படத்தை திருட்டு வீடியோ எடுத்தவரை கையும் களவுமாகப் பிடித்துவிட்டதாக பத்திரிகையாளரிடம் அறிவித்தார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன். திருட்டுவிடியோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் மருமகன் மீது. அவசரப்பட்டு பழி சுமத்துவதாகச் சொன்ன ஒரு பத்திரிகையாளர் மீது கோபப்பட்டார் சந்திரசேகரன்.
கே.பி.யின் மருமகன் கந்தசாமியோ, தான் சினிமா நிகழ்ச்சிகளை விடியோ எடுத்து வெளிநாட்டில் சில டி.வி. சானல்களில் ஒளிபரப்புவதாகச் சொன்னார். சென்னை உதயம் தியேட்டரில் "மின்சார கண்ணா' திரையிட்ட அன்று ரசிகர்களின் கொண்டாட்டத்தைத் தான் படமாக்கினேன். தியேட்டருக்குள் ரசிகர்கள் விஜய் தோன்றும் காட்சியில் நடனமாடுவதாகக் கூறவே கேமிராமேன் உள்ளே சென்று பதிவு செய்ய ஆரம்பித்தார்'' என்று விளக்கம் அளித்தார்.
யார் சொன்னது உண்மையென்பது ஒரு பக்கம். இதில் தேவையில்லாமல் பாலசந்தர் தலை உருண்டது. பாலசந்தரின் மருமகன் திருட்டு விசிடி தயாரித்ததாகவே எழுதினார்கள். இதனால் பாலசந்தர் கண்டனம் தெரிவிக்க வேண்டியதானது. பதிலுக்கு சந்திரசேகரன் பாலசந்தரைத் தாக்க... இந்த நேரத்தில் பாலசந்தரைச் சந்தித்தபோது, யார் யாரை பழி சொல்வது என்று விவஸ்தை வேண்டாமா.. வேதனைப்பட்டார். சந்திரசேகரனைச் சந்தித்தபோதும் படத்தைத் திருட்டுத்தனமா காப்பி பண்ணிட்டு எப்படிலாம் நாடகம் ஆட்றாங்க என்று கொதித்தார். இரண்டு தரப்பிலும் அப்படியொரு காயம். இணையவே முடியாத இரண்டு துருவங்களாக மாறிப் போய்விட்டதைக் கண்டேன்.
விரைவிலேயே பாலசந்தர் தயாரிப்பில் விஜய் நடித்த "திருமலை' என்ற படம் உருவாவதாக அறிவிப்பு வெளியானது. சண்டைக்கு ஒரு காரணம் இருந்தது போல சமாதானத்துக்கு ஒரு காரணமும் சொல்லப்படவேயில்லை இரண்டு தரப்பிலும்.
திங்கள், பிப்ரவரி 09, 2009
திரைக்குப் பின்னே-19
தோன்றி மறையும் வேடங்கள்
சில திரைப்படங்களில் நம் மனதில் பதித்துக் கொள்ள முடியாத சிறிய வேடத்தில் சில கதாபாத்திரங்கள் வந்து போகும். "அதோ அந்த சிவப்புச் சட்டை' என்று அடையாளம் காட்டுவதற்குள் அந்தக் காட்சி மறைந்துவிடும். நடிக்கும் துடிப்பில் கேமிராமேன் ரவிவர்மன், இயக்குநர் ஷங்கர் என பலர் அப்படி நடித்தவர்கள்தான். படிப்படியாக அப்படி நடித்து நாமும் ஒரு கதாநாயகனாகிவிடவேண்டும் என்றோ காமெடியனாகிவிட வேண்டும் என்றோ அந்தக் குறுகிய காட்சிக்குள் நடிப்புப் பிரயாசையை வெளிப்படுத்துவார்கள்.
விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும் ' படத்தில் டவுசர் பாண்டி என்ற படத்தில் நடித்தவரை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அப் படத்தில் ராயப்பேட்டை மணிகூண்டுக்கு வழி கேட்டவனுக்கு உட்கார்ந்த இடத்திலேயே மெட்ராஸ் பாஷையில் ஊரையெல்லாம் சுற்றிக்காட்டுவார். வேடிக்கை என்னவென்றால் மணிகூண்டுக்கு அருகில் இருந்துதான் வழி கேட்டிருப்பான் அவன். கடைசியில் "இம்மா நேரம் மெட்ராஸ சுத்திக் காட்டினதுக்கு அம்பது ரூபா எடு'' என்பார் டவுசர் பாண்டி.
இரண்டே நிமிடம் இடம்பெற்றாலும் இந்தக் காட்சியில் அவருடைய மெட்ராஸ் பாஷையில் வசீகரிக்கப்பட்டு விமர்சனத்தில் அதை ரசித்து எழுதியிருந்தேன்.
அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. வெளியூரில் அடுத்து ஏதோ படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய நண்பர் பாவை என்பவர் மூலம் நன்றி சொன்னார். சில மாதம் கழித்து பாவை என்ற அந்த நண்பர் வந்தார். ""டவுசர் பாண்டி இறந்துட்டார் ஸர்'' என்றார்.
"அடடா எப்படி?'' என சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.
"திருநெல்வேலியில் ஏதோ படப்பிடிப்பு. பஸ் நடுவழியில் பிரேக் டவுன். பழுது பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியும் காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேறு பஸ்ஸுக்காக சாலைக்கு வந்திருக்கிறார். ஏதோ லாரியோ,
பஸ்ஸோ அடித்துவிட்டுப் போய்விட்டது சார்'' "அடக்கொடுமையே.. என்றைக்கு நடந்தது? யாருக்குமே தெரியவில்லையே?'' "என்னைக்கு நடந்ததுனு யாருக்குமே தெரியாது சார்'' என்று கூறிவிட்டு அடுத்த தகவலைச் சொன்னார். அவர் பாக்கெட்ல நடிகர் சங்க அடையாள அட்டை இருந்தது. ஆனால் அதில் அவருடைய பழைய வீட்டு முகவரிதான் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இவர் சினிமாவுக்காக டவுசர் பாண்டி ஆன பெயர்தான் தெரியும். அடையாள அட்டையிலோ அவருடைய சொந்த பெயரில்தான் (பட்டாபி என்று நினைக்கிறேன்) தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் போலீஸôர் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு
இல்லை என்று கூறிவிட்டார்கள். அனாதைப் பிணம் என்று அடக்கம் செய்துவிட்டார்கள். அவருடைய வீட்டிலோ கணவர் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று இருந்துவிட்டார்கள்.''
இப்படியும் நடக்குமா என்று இருந்தது. "மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை தரவே சிரமப்படும் குடும்பம்' என்றார். அடுத்து நான் எஸ்.ஏ. சந்திரசேகரனைச் சந்தித்த போது இந்தத் தகவலைச் சொன்னேன். அவருடைய மகன் படத்தில் நடித்தவர் என்ற முறையில் "ஏதாவது உதவி செய்ய முடியுமா பாருங்கள்' என்றேன். அப்போதுதான் விவரம் தெரிந்து வருத்தப்பட்டார். உடனடியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். மணிகூண்டுக்கு வழிகாட்டியவரின் குடும்பத்துக்கு வழிகாட்டினார் எஸ்.ஏ.சி. என நன்றியால் நெகிழ்ந்தேன்.
ராதிகா அடித்த கமெண்ட்!
பளீர், பளீரென பதில் அளிப்பதில் ராதிகா "அரசி'. துணிச்சலும் நகைச்சுவையும் தொனிக்கும் அதில். அவருடைய சொந்த வாழ்க்கை, பொது பிரச்சினைகள் அனைத்திலும் அவருக்கென திடமான பார்வை உண்டு. தேவாவின் மகள் திருமணத்தின் போது திரையுலகினர் பலரும் நம்ம வீட்டுக் கல்யாணம்போல குழுமியிருந்தனர். பொதுவாக திருமணங்களின் போது உறவினர் சூழ பெண்கள் சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தை நட்சத்திரங்கள் மத்தியிலும்
பார்த்தேன். ராதிகாவைச் சுற்றி அப்படியொரு கூட்டம். பொதுவாக "ஹேராம்' படம் எப்படியிருக்கிறது என்று ராதிகாவை யாரோ விசாரித்தார்கள். அவரும் "நல்ல படம்தான். ஆனால் தமிழில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கமெண்ட் அடித்தார்.
எல்லோரும் சிரித்தனர்.
படத்தில் ஆங்கிலம், வங்காளம், உருது, மராட்டி, தெலுங்கு, பஞ்சாபி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளும் இடம்பெற்றிருக்கும். ஒரு தேசிய படம் அதற்கான லட்சணத்தோடு இருந்தது. அதை கமல் தவிர்த்திருக்க முடியாது. அதை ராதிகா கமெண்ட் அடித்ததிலும் தவறு இல்லை. அதற்கு மற்றவர் சிரித்ததிலும் தவறு இல்லை. அதை நான் குமுதத்தில் எழுதியதுதான் தவறு. இதழ் வெளியான அன்று ராதிகா போன் செய்தார். முதலில் "நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்றார். "அருகிருந்து நான் அதைக் கேட்டேன்' என்று உறுதியாகச் சொன்னேன். "அது நான் அளித்த பேட்டியா? எங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை இப்படி எழுதினால் அது வீணாக சங்கடத்தை ஏற்படுத்துவதாகாதா?' என்றார். அதன் பிறகு அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டோம்.
மத்தள இடி!
ஒரு பேட்டிக்கு இரண்டுவிதமான பொல்லாப்புகளைச் சந்திக்க நேரும் என்பதற்கு உதாரணம் இது. யாரைப் பேட்டி கண்டேனோ அவராலும் சபிக்கப்பட்டு, யாரை குறை சொன்னோமோ அவராலும் சபிக்கப்பட்ட சம்பவம் அது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான
பாலுமகேந்திராவின் "கதை நேரம்' தீவிர பாராட்டுதலுக்கு ஆளாகியிருந்த நேரம். முழுக்க முழுக்க அத் தொடரைப் பாராட்டி பாலுமகேந்திராவிடம் கேள்விகள் கேட்டிருந்தேன். பேட்டி மிகச் சிறப்பாக வெளியாகியிருந்தது.
பத்திரிகை வெளியான அன்று அலுவலகத்தில் பாலுமகேந்திராவிடம் இருந்து போன் என்றதும் பாராட்டு மழையில் நனையப் போகும் ஆயத்தத்தோடு ரிஸீவரை எடுத்தேன். "அதனால்தான் பேட்டிக்குத் தயங்கினேன். இப்படிச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே
இல்லை. என்னதான் இலக்கியம் பேசினாலும் உங்கள் பத்திரிகை புத்தியைக்காட்டி விட்டீர்கள்'' என்று அடுக்கடுக்காகத் தாக்க ஆரம்பித்தார். "என்ன சார் பேட்டி நன்றாகத்தானே வந்திருக்கிறது எதற்காகக் கோபப்படுகிறீர்கள்?'' என்றேன்.
"எதற்காக அந்தப் போட்டோவை பிரசுரித்தீர்கள். இதனால் என் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?'' என்று போனை வைத்துவிட்டார். அந்த நிமிஷம் வரை நான் இதழைப் பார்க்கவில்லை. நான் எழுதியதைப் பிழைத்திருத்தம் பார்த்து தந்ததோடு சரி. குமுதத்தில் நிருபர்களை டிசைனிங் செக்ஷனுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். நாம் கொடுத்தது என்னவாக வெளிவரப்போகிறது என்கிற தவிப்பு, பிரசவ வார்டில் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு ஒப்பானது. அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினேன்.
பாலுமகேந்திராவும் மவுனிகாவும் சேர்ந்திருக்கிற படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். அதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ஏற்கெனவே அவர்களைப் பற்றிய கிசு கிசுக்கள் "போதும்' என்கிற அளவுக்கு எழுதி ஓய்ந்துவிட்ட நிலையில் இது அவருக்குப் பெரிய வேதனையான விஷயம்தான்.போனை வைத்துவிட்டு சோர்வோடு இருக்கையில் அமர்ந்தேன். உடனே அடுத்த போன். செவன்த் சேனல் நாராயணன் பேசினார்.
"ஒரு டி.வி. தொடரும் உருப்படியாக இல்லை என்று எப்படி எழுதலாம். எங்கள் நிறுவனம் தயாரித்த தொடர்களைப் பார்த்திருக்கிறீர்களா?... தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் வித்தியாசமாகத் தொடர்கள் தயாரித்தவர்கள் நாங்கள்தான்... கதை நேரம் மட்டும்தான் சிறப்பான தொடர் என்றால் மீதி பேரெல்லாம் இளிச்சவாயன்களா?'' என்று போடு போடு என போட்டார். பாலுமகேந்திராவின் கோபத்தில் பக்குவப்பட்டுப் போயிருந்ததால் தொடர்ந்து ஏழெட்டு சாரிகளை உதிர்த்துவிட்டு உட்கார்ந்தேன். சில நேரங்களில் ஆபிஸிலிருந்தும் திட்டுகள் விழும். மூன்று பக்கமும் அடிவாங்கும் மத்தளம்போல.
சில திரைப்படங்களில் நம் மனதில் பதித்துக் கொள்ள முடியாத சிறிய வேடத்தில் சில கதாபாத்திரங்கள் வந்து போகும். "அதோ அந்த சிவப்புச் சட்டை' என்று அடையாளம் காட்டுவதற்குள் அந்தக் காட்சி மறைந்துவிடும். நடிக்கும் துடிப்பில் கேமிராமேன் ரவிவர்மன், இயக்குநர் ஷங்கர் என பலர் அப்படி நடித்தவர்கள்தான். படிப்படியாக அப்படி நடித்து நாமும் ஒரு கதாநாயகனாகிவிடவேண்டும் என்றோ காமெடியனாகிவிட வேண்டும் என்றோ அந்தக் குறுகிய காட்சிக்குள் நடிப்புப் பிரயாசையை வெளிப்படுத்துவார்கள்.
விஜய் நடித்த "துள்ளாத மனமும் துள்ளும் ' படத்தில் டவுசர் பாண்டி என்ற படத்தில் நடித்தவரை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அப் படத்தில் ராயப்பேட்டை மணிகூண்டுக்கு வழி கேட்டவனுக்கு உட்கார்ந்த இடத்திலேயே மெட்ராஸ் பாஷையில் ஊரையெல்லாம் சுற்றிக்காட்டுவார். வேடிக்கை என்னவென்றால் மணிகூண்டுக்கு அருகில் இருந்துதான் வழி கேட்டிருப்பான் அவன். கடைசியில் "இம்மா நேரம் மெட்ராஸ சுத்திக் காட்டினதுக்கு அம்பது ரூபா எடு'' என்பார் டவுசர் பாண்டி.
இரண்டே நிமிடம் இடம்பெற்றாலும் இந்தக் காட்சியில் அவருடைய மெட்ராஸ் பாஷையில் வசீகரிக்கப்பட்டு விமர்சனத்தில் அதை ரசித்து எழுதியிருந்தேன்.
அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. வெளியூரில் அடுத்து ஏதோ படப்பிடிப்பில் இருந்ததால் அவருடைய நண்பர் பாவை என்பவர் மூலம் நன்றி சொன்னார். சில மாதம் கழித்து பாவை என்ற அந்த நண்பர் வந்தார். ""டவுசர் பாண்டி இறந்துட்டார் ஸர்'' என்றார்.
"அடடா எப்படி?'' என சாதாரணமாகத்தான் விசாரித்தேன்.
"திருநெல்வேலியில் ஏதோ படப்பிடிப்பு. பஸ் நடுவழியில் பிரேக் டவுன். பழுது பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எப்படியும் காலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேறு பஸ்ஸுக்காக சாலைக்கு வந்திருக்கிறார். ஏதோ லாரியோ,
பஸ்ஸோ அடித்துவிட்டுப் போய்விட்டது சார்'' "அடக்கொடுமையே.. என்றைக்கு நடந்தது? யாருக்குமே தெரியவில்லையே?'' "என்னைக்கு நடந்ததுனு யாருக்குமே தெரியாது சார்'' என்று கூறிவிட்டு அடுத்த தகவலைச் சொன்னார். அவர் பாக்கெட்ல நடிகர் சங்க அடையாள அட்டை இருந்தது. ஆனால் அதில் அவருடைய பழைய வீட்டு முகவரிதான் இருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு இவர் சினிமாவுக்காக டவுசர் பாண்டி ஆன பெயர்தான் தெரியும். அடையாள அட்டையிலோ அவருடைய சொந்த பெயரில்தான் (பட்டாபி என்று நினைக்கிறேன்) தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் போலீஸôர் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அங்கு
இல்லை என்று கூறிவிட்டார்கள். அனாதைப் பிணம் என்று அடக்கம் செய்துவிட்டார்கள். அவருடைய வீட்டிலோ கணவர் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று இருந்துவிட்டார்கள்.''
இப்படியும் நடக்குமா என்று இருந்தது. "மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை தரவே சிரமப்படும் குடும்பம்' என்றார். அடுத்து நான் எஸ்.ஏ. சந்திரசேகரனைச் சந்தித்த போது இந்தத் தகவலைச் சொன்னேன். அவருடைய மகன் படத்தில் நடித்தவர் என்ற முறையில் "ஏதாவது உதவி செய்ய முடியுமா பாருங்கள்' என்றேன். அப்போதுதான் விவரம் தெரிந்து வருத்தப்பட்டார். உடனடியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவினார். மணிகூண்டுக்கு வழிகாட்டியவரின் குடும்பத்துக்கு வழிகாட்டினார் எஸ்.ஏ.சி. என நன்றியால் நெகிழ்ந்தேன்.
ராதிகா அடித்த கமெண்ட்!
பளீர், பளீரென பதில் அளிப்பதில் ராதிகா "அரசி'. துணிச்சலும் நகைச்சுவையும் தொனிக்கும் அதில். அவருடைய சொந்த வாழ்க்கை, பொது பிரச்சினைகள் அனைத்திலும் அவருக்கென திடமான பார்வை உண்டு. தேவாவின் மகள் திருமணத்தின் போது திரையுலகினர் பலரும் நம்ம வீட்டுக் கல்யாணம்போல குழுமியிருந்தனர். பொதுவாக திருமணங்களின் போது உறவினர் சூழ பெண்கள் சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தை நட்சத்திரங்கள் மத்தியிலும்
பார்த்தேன். ராதிகாவைச் சுற்றி அப்படியொரு கூட்டம். பொதுவாக "ஹேராம்' படம் எப்படியிருக்கிறது என்று ராதிகாவை யாரோ விசாரித்தார்கள். அவரும் "நல்ல படம்தான். ஆனால் தமிழில் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கமெண்ட் அடித்தார்.
எல்லோரும் சிரித்தனர்.
படத்தில் ஆங்கிலம், வங்காளம், உருது, மராட்டி, தெலுங்கு, பஞ்சாபி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளும் இடம்பெற்றிருக்கும். ஒரு தேசிய படம் அதற்கான லட்சணத்தோடு இருந்தது. அதை கமல் தவிர்த்திருக்க முடியாது. அதை ராதிகா கமெண்ட் அடித்ததிலும் தவறு இல்லை. அதற்கு மற்றவர் சிரித்ததிலும் தவறு இல்லை. அதை நான் குமுதத்தில் எழுதியதுதான் தவறு. இதழ் வெளியான அன்று ராதிகா போன் செய்தார். முதலில் "நான் அப்படிச் சொல்லவே இல்லை' என்றார். "அருகிருந்து நான் அதைக் கேட்டேன்' என்று உறுதியாகச் சொன்னேன். "அது நான் அளித்த பேட்டியா? எங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை இப்படி எழுதினால் அது வீணாக சங்கடத்தை ஏற்படுத்துவதாகாதா?' என்றார். அதன் பிறகு அந்தச் செய்திக்கு மறுப்பு வெளியிட்டோம்.
மத்தள இடி!
ஒரு பேட்டிக்கு இரண்டுவிதமான பொல்லாப்புகளைச் சந்திக்க நேரும் என்பதற்கு உதாரணம் இது. யாரைப் பேட்டி கண்டேனோ அவராலும் சபிக்கப்பட்டு, யாரை குறை சொன்னோமோ அவராலும் சபிக்கப்பட்ட சம்பவம் அது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான
பாலுமகேந்திராவின் "கதை நேரம்' தீவிர பாராட்டுதலுக்கு ஆளாகியிருந்த நேரம். முழுக்க முழுக்க அத் தொடரைப் பாராட்டி பாலுமகேந்திராவிடம் கேள்விகள் கேட்டிருந்தேன். பேட்டி மிகச் சிறப்பாக வெளியாகியிருந்தது.
பத்திரிகை வெளியான அன்று அலுவலகத்தில் பாலுமகேந்திராவிடம் இருந்து போன் என்றதும் பாராட்டு மழையில் நனையப் போகும் ஆயத்தத்தோடு ரிஸீவரை எடுத்தேன். "அதனால்தான் பேட்டிக்குத் தயங்கினேன். இப்படிச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே
இல்லை. என்னதான் இலக்கியம் பேசினாலும் உங்கள் பத்திரிகை புத்தியைக்காட்டி விட்டீர்கள்'' என்று அடுக்கடுக்காகத் தாக்க ஆரம்பித்தார். "என்ன சார் பேட்டி நன்றாகத்தானே வந்திருக்கிறது எதற்காகக் கோபப்படுகிறீர்கள்?'' என்றேன்.
"எதற்காக அந்தப் போட்டோவை பிரசுரித்தீர்கள். இதனால் என் வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?'' என்று போனை வைத்துவிட்டார். அந்த நிமிஷம் வரை நான் இதழைப் பார்க்கவில்லை. நான் எழுதியதைப் பிழைத்திருத்தம் பார்த்து தந்ததோடு சரி. குமுதத்தில் நிருபர்களை டிசைனிங் செக்ஷனுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். நாம் கொடுத்தது என்னவாக வெளிவரப்போகிறது என்கிற தவிப்பு, பிரசவ வார்டில் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு ஒப்பானது. அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினேன்.
பாலுமகேந்திராவும் மவுனிகாவும் சேர்ந்திருக்கிற படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். அதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். ஏற்கெனவே அவர்களைப் பற்றிய கிசு கிசுக்கள் "போதும்' என்கிற அளவுக்கு எழுதி ஓய்ந்துவிட்ட நிலையில் இது அவருக்குப் பெரிய வேதனையான விஷயம்தான்.போனை வைத்துவிட்டு சோர்வோடு இருக்கையில் அமர்ந்தேன். உடனே அடுத்த போன். செவன்த் சேனல் நாராயணன் பேசினார்.
"ஒரு டி.வி. தொடரும் உருப்படியாக இல்லை என்று எப்படி எழுதலாம். எங்கள் நிறுவனம் தயாரித்த தொடர்களைப் பார்த்திருக்கிறீர்களா?... தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் வித்தியாசமாகத் தொடர்கள் தயாரித்தவர்கள் நாங்கள்தான்... கதை நேரம் மட்டும்தான் சிறப்பான தொடர் என்றால் மீதி பேரெல்லாம் இளிச்சவாயன்களா?'' என்று போடு போடு என போட்டார். பாலுமகேந்திராவின் கோபத்தில் பக்குவப்பட்டுப் போயிருந்ததால் தொடர்ந்து ஏழெட்டு சாரிகளை உதிர்த்துவிட்டு உட்கார்ந்தேன். சில நேரங்களில் ஆபிஸிலிருந்தும் திட்டுகள் விழும். மூன்று பக்கமும் அடிவாங்கும் மத்தளம்போல.
திங்கள், பிப்ரவரி 02, 2009
திரைக்குப் பின்னே -18
கதை சொல்லி!
மணிகண்டன் என்றொரு பள்ளித்தோழன். சினிமா பார்த்துவிட்டு வந்தால், மறுநாள் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அதை அப்படியே கதையாகச் சொல்லுவான். மனத்திரையில் காட்சிகள் ஓடும். ’ஷோலே' படத்தின் கதையை அவன் சொன்னது மாதிரி விறுவிறுப்பில் அந்தப்படம் உருவாக்கப்படவில்லை என்பது என் சொந்த அனுபவம். அவன் நடித்துக்காட்டுவான், பாடுவான். அமிதாப், அந்த ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடும்போது தியேட்டரில் தன் சீட்டுக்கடியில் சில்லறை விழுந்ததாக எல்லோரும் தேடுவார்கள் என்பான். உண்மையில் பத்துவருடம் கழித்து நான் படம் பார்த்தபோது மணிகண்டன் சொன்ன கதை மனத்திரையிலும் ஜி.பி.சிப்பி எடுத்தபடம் விழித்திரையிலும் ஓடிக் கொண்டிருந்தது. மனதில் இருந்த பிரமாண்டம் திரையில் பல இடங்களில் படுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.
கதை சொல்லுவது ஒரு பிரமிக்க வைக்கும் கலை.
நிலா வெளிச்சத்தில் பாட்டிகள் சொன்ன பேய்க் கதைகளின் பயங்கரங்கள் சில ஹாலிவுட் பேய்ப் படங்களைப் பார்க்கும்போதுகூட ஏற்படுவதில்லை.
எனக்குத் தெரிந்து இயக்குநர்கள் கே. பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கதை சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
மைசூர் அரண்மனையில் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படப்பிடிப்பு.
இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் சக்கரவர்த்தி எனப் பாராட்டப்பட்ட கே.பாக்யராஜின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சத்தைப் பார்த்தேன். பிரமாண்டமான அந்த அரண்மனையின் படிக்கட்டுகளில் எம்.ஜி.வல்லபன், சினி நியூஸ் செல்வம், ஜெமினி சினிமா வெற்றி உள்ளிட்ட 10,12 பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அப் படத்தின் கதையைக் கேட்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை அப்படியே சொன்னார். சொல்லி முடித்துவிட்டு நன்றாக இருக்கிறதா என்றார். படத்தில் எத்தனை கேரக்டர்கள் உண்டோ அத்தனை சுபாவங்களோடும் கதையின் அத்தனை திருப்புமுனையையும் அவர் சொன்னவிதம் எங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றோம்.
ஆனால் கே.பாக்யராஜுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு படம் தாமதமாகவும் போதிய விளம்பரமின்றியும் வெளியானது. சுமாரான பேச்சுதான். படம் பார்த்தோம். மனதில் இருந்த துல்லியம் திரையில் ஏதோ தொலைந்து போயிருந்தது.
புதுமைப் பெண்!
’மகளிர் மட்டும்' படப்பிடிப்பில்தான் முதன் முதலில் ரேவதியைப் பார்த்தேன். விஜய வாகினி ஸ்டுடியோவில் கமலா தியேட்டருக்கு எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதிலேயே செட் அமைத்துப் படப்பிடிப்பு நடந்தது.
அந்தப் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனோடு அவர் சிறிய முரண்பாடு கொண்டிருந்த நேரத்தில் நான் அவரைச் சந்தித்தேன். படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹிணி ஆகிய மூவரும் நாசரின் ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து வியூகம் அமைப்பார்கள். அது தெரியாமல் நாசர் அந்த மூவரும் தன் வழிக்கு வந்துவிட்டதாக நினைத்து "கறவைமாடு மூணு, காளை மாடு ஒண்ணு'' என்று உற்சாகமாகப் பாடுவார். கறவை மாடு என்ற வார்த்தையைப் பாடல் வரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் ரேவதியின் வாதம்.
ஆணாதிக்கவாதியின் சிந்தனையாக அப்பாடல் வெளிப்படுவதால் இறுதியில் ஒரு வழியாக சம்மதித்தார்.
’பான்யன்' அமைப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அங்கிருந்து காணாமல் போயிருந்த சமயத்தில் எக்மோர் ரயில் நிலையம் அருகே அவர்கள் இருந்ததை அறிந்து அவரே நேரில் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்ததை அறிந்து அவர் மீது மேலும் மரியாதை கூடியது. தென்சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது எழுத்தாளர் மற்றும் பத்திரிகைத் தொடர்பாளர் சுராவுடன் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தேன். அவர் நடித்த படத்தின் தலைப்பு போலவே அவர் எப்போதும் புதுமைப் பெண்ணாக இருந்தார்.
சமீபத்தில் அண்ணாநகரில் ஒரு கடையில் அவர் ஏதோ பொருள்கள் வாங்கியிருக்கிறார். அதை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ரேவதி "கொஞ்ச நேரம் இருங்கள்'' என்று கூறிவிட்டு காரில் இருந்து ஒரு துணிப் பையைக் கொண்டு வந்து கொடுத்து அதில் அந்தப் பொருள்களை எடுத்துச் சென்றார். என் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.
புதுமைப் பெண்கள் எந்த இடத்திலும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
புத்த மீனா!
திரைத்துறையில் பிரபலமாகிற நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கிளியின் ஞாபகம் வரும். அதிலும் குழந்தையிலிருந்தே பிரபலமாகிவிட்ட நட்சத்திரங்களுக்கு அம்மா சொல்கிற உலகம்தான் தெரியும்.
மீனாவுக்கு இன்னும்கூட மழலை மாறாத குரல்தான். இப்போதுகூட அவர் "ரஜினி அங்கிள்” என்று உச்சரித்தால், ’அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் சாயல்தான் தெரியும் அந்தக் குரலில்.
’நாட்டாமை', ’முத்து' என வெள்ளிவிழா நாயகியாக உலாவந்து கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். தினமணியில் எட்டுவாரம் வெளியான அந்தத் தொடருக்கு தில்லானா தில்லானா என்று தலைப்பிட்டவர் அப்போது தினமணியின் இதழாசிரியராக இருந்த ஞாநி.
தொடருக்காக அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பள்ளி வயது ஞாபகங்கள் பற்றி நிறைய பேசினார். பள்ளியின் மரக்கிளையில் ஏறி விளையாடியதை அவர் கிட்டத்தட்ட நடித்துக் காட்டினார். அதை நினைவுபடுத்திக் கொள்வதில் அத்தனை சந்தோஷம். அவருடைய பள்ளி முதல்வர் அதைப் பார்த்துவிட்டு "ஆர் யூ எ மங்கி?” என்று திட்டியதைச் சொல்லிச் சிரித்தார்.
எவ்வளவு பெரிய நடிகையாக நாடே வியந்து கொண்டிருக்க அவருடைய மகிழ்ச்சி அந்தப் பள்ளி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது.
என்னுடைய குறுக்குப் புத்தி விழித்தது. அவரைப் பற்றி வெளியாகிக் கொண்டிருந்த கிசு கிசு பற்றிச் சொன்னேன். அதற்கு அவருடைய ரியாக்ஷனைக் கவனிக்க வேண்டும் என்பது என் நோக்கம்.
சத்தியமாக அதைப்பற்றி அவருக்குத் தெரியவே இல்லை. அவரைப் பற்றி நல்லவிதமாக வெளியாகும் செய்திகள் மட்டுமே அவருடைய பார்வைக்குப் போகும் என்று தெரிந்தது. "என்னைப் பற்றி இப்படியெல்லாமா எழுதுகிறார்கள்? ஏன் அப்படி எழுதுகிறார்கள்'' என்று கேட்டார். அதில் நடிப்பில்லை. முதுமை, நோய், மரணம் பற்றித் தெரியாத சித்தார்த்தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதையெல்லாம் முதலில் அறிந்த போது அவன் புத்தனானதாக ஒரு கதை உண்டு. மீனாவும் அப்படியொரு நிலையில்தான் இருப்பதாக ஒரு கணம் திகைத்தேன். அடுத்து அவரைச் சந்திக்கவில்லை. தொடரையும் நிறுத்திவிட்டேன்.
மணிகண்டன் என்றொரு பள்ளித்தோழன். சினிமா பார்த்துவிட்டு வந்தால், மறுநாள் ஏறத்தாழ ஒரு மணிநேரம் அதை அப்படியே கதையாகச் சொல்லுவான். மனத்திரையில் காட்சிகள் ஓடும். ’ஷோலே' படத்தின் கதையை அவன் சொன்னது மாதிரி விறுவிறுப்பில் அந்தப்படம் உருவாக்கப்படவில்லை என்பது என் சொந்த அனுபவம். அவன் நடித்துக்காட்டுவான், பாடுவான். அமிதாப், அந்த ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிடும்போது தியேட்டரில் தன் சீட்டுக்கடியில் சில்லறை விழுந்ததாக எல்லோரும் தேடுவார்கள் என்பான். உண்மையில் பத்துவருடம் கழித்து நான் படம் பார்த்தபோது மணிகண்டன் சொன்ன கதை மனத்திரையிலும் ஜி.பி.சிப்பி எடுத்தபடம் விழித்திரையிலும் ஓடிக் கொண்டிருந்தது. மனதில் இருந்த பிரமாண்டம் திரையில் பல இடங்களில் படுத்துவிட்டது என்பதுதான் நிஜம்.
கதை சொல்லுவது ஒரு பிரமிக்க வைக்கும் கலை.
நிலா வெளிச்சத்தில் பாட்டிகள் சொன்ன பேய்க் கதைகளின் பயங்கரங்கள் சில ஹாலிவுட் பேய்ப் படங்களைப் பார்க்கும்போதுகூட ஏற்படுவதில்லை.
எனக்குத் தெரிந்து இயக்குநர்கள் கே. பாக்யராஜ், சீமான் போன்றவர்கள் கதை சொன்னால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
மைசூர் அரண்மனையில் ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' படப்பிடிப்பு.
இந்திய அளவில் திரைக்கதை அமைப்பதில் சக்கரவர்த்தி எனப் பாராட்டப்பட்ட கே.பாக்யராஜின் இன்னொரு பாராட்டுக்குரிய அம்சத்தைப் பார்த்தேன். பிரமாண்டமான அந்த அரண்மனையின் படிக்கட்டுகளில் எம்.ஜி.வல்லபன், சினி நியூஸ் செல்வம், ஜெமினி சினிமா வெற்றி உள்ளிட்ட 10,12 பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து அப் படத்தின் கதையைக் கேட்டது இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதிக் காட்சிவரை அப்படியே சொன்னார். சொல்லி முடித்துவிட்டு நன்றாக இருக்கிறதா என்றார். படத்தில் எத்தனை கேரக்டர்கள் உண்டோ அத்தனை சுபாவங்களோடும் கதையின் அத்தனை திருப்புமுனையையும் அவர் சொன்னவிதம் எங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தது. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்றோம்.
ஆனால் கே.பாக்யராஜுக்கும் தயாரிப்பாளருக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டு படம் தாமதமாகவும் போதிய விளம்பரமின்றியும் வெளியானது. சுமாரான பேச்சுதான். படம் பார்த்தோம். மனதில் இருந்த துல்லியம் திரையில் ஏதோ தொலைந்து போயிருந்தது.
புதுமைப் பெண்!
’மகளிர் மட்டும்' படப்பிடிப்பில்தான் முதன் முதலில் ரேவதியைப் பார்த்தேன். விஜய வாகினி ஸ்டுடியோவில் கமலா தியேட்டருக்கு எதிரே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதிலேயே செட் அமைத்துப் படப்பிடிப்பு நடந்தது.
அந்தப் படத்தைத் தயாரித்த கமல்ஹாசனோடு அவர் சிறிய முரண்பாடு கொண்டிருந்த நேரத்தில் நான் அவரைச் சந்தித்தேன். படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹிணி ஆகிய மூவரும் நாசரின் ஆணாதிக்கப் போக்கை எதிர்த்து வியூகம் அமைப்பார்கள். அது தெரியாமல் நாசர் அந்த மூவரும் தன் வழிக்கு வந்துவிட்டதாக நினைத்து "கறவைமாடு மூணு, காளை மாடு ஒண்ணு'' என்று உற்சாகமாகப் பாடுவார். கறவை மாடு என்ற வார்த்தையைப் பாடல் வரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் ரேவதியின் வாதம்.
ஆணாதிக்கவாதியின் சிந்தனையாக அப்பாடல் வெளிப்படுவதால் இறுதியில் ஒரு வழியாக சம்மதித்தார்.
’பான்யன்' அமைப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அங்கிருந்து காணாமல் போயிருந்த சமயத்தில் எக்மோர் ரயில் நிலையம் அருகே அவர்கள் இருந்ததை அறிந்து அவரே நேரில் சென்று அவர்கள் இருவரையும் மீட்டு வந்ததை அறிந்து அவர் மீது மேலும் மரியாதை கூடியது. தென்சென்னை மாவட்ட மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது எழுத்தாளர் மற்றும் பத்திரிகைத் தொடர்பாளர் சுராவுடன் சென்று அவரை வாழ்த்திவிட்டு வந்தேன். அவர் நடித்த படத்தின் தலைப்பு போலவே அவர் எப்போதும் புதுமைப் பெண்ணாக இருந்தார்.
சமீபத்தில் அண்ணாநகரில் ஒரு கடையில் அவர் ஏதோ பொருள்கள் வாங்கியிருக்கிறார். அதை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ரேவதி "கொஞ்ச நேரம் இருங்கள்'' என்று கூறிவிட்டு காரில் இருந்து ஒரு துணிப் பையைக் கொண்டு வந்து கொடுத்து அதில் அந்தப் பொருள்களை எடுத்துச் சென்றார். என் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு வந்து என்னிடம் சொன்னார்.
புதுமைப் பெண்கள் எந்த இடத்திலும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
புத்த மீனா!
திரைத்துறையில் பிரபலமாகிற நடிகைகளை நினைக்கும்போதெல்லாம் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் கிளியின் ஞாபகம் வரும். அதிலும் குழந்தையிலிருந்தே பிரபலமாகிவிட்ட நட்சத்திரங்களுக்கு அம்மா சொல்கிற உலகம்தான் தெரியும்.
மீனாவுக்கு இன்னும்கூட மழலை மாறாத குரல்தான். இப்போதுகூட அவர் "ரஜினி அங்கிள்” என்று உச்சரித்தால், ’அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தின் சாயல்தான் தெரியும் அந்தக் குரலில்.
’நாட்டாமை', ’முத்து' என வெள்ளிவிழா நாயகியாக உலாவந்து கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு தொடர் எழுதினேன். தினமணியில் எட்டுவாரம் வெளியான அந்தத் தொடருக்கு தில்லானா தில்லானா என்று தலைப்பிட்டவர் அப்போது தினமணியின் இதழாசிரியராக இருந்த ஞாநி.
தொடருக்காக அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பள்ளி வயது ஞாபகங்கள் பற்றி நிறைய பேசினார். பள்ளியின் மரக்கிளையில் ஏறி விளையாடியதை அவர் கிட்டத்தட்ட நடித்துக் காட்டினார். அதை நினைவுபடுத்திக் கொள்வதில் அத்தனை சந்தோஷம். அவருடைய பள்ளி முதல்வர் அதைப் பார்த்துவிட்டு "ஆர் யூ எ மங்கி?” என்று திட்டியதைச் சொல்லிச் சிரித்தார்.
எவ்வளவு பெரிய நடிகையாக நாடே வியந்து கொண்டிருக்க அவருடைய மகிழ்ச்சி அந்தப் பள்ளி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதாகப்பட்டது.
என்னுடைய குறுக்குப் புத்தி விழித்தது. அவரைப் பற்றி வெளியாகிக் கொண்டிருந்த கிசு கிசு பற்றிச் சொன்னேன். அதற்கு அவருடைய ரியாக்ஷனைக் கவனிக்க வேண்டும் என்பது என் நோக்கம்.
சத்தியமாக அதைப்பற்றி அவருக்குத் தெரியவே இல்லை. அவரைப் பற்றி நல்லவிதமாக வெளியாகும் செய்திகள் மட்டுமே அவருடைய பார்வைக்குப் போகும் என்று தெரிந்தது. "என்னைப் பற்றி இப்படியெல்லாமா எழுதுகிறார்கள்? ஏன் அப்படி எழுதுகிறார்கள்'' என்று கேட்டார். அதில் நடிப்பில்லை. முதுமை, நோய், மரணம் பற்றித் தெரியாத சித்தார்த்தன் வாழ்க்கையைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அதையெல்லாம் முதலில் அறிந்த போது அவன் புத்தனானதாக ஒரு கதை உண்டு. மீனாவும் அப்படியொரு நிலையில்தான் இருப்பதாக ஒரு கணம் திகைத்தேன். அடுத்து அவரைச் சந்திக்கவில்லை. தொடரையும் நிறுத்திவிட்டேன்.
திங்கள், ஜனவரி 26, 2009
திரைக்குப் பின்னே- 17
சவுந்தர்யாவின் திருமணம்!
மைசூரை ஒட்டியுள்ள ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு. வெள்ளை நாகம் (மதுமதி என்று பெயர் மாற்றினார்கள்) என்று படத்துக்குப் பெயர். சவுந்தர்யா கதாநாயகி. வெள்ளை நாகம் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியான வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிக் கொண்டிருந்த படம். அவரைத் தவிர அங்கு கர்ணாஸ் இருந்தார். கர்ணாஸ் பஸ் கண்டக்டர் போலவும் சவுந்தர்யா அங்கு பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்காக வரும் மாணவியாகவும் நடித்தனர். என் ஞாபகத்தில் அவர் விஜயகாந்துடன் இணைந்து "தவசி' படத்தில் நடித்ததோடு சரி. "வெள்ளை நாகம்', ரீ எண்ட்ரி. அதுவுமில்லாமல் சவுந்தர்யாவின் நூறாவது படமாகவும் அதை அறிவித்தார்கள்.
பஸ் நிறுத்தத்தை ஒட்டிய சிறிய ஒட்டு வீட்டின் திண்ணையில் செüந்தர்யாவும் அவருடைய அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். பேட்டி என்றில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம்.
வெள்ளை நாகம் நாவலை தாம் படித்திருப்பதாகவும் அதன் விறுவிறுப்புக்காகவே நடிக்க சம்மதித்ததாகவும் சொன்னார். திருமணமாகி குழந்தை பிறந்திருப்பதனால் இடையில் சில காலம் நடிக்காமல் இருந்ததாகவும் இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். பிறகு பொதுவாக நாட்டு நடப்புகள், பொதுவாக சினிமாத் துறையின் சிக்கல்கள் என்று பேச்சு தொடர்ந்தது.
திருமணமாகி குழந்தை பிறந்தபின்னும் நடிகைகள் தங்களின் புகழ் உச்சி காலகட்ட கனவுகளோடு மிதப்பது அல்லது அதை விட்டு இறங்குவதில் தயக்கம் காட்டுவது உளவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். நடிகர்கள் தங்கள் மகன்கள் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போதும் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பதும் நடிகைகள் மட்டும் திருமணமான அடுத்த நாளில் இருந்து அக்கா வேடத்துக்கும் அண்ணி வேடத்துக்கும் தள்ளப்படுவதும் கலாசார ரீதியானதாகவும் தெரிகிறது. ரசிகன், தன் கனவுக் கன்னியை சகோதரியாக, தாயாக, அண்ணியாகத்தான் பார்க்க விரும்புகிறானோ என்னவோ?
ஆனால் அவர் மீண்டும் கதாநாயகியாக அவர் பெரிதும் விரும்பினார். தனக்கு மவுசு குறையவேயில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். தமிழில் சரியான மேனேஜர் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
சில நாள்களில் சவுந்தர்யா பி.ஜே.பி.யில் இணைந்ததாக அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்குச் சென்ற போது விபத்தில் மரணமடைந்ததாகவும் செய்திகள் வந்தன.
அவர் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பு அதிகமாக வந்திருந்தால் அவர் ஒருவேளை அரசியலில் இறங்காமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு மதுமதி (வெள்ளைநாகம்) அவருடைய கடைசி படம் என்ற பிரசாரத்தோடு வெளியானது.
யானைக்கே இந்த கதி!
முதன்முதலில் பாண்டியராஜனை திருநீர் மலை கோவிலின் அடிவாரத்தில் பார்த்தேன். அவருடைய படங்களின் தலைப்புகளிலேயே இருக்கும் ஜனரஞ்சகத்தை வெகுவாகப் புகழ்ந்தேன். நெத்தியடி, காக்கா கடி, வாய்க் கொழுப்பு என்ற தலைப்புகளில் இருக்கிற மக்களுக்கு நெருக்கமான தன்மையைச் சொல்லி விட்டு ஆனால் போக,போக அந்த வலையில் நீங்களே சிக்கிக் கொண்டீர்கள் போல இருக்கிறது. உங்களையே கேலி செய்வதுபோல காட்சிகள் வைக்கிறீர்கள். இது திரும்பத் திரும்ப வருகிறதே என்றேன்.
"நம்ம முகம் ஹீரோவுக்கான முகம் இல்லைனு நல்லா தெரியும். ஆனா ஹீரோவா நடிச்சாகணும். ஹீரோனா நாலு பேரை அடிச்சு வீழ்த்த வேண்டியிருக்கு. அதுவும் இல்லாம நமக்கு ஜோடியா நடிக்கிற நடிகை நம்மைவிட உயரமா இருக்காங்க. தியேட்டர்ல ஆடியன்ஸ் பார்த்துட்டு இவனுக்கெல்லாம் ஹீரோ ஆசைய பாருப்பானு சொல்றதுக்கு முன்னாடி நாமளே படத்தில அப்பப்ப ஞாபகப்படுத்திட்டா பிரச்சினை இல்ல பாருங்க'' என்று எதார்த்தமாக பதில் சொன்னார்.
கூடவே இன்னொரு தகவலைச் சொன்னார்.
இந்தியில் "ஆத்தி மேரா சாத்தி' என்றொரு படம் வந்தது. பிறகு அது தமிழில் "நல்ல நேரம்' என்று வந்தது. பிறகு அதை இந்தியில் "மா' என்ற பெயரில் உல்டா செய்தார்கள். அது நன்றாக இருப்பதாக தமிழில் "அன்னை ஓர் ஆலயம்' என்று எடுத்தார்கள். ஆனானப்பட்ட யானைக்கே இந்த கதின்னா நாமல்லாம் எம்மாத்திரம்? ஒரே மாதிரி கதைல நடிக்கக் கூடாதா?
லாஜிக் சரிதான். எந்த வேலையும் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால்தான் அந்த வேலையைத் தொடர முடியும்.
ஒரு 'இந்தியன்' கனவு!
"இந்தியன்' திரைப்படம் வெளியான மறுநாள் என்று ஞாபகம் கமல்ஹாசனை அவருடைய அலுவகத்தில் பேட்டிக்காகச் சந்தித்தேன்.
50 ரூபாய், 100 ரூபாய் ஊழல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தனை பெரிய தடையாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். உலக அரசியல், பல நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் என தொட்டு ஒரு ரவுண்டு வந்தோம்.
"இத்தகைய சினிமாக்கள் வந்தால் நாட்டில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. மனித மனங்களில் இந்தச் சிறிய ஊழல்களால் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் வளரும் இல்லையா?'' என்று கேட்டேன்.
"இருக்கலாம். ஆனால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சத்யம் தியேட்டர் வாசலில் இந்தியன் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டுதான் பாதி பேர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
ஒரு ஜனரஞ்சகப்படம் அதன் விஸ்தாரமான எல்லைக்குள் இருக்கும் கோடி பேரில் எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் அவர் "ஹேராம்', "குணா', "குருதிப் புனல்' போன்ற பரீட்சார்த்தங்களையும் செய்கிறார்.
மைசூரை ஒட்டியுள்ள ஒரு காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு. வெள்ளை நாகம் (மதுமதி என்று பெயர் மாற்றினார்கள்) என்று படத்துக்குப் பெயர். சவுந்தர்யா கதாநாயகி. வெள்ளை நாகம் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியான வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிக் கொண்டிருந்த படம். அவரைத் தவிர அங்கு கர்ணாஸ் இருந்தார். கர்ணாஸ் பஸ் கண்டக்டர் போலவும் சவுந்தர்யா அங்கு பாம்பு பற்றிய ஆராய்ச்சிக்காக வரும் மாணவியாகவும் நடித்தனர். என் ஞாபகத்தில் அவர் விஜயகாந்துடன் இணைந்து "தவசி' படத்தில் நடித்ததோடு சரி. "வெள்ளை நாகம்', ரீ எண்ட்ரி. அதுவுமில்லாமல் சவுந்தர்யாவின் நூறாவது படமாகவும் அதை அறிவித்தார்கள்.
பஸ் நிறுத்தத்தை ஒட்டிய சிறிய ஒட்டு வீட்டின் திண்ணையில் செüந்தர்யாவும் அவருடைய அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். பேட்டி என்றில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம்.
வெள்ளை நாகம் நாவலை தாம் படித்திருப்பதாகவும் அதன் விறுவிறுப்புக்காகவே நடிக்க சம்மதித்ததாகவும் சொன்னார். திருமணமாகி குழந்தை பிறந்திருப்பதனால் இடையில் சில காலம் நடிக்காமல் இருந்ததாகவும் இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். பிறகு பொதுவாக நாட்டு நடப்புகள், பொதுவாக சினிமாத் துறையின் சிக்கல்கள் என்று பேச்சு தொடர்ந்தது.
திருமணமாகி குழந்தை பிறந்தபின்னும் நடிகைகள் தங்களின் புகழ் உச்சி காலகட்ட கனவுகளோடு மிதப்பது அல்லது அதை விட்டு இறங்குவதில் தயக்கம் காட்டுவது உளவியல் பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். நடிகர்கள் தங்கள் மகன்கள் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும்போதும் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருப்பதும் நடிகைகள் மட்டும் திருமணமான அடுத்த நாளில் இருந்து அக்கா வேடத்துக்கும் அண்ணி வேடத்துக்கும் தள்ளப்படுவதும் கலாசார ரீதியானதாகவும் தெரிகிறது. ரசிகன், தன் கனவுக் கன்னியை சகோதரியாக, தாயாக, அண்ணியாகத்தான் பார்க்க விரும்புகிறானோ என்னவோ?
ஆனால் அவர் மீண்டும் கதாநாயகியாக அவர் பெரிதும் விரும்பினார். தனக்கு மவுசு குறையவேயில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். தமிழில் சரியான மேனேஜர் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.
சில நாள்களில் சவுந்தர்யா பி.ஜே.பி.யில் இணைந்ததாக அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்குச் சென்ற போது விபத்தில் மரணமடைந்ததாகவும் செய்திகள் வந்தன.
அவர் எதிர்பார்த்தபடி சினிமா வாய்ப்பு அதிகமாக வந்திருந்தால் அவர் ஒருவேளை அரசியலில் இறங்காமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு மதுமதி (வெள்ளைநாகம்) அவருடைய கடைசி படம் என்ற பிரசாரத்தோடு வெளியானது.
யானைக்கே இந்த கதி!
முதன்முதலில் பாண்டியராஜனை திருநீர் மலை கோவிலின் அடிவாரத்தில் பார்த்தேன். அவருடைய படங்களின் தலைப்புகளிலேயே இருக்கும் ஜனரஞ்சகத்தை வெகுவாகப் புகழ்ந்தேன். நெத்தியடி, காக்கா கடி, வாய்க் கொழுப்பு என்ற தலைப்புகளில் இருக்கிற மக்களுக்கு நெருக்கமான தன்மையைச் சொல்லி விட்டு ஆனால் போக,போக அந்த வலையில் நீங்களே சிக்கிக் கொண்டீர்கள் போல இருக்கிறது. உங்களையே கேலி செய்வதுபோல காட்சிகள் வைக்கிறீர்கள். இது திரும்பத் திரும்ப வருகிறதே என்றேன்.
"நம்ம முகம் ஹீரோவுக்கான முகம் இல்லைனு நல்லா தெரியும். ஆனா ஹீரோவா நடிச்சாகணும். ஹீரோனா நாலு பேரை அடிச்சு வீழ்த்த வேண்டியிருக்கு. அதுவும் இல்லாம நமக்கு ஜோடியா நடிக்கிற நடிகை நம்மைவிட உயரமா இருக்காங்க. தியேட்டர்ல ஆடியன்ஸ் பார்த்துட்டு இவனுக்கெல்லாம் ஹீரோ ஆசைய பாருப்பானு சொல்றதுக்கு முன்னாடி நாமளே படத்தில அப்பப்ப ஞாபகப்படுத்திட்டா பிரச்சினை இல்ல பாருங்க'' என்று எதார்த்தமாக பதில் சொன்னார்.
கூடவே இன்னொரு தகவலைச் சொன்னார்.
இந்தியில் "ஆத்தி மேரா சாத்தி' என்றொரு படம் வந்தது. பிறகு அது தமிழில் "நல்ல நேரம்' என்று வந்தது. பிறகு அதை இந்தியில் "மா' என்ற பெயரில் உல்டா செய்தார்கள். அது நன்றாக இருப்பதாக தமிழில் "அன்னை ஓர் ஆலயம்' என்று எடுத்தார்கள். ஆனானப்பட்ட யானைக்கே இந்த கதின்னா நாமல்லாம் எம்மாத்திரம்? ஒரே மாதிரி கதைல நடிக்கக் கூடாதா?
லாஜிக் சரிதான். எந்த வேலையும் நம் மனசாட்சிக்கு நியாயமாக இருந்தால்தான் அந்த வேலையைத் தொடர முடியும்.
ஒரு 'இந்தியன்' கனவு!
"இந்தியன்' திரைப்படம் வெளியான மறுநாள் என்று ஞாபகம் கமல்ஹாசனை அவருடைய அலுவகத்தில் பேட்டிக்காகச் சந்தித்தேன்.
50 ரூபாய், 100 ரூபாய் ஊழல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தனை பெரிய தடையாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். உலக அரசியல், பல நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் என தொட்டு ஒரு ரவுண்டு வந்தோம்.
"இத்தகைய சினிமாக்கள் வந்தால் நாட்டில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. மனித மனங்களில் இந்தச் சிறிய ஊழல்களால் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் வளரும் இல்லையா?'' என்று கேட்டேன்.
"இருக்கலாம். ஆனால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சத்யம் தியேட்டர் வாசலில் இந்தியன் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டுதான் பாதி பேர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.
ஒரு ஜனரஞ்சகப்படம் அதன் விஸ்தாரமான எல்லைக்குள் இருக்கும் கோடி பேரில் எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் அவர் "ஹேராம்', "குணா', "குருதிப் புனல்' போன்ற பரீட்சார்த்தங்களையும் செய்கிறார்.
வியாழன், ஜனவரி 22, 2009
அதிகாரி ஸார்
அவரால் ஒரு ஆபத்தும் இல்லை என்று நன்றாகத் தெரிந்தும் அனைவருக்கு அதிகமாகவே பயப்பட வேண்டியிருந்தது. சொல்லப் போனால் இன்று இரவுக்குள் அவர் நரகத்துக்குப் போய்விட்டால் (அங்குதான் போவார் என்பதில் உறுதியாக இருந்தனர்) தங்கள் வாழ்க்கையின் பெரும் தொல்லையெல்லாம் ஓர் நாளில் ஒழிந்ததென்று கொண்டாடவும் தயாராக இருந்தனர்.
அவர் மரணம் எப்படி அமைய வேண்டும் என்று சகலருக்கும் ஒரு தனித்தனியே ஆசைகள் இருந்தன.
அவர் போகிற கார் குப்புற கவிழ்ந்து பாழுங்கிணற்றில் விழுந்து ஒருவாரம் கழித்துதான் அவரை கண்டெடுக்க வேண்டும் என்பது ஃபோர்மேன் சதாசிவத்தின் கனவாக இருந்தது.
ஆஸ்திரேலியா போகும்போது விமானம் ஹைஜாக் செய்யப்பட்டு தீவிரவாதிகளால் இவர் முதல்பலியாக வேண்டும் என்பது மானேஜர் பிரகாஷின் ஆசை.
"கத்தி எடுத்துக் குத்திட்டு ஜெயிலுக்குப் போறேன்டா.. மத்தவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்'' என்பான் மிஷின் ஆபரேட்டர் செல்வராஜ்.
பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. அவரவர் நிலைமைக்கு ஏற்பத்தானே நினைவுகளும் இருக்கும்....? வெள்ளத்தனையது மலர் நீட்டம்.
அந்த மனிதர் மீது அப்படியென்ன கோபம்? என்னதான் மன வருத்தம் இருந்தாலும் ஒரு மனிதன் தான் விரோதித்த மனிதன் இறந்து போய்விட வேண்டும் என்று நினைப்பானா? மனித நாகரீகம் இதுகாரும் கற்பித்த சகிப்புத்தன்மையும் நேயமும் இதைத்தானா? என்று பதறுபவர்கள் மட்டும் மேற்கொண்டு இக்கதையைப் படியுங்கள்.
நீங்கள் பார்க்கத் துடிக்கும் அந்த நபரின் பெயர் பஞ்சாபகேசன். தென்னிந்தியாவில் பெயிண்ட் தயாரிக்கும் மிகவும் பெயர் பெற்ற நிறுவனத்தின் ஐந்து டைரக்டர்களில் மூத்தவர். சொத்து சமாசாரத்துக்காக வயதில் மூத்த அவரையும் ஒரு டைரக்டராகச் சேர்த்து அவருக்கும் பிரம்மாண்டமாய் ஒரு அறையும் அட்டண்டரும் சமத்துவமான அந்தஸ்தும் கொடுத்திருந்தாலும் மற்ற நான்கு பேர் எடுக்கிற முடிவுதான் முடிவு. இவர் ஒப்புக்குச் சப்பாணி மாதிரிதான்.
பெயிண்ட் தயாரிப்பு பற்றியோ, அது எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்படுகிறதென்றோ, ஷேர் நிலைமை எப்படி இருக்கிறதென்றோ, ஆண்டு வருமானம் எவ்வளவு என்றோ அவர் கிஞ்சித்தும் அறிந்தவர் இல்லை. அப்படியிருக்கும் ஓர் அப்பிராணியை எதற்காக எல்லோரும் இப்படி நிந்திக்க வேண்டும்?
தினமும் அவர் அலுவகத்துக்கு வருவார். வந்ததும் வராததுமாக அழைப்பு மணியை ஆவேசமாக அழுத்தி தலைமுழுகிப் போகிற காரியம்போல அட்டண்டரை அழைப்பார்.
""அவனைக் கூப்பிடு'' என்பார். அட்டண்டர் ஒரு போதும் "எவனை?' என்று எதிர் கேள்வி கேட்டதில்லை. அப்படி கேட்டவன் எல்லோரும் ஒருவாரம் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். சஸ்பென்ட் என்பதைத்தான் அவர் டிஸ்மிஸ் என்பார்.
"என்னையே எதிர்த்து கேட்கிறீயா நீ? உனக்கு நான் சம்பளம் தர்றேனா... இல்லை எனக்கு நீ சம்பளம் தர்றீயா? கூப்படச் சொன்னா கூப்பிட வேண்டியதுதானேடா மடையா. நீ என் கண் முன்னாடி நிக்கக் கூடாது. ஒருவாரம் டிஸ்மிஸ்... நீ போய் அவனைக் கூப்பிடு''
மீண்டும் "எவனை?' என்று கேட்டு இன்னொரு வாரம் டிஸ்மிஸ் ஆகும் தைரியமில்லாமல் சின்ன முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி இரண்டொரு நாள் அவர் கண்ணில் படாமல் வேறு ஒரு டிபார்ட்மண்டில் வேலை பார்ப்பான் அட்டண்டர்.
ஆகவே "கூப்பிடு அவனை' என்றால் எவனையாவது எதிரில் போகிறவனைக் கூப்பிட்டு "சார் கூப்பிட்டாரு'' என்பதுஅட்டண்டரின் வழக்கம்.
அன்றொரு நாள் சிக்கியவன் அக்கவுண்ட்ஸ் மேனேஜர்.
அட்டண்டர் சொன்னதின்பேரில் உள்ளே போனவனை, "நீ ஏன் உள்ள வந்தே?'' என்றார். அக்கவுண்ட் மேனஜர் புதிதாக வேலைக்கு வந்தவர். "நீங்கதான் கூப்பிட்டீங்கன்னு அட்டன்டர் சொன்னான்'' என்றான்.
"எவனாவது சொன்னா உள்ள வந்திட்றதா? சரி.. சரி .. நீ என்ன வேலை செய்யறே?''
"அக்கவுண்ட்ஸ் மேனேஜர்''
"கணக்கு வழக்கெல்லாம் நல்லா தெரியுமா?''
"தெரியும்.''
"சரி. நான் ஒரு கணக்கு சொல்றேன்... அஞ்சு ரூபா குடுத்தா மீதி எவ்வளவு?''
"......''
"தெரியும்னா தெரியும்னு சொல்லு. தெரியாதுனா தெரியாதுனு சொல்லு. இந்த முழி முழிக்கிறே?''
ஆசாமி கிண்டல் செய்கிறாரா, கிறுக்கனா, நமக்குத்தான் கேள்வி புரியவில்லையா என்ற பல்வேறு வாய்ப்புகளையும் யோசித்து முடிப்பதற்குள் "முட்டாப் பயலையெல்லாம் வேலைக்கு எடுத்திருக்காம்பா'' என்று சகட்டுமேனிக்கு ஏறி அடிக்க ஆரம்பித்தார்.
"அஞ்சு ரூபா கொடுத்து என்ன வாங்கச் சொன்னீங்கன்னே சொல்லையே சார்...''
"நீ என்ன கம்பெனிக்கு சேமிக்க வந்தியா? செலவழிக்க வந்தியா? சரி போ.. நீ போய் அவனை வரச் சொல்லு.''
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இதை ஒரு புகாராக ஜெனரல் மேனேஜரிடம் சொல்ல... ""அவர் அப்படித்தாம்பா. நீ கண்டுக்காதே'' என்றார்.
அப்படி கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் இங்கு நெடுங்காலமாகப் புலம்பியபடியே வாழ்ந்துவந்தனர். கண்டு கொண்டவர் வேறு வேலைக்குப் போய்விட்டனர்.
அன்றொரு நாள் பஞ்சாபகேசன் ரவுண்ட்ஸ் வரும்போது, லாரிக்காரன் கிடங்கின் வாசலிலேயே எண்ணெய் ட்ரம்மை இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்றார். "டேய் இதை ஓரமாகத் தள்ளி வைடா'' என்றார் எதிர்பட்டவனை.
அந்த எண்ணெய் ட்ரம்மின் மூடியைக்கூட தள்ளும் திராணியற்றவன் அவன்.
அவன் அனுபவப்பட்டவன். அடுத்த வினாடி அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு தம் பிடித்து ட்ரம்மைத் தள்ள முயற்சி செய்தான். அதாவது ஒரு கோழியின் இறகைத் தள்ளும் அளவுக்குக்கூட அழுத்தம் கொடுக்கவில்லை. வெறும் பாவனை மட்டும் செய்தான்.
இப்படியான விசுவாசமான ஊழியனை அவர் மனதார நேசித்தார். தன்னால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு முயற்சி செய்கிறானே என்று பூரித்துப் போனார். "ஏண்டா மடையா, ஒரு ஆளால தள்ள முடியுமாடா... போய் நாலு பேரைக் கூட்டிக் கிட்டு வாடா''
போனவன், அந்தப் பக்கம் இருந்த நாலுபேரை "ஐயா கூப்பிட்றாரு' என்று அனுப்பிவிட்டு வேறு பக்கம் கம்பி நீட்டினான்.
உண்மையில் இந்த மாதிரி ட்ரம்முகளை லாவகமாக நகர்த்து வைப்பதற்கென்றே லிஃப்ட் வாகனங்கள் அங்கு இருந்தன. அதைப் பயன்படுத்தலாம் என்று கருத்து சொன்னால் என்ன பின் விளைவுகள் ஏற்படுமோ என அந்த நால்வரும் சொந்த சக்தியாலேயே நகர்த்தி முடித்தனர்.
யோசித்துப் பார்த்தால் அவருக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் எல்லோரையும் வேலை வாங்க வேண்டுமென்று அவர் விரும்பினார். நாம் ஒரு நாள் கம்பெனிக்குள் செல்ல வில்லையென்றாலும் எல்லாமும் குட்டிச் சுவராகிவிடும் என்று அவர் நம்பினார். ஊழியர்களுக்கு அவர் ஒரு நாள் வரவில்லையென்றாலும் தீபாவளியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு நபரை மற்ற டைரக்டர்கள் எதற்காக கம்பெனிக்குள் அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்த மாதிரி ஒரு அதட்டலுடன் ஒரு பெருசு உலாவிக் கொண்டிருப்பதும் நல்லதுதான் என்று அவர்கள் விட்டுவிட்டார்கள் போலும்.
ஏதோ கிறுக்கன் என்று அவரை உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. அவர் உணரும் விதமாக அவரை அவமானப்படுத்திவிட்டால் போச்சு. அதோடு சீட்டைக் கிழித்துவிடுவார்கள். தான் அவமானப்படுவதை அவர் எந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வார் என்பது தெரியாது. மேலே சொன்ன சம்பவத்தில் முதலில் அந்த ட்ரம்மை தள்ளியவன் சொல்லிக் கொள்ளாமல் கம்பி நீட்டி விட்டது அவரை அவமானப்படுத்திய செயல் என்று நினைத்தால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஐந்து ரூபாய்க்கு என்ன வாங்க வேண்டும் என்று திருப்பிக் கேட்டவன் அவமானப்படுத்தியவன் ஆகிறான். அவர் அவமானப்படும் மையம் மற்றவர்களின் இயல்பில் இருந்து மாறுபட்டிருந்தது.
இந்தக் கம்பெனியில் பணியாற்றுவதற்குப் பெயிண்ட் தயாரிப்பு முறை தெரிந்திருந்தாலோ, கம்பெனி நிர்வாகம் தெரிந்திருந்தாலோ, வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலோ போதுமானதாக இல்லை. பஞ்சாபகேசனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியமானதாக இருந்தது.
மனித மனம் எப்போதும் சுதாரிப்போடு இருக்க முடியுமா?
ஒரு சில நேரங்களில் "அவர் பார்வையில்' எதிர்த்துப் பேச வேண்டியதாகவும் அவரை அவமானப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. குறைந்த பட்சம் இந்த டிபார்ட்மென்டில் இருந்து இன்னொரு டிபார்ட் மென்டுக்குத் தூக்கி எறிவது முதல் அல்லது நாமாக வேலையை விட்டுப் போவது வரை நடந்துவிடுகிறது. அதனால் எப்போதும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு நிலை. இந்தக் கிறுக்குப் பயலுக்காக வேலையை விட்டுவிட வேண்டுமா என்று நினைப்பவர்கள், வேறு போக்கிடம் இல்லாதவர்கள், எந்த கம்பெனிக்குப் போனாலும் இப்படி ஒரு லூஸýப் பயல் இருக்கத்தான் செய்வான். இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டவர்கள் மட்டும்தான் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இச் சூழல் நிமித்தமாகத்தான் பஞ்சாபகேசன் இந்த பூமியில் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஊழியர்கள் எண்ணுவதற்குக் காரணம்.
செல்லமுத்துவுக்கு ஒரு குறைந்த பட்ச ஆசை இருந்தது. பஞ்சாபகேசனை ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் சட்டென செருப்பைக் கழற்றி அடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தான். தனியாக இருக்கும் நேரத்தில் அப்படி செய்துவிட்டால் பதிலுக்குத் திருப்பி அடிப்பானா, அல்லது வேலையைவிட்டு நீக்குவானா? அல்லது கழுத்தை வெட்டி விடுவானா, போலீஸில் சொல்லி ஜெயிலில் தள்ளுவானா என்று நீண்ட நாள்களாக யோசித்து வைத்திருந்தான்.
இரவு எட்டு மணி வாக்கில் தாமதமாகப் புறப்பட்டார் பஞ்சாபகேசன். கம்பெனி இருந்த வளாகத்திலேயே பின் பக்கத்தில் அவருக்கு வீடு. நடந்துதான் போவார். வெளிச்சம் கொஞ்சம் இருந்தால் அந்த தூரத்தையே இரண்டு நடையாக நடந்து வாக்கிங் பயிற்சி போலவும் செய்வார்.
தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்கு பட்டை கட்டியது மாதிரி பெல்ட் கட்டியிருந்தார் பஞ்சாபகேசன். கம்பெனிக்கு வருவதற்கு மட்டும்தான் பேண்ட், சட்டை. மற்ற நேரங்களில் எப்போதும் முழங்கால்வரை தூக்கிக் கட்டிய நாலூ முழம் வேட்டி மட்டும்தான்.
கிளம்பி வெளியே போனவர் இருட்டைப் பார்த்துவிட்டு திரும்பினார். மனிதருக்குப் பேய் பயம் அதிகம். "டேய் யாருடா?'' அங்கே என்றார்.
செல்லமுத்து இந்த மாதிரி தருணத்துக்காகத்தான் காத்திருந்தான். பேச்சு கொடுத்தபடியே நடந்தார்.
"இந்த ஷிப்ட்ல எத்தனை பேரூ?''
"12 பேர் இருக்கோம்யா''
"உம் பேர் என்ன சொன்னே?''
பார்க்கும் போதெல்லாம் கேட்கிற வழக்கம்தான். சொன்னான். பின்பக்கமாகவே அடித்துவிடலாமா என்று யோசித்தான். கிழம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது. நின்று செருப்பைக் கழற்றுவதற்குள் திரும்பிவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கொக்கி வைத்த செருப்பு. சட்டென்று அவசரத்துக்குக் கழலுமா என்பதே சந்தேகமாக இருந்தது. செருப்பையும் அவருடைய பின் மண்டையையும் பார்வையால் அளந்து கொண்டான்.
"என்னடா கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?''
"என்னங்கய்யா?''
"எத்தனை பசங்க உனக்குன்னேன்? இந்த உலகத்திலேயே இல்ல போல...''
"ரெண்டு. பையன் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு.''
செல்லமுத்து குனிந்து செருப்பை...
"என்னடா... செருப்பு அருந்துப் போச்சா'' என்பது மாதிரி நின்றார். வீடு கிட்டத்தில் வந்துவிட்டது. இனி பயமில்லை அவருக்கு.
"நீ என்டா என்கூட வந்தே? வேலை நேரத்தில என் பின்னாடி அலையறே?''
"ஐயா நீங்க பேசிக்கிட்டு வந்தீங்க. நானும் பதில் சொல்லிக்கிட்டு வந்துட்டேன்யா''
"அடப் பயித்தியக்காரா... உனக்கு எத்தனைக் குழந்தைங்கங்கிறது அவ்வளவு முக்கியமா... நாளைக்குப் பொழுதோட கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டனா? சரி.. ஓடு.''
பேச்சுத் துணைக்கு இழுத்து வந்துவிட்டு இப்படி பழி போடுகிறானே என்ற ஆத்திரமும் சேர்ந்து கொண்டது செல்லமுத்துக்கு. அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பஞ்சாபகேசனை விரட்டிச் சென்று செருப்பால் ஒரு போடு போட்டுவிடவேண்டும் என்ற சிந்தனை உடலில் உஷ்ணத்தைக் கிளப்பியது. வினாடியில் ஜுரம்போல கொதித்தது உடம்பு. கண்கள் ஜிவ்விடுவது தெரிந்தது. செருப்பைக் கழிற்றிக் கொண்டான். இந்த லூஸýப் பயலை எதற்காக அடிக்க வேண்டும். அப்படி என்ன கெட்டது பண்ணிவிட்டான் நமக்கு என்றும் தோன்றியது. அவரை நோக்கிப் போகலாமா, வேலையைப் பார்க்கப் போகலாம் என்ற மனக் குழப்பம். கால்கள் முன்னும் பின்னுமாக நடைபோட்டுப் பின்னிக் கொண்டது. கையில் செருப்போடு மாயக் கயிறு கொண்டு கட்டப்பட்டவன் மாதிரி தத்தளித்தான்.
"டேய் என்னடா இன்னும் நிக்கிறே....?''
இந்த நேரத்தில் பின் வாங்குவது மிகப் பெரிய கோழைத்தனமாக இருந்தது அவனுக்கு. சட்டென பஞ்சாபகேசனை நோக்கி வேகமாக நகர முற்பட்டான். நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்தான். கால் இடறியதா? நினைவு தப்பியதா? கல் எதுவும் தட்டியதா ? சட்டென உணரமுடியவில்லை. "என்னடா ஆச்சு... பாத்து வரப்படாது'' என்று ஓரடி நெருங்கி வந்தவர், செல்லமுத்து தலையைப் பிடித்துக் கொண்டு துடிப்பதைப் பார்த்து பதறினார். கல் பாய்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"டேய் யாருடா அங்கே?'' என உரத்துக் குரல் கொடுத்தார்.
காக்கிச் சட்டை பேண்டுடன் ஒருவன் ஓடிவந்தான்.
"யாருடா நீ?''
"செக்யூரிட்டி''
"செக்யூரிட்டியா நீ..? அப்பிடித்தான் சொல்லிக்கிட்டு திரியறயா..? செக்யூரிட்டினா என்ன மீனிங் தெரியுமாடா உனக்கு..? யாராவது என்னைச் சுட வந்தா நீ முன்னாடி வந்து உயிரைக் கொடுக்கணும். நீ எனக்காக உயிரைக் கொடுப்பியா..? சும்மா ஒரு பேச்சுக்காகவது சொல்லேன் பாக்கலாம். ம்... சரி.. சரி. ஓடு. அதோ அங்க ஒருத்தன் மயக்கம் போட்டு விழுந்துட்டான். மானேஜர் கிட்ட சொல்லி அவனை அஸ்பித்திரில சேக்கிற வழிய பாரு. அவன் உயிரையாவது காப்பாத்துவியான்னு பார்க்கிறேன்'' உலகத்தின் அத்தனை தொழிலாளர்கள் மீதும் சலிப்புற்று வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
வாசலில் ''செவிட்டுக் கிழம்... எத்தனைவாட்டி கூப்பிட்றது? அங்க என்ன செக்யூரிட்டிகிட்ட பேச்சு'' - அது அவருடைய மனைவியின் குரல்.
"வேலையெல்லாம் முடிச்சுட்டு வரணுமில்ல?'' என்று இரண்டடி ஓர் அடியாகத் தாவி ஓடினார் பஞ்சாபகேசன்.
அவர் மரணம் எப்படி அமைய வேண்டும் என்று சகலருக்கும் ஒரு தனித்தனியே ஆசைகள் இருந்தன.
அவர் போகிற கார் குப்புற கவிழ்ந்து பாழுங்கிணற்றில் விழுந்து ஒருவாரம் கழித்துதான் அவரை கண்டெடுக்க வேண்டும் என்பது ஃபோர்மேன் சதாசிவத்தின் கனவாக இருந்தது.
ஆஸ்திரேலியா போகும்போது விமானம் ஹைஜாக் செய்யப்பட்டு தீவிரவாதிகளால் இவர் முதல்பலியாக வேண்டும் என்பது மானேஜர் பிரகாஷின் ஆசை.
"கத்தி எடுத்துக் குத்திட்டு ஜெயிலுக்குப் போறேன்டா.. மத்தவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்'' என்பான் மிஷின் ஆபரேட்டர் செல்வராஜ்.
பாதைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லோருடைய இலக்கும் ஒன்றாகத்தான் இருந்தது. அவரவர் நிலைமைக்கு ஏற்பத்தானே நினைவுகளும் இருக்கும்....? வெள்ளத்தனையது மலர் நீட்டம்.
அந்த மனிதர் மீது அப்படியென்ன கோபம்? என்னதான் மன வருத்தம் இருந்தாலும் ஒரு மனிதன் தான் விரோதித்த மனிதன் இறந்து போய்விட வேண்டும் என்று நினைப்பானா? மனித நாகரீகம் இதுகாரும் கற்பித்த சகிப்புத்தன்மையும் நேயமும் இதைத்தானா? என்று பதறுபவர்கள் மட்டும் மேற்கொண்டு இக்கதையைப் படியுங்கள்.
நீங்கள் பார்க்கத் துடிக்கும் அந்த நபரின் பெயர் பஞ்சாபகேசன். தென்னிந்தியாவில் பெயிண்ட் தயாரிக்கும் மிகவும் பெயர் பெற்ற நிறுவனத்தின் ஐந்து டைரக்டர்களில் மூத்தவர். சொத்து சமாசாரத்துக்காக வயதில் மூத்த அவரையும் ஒரு டைரக்டராகச் சேர்த்து அவருக்கும் பிரம்மாண்டமாய் ஒரு அறையும் அட்டண்டரும் சமத்துவமான அந்தஸ்தும் கொடுத்திருந்தாலும் மற்ற நான்கு பேர் எடுக்கிற முடிவுதான் முடிவு. இவர் ஒப்புக்குச் சப்பாணி மாதிரிதான்.
பெயிண்ட் தயாரிப்பு பற்றியோ, அது எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்படுகிறதென்றோ, ஷேர் நிலைமை எப்படி இருக்கிறதென்றோ, ஆண்டு வருமானம் எவ்வளவு என்றோ அவர் கிஞ்சித்தும் அறிந்தவர் இல்லை. அப்படியிருக்கும் ஓர் அப்பிராணியை எதற்காக எல்லோரும் இப்படி நிந்திக்க வேண்டும்?
தினமும் அவர் அலுவகத்துக்கு வருவார். வந்ததும் வராததுமாக அழைப்பு மணியை ஆவேசமாக அழுத்தி தலைமுழுகிப் போகிற காரியம்போல அட்டண்டரை அழைப்பார்.
""அவனைக் கூப்பிடு'' என்பார். அட்டண்டர் ஒரு போதும் "எவனை?' என்று எதிர் கேள்வி கேட்டதில்லை. அப்படி கேட்டவன் எல்லோரும் ஒருவாரம் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள். சஸ்பென்ட் என்பதைத்தான் அவர் டிஸ்மிஸ் என்பார்.
"என்னையே எதிர்த்து கேட்கிறீயா நீ? உனக்கு நான் சம்பளம் தர்றேனா... இல்லை எனக்கு நீ சம்பளம் தர்றீயா? கூப்படச் சொன்னா கூப்பிட வேண்டியதுதானேடா மடையா. நீ என் கண் முன்னாடி நிக்கக் கூடாது. ஒருவாரம் டிஸ்மிஸ்... நீ போய் அவனைக் கூப்பிடு''
மீண்டும் "எவனை?' என்று கேட்டு இன்னொரு வாரம் டிஸ்மிஸ் ஆகும் தைரியமில்லாமல் சின்ன முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொல்லி இரண்டொரு நாள் அவர் கண்ணில் படாமல் வேறு ஒரு டிபார்ட்மண்டில் வேலை பார்ப்பான் அட்டண்டர்.
ஆகவே "கூப்பிடு அவனை' என்றால் எவனையாவது எதிரில் போகிறவனைக் கூப்பிட்டு "சார் கூப்பிட்டாரு'' என்பதுஅட்டண்டரின் வழக்கம்.
அன்றொரு நாள் சிக்கியவன் அக்கவுண்ட்ஸ் மேனேஜர்.
அட்டண்டர் சொன்னதின்பேரில் உள்ளே போனவனை, "நீ ஏன் உள்ள வந்தே?'' என்றார். அக்கவுண்ட் மேனஜர் புதிதாக வேலைக்கு வந்தவர். "நீங்கதான் கூப்பிட்டீங்கன்னு அட்டன்டர் சொன்னான்'' என்றான்.
"எவனாவது சொன்னா உள்ள வந்திட்றதா? சரி.. சரி .. நீ என்ன வேலை செய்யறே?''
"அக்கவுண்ட்ஸ் மேனேஜர்''
"கணக்கு வழக்கெல்லாம் நல்லா தெரியுமா?''
"தெரியும்.''
"சரி. நான் ஒரு கணக்கு சொல்றேன்... அஞ்சு ரூபா குடுத்தா மீதி எவ்வளவு?''
"......''
"தெரியும்னா தெரியும்னு சொல்லு. தெரியாதுனா தெரியாதுனு சொல்லு. இந்த முழி முழிக்கிறே?''
ஆசாமி கிண்டல் செய்கிறாரா, கிறுக்கனா, நமக்குத்தான் கேள்வி புரியவில்லையா என்ற பல்வேறு வாய்ப்புகளையும் யோசித்து முடிப்பதற்குள் "முட்டாப் பயலையெல்லாம் வேலைக்கு எடுத்திருக்காம்பா'' என்று சகட்டுமேனிக்கு ஏறி அடிக்க ஆரம்பித்தார்.
"அஞ்சு ரூபா கொடுத்து என்ன வாங்கச் சொன்னீங்கன்னே சொல்லையே சார்...''
"நீ என்ன கம்பெனிக்கு சேமிக்க வந்தியா? செலவழிக்க வந்தியா? சரி போ.. நீ போய் அவனை வரச் சொல்லு.''
அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இதை ஒரு புகாராக ஜெனரல் மேனேஜரிடம் சொல்ல... ""அவர் அப்படித்தாம்பா. நீ கண்டுக்காதே'' என்றார்.
அப்படி கண்டு கொள்ளாமல் விட்டவர்கள் இங்கு நெடுங்காலமாகப் புலம்பியபடியே வாழ்ந்துவந்தனர். கண்டு கொண்டவர் வேறு வேலைக்குப் போய்விட்டனர்.
அன்றொரு நாள் பஞ்சாபகேசன் ரவுண்ட்ஸ் வரும்போது, லாரிக்காரன் கிடங்கின் வாசலிலேயே எண்ணெய் ட்ரம்மை இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டதைக் கண்ணுற்றார். "டேய் இதை ஓரமாகத் தள்ளி வைடா'' என்றார் எதிர்பட்டவனை.
அந்த எண்ணெய் ட்ரம்மின் மூடியைக்கூட தள்ளும் திராணியற்றவன் அவன்.
அவன் அனுபவப்பட்டவன். அடுத்த வினாடி அவன் தன் உதட்டைக் கடித்துக் கொண்டு தம் பிடித்து ட்ரம்மைத் தள்ள முயற்சி செய்தான். அதாவது ஒரு கோழியின் இறகைத் தள்ளும் அளவுக்குக்கூட அழுத்தம் கொடுக்கவில்லை. வெறும் பாவனை மட்டும் செய்தான்.
இப்படியான விசுவாசமான ஊழியனை அவர் மனதார நேசித்தார். தன்னால் முடியாவிட்டாலும் சிரமப்பட்டு முயற்சி செய்கிறானே என்று பூரித்துப் போனார். "ஏண்டா மடையா, ஒரு ஆளால தள்ள முடியுமாடா... போய் நாலு பேரைக் கூட்டிக் கிட்டு வாடா''
போனவன், அந்தப் பக்கம் இருந்த நாலுபேரை "ஐயா கூப்பிட்றாரு' என்று அனுப்பிவிட்டு வேறு பக்கம் கம்பி நீட்டினான்.
உண்மையில் இந்த மாதிரி ட்ரம்முகளை லாவகமாக நகர்த்து வைப்பதற்கென்றே லிஃப்ட் வாகனங்கள் அங்கு இருந்தன. அதைப் பயன்படுத்தலாம் என்று கருத்து சொன்னால் என்ன பின் விளைவுகள் ஏற்படுமோ என அந்த நால்வரும் சொந்த சக்தியாலேயே நகர்த்தி முடித்தனர்.
யோசித்துப் பார்த்தால் அவருக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் எல்லோரையும் வேலை வாங்க வேண்டுமென்று அவர் விரும்பினார். நாம் ஒரு நாள் கம்பெனிக்குள் செல்ல வில்லையென்றாலும் எல்லாமும் குட்டிச் சுவராகிவிடும் என்று அவர் நம்பினார். ஊழியர்களுக்கு அவர் ஒரு நாள் வரவில்லையென்றாலும் தீபாவளியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு நபரை மற்ற டைரக்டர்கள் எதற்காக கம்பெனிக்குள் அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இந்த மாதிரி ஒரு அதட்டலுடன் ஒரு பெருசு உலாவிக் கொண்டிருப்பதும் நல்லதுதான் என்று அவர்கள் விட்டுவிட்டார்கள் போலும்.
ஏதோ கிறுக்கன் என்று அவரை உதாசீனப்படுத்திவிடவும் முடியாது. அவர் உணரும் விதமாக அவரை அவமானப்படுத்திவிட்டால் போச்சு. அதோடு சீட்டைக் கிழித்துவிடுவார்கள். தான் அவமானப்படுவதை அவர் எந்தச் சந்தர்ப்பத்தில் உணர்வார் என்பது தெரியாது. மேலே சொன்ன சம்பவத்தில் முதலில் அந்த ட்ரம்மை தள்ளியவன் சொல்லிக் கொள்ளாமல் கம்பி நீட்டி விட்டது அவரை அவமானப்படுத்திய செயல் என்று நினைத்தால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஐந்து ரூபாய்க்கு என்ன வாங்க வேண்டும் என்று திருப்பிக் கேட்டவன் அவமானப்படுத்தியவன் ஆகிறான். அவர் அவமானப்படும் மையம் மற்றவர்களின் இயல்பில் இருந்து மாறுபட்டிருந்தது.
இந்தக் கம்பெனியில் பணியாற்றுவதற்குப் பெயிண்ட் தயாரிப்பு முறை தெரிந்திருந்தாலோ, கம்பெனி நிர்வாகம் தெரிந்திருந்தாலோ, வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தாலோ போதுமானதாக இல்லை. பஞ்சாபகேசனின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியமானதாக இருந்தது.
மனித மனம் எப்போதும் சுதாரிப்போடு இருக்க முடியுமா?
ஒரு சில நேரங்களில் "அவர் பார்வையில்' எதிர்த்துப் பேச வேண்டியதாகவும் அவரை அவமானப்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. குறைந்த பட்சம் இந்த டிபார்ட்மென்டில் இருந்து இன்னொரு டிபார்ட் மென்டுக்குத் தூக்கி எறிவது முதல் அல்லது நாமாக வேலையை விட்டுப் போவது வரை நடந்துவிடுகிறது. அதனால் எப்போதும் நித்தியகண்டம் பூர்ண ஆயுசு நிலை. இந்தக் கிறுக்குப் பயலுக்காக வேலையை விட்டுவிட வேண்டுமா என்று நினைப்பவர்கள், வேறு போக்கிடம் இல்லாதவர்கள், எந்த கம்பெனிக்குப் போனாலும் இப்படி ஒரு லூஸýப் பயல் இருக்கத்தான் செய்வான். இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டவர்கள் மட்டும்தான் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இச் சூழல் நிமித்தமாகத்தான் பஞ்சாபகேசன் இந்த பூமியில் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஊழியர்கள் எண்ணுவதற்குக் காரணம்.
செல்லமுத்துவுக்கு ஒரு குறைந்த பட்ச ஆசை இருந்தது. பஞ்சாபகேசனை ஒரு அசந்தர்ப்பமான நேரத்தில் சட்டென செருப்பைக் கழற்றி அடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தான். தனியாக இருக்கும் நேரத்தில் அப்படி செய்துவிட்டால் பதிலுக்குத் திருப்பி அடிப்பானா, அல்லது வேலையைவிட்டு நீக்குவானா? அல்லது கழுத்தை வெட்டி விடுவானா, போலீஸில் சொல்லி ஜெயிலில் தள்ளுவானா என்று நீண்ட நாள்களாக யோசித்து வைத்திருந்தான்.
இரவு எட்டு மணி வாக்கில் தாமதமாகப் புறப்பட்டார் பஞ்சாபகேசன். கம்பெனி இருந்த வளாகத்திலேயே பின் பக்கத்தில் அவருக்கு வீடு. நடந்துதான் போவார். வெளிச்சம் கொஞ்சம் இருந்தால் அந்த தூரத்தையே இரண்டு நடையாக நடந்து வாக்கிங் பயிற்சி போலவும் செய்வார்.
தொந்திக்கு மேல் அரிசி மூட்டைக்கு பட்டை கட்டியது மாதிரி பெல்ட் கட்டியிருந்தார் பஞ்சாபகேசன். கம்பெனிக்கு வருவதற்கு மட்டும்தான் பேண்ட், சட்டை. மற்ற நேரங்களில் எப்போதும் முழங்கால்வரை தூக்கிக் கட்டிய நாலூ முழம் வேட்டி மட்டும்தான்.
கிளம்பி வெளியே போனவர் இருட்டைப் பார்த்துவிட்டு திரும்பினார். மனிதருக்குப் பேய் பயம் அதிகம். "டேய் யாருடா?'' அங்கே என்றார்.
செல்லமுத்து இந்த மாதிரி தருணத்துக்காகத்தான் காத்திருந்தான். பேச்சு கொடுத்தபடியே நடந்தார்.
"இந்த ஷிப்ட்ல எத்தனை பேரூ?''
"12 பேர் இருக்கோம்யா''
"உம் பேர் என்ன சொன்னே?''
பார்க்கும் போதெல்லாம் கேட்கிற வழக்கம்தான். சொன்னான். பின்பக்கமாகவே அடித்துவிடலாமா என்று யோசித்தான். கிழம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்தது. நின்று செருப்பைக் கழற்றுவதற்குள் திரும்பிவிட்டால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கொக்கி வைத்த செருப்பு. சட்டென்று அவசரத்துக்குக் கழலுமா என்பதே சந்தேகமாக இருந்தது. செருப்பையும் அவருடைய பின் மண்டையையும் பார்வையால் அளந்து கொண்டான்.
"என்னடா கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்?''
"என்னங்கய்யா?''
"எத்தனை பசங்க உனக்குன்னேன்? இந்த உலகத்திலேயே இல்ல போல...''
"ரெண்டு. பையன் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு.''
செல்லமுத்து குனிந்து செருப்பை...
"என்னடா... செருப்பு அருந்துப் போச்சா'' என்பது மாதிரி நின்றார். வீடு கிட்டத்தில் வந்துவிட்டது. இனி பயமில்லை அவருக்கு.
"நீ என்டா என்கூட வந்தே? வேலை நேரத்தில என் பின்னாடி அலையறே?''
"ஐயா நீங்க பேசிக்கிட்டு வந்தீங்க. நானும் பதில் சொல்லிக்கிட்டு வந்துட்டேன்யா''
"அடப் பயித்தியக்காரா... உனக்கு எத்தனைக் குழந்தைங்கங்கிறது அவ்வளவு முக்கியமா... நாளைக்குப் பொழுதோட கேட்டுத் தெரிஞ்சுக்க மாட்டனா? சரி.. ஓடு.''
பேச்சுத் துணைக்கு இழுத்து வந்துவிட்டு இப்படி பழி போடுகிறானே என்ற ஆத்திரமும் சேர்ந்து கொண்டது செல்லமுத்துக்கு. அவசரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பஞ்சாபகேசனை விரட்டிச் சென்று செருப்பால் ஒரு போடு போட்டுவிடவேண்டும் என்ற சிந்தனை உடலில் உஷ்ணத்தைக் கிளப்பியது. வினாடியில் ஜுரம்போல கொதித்தது உடம்பு. கண்கள் ஜிவ்விடுவது தெரிந்தது. செருப்பைக் கழிற்றிக் கொண்டான். இந்த லூஸýப் பயலை எதற்காக அடிக்க வேண்டும். அப்படி என்ன கெட்டது பண்ணிவிட்டான் நமக்கு என்றும் தோன்றியது. அவரை நோக்கிப் போகலாமா, வேலையைப் பார்க்கப் போகலாம் என்ற மனக் குழப்பம். கால்கள் முன்னும் பின்னுமாக நடைபோட்டுப் பின்னிக் கொண்டது. கையில் செருப்போடு மாயக் கயிறு கொண்டு கட்டப்பட்டவன் மாதிரி தத்தளித்தான்.
"டேய் என்னடா இன்னும் நிக்கிறே....?''
இந்த நேரத்தில் பின் வாங்குவது மிகப் பெரிய கோழைத்தனமாக இருந்தது அவனுக்கு. சட்டென பஞ்சாபகேசனை நோக்கி வேகமாக நகர முற்பட்டான். நிலை தடுமாறி பொத்தென்று கீழே விழுந்தான். கால் இடறியதா? நினைவு தப்பியதா? கல் எதுவும் தட்டியதா ? சட்டென உணரமுடியவில்லை. "என்னடா ஆச்சு... பாத்து வரப்படாது'' என்று ஓரடி நெருங்கி வந்தவர், செல்லமுத்து தலையைப் பிடித்துக் கொண்டு துடிப்பதைப் பார்த்து பதறினார். கல் பாய்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
"டேய் யாருடா அங்கே?'' என உரத்துக் குரல் கொடுத்தார்.
காக்கிச் சட்டை பேண்டுடன் ஒருவன் ஓடிவந்தான்.
"யாருடா நீ?''
"செக்யூரிட்டி''
"செக்யூரிட்டியா நீ..? அப்பிடித்தான் சொல்லிக்கிட்டு திரியறயா..? செக்யூரிட்டினா என்ன மீனிங் தெரியுமாடா உனக்கு..? யாராவது என்னைச் சுட வந்தா நீ முன்னாடி வந்து உயிரைக் கொடுக்கணும். நீ எனக்காக உயிரைக் கொடுப்பியா..? சும்மா ஒரு பேச்சுக்காகவது சொல்லேன் பாக்கலாம். ம்... சரி.. சரி. ஓடு. அதோ அங்க ஒருத்தன் மயக்கம் போட்டு விழுந்துட்டான். மானேஜர் கிட்ட சொல்லி அவனை அஸ்பித்திரில சேக்கிற வழிய பாரு. அவன் உயிரையாவது காப்பாத்துவியான்னு பார்க்கிறேன்'' உலகத்தின் அத்தனை தொழிலாளர்கள் மீதும் சலிப்புற்று வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
வாசலில் ''செவிட்டுக் கிழம்... எத்தனைவாட்டி கூப்பிட்றது? அங்க என்ன செக்யூரிட்டிகிட்ட பேச்சு'' - அது அவருடைய மனைவியின் குரல்.
"வேலையெல்லாம் முடிச்சுட்டு வரணுமில்ல?'' என்று இரண்டடி ஓர் அடியாகத் தாவி ஓடினார் பஞ்சாபகேசன்.
புதன், ஜனவரி 21, 2009
திரைக்குப் பின்னே -16
திரையுலகின் தடயங்கள்
காணாமல் போன ஆட்டுக்குட்டி கேள்விபட்டிருக்கிறோம். காணாமல் போன குழந்தைகள் கேள்விபட்டிருக்கிறோம். குங்குமத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். காணாமல் போய்விட்ட நடிகர் நடிகைகள் பற்றி எழுதுங்கள். அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுங்கள் என்றார்.
சிறு பட்டியல் தயாரானது. சிலர் நடிகர்கள், பலர் நடிகைகள். அன்றாடம் ஸ்டூடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், ஆயிரம் வாட்ஸ் பல்புகளுக்கு முன் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்களாக ஒட்டியிருந்தவர்கள், பிலிம் சுருள்களாகப் பயணித்தவர்கள்... என் கண் முன்னால் அப்படித் துடைத்துவிட்டது மாதிரி காணாமல் போனவர்கள் இரண்டு பேர். நாங்கள் தயாரித்த பட்டியலில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக விவரிக்க முடியாமல் போனவர்கள் அவர்கள்.
ஒருவர் ஹீரா. `இதயம்' படத்தில் அறிமுகமாகி "காதல்கோட்டை', "தொடரும்' படங்கள் வரை தொடர்ந்தவர். திடீரென ஒரு நாள் அவர் எந்தப் படத்திலும் இல்லாமல் போனார். தொலைக் காட்சித் தொடர்களில் இல்லை, ஒரு விழாவில் தலைக் காட்டவில்லை, அம்மா, அண்ணி என்று வேடமெடுக்கவில்லை. அவருடைய தொலைபேசியில் வேறு யாரோ பேசுகிறார்கள், அவர் இருந்த முகவரியில் வேறு யாரோ வசிக்கிறார்கள். இன்றைய தேதியில் அவர் காணாமல் போய் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சாதாரணமாக கடைத்தெருவில், தியேட்டரில், ஹோட்டலில் எங்கும் யார் கண்ணிலும் அவர் படவில்லை.
இரண்டாவது அபிராமி.
'வானவில்', 'பட்ஜெட் பத்மநாபன்', 'விருமாண்டி' என அவருடைய நடிப்புக்கு நல்ல உதாரணங்களைக் காட்டலாம். 'விருமாண்டி' போன்றதொரு படத்தில் நடித்தவர் அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குப் பிறகு அவரைப் பேட்டி எடுக்கவும் முடியாமல் மாயமானார்.
செல்போன், வீட்டு போன், முகவரி, இ மெயில் எதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர், அவர் உடன் நடித்தவர்கள், அவர் படத்தை இயக்கிய இயக்குநர்கள் யாருக்கும் அவர் என்ன ஆனார் என்று தெரிந்திருக்கவில்லை. அவருடைய கேரளத்து முகவரியையும் மாற்றிக் கொண்டார் என்றார்கள்.
இப்படி தூங்கி எழுந்த மறுநாள் எல்லா தொடர்பையும் துண்டித்துக் கொண்டற்கு நியாயமான ஆழமான காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களைத் தேடுபவர்களுக்கோ அல்லது தேடாதவர்களுக்கோ அது தெரிய வேண்டும் என்ற நியாயம் இல்லைதான்.
கொஞ்ச நாளைக்கு முன் சன் டி.வி. 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் யாருக்காகவோ விசாரித்தார்.. "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த நடிகை காஞ்சனா இப்போது எங்கே இருக்கிறார் என்று. மாதவி என்ன ஆனார் என்பார் சிலர். ரவளி, சுவலட்சுமி எல்லாம் இப்போது எங்கே என்பார்கள்.
ஒரு சினிமா ஆரம்பிக்கப்படும் போது மும்பையில் இருந்து ஒரு நடிகை வருகிறார், கேரளத்தில் இருந்து வில்லனை அழைத்து வருகிறார்கள், ஆந்திரத்தில் இருந்து அப்பா நடிகர், கர்நாடகத்தில் இருந்து ஒரு குணசித்திர நடிகர்... வேடந்தாங்கல் பறவைகள் போல கூடுகிறார்கள். படம் முடிந்ததும் கலைகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான தடயம்போல படம் மட்டும் அவ்வப்போது டி.வி.யில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூல்...!
கார்கில் நிதி திரட்டப்பட்ட நேரத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்குப் பின் புலமாக இருந்து உதவியவர்களில் அரவிந்த்சாமி முக்கியமானவர். மிக அமைதியாக அலுங்காமல் குலுங்காமல் பேசுகிறவராக அவரைப் பார்த்திருக்கிறேன். கலெக்டர், சாஃப்ட்வேர் என்ஜினீயர், கோடீஸ்வரர், அதிகாரி போன்ற வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருந்தார்கள். பெண்களைப் பார்த்து "நீ என்ன ஐஸ்வர்யா ராயா' என்பது மாதிரி ஆண்களில் "நீ என்ன அர்விந்த்சாமியா' என்று கேட்கிற வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அர்விந்த்சாமியை பட்டிக்காட்டு வேடத்தில் நடிக்க வைக்க ஏற்பாடானது.இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம். என் ஆசை ராசாவே, ராசா கைய வெச்சா, ராசய்யா என்ற படத்தின் டைட்டிலும் பாடலும் ராசா மயமாக இருந்தது. அவர் இசையமைப்பதாக ஒத்துக் கொண்டால் அவர் படத்தை போஸ்டரில் போட்டு படத்தை விற்றுவிடுவார்கள் அப்படியொரு நிலைமை. இந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் இந்தக் கிராமிய படத்துக்கு ராஜா இசையமைப்பதாக முடிவானது.அது தாலாட்டு. அதில் கிராமத்தான் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு ராஜா வந்தார்.
ராஜா அந்தப் பக்கம் வருகிறார் என்றாலே எதிரில் வருகிறவர்கள் சுவர் ஓரமாக ஒட்டிக் கொண்டு நிற்பார்கள். இளையராஜா வந்து கொண்டிருந்தார். அரவிந்த்சாமியிடம் அப்படி எந்தப் பதட்டமும் இல்லை. அவர் பாட்டுக்குச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். ராஜா நெருங்க நெருங்க சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது. சம்பந்தபட்ட இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்துக் கொண்டு ராஜா போனார். அரவிந்த்சாமி இன்னொரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு காரில் புறப்பட்டார். கூல்.
இன்னொரு சம்பவம்.
"மெட்டி ஒலி' தொடரில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக நடித்தவர்தான் அர்விந்த்சாமியின் அப்பா என்ற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. குங்குமத்தில் பணியாற்றிய அய்யனார் ராஜனிடம் அவரிடம் ஒரு பேட்டி எடுக்கச் சொன்னேன். அவரும் தம் மகனைப் பற்றி அப் பேட்டியில் சொல்லியிருந்தார். 73}ல் அவரை வேறொருவருக்குத் தத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அய்யனார் ராஜன் தொடர்ந்து அர்விந்த்சாமியிடம் பேசினார். உங்கள் தந்தையார் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. நீங்கள்
அவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
அரவிந்த்சாமி அமைதியாகச் சொன்னார்: "என்னுடைய அப்பா 73-லேயே இறந்து போயிட்டாரே....''
உச்சரிப்பு கூலாகத்தான் இருந்தது. மனதின் வலி அப்படி தெரியவில்லை.
வில்லன் விவேக்
கொஞ்சம் எம்.ஆர்.ராதா, கொஞ்சம் என்.எஸ்.கே. இரண்டும் கலந்த கலவை. நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். தனக்கான காட்சிகள் வசனங்கள் போன்றவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொள்பவர். படத்தில் மட்டுமல்ல, பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும்போதும் அதே அளவு கவனமாக இருப்பார். விவேக் எனக்கு வில்லனாகிப் போன ஒரு சம்பவம் இது.
சிவாஜியை இமிட்டேட் செய்து நடிப்பது பற்றி நிருபர் ஒருவர் விவேக்கிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் சிவாஜியை வைத்து பெருமை தேடிக் கொள்கிற விஷயம் அது என்று சொன்னார். எழுதிய நிருபர் என்னால் "சிவாஜிக்குப் பெருமை' - விவேக் அதிரடி பேட்டி!.. என்று எழுதிவிட்டார். வார இதழின் அட்டை மற்றும் டி.வி. விளம்பரத்திலும் அதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்கள். "சிவாஜியால் எனக்குக் கிடைத்த பெருமை' என்ற விஷயம் "என்னால் சிவாஜிக்குப் பெருமை' என்று வந்து கொண்டிருப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்தார் விவேக். எவ்வளவு சொல்லியும் விளம்பரம் நின்றபாடில்லை.
சிவாஜிக்குப் பதில் சொல்வதா? வீட்டுக்கு வரும் கண்டன போன்களுக்குப் பதில் சொல்வதா என்று தவித்துப் போனார். அதன் பிறகு அந்த இதழுக்கு மட்டும் பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்று கடும் கோபத்தில் இருந்த அவரை, நான் அந்த இதழுக்குப் பொறுப்பேற்றதும் சமாதானக் கொடியோடு சந்தித்தேன். அவரை ஒரு தொடர் எழுத வைக்கச் சம்மதிக்க வைத்தேன். வாரம் ஒரு வி.ஐ.பி. பற்றி எழுதுவதாக பேச்சு. அவர் சொல்ல, சொல்ல எழுதிக் கொண்டு வந்து அதை அவர் சொல்வதுபோலவே எழுதி, அச்சுக்குச் செல்வதற்கு முன் அதை ஒருமுறை அவரிடம் காட்டி ஒப்புதல் வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். எல்லாவற்றுக்கும் சம்மதித்து அந்தத் தொடர் வெளியானது. எட்டாவது வாரம் மீண்டும் பிரச்சினை. அச்சுக்குப் போவதற்கு முன்னர் அவர் படித்துத் தருவாரே அந்தப் பிரதி வருவதற்கு முன்னரே அச்சுக்குப் போனது. அந்த வார இதழ் வந்ததும் ""சாரி தமிழ்.. நான் எதிர்பார்த்தது நடந்துடுச்சு. இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்'' என்றார்.
அதன் பிறகு அந்தத் தொடர் தொடரப்படவில்லை. எவ்வளவு மன்னிப்புகளுக்குப் பின்னரும். எந்த மொழியிலுமே அவருக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
காணாமல் போன ஆட்டுக்குட்டி கேள்விபட்டிருக்கிறோம். காணாமல் போன குழந்தைகள் கேள்விபட்டிருக்கிறோம். குங்குமத்தில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். காணாமல் போய்விட்ட நடிகர் நடிகைகள் பற்றி எழுதுங்கள். அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் எழுதுங்கள் என்றார்.
சிறு பட்டியல் தயாரானது. சிலர் நடிகர்கள், பலர் நடிகைகள். அன்றாடம் ஸ்டூடியோக்களில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், ஆயிரம் வாட்ஸ் பல்புகளுக்கு முன் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்களாக ஒட்டியிருந்தவர்கள், பிலிம் சுருள்களாகப் பயணித்தவர்கள்... என் கண் முன்னால் அப்படித் துடைத்துவிட்டது மாதிரி காணாமல் போனவர்கள் இரண்டு பேர். நாங்கள் தயாரித்த பட்டியலில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக விவரிக்க முடியாமல் போனவர்கள் அவர்கள்.
ஒருவர் ஹீரா. `இதயம்' படத்தில் அறிமுகமாகி "காதல்கோட்டை', "தொடரும்' படங்கள் வரை தொடர்ந்தவர். திடீரென ஒரு நாள் அவர் எந்தப் படத்திலும் இல்லாமல் போனார். தொலைக் காட்சித் தொடர்களில் இல்லை, ஒரு விழாவில் தலைக் காட்டவில்லை, அம்மா, அண்ணி என்று வேடமெடுக்கவில்லை. அவருடைய தொலைபேசியில் வேறு யாரோ பேசுகிறார்கள், அவர் இருந்த முகவரியில் வேறு யாரோ வசிக்கிறார்கள். இன்றைய தேதியில் அவர் காணாமல் போய் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. சாதாரணமாக கடைத்தெருவில், தியேட்டரில், ஹோட்டலில் எங்கும் யார் கண்ணிலும் அவர் படவில்லை.
இரண்டாவது அபிராமி.
'வானவில்', 'பட்ஜெட் பத்மநாபன்', 'விருமாண்டி' என அவருடைய நடிப்புக்கு நல்ல உதாரணங்களைக் காட்டலாம். 'விருமாண்டி' போன்றதொரு படத்தில் நடித்தவர் அந்தப் படம் வெளியான சில தினங்களுக்குப் பிறகு அவரைப் பேட்டி எடுக்கவும் முடியாமல் மாயமானார்.
செல்போன், வீட்டு போன், முகவரி, இ மெயில் எதிலும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர், அவர் உடன் நடித்தவர்கள், அவர் படத்தை இயக்கிய இயக்குநர்கள் யாருக்கும் அவர் என்ன ஆனார் என்று தெரிந்திருக்கவில்லை. அவருடைய கேரளத்து முகவரியையும் மாற்றிக் கொண்டார் என்றார்கள்.
இப்படி தூங்கி எழுந்த மறுநாள் எல்லா தொடர்பையும் துண்டித்துக் கொண்டற்கு நியாயமான ஆழமான காரணங்கள் இருக்கக்கூடும். அவர்களைத் தேடுபவர்களுக்கோ அல்லது தேடாதவர்களுக்கோ அது தெரிய வேண்டும் என்ற நியாயம் இல்லைதான்.
கொஞ்ச நாளைக்கு முன் சன் டி.வி. 'நேருக்கு நேர்' வீரபாண்டியன் யாருக்காகவோ விசாரித்தார்.. "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த நடிகை காஞ்சனா இப்போது எங்கே இருக்கிறார் என்று. மாதவி என்ன ஆனார் என்பார் சிலர். ரவளி, சுவலட்சுமி எல்லாம் இப்போது எங்கே என்பார்கள்.
ஒரு சினிமா ஆரம்பிக்கப்படும் போது மும்பையில் இருந்து ஒரு நடிகை வருகிறார், கேரளத்தில் இருந்து வில்லனை அழைத்து வருகிறார்கள், ஆந்திரத்தில் இருந்து அப்பா நடிகர், கர்நாடகத்தில் இருந்து ஒரு குணசித்திர நடிகர்... வேடந்தாங்கல் பறவைகள் போல கூடுகிறார்கள். படம் முடிந்ததும் கலைகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான தடயம்போல படம் மட்டும் அவ்வப்போது டி.வி.யில் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூல்...!
கார்கில் நிதி திரட்டப்பட்ட நேரத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்துவதற்குப் பின் புலமாக இருந்து உதவியவர்களில் அரவிந்த்சாமி முக்கியமானவர். மிக அமைதியாக அலுங்காமல் குலுங்காமல் பேசுகிறவராக அவரைப் பார்த்திருக்கிறேன். கலெக்டர், சாஃப்ட்வேர் என்ஜினீயர், கோடீஸ்வரர், அதிகாரி போன்ற வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்று முடிவு செய்திருந்தார்கள். பெண்களைப் பார்த்து "நீ என்ன ஐஸ்வர்யா ராயா' என்பது மாதிரி ஆண்களில் "நீ என்ன அர்விந்த்சாமியா' என்று கேட்கிற வழக்கமிருந்தது. அந்த நேரத்தில் அர்விந்த்சாமியை பட்டிக்காட்டு வேடத்தில் நடிக்க வைக்க ஏற்பாடானது.இளையராஜா கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம். என் ஆசை ராசாவே, ராசா கைய வெச்சா, ராசய்யா என்ற படத்தின் டைட்டிலும் பாடலும் ராசா மயமாக இருந்தது. அவர் இசையமைப்பதாக ஒத்துக் கொண்டால் அவர் படத்தை போஸ்டரில் போட்டு படத்தை விற்றுவிடுவார்கள் அப்படியொரு நிலைமை. இந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் இந்தக் கிராமிய படத்துக்கு ராஜா இசையமைப்பதாக முடிவானது.அது தாலாட்டு. அதில் கிராமத்தான் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு ராஜா வந்தார்.
ராஜா அந்தப் பக்கம் வருகிறார் என்றாலே எதிரில் வருகிறவர்கள் சுவர் ஓரமாக ஒட்டிக் கொண்டு நிற்பார்கள். இளையராஜா வந்து கொண்டிருந்தார். அரவிந்த்சாமியிடம் அப்படி எந்தப் பதட்டமும் இல்லை. அவர் பாட்டுக்குச் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். ராஜா நெருங்க நெருங்க சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது. சம்பந்தபட்ட இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பூஜையை முடித்துக் கொண்டு ராஜா போனார். அரவிந்த்சாமி இன்னொரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு காரில் புறப்பட்டார். கூல்.
இன்னொரு சம்பவம்.
"மெட்டி ஒலி' தொடரில் ஐந்து பெண்களுக்கு அப்பாவாக நடித்தவர்தான் அர்விந்த்சாமியின் அப்பா என்ற தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. குங்குமத்தில் பணியாற்றிய அய்யனார் ராஜனிடம் அவரிடம் ஒரு பேட்டி எடுக்கச் சொன்னேன். அவரும் தம் மகனைப் பற்றி அப் பேட்டியில் சொல்லியிருந்தார். 73}ல் அவரை வேறொருவருக்குத் தத்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அய்யனார் ராஜன் தொடர்ந்து அர்விந்த்சாமியிடம் பேசினார். உங்கள் தந்தையார் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.. நீங்கள்
அவரைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?
அரவிந்த்சாமி அமைதியாகச் சொன்னார்: "என்னுடைய அப்பா 73-லேயே இறந்து போயிட்டாரே....''
உச்சரிப்பு கூலாகத்தான் இருந்தது. மனதின் வலி அப்படி தெரியவில்லை.
வில்லன் விவேக்
கொஞ்சம் எம்.ஆர்.ராதா, கொஞ்சம் என்.எஸ்.கே. இரண்டும் கலந்த கலவை. நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். தனக்கான காட்சிகள் வசனங்கள் போன்றவற்றில் அதீத கவனம் எடுத்துக் கொள்பவர். படத்தில் மட்டுமல்ல, பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கும்போதும் அதே அளவு கவனமாக இருப்பார். விவேக் எனக்கு வில்லனாகிப் போன ஒரு சம்பவம் இது.
சிவாஜியை இமிட்டேட் செய்து நடிப்பது பற்றி நிருபர் ஒருவர் விவேக்கிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் சிவாஜியை வைத்து பெருமை தேடிக் கொள்கிற விஷயம் அது என்று சொன்னார். எழுதிய நிருபர் என்னால் "சிவாஜிக்குப் பெருமை' - விவேக் அதிரடி பேட்டி!.. என்று எழுதிவிட்டார். வார இதழின் அட்டை மற்றும் டி.வி. விளம்பரத்திலும் அதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார்கள். "சிவாஜியால் எனக்குக் கிடைத்த பெருமை' என்ற விஷயம் "என்னால் சிவாஜிக்குப் பெருமை' என்று வந்து கொண்டிருப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்தார் விவேக். எவ்வளவு சொல்லியும் விளம்பரம் நின்றபாடில்லை.
சிவாஜிக்குப் பதில் சொல்வதா? வீட்டுக்கு வரும் கண்டன போன்களுக்குப் பதில் சொல்வதா என்று தவித்துப் போனார். அதன் பிறகு அந்த இதழுக்கு மட்டும் பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்று கடும் கோபத்தில் இருந்த அவரை, நான் அந்த இதழுக்குப் பொறுப்பேற்றதும் சமாதானக் கொடியோடு சந்தித்தேன். அவரை ஒரு தொடர் எழுத வைக்கச் சம்மதிக்க வைத்தேன். வாரம் ஒரு வி.ஐ.பி. பற்றி எழுதுவதாக பேச்சு. அவர் சொல்ல, சொல்ல எழுதிக் கொண்டு வந்து அதை அவர் சொல்வதுபோலவே எழுதி, அச்சுக்குச் செல்வதற்கு முன் அதை ஒருமுறை அவரிடம் காட்டி ஒப்புதல் வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார். எல்லாவற்றுக்கும் சம்மதித்து அந்தத் தொடர் வெளியானது. எட்டாவது வாரம் மீண்டும் பிரச்சினை. அச்சுக்குப் போவதற்கு முன்னர் அவர் படித்துத் தருவாரே அந்தப் பிரதி வருவதற்கு முன்னரே அச்சுக்குப் போனது. அந்த வார இதழ் வந்ததும் ""சாரி தமிழ்.. நான் எதிர்பார்த்தது நடந்துடுச்சு. இந்த வாரத்தோட நிறுத்திக்குவோம்'' என்றார்.
அதன் பிறகு அந்தத் தொடர் தொடரப்படவில்லை. எவ்வளவு மன்னிப்புகளுக்குப் பின்னரும். எந்த மொழியிலுமே அவருக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
திங்கள், ஜனவரி 19, 2009
புத்தக விமர்சனம்
ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்
புத்தகத்தின் பெயர் : ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்
விலை : ரூ.60
எழுத்தாளர் : தமிழ்மகன்
பதிப்பகம் : முற்றம்
17/9, சாமி ஆச்சாரி தெரு,
புதுப்பாக்கம், ராயப்பேட்டை, சென்னை-14.
தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்' நாவல் சினிமா உலகத்தை கழுகுக் கோணத்தில்(Eagle's eye view) பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் தமிழ்மகன். சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்', ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை', ஜெயமோகனின் 'கன்யாகுமரி' போன்ற முக்கிய நாவல்கள் வரிசையில் தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவதுதளம்' நிச்சயம் இடம்பெறும்.
கவிஞர் நா.முத்துக்குமார்
http://tamilcinema.com/general/books/AVMStudio.asp
புத்தகத்தின் பெயர் : ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்
விலை : ரூ.60
எழுத்தாளர் : தமிழ்மகன்
பதிப்பகம் : முற்றம்
17/9, சாமி ஆச்சாரி தெரு,
புதுப்பாக்கம், ராயப்பேட்டை, சென்னை-14.
தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவது தளம்' நாவல் சினிமா உலகத்தை கழுகுக் கோணத்தில்(Eagle's eye view) பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் தமிழ்மகன். சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்', ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை', ஜெயமோகனின் 'கன்யாகுமரி' போன்ற முக்கிய நாவல்கள் வரிசையில் தமிழ்மகனின் 'ஏவி.எம்.ஸ்டுடியோ ஏழாவதுதளம்' நிச்சயம் இடம்பெறும்.
கவிஞர் நா.முத்துக்குமார்
http://tamilcinema.com/general/books/AVMStudio.asp
வியாழன், ஜனவரி 15, 2009
தினமணி கதிரில் என் சிறுகதை
மணமகள்
பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.
எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.
நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.
உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.
யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.
பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.
ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.
"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.
"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.
அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.
கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.
வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'
இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.
"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.
ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.
முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.
"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.
"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார். பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.
கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.
யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.
மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.
பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.
எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.
நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.
உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.
யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.
பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.
ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.
"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.
"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.
அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.
கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.
வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'
இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.
"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.
ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.
முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.
"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.
"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார். பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.
கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.
யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.
மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.
திரைக்குப் பின்னே -15
காமெடி... கீமெடி..!
‘என் ராசாவின் மனசிலே' படத்திலேயே தன் தனித்துவமான மதுரைத்தனங்களோடு பெயரெடுத்தவர் வடிவேலு. நண்பர் புவி. உமாசந்திரன் இணைத் தயாரிப்பாளராக இருந்த 'ஒருவழிப் பாதை’ படத்திலேயே அவரை நடிக்க வைத்தார். சொல்லப் போனால் வடிவேலு ஆரம்பத்தில் மிகவும் வயதானவராக இருந்து மெல்ல, மெல்ல இளைஞரானதுபோல இருக்கிறது. தோற்றத்தில் அந்த மாற்றம்.
நான் அவரை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரியேஷன் நிறுவனத்தில் முதன் முதலாகச் சந்தித்தேன். வடக்கு உஸ்மான் சாலையில் அந்த அலுவலகத்துக்குச் செல்லும் படியில் அவர் நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வாரம் வெளியாகியிருந்த ‘தேவர் மகனி'ல் அவர் நடிப்பு பிரமாதம் என்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். அண்ணே ரொம்ப சந்தோஷம்ணே... நம்மளப் பத்தி ஏதாச்சும் செய்தி போடுங்கண்ணே..'' என்று ஆசையாகக் கேட்டார். "உங்கள் புகைப்படம் ஒன்று தாருங்கள்'' என்றேன். "அதாண்ணே கையில இல்ல... நீங்க... இதோ இங்கிட்டு நேரா போனீங்கன்னா... ஒரு ஸ்டுடியோ வரும். எம் பேரைச் சொல்லி ஒரு போட்டோ வாங்கிக்கங்க... நீங்க காசு எதுவும் கொடுக்க வேணாம்'' என்று ரெட் சன் அலுவலகத்துக்கு எதிரில் இருந்த தெருவைக் காட்டினார். அவர் சொன்ன இடத்தில் ஒரு போட்டோ ஸ்டுடியோ இருந்தது. நான் இவர் பெயரைச் சொல்லி போட்டோ கேட்டேன். "என்ன சைஸ்'' என்றார். "ஃபைவ் பை செவன் போதும்'' என்றேன். "இருபது ரூபாய் ஆகும்" என்றார். என்னிடத்தில் அப்போது காசு இல்லை. அதுவும் இல்லாமல் வடிவேலுதான் சொன்னார் என்று நான் சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டுமானால் அவரை வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். ‘தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசனோடு அவர் இருந்த படத்தையே வெட்டி எடுத்து வண்ணத்திரையில் பயன்படுத்தினேன். ‘மகராசன்' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது "பார்த்தேண்ணே... ரொம்ப சந்தோஷம்'' என்று நெகிழ்ந்தார்.
அந்தக் கிராமத்து மனசு அவருக்கு இப்போதும் இருப்பதால்தான் அவர் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டிய வண்ணம் இருக்கிறார். ‘அன்பு' என்ற படத்தின் படப்பிடிப்பு. ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களில் சிலர் அவரை நெருங்கி, ”விவேக் காமெடியைவிட உங்க காமெடிதாண்ணே சூப்பர். டி.வி.யைக் கிண்டல் பண்றது. போலீஸ் கான்ஸ்டபிளை வைத்துக் கிண்டல் பண்றதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காதுண்ணே'' என்றனர். வடிவேலு பூரித்துப் போவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர், "விவேக்கை அப்படிச் சொல்லாதீங்கண்ணே... அவனைப் போல வருமா... ரசனைக்காரண்ணே அவன்... பெரிய ரசனைக்காரன்'' என்றார் வடிவேலு.
நகைச்சுவை நடிகராக மிக உச்சத்துக்கு வந்த பின்னும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
இந்த விஷயத்தில் அவரை வைத்து காமெடி, கீமெடி பண்ணிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.
பானுப்ரியம்!
தினமணி அலுவலகத்துக்கு பானுப்ரியா வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.
அவருடைய பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பேசினார். "மேடம் பேசணும்னு சொன்னாங்க'' என்றார். ரிஸீவர் பானுப்ரியாவின் கைக்கு மாறுகிறது.
"வணக்கம் சார்... இந்த வருஷம் வந்த தீபாவளி மலர் எனக்கு ஒண்ணு கிடைக்குமா? அதில சிவாஜி சார் என்னைப் பத்தி சொல்லியிருக்கறதா சொன்னாங்க. எனக்கு இங்க எங்கயும் பத்திரிகை கிடைக்கல'' என்றார்.
"கொடுத்தனுப்புகிறேன்'' என்றேன்.
"என்னைப் பத்தி என்ன சொன்னார்னு சொல்ல முடியுமா?'' என்றார்.
"இப்போது நடிக்கும் நடிகையரில் திறமையான நடிகையாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டோம். அவர் உங்களைச் சொன்னார்'' என்றேன்.
"அது சரி. என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?'' என்றார் ஆர்வமாக.
"புத்தகமே அனுப்புகிறேன்'' என்றேன் மறுபடியும்.
"அனுப்புங்கள். என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்'' மீண்டும் ஆர்வம்.
"விஸ்வாமித்ரா' படத்தில் நீங்கள் அவருடன் நடித்தபோது உங்கள் நடிப்பை மிகவும் வியந்ததாகச் சொல்லியிருக்கிறார்'' என்றேன்.
ஆனால் அது அவருக்கு முக்கியமில்லை. அவர் வார்த்தையால் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.
விஸ்வாமித்திரர் வாயால்(?) பிரம்மரிஷி பட்டம் வாங்குகிற தவிப்பு.
நான் தீபாவளி மலரை எடுத்து அந்தப் பகுதியை அப்படியே வாசித்துக் காண்பித்தேன். அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை.
அப்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது.
நண்பர் ஒருவர் அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற போது கேள்விக்குத் தான் சொன்ன பதிலை திரும்பச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அது அப் படத்தில் அவர் பேசிய வசனம் பற்றியது. அவர் சொன்னதைக் குறிப்பெடுத்து வைத்திருந்த நிருபர் தோராயமாக அதைத் திருப்பிச் சொல்லியிருக்கிறார். பானுப்ரியா அவருக்குப் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார். "இப்போதுதான் சொன்ன ஒன்றையே ஒழுங்காகக் குறிப்பெடுக்காத நீங்கள், இந்தப் பேட்டியை எப்படியெல்லாம் திரித்து எழுதுவீர்களோ.. மன்னிக்கவும்'' என்று சொல்லிவிட்டார். சிவாஜி என்ன சொன்னார் என்பதில் அவர் எடுத்துக் கொண்ட பிரியம் சரிதானே?
கவுண்டமணி... செந்தில்!
கவுண்டமணி - செந்தில் காமெடி சினிமாவுக்கு மிகவும் தொன்மையான பாணி. லாரல்- ஹார்டி, டாம் அண்ட் ஜெர்ரி டைப். வலுத்தவர் இளைத்தவர்... ஒருவருக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. இன்னொருவருக்கு அப்பாவித் தோற்றம். இந்த இருவருக்கும் ஓயாமல் அடிநாதமாக ஒரு விரோதம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இருவரும் பிரிவதே இல்லை.
செந்திலை கவுண்டமணி எல்லை மீறிப் பேசுகிறார் என்றுகூட பத்திரிகையில் எழுதினார்கள். கவுண்டமணி கண்டு கொள்வதாக இல்லை. அவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் செந்திலை விதம்விதமாகத் திட்டித் தீர்த்தார். செந்திலும் அவரை எடக்கு மடக்காக மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார். மக்களும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எட்டி உதைப்பதும், பன்றி, ஆமைத் தலையன், சொறி நாய் என்றெல்லாம் செந்திலை விளிக்க ஆரம்பித்தார். பத்திரிகை கண்டிப்பது இருக்கட்டும். செந்தில் வீட்டில் இதைத் தடுக்க முனைய மாட்டார்களா? இப்படியெல்லாம் நடிக்காமல் இவர் தவிர்க்கலாமே என்றும் தோன்றியது.
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்தின் படப்பிடிப்பில் நானும் இன்னொரு பத்திரிகையாளரும் தைரியமாக கவுண்டமணியிடம் இதைப் புகாராகவே சொன்னோம்.
"அவரை ஏன் அப்படியெல்லாம் திட்டுகிறீர்கள்?''
சற்று தூரத்தில் நாற்காலியிலேயே உட்கார்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்த செந்திலைக் காட்டி கவுண்டமணி சொன்னார்: "இவனைப் பாருங்க. இவன் தலையைப் பாருங்க. நான் சொல்றது சரியா... தப்பா? நீங்களே சொல்லுங்க '' என்றார் சலிப்புடன். கவுண்டமணி ஏற்கெனவே செந்திலைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருந்த சித்திரத்தின் காரணமாகவோ, செந்தில் அப்படி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாய்ந்திருந்த நிலையைப் பார்த்தோ எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"சிரிப்பு வருதில்ல... போய்ட்டு வாங்க'' அனுப்பிவிட்டார்.
செந்திலை அவர் சினிமாவில் மட்டும் கிண்டல் செய்யவில்லை, நிஜத்திலும்தான். அவரும் அதை ஏற்றுக் கொண்டுதான் அண்ணே... அண்ணே என்று அவரிடம் பழகிக் கொண்டிருந்தார்.
எப்படி சுயமரியாதை பற்றி யோசிக்காமலேயே அவரால் இருக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
‘என் ராசாவின் மனசிலே' படத்திலேயே தன் தனித்துவமான மதுரைத்தனங்களோடு பெயரெடுத்தவர் வடிவேலு. நண்பர் புவி. உமாசந்திரன் இணைத் தயாரிப்பாளராக இருந்த 'ஒருவழிப் பாதை’ படத்திலேயே அவரை நடிக்க வைத்தார். சொல்லப் போனால் வடிவேலு ஆரம்பத்தில் மிகவும் வயதானவராக இருந்து மெல்ல, மெல்ல இளைஞரானதுபோல இருக்கிறது. தோற்றத்தில் அந்த மாற்றம்.
நான் அவரை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரியேஷன் நிறுவனத்தில் முதன் முதலாகச் சந்தித்தேன். வடக்கு உஸ்மான் சாலையில் அந்த அலுவலகத்துக்குச் செல்லும் படியில் அவர் நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த வாரம் வெளியாகியிருந்த ‘தேவர் மகனி'ல் அவர் நடிப்பு பிரமாதம் என்று சொன்னேன். மிகவும் சந்தோஷப்பட்டார். அண்ணே ரொம்ப சந்தோஷம்ணே... நம்மளப் பத்தி ஏதாச்சும் செய்தி போடுங்கண்ணே..'' என்று ஆசையாகக் கேட்டார். "உங்கள் புகைப்படம் ஒன்று தாருங்கள்'' என்றேன். "அதாண்ணே கையில இல்ல... நீங்க... இதோ இங்கிட்டு நேரா போனீங்கன்னா... ஒரு ஸ்டுடியோ வரும். எம் பேரைச் சொல்லி ஒரு போட்டோ வாங்கிக்கங்க... நீங்க காசு எதுவும் கொடுக்க வேணாம்'' என்று ரெட் சன் அலுவலகத்துக்கு எதிரில் இருந்த தெருவைக் காட்டினார். அவர் சொன்ன இடத்தில் ஒரு போட்டோ ஸ்டுடியோ இருந்தது. நான் இவர் பெயரைச் சொல்லி போட்டோ கேட்டேன். "என்ன சைஸ்'' என்றார். "ஃபைவ் பை செவன் போதும்'' என்றேன். "இருபது ரூபாய் ஆகும்" என்றார். என்னிடத்தில் அப்போது காசு இல்லை. அதுவும் இல்லாமல் வடிவேலுதான் சொன்னார் என்று நான் சொன்னதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டுமானால் அவரை வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். ‘தேவர் மகன்' படத்தில் கமல்ஹாசனோடு அவர் இருந்த படத்தையே வெட்டி எடுத்து வண்ணத்திரையில் பயன்படுத்தினேன். ‘மகராசன்' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தபோது "பார்த்தேண்ணே... ரொம்ப சந்தோஷம்'' என்று நெகிழ்ந்தார்.
அந்தக் கிராமத்து மனசு அவருக்கு இப்போதும் இருப்பதால்தான் அவர் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டிய வண்ணம் இருக்கிறார். ‘அன்பு' என்ற படத்தின் படப்பிடிப்பு. ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களில் சிலர் அவரை நெருங்கி, ”விவேக் காமெடியைவிட உங்க காமெடிதாண்ணே சூப்பர். டி.வி.யைக் கிண்டல் பண்றது. போலீஸ் கான்ஸ்டபிளை வைத்துக் கிண்டல் பண்றதெல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காதுண்ணே'' என்றனர். வடிவேலு பூரித்துப் போவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர், "விவேக்கை அப்படிச் சொல்லாதீங்கண்ணே... அவனைப் போல வருமா... ரசனைக்காரண்ணே அவன்... பெரிய ரசனைக்காரன்'' என்றார் வடிவேலு.
நகைச்சுவை நடிகராக மிக உச்சத்துக்கு வந்த பின்னும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறார் என்று வியப்பாக இருந்தது.
இந்த விஷயத்தில் அவரை வைத்து காமெடி, கீமெடி பண்ணிட முடியாது என்றுதான் தோன்றுகிறது.
பானுப்ரியம்!
தினமணி அலுவலகத்துக்கு பானுப்ரியா வீட்டில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது.
அவருடைய பத்திரிகை தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பேசினார். "மேடம் பேசணும்னு சொன்னாங்க'' என்றார். ரிஸீவர் பானுப்ரியாவின் கைக்கு மாறுகிறது.
"வணக்கம் சார்... இந்த வருஷம் வந்த தீபாவளி மலர் எனக்கு ஒண்ணு கிடைக்குமா? அதில சிவாஜி சார் என்னைப் பத்தி சொல்லியிருக்கறதா சொன்னாங்க. எனக்கு இங்க எங்கயும் பத்திரிகை கிடைக்கல'' என்றார்.
"கொடுத்தனுப்புகிறேன்'' என்றேன்.
"என்னைப் பத்தி என்ன சொன்னார்னு சொல்ல முடியுமா?'' என்றார்.
"இப்போது நடிக்கும் நடிகையரில் திறமையான நடிகையாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள் என்று கேட்டோம். அவர் உங்களைச் சொன்னார்'' என்றேன்.
"அது சரி. என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்?'' என்றார் ஆர்வமாக.
"புத்தகமே அனுப்புகிறேன்'' என்றேன் மறுபடியும்.
"அனுப்புங்கள். என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்'' மீண்டும் ஆர்வம்.
"விஸ்வாமித்ரா' படத்தில் நீங்கள் அவருடன் நடித்தபோது உங்கள் நடிப்பை மிகவும் வியந்ததாகச் சொல்லியிருக்கிறார்'' என்றேன்.
ஆனால் அது அவருக்கு முக்கியமில்லை. அவர் வார்த்தையால் என்ன சொன்னார் என்று மீண்டும் கேட்டார்.
விஸ்வாமித்திரர் வாயால்(?) பிரம்மரிஷி பட்டம் வாங்குகிற தவிப்பு.
நான் தீபாவளி மலரை எடுத்து அந்தப் பகுதியை அப்படியே வாசித்துக் காண்பித்தேன். அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை.
அப்போது இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்தது.
நண்பர் ஒருவர் அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற போது கேள்விக்குத் தான் சொன்ன பதிலை திரும்பச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார். அது அப் படத்தில் அவர் பேசிய வசனம் பற்றியது. அவர் சொன்னதைக் குறிப்பெடுத்து வைத்திருந்த நிருபர் தோராயமாக அதைத் திருப்பிச் சொல்லியிருக்கிறார். பானுப்ரியா அவருக்குப் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பிவிட்டார். "இப்போதுதான் சொன்ன ஒன்றையே ஒழுங்காகக் குறிப்பெடுக்காத நீங்கள், இந்தப் பேட்டியை எப்படியெல்லாம் திரித்து எழுதுவீர்களோ.. மன்னிக்கவும்'' என்று சொல்லிவிட்டார். சிவாஜி என்ன சொன்னார் என்பதில் அவர் எடுத்துக் கொண்ட பிரியம் சரிதானே?
கவுண்டமணி... செந்தில்!
கவுண்டமணி - செந்தில் காமெடி சினிமாவுக்கு மிகவும் தொன்மையான பாணி. லாரல்- ஹார்டி, டாம் அண்ட் ஜெர்ரி டைப். வலுத்தவர் இளைத்தவர்... ஒருவருக்கு விஷயம் தெரிந்தவர் என்ற அடையாளம்.. இன்னொருவருக்கு அப்பாவித் தோற்றம். இந்த இருவருக்கும் ஓயாமல் அடிநாதமாக ஒரு விரோதம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இருவரும் பிரிவதே இல்லை.
செந்திலை கவுண்டமணி எல்லை மீறிப் பேசுகிறார் என்றுகூட பத்திரிகையில் எழுதினார்கள். கவுண்டமணி கண்டு கொள்வதாக இல்லை. அவர் சுமார் நூறு படங்களுக்கு மேல் செந்திலை விதம்விதமாகத் திட்டித் தீர்த்தார். செந்திலும் அவரை எடக்கு மடக்காக மாட்டிவிட்டுக் கொண்டிருந்தார். மக்களும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். எட்டி உதைப்பதும், பன்றி, ஆமைத் தலையன், சொறி நாய் என்றெல்லாம் செந்திலை விளிக்க ஆரம்பித்தார். பத்திரிகை கண்டிப்பது இருக்கட்டும். செந்தில் வீட்டில் இதைத் தடுக்க முனைய மாட்டார்களா? இப்படியெல்லாம் நடிக்காமல் இவர் தவிர்க்கலாமே என்றும் தோன்றியது.
‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்தின் படப்பிடிப்பில் நானும் இன்னொரு பத்திரிகையாளரும் தைரியமாக கவுண்டமணியிடம் இதைப் புகாராகவே சொன்னோம்.
"அவரை ஏன் அப்படியெல்லாம் திட்டுகிறீர்கள்?''
சற்று தூரத்தில் நாற்காலியிலேயே உட்கார்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்த செந்திலைக் காட்டி கவுண்டமணி சொன்னார்: "இவனைப் பாருங்க. இவன் தலையைப் பாருங்க. நான் சொல்றது சரியா... தப்பா? நீங்களே சொல்லுங்க '' என்றார் சலிப்புடன். கவுண்டமணி ஏற்கெனவே செந்திலைப் பற்றி ஏற்படுத்தி வைத்திருந்த சித்திரத்தின் காரணமாகவோ, செந்தில் அப்படி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாய்ந்திருந்த நிலையைப் பார்த்தோ எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"சிரிப்பு வருதில்ல... போய்ட்டு வாங்க'' அனுப்பிவிட்டார்.
செந்திலை அவர் சினிமாவில் மட்டும் கிண்டல் செய்யவில்லை, நிஜத்திலும்தான். அவரும் அதை ஏற்றுக் கொண்டுதான் அண்ணே... அண்ணே என்று அவரிடம் பழகிக் கொண்டிருந்தார்.
எப்படி சுயமரியாதை பற்றி யோசிக்காமலேயே அவரால் இருக்கமுடிகிறது என்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
புதன், ஜனவரி 07, 2009
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
ஆனந்த விகடனில் என் சிறுகதை
நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால் அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. தொடர் வண்டியின் எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும் போதும் அதிக மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல என் வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்று துறு துறு முகம் அது. அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்ட போதெல்லாம் மனதின் ஆழத்தில் இருந்து மிதந்து மிதந்து மேற்பரப்புக்கு வந்து பரவசமூட்டுவதாக அது இருக்கிறது.
சொல்லப் போனால் அக்கா என்று அவரை நான் அழைப்பது அத்தனை சரியில்லை. அது அந்த உறவின் பெயரைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.
நான் மீன் வரைவதற்குக் கைபிடித்துச் சொல்லித் தந்தவர் மஞ்சுளா அக்காதான். அவர் மிகச் சுலபமாக மீன்களை வரைந்தார். பென்சிலை இப்படியும் அப்படியும் சுழற்றினால் அது மீனாக மாறிவிடுவதாக நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். புதிதாகத் திருமணமாகி நாங்கள் இருந்த வீட்டுக்குக் குடிவந்திருந்த மஞ்சு அக்காவுக்குக் குழந்தைகள் இல்லாததால் எனக்கு அவர்கள் வீட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. சுரேஷ் அங்கிள் எனக்காக என்றே கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வர ஆரம்பித்திருந்தார். நான்காம் வகுப்பு படித்தபோது எனக்கு வேறென்ன தேவை இருக்க முடியும்? சாப்பிட சாக்லெட், ஹோம் ஒர்க் செய்ய ஒரு ஆள்.
சுரேஷ் அங்கிள் என்னை "மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு அழைத்துச் சென்றார். அது என் வயதின் ருசிக்கு ஏற்ற படம் அல்ல. அதில் கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து தத்தளிக்கிற படம். மனைவி வேறொருவனுடன் பழகியதைத் தெரிந்து கணவன் அவனைச் சந்தேகிப்பதுகூட ஓரளவுக்குப் புரிந்தது; ஆனால் அதற்காகக் கணவனும் மனைவியும் ஏன் அவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதுதான் அப்போது புரியாததாக இருந்தது.
""படம் பிடிச்சிருக்கா?'' ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது சுரேஷ் அங்கிள் கேட்டார்.
செலவு செய்து அழைத்துச் சென்றவரின் மனம் நோகக்கூடாது என்பது போன்ற ஒரு காரணத்தால் பிடித்திருக்கிறது என்று சொன்னேன்.
கொஞ்ச நேரம் சைக்கிள் ரிக்ஷாவின் செயின் சுழலும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் ""சந்தேகம் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா வீடு அவ்வளவுதான்'' என்றார்.
ஒரு அதிகாலைப் பொழுதில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து "மஞ்சுவைக் காணலை'' என்றார். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர் எப்படிக் காணாமல் போய்விட முடியும் என்று குழம்பிப் போய் நான் பதறினேன்.
"நைட் எனக்கும் அவளுக்கும் சண்டை... அடிச்சுட்டேன். ராத்திரி முழுக்க தூங்காம உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா. மூணு மணிக்குக் கொஞ்சம் அசந்துட்டேன். நாலு மணிக்குப் பார்க்கிறேன்... காணோம்'' என்றார்.
அதன் பிறகு என்னை அவர்கள் அங்கே இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டின் குடித்தனக்காரர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் விஷயமாக இருந்தது. வீட்டின் எதிரில் இருந்த லாண்டரி கடை, பக்கத்தில் இருந்த தையல் கடை எல்லாவற்றிலும் அந்தப் பேச்சு ஓடியது.
மஞ்சு அக்கா இதே வீட்டில் இருக்கும் மனோகரிடம் தொடர்பு வைத்திருந்ததால்தான் அந்தச் சண்டை என்று அப்போது காதில் வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் அந்த விவகாரத்தைப் புரிந்து கொண்டேன்.
வீட்டை விட்டுப் போன மஞ்சு அக்கா கங்காதீஸ்வரர் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடக்க யாரோ காப்பாற்றி வீடு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அடுத்த சில நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய் குடியேறினார்கள். எங்கள் தெரு வாய்களுக்கும் சில நாள்களில் மெல்லுவதற்கு வேறு அவல் கிடைத்தது. அக்கா திடீரென்று ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அக்காவைப் பற்றி யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் எனக்குக் கண்களில் நீர் துளிர்ப்பது வழக்கமாக இருந்தது. சமயத்தில் அவர்கள் அக்காவைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நான் ஒரு மெüன சாட்சியாக அழுது கொண்டிருந்தேன்.
மஞ்சு அக்காவின் முதல் முகம் இதுதான்.
நான் கல்லூரிக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த வேளை. வேறு ஒரு புரிதலில் நான் அவரைப் புரிந்து கொண்டது அப்போதுதான். நான்கைந்து குடித்தனக்காரப் பெண்கள் உள்ளறையில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்தார்கள். விஷயம் மஞ்சுவைப் பற்றி.
இ} மெயில், இண்டெர் நெட், செல் போன் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இத்தகைய விஷயங்கள் எப்படி விநியோகமாகின என்பது இப்போது நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
"அவன் அப்பவே செத்துப் போயீ... இவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணக்கிட்டுப் போயிட்டாளாம்'' இதுதான் சட்டென ஈர்த்தது.
அவர்களின் பேச்சில் அடுத்த அரை மணி நேரத்தில் என்னால் கிரகிக்க முடிந்தது இதுதான்... இங்கிருந்து சென்ற மூன்றாம் ஆண்டிலேயே அதிக குடிப் பழக்கம் காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார் என்பதும் அடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சு அக்கா வேறு யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் அப்போதுதான் மனத் தடாகத்தில் மிதக்கத் தொடங்கியது.
அன்றொரு நாள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் ஓடிப் போய் மஞ்சு அக்காவின் மடியில் விழுந்தேன். மஞ்சு அக்கா தன் வீட்டு வாசப்படியை ஒட்டி உட்கார்ந்திருந்தார். நான் இப்படி வந்து விழுவேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பதறிப்போனார். அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லாம் அதைவிட பதறினார்கள். ""ஐயோ... ஐயோ'' என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு என்னை அவர் எழுந்து செல்ல விடவில்லை. ""நீயும் அக்காகூடவே குளிச்சுட்டு வந்து வேற ட்ரஸ் போட்டுக்க'' என்றார்கள். நான் யாருடன் குளிக்க வேண்டும் என்று குடித்தனக்காரப் பெண்கள் முடிவு செய்தது அநீதியாக இருந்தது. அம்மாவும் நான்கு குடித்தனத்துக்கும் பொதுவாக இருந்த குளியல் அறையில் எனக்கான வேறு ட்ரஸ்ûஸ கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார்கள்.
மஞ்சு அக்கா தன் கைகள் ஆரம்பிக்கும் இடம் வரைக்கும் பாவாடையை இழுத்துக் கட்டிக் கொண்டு என் பள்ளிக் கூட ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாட்டினார். எனக்கு அழுகை பீறிட்டது. கதறி அழுதேன். ""இப்ப ஏன் அழறே?... நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?'' என்று கன்னத்தைக் கிள்ளினார். குளியல் என்ற பெயரில் இரண்டு சொம்பு தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு நான் வெளியில் தப்பி ஓடி வந்தேன். மஞ்சு அக்காவே என் டிரஸ்ûஸ துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். ""அக்காவைத் தொட்டுட்டுக் குளிக்காம வந்தா தேள் கொட்டிடும்'' என்றாள் அம்மா.
மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் உண்மையில் கொட்டும் தேளாக இருந்தது. அது என் நினைவின் தகிப்புக்கு ஏற்ற ஜோடியாக இருந்தது. மஞ்சு அக்கா சுகத்துக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் படிமமாக நெஞ்சில் நிலைகுத்தியது. மஞ்சு அக்காவுடன் தொடர்பு படுத்தப்பட்ட மனோகர் என் நினைவுக்கு வந்தார். பருவம் தரும் புதிய பாடமாக இருந்தது எல்லாமும். அவரைப் பற்றி நினைத்துப் பார்க்க நேர்ந்தது சற்று ஏன் என்பது மெல்ல புரிந்தது. அவர் மீது சற்று பொறாமை கொள்ள பழகிக் கொண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. என்னை பிறந்த மேனியாகப் பார்த்த வேற்றுப் பெண் என்றால் அது மஞ்சு அக்கா மட்டும்தான். "நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?' என்ற வாக்கியம் எனக்குப் போதையூட்டும் வாக்கியமானது. மஞ்சு, அக்கா இரண்டும் சேர்ந்து ஒரு பெயர்ச் சொல்லாக மாறிவிட்டது. அது உறவின் பெயராக இல்லை. என் கனவுப் பெண்ணாக, காதலியாக, எண்ணி உருகும் தகிப்பின் வடிகால இருந்தார். அதனால்தான் அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகச் சொன்னேன்.
அதன் பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் மன பிம்பத்தை நிஜத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தவித்தேன். நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு புள்ளி அளவு தயக்கம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் புள்ளியின் வலிமை என்னை கடைசி வரை தடுத்துவிட்டது. நான் பார்க்க முடியாத ஏக்கம் என்னை வாட்டியது. வாடுவது மனதின் வடு போல நீக்கமற இருந்தது. அவரைத் தேடிச் சென்று பார்த்து அந்த வடிவத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டியிருக்குமோ எனவும் இருந்தது. இச்சைக்குக் நான் கொடுத்துக் கொண்ட வடிவமாகவும் இருந்தார் மஞ்சு அக்கா.
அவரோடு எனக்கிருந்த மிகச் சில நினைவுகளைத் தூசு தட்டி ஊதிப் பெரிதாக்கி அசைபோட ஆரம்பித்தேன்.
ஒரு நாள் இரவு என்னை மஞ்சு அக்கா வீட்டின் ஓட்டுக் கூரை மீது ஏற்றிவிட்டு பக்கத்துவீட்டு மாமரத்தில் காய்த்துத் தொங்கிய மாம்பழத்தைப் பறிக்க வைத்தது ஞாபகம் வந்தது. அது விசேஷமான மரம். அதன் ஒரு கிளையில் புளிப்புச் சுவை உள்ள மாம்பழமும் இன்னொரு கிளையில் இனிப்புச் சுவையுள்ள மாம்பழமும் காய்த்தது. எங்கள் வீட்டுக் கூரையின் பக்கம் புளிப்புச் சுவைக் கிளை. அது எங்கள் வீட்டு ஓட்டின் மீது ஓய்வாகப் படுத்திருப்பதுபோல இருந்தது. திருடித்தின்றதால் மாற்றான் தோட்டத்து மாம்பழம் எங்களுக்கு அது இனிப்பாகவே தெரிந்தது.
"மயங்குகிறாள் ஒரு மாது' படம் மீண்டும் திரையிட்டால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் மீண்டும் எங்கும் திரையிட்டதாகத் தெரியவில்லை. மஞ்சு அக்கா என்றதும் மஞ்சள் நிறத்தில் சிறிய சிறிய பூ போட்ட புடவை அணிந்து அவர் குறு குறுவென பார்க்கிற பார்வை ஞாபகத்துக்கு வருகிறது. அவர் நல்ல உயரம் என்றும் கச்சிதமான உடல் வாகும் சிவந்த மேனியும் உள்ளவர் என்றும் மனச்சித்திரம் பதிந்திருந்தது.
என் இரண்டு குழந்தைகள் வளர்ந்து நிற்கும் இந்த வயதில் மஞ்சு அக்கா நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல இருந்தார். எங்கள் குடும்பமும் குடித்தன வீடுகளுக்கு நடுவே புழங்கும் நிலை மாறிவிட்டது.
ஓட்டலுக்குக் காய்கறி சப்ளை செய்யும் அவருடைய கணவர் நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் ஒரே ஒரு பையன் இருப்பதாகவும் அவனைப் படித்து ஆளாக்க ரைஸ் மில்லில் உமி அள்ளும் வேலை செய்துவருவதாகச் சொன்னார்கள். இந்தமுறை எங்கள் வீட்டுடெலி போனுக்குத்தான் தகவல் வந்தது. பிறந்த வீட்டு உறவும் அறுந்து புகுந்த வீட்டு உறவும் பொருந்தாமல் மஞ்சு அக்கா நிராதரவாகிப் போனதாகப் புரிந்து கொண்டேன். ஏனென்றால் தகவல் தந்தவர்கள் ""அவன் எவன்கூடவோ ஓடிப்போய் உருப்படாமப் போயிட்டாளாம்'' என்பதாகத்தான் சொன்னார்கள். உண்மையில் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு வசதியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்கிறவர்களும் அவரவர் வசதிக்கு ஏற்பத்தான் புரிந்து கொள்கிறார்கள். மொழியின் சூட்சுமம் அது.
தொடருமா எனச் சந்தேகித்த எத்தனையோ மனிதத் தொடர்புகள் இப்படியாகத் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சு அக்காவின் ஞாபகத்தடங்கள் எனக்குள் அழுந்தப் பதிந்து ஒற்றையடி பாதையாக ஓடிக் கொண்டிருப்பதால்தான் அந்தத் தொடர்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. ஞாபகச் சங்கிலிகளின் கண்ணிகள்.
என் மகளின் திருமணத்துக்காக பட்டுப்புடவை எடுக்கக் காஞ்சிபுரம் போயிருந்தபோது நடுவே குளிர் பானத்துக்காகக் காரை நிறுத்தினோம்.
"ஏம்பா மொத்தம் ஏழு நாளு... '' என்று அந்தப் பெண்மணி முறையிட்டுக் கொண்டிருந்தாள்.
"கெழ்வி சும்மா இருக்க மாட்டே... நாலு நாளுதான் கணக்கு வருது... செவ்வா ஒண்ணு, புதன் ரெண்டு, வியாயன் மூணு, வெள்ளி நாலு...''
"இல்ல கண்ணு... சனிக்கிழமலேர்ந்துப்பா''
எனக்குப் பகீரென்றது. அது மஞ்சு அக்காதான். புகையிலைப் போட்டு காவி ஏறிய பற்கள்... முகத்துச் சுருக்கம் உலர்ந்து போன உதடுகள், குங்குமம் தடம் மறைந்து போன நெற்றி, கணுக்காலுக்கு மேலே சுருங்கி தூக்கிக் கிடந்த எட்டுகஜம் புடவை. மஞ்சு அக்காவின் மூன்றாவது முகம். மனச்சித்திரம் நொறுங்கிய கணத்தில் நான் நிர்கதியாக நின்றேன்.
"மஞ்சு அக்கா?''
அவரை யாரும் அப்படி அழைத்திருக்க வாய்ப்பில்லை. கண்களை இடுக்கி நெருங்கி வந்து பார்த்தாள். கிழவிக்கு எல்லாமே சொல்ல சொல்ல நிதானமாக ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் அந்த ஞாபகங்கள் அவளுக்குச் சுவையூட்டுவதாகவோ, பெருமிதமானதாகவோ இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவின் பெயரைச் சொன்னபோது சற்றே நினைவு துளிர்த்து ""உம் பேரென்ன மறந்தே போயிட்டேனே'' என்றார்.
அது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் மாங்காய் திருடியதையோ, குளிப்பாட்டியதையோ சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என் தடயம் சற்றும் அவரிடத்தில் இல்லை. தன் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பதாகவும் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதாகவும் சொன்னாள். அது மகனின் புரிதலையும் மருமகளின் மனதையும் பொறுத்தது. ஒரு பெண் தன் அறுபதைக் கடந்த வயதில் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதின் சுமை அழுத்தியது.
புடவை எடுக்க வந்தவர்கள் அவசரப்பட்டார்கள். அவளிடம் என் ஒரு முகம்கூட இல்லை என்ற வலியை ஏற்றுக் கொள்ள முடியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். முற்றிலும் வேறு சுவையுடைய வேறு கிளை.
tamilmagan2000@gmail.com
நான் நான்காம் வகுப்பு படித்த போது பார்த்த அந்த முகம்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால் அதன் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. தொடர் வண்டியின் எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும் போதும் அதிக மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல என் வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்று துறு துறு முகம் அது. அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்ட போதெல்லாம் மனதின் ஆழத்தில் இருந்து மிதந்து மிதந்து மேற்பரப்புக்கு வந்து பரவசமூட்டுவதாக அது இருக்கிறது.
சொல்லப் போனால் அக்கா என்று அவரை நான் அழைப்பது அத்தனை சரியில்லை. அது அந்த உறவின் பெயரைக் கொச்சைப்படுத்துவதாக இருக்கும்.
நான் மீன் வரைவதற்குக் கைபிடித்துச் சொல்லித் தந்தவர் மஞ்சுளா அக்காதான். அவர் மிகச் சுலபமாக மீன்களை வரைந்தார். பென்சிலை இப்படியும் அப்படியும் சுழற்றினால் அது மீனாக மாறிவிடுவதாக நான் ஆச்சர்யப்பட்டேன். அவர் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். புதிதாகத் திருமணமாகி நாங்கள் இருந்த வீட்டுக்குக் குடிவந்திருந்த மஞ்சு அக்காவுக்குக் குழந்தைகள் இல்லாததால் எனக்கு அவர்கள் வீட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. சுரேஷ் அங்கிள் எனக்காக என்றே கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வர ஆரம்பித்திருந்தார். நான்காம் வகுப்பு படித்தபோது எனக்கு வேறென்ன தேவை இருக்க முடியும்? சாப்பிட சாக்லெட், ஹோம் ஒர்க் செய்ய ஒரு ஆள்.
சுரேஷ் அங்கிள் என்னை "மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு அழைத்துச் சென்றார். அது என் வயதின் ருசிக்கு ஏற்ற படம் அல்ல. அதில் கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து தத்தளிக்கிற படம். மனைவி வேறொருவனுடன் பழகியதைத் தெரிந்து கணவன் அவனைச் சந்தேகிப்பதுகூட ஓரளவுக்குப் புரிந்தது; ஆனால் அதற்காகக் கணவனும் மனைவியும் ஏன் அவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதுதான் அப்போது புரியாததாக இருந்தது.
""படம் பிடிச்சிருக்கா?'' ரிக்ஷாவில் வீடு திரும்பும்போது சுரேஷ் அங்கிள் கேட்டார்.
செலவு செய்து அழைத்துச் சென்றவரின் மனம் நோகக்கூடாது என்பது போன்ற ஒரு காரணத்தால் பிடித்திருக்கிறது என்று சொன்னேன்.
கொஞ்ச நேரம் சைக்கிள் ரிக்ஷாவின் செயின் சுழலும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. அவர் ""சந்தேகம் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டா வீடு அவ்வளவுதான்'' என்றார்.
ஒரு அதிகாலைப் பொழுதில் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து "மஞ்சுவைக் காணலை'' என்றார். வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர் எப்படிக் காணாமல் போய்விட முடியும் என்று குழம்பிப் போய் நான் பதறினேன்.
"நைட் எனக்கும் அவளுக்கும் சண்டை... அடிச்சுட்டேன். ராத்திரி முழுக்க தூங்காம உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா. மூணு மணிக்குக் கொஞ்சம் அசந்துட்டேன். நாலு மணிக்குப் பார்க்கிறேன்... காணோம்'' என்றார்.
அதன் பிறகு என்னை அவர்கள் அங்கே இருக்க அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவர்கள் தனியாகப் பேசிக் கொண்டிருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த வீட்டின் குடித்தனக்காரர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் விஷயமாக இருந்தது. வீட்டின் எதிரில் இருந்த லாண்டரி கடை, பக்கத்தில் இருந்த தையல் கடை எல்லாவற்றிலும் அந்தப் பேச்சு ஓடியது.
மஞ்சு அக்கா இதே வீட்டில் இருக்கும் மனோகரிடம் தொடர்பு வைத்திருந்ததால்தான் அந்தச் சண்டை என்று அப்போது காதில் வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டுகளில் அந்த விவகாரத்தைப் புரிந்து கொண்டேன்.
வீட்டை விட்டுப் போன மஞ்சு அக்கா கங்காதீஸ்வரர் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடக்க யாரோ காப்பாற்றி வீடு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். அடுத்த சில நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய் குடியேறினார்கள். எங்கள் தெரு வாய்களுக்கும் சில நாள்களில் மெல்லுவதற்கு வேறு அவல் கிடைத்தது. அக்கா திடீரென்று ஊரைவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பெரிய வருத்தமாக இருந்தது. அக்காவைப் பற்றி யார் என்ன பேசிக் கொண்டிருந்தாலும் எனக்குக் கண்களில் நீர் துளிர்ப்பது வழக்கமாக இருந்தது. சமயத்தில் அவர்கள் அக்காவைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நான் ஒரு மெüன சாட்சியாக அழுது கொண்டிருந்தேன்.
மஞ்சு அக்காவின் முதல் முகம் இதுதான்.
நான் கல்லூரிக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்த வேளை. வேறு ஒரு புரிதலில் நான் அவரைப் புரிந்து கொண்டது அப்போதுதான். நான்கைந்து குடித்தனக்காரப் பெண்கள் உள்ளறையில் உட்கார்ந்து கதையளந்து கொண்டிருந்தார்கள். விஷயம் மஞ்சுவைப் பற்றி.
இ} மெயில், இண்டெர் நெட், செல் போன் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இத்தகைய விஷயங்கள் எப்படி விநியோகமாகின என்பது இப்போது நினைத்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
"அவன் அப்பவே செத்துப் போயீ... இவ இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணக்கிட்டுப் போயிட்டாளாம்'' இதுதான் சட்டென ஈர்த்தது.
அவர்களின் பேச்சில் அடுத்த அரை மணி நேரத்தில் என்னால் கிரகிக்க முடிந்தது இதுதான்... இங்கிருந்து சென்ற மூன்றாம் ஆண்டிலேயே அதிக குடிப் பழக்கம் காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார் என்பதும் அடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சு அக்கா வேறு யாரையோ கல்யாணம் செய்து கொண்டதாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் அப்போதுதான் மனத் தடாகத்தில் மிதக்கத் தொடங்கியது.
அன்றொரு நாள் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் ஓடிப் போய் மஞ்சு அக்காவின் மடியில் விழுந்தேன். மஞ்சு அக்கா தன் வீட்டு வாசப்படியை ஒட்டி உட்கார்ந்திருந்தார். நான் இப்படி வந்து விழுவேன் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பதறிப்போனார். அக்கம் பக்கத்துப் பெண்கள் எல்லாம் அதைவிட பதறினார்கள். ""ஐயோ... ஐயோ'' என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு என்னை அவர் எழுந்து செல்ல விடவில்லை. ""நீயும் அக்காகூடவே குளிச்சுட்டு வந்து வேற ட்ரஸ் போட்டுக்க'' என்றார்கள். நான் யாருடன் குளிக்க வேண்டும் என்று குடித்தனக்காரப் பெண்கள் முடிவு செய்தது அநீதியாக இருந்தது. அம்மாவும் நான்கு குடித்தனத்துக்கும் பொதுவாக இருந்த குளியல் அறையில் எனக்கான வேறு ட்ரஸ்ûஸ கொண்டு போய் வைத்துவிட்டு வந்தார்கள்.
மஞ்சு அக்கா தன் கைகள் ஆரம்பிக்கும் இடம் வரைக்கும் பாவாடையை இழுத்துக் கட்டிக் கொண்டு என் பள்ளிக் கூட ஆடைகளைக் கழற்றிக் குளிப்பாட்டினார். எனக்கு அழுகை பீறிட்டது. கதறி அழுதேன். ""இப்ப ஏன் அழறே?... நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?'' என்று கன்னத்தைக் கிள்ளினார். குளியல் என்ற பெயரில் இரண்டு சொம்பு தண்ணீரைத் தலையில் ஊற்றிக் கொண்டு நான் வெளியில் தப்பி ஓடி வந்தேன். மஞ்சு அக்காவே என் டிரஸ்ûஸ துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். ""அக்காவைத் தொட்டுட்டுக் குளிக்காம வந்தா தேள் கொட்டிடும்'' என்றாள் அம்மா.
மஞ்சு அக்காவின் இரண்டாவது முகம் உண்மையில் கொட்டும் தேளாக இருந்தது. அது என் நினைவின் தகிப்புக்கு ஏற்ற ஜோடியாக இருந்தது. மஞ்சு அக்கா சுகத்துக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் படிமமாக நெஞ்சில் நிலைகுத்தியது. மஞ்சு அக்காவுடன் தொடர்பு படுத்தப்பட்ட மனோகர் என் நினைவுக்கு வந்தார். பருவம் தரும் புதிய பாடமாக இருந்தது எல்லாமும். அவரைப் பற்றி நினைத்துப் பார்க்க நேர்ந்தது சற்று ஏன் என்பது மெல்ல புரிந்தது. அவர் மீது சற்று பொறாமை கொள்ள பழகிக் கொண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. என்னை பிறந்த மேனியாகப் பார்த்த வேற்றுப் பெண் என்றால் அது மஞ்சு அக்கா மட்டும்தான். "நான் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாதா?' என்ற வாக்கியம் எனக்குப் போதையூட்டும் வாக்கியமானது. மஞ்சு, அக்கா இரண்டும் சேர்ந்து ஒரு பெயர்ச் சொல்லாக மாறிவிட்டது. அது உறவின் பெயராக இல்லை. என் கனவுப் பெண்ணாக, காதலியாக, எண்ணி உருகும் தகிப்பின் வடிகால இருந்தார். அதனால்தான் அந்த உறவைக் கொச்சைப்படுத்துவதாகச் சொன்னேன்.
அதன் பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். என் மன பிம்பத்தை நிஜத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று தவித்தேன். நேரில் சென்று பார்ப்பதற்கு ஒரு புள்ளி அளவு தயக்கம் மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் புள்ளியின் வலிமை என்னை கடைசி வரை தடுத்துவிட்டது. நான் பார்க்க முடியாத ஏக்கம் என்னை வாட்டியது. வாடுவது மனதின் வடு போல நீக்கமற இருந்தது. அவரைத் தேடிச் சென்று பார்த்து அந்த வடிவத்தைச் சிதைத்துக் கொள்ள வேண்டியிருக்குமோ எனவும் இருந்தது. இச்சைக்குக் நான் கொடுத்துக் கொண்ட வடிவமாகவும் இருந்தார் மஞ்சு அக்கா.
அவரோடு எனக்கிருந்த மிகச் சில நினைவுகளைத் தூசு தட்டி ஊதிப் பெரிதாக்கி அசைபோட ஆரம்பித்தேன்.
ஒரு நாள் இரவு என்னை மஞ்சு அக்கா வீட்டின் ஓட்டுக் கூரை மீது ஏற்றிவிட்டு பக்கத்துவீட்டு மாமரத்தில் காய்த்துத் தொங்கிய மாம்பழத்தைப் பறிக்க வைத்தது ஞாபகம் வந்தது. அது விசேஷமான மரம். அதன் ஒரு கிளையில் புளிப்புச் சுவை உள்ள மாம்பழமும் இன்னொரு கிளையில் இனிப்புச் சுவையுள்ள மாம்பழமும் காய்த்தது. எங்கள் வீட்டுக் கூரையின் பக்கம் புளிப்புச் சுவைக் கிளை. அது எங்கள் வீட்டு ஓட்டின் மீது ஓய்வாகப் படுத்திருப்பதுபோல இருந்தது. திருடித்தின்றதால் மாற்றான் தோட்டத்து மாம்பழம் எங்களுக்கு அது இனிப்பாகவே தெரிந்தது.
"மயங்குகிறாள் ஒரு மாது' படம் மீண்டும் திரையிட்டால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்தப் படம் மீண்டும் எங்கும் திரையிட்டதாகத் தெரியவில்லை. மஞ்சு அக்கா என்றதும் மஞ்சள் நிறத்தில் சிறிய சிறிய பூ போட்ட புடவை அணிந்து அவர் குறு குறுவென பார்க்கிற பார்வை ஞாபகத்துக்கு வருகிறது. அவர் நல்ல உயரம் என்றும் கச்சிதமான உடல் வாகும் சிவந்த மேனியும் உள்ளவர் என்றும் மனச்சித்திரம் பதிந்திருந்தது.
என் இரண்டு குழந்தைகள் வளர்ந்து நிற்கும் இந்த வயதில் மஞ்சு அக்கா நினைவின் ஆழத்தில் நிறம் மங்கி, சாயம் இழந்த மயில் தோகைபோல இருந்தார். எங்கள் குடும்பமும் குடித்தன வீடுகளுக்கு நடுவே புழங்கும் நிலை மாறிவிட்டது.
ஓட்டலுக்குக் காய்கறி சப்ளை செய்யும் அவருடைய கணவர் நட்டாற்றில் விட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் ஒரே ஒரு பையன் இருப்பதாகவும் அவனைப் படித்து ஆளாக்க ரைஸ் மில்லில் உமி அள்ளும் வேலை செய்துவருவதாகச் சொன்னார்கள். இந்தமுறை எங்கள் வீட்டுடெலி போனுக்குத்தான் தகவல் வந்தது. பிறந்த வீட்டு உறவும் அறுந்து புகுந்த வீட்டு உறவும் பொருந்தாமல் மஞ்சு அக்கா நிராதரவாகிப் போனதாகப் புரிந்து கொண்டேன். ஏனென்றால் தகவல் தந்தவர்கள் ""அவன் எவன்கூடவோ ஓடிப்போய் உருப்படாமப் போயிட்டாளாம்'' என்பதாகத்தான் சொன்னார்கள். உண்மையில் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு வசதியாகத்தான் வெளிப்படுத்துகிறார்கள். புரிந்து கொள்கிறவர்களும் அவரவர் வசதிக்கு ஏற்பத்தான் புரிந்து கொள்கிறார்கள். மொழியின் சூட்சுமம் அது.
தொடருமா எனச் சந்தேகித்த எத்தனையோ மனிதத் தொடர்புகள் இப்படியாகத் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சு அக்காவின் ஞாபகத்தடங்கள் எனக்குள் அழுந்தப் பதிந்து ஒற்றையடி பாதையாக ஓடிக் கொண்டிருப்பதால்தான் அந்தத் தொடர்பு காப்பாற்றப்பட்டு வருகிறது. ஞாபகச் சங்கிலிகளின் கண்ணிகள்.
என் மகளின் திருமணத்துக்காக பட்டுப்புடவை எடுக்கக் காஞ்சிபுரம் போயிருந்தபோது நடுவே குளிர் பானத்துக்காகக் காரை நிறுத்தினோம்.
"ஏம்பா மொத்தம் ஏழு நாளு... '' என்று அந்தப் பெண்மணி முறையிட்டுக் கொண்டிருந்தாள்.
"கெழ்வி சும்மா இருக்க மாட்டே... நாலு நாளுதான் கணக்கு வருது... செவ்வா ஒண்ணு, புதன் ரெண்டு, வியாயன் மூணு, வெள்ளி நாலு...''
"இல்ல கண்ணு... சனிக்கிழமலேர்ந்துப்பா''
எனக்குப் பகீரென்றது. அது மஞ்சு அக்காதான். புகையிலைப் போட்டு காவி ஏறிய பற்கள்... முகத்துச் சுருக்கம் உலர்ந்து போன உதடுகள், குங்குமம் தடம் மறைந்து போன நெற்றி, கணுக்காலுக்கு மேலே சுருங்கி தூக்கிக் கிடந்த எட்டுகஜம் புடவை. மஞ்சு அக்காவின் மூன்றாவது முகம். மனச்சித்திரம் நொறுங்கிய கணத்தில் நான் நிர்கதியாக நின்றேன்.
"மஞ்சு அக்கா?''
அவரை யாரும் அப்படி அழைத்திருக்க வாய்ப்பில்லை. கண்களை இடுக்கி நெருங்கி வந்து பார்த்தாள். கிழவிக்கு எல்லாமே சொல்ல சொல்ல நிதானமாக ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் அந்த ஞாபகங்கள் அவளுக்குச் சுவையூட்டுவதாகவோ, பெருமிதமானதாகவோ இருந்ததாகத் தெரியவில்லை. என் அம்மாவின் பெயரைச் சொன்னபோது சற்றே நினைவு துளிர்த்து ""உம் பேரென்ன மறந்தே போயிட்டேனே'' என்றார்.
அது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஏதாவது ஒரு கட்டத்தில் மாங்காய் திருடியதையோ, குளிப்பாட்டியதையோ சொல்லுவாள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என் தடயம் சற்றும் அவரிடத்தில் இல்லை. தன் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பதாகவும் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதாகவும் சொன்னாள். அது மகனின் புரிதலையும் மருமகளின் மனதையும் பொறுத்தது. ஒரு பெண் தன் அறுபதைக் கடந்த வயதில் இனி தனக்கு ஒரு கவலையும் இருக்காது என்று நம்புவதின் சுமை அழுத்தியது.
புடவை எடுக்க வந்தவர்கள் அவசரப்பட்டார்கள். அவளிடம் என் ஒரு முகம்கூட இல்லை என்ற வலியை ஏற்றுக் கொள்ள முடியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். முற்றிலும் வேறு சுவையுடைய வேறு கிளை.
tamilmagan2000@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)