கவிஞர் ராஜமார்த்தாண்டன் இன்று காலை நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய மகன் கிருஷ்ண ப்ரதீப் திருமணத்துக்குச் சென்றுவந்தேன். இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் சென்னை வந்தபோது தினமணி அலுவலகத்தில் என்னைச் சந்தித்துவிட்டுப் போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவசர அவசரமாக இரண்டு முறை சந்தித்துக் கொண்டது நிலையாமையை வலிக்க வலிக்க உணரவைக்கிறது.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்போம்.
சனி, ஜூன் 06, 2009
வெள்ளி, ஜூன் 05, 2009
தகவல்
வானத்தில் இருந்து தேவதூதன் யாரும் காட்சி தரவில்லை. வழக்கமான விடியல்தான். எப்போதும்போல ஐந்து நிமிட தாமதம் அதைச் சரிகட்ட ஓட்டம். ஓடும்போது டிபன் பாக்ஸ் திறந்து கொண்டு சாப்பாடு கூடையில் கொட்டிக் கொண்டது. இதுவும்கூட வழக்கமான ஒன்றுதான். இது எல்லாமே முருகனுக்கான வழக்கம் பற்றியது. அவன் அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஒரு ஜெர்மன் நிறுவனத்துடன் முருகன் வேலை பார்க்கும் அலுவலகம் ஒப்பந்தத்தில் இருந்தது. அதற்காக அதனுடைய வேலை நேரம் முதற் கொண்டு எல்லாமே சராசரி இந்த அலுவல் நேரங்களுக்கு மாறுபட்டிருந்தது. காலை ஏழு இருபத்தெட்டுக்கு அவனுக்கான அலுவல் நேரம் தொடங்கும். நான்கு முப்பத்திரண்டுக்கு வெளியே அனுப்புவார்கள். ஒவ்வொரு விநாடியும் முக்கியம் என்று பணியாளர்களுக்குச் சுட்டிக் காட்டத்தான் இந்த ஏற்பாடு.
"உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.
அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.
மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.
அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.
நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.
பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.
"எத்தனை மணிக்கு வந்தாய்?'' என்றார்.
முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.
"வந்ததும் என்ன செய்தாய்?''
"எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்''
"அப்புறம்?''
"தண்ணீர் குடுவைகளை...''
"அதற்கப்புறம்?''
எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.
"உங்கள் வீடு எங்கிருக்கிறது?''
சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.
"போன் நம்பர் இருக்கிறதா?''
"இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது''
அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.
"எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்'' முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, ""நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு'' என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.
டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.
ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.
"காலையில் வந்ததும் என்ன செய்தாய்?'
"இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க''
"கேட்டதுக்கு பதில் சொல்''
கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.
"உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?''
இந்தக் கேள்விக்கு "எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா' என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.
"சரி. என்ன விலை'' அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.
அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.
"உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?''
"நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்''
"அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்'' }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.
"பைக் வாங்கியிருக்கிறாயா?''
"மாதத் தவணை... அம்மா வளையலை வைத்து... தம்பிதான்... '' அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் "எதுக்கய்யா கேட்கிறீங்க?'' என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? ... அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.
இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.
முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?
"திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?'' மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.
இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.
"ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்'' என்றார்.
முருகன் உறைந்த நிலையில் இருந்தான். "விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?'
"எதற்கு?'' என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.
தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.
இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் "இது என்ன தெரிகிறதா?'' என்றார்.
அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். "தெரியவில்லை''
"இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்''
"ஓ.. அதுவா சார்..?''
"நீதானே எறிந்தாய்?''
"எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை...''
"எத்தனை முறை இப்படி எறிந்தாய்?''
"இரண்டு.. மூன்று தடவை... ''
"உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?''
மேலாளரின் குரல் மாறிவிட்டது. "போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்... வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?''
"என்ன சார் சொல்றீங்க?'' ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.
மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.
முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.
"இவன்தானா?'' போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்... "எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்''
போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி "சரி, வா'' என்றனர்.
மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.
நன்றி வார்த்தை மே மாத இதழ்
"உச்சி வெயில்ல எங்கடா கிளம்பிட்டே?', "விளக்கு வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்'.. என நேரத்தைக் குத்து மதிப்பாகச் சொல்கிற குடும்பச் சுழலில் அவன் இந்த ஏழு இருபத்தெட்டு விஷயத்தை காலைல ஏழரை மணிக்கு ஆபீஸ் என்றுதான் சொல்ல முடிந்தது. அவர்களும் அதை எட்டு மணிக்குள் என்று புரிந்து வைத்துக் கொண்டு சாப்பாடு தயார் செய்வதையோ, முருகனை தயார் செய்வதையோ செய்து வந்தனர். வீட்டுக்கு நிலைமையை விளக்குவது சிரமம் என்று முருகனுக்குத் தெரியும். அதனால் ஆபிஸில் புரிந்து கொள்வார்கள் என்று அவனாக எதிர்பார்த்தான். அதாவது அவன் ஐந்து- பத்து நிமிடங்கள் தாமதமாக வருவது காலப் போக்கில் அவர்களுக்குக் குற்றமாகத் தெரியாமல் போய் பரிதாபத்துக்குரியவனாக எண்ணுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவனைப் பொருட்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஒரு மின்னணு எந்திரத்திடம் இருந்தது. அவனுடைய கட்டைவிரல் ரேகையின் மூலம் அவனுடைய வருகைப் பதிவேற்றம் நிகழ்த்தப்பட்டது. விநாடி சுத்தமாக இருந்தது அந்தப் பதிவு. நான்கு தாமதங்களுக்கு ஒரு முறை அவனுக்கு ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்தது அது. இப்படியாக அவனுக்கு மாதத்துக்கு இரண்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டபோது அம்மட்டில் பிரச்சினைகள் ஓய்ந்தது என்று சந்தோஷம்தான்பட்டான். வீட்டில் சம்பளமே அவ்வளவுதான் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பொறுத்தவரை முருகனுக்கு அவ்வளவுதான் சம்பளம் தரமுடியும் என்று நம்பினார்கள். அலுவலகத்திலும்தான்.
அன்றும் முருகன் தன் இடது கட்டை விரலைப் பதித்தபோது இரண்டு நிமிடம் தாமதம்தான். நாளையில் இருந்து ஆறே கால் மணிக்கு வரும் பேருந்தைப் பிடித்தால்தான் சரி பட்டு வரும் என்பதையும் வழக்கம்போல நினைத்துக் கொண்டான்.
மூன்றாவது மாடியில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட டிபன் பாக்ஸ் ஸ்டேண்டில் சாப்பாட்டை ஒழுக ஒழுக வைத்துவிட்டு, சில்லென்று தண்ணீர் பிடித்துக் குடித்தான். அவனுக்கான பிரத்யேக ஆடையை எடுத்து அணிந்து கொண்டான். மஞ்சள் நிற பருத்தித் துணியில் எல்லார் மேசை, நாற்காலி, கணினிகளைத் துடைக்க வேண்டும். எட்டு மணிக்கு இவன் துடைத்து வைத்தவற்றை அழுக்காக்குபவர்கள் வருவார்கள். அதனால் மேஜையைத் துடைக்கும்போது அதற்கான நாற்காலியில் அமர்ந்து கொள்வது, அப்படியே கிர்ர் என ஒரு சுற்று சுற்றுவது எல்லாம் செய்வான். அறையில் கேமிரா பொருத்தியிருப்பதைச் சொன்ன பிறகு அப்படி செய்வதில்லை. கேமிரா எதிரில் வரும்போது சட்டென அடக்கமான- ஒழுக்கமான- பரிதாபமான முகத்தை எதேச்சையாக காட்டுவதுபோல காட்டுவான். யாரோ உயர் அதிகாரியின் பார்வையில் பட்டு தன் அடக்கத்துக்கும் பரிதாபகரமான தோற்றத்துக்கும் இரக்கம் சுரந்து அது சம்பள உயர்வாக மாறும் என்பது அவன் ஐந்தாண்டு கனவு. தன் விசுவாசம் கேட்பாரற்றுக் கிடப்பதாக அவனுக்கு வருத்தம் இருந்தது. மேஜையைத் துடைக்கும் போது அதிலிருந்த துண்டுக் காகிதங்களைத் தன் பிரத்யேக ஆடையில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பேப்பர்களைப் பச்சைக் கூடையிலும் பிளாஸ்டிக் உறைகளை மஞ்சள் கூடையிலும் போட வேண்டும்.
அடுத்து என்ன செய்வது என்று கிழக்கு பக்க ஜன்னலோரத்தில் நின்று யோசித்தான். அங்குதான் பெரிய மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. கொஞ்ச நேரம் நின்றாலும் தெரியாது. ஜன்னலை ஒட்டிய தெருவில் ஒரு பையன் இரண்டு கையையும் மேலே தூக்கியபடி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். கைகளை தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு ஓட்டுவதைவிட சைக்கிளின் கைப்பிடியைப் பிடித்து ஓட்டுவதுதான் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. அவன் கஷ்டப்பட்டு அப்படி செய்வது யாருக்கும் பலனின்றி போவதோடு மற்றவர்களுக்கு உபத்திரவமாகவும் போய்விடும் போலவும் இருந்தது. அதாவது அவன் யார் மீதாவது இடித்துவிடக் கூடும். போன வாரத்தில் ஒருநாள் அந்தப் பையன் இதே போல வந்தான். அவனைத் திடுக்கிட வைத்து அனுப்பினான் முருகன். திடுக்கிட வைத்த பின்பு அந்தப் பையன் சைக்கிளை ஒழுங்காக ஓட்டிச் செல்ல ஆரமம்பித்தான். அந்தப் பையன் தெருமுனை வரை சென்று மீண்டும் திரும்பி வந்தான். முருகன் போன வாரம் போலவே சட்டென அவனைசலனப்படுத்த ஆசைப்பட்டான். பாக்கெட்டில் துழாவிய கையில் கிடைத்த பேப்பரைச் சுருட்டி பையனை நோக்கி எறிந்தான். அது பையன் தலைமீது விழுந்ததா என்று எட்டிப் பார்த்தான். பையன் காகிதம் வந்து விழுந்த திசையை திடுக்கிடலோடு பார்த்துவிட்டு வேகமாகச் சென்று மறைந்தான். முருகனுக்கு தன் பொருட்டு உலகில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மகிழ்ச்சி பொங்கியது. அப்படி இருந்தவனை இப்படி ஆக்கிய சந்தோஷம். கீழே வந்து அந்தந்த அறைக்கான டேபிள் டாப் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு போய் வைக்கத் தொடங்கினான்.
நாள் வழக்கம் போல நகர்ந்து கொண்டிருந்தது.
பதினோரு மணி வாக்கில் அவனுடைய ஹவுஸ் கீப்பிங் துறை கண்காணிப்பாளர் அழைத்தார். இடுக்கான ஒரு அறை. வெளிச்சம் குறைவு. அங்கிருந்த பீரோவுக்கு சில ஃபைல்களும் ஏராளமான டாய்லட் கிளினிங் அமில பாட்டில்களும் வாசனை தரும் பொருள்களும் பாட்டில்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறைமுழுதும் அவற்றின் கலவையான மணம் சூழ்ந்திருந்தது. பெரும்பாலும் அந்த அறையிலேயே இருப்பதால் அவர் மீதும் அந்த வாடை பரவியிருந்தது.
"எத்தனை மணிக்கு வந்தாய்?'' என்றார்.
முருகன் தலையைச் சொறிந்தான். சரியான நேரத்துக்கு வரவில்லை என்பதை அப்படித் தெரியப்படுத்தினான். கண்காணிப்பாளர், கடுமையான முகத்தோடு இருந்தார்.
"வந்ததும் என்ன செய்தாய்?''
"எல்லா அறை மேஜை, நாற்காலியையும் துடைத்தேன்''
"அப்புறம்?''
"தண்ணீர் குடுவைகளை...''
"அதற்கப்புறம்?''
எந்த மேஜையாவது சுத்தமாக இல்லை என்று புகார் வந்திருக்கக் கூடுமோ? கணினி விசைப்பலகையின் கீழே எங்காவது தூசு தப்பித்திருந்திருக்கக் கூடும்.
"உங்கள் வீடு எங்கிருக்கிறது?''
சொன்னான். முழு முகவரியையும் எழுதிக் கொண்டார்.
"போன் நம்பர் இருக்கிறதா?''
"இல்லை. தம்பியிடம் இன்னொரு செல் போன் இருக்கிறது''
அந்த நம்பரை முகவரிக்குக் கீழே குறித்துக் கொண்டார்.
"எல்லாத்தையும் சுத்தமாகத்தான் துடைத்தேன்'' முருகன் சொன்னதைக் கவனித்தில் கொள்ளாது, ""நீ வேலை எதுவும் செய்ய வேண்டாம். ஓய்வறையில் இரு'' என்ற கண்காணிப்பாளரின் குரலில் அவனுடைய ஓய்வு முக்கியமானதாகத் தெரியவில்லை.
டாய்லட்டுகளுக்கு பெனாயில் உற்ற வேண்டிய நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது என்று முருகனுக்கு பெருங்குழப்பமாக இருந்தது.
ஓய்வறை என்பது பணியாளர்கள் திடீர் சுகவீனம் அடைந்தால் சற்றே படுத்திருக்க சில மரப் பலகைகள் அடிக்கப்பட்ட கூடம். அங்கே கிடந்த பழைய தினத்தாளை மரப் பலகை மீது விரித்துப் படுத்தான். ஒரே ஓரு மின் விசிறி தலைக்கு மேல் இருப்பதை வெகு நேரம் கழித்தே கவனித்தான். அதைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்த கணத்தில் ஒரு பணியாள் வந்து மனிதவள அதிகாரி அழைப்பதாகச் சொன்னான். அவர் இருப்பது இரண்டாவது மாடி. அந்த அறையைத்தான் தாம் சரியாகச் சுத்தம் செய்யவில்லை என்று தீர்மானித்து போனதும் மன்னிப்பு கேட்கத் தயாராக அவர் அறைக்குள் நுழைந்தான்.
"காலையில் வந்ததும் என்ன செய்தாய்?'
"இனிமே சுத்தமா துடைச்சுவிட்டிர்றேங்க''
"கேட்டதுக்கு பதில் சொல்''
கண்காணிப்பாளரிடம் சொன்ன தகவலை மறுபடி சொன்னான். கண்காணிப்பாளர் போலவே இவரும் திரும்பத் திரும்பக் கேட்டார். அவர்கள் தாம் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ அதைத் தெளிவுபடுத்தினால் அந்தச் சரியான வாக்கியத்தைச் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்பதுதான் முருகனின் சிந்தனையாக இருந்தது.
"உன் தம்பிக்கு நீதான் செல் போன் வாங்கித் தந்தாயா?''
இந்தக் கேள்விக்கு "எப்படித் தெரியும் என்பதா?, ஆமாம் என்பதா' என்பதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டது முருகனுக்கு. அந்த முகக் குறிப்பு மனித வள அதிகாரிக்கும் புரிந்தது.
"சரி. என்ன விலை'' அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை என்று கருதுபவன்தான் முருகன். ஆனால் அதிகாரிகளுக்கு இப்படியெல்லாம் கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று தத்தளித்தான். எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள் என கேட்பதற்கு அவனுக்கு நா எழவில்லை. அதனால் அதிகாரி கோபமடைந்துவிடக்கூடும் என்பது அவன் யூகம்.
அந்த யூகத்தினூடே அதிகாரிக்குக் கட்டுப்படவில்லையாயின் அது நம் வேலையைப் பாதிக்குமா என்பதையும் யோசித்தபடியே விலையைச் சொன்னான்.
"உன் சம்பளத்துக்கு இந்த விலை கட்டுபடியாகுமா? வீட்டில் வேறு யார் சம்பாதிக்கிறார்கள்?''
"நானும் இந்த மாதத்திலிருந்து தம்பியும்''
"அப்படியானால் போன மாதம் வரை நீ மட்டும்தான்'' }இப்படித் தெளிவாகக் கேட்பதின் அர்த்தம் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமும் அதைத்தானே சொன்னோம், நாம் சொன்னதை அவர்கள் கண்டுபிடித்ததுமாதிரி ஏன் திரும்பச் சொல்கிறார்கள் என்பதும் முருகனுக்குப் புரியவில்லை.
"பைக் வாங்கியிருக்கிறாயா?''
"மாதத் தவணை... அம்மா வளையலை வைத்து... தம்பிதான்... '' அதிகாரி அனைத்தையும் குறித்துக் கொள்வதைப் பார்த்து ஓர் அசட்டு தைரியத்தில் "எதுக்கய்யா கேட்கிறீங்க?'' என்றான் மெதுவாக. அது அதிகாரியின் காதில் விழாமல் இருந்தால் நல்லது போல இருந்தது அந்தக் குரலின் வலிமை. அதிகாரியும் அவன் கேட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்தது நிம்மதியாக இருந்தது முருகனுக்கு. ஏசி அறை அதிக குளிர்ச்சியுடன் இருந்தது. அதிகாரியிடம் அதிகப் பிரசிங்கித்தனமாகக் கேட்டுவிட்டது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு மணிக்கு மேல் பொது மேலாளரைப் பார்க்கும்படி கூறிவிட்டு வெளியே செல்லச் சொன்னார். பொதுமேலாளரைப் பார்க்கும்வரை வேலை செய்யலாமா கூடாதா என்று யாரும் கட்டளையிடவில்லை. என்ன நடக்கிறது, எல்லா பணியாளரையும் இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாரிப்பது வழக்கம் என்று பதில் சொல்வார்களா? நம் வேலையில் ஏதாவது குற்றம் கண்டார்களா? ... அனைத்துச் சாத்தியக்கூறுகளையும் தம்மால் யோசிக்க முடியாது என்பது தெரிந்திருந்தாலும் நாம் நினைப்பதில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கும் போல தோன்றியது அவனுக்கு. சாப்பாட்டுக்கூடையில் கொட்டிய நிலையிலேயே இருந்த சாப்பாட்டைப் பக்குவமாக வெளியே எடுத்து சாப்பிட்டான். டிபன் பாக்ûஸக் கழுவி பைக்குள் திணித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தால், இன்னும் இரண்டு மணி ஆவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டிருக்க வேண்டாமோ?.. ஆனால் அதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது என்பது தெரியாமல்தான் பசியே எடுக்காத நிலையிலும் அவன் சாப்பிட்டான். காத்திருக்கும் நேரம் விரைவாகவும் கடிகார ஓட்டம் மெதுவாகவும் இருந்தது. ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தான். சாலை மரங்களின் இடைவெளியில் வெயில் இருந்தது. ஆள் நட மாட்டம் இல்லை. திரும்பி பணியாளர் ஓய்வறையில் சென்று அமர்ந்தான். பல மணி நேரங்களுக்குப் பிறகே இரண்டு மணி நேரம் கடந்தது.
இப்போது பொது மேலாளரின் கேள்வி நேரம்.
முதல் இரண்டு பேர் கேட்ட கடுகடுப்பும் இல்லாத தொனியில் ஆனால் கூர்மையான பார்வையோடு அவர் கேட்டார். அவருடைய கேள்வி மிக இயல்பான விசாரிப்பாக இருந்தது. அவருக்குத் தமிழும் தெரிகிறதே என்ற ஆச்ச்ர்யம் முருகனுக்கு. அவர் அறையில் இருந்து யாருடனாவது பேசியபடியே வெளியே வரும்போதும், யாருடனோ லிப்ட்டுக்காகக் காத்திருக்கும்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதைப் பார்த்திருக்கிறான். சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது மேனேஜருக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரிவதை பழனியிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டான். பழனியைக் காலையிலிருந்தே பார்க்க முடியவில்லை. காலையில் இருந்தே யாரையும் பார்க்க முடியவில்லை. யாரையும் பார்க்காமல் இப்படி அரை நாளை எப்படிக் கழிக்க முடிந்தது? ஏன் யாரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை?
"திடீர் என்று உங்களிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?'' மேலாளரின் கேள்வி வெளியே அலைந்து கொண்டிருந்த முருகனை இறுக்கிப் பிடித்தது.
இரண்டு நாளுக்கு முன் சம்பளம் வாங்கியதால்.. என்ற பதில் மேலாளருக்கு முருகனின் தெனாவட்டு போல இருந்திருக்க வேண்டும். ஏறிட்டுப் பார்த்துவிட்டு குனிந்தார்.
"ஏன் அடிக்கடி ஜன்னல் பக்கம் போனாய் என்ற காரணத்தை மட்டும் உண்மையாக ஒப்புக் கொண்டால் உன்னை விட்டுவிடுவோம்'' என்றார்.
முருகன் உறைந்த நிலையில் இருந்தான். "விட்டுவிடுவதென்றால் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா?'
"எதற்கு?'' என்ற வார்த்தை அவனுடைய பயம் காரணமாக உரக்க வெளியானது.
தன் மேஜை அறையில் இருந்து ஒரு கசங்கிய தாளை வெளியே எடுத்தார். அதை மேஜை மீது வைத்து நீவிவிட்டுக் கொண்டே முருகனின் முகத்தைப் பார்த்தார். அந்தக் கசங்கிய தாள் அவருடைய அறையின் மதிப்பைக் குறைத்து விட்டதாகத் தோன்றியது. மேலாளரின் கோட்டுக்கும் தங்க பிரேம் போட்ட கண்ணாடிக்கும் பளபளக்கும் கிரானைட் மேஜை மேற்பரப்புக்கும் அது பொருத்தமில்லாமல் இருந்தது. அந்தக் காகிதத்தை அவன் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவருடைய பார்வையில் தெரிந்த காரணத்தால் சுய காரணம் இல்லாமல் பார்த்தான்.
இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்ட வினாடியில் "இது என்ன தெரிகிறதா?'' என்றார்.
அவன் அப்போதும் உண்மையைச் சொன்னான். "தெரியவில்லை''
"இதைக் காலையில் நீ தெருவில் எறிந்திருக்கிறாய்''
"ஓ.. அதுவா சார்..?''
"நீதானே எறிந்தாய்?''
"எப்பவுமே பச்சைக் குப்பைக் கூடையில்தான் போடுவேன். இது வந்து ஒரு பையனை...''
"எத்தனை முறை இப்படி எறிந்தாய்?''
"இரண்டு.. மூன்று தடவை... ''
"உண்மையைச் சொல்.. எத்தனை வருடமாக இது நடக்கிறது?''
மேலாளரின் குரல் மாறிவிட்டது. "போலீஸோடு போய் காலையில் உங்கள் வீட்டில் தேடிப் பார்த்தோம்... வேறு எங்கு பதுக்கி வைத்திருக்கிறாய்?''
"என்ன சார் சொல்றீங்க?'' ரொம்ப தாமதமாக இந்தக் கேள்வியைக் கேட்டான்.
மேலாளர் பதில் சொல்லவில்லை. காலால் ஏதோ பட்டனை அழுத்தினார். இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். எப்படி சொல்லி வைத்த மாதிரி நடக்கிறது என்று ஆச்சர்யமாக இருந்தது.
முருகனை ஏற இறங்க பார்த்துவிட்டு அமர்ந்தனர்.
"இவன்தானா?'' போலீஸ் அதிகாரி தீர்மானமாகக் கேட்டார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மேலாளர் ஆங்கிலத்தில் விளக்க ஆரம்பித்தார். முருகனுக்கு ஆங்கிலம் புரியாது. அதிலும் மேலாளரின் ஆங்கிலம் மிகுந்த வேகம் கொண்டது. பின் தொடர முடியாதது. ஓரிரு வார்த்தையாவது புரியுமா என்று கவனித்தான். தன்னைப் பற்றி தவறாக எதையோ புரிந்து கொண்டு அதை உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
இந்த நாள் தன் வழக்கமான நாளாக இல்லாமல் போனதற்காக முருகன் வருந்திக் கொண்டிருந்த வேளையில் மேலாளர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தது இதைத்தான்... "எங்களின் எல்லா அறையும் கண்காணிக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் நாங்கள் உடன்படிக்கைப் போட்டிருக்கும் ஜெர்மன் நிறுவனத்துக்கும் அந்த பதிவுகளை அனுப்புகிறோம். அப்படி ஒப்பந்தத்திலேயே இருக்கிறது. அவர்கள்தான் இவனின் நடவடிக்கையை எங்களுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சில டெண்டர்கள் எங்களுடைய போட்டியாளர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இவனுடைய சில ஆயிரம் ரூபாய் பேராசைக்காக நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். எப்படி விசாரிப்பீர்களோ, ஆனால் எவ்வளவு ஆவணங்கள் கடத்தப்பட்டுள்ளன, யார் யாருக்கெல்லாம் போயிருக்கிறது என்பது தெரியவேண்டும். இப்போது இவனை விசாரிப்புக்குக் கூட்டிச் செல்லலாம்''
போலீஸ் அதிகாரிகள் விடைபெறும்போது முருகனை நோக்கி "சரி, வா'' என்றனர்.
மேலாளரின் மேஜை கடிகாரத்தைப் பார்த்தான் சரியாக நான்கு முப்பத்திரண்டு.
நன்றி வார்த்தை மே மாத இதழ்
செவ்வாய், ஜூன் 02, 2009
காந்த முள் -1 புதிய தொடர்

சொல்லுங்க சிவகாமி எப்படி இருக்கீங்க?
யாரோ ஒரு பெண்மணி முன் பின் பழகி இருக்காத ஒரு ஆணிடம் "உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்று சொல்வது விபரீதமாகத் தோன்றலாம். நடக்கவே நடக்காத கற்பனை என்று சொல்கிற அப்பாவிகளும் இருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் அது ஏதோ காதல் விவகாரமாக இருக்கும் என்று நினைப்போம்.

அது காதல் அல்லது காமம் சம்பந்தப்பட்டது இல்லை என்றால் வேறு எப்படி சாத்தியம்?
டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பவராக இருந்தால் இது சாத்தியம் என்பது புரிந்திருக்கும்.
தொலைக்காட்சியில் சில சினிமாப் பாடல்களையோ காமெடி நிகழ்ச்சிகளையோ விரும்பிக் கேட்க நினைக்கும் பெண்கள், டி.வி. அறிவிப்பாளராகத் தோன்றும் ஆண்களிடம் இப்படி வெளிப்படையாகத் தெரிவிப்பது கலாசாரமாக மாறிவருகிறது.
பாடல் ஒளிபரப்பும் சானல் ஒன்றில் காலையில் நிகழ்ந்த உரையாடல் இது.
"ரொம்ப நாளா உங்கக் கிட்ட பேசணும்னு ட்ரை பண்ணேங்க.. இன்னைக்குத்தான் லைன் கிடைச்சது''
"கிடைச்சுடுச்சில்ல.. உங்க பேரைச் சொல்லுங்க''
"எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஹீ..ஹி''
"உங்க பேரைச் சொல்லுங்க''
"சிவகாமி''
"சொல்லுங்க சிவகாமி, எப்படி இருக்கீங்க?''
"நீங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஹி..ஹி..ஹிக். என் தங்கச்சி பேசணுமாம்.''
"கொடுங்க''
"என் பேர் பானுமதி''
"எங்க இருந்து பேசறீங்க, பானுமதி?''
"வீட்ல இருந்து''
"கடிக்காதீங்க பானுமதி.. எந்த ஊர்ல இருந்து பேசறீங்க?''
"அரக்கோணம்''
"அரக்கோணத்தில விவசாயம்லாம் எப்படி நடக்குது. மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?''
மறுமுனையில் தங்களை விவசாயிகள் என்று நினைத்துவிட்டதில் ஏற்பட்ட பதற்றம்.
"ஐய்யய்யோ நாங்க விவசாயம் பண்ணலை... சர்பத் கடை வெச்சிருக்கோம்''
டி.வி. வர்ணனையாளருக்குத் தாம் செய்த தவறு புரிந்து "ஐ ஆம் சாரி'' எனத் துடிக்கிறார்.
"எங்களுக்கு என்ன பேசறதுன்னே தெரியலை''
"வீட்ல என்ன சமையல்?''
"கிச்சன்..''
"ஓ.. சிக்கனா?''
"இல்ல கிச்சன்''
"சரி அ,தை விடுங்க.. உங்களுக்கு என்ன பிடிக்கும்.. பொழுது போக்கு என்ன?''
"என்ன பேசறதுன்னே தெரியலை.. உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசை''
"உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?''
"எனக்கு மியுசிக் பிடிக்கும். எங்க அக்காவுக்கு செக்ஸ் ஆடுறது பிடிக்கும்.''
டய்யங்.. டய்யங்.
டி.வி.நிலையத்தில் விபரீதம் புரிந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள்.
தொலைபேசியில் பேசிய சகோதரிக்கு செஸ் விளையாட்டு பிடிக்கும் என்பது நமக்குப் புரிகிறது. உச்சரிப்பில் நேர்ந்த பிழை.
இந்த மேற்படி உரையாடலைத் தொடர்ந்து ஒரு காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து வேறு ஒரு சிவகாமி (பெயரும் ஊரும் மாற்றப்பட்டுள்ளது.) பேசினார்.
மேற்படி பேச்சு உலகமெலாம் பரவும் வகை செய்யப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சு பேசிய அந்த மூவருக்கும் ஏதேனும் பயனளித்திருக்குமா? வர்ணனையாளருக்கு சம்பளம் தருகிறார்கள்.
அதற்காக அவர் பேசுகிறார். மறுமுனையில் பல மாதமாகப் போராடி தம் சொந்தச் செலவில் போன் செய்து என்ன பேசுவதென்றே தெரியாமல் தவித்த சகோதரிகளுக்கு? அது ஒரு உளவியல் திருப்திதான். அவர்கள் மூளைக்குள் நிகழ்ந்த பெருமகிழ்ச்சி விளைவைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினம்தான். உலகமெலாம் இந்த உரையாடலைக் கேட்டார்களே அவர்கள் அடைந்த பயன்? போனில் பேசிய சகோதரிகளின் உளவியலைப் புரிந்து கொண்டபின் அணுக வேண்டிய அடுத்த கட்டம் இது. ஏனென்றால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற பலர் அடுத்து தம் சமையல் அறை விஷயத்தையும் படுக்கை அறை விஷயத்தையும் (கணவன் மனைவிக்கான நிகழ்ச்சி
தனி) பகிர்ந்து கொள்வதற்காகப் போன் செய்து லைன் கிடைக்காதவர்கள். அல்லது பார்வையாளராக மட்டும் இருந்து ரசித்துக் கொண்டிருப்பவர்கள். நிகழ்ச்சியால் யாருக்கு லாபம் என்று யோசிப்பதோ, கேட்பதோ பலருக்குப் பிடிக்கவும் இல்லை. ஏனென்றால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போகிற போக்கில் சானலுக்குப் போன் செய்து பேசினால் வீடு தேடி வந்து உருட்டுக்கட்டையால் அடிப்போம் (வடிவேலுவோ, செந்திலோ அடிவாங்குவதைத்தானே மக்கள் காமெடி என்ற பெயரில் பார்த்து ரசிக்கிறார்கள்?)
என்று ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாகலாம். இன்ட்ராக்டீவ் காமெடி நிகழ்ச்சியாக இருக்கும்.
ஒரு சலிப்பில்தான் இப்படி நான் சொல்கிறேன். ஆனால் அது உண்மையாகிவிடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பழைய முத்தாரம் இதழில் முரசொலி மாறனிடம் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்.
‘எம்ஜிஆருக்கு நாடாள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதே அதைப்பற்றி உங்கள் கருத்து?'
இது வாசகர் கேட்ட கேள்வி.
முரசொலி மாறன் சலிப்புடன் பதில் சொல்லியிருந்தார்..
‘இப்படியே போனால் ஜெயலலிதாவும்கூட அரசியலுக்கு வந்து நாடாள நினைப்பாரோ என்னவோ?'
சலிப்பின் காரணமாக நாம் தரும் யோசனை எப்படிப் பலிக்கிறது பாருங்கள்?
புதிய தொடர் உயிரோசை.காம் -இல் வெளியாகிறது
வெள்ளி, மே 29, 2009
இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்
அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் என்று நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது. அண்ணாவுக்குப் பேரன் எழுதியதாக நினைத்தால் தப்பில்லை.
தம்பிக்காக...
மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.
"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.
தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.
"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''
"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''
"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''
"மின்வாரிய மலரா?''
"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.
அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.
பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.
இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.
முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?
அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.
என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.
தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்
கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.
அண்ணா ரசித்துச் சிரித்தார்.
இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,
திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.
இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?
நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.
தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.
அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.
ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.
கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.
ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.
சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.
இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.
அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.
திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.
மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.
ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.
கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?
பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.
நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்
எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.
அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.
தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008
தம்பிக்காக...
மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது (1993) தமிழ்ப் பாட வகுப்பில் பேராசிரியர் இ. மறைமலை மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் தாங்கள் வாசித்த பிடித்தமான புத்தகங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அப்போது எனக்குப் பிடித்தமான புத்தகமாக "இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்'' என்றேன். ஏதோ புத்தகத்தின் தலைப்பு என்று விட்டுவிட முடியவில்லை. தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். "யார் எழுதியது?'' என்றார். "அண்ணா எழுதியது?'' என்றேன்.
"அண்ணாவா?'' என்று வியப்போடு கேட்டுவிட்டு மற்ற மாணவர்களிடம் வரிசையாகக் கேட்டுக் கொண்டே போனார்.
தமிழறிஞருக்குத் தெரியாத ஒரு புத்தகத்தை நாம் சொல்லிவிட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. எல்லா மாணவரிடத்தும் கேட்டு முடித்துவிட்டு மீண்டும் என்னிடத்தில் வந்தார்.
"எதைப் பற்றி எழுதியிருக்கிறார்?'' என்றார்.
"நெப்போலியன் வாழ்க்கை வரலாற்று நூல்''
"எந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது?''
"பதிப்பகம் தெரியவில்லை. தமிழ்நாடு மின்சார வாரிய செயலகச் சங்க ஆண்டுவிழா மலரில் (1972) இது வெளியாகி இருக்கிறது''
"மின்வாரிய மலரா?''
"என் தந்தையார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர்தான் மலரில் அதை வெளியிடக் காரணமாக இருந்தார்' 'என்றேன்.
அண்ணாவின் நூல்கள் பார்வதி பி.ஏ. ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகை, செவ்வாழை, ரோமாபுரி ராணிகள் உள்ளிட்ட நூல்களை புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ பார்க்க முடிகிறது. திராவிடர் கழகக் கூட்டங்களில் "தீ பரவட்டும்', "ஆரியமாயை', "கம்பரசம்' போன்ற நூல்களின் மலிவுப் பதிப்பைப் பார்க்க முடியும். இது ஏனோ எங்கும் என் கண்ணில் பட்டதே இல்லை. பலருக்கும் இப்படியொரு நூல் அண்ணாவால் எழுதப்பட்டது தெரிந்திருக்கவில்லை.
பதிப்பாளர்களும் இந்த நூல் பெரிய அளவில் விற்பனை ஆகாது என்று நினைத்தோ என்னவோ பதிப்பில் இருந்தே விடுபட்டுப் போயிருந்தது. அல்லது தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு யார் கண்ணிலும் படாமலே போய்விட்டதோ தெரியவில்லை.
இப்போது என் ஆச்சர்யமெல்லாம் இரண்டு.
முதல் ஆச்சர்யம், நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை மின்வாரிய ஆண்டு மலரில் என் தந்தை ஏன் பிரசுரித்தார்?
அதற்கு இப்படியொரு சமாதானம் சொல்லிக் கொள்வேன்.
என் தந்தைக்கு அண்ணாவை மிகவும் பிடிக்கும். நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழில் உதவியாசிரியராக சில மாதங்கள் பணியாற்றிய நேரத்தில் அண்ணாவோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்திய சம்பவத்தைச் சொல்லுவார்.
தனக்கு வைத்த அப்பளத்தை அண்ணா வேகமாகச் சாப்பிட்டுவிட்டதால் தன் இலையில் இருந்த அப்பளத்தை அவருக்குக்
கொடுத்தேன். அண்ணா "ஏன் அப்பளம் பிடிக்காதா?'' என்றார்.
"உங்களுக்குப் பிடிக்கிறதே என்று வைத்தேன்'' என்றேன்.
அண்ணா ரசித்துச் சிரித்தார்.
இதைச் சொல்லும்போது என் தந்தையின் கண்கள் கலங்கிவிடும். அப்படியொரு பிரியம். அவர் படித்த நாளிதழ் எல்லாம் நாத்திகம்,
திராவிட நாடு, முரசொலி மட்டுமே. கல்லூரியில் படித்த காலத்தில் அதை அண்ணா எழுதிய சூட்டோடு இதைப் படித்தவராக என் தந்தை இருந்திருக்கக் கூடும். பசுமரத்தாணியாய் அப்போதே பதிந்துபோய் இருக்கலாம்.
இரண்டாவது ஆச்சர்யம். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றை அண்ணா தம் தம்பிகளுக்கு எழுதியது ஏன்?
நெப்போலியனும் அண்ணாவைப் போல் அதிக உயரம் இல்லாதவர்தான். ஆனால் நிச்சயமாக இந்த நூலை எழுதுவதற்கு அது காரணமாக இருக்காது.
தம்பிகளுக்கோ, அவர் அப்போது எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கோ நெப்போலியன் கதை எந்தவிதத்தில் துணைபுரிந்தது.
அடிப்படையில் முழு நேர எழுத்தாளர் அல்ல. அரசியல்வாதி. பேச்சாளர்.
ஆனால் பெரிய வாசிப்பாளராகவும் கிடைத்த அரிய நேரத்தில் எழுதிக் கொண்டே இருந்தவராகவும் தெரிகிறார். அரிய திரைப்படங்களைத் தேடிச் சென்று பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
அவருக்கென்று ஓர் அடுக்கு மொழி நடை வைத்திருந்தார். அது மிடுக்கானது; ஆனால் அதில் அவர் சிக்கிக் கொண்டவராகத் தெரிகிறார். அவர் படித்த மிக உன்னதமான விஷயங்களையும் அந்த நடையில் கொடுக்க முயன்றதால் மலிவாகத் தெரிந்தது மற்றவருக்கு.
கட்சிக்காரர்களுக்காக அவர் சற்று இறங்கிவந்து எழுதியிருக்கிறார் என்றும் தெரிகிறது.
ஒரு நாள் இரவு. பெங்களூர் ஓட்டல் ஒன்றில் அண்ணா ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஈ.வே.கி. சம்பத் இருக்கிறார்.
சம்பத்துக்கு அண்ணாவின் திராவிட நாடு கொள்கை உறுதியானதுதானா என்ற சந்தேகம். "திராவிட நாடு கொள்கையில் உங்களுக்கு நிஜமாகவே நம்பிக்கை இருக்கிறதா?'' என்கிறார். அண்ணா தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். பதிலே சொல்லவில்லை.
இரண்டு மூன்று முறை இதைப் பற்றி கேட்கிறார். அண்ணா பதில் சொல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறார்.
அது இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த புத்தகம். அது டி.ஹெச். லாரன்ஸ் எழுதிய லேடி சாட்டர்லீஸ் லவ்வர் என்ற ஆங்கில நாவல்.
திராவிட நாடு கோரிக்கையும் சாதி மறுப்பு கோரிக்கையும் காங்கிரஸ்கட்சி எதிர்ப்பும் பேசி வந்த ஒருவருக்கு லேடி சாட்டர்லீஸ் படிப்பது அவருடைய விருப்பங்களை மீறிய வாசிப்புத் தேடலாகவே இருக்கிறது.
மேடைகளிலே சாக்ரடீஸ், அலெக்ஸôண்டர், வால்டேர், ரூúஸô, ரஷ்ய புரட்சி என்று பேசியவர். உலகின் அத்தனை பெரிய நதிகளையும் பற்றி அவர் ஒருமுறை பச்சையப்பன் கல்லூரியில் பேசியதை என் தந்தை கூறியிருக்கிறார். ஒருமுறை கல்லூரியில் பேச அழைத்திருக்கிறார்கள். தலைப்பு என்ன என்கிறார் அண்ணா. மாணவர்களுக்கு தலைப்பு கொடுத்துப் பேசச் சொல்வதாக எண்ணமே இல்லை. ஆகவே ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அதையே தலைப்பாக்கி ஒன்றுமில்லை என்பது குறித்து ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார். உலகு தழுவிய பரந்துபட்ட ஞானம் அவருக்கு இருந்தது. அவர் தேடித் தேடி வாசித்த படிப்பாளி.
ஆனால் தமிழக அரசியலில் தொண்டர்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டியதோ மிகச் சொற்பம்தான். சொல்லப்போனால் அவர் தொண்டர்களுக்குத் தனியாகவும் அவருக்காகத் தனியாகவும் செயல்பட்டவராகவே இருக்கிறார். நிறைய கூட்டங்களில் சொற்பொழிவு, கட்சிப் பணி, நாடகப் பணி, திரைக்கதை வசனம், ஓயாத சுற்றுப் பயணம், பத்திரிகைப் பணி எல்லாம் கொண்ட மனிதராகவும் இந்தச் செயல்பாட்டுக்கு அப்பாற்பட்ட ரசனையும் உள்ளவராகவும் அண்ணா இருக்கிறார். அதனால்தான் நெப்போலியன் வாழ்க்கைக் கதையைப் படிக்கவும் அதைத் தமிழில் எழுதவும் அவருக்கு முடிந்திருக்கிறது. எல்லாவுக்கும் மேலாக அதைத் தம்பிக்காக எழுத முடிந்திருக்கிறது.
கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எலினா தீவிலே இறக்கிறான். இந்த இரண்டுத் தீவுக்கிடையில் அவன் கண்ட ராஜ்ஜியங்கள் என்ன பெயரென்ன புகழென்ன?
பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்த கார்ஸிகா தீவிலே பிறந்தவன் எப்படி பிரெஞ்சு தளபதியானான்? ஜோஸபினைச் சந்திப்பதும் காதலிப்பதும் மணந்த மறுநாளிலேயே இத்தாலி மீது படையெடுத்தது , ரஷ்யாமீது போர்த் தொடுத்து அடைந்த இன்னல்கள் எல்லாம் இருக்கிறது.
ஆனால் இது சரித்திர நாவலா, சரித்திரமா என்பதில்தான் முடிவெடுக்க முடியாத நிலை. சரித்திரக் குறிப்புகள் உள்ளன.
நெப்போலியன் பிறந்த ஊர், பிறந்த ஆண்டு, மணந்த ஆண்டு, முடிசூட்டிக் கொண்ட ஆண்டு, கொள்கை முடிவுகள், குழப்பங்கள்
எல்லாம் இருக்கின்றன. கூடவே தம்பிகளுக்கு எடுத்துச் சொல்கிற வியாக்யானங்களும் உண்டு. தம்பிகளுக்குப் பிடித்ததே அந்த வியாக்யானங்கள்தான். சரித்திர மாணவர்களுக்கோ இவருடைய வியாக்யானங்கள் அத்தனை முக்கியமில்லை. அவர்களுக்குத் தேவை சரித்திரக் குறிப்புகள்.
அதனால்தான் இந்த நூல் அந்த இரு தரப்பினராலும் போற்றத் தக்க நூலாகவோ புறக்கணிக்கப்பட்ட நூலாகவோ இருக்கிறது இப்போதும்.
தமிழ்மகன்
சென்னை -50
06-11 -2008
கையேடுகளின் நிரந்தர ஆட்சி!
உலகின் எத்தனையோ தத்துவம மரபைப் போலவே திராவிட இயக்க சிந்தனைக்கும் ஆழமான ஒரு தத்துவ தரிசனம் உண்டு. அது இப்போது தடம் மாறி சாதீய மதவாத கட்சிகளோடு தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீர்த்துப் போயிருப்பதாகக் கூறினாலும் அதன் ஆரம்ப குறிக்கோள்கள் வீரியத்தோடுதான் இருந்தன.
"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பவுத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.
பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.
மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடி தேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.
இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.
அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.
அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.
"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.
கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.
மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.
கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.
தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.
சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.
ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.
அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.
"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.
பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.
பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.
ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.
தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.
சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.
"பரத்தியாவதேதடா பனத்தியாவதேதடா' போன்ற சித்தர் சித்தாந்தமும் "சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் சோதியைக் கண்டேனடி' என்ற வள்ளலாரின் சிந்தனையும் பவுத்த சிந்தனை மரபும் ஊறித் திளைத்து விளைந்த ஒரு இயக்க ரீதியான செயல் தத்துவம் இது.
பெண் விடுதலை, தன்மான உணர்வு, சடங்கு சம்பிரதாய எதிர்ப்பு, நாத்திகவாதம், இன உணர்வு, சமுதாய சமத்துவம் ஆகியவற்றின் கூட்டுத்தன்மையோடு திராவிட இயக்கம் உருவானது.
மேடைப் பேச்சு, பிரசுரங்கள் மூலமே கட்டப்பட்ட ஒரு இயக்கமாகத்தான் இதைச் சொல்ல வேண்டும். உரம் ஏறிப் போயிருந்த இன்னொரு எழுச்சியைப் பிளந்து கொண்டு பிறந்த இந்த இயக்கத்தின் பெரும் பலம் பிரசுரங்கள்தான். சுதந்திர உணர்வும் நாட்டுப் பற்றும் எழுச்சி பெற்றிருந்த மக்கள் மத்தியில் தன்னந்தனியராக எழுந்தவர் பெரியார். மிகவும் உண்மையானவராகவும் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவராகவும் இருந்ததால்தான் சுதந்திரத்துக்கு மாற்றாகவும் அல்லது சுதந்திரத்தைவிட உடனடி தேவையாகவும் "மக்கள் இழிவு இன்றி வாழ வேண்டும்' என்பதை முக்கியம் என்று அவரால் வலியுறுத்த முடிந்தது.
இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைவிட ஒவ்வொரு மனிதனும் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற அவருடைய பேச்சில் மக்களுக்கு இன்னமும் நெருக்கம் அதிகமாக இருந்தது. சுதந்திர வேட்கைக்கு சமமான ஒரு ஆதரவோடு, எழுச்சியோடு திராவிட இயக்கம் தமிழகத்தில் வளர்ந்தது. மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்போடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய உழைப்பும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்த துணிச்சலும் பெரியாருக்கு மக்களிடம் செல்வாக்கை உயர்த்தியது.
அவருடைய மிக நேர்மை தொனிக்கும் எளிமையான பேச்சில் மக்கள் ஈர்க்கப்பட்டனர். எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அவரே இருக்க முடியாத சூழலைத் துண்டுப் பிரசுரங்கள் தீர்த்து வைத்தன. அவருடைய பேச்சும் எழுத்தும் சிறிய சிறிய பிரசுர நூல்களாக வந்தன. அது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் படிப்பவரைத் தூப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டாக்களின் நிலைக்குத் தள்ளியது.
அவருடைய சுயமரியாதை பிரசார வெளியீடுகள் மிக மலிவான விலையில் வெளியாகின. மக்களுக்குப் புதிய சிந்தனையை -மாற்று சிந்தனையை - ஊற்றெடுக்க வைப்பதாக அவை அமைந்தன.
"சோதிடப் புரட்டு' என்ற நூலில் சோதிடம் கணிப்பவர்கள் பூமியை மையமாக வைத்து சூரியன் அதைச் சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது. இந்த அடிப்படை ஞானம் கூட இல்லாத ஒரு விஷயத்தை மக்கள் நம்புவது முட்டாள்தனமாக இல்லையா? என்ற நுணுக்கமான கேள்வியை பெரியார் முன் வைத்தார்.
கைரேகை பார்த்து சோதிடம் சொல்வதென்றால் குரங்குகளுக்கும் கையில் ரேகை இருக்கின்றதே, அதற்கும் வேலை வாய்ப்பு, சொத்து வரவு எல்லாம் உண்டா? என்பார்.
மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து கைபிடித்து அழைத்துச் செல்லும் பணியை, அவர்களுக்கு விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை கல்வியின் அவசியத்தை அந்தத் துண்டுப் பிரசுரங்கள் செய்தன. ஒரேயடியாக மூடநம்பிக்கை புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் சாதி, மத பிரிவினையால் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பிரசுரங்கள் அதிரடி வைத்தியமாக இருந்தன. வேதங்கள் பெண்களை ஐந்தாம் வர்ணமாக பிரிவினை செய்திருப்பதை அவை தோலுரித்துக் காட்டின. திருமண மந்திரங்கள் என்ற பெயரில் உச்சரிக்கப்படும் பிற்போக்குத்தனங்களை மக்கள் அறிந்தார்கள். சுயமரியாதைத் திருமணங்கள், சாதி மறுப்புத் திருமணங்கள் வேகமாக நடந்தன.
கலப்பு மணம் என்ற வார்த்தையையே அவர் கிண்டல் செய்கிறார். "நான் என்ன மாட்டுக்கும் மனுஷனுக்குமா திருமணம் செய்கிறேன். மனிதனுக்கும் மனிஷிக்கும்தான் திருமணம் செய்கிறேன். இது எப்படி கலப்பு மணம் ஆகும்' என்ற நியாயமான கேள்வியில் மக்கள் ஆர்ப்பரித்தார்கள். மறுமணங்களை ஆதரித்தும் தாலி என்ற லைசென்ஸ் அடையாளத்தை நீக்கியும் அவர் மறுமலர்ச்சி செய்தார். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இந்த சடங்குகளை சில ஆண்டு பிரசாரத்தின் மூலம் அவர் ஆட்டம் காணவைத்தார்.
தத்துவவிளக்கம் என்ற அவருடைய சிறிய துண்டு பிரசுரம் வேதங்களும் மதகுருமார்களும் என்னென்ன சொல்லி வந்திருக்கிறார்கள். அதில் எத்தனை முரண்பாடுகள் இருக்கின்றன என்று தோலுரித்தன. அவர் இசை, கலை, இலக்கியம் சம்பந்தமான கருத்துகளைப் பேசுவதினும் முக்கியமாக சமத்துவத்தைப் போற்றியதால் இவற்றை அவர் தன் வாழ்நாளில் இருந்து தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அன்னா கரீனினாவையோ ஆன்டன் செகாவையோ படிக்காமல் போனது தமிழகத்துக்கு நேர்ந்த இலக்கிய இழப்புதான். ரத்தமும் சதையுமாக உண்மை சொட்டும் அவருடைய நடையில் அவருடைய ஆர்வம் இன்றியே இலக்கியத் தன்மை இருந்தது. எழுத்தாளர் க.நா.சு இவருடைய எழுத்து நடையைச் சிலாகித்திருப்பது இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது.
சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில் - மூட நம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்; என்று விமர்சிக்கிறார்.
ராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் போன்ற தமிழின் தலைசிறந்த நூல்களாக எண்ணுகின்ற அனைத்தைப் பற்றியும் அவருக்கு இப்படியான கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. மனிதன் சாதி வாரியாக கேவலப்பட்டுக் கொண்டிருப்பதையும் புரோகிதர்களின் புரட்டுகளையும் கண்டிக்காமல் என்ன ரசனை வேண்டிக்கிடக்கிறது என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம். இது குறித்து "தமிழர், தமிழ் இலக்கியங்கள்' என்ற வெளியீடு ஒன்று வெளியாகியுள்ளது.
அவருடைய அறிவு விருந்து என்ற பிரசுரத்தில் "கடவுளும் தண்டிக்கிறான், மனிதனும் தண்டிக்கிறான். கடவுளும் பழி வாங்குகிறான், மனிதனும் பழி வாங்குகிறான். இவையெல்லாம் மனிதன் கற்பித்தவை என்பதாலேயே இப்படி மனித குணத்தோடு இருக்கின்றன' என்கிறார்.
"புரட்டு இமாலய புரட்டு', "நீதி கெட்டது யாரால்?', "காந்தியாரின் படத்தை எரிப்பது ஏன்?', "புரட்சி அழைப்பு', "சுதந்திர தமிழ்நாடு ஏன்?', "பாரத ஆராய்ச்சி' போன்ற பல தலைப்புகளில் வெளியீடுகள் வந்துள்ளன. இந்த வெளியீடுகள் 1930-களின் துவக்கத்தில் இருந்து இப்போதும் .. இன்றைய பிரச்னைகளான இட ஒதுக்கீடு, இலங்கைத் தமிழர் உரிமை போன்ற தலைப்புகளில் வெளியீடுகள் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடாக வந்து கொண்டிருக்கின்றன.
பெரியார் தவிர கைவல்ய சாமி, குத்தூசி, அறிஞர் அண்ணா, சிங்காரவேலர் போன்றவர்களின் பேச்சுகள்- எழுத்துகளும் இத்தகைய பிரசார வெளியீடுகளாக வந்திருப்பதைக் காண முடிகிறது.
அறிஞர் அணண்ணாவின் "தீபரவட்டும்', "ஆரிய மாயை' போன்ற பேச்சு வெளியீடுகள் அன்றைய இளைஞர்களுக்கு ஆவேசத்தை வளர்த்தெடுக்கக் காரணமாக இருந்தன. இந்தப் பிரசுரங்களில் பல பல்வேறு ஆட்சிச் சூழல்களில் தடைசெய்யப்பட்ட நூல்களாகவும் அதனாலேயே அதிகம் பரபரப்புக்கு ஆளான நூல்களாகவும் விளங்கின.
பகுத்தறிவு பிரசார வெளியீடு, திராவிடப் பண்ணை, நாத்திகம் வெளியீடு, பெரியார் மையம், சிந்தனையாளன் வெளியீடு போன்ற பல அமைப்புகளும் இத்தகைய துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டன.
ரேடியோ, தொலைக்காட்சி, அலை பேசி, தொலைபேசி, வாகன வசதி, சாலை வசதி, கமம்ப்யூட்டர் தொழில்மமநுட்பம், இண்டர் நெட் போன்றவை அறவே õல்லாத நிலையிõல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியதில் இந்தத் துண்டுப் பிரசுரங்களின் பங்கு மகத்தானது.
தமிழரின் பேச்சில் எழுத்தில் வாழ்வில் இந்தத் துண்டுப் பிரசுரங்கள் ஏற்படுத்தியிருக்கும் மகத்தான மாற்றம் என்ன வென்றால் இப்போது பக்கத்து மாநிலங்களான ஆந்திரத்திலும் கேரளத்திலும் கர்நாடகத்திலும் நாயுடு என்றும், நாயர் என்றும் ராவ் என்றும் ஆட்சியாளர்களேகூட பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் அப்படி வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில் சகலருக்கும் கூச்சம் இருக்கிறது. மறைவில் சாதி அதன் வன்மத்தோடு தயாராகக் காத்திருப்பதை மறுக்கவில்லை. ஓட்டுக்கு ஏங்கிகளால் அது எப்படியெல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்பது தெரிந்ததுதான். ஆனாலும் சாதியை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் காட்டுகிற தயக்கம், சாதி மறுப்பு, மறுமணம் போன்றவற்றில் ஏற்பட்ட சிறிய வெற்றியை இந்த பிரசுரங்கள் சாத்தியமாக்கின. ஆட்சிக்கு வந்தவர்கள் செய்த சில மாற்றங்களுக்குப் பின்னும் இந்த காலணா கையேடுகளின் உத்வேகம் இருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இக் கையேடுகளின் ஆட்சி நிரந்தமானது.
சமரசம் செய்ய வேண்டிய இந்த ஆட்சி அதிகாரத்தைப் பெரியார் உதறித்தள்ளியதற்கான கணிப்பையும் இப்போது தெளிவாகவே உணர முடிகிறது.
வெள்ளி, மே 15, 2009
சினுவா ஆச்சுபியுடன் ஓர் ஆப்ரிக்கப் பயணம்!
ஒரு இனம் அல்லது ஒரு மொழி அதன் தொன்மையை எப்படி பறைசாற்றுகிறது?
அதனுடைய ஆழமான இலக்கியச் செறிவு, உணவுப் பழக்க முறைகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓர் இனத்தின் தொன்மை அளக்கப்படுகிறது. கிரேக்க, எகிப்து, இந்திய பழந்தன்மையைப் பார்த்தால் அவற்றுக்கான இதிகாசங்கள், ஆன்மிக வசாரங்கள், அறிவியல் தேடல்கள், உணவு} உடை } அணிகலன் பழக்கங்கள் என சில பொதுத் தன்மையைக் காண்கிறோம். கலாசார ரீதியில் வளர்ந்த ஒரு நாகரிகத்தோடு இன்னொரு நாகரிகத்துக்கு குறிப்பட்ட அளவிலான தொடர்பு இருந்ததைதையும் சில பரிவர்த்தனை இருந்ததையும் பார்க்க முடிகிறது.
ஆனால் ஆதி இன மக்களிடம் இந்தச் சமரசம் இருந்ததில்லை. அவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பல நூறாண்டுகளாக அவர்களிடம் அந்த நம்பிக்கைகள் பிடுவாதங்களோடு இருக்கின்றன. முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொள்வது, ஆடையில்லாமல் இருப்பது, தலையில் பறவையின் இறகுகளைச் சொருகிக் கொள்வது என்று அவர்களின் நம்பிக்கை மிகுந்த இயற்கைத் தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆப்ரிக்க, அமேசான், அந்தமான், ஆஸ்திரேலிய காடுகளில் இன்னமும் இந்த ஆதி இன மக்கள் மனிதச் சமூக உறவுகள் அறுந்து துண்டுச் சங்கிலிகளாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய கி.மு., கி.பி., இரண்டாம் உலகப் போர், 123, நியூக்ளியர் போர் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய பிட்ஸô,
ரவா உப்புமா எதுவும் தெரியாது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அதே சமமயத்தில் அவர்களுக்கான பிரத்யேக அடையாளங்களோடு உலகில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன.
இந்த ஆதி இனக் குழுக்களின் அடையாளம்? அதன் வேடிக்கையான நம்பிக்கைகள்தான் அதன் தொன்மையின் அடையாளமாக இருக்கிறது.
ஆப்ரிக்க எழுத்தாளரான சினுவா ஆச்சுபி தன் 28 வயதில் எழுதிய சிதைவுகள் (ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்) இப்படியான மூர்க்கத்தனமான நம்பிக்கைகள் கொண்ட ஒர் இனக்குழுவின் கதை.
கதையைப் படிக்க ஆரம்பித்ததுமே ஆப்ரிக்க செம்மண் பூமியில் மலைகளும் மரங்களும் சூழ்ந்த ஒரு பொட்டல் பூமியை மனச் சித்திரமாகப் பார்க்கிறோம். நாவல் நம்மை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. நாமே நாவலின் ஒரு கதாபாத்திரம் போல மாறத் தொடங்குகிறோம். நமக்கு மிகவும் அன்னியப்பட்ட களம்தான். ஆனாலும் மரபார்ந்த நம்முடைய சில நம்பிக்கைகள் நம்மை ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நம் கற்பனையில் ஒரு மலைவாழ் கிராமத்தையும் பழங்குடி மக்களையும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய விவசாய முறை, உணவு முறை எல்லாம் நமக்குப் புரிபட ஆரம்பிக்கிறது. பளீரென்ற ஒரு தருணத்தில் நாம் அந்தப் பொட்டல் காட்டில் நிற்கிறோம். அவர்களின் அனைத்து சம்பிராதாயங்களோம் சடங்குகளோடும் ஏற்றுக் கொண்டு உடனிருக்கிறோம்.
ஒக்கொங்வோ என்ற துணிச்சல் மிக்கவனை நாவலின் முதல் வரியிலேயே அறிமுகப்படுத்துகிறார். அவன் ஒரு மல்யுத்த வீரனை வீழ்த்துகிறான். குழுவே அவனைக் கொண்டாடுகிறது. அடுத்து வேறொரு பிரச்னைக்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனக் குழுவினருடன் மோதி பணயமாக அங்கிருந்து ஒரு சிறுவனையும் ஒரு இளம் பெண்ணையும் பெற்றுவருகிறார்கள். பெண் யாருக்கோ அனுப்பிவைக்கப்பட்டு என்ன ஆனாள் என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிடுறது. அதாவது மாற்றுக் குழுவில் இருந்து பிடித்துக் கொண்டு வரப் பட்டவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அந்தச் சிறுவனை ஓராண்டு வரை வைத்திருக்கும் பொறுப்பு ஒக்கொங்வோவுடையது. என்ன காரணத்தாலோ மூன்றாண்டுகள் வரை அவனை குழுப் பொறுப்பாளிகள் மறந்துவிடுகின்றனர். அவன் ஒக்கொங்வோவின் வீட்டில் குழந்தைகளுடனும் சகோதரனாகவும் அவனுடைய நான்கு மனைவி
மார்களுடனும் மகனைப் போலவும் பழகிவிடுகிறான்.
இந்த நேரத்தில் ஓராண்டு மட்டுமே ஒக்கொங்வோவின் பராமரிப்பில் விடப்பட்ட சிறுவனைப் பற்றி முடிவெடுக்க குழு கூடுகிறது. அவனை எல்லோரும் சேர்ந்து ஓர் இரவில் உமோஃபியா கிராமத்துக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். பையனுக்கு தம்மை தன் வீட்டில் அழைத்துச் சென்றுவிட்டுவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிரிந்து வந்த தன் சொந்த சகோதரியையும் தாயையும் பற்றி ஏகப்பட்ட ஆசைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று எல்லோரும் பின் தங்கி விடுகிறார்கள். அந்தத் தனிமை அவனை அச்சமூட்டுகிறது. குழுவில் இருந்த ஒருவன் பெரிய கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்ட பாய்கிறான். சிறுவன் தப்பி ஓடிவந்து தன்னை வளர்த்த ஒக்கொங்வோவை நோக்கி அபயம் தேடி ஓடிவருகிறான். அருகில் வந்ததும் சுலபமாக அவனை வெட்டிவிடுகிறான் ஒக்கொங்வோ.
இதில் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நீதி மன்றத்தில் அவர்களைப் பொருத்திப் பார்ப்பது அபத்தம். நம்முடைய (இந்த "நம்முடைய' நாகரீகக் குழுக்கள் என்று சொல்கிற உலகத்துக்கானது) கிராம நீதி மன்றத்தில் யார் கற்பழித்தானோ அவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கிற தீர்ப்புகளும் பசிக்காகத் திருடியவனைச் சிரச்சேதம் செய்வதும் பிறகொரு காலத்தில் காட்டுமிராண்டித்தனமானதாகக் கட்டம் கட்டப்படும்.
கதைக்கு வருவோம்.
இதே ஒக்கொங்வோ ஒரு கேளிக்கையின் போது தம் இனச் சிறுவனைக் தவறுதலாக உயிர்ச்சேதம் செய்துவிடுகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல் தவறுதலாக நேர்ந்த இந்த விபத்துக்கு அவனை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிரார்கள். ஏழாண்டுகாலம் அவன் தம் இனத்தைப் பிரிந்து வாழ்கிறான்.
இத்தகைய நம்பிக்கைகளும் ஒழுங்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களும் நிரம்பிய பிராந்தியத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தேவ பிதாவோடு வருகிறார்கள். இரும்பு குதிரை (சைக்கிள்)யில் வந்த ஒரு பாதிரியாரைக் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ஆனால் இப்படி அறியாமையில் இருக்கும் மக்களை மீட்க ஒருவர் பின் ஒருவராக பாதிரி மார்கள் வந்து சேர்கிறார்கள். தேவாலயம் எழுப்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வேலையும் கல்வியும் புதிய மத அடையாளங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஆதி இனக்குழுவின் முதியவர்கள் பாதிரிமார்களையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களையும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பியர்கள் நீதி அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதாவது அநீதியாக இருக்கிறது.
நீதிமன்ற ஏவலாளை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக ஒக்கொங்வோ தேடப்படுகிறான். ஆனால் நீதி மன்றக் காவலர்களால் அவனைத் தூக்குமரத்தில் இறந்து தொங்கும் நிலையில்தான் கைப் பற்ற முடிகிறது. அவனை கீழே இறக்குவதற்கு அவனுடைய இன மக்கள் யாருமே வரவில்லை. எந்த இனத்துக்காக அவன் தன் வாழ்நாளெல்லாம் போராடினானோ எந்த இனத்துக்காக உயிரை விட்டானோ அந்த இனத்து மக்கள் அவனை மரத்தில் இருந்து கீழே இறக்கவோ, புதைக்கவோ வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இன வழக்கப்படி தற்கொலை செய்து கொள்வது குற்றம். அது எந்தக் காரணத்துக்காக இருப்பினும். கதை முடிகிறது.
காலனி ஆதிக்கம் அந்த மனிதர்கள் மீது நிகழ்த்தப் போகும் நாகரீகத்தின் திணிப்பு நம்மை திகில் கொள்ள வைக்கின்றன. யேசுவுக்குப் பதிலாக அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிற கடவுளும் ஐரோப்பிய சட்டங்களுக்குப் பதிலாக அவர்களுடைய சட்டங்கள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும்கூட அந்த அச்சத்தின் காரணமாக நினைக்கத் தோன்றுகிறது.
அவர்களை ஜீன்ஸ் பேண்ட் போட வைப்பதும் கேக் சாப்பிட வைத்து தேவாலயத்தில் ஆமென் சொல்ல வைப்பது அவ்வளவு முக்கியமா?
ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை.
கதையின் களத்தில் நாமும் ஒரு மனிதராக கலந்து பிரயாணிக்கிற உணர்வைத் தருவதால் நமக்கும்கூட "உமோஃபியா'வின் உரிமைமீது அக்கறை ஏற்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் மீது "இனம் புரிந்த' கோபம் ஏற்படுகிறது. நாவலின் வெற்றியாக நான் நினைப்பது அதைத்தான்.
(நன்றி புத்தகம் பேசுது இதழ்- மே 2009)
அதனுடைய ஆழமான இலக்கியச் செறிவு, உணவுப் பழக்க முறைகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு ஓர் இனத்தின் தொன்மை அளக்கப்படுகிறது. கிரேக்க, எகிப்து, இந்திய பழந்தன்மையைப் பார்த்தால் அவற்றுக்கான இதிகாசங்கள், ஆன்மிக வசாரங்கள், அறிவியல் தேடல்கள், உணவு} உடை } அணிகலன் பழக்கங்கள் என சில பொதுத் தன்மையைக் காண்கிறோம். கலாசார ரீதியில் வளர்ந்த ஒரு நாகரிகத்தோடு இன்னொரு நாகரிகத்துக்கு குறிப்பட்ட அளவிலான தொடர்பு இருந்ததைதையும் சில பரிவர்த்தனை இருந்ததையும் பார்க்க முடிகிறது.
ஆனால் ஆதி இன மக்களிடம் இந்தச் சமரசம் இருந்ததில்லை. அவர்கள் சிறிய குழுவாக இருந்தாலும் அவர்களின் தனித்தன்மையை இழக்காமல் இருப்பதில் பிடிவாதமாக இருப்பவர்களாக இருக்கிறார்கள். பல நூறாண்டுகளாக அவர்களிடம் அந்த நம்பிக்கைகள் பிடுவாதங்களோடு இருக்கின்றன. முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொள்வது, ஆடையில்லாமல் இருப்பது, தலையில் பறவையின் இறகுகளைச் சொருகிக் கொள்வது என்று அவர்களின் நம்பிக்கை மிகுந்த இயற்கைத் தன்மையோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆப்ரிக்க, அமேசான், அந்தமான், ஆஸ்திரேலிய காடுகளில் இன்னமும் இந்த ஆதி இன மக்கள் மனிதச் சமூக உறவுகள் அறுந்து துண்டுச் சங்கிலிகளாக வாழ்வதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய கி.மு., கி.பி., இரண்டாம் உலகப் போர், 123, நியூக்ளியர் போர் எதுவும் அவர்களுக்குத் தெரியாது. நம்முடைய பிட்ஸô,
ரவா உப்புமா எதுவும் தெரியாது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டு அதே சமமயத்தில் அவர்களுக்கான பிரத்யேக அடையாளங்களோடு உலகில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன.
இந்த ஆதி இனக் குழுக்களின் அடையாளம்? அதன் வேடிக்கையான நம்பிக்கைகள்தான் அதன் தொன்மையின் அடையாளமாக இருக்கிறது.
ஆப்ரிக்க எழுத்தாளரான சினுவா ஆச்சுபி தன் 28 வயதில் எழுதிய சிதைவுகள் (ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்) இப்படியான மூர்க்கத்தனமான நம்பிக்கைகள் கொண்ட ஒர் இனக்குழுவின் கதை.
கதையைப் படிக்க ஆரம்பித்ததுமே ஆப்ரிக்க செம்மண் பூமியில் மலைகளும் மரங்களும் சூழ்ந்த ஒரு பொட்டல் பூமியை மனச் சித்திரமாகப் பார்க்கிறோம். நாவல் நம்மை மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பிக்கிறது. நாமே நாவலின் ஒரு கதாபாத்திரம் போல மாறத் தொடங்குகிறோம். நமக்கு மிகவும் அன்னியப்பட்ட களம்தான். ஆனாலும் மரபார்ந்த நம்முடைய சில நம்பிக்கைகள் நம்மை ஏதோ ஒரு புள்ளியில் நம்மை அவர்களுடன் ஒருங்கிணைக்கிறது. நம் கற்பனையில் ஒரு மலைவாழ் கிராமத்தையும் பழங்குடி மக்களையும் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய விவசாய முறை, உணவு முறை எல்லாம் நமக்குப் புரிபட ஆரம்பிக்கிறது. பளீரென்ற ஒரு தருணத்தில் நாம் அந்தப் பொட்டல் காட்டில் நிற்கிறோம். அவர்களின் அனைத்து சம்பிராதாயங்களோம் சடங்குகளோடும் ஏற்றுக் கொண்டு உடனிருக்கிறோம்.
ஒக்கொங்வோ என்ற துணிச்சல் மிக்கவனை நாவலின் முதல் வரியிலேயே அறிமுகப்படுத்துகிறார். அவன் ஒரு மல்யுத்த வீரனை வீழ்த்துகிறான். குழுவே அவனைக் கொண்டாடுகிறது. அடுத்து வேறொரு பிரச்னைக்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு இனக் குழுவினருடன் மோதி பணயமாக அங்கிருந்து ஒரு சிறுவனையும் ஒரு இளம் பெண்ணையும் பெற்றுவருகிறார்கள். பெண் யாருக்கோ அனுப்பிவைக்கப்பட்டு என்ன ஆனாள் என்பதுகூட இரண்டாம்பட்சமாகிவிடுறது. அதாவது மாற்றுக் குழுவில் இருந்து பிடித்துக் கொண்டு வரப் பட்டவர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அந்தச் சிறுவனை ஓராண்டு வரை வைத்திருக்கும் பொறுப்பு ஒக்கொங்வோவுடையது. என்ன காரணத்தாலோ மூன்றாண்டுகள் வரை அவனை குழுப் பொறுப்பாளிகள் மறந்துவிடுகின்றனர். அவன் ஒக்கொங்வோவின் வீட்டில் குழந்தைகளுடனும் சகோதரனாகவும் அவனுடைய நான்கு மனைவி
மார்களுடனும் மகனைப் போலவும் பழகிவிடுகிறான்.
இந்த நேரத்தில் ஓராண்டு மட்டுமே ஒக்கொங்வோவின் பராமரிப்பில் விடப்பட்ட சிறுவனைப் பற்றி முடிவெடுக்க குழு கூடுகிறது. அவனை எல்லோரும் சேர்ந்து ஓர் இரவில் உமோஃபியா கிராமத்துக்கு வெளியே அழைத்துச் செல்கிறார்கள். பையனுக்கு தம்மை தன் வீட்டில் அழைத்துச் சென்றுவிட்டுவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிரிந்து வந்த தன் சொந்த சகோதரியையும் தாயையும் பற்றி ஏகப்பட்ட ஆசைகளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று எல்லோரும் பின் தங்கி விடுகிறார்கள். அந்தத் தனிமை அவனை அச்சமூட்டுகிறது. குழுவில் இருந்த ஒருவன் பெரிய கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை வெட்ட பாய்கிறான். சிறுவன் தப்பி ஓடிவந்து தன்னை வளர்த்த ஒக்கொங்வோவை நோக்கி அபயம் தேடி ஓடிவருகிறான். அருகில் வந்ததும் சுலபமாக அவனை வெட்டிவிடுகிறான் ஒக்கொங்வோ.
இதில் எந்தவித அதிர்ச்சியும் அடையாமல் மேற்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நீதி மன்றத்தில் அவர்களைப் பொருத்திப் பார்ப்பது அபத்தம். நம்முடைய (இந்த "நம்முடைய' நாகரீகக் குழுக்கள் என்று சொல்கிற உலகத்துக்கானது) கிராம நீதி மன்றத்தில் யார் கற்பழித்தானோ அவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கிற தீர்ப்புகளும் பசிக்காகத் திருடியவனைச் சிரச்சேதம் செய்வதும் பிறகொரு காலத்தில் காட்டுமிராண்டித்தனமானதாகக் கட்டம் கட்டப்படும்.
கதைக்கு வருவோம்.
இதே ஒக்கொங்வோ ஒரு கேளிக்கையின் போது தம் இனச் சிறுவனைக் தவறுதலாக உயிர்ச்சேதம் செய்துவிடுகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல் தவறுதலாக நேர்ந்த இந்த விபத்துக்கு அவனை ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிரார்கள். ஏழாண்டுகாலம் அவன் தம் இனத்தைப் பிரிந்து வாழ்கிறான்.
இத்தகைய நம்பிக்கைகளும் ஒழுங்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களும் நிரம்பிய பிராந்தியத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தேவ பிதாவோடு வருகிறார்கள். இரும்பு குதிரை (சைக்கிள்)யில் வந்த ஒரு பாதிரியாரைக் கட்டி வைத்து உதைக்கிறார்கள். ஆனால் இப்படி அறியாமையில் இருக்கும் மக்களை மீட்க ஒருவர் பின் ஒருவராக பாதிரி மார்கள் வந்து சேர்கிறார்கள். தேவாலயம் எழுப்புகிறார்கள். அங்கே அவர்களுக்கு வேலையும் கல்வியும் புதிய மத அடையாளங்களும் ஏற்படுத்தப்படுகிறது. ஆதி இனக்குழுவின் முதியவர்கள் பாதிரிமார்களையும் ஐரோப்பிய ஆட்சியாளர்களையும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பியர்கள் நீதி அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அதாவது அநீதியாக இருக்கிறது.
நீதிமன்ற ஏவலாளை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக ஒக்கொங்வோ தேடப்படுகிறான். ஆனால் நீதி மன்றக் காவலர்களால் அவனைத் தூக்குமரத்தில் இறந்து தொங்கும் நிலையில்தான் கைப் பற்ற முடிகிறது. அவனை கீழே இறக்குவதற்கு அவனுடைய இன மக்கள் யாருமே வரவில்லை. எந்த இனத்துக்காக அவன் தன் வாழ்நாளெல்லாம் போராடினானோ எந்த இனத்துக்காக உயிரை விட்டானோ அந்த இனத்து மக்கள் அவனை மரத்தில் இருந்து கீழே இறக்கவோ, புதைக்கவோ வரவில்லை. ஏனென்றால் அவர்கள் இன வழக்கப்படி தற்கொலை செய்து கொள்வது குற்றம். அது எந்தக் காரணத்துக்காக இருப்பினும். கதை முடிகிறது.
காலனி ஆதிக்கம் அந்த மனிதர்கள் மீது நிகழ்த்தப் போகும் நாகரீகத்தின் திணிப்பு நம்மை திகில் கொள்ள வைக்கின்றன. யேசுவுக்குப் பதிலாக அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கிற கடவுளும் ஐரோப்பிய சட்டங்களுக்குப் பதிலாக அவர்களுடைய சட்டங்கள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும்கூட அந்த அச்சத்தின் காரணமாக நினைக்கத் தோன்றுகிறது.
அவர்களை ஜீன்ஸ் பேண்ட் போட வைப்பதும் கேக் சாப்பிட வைத்து தேவாலயத்தில் ஆமென் சொல்ல வைப்பது அவ்வளவு முக்கியமா?
ஒரு சிங்கம் அதன் விருப்பம் போல இருப்பதற்கும் ஒரு பூனை அதன் விருப்பப்படி வாழ்வதற்கும் உரிமை உள்ள இந்தப் பூமிப்பந்தில் மனிதனுக்கு மட்டும் தாம் பின்பற்றுவதை எல்லோருமே பின்பற்ற வேண்டும் என்ற அவசரம் இருக்கிறது. ஹிட்லரும் புஷ்ஷும் பின்லேடனும் நரேந்திர மோடியும் இந்த அவசரங்களுக்காக வருத்தப்பட வேண்டிய நிலை வரும். ஆனால் பெரும்பாலும் அந்தச் சந்தர்ப்பங்களில் வருத்தப்பட வேண்டியவர்கள் இருப்பதில்லை.
கதையின் களத்தில் நாமும் ஒரு மனிதராக கலந்து பிரயாணிக்கிற உணர்வைத் தருவதால் நமக்கும்கூட "உமோஃபியா'வின் உரிமைமீது அக்கறை ஏற்படுகிறது. காலனி ஆதிக்கத்தின் மீது "இனம் புரிந்த' கோபம் ஏற்படுகிறது. நாவலின் வெற்றியாக நான் நினைப்பது அதைத்தான்.
(நன்றி புத்தகம் பேசுது இதழ்- மே 2009)
சனி, மே 09, 2009
மீன்மலர் வாசகனுடனான உரையாடல்
மீன்மலர்
நூல் அறிமுகம்
வாசகனுடனான உரையாடல்
ஐ.சிவகுமார்
வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.
தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.
இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.
சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.
‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.
தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.
தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85
நூல் அறிமுகம்
வாசகனுடனான உரையாடல்
ஐ.சிவகுமார்
வெகுசன இலக்கியங்களின் நுகர்வுப் பரப்பிலிருந்து தீவிரத் தன்மையுடைய இலக்கியங்களை நோக்கி நகரும் வாசகருக்கான படைப்புகள் தான் தமிழ்மகனுடையது. இவரது படைப்புகள் வாசகருக்கானதாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியான தேடலுடைய வாசக மனநிலையில் இருந்தும் எழுதப்பட்டுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. அதாவது வாசகர்களை ‘மந்தைகளாகக்’ கருதி ஏதோ ஒன்றை எழுதிக் குவிப்பதாகவோ அல்லது தானே ‘தூய படைப்பாளி’ எனும் வீம்புடனும் எழுதுவதாகவோ இவரது படைப்புகள் இல்லை. வாசகனோடு வாசகனாக உரையாடி நகர்கின்றன. இவரது கதைகள், சமீபத்தில் இவரது சிறுகதைகளை ‘மீன்மலர்’ எனும் தொகுப்பாக உயிர்மை வெளியிட்டுள்ளது.
தமிழ்மகனது கதைகளை வசதி கருதி சிக்கல் நிறைந்த சமூக யதார்த்தங்கள், கலைஞனின் மன உளைச்சல்கள், எதிர்கால உலகம் குறித்த அவதானிப்புகள் எனப் பொருண்மை அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தலாம். ஆனாலும் இவ்வாறான வகைப்படுத்தல்களை மிகச் சாதாரணமான தமிழ் மகனுடைய கதைகள் உடைத்தெறிந்து விடுகின்றன.
இத்தொகுப்பின் கடைசி கதையாக உள்ள ‘மொத்தத்தில் சுமாரான வாரம்’ எனும் கதையே மிக எளிமையாக, ஆகச் சிறந்த புனைவுகளை இவரால் உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாகிறது. ஒரே குடியிருப்பில் ஒண்டிக் குடித்தனங்கள் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும், செயல்பாடுகளையும் பதிவு செய்துள்ளது. பின் நவீனத்துவம் அறிவுறுத்தும் பன்முகத்தன்மை குறித்தான கோட்பாடு ரீதியான அக்கறைகளைப் புறந்தள்ளி சமூகத்தின் யதார்த்தத்தை பதிவு செய்ததே இக்கதையின் வெற்றிக்குக் காரணம்.
சமூக யதார்த்தத்தை மட்டுமல்லாமல் மாய யதார்த்தத்தையும் ‘வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி’ கதையில் நம்பகத்தன்மை குறையாமல் கையாண்டிருக்கிறார். மனித மொழியைக் கையாளும் திறமை பெற்ற சிங்கக் கூட்டமொன்றிடம் விலங்கியல் ஆராய்ச்சியாளனான ஆல்பட் தவறுதலாக வந்து சேர்கிறான். அடிப்பட்டவனைக் காப்பாற்றி அவனுக்கு உணவும் கொடுத்து உரையாடுகின்றது சிங்கம். இருவருக்குமான உரையாடலில் சுயநலம் சார்ந்த மனிதனின் உள்மன வக்கிரங்களை மிக நேர்த்தியாக தமிழ்மகன் தோலுரித்துக் காட்டுகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆசிரியர் குறுக்கீடின்றி பாத்திரங்களின் உரையாடல்களினூடாகவே நகர்வது சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது. சிங்கங்களுக்கான மனித சமூகத்திடம் குரல் கொடுப்பேன் எனக் கூறும் ஆல்பட்டிடம் ‘பேசத் தெரிந்த எங்களைக் கூண்டிலடைத்து கொண்டுச் சென்று டி.வி, காமிரா முன் பேசச் செய்து கொடுமைப்படுத்துவார்கள்’ என சிங்கம் கூறும் வார்த்தையில் மனிதனின் உள்மன வக்கிரங்கள் மட்டுமின்றி ஊடகங்களின் ‘போலிச் சமூக அக்கறையும்’ தோலுரிக்கப்படுகிறது.
‘எதிர்மென் அரக்கன்’ கதையில் எதிர்காலத்தில் வாழும் ஆய்வாளன் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் இணைந்து எழுதிய கதையைத் தேட முயல்வதும் அதன் தாக்கமும் புனைவு முடிச்சும் படித்துப் பார்த்தால்தான் அனுபவிக்கக் கூடியன.
தமிழ்மகனது கதைகளை வைத்துக்கொண்டு இவர் இந்தக் கோட்பாட்டிற்கு சொந்தமானவர் என்று உரிமைக் கொண்டாடவோ பழிபோடவோ முடியாது. ஏனெனில் அவர் எல்லா அதிகாரங்களையும் நம்பப்படுகின்ற எல்லாவற்றையும் புனைவு முடிச்சின் வழியே உருப்பெறும் தர்க்கங்களால் சிதைக்கிறார். அதனால் தான் இவரால் சங்கராச்சாரியை மட்டுமல்ல, பெரியாரையும் சந்தேகப்பட முடிகிறது. தமிழ்மகன் ‘கடவுள் தொகை’ கதாபாத்திரம் போன்றே எவ்விதமான முன் முடிவுகளோ தீர்மானங்களோ அற்றவர். அதேசமயம் உலக நாடுகளின் நிம்மதியைக் குலைத்து தனது மேலாண்மையை செலுத்தும் அமெரிக்காவையும், கல்வியை இலாபம் கொழுக்கும் வணிகப் பண்டமாக மாற்றுபவர்களையும் எதிர்க்கும் தன்மையோடே இவரது கதைகள் உள்ளன.
தமிழ்மகன் ஆண் மையம் சார்ந்த தனது புனைவு வகைக் கொண்டு செல்வதை சுட்டிக் காட்டுவது அவசியம். ஏனெனில் இவரது கதைகளில் தனித்த ஆளுமை கொண்ட பெண் பாத்திரம் ஏதுமில்லை. பெண் சிங்கம் கூட கணவனின் கட்டளைக்கிணங்கி கறி சமைத்துக் கொண்டு வருவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாசகரால் நவீனத் தன்மையுடையவராக அடையாளம் காணப்படும் தமிழ்மகன் பெண் வாசகரால் பழமைவாதியான சுட்டப்பட வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் தமிழ்மகனின் சிறுகதைகள் வாசகனை வாசிப்பின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
மீன்மலர், தமிழ்மகன், வெளியீடு: உயிர்மை, சென்னை18
பக். 158, ரூ. 85
கடைசி புத்தகம் சிறுகதை பற்றி அ.முத்துலிங்கம்
அன்பு நண்பருக்கு,
வணக்கம்.
கடைசி புத்தகம் சிறுகதை அருமையான ஆரம்பம். இட்டாலோ கல்வினோவைப் படித்ததுபோலவே இருந்தது.
மூதிர்ச்சியான எழுத்து. வாழ்த்துக்கள்.
உ.க்.நா படித்துவிட்டு அதைப்பற்றி திண்ணையில் எழுதுங்கள்.
அன்புடன்
அ.மு
வணக்கம்.
கடைசி புத்தகம் சிறுகதை அருமையான ஆரம்பம். இட்டாலோ கல்வினோவைப் படித்ததுபோலவே இருந்தது.
மூதிர்ச்சியான எழுத்து. வாழ்த்துக்கள்.
உ.க்.நா படித்துவிட்டு அதைப்பற்றி திண்ணையில் எழுதுங்கள்.
அன்புடன்
அ.மு
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலில் நான்
2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்
In Books, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:45 பிற்பகல்
1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்
2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி
3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி
4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.
5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.
6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.
7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.
8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.
9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.
10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.
நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்
In Books, Literature, Magazines, Tamilnadu on ஏப்ரல் 23, 2009 at 2:45 பிற்பகல்
1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்
2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி
3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி
4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.
5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.
6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.
7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.
8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.
9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.
10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.
நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்
வெள்ளி, மே 08, 2009
மணமகள்
மணமகள்
பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.
எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.
நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.
உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.
யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.
பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.
ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.
"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.
"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.
அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.
கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.
வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'
இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.
"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.
ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.
முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.
"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.
"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார்.
பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.
கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.
யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.
மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.
திண்ணை.காம், தினமணி கதிர்.
பூரணிக்கு மட்டும் ஒரு மேஜை விசிறி வைத்திருந்தார்கள். மேலே இன்னொரு பேன் சுழன்று கொண்டிருக்க இது தனி. வாழ்க்கையில் இதற்கு முன்னரோ, இதன் பின்னரோ அவளுக்குக் வாய்க்க முடியாத ஒரு அந்தஸ்து அது. சாயங்காலம் ஐந்து மணி வரைகூட தனக்கு இப்படியொரு மரியாதை கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தயார் நிலையில் இருந்த தாழம்பு ஜடையைத் தலையில் பொருத்தி கைக்கு ஒரு டஜன் கண்ணாடி வளையலை மாட்டி, மஞ்சளும் குங்குமமாக நலங்கு வைத்து முடித்ததும் தானும் மணப்பெண்போல மாறிவிட்டதை பூரணி உணர்ந்தாள். மணமகள் அறையில் டி.வி. பெட்டி அளவுக்கு மாட்டியிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் தன்னை முதன்முதலாகப் பார்த்தபோது தானும் மின் விசிறிக்குத் தகுதியானவள்தான் என்று நம்பினாள்.
எங்கிருந்துதான் தன்னைச் சுற்றி இத்தனைப் பெண்கள் வந்து சேர்ந்தார்கள் என்பதும் அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. எப்போதும் ஏறிட்டும் பார்க்காத விஜயாகூட தனக்கு பவுடர் போட்டு மை வைத்துவிட்டதை நினைத்துப் பார்க்கும்போது இது வாழ்விலே ஒரு நாள் என்றுதான் தோன்றியது. எல்லோரும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறார்கள். வலிந்து வந்து கிண்டல் செய்கிறார்கள். வியர்த்திருந்தால் துடைத்துவிடுகிறார்கள். "ஜாக்கெட் கலர் இன்னும் கொஞ்சம் டார்க்காக இருந்திருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்' என்கிறார்கள்.
நேற்றுவரை தலைக்கு எண்ணெய் இல்லாமல், முகமெல்லாம் எண்ணெய் வழிய தையல் பிரிந்த ஜாக்கெட் போட்டிருந்தபோது அவளை யாரும் பொருட்படுத்தாமல் இருந்ததை எல்லோருக்குமேவா நினைவில்லாமல் போயிருக்கும்? "வழக்கமாக நாங்கள் அப்படித்தான் தமாஷ் செய்து கொள்வோம்' என்பது போல நடந்து கொண்டார்கள்.
உபயோகிக்காமல் கிடந்த நெல் மண்டியை ஒரு அவசரத்துக்காகக் கல்யாண மண்டபமாக மாற்றியிருந்தார்கள் போலும். அவசரத்துக்கு இந்த மண்டபம்தான் கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள். நிதானமாக ஏற்பாடு செய்திருந்தாலும் இதைத்தான் தீர்மானித்திருப்பார்கள். கல்யாண பந்தலும் வாசல் பக்கம் கட்டியிருந்த தோரணங்களும் இது கல்யாண மண்டபம் எனக் காட்டினாலும் நெல் சுணை இன்னும் மிச்சமிருந்தது. மண்டபத்தின் ஒரு மூலையில் கோணிகளும் உமியும் குவிக்கப்பட்டிருந்தது. விசிறிக்காற்றில் இது இன்னும் அதிகமாகவே உறைத்தது. வேறுப் பக்கம் திருப்பி வைத்தாலோ கொசுத் தொல்லை. கேலிப் பேச்சுகள், வலிந்து காட்டிய மகிழ்ச்சிகள், உற்சாகங்கள் எல்லாம் ஓய்ந்து எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
பூரணிக்குச் சுதந்திரமாக யோசிப்பதற்குக் கொஞ்சம் நேரம் கிடைத்தது.
அப்பாவுக்கு ரொம்ப முடியாமல் போய், கடந்த இரண்டு மாதமாகவே யார், யாரோ பெண் கேட்டு வந்து போனார்கள். நான்கு மணிக்கு பெண் பார்க்க வருகிறார்கள் என்று மூன்று மணிக்கு வந்து சொல்லுவார்கள். பக்கத்து சோடா கலர் அண்ணாச்சியிடம் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அந்தப் பிரத்யேக புடவையைச் சுற்றிக் கொண்டு காபி போட்டு வைத்துவிடுவாள். சாயங்கால நேரத்தில் வருகிறவர்களுக்கு காபியோடு கடையில் இருந்து கொண்டு வந்த பஜ்ஜியும் வைப்பாள். காலையில் வந்தால் காபியும் மசால் வடையும். காலையில் இட்லியும் மசால் வடையும்தான் கடையில் போடுவது வழக்கம். அம்மா உயிரோடு இருந்தபோதிலிருந்தே அப்படித்தான்.
யாராவது பெண் பார்க்க வந்தால் எப்படா கிளம்புவார்கள் என்ற தவிப்புதான் எல்லாவற்றையும்விட அதிகமாக இருக்கும். சாயங்கால நேரத்தில் அண்ணாச்சி கடைக்கு சரக்கு எடுக்க ஆள்கள் வந்துவிடுவார்கள். பெண் பார்க்க வருகிற நேரத்தில் அவரோட சம்சாரம் லோகாவும் பூரணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவதால் அவர் பாடு பெண்டு நிமிர்ந்து போகும். "வந்தமா பார்த்தமா போனமானு இல்லாம இங்கயே தங்கப் போறது மாதிரி' பேசிக் கொண்டிருக்கும்போது பூரணிக்குக் கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருக்கும். இரண்டு வருஷத்துக்கு முன்னால், பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் பாட்டி ஊரில் இருந்து யாரையாவது வந்து தங்க வைத்து கொஞ்சம் முன்னேற்பாடெல்லாம் நடக்கும்.
பூரணிக்கே பெண் பார்க்கும் சடங்கு ஓரளவுக்குத் தெரிந்துவிட்டதாலும் அடிக்கடி யாரையாவது கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாததாலும் பஜ்ஜிக்கு மாவு கரைக்கிற மாதிரி, துணி துவைக்கிற மாதிரி அதையும் வேலையோடு வேலையாகச் செய்து முடித்துவிடுவாள்.
விடிந்தால் கல்யாணம். இந்த நேரத்தில் இப்படி ஒரு திண்டாட்டம். தாம் கழுத்தை நீட்டப் போவது யாருக்கு என்று அவளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை. மணமகன் யாரென்று கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்குமோ எனச் சில நாளும் அட அதுகூடத் தெரியாமத்தான் கழுத்த நீட்டப் போறீயா என்று கேலி பேசுவார்கள் என்று சிலநாளும் தவித்துக் கொண்டிருந்தாள். தெரிந்துதான் என்னப் பண்ணப் போகிறோம் என்ற கேள்விக்கு அவளிடம் விடையில்லைதான்.
ராமாபுரம் செல்லமுத்து முதலிதான் மாடுபிடிக்கிற கையோடு போகிற இடங்களில் மாப்பிள்ளைக்கும் சொல்லி வைத்திருந்தார். இதே மாதிரி மெயின் ரோட்டில் சாப்பாட்டுக் கடை வைத்திருக்கிற நான்கைந்து பேரை சமீபத்தில் கூட்டி வந்திருந்தார். இட்லிக்கு மாவு ஊறப்போட வேண்டிய அவசரத்திலோ, எண்ணெய் கடாயை அணைக்காமல் வந்துவிட்ட தவிப்பிலோ எந்த மாப்பிள்ளை முகமும் சரியாக ஞாபகம் இல்லை.
"எலாவூரான் மாப்பிள்ளையே படிஞ்சு போச்சும்மா... உனக்கு சம்மதம்தான?' என்று ஒப்புதல் கேட்கிற தொனியில் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்பாவுக்குக் கைகால் விழுந்த பிறகு அவர் எது சொன்னாலும் அவரவர் வசதிக்கு அவர் சொல்வதை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அவர் "ஊஹும்' என்று தலையசைத்தாலும் "அவனே "ஊம் சொல்லிட்டான் அப்புறம் என்னம்மா' என்று சொல்லிவிடுவார்கள். இதற்கப்புறம் இன்னொரு தரம் மாப்பிள்ளை வீட்டார் வந்து போவார்கள் என்று பூரணியும் மாப்பிள்ளையை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள். கல்யாணத்துக்கு முன்னர் மாப்பிள்ளை யாரென்று தெரிந்து கொள்வது தமக்கான உரிமை என்றுகூட இரவில் கொஞ்சம் யோசித்துப் பார்ப்பாள். ஆனால் பெரியவர்கள் அப்படி நரகத்திலா தள்ளிவிடுவார்கள் என்ற சமாதானமும் கூடவே தோன்றும்.
"கல்யாணத்தன்னைக்கே நிஸ்தாம்பலம் வெச்சுக்கலாம்' என்று முடிவாகிவிட்டதாக அப்புறம்தான் தெரிந்தது.
அதன் பிறகு யார் மாப்பிள்ளை என்று எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. திருமணம் முடிவானதும் சொந்த பந்தங்கள் எல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு வந்தனர். அதில் யாரிடம் மணமகனைப் பற்றி விசாரிப்பது என்று தெரியவில்லை. விசாலாட்சி கிழவியும் சுசீலா அத்தையும் மாமாவும் போய் வந்தார்கள். மூன்று பேராகப் போகக் கூடாது என்பதால் செல்லமுத்து முதலியும் அவருடைய அக்காவும்கூட போனார்கள். ஆனால் யாருமே மாப்பிள்ளையைப் பற்றி விவரிக்கவில்லை. போய் வந்ததும் விசாலாட்சி கிழவி, "எம்மாடி... உன்னாட்டம் ஒண்ரையணா கடை இல்லடி அது... அண்டா, குண்டா, அடுக்குச் சட்டினு டெய்லி நீ தேச்சுப் போட வேண்டியது ஒரு வண்டி சாமான் இருக்கு' என்றது.
கிழவி சொன்ன இந்த அடையாளத்தை வைத்துப் பார்க்கும்போது முதலில் வந்து ஆவணி மாசம் அமாவாசைக் கழிச்சு வந்தவங்களாத்தான் இருக்கும் என்று தோன்றியது. ஆள் கொஞ்சம் கருப்புதான். முன் வழுக்கையும் இருந்தது.
வெள்ளை வேட்டியும் சட்டையும் போட்டிருந்தது ஞாபகம் இருந்தது. "பேச்செல்லாம் கொஞ்சம் தூக்குதலாகத்தான் இருந்தது. நல்ல உழைப்பாளியாட்டம் இருந்தது. கண்ணு ரொம்ப சிவந்து இருந்தது. குடிப்பாரா இருக்கலாம். பொழுதன்னைக்கும் வேலையா இருக்கிற மனுஷன் ராத்திரி ரவ குடிச்சாத்தானே தூக்கம் வரும்?'
இப்படித்தான் மனசில் தன் கணவனை உருவாக்கி வைத்திருந்தாள் பூரணி. லோகாதான் குழப்புகிறாள். "ஏண்டி ஒரு தடவை கடைக்கு வந்து பார்த்துட்டுப் போனாரே அவர்தான் மாப்பிள்ளை' என்கிறாள்.
"எலாவூர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்துட்டுப் போனது அவர்தான்டீ' என்று அடித்துச் சொல்கிறாள்.
ஒரு நாள் மத்தியானம் கடையில் உட்கார்ந்து கரும்பு மென்று கொண்டிருந்தபோது வந்தார் அவர். அவர்கள் அப்பாவும் அம்மாவும் வந்தபோது அவருக்கு ஏதோ வேலை என்று வரமுடியவில்லை. பெண் எப்படி என்று பேச்சுக் கொடுப்பதற்காக வந்திருந்தார். வந்தவர், கடை வாசலில் நின்றபடி "பனங்கிழங்கா அது? என்னவிலை எனக்கு ரெண்டு குடுமா?' என்று ஆரம்பித்தார். "இது விக்கிறதுக்கு இல்லண்ணே.. சும்மா நான் சாப்பிட்றதுக்கு வெச்சிருக்கேன்... இது பனங்கிழங்கில்லண்ணே, கரும்பு...' என்றபடி வாயில் மென்று கொண்டிருந்த கரும்புச் சக்கையை எடுத்து ஆதாரத்தோடு காண்பித்தாள்.
முகத்தருகே நீட்டப்பட்ட கரும்புச் சக்கையைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டான்.
அவர் சிவப்பா ஒடிசலா பேண்ட் போட்டுக்கிட்டு இருந்தார். எலக்ட்ரிக் வேலை செய்வதாக சொல்லியிருந்தார்கள்.
"இது ரெண்டுல யாரா இருந்தாலும் பரவாயில்லை' என மனதைத் தயார் படுத்தியிருந்தாள். செல்லமுத்து முதலி நேத்து வந்து புதுதாகக் குழப்பிவிட்டுப் போய்விட்டார்.
"உனக்கென்னம்மா நல்ல நாத்தனார் கிடைச்சுட்டா. பொண்ணு பாக்கும்போதே உங்கிட்ட சினேகிதமாயிடுச்சே அந்தப் பொண்ணு' என்றார்.
பூரணிக்கு மேலும் சிக்கலான குறிப்பாக இருந்தது இது. ஏனென்றால் அவள் யோசித்து வைத்திருந்த அந்த இரண்டு பேரும் இல்லாத இன்னொருத்தரைத்தான் அவர் சொல்கிறார். அப்படி அண்ணனும் தங்கையுமாக வந்தது இந்த இருவருமற்ற வேறொருவர் என்பதாக நினைவு. செல்லமுத்து முதலி யாரையோ யாருடனோ மாற்றி அண்ணன் தங்கையாகச் சொல்கிறார். அன்று வந்தவர் வேட்டியும் ரோஸ் கலர் சட்டையும் போட்டிருந்தார். ஓயாமல் இருமிக் கொண்டிருந்தார். வந்த வேகத்தில் பத்து பீடி பிடித்தார். திண்ணைப் பக்கம் சளியாகத் துப்பி வைத்திருந்தார். தான் மணக்கப் போவது அவராக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். யாராவது ஒரு போட்டோ கொண்டு வந்து காட்டினால் நன்றாக இருக்குமே என்ற தவிப்பு இருந்தது. ஆனால் பத்திரிகை அடித்து, கூரை புடவை எடுத்து, பத்து பாத்திரமெல்லாம் வாங்கியான பின்பு யார் மாப்பிள்ளையாக இருந்து என்ன செய்ய முடியும் என்று ஒரு அசூசையும் இருந்தது மனதுக்குள்.
கடைசி கடைசியாக அவளுக்குத் தோன்றியதெல்லாம் தாம் யோசித்த இந்த மூவரில் ஒருத்தர்தானா? இது இல்லாத வேறு ஒருத்தரா என்பதைத் தெரிந்து கொள்கிற சிந்தனையாக மாறிவிட்டது. எப்போது தூங்கினாள் என்று நினைவில்லை. எழுப்பி குளித்துவிட்டு வரச் சொன்னார்கள். மேளச் சத்தம் கேட்டது. கூடத்தில் பார்த்தபோது அப்பாவை யாரோ குளிப்பாட்டி புது வேட்டியும் சட்டையும் மாட்டி உட்கார வைத்திருப்பது தெரிந்தது. அப்பாவையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ரோட்டு மேல் இருக்கிற கடையை மாப்பிள்ளைக்குக் கிரயம் செய்து கொடுப்பதாகப் பேச்சு. குறை காலத்தை அவரை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொண்டால் போதும். அம்மா செத்த பிறகு எல்லாமே அவர்தான். ஒத்த ஆள், ஒரு பொட்டை புள்ளையை ஆளாக்கிறது அவ்வளவு சுலபமா? அவர் அங்கிருந்து தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. யாரோ தலையைச் சீவி நேற்றைய ஜடையை மீண்டும் மாட்டினார்கள். கையில் வரிசைத் தட்டைக் கொடுத்து மணமேடைக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் மணமகன் அமர்ந்திருப்பது உத்தேசமாகத் தெரிந்தது.
யாரோ "பொண்ணுக்கு வெக்கத்தப் பாரு' என்றார்கள். பூரணிக்கு ஒருவித பயம்தான் இருந்தது.
மணப் பலகையில் அமர்ந்து ஓரக்கண்ணால் தன் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தாள்.
திண்ணை.காம், தினமணி கதிர்.
செவ்வாய், ஏப்ரல் 28, 2009
அன்பால் ஆனதொரு மருத்துவம்!
"வசூல்ராஜா' எம்.பி.பி.எஸ். பார்த்திருந்தால் அதில் கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியத்தை மறந்திருக்க மாட்டீர்கள். நோயாளிகள் மீது நாம் காட்டும் அக்கறைதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மருந்தைவிட முக்கியமானது என்பது கதையின் முடிச்சு. அது நகைச்சுவைப் படம். பாலியேடிவ் கேர் என்று அழைக்கப்படும் இதன் நிஜ வடிவத்தில் காமெடிக்கு இடமில்லை. அரவணைப்பும் ஆறுதலும் நிறைந்த இந்த வைத்திய உலகம் நெகிழ்ச்சியானது.
சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.
"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...
"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.
கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.
இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.
வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.
உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.
contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)
சென்னையில் தன் "லஷ்மி பாலியேடிவ் கேர் கிளினிக்' நடத்திவரும் டாக்டர் மல்லிகா திருவதனனைச் சந்திக்கச் சென்றபோது அந்த நெகிழ்ச்சியை ரத்தமும் சதையுமாக உணரமுடிந்தது.
"என்னம்மா நீ கொடுத்த மருந்து வலியைக் குறைக்கவேயில்லையே. ரெண்டே நாள்ல மறுபடி வலிக்க ஆரம்பிச்சுடுச்சே'' என்கிறார் கேன்சர் வலியால் அவதிப்படும் ஒரு பெரியவர். "அடடா'' என்று அன்பாகக் கேட்கிறார். வயிற்றைப் பிடித்துக் கொண்டு வளைந்து அமர்ந்து மீண்டும் அந்தப் பெரியவர் சொல்கிறார்...
"ரொம்ப வலிக்குதும்மா...'' என்று கண்களில் பயம் கொப்பளிக்க இறைஞ்சும் குரல். கேட்கும் நமக்கே வலிக்கிறது. நம்மை பக்கத்து அறையில் உட்கார வைத்துவிட்டு அவரிடம் ஆதரவோடு விசாரித்துவிட்டு வந்து பேச ஆரம்பித்தார். "வழக்கமாக மருத்துவத்துக்கும் இதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அவர்கள் cure என்பதில் கவனமாக இருப்பார்கள். நாங்கள் care என்பதில் கவனமாக இருக்கிறோம்'' என்று ஆரம்பித்தார். "பாலியம் என்பது ஓர் அரபுச் சொல். அதற்கு அணைத்துக் கொள்ளுதல் என்பதுதான் பொருள். பாலியேடிவி கேர் என்பது அதிலிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தை.
கேன்சர், நுரையீரல் நோய், இதய நோய், இளம்பிள்ளை வாதம், கிட்னி பாதிப்பு, அல்சைமர், கணையம் பழுதடைதல், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற எத்தனையோ பாதிப்புகளால் மக்கள் வலியில் துடிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் குணமாக்குதல் என்பதைவிட, வலிநிவாரணமளிப்பதுதான் முக்கியம். இந்த மருத்துவ முறை மேலை நாடுகளில் வழக்கத்துக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தியாவில் 1986 முதல் இந்த மருத்துவம் செயல்படுகிறது. பேராசிரியர் எம்.ஆர்.ராஜகோபால் என்பவர்தான் இதை முதலில் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியேடிவ் கேரின் தந்தை என்று அவரைச் சொல்லலாம். கேரளத்தைச் சேர்ந்த அவரால்தான் இப்போதும் இந்தியாவிலேயே அங்கு இது பிரபலமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இதற்கான ஆரம்பங்கள் செயல்பட்டன. எங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகின்றன. ஆர்.எம்.டி., டீன் பவுண்டேஷன், ஜீவோதயா, வேலூர் சி.எம்.சி. போன்றவை பேலியேடிவ் கேருக்காக அக்கறை எடுத்துச் செயல்பட்டு வருகின்றன.
இதற்கான வலி போக்கும் மருந்தாக மார்ப்பைன் வழங்குகிறோம். ஓபியம் வகைசார்ந்த இந்த மருந்தை, எல்லா மருத்துவரும் தருவதற்கு அனுமதியில்லை. இதற்கான பயிற்சி பெற்ற மருத்துவரே வழங்க முடியும். ஆகவே இதற்கான எட்டுவாரப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். அதில் மூன்று நாள்கள் மட்டுமே நேரடிப் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு நாள் தேர்வு இருக்கும். அவ்வளவுதான். இதற்கு ஆயிரம் ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஓபியம் கலந்த மருந்து என்பதால் இதில் போதைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நோயாளிகளின் உடல்நிலை, வலி ஆகியவற்றைப் பொறுத்தே இது வழங்கப்படுகிறது. மேலும் இதை ஊசி மூலம் செலுத்துவதில்லை. மாத்திரையாகத்தான் வழங்குகிறோம். நிம்மதியான தூக்கமும் வலியற்ற நிலையுமே இதில் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நோயாளிகள் மீது அக்கறை உள்ள மருத்துவர் எவரும் எங்களிடம் தொடர்பு கொள்ளலாம். நோயாளிகள் என்றதும், அவர்களைக் குணப்படுத்துவது மட்டுமே டாக்டர்கள் நோக்கமாக இருக்கிறது. இன்னும் சில நாளில் இறந்துவிடக் கூடியவருக்கும் தொடர்ந்து லட்சக் கணக்கில் செலவு செய்து மருத்துவம் பார்க்கிறார்கள். பலர் நிலம், வீடு விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். நகைகளை விற்கிறார்கள். குழந்தைகள் பள்ளியைவிட்டு நிறுத்தப்படுகிறார்கள். ஒரு வாரம் உயிரைத் தக்க வைப்பதற்கு இப்படி வைத்தியம் செய்வதைவிட, ஆறுதல் வைத்தியமான இது மிக்க பலன் அளிப்பதைக் கவனிக்கிறோம்.
வலி இல்லாமல் இருப்பதால் அவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதனாலேயே சாப்பிடவும் நம்பிக்கை பெறவும் ஆரம்பித்து புத்துணர்வு அடைகிறார்கள். சிகிச்சையால் கிடைக்காத பலன், சில சமயங்களில் இந்த நம்பிக்கையால் கிடைத்துவிடுகிறது.
உள்ள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான, நம்பிக்கைகள் ரீதியான ஓர் அரவணைப்பாக இருக்கும் இச் சிகிச்சை, எல்லா மருத்துவமனையிலும் செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மருத்துவப் படிப்பிலும் இது சப்ஜெக்டாக நடத்தப்பட்டால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும்'' என்று அவர் சொல்லி முடித்ததும் நோயாளிகள் சார்பாக நிம்மதி பெருமூச்சுடன் விடைபெற்றோம்.
contact nos: 2532 2684, 2641 1597 (Laxmi paliyative care centre)
திரைக்குப் பின்னே- 30
டி.வி. சானல் நதியா!
‘சின்னமேடம்' முடிந்து அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பது உறுதியானதும்தான் எனக்கு நதியா அறிமுகம். அவரைப் பார்க்காமலேயே அவரைப் பற்றிய செய்திகளை எழுத ஆரம்பித்தேன். நதியாவுக்குக் கிடைத்த ஒரு ரசிகர்தான் காரணம். சலபதி என்ற அந்த ரசிகர் தன் பெயரையே நதியா சலபதி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.
நதியாவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். "அக்கா இப்போது முன்பைவிட அழகாக இருக்கிறார். சென்ற வாரம் மும்பை வந்த போது பார்த்தேன்'' என்றோ, "அங்கே டி.வி. சானலில் பணியாற்றி வருகிறார். அவரை அங்கே நாடகத்தில் நடிக்க அழைக்கிறார்கள்'' என்றோ நதியாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து என்னைச் சந்திக்க பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து இப்படி ஏதாவது ஒரு வரி தகவலையோ அவருடைய சமீபத்திய போட்டோவையோ கொடுத்துவிட்டுச் செல்ர். நதியா நாய் வளர்க்கிறார், பூனை வளர்க்கிறார், அமெரிக்க சானலைவிட்டு பிரிட்டன் சேனலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்... இப்படி வாசகர்களுக்கும் பிடித்தமான செய்தியாகத்தான் இருக்கும் அவர் சொல்லும் செய்தியெல்லாம்.
பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு முக்கியமான வேடமும் சம்பளமும் வாங்கித் தருவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நதியாவை நான் ஒரே ஒரு முறை சந்தித்தேன்.
"டி.வி. சானல் வேலையை விட்டு விட்டீர்களா?" என்றேன்.
"அதுதான் எனக்குப் புரியவில்லை. பார்க்கிற பலரும் இதையே கேட்கிறார்கள். நான் எந்த சேனலிலும் வேலை பார்த்ததில்லையே.. எப்படி இப்படியொரு செய்தி பரவிற்று என்றே தெரியவில்லை. ஆனால் நான் தமிழகம் வந்ததும் நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள்'' என்றார்.
நான் பக்கத்தில் இருந்த ’நதியா சலபதி'யைப் பார்த்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை மிகச் சாதாரணமாகப் பார்த்தார். "டீ சாப்பிட்றீங்களா?'' என்றார் அந்தச் செய்திக்குச் சம்பந்தமே இல்லாதவராக.
ஒரு புறக்கணிக்கப்பட்ட பாட்டு!
ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாடல் ஒரு படத்தையே தூக்கி நிறுத்தியதோடு அதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ’திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற ’மன்மதராசா மன்மதராசா' சுமார் ஓராண்டுக்காலம் தமிழகத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்த பாடல். ஆனால் அந்தப்பாடலை கவிஞர் யுகபாரதி வேறொரு படத்துக்காகத்தான் எழுதினார். அந்தப் படத்தில் பயன்படுத்த இயலாத இந்தப் பாடலை ’திருடா திருடி' படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் இசையமைப்பாளர் தினாவும் யுகபாரதியும் விரும்பினர்.
என்ன காரணத்தாலோ தயாரிப்பாளருக்கு இதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாம் பொருளாதார நெருக்கடியால்தான். வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோகூட படப்பிடிப்பை நடத்த இயலாத நிலை. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் நிலக்கரி வெளியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாக இருந்தது. ஆடை அணிகலன்களிலும்கூட செலவு செய்ய முடியாமல் இருந்ததால் படத்தில் அப் பாடலில் பயன்படுத்திய கறுப்புத் துணியை மலிவுவிலைக் கடையான சரவணா ஸ்டோர்ஸில்தான் வாங்கினார்கள். உடன் ஆடுவதற்கு நடனக் கலைஞர்கள் அமர்த்தவும் யோசனை. சரி... தனுஷ், சாயாசிங் இருவர் மட்டுமே போதும் என்று முடிவாகியது. பாடகி? புதிய பாடகிதான். மாலதி அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகர் மாணிக்க விநாயகம். எல்லாவிதத்திலும் ஒரு மாத்து கம்மிதான் என்று தெரிந்தே உருவாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிதான் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. டி.வி. சேனல்களில் லட்சம் தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியது. படம் ஓடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாடகர், பாடல் எழுதியவர், இயக்குநர். நடிகர்- நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என எல்லோர் வாழ்க்கையையும் சில அடி உயர்த்தியது.
தமிழ் சினிமா எல்லார் கணிப்பையும் ஏமாற்றி கண்ணில் மண் தூவி கரகாட்டம் ஆடிவிடும் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்தான் ’மன்மதராசா'.
எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்குமுன்னர் இப்படி ஒரு பதவியும்கூட தமிழ்சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக்ஷாகாரன்' படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள்கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச் செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார். கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் "தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்'' என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் "அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்'' என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
"ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?'' என்றனர் மற்றவர்கள்.
"அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே'' என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று "நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.'' என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்பட்ட கொடுமை இது?
‘சின்னமேடம்' முடிந்து அமெரிக்காவுக்குச் சென்று செட்டில் ஆகிவிட்டார் என்பது உறுதியானதும்தான் எனக்கு நதியா அறிமுகம். அவரைப் பார்க்காமலேயே அவரைப் பற்றிய செய்திகளை எழுத ஆரம்பித்தேன். நதியாவுக்குக் கிடைத்த ஒரு ரசிகர்தான் காரணம். சலபதி என்ற அந்த ரசிகர் தன் பெயரையே நதியா சலபதி என்று மாற்றி வைத்துக் கொண்டவர்.
நதியாவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். "அக்கா இப்போது முன்பைவிட அழகாக இருக்கிறார். சென்ற வாரம் மும்பை வந்த போது பார்த்தேன்'' என்றோ, "அங்கே டி.வி. சானலில் பணியாற்றி வருகிறார். அவரை அங்கே நாடகத்தில் நடிக்க அழைக்கிறார்கள்'' என்றோ நதியாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து என்னைச் சந்திக்க பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து இப்படி ஏதாவது ஒரு வரி தகவலையோ அவருடைய சமீபத்திய போட்டோவையோ கொடுத்துவிட்டுச் செல்ர். நதியா நாய் வளர்க்கிறார், பூனை வளர்க்கிறார், அமெரிக்க சானலைவிட்டு பிரிட்டன் சேனலில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்... இப்படி வாசகர்களுக்கும் பிடித்தமான செய்தியாகத்தான் இருக்கும் அவர் சொல்லும் செய்தியெல்லாம்.
பெரும் பிரயத்தனங்களுக்குப் பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு முக்கியமான வேடமும் சம்பளமும் வாங்கித் தருவதற்கு காரணமாக இருந்தார். அந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் நதியாவை நான் ஒரே ஒரு முறை சந்தித்தேன்.
"டி.வி. சானல் வேலையை விட்டு விட்டீர்களா?" என்றேன்.
"அதுதான் எனக்குப் புரியவில்லை. பார்க்கிற பலரும் இதையே கேட்கிறார்கள். நான் எந்த சேனலிலும் வேலை பார்த்ததில்லையே.. எப்படி இப்படியொரு செய்தி பரவிற்று என்றே தெரியவில்லை. ஆனால் நான் தமிழகம் வந்ததும் நூறு பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள்'' என்றார்.
நான் பக்கத்தில் இருந்த ’நதியா சலபதி'யைப் பார்த்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை மிகச் சாதாரணமாகப் பார்த்தார். "டீ சாப்பிட்றீங்களா?'' என்றார் அந்தச் செய்திக்குச் சம்பந்தமே இல்லாதவராக.
ஒரு புறக்கணிக்கப்பட்ட பாட்டு!
ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பாடல் ஒரு படத்தையே தூக்கி நிறுத்தியதோடு அதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையர், இயக்குநர் உள்ளிட்ட பலரின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ’திருடா திருடி' படத்தில் இடம்பெற்ற ’மன்மதராசா மன்மதராசா' சுமார் ஓராண்டுக்காலம் தமிழகத்தை ஆட்டம் போட வைத்துக் கொண்டிருந்த பாடல். ஆனால் அந்தப்பாடலை கவிஞர் யுகபாரதி வேறொரு படத்துக்காகத்தான் எழுதினார். அந்தப் படத்தில் பயன்படுத்த இயலாத இந்தப் பாடலை ’திருடா திருடி' படத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் இசையமைப்பாளர் தினாவும் யுகபாரதியும் விரும்பினர்.
என்ன காரணத்தாலோ தயாரிப்பாளருக்கு இதில் அத்தனை ஆர்வம் ஏற்படவில்லை. எல்லாம் பொருளாதார நெருக்கடியால்தான். வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோகூட படப்பிடிப்பை நடத்த இயலாத நிலை. நெய்வேலி அனல் மின் நிலையத்தின் நிலக்கரி வெளியில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டியதாக இருந்தது. ஆடை அணிகலன்களிலும்கூட செலவு செய்ய முடியாமல் இருந்ததால் படத்தில் அப் பாடலில் பயன்படுத்திய கறுப்புத் துணியை மலிவுவிலைக் கடையான சரவணா ஸ்டோர்ஸில்தான் வாங்கினார்கள். உடன் ஆடுவதற்கு நடனக் கலைஞர்கள் அமர்த்தவும் யோசனை. சரி... தனுஷ், சாயாசிங் இருவர் மட்டுமே போதும் என்று முடிவாகியது. பாடகி? புதிய பாடகிதான். மாலதி அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகர் மாணிக்க விநாயகம். எல்லாவிதத்திலும் ஒரு மாத்து கம்மிதான் என்று தெரிந்தே உருவாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிதான் தமிழகத்தின் அனைத்துத் திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டது. டி.வி. சேனல்களில் லட்சம் தடவைக்கு மேல் ஒளிபரப்பாகியது. படம் ஓடியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாடகர், பாடல் எழுதியவர், இயக்குநர். நடிகர்- நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என எல்லோர் வாழ்க்கையையும் சில அடி உயர்த்தியது.
தமிழ் சினிமா எல்லார் கணிப்பையும் ஏமாற்றி கண்ணில் மண் தூவி கரகாட்டம் ஆடிவிடும் என்பதற்கு ஓர் எளிய உதாரணம்தான் ’மன்மதராசா'.
எம்.ஜி.ஆருக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்குமுன்னர் இப்படி ஒரு பதவியும்கூட தமிழ்சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக்ஷாகாரன்' படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள்கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச் செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார். கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் "தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்'' என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் "அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்'' என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
"ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?'' என்றனர் மற்றவர்கள்.
"அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே'' என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று "நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.'' என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்பட்ட கொடுமை இது?
புதன், ஏப்ரல் 22, 2009
செவ்வாய், ஏப்ரல் 21, 2009
திரைக்குப் பின்னே- 29
பழைய ஞாபகங்களும் புதிய ஞாபகங்களும்
எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை', ‘வானம்பாடி'யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.
இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.
மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.
கிளம்பும்போது "நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே'' என்றார் என்னிடமே.
ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!
"முட்டாள்கள்தான் இரவிலே தூங்குவார்கள்" என்று எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சொன்னதாகச் சொல்வார்கள். கரிச்சான் குஞ்சுவின் கணிப்பின்படி ஏ.ஆர். ரஹ்மானும் அவரிடம் இசை கேட்டு வரும் திரைப்படத் துறையினரும் அதிமேதாவிகள். ஏனென்றால் ரஹ்மானின் உலகம் இரவு பத்துமணிக்கு மேல்தான் விடியும். இந்தியாவில் முக்காவாசிப்பேர் உறங்க ஆரம்பித்து மீதி இருப்பவரும் அதற்கான முயற்சியில் இருக்கும்போது அவர் விழிப்பார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் அவரைச் சந்திக்க வேண்டியவர்களும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.
நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இரவு பதினொன்று. இன்னும் எழுந்திருக்கவில்லை. "லேட்டாத்தான் தூங்கினார்'' என்றனர். அதாவது எல்லோரும் விழித்த பின்னர் தூங்கியிருப்பார் என்று புரிந்தது. அவரை எதிர்பார்த்து இந்திப் பட உலகினர் சிலரும் பாடகர் ஹரிகரனும் வசந்த் (ரிதம்), ராஜீவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஆகிய இயக்குநர்களும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தின (பாய்ஸ்)மும் காத்திருந்தனர். பத்திரிகையாளர்களில் நானும் தினத்தந்தி நிருபர் பழனிகுமாரும்.
ரஹ்மானின் அம்மா வந்து எல்லாரையும் சாப்பிடச் சொன்னார். அவருடைய வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய தோட்டமும் பக்கத்தில் சமையல்கூடமும் உண்டு. அங்கு பொதுவாக எல்லா இரவிலும் பிரியாணி தயாராக இருக்கும் என்றார்கள். காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே சம பந்தி போஜனம்தான். சமயத்தில் தோட்டக்காரனுக்குப் பக்கத்தில் அமீர்கான் அமர வேண்டியிருக்கும் எனவும் சொன்னார்கள்.
சாப்பிட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் ரஹ்மான் வந்தார்.
வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்த பூங்கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அனுப்பியிருப்பவர்களின் பெயரைப் பார்த்து உதடுகளில் புன்னகை மலர்கிறது. காத்திருந்த மனிதர்களைப் பார்த்தபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புன்னகைவீதம் வழங்கினார். எதிர்பார்க்காதவராகவோ, மிகவும் நெருக்கமானவராகவோ இருந்தால் கண்கள் விரிய சிறிய ஆச்சரியத்தைக் காட்டினார். அவருக்குப் பழனிகுமாரைத் தெரிந்திருந்தது. முதலில் அவரிடம் பேசினார். "இவருக்கு ஒரு பேட்டி வேணும், ரொம்ப நாளா கேட்டுகிட்டிருக்கார்" என்றார் என்னைக்காட்டி.
"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே.. என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியுது'' என்றார். பொதுவாக பத்திரிகைகளைப் பற்றி அவர் அப்படிச் சொன்னார்.
அவருடைய குடும்பச் சூழல், அவருடைய அடுத்த திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் போன்றவற்றில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அது தானாகவே செய்தியாகிவிடுகிறது. இசையைப் பற்றியோ, சில நபர்களைப் பற்றியோ அவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவருடைய பிரத்யேகக் கனவுகள், வதந்திகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றுக்குத்தான் அவருடைய நேரடியான பதில் தேவையாக இருந்தது.
"இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்... இன்னொரு நாள் பேசலாமா?'' என்றார்.
வந்தததற்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் போல, "எதற்கு இவ்வளவு முடி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன்.
சிரித்தார். "அதான் சொல்லிட்டேனே'' என்றார்.
எந்தப் பத்திரிகைக்காக எப்போது சொன்னார் என்று நினைவில்லாமல் "எப்போ?'' என்றேன்.
"கான்ட்ராக்ட் ஸைன் பண்ணியிருக்கேன். அது முடியறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்''
பதிலைச் சொல்லிவிட்டு அடுத்து இருந்தவரைப் பார்த்தார். இந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவராக அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.
புனைவும் நினைவும்!
குங்குமத்தில் ’நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பமானபோது எழுத்தாளர் சுஜாதா மீது ஆரம்பித்த பிரமிப்பு விகடனில் அவர் மறைவதற்கு முந்தின வாரம் எழுதிய கற்றதும் பெற்றதும் வரை குறையவே இல்லை. பாதி ராஜ்ஜியம், சொர்க்கத்தீவு, சிறுகதை எழுதுவது எப்படி, நடுப்பகல் மரணம், கொலையுதிர் காலம், தலைமைச் செயலகம், ஜீனோ, பிரிவோம் சந்திப்போம் என்று அவருடைய எழுத்துகள் ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் அவரை நேரில் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அது நான் சினிமா நிருபராகி அவரும் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற, இருக்கிற தருணத்தில்தான் சாத்தியமானது.
பத்திரிகைக்காக ஒரு முறை வரும் ஆண்டு சினிமா எப்படி இருக்கும் என்று கட்டுரை கேட்டு போன் செய்த போது எத்தனை எழுத்துகள் இருக்க வேண்டும் என்று அவர் திருப்பிக் கேட்டபோது, அவர் எவ்வளவு புதுசாக இருக்கிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.
ஆனாலும் நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.
’ஆளவந்தான்' பட விழா சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் நடந்தது. காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்த விழா அது. சுஜாதா வந்திருந்தார். விழா முடிந்து அனைவரும் வெளியே வரும்போது நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டு மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது, சுஜாதா கூட்டத்திலிருந்து விலகி நடந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் அலைமோதாத வருத்தம் ஏற்பட்டு நான் அவருக்கு வழித்துணைபோல பின்னாலேயே சென்றேன். அவர் காரை அடைந்தார். ஆடம்பரமற்ற சிறிய மாருதி 800 கார். நீல நிறம். அவர் காரில் ஏறிய பின்பு திரும்ப நினைத்தவன் காரின் ஒரு டயர் காற்று இல்லாமல் இருப்பதை அறிந்து ஓடிப்போய் சொன்னேன். அவர் நான் சொன்ன விஷயத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு டயர் மாட்டுகிற வரை வேர்க்க விறுவிறுக்க காரிலேயே அமர்ந்திருந்தார்.
இன்னொரு தரம் அவருடைய வீட்டுக்குப் போய் இயக்குநர் ஷங்கர் பற்றி நான் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டேன். இப்போதெல்லாம் யாருக்கும் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக்காலமாக அவருடைய எழுத்துகளை வேதம் போல படித்தவன் என்பதை சில நிமிடங்களில் எனக்கு எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை. அங்கே பத்திரிகையாளர் சந்திரன் இருந்தார். பரிதாபப்பட்டாவது இரண்டு வரி எழுதித் தரமாட்டாரா என்று தன்னிரக்கம் சூழ்ந்தது.
"நீங்கள் எழுதினா ரொம்ப பெருமைப்படுவேன் சார்'' என்றேன்.
"புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'' என்றபோது "சாரி சார்'' என்று வாசல் நோக்கி நகர்ந்துவிட்டேன்.
அவர் இறந்த அன்று அவர் எனக்கு இமெயில் அனுப்பியதாக ஒரு சிறுகதை எழுதினேன். என்னுடைய ஆசையை இப்படி புனைவாகத்தான் தீர்த்துக் கொள்ள முடிந்தது. அவருடைய முதலாண்டு நினைவு நாளின் போது அவருடைய பெயரிலான அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்க அவர் இல்லாமல் போய்விட்டாரே என்று பரிசளிப்பு நாளின் போது நினைத்தேன், வேதனையின் கிறுக்கில்.
எல்டாம்ஸ் சாலையில் உள்ள அன்னை இல்லத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சந்திக்கப் போனேன். இன்னமும் லட்சிய நடிகரின் கணீர் குரல் ‘பூம்புகாரை', ‘வானம்பாடி'யையோ நினைவு படுத்தியது. அவருக்குக் கலைஞரைப் பற்றி நிறைய விரோதமான கருத்துகள் இருந்தன. அவரைப் பற்றிக் கிண்டலாக சில விஷயங்களைச் சொன்னார். அண்ணாவுக்கும் அவருக்குமே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் கலைஞர் மீது அண்ணா பல முறை கோபமுற்று இருந்ததாகவும் கூறினார். தி.மு.க.வில் இருந்து கலைஞரும் முரசொலி மாறனும் விலகிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் அதைத் தாம்தான் மறுத்து பிரச்சினையை சரி செய்ததாகவும் கூறினார்.
இதையெல்லாம் புத்தகமாகப் போடும் நோக்கத்தோடு அதை டைப் செட் செய்து வைத்திருந்தார். (இப்போது புத்தகமாக வந்திருக்கக் கூடும்.) அதில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பக்கம் பக்கமாக வாசித்துக் காட்டினார். நான்கு, ஐந்து மணி நேர சந்திப்புக்குப் பின் அந்தச் சந்திப்பு முடிந்தது. அவரிடம் எதைப்பற்றிk கேட்பதற்காகச் சென்றேனோ அது முடியவில்லை. அதைத் தவிர வேறு விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு வந்ததாகத் தோன்றவே மீண்டும் மறுநாள் சந்திப்புக்கு நேரம் கேட்டேன்.
மறுநாளும் சந்திப்பு தொடர்ந்தது. நேற்றைய சந்திப்பின் ஜெராக்ஸ் போல மீண்டும் பேசிக் கொண்டு போனார். மீண்டும் அதே பக்கங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். பழைய சம்பவங்களை அவர் அத்தனை ஞாபகமாக நேற்று நடந்தது போல சொன்னார். ஆனால் என்னிடம் நேற்று சொன்னதை முழுதுமே மறந்து விட்டார் என்று தெரிந்தது. நடுநடுவே எனக்கான தகவல்களை கிரகித்துக் கொண்டு விடைபெற்றேன்.
கிளம்பும்போது "நேற்று யாரோ ஒருத்தர் வந்து இதே மாதிரி கேட்டாரே'' என்றார் என்னிடமே.
ஒரு நடுநிசியில் ரஹ்மானுடன்!
"முட்டாள்கள்தான் இரவிலே தூங்குவார்கள்" என்று எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு சொன்னதாகச் சொல்வார்கள். கரிச்சான் குஞ்சுவின் கணிப்பின்படி ஏ.ஆர். ரஹ்மானும் அவரிடம் இசை கேட்டு வரும் திரைப்படத் துறையினரும் அதிமேதாவிகள். ஏனென்றால் ரஹ்மானின் உலகம் இரவு பத்துமணிக்கு மேல்தான் விடியும். இந்தியாவில் முக்காவாசிப்பேர் உறங்க ஆரம்பித்து மீதி இருப்பவரும் அதற்கான முயற்சியில் இருக்கும்போது அவர் விழிப்பார். அவர் விழித்திருக்கும் நேரத்தில் அவரைச் சந்திக்க வேண்டியவர்களும் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.
நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது இரவு பதினொன்று. இன்னும் எழுந்திருக்கவில்லை. "லேட்டாத்தான் தூங்கினார்'' என்றனர். அதாவது எல்லோரும் விழித்த பின்னர் தூங்கியிருப்பார் என்று புரிந்தது. அவரை எதிர்பார்த்து இந்திப் பட உலகினர் சிலரும் பாடகர் ஹரிகரனும் வசந்த் (ரிதம்), ராஜீவ் மேனன் (கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்) ஆகிய இயக்குநர்களும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தின (பாய்ஸ்)மும் காத்திருந்தனர். பத்திரிகையாளர்களில் நானும் தினத்தந்தி நிருபர் பழனிகுமாரும்.
ரஹ்மானின் அம்மா வந்து எல்லாரையும் சாப்பிடச் சொன்னார். அவருடைய வீட்டின் ஒரு பக்கத்தில் சிறிய தோட்டமும் பக்கத்தில் சமையல்கூடமும் உண்டு. அங்கு பொதுவாக எல்லா இரவிலும் பிரியாணி தயாராக இருக்கும் என்றார்கள். காத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அங்கே சம பந்தி போஜனம்தான். சமயத்தில் தோட்டக்காரனுக்குப் பக்கத்தில் அமீர்கான் அமர வேண்டியிருக்கும் எனவும் சொன்னார்கள்.
சாப்பிட்டுவிட்டு வந்த சிறிது நேரத்தில் ரஹ்மான் வந்தார்.
வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்த பூங்கொத்துகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார். அனுப்பியிருப்பவர்களின் பெயரைப் பார்த்து உதடுகளில் புன்னகை மலர்கிறது. காத்திருந்த மனிதர்களைப் பார்த்தபோது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு புன்னகைவீதம் வழங்கினார். எதிர்பார்க்காதவராகவோ, மிகவும் நெருக்கமானவராகவோ இருந்தால் கண்கள் விரிய சிறிய ஆச்சரியத்தைக் காட்டினார். அவருக்குப் பழனிகுமாரைத் தெரிந்திருந்தது. முதலில் அவரிடம் பேசினார். "இவருக்கு ஒரு பேட்டி வேணும், ரொம்ப நாளா கேட்டுகிட்டிருக்கார்" என்றார் என்னைக்காட்டி.
"என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம்தான் நீங்க எழுதிடறீங்களே.. என்னைப் பத்தி என்னைவிட உங்களுக்குத்தான் நல்லா தெரியுது'' என்றார். பொதுவாக பத்திரிகைகளைப் பற்றி அவர் அப்படிச் சொன்னார்.
அவருடைய குடும்பச் சூழல், அவருடைய அடுத்த திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் போன்றவற்றில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அது தானாகவே செய்தியாகிவிடுகிறது. இசையைப் பற்றியோ, சில நபர்களைப் பற்றியோ அவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்கள், அவருடைய பிரத்யேகக் கனவுகள், வதந்திகளுக்கான விளக்கங்கள் போன்றவற்றுக்குத்தான் அவருடைய நேரடியான பதில் தேவையாக இருந்தது.
"இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்... இன்னொரு நாள் பேசலாமா?'' என்றார்.
வந்தததற்கு ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்கலாம் போல, "எதற்கு இவ்வளவு முடி வளர்த்து வைத்திருக்கிறீர்கள்?'' என்றேன்.
சிரித்தார். "அதான் சொல்லிட்டேனே'' என்றார்.
எந்தப் பத்திரிகைக்காக எப்போது சொன்னார் என்று நினைவில்லாமல் "எப்போ?'' என்றேன்.
"கான்ட்ராக்ட் ஸைன் பண்ணியிருக்கேன். அது முடியறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்''
பதிலைச் சொல்லிவிட்டு அடுத்து இருந்தவரைப் பார்த்தார். இந்தப் பார்வைக்காகக் காத்திருந்தவராக அடுத்து அவர் பேச ஆரம்பித்தார்.
புனைவும் நினைவும்!
குங்குமத்தில் ’நில்லுங்கள் ராஜாவே' ஆரம்பமானபோது எழுத்தாளர் சுஜாதா மீது ஆரம்பித்த பிரமிப்பு விகடனில் அவர் மறைவதற்கு முந்தின வாரம் எழுதிய கற்றதும் பெற்றதும் வரை குறையவே இல்லை. பாதி ராஜ்ஜியம், சொர்க்கத்தீவு, சிறுகதை எழுதுவது எப்படி, நடுப்பகல் மரணம், கொலையுதிர் காலம், தலைமைச் செயலகம், ஜீனோ, பிரிவோம் சந்திப்போம் என்று அவருடைய எழுத்துகள் ஒன்றுவிடாமல் படித்திருந்தாலும் அவரை நேரில் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. அது நான் சினிமா நிருபராகி அவரும் அடிக்கடி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற, இருக்கிற தருணத்தில்தான் சாத்தியமானது.
பத்திரிகைக்காக ஒரு முறை வரும் ஆண்டு சினிமா எப்படி இருக்கும் என்று கட்டுரை கேட்டு போன் செய்த போது எத்தனை எழுத்துகள் இருக்க வேண்டும் என்று அவர் திருப்பிக் கேட்டபோது, அவர் எவ்வளவு புதுசாக இருக்கிறார் என்பதை மீண்டும் புரிந்து கொண்டேன்.
ஆனாலும் நேரில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.
’ஆளவந்தான்' பட விழா சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் நடந்தது. காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்த விழா அது. சுஜாதா வந்திருந்தார். விழா முடிந்து அனைவரும் வெளியே வரும்போது நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டு மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தபோது, சுஜாதா கூட்டத்திலிருந்து விலகி நடந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் அலைமோதாத வருத்தம் ஏற்பட்டு நான் அவருக்கு வழித்துணைபோல பின்னாலேயே சென்றேன். அவர் காரை அடைந்தார். ஆடம்பரமற்ற சிறிய மாருதி 800 கார். நீல நிறம். அவர் காரில் ஏறிய பின்பு திரும்ப நினைத்தவன் காரின் ஒரு டயர் காற்று இல்லாமல் இருப்பதை அறிந்து ஓடிப்போய் சொன்னேன். அவர் நான் சொன்ன விஷயத்தை டிரைவரிடம் சொல்லிவிட்டு டயர் மாட்டுகிற வரை வேர்க்க விறுவிறுக்க காரிலேயே அமர்ந்திருந்தார்.
இன்னொரு தரம் அவருடைய வீட்டுக்குப் போய் இயக்குநர் ஷங்கர் பற்றி நான் எழுதிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டேன். இப்போதெல்லாம் யாருக்கும் எழுதுவதில்லை என்று கூறிவிட்டார். சுமார் கால் நூற்றாண்டுக்காலமாக அவருடைய எழுத்துகளை வேதம் போல படித்தவன் என்பதை சில நிமிடங்களில் எனக்கு எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. எனக்குப் பேச்சே வரவில்லை. அங்கே பத்திரிகையாளர் சந்திரன் இருந்தார். பரிதாபப்பட்டாவது இரண்டு வரி எழுதித் தரமாட்டாரா என்று தன்னிரக்கம் சூழ்ந்தது.
"நீங்கள் எழுதினா ரொம்ப பெருமைப்படுவேன் சார்'' என்றேன்.
"புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே'' என்றபோது "சாரி சார்'' என்று வாசல் நோக்கி நகர்ந்துவிட்டேன்.
அவர் இறந்த அன்று அவர் எனக்கு இமெயில் அனுப்பியதாக ஒரு சிறுகதை எழுதினேன். என்னுடைய ஆசையை இப்படி புனைவாகத்தான் தீர்த்துக் கொள்ள முடிந்தது. அவருடைய முதலாண்டு நினைவு நாளின் போது அவருடைய பெயரிலான அறக்கட்டளை சார்பில் நடந்த போட்டியில் அறிவியல் புனைகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. இதையெல்லாம் பார்க்க அவர் இல்லாமல் போய்விட்டாரே என்று பரிசளிப்பு நாளின் போது நினைத்தேன், வேதனையின் கிறுக்கில்.
திங்கள், ஏப்ரல் 20, 2009
சுஜாதா நினைவு பரிசு போட்டி புகைப்படங்கள் -2
வியாழன், ஏப்ரல் 16, 2009
திங்கள், ஏப்ரல் 13, 2009
கணிதம் எனும் உண்மை உலகம் !
(கணிதத்தின் கதை புத்தக விமர்சனம் )
பாம்பேவுக்கு டிக்கெட் ஃபேர் எவ்வளவு?
உங்க செல் நம்பர் சொல்லுங்க?
ஆறாவது வரிசையில மூணாவது நம்பர்..
உங்க பின் நம்பர் எண்ட்ரி பண்ணுங்க..
உங்க சிஸ்டம் எத்தனை ரேம்?
முன்னூறு கிலோ மீட்டர், அஞ்சு மணி நேரத்தில ரீச் பண்ணிட்டேன்
பொண்ணு எத்தனையாவது படிக்கிறா?
நூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா?
நானூறு பக்க நாவல்பா எப்படி ஒரு நாள்ல படிக்க முடியும்?
ஒரு லிட்டர் பெட்ரோல் அஞ்சு ரூபா குறைச்சிருக்கான்..
-இப்படி ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லாமல் நம்மால் ஒரு நாளையாவது கடந்துவிடமுடியுமா? முடியவே முடியாது. அப்படி இருக்க
வேண்டுமானால் கோமாவிலோ, வாய் பேசமுடியாமலோ இருந்தால்தான் சாத்தியம்.
பிரபஞ்சத்தை கணிதத்தால் விவரிப்பதுதான் சிறப்பானதும் நேர்மையானதுமாக இருக்கிறது. ஏனென்றால் கணிதத்தால் மட்டுமே
அதை எதிர் கொள்ள முடிவதாக இருக்கிறது. எண்ணிலடங்கா தத்துவங்களால் பிரபஞ்சத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால் அந்த
எல்லா தத்துவங்களுக்கும் அடிநாதமாக பிரமிப்பும் மிரட்சியும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் இத்தனை சுமார் பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. மனித மூளையில் சுமார் இரண்டு லட்சம் செல்கள் உள்ளன... என்று
கணிதப் புள்ளிவரங்கள் சொல்லுவதில் உள்ள இயல்பான உண்மையைக் கண்டு விதம்விதமாக பிரமித்ததின் விளைவே விதம்விதமான
தத்துவங்களுக்கு அடிப்படை. கணிதம்தான் ஆரம்ப படியாகவும் அதே சமயத்தில் நிலையானதாகவும் இருக்கிறது. நீள் வட்டம்,
வட்டம், சதுரம், கோணம், மின் கட்டணம், வங்கிக் கணக்கு, வட்டிக் கணக்கு, பத்திரிகையின் பிரிண்ட் ஆர்டர், ஓர் ஒளியாண்டின் தூரம்,
மேட்டூர் அணையில் நீர் மட்டம் எல்லா இடத்திலும் முதல் விஷயமாகக் கணிதத்தின் தேவையும் பிறகு பிற விஞ்ஞான, இலக்கிய,
வரலாற்று, அரசியல் அறிவும் தேவைக்கு ஏற்ப பங்கு பெறுகிறது. உதாரணத்துக்கு மேட்டூர் நீர் மட்டம் குறைந்து போனால்
கர்நாடகாவை பழிக்க வேண்டும் என்றோ பத்து யூனிட் மின்சார பயன்பாட்டு ஆயிரம் ரூபாய் பில் போட்டவனை கோர்ட்டுக்கு
இழுப்பதோ நடக்கிறது.
பிரபஞ்சத்தின், வாழ்வின் மிக அடிப்படை கணிதம். அதை ஒரு கதை போல சொல்லுவதில் இரா. நடராசன் எடுத்துக் கொண்ட முயற்சி
நல்ல பலனைத் தந்திருக்கிறது. கணிதத்தை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். கணித நூலை மொழி பெயர்க்கி
றவரோ, கணிதத்தைப் பாடமாக நடத்துபவரோ இதைச் சாதித்க முடியாது.
ஆதி மனிதனுக்கு கணிதத்தின் தேவை தன்னிடம் ஐந்து ஆடு இருப்பதை அடையாளம் வைத்துக் கொள்கிற சிறு சிறு கோடுகள் என்ற
அளவில்தான் இருந்திருக்கும். இந்திய, கிரேக்க, அரேபிய, பாபிலோனிய ஆரம்பகட்ட அறிஞர்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கி
றார்கள். உதாரணத்துக்கு ஓர் அரைவட்டத்தில் வரையப்படும் எல்லா கோணங்களும் 90 டிகிரியாகவே இருக்கும் என்று 2650
ஆண்டுகளுக்கு முன் தாலமி சொல்லியிருப்பது இன்றைக்கும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. அதே காலத்தைச் சேர்ந்த பிதாகரஸின் பு
கழ்பெற்ற தேற்றமான முக்கோணத்தின் இரு பக்கங்களில் வரையப்படும் சதுரங்கள் மூன்றாவது பக்கத்தின் மடங்குக்கு சமமாக
இருக்கும் என்ற உண்மையையும் அதைக் கண்டுபிடித்த ஆண்டையும் கவனியுங்கள்.
அதன் பிறகு எத்தனையோ கணித மேதைகள் இயற் கணிதத்துக்கும் திரிகோணமிதிக்கும் நுண்கணிதத்துக்கும் தொகை
கணிதத்துக்கும் வடிவ கணிதத்துக்கும் நிகழ்தகவு கணிதங்களுக்கும் வழிவகுத்தார்கள். அவர்கள் அத்தனை பேரின் பின்னணியையும்
அந்தக் கணித முறைகணித முறைகளுக்கான தேவையையும் மிகச் சுருக்கமமாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறார் நடராசன். கணித
வகுப்புகளில் இந்தக் கணிதத் தேவைகளைச் சொல்லி பாடம் நடத்தினால் கணிதப் பாடத்தில் பூஜ்ஜியம் வாங்கும் நிலை குறையும்.
மொட்டையாக "அல்ஜீப்ரா நோட்டை எடுங்க'' என்று சொல்லும் ஆசிரியர் இயற்கணிதம் பிறந்த கதையைச் சொல்லி அதற்கான
தேவை என்ன என்பதையும் வாழ்வில் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றும் சொன்னால் தேர்வில் நூற்றுக்கு நூறு
வாங்குவதை மாணவனே பார்த்துக் கொள்வான்.
சிறுவயதில் நான் படித்த ஒரு கணிதப் புதிர் இது:
ஜான் தன் நண்பன் டேவிட்டை பார்க்க சைக்கிளில் கிளம்புகிறான். ஜான் கிளம்பிய அதே நேரத்தில் டேவிட்டும் ஜான் வீட்டுக்குக் கி
ளம்புகிறான். இருவரின் சைக்கிளும் ஒரே வேகத்தில் பிரயாணிக்கின்றன. அதாவது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகம். இருவரின் வீடும்
20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இருவரும் இடையில் 10 வது கிலோ மீட்டரில் சந்திப்பார்கள்.
ஜான் சைக்கிளில் கிளம்பியபோது அவனுடனே சேர்ந்து அவனுடைய கிளியும் பறக்கிறது. சைக்கிள் செல்லும் பாதையிலேயே செல்கி
றது. அவன் டேவிட் வீட்டுக்குத்தான் செல்கிறான் என்று அதற்குத் தெரியும். அது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதால்
சைக்கிளுக்கு முன்னே செல்கிறது. வழியில் டேவிட்டைப் பார்த்து அவன் சைக்கிளைத் தொட்டுவிட்டு மீண்டும் ஜானிடம் வருகிறது.
ஜானைத் தொட்டுவிட்டு மீண்டும் டேவிட்டை நோக்கிச் செல்கிறது. நண்பர்கள் இருவரும் சந்திக்கும்போது கிளி எத்தனை கிலோ மீட்டர்
தூரம் பறந்திருக்கும்? -இதுதான் புதிர்.
இரண்டு நண்பர்களும் சைக்கிளில் நகர்ந்து கொண்டே இருப்பதால் கிளி ஒவ்வொரு முறையும் எத்தனை கிலோ மீட்டர் பறந்த பிறகு
நண்பர்களை அடைந்தது என்பதைக் கணக்கிடுவது கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து அது எத்தனை முறை நண்பர்களுக்கு இடையே
பறந்தது என்று கணக்கிடுவதில் மண்டைக் காய்ந்து போய் தோல்வியை ஒப்புக் கொண்டேன்.
உண்மையில் புதிருக்கான விடை அந்தக் கேள்வியிலேயே இருந்தது.
நண்பர்கள் இருவரும் பத்து கிலோ மீட்டர் தூரம் பிரயாணித்தனர் என்றால் அவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தார்கள் என்று
அர்த்தம். ஏனென்றால் அவர்கள் பிரயாண வேகம் மணிக்கு பத்து கிலோ மீட்டர்.
அதே போல் கிளியும் ஒரு மணி நேரம்தான் பிரயாணித்ததும் ஒரு மணி நேரம்தான். அதனுடைய வேகம்தான் கேள்வியிலேயே இருக்
கிறதே?
இதைப் பற்றி ஒரு கிளைக் கதையும் உண்டு. இந்த நூற்றாண்டின் அமெரிக்க கணித மேதை ஜான் வான் நியுமன் என்பவரிடம் இந்தப்
புதிரைச் சொன்னபோது அவர், சிறிது நேரம் கண்ணை மூடிச் சிந்தித்துவிட்டு உடனடியாக பதிலைச் சொன்னார். புதிரைச் சொன்னவர்
"புதிரின் கேள்வியிலேயே விடை இருப்பது தெரியாமல் நிறைய பேர் வீணாகக் கணக்குப் போட்டு தோல்வியைத் தழுவுகிறார்கள்''
என்றாராம்.
நியுமன் "புதிரிலேயே விடையா? நான் கணக்குப் போட்டுத்தான் சொன்னேன்'' என்றாராம்.
நியுமன் ஒரு நாற்பது பக்க நோட்டு முழுக்க கணக்குப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விடையை ஒருசில வினாடியில்
கண்டுபிடித்துவிடக் கூடியவராக இருந்தார் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.
ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட் என்ற சுவையான கதையைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ரொம்ப டயம் ஆகிவிட்டது என்று முயல்
ஒன்று ஓடும். ஆலிஸýக்கு ஆச்சர்ய மேற்படுத்தும் அந்த உலகைச் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். அதை எழுதிய லூயிஸ் காரல் ஒரு
கணித மேதை. லாஜிக் கணிதத்தில் விற்பன்னர். கதையிலும் அப்படி நிறைய லாஜிக் விவாதம் வரும். ஒரு உதாரணம் தந்திருக்கிறார்
இரா. நடராசன். அதில் வரும் சூனியக்காரன், ஆலிஸிடம் "நான் உனக்கு ஒரு கவிதைத் தருகிறேன். அதைப் படித்தால் உனக்குக் கண்
ணீர் வரும், அல்லது..'' என்கிறான்.
"அல்லது?'' என்கிறாள் ஆலிஸ்.
"வராது'' என்கிறான்.
இரண்டு வாய்ப்புகளை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.
புத்தகத்தை முடித்ததும் நடராசன் எனக்கு கணக்கு வாத்தியாராக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. அல்லது இந்தப் பு
த்தகத்தையாவது அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது.
கணிதத்தின் கதை
இரா.நடராசன்
ரூ. 50
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாமம்பேட்டை,
சென்னை-18
-தமிழ்மகன்
பாம்பேவுக்கு டிக்கெட் ஃபேர் எவ்வளவு?
உங்க செல் நம்பர் சொல்லுங்க?
ஆறாவது வரிசையில மூணாவது நம்பர்..
உங்க பின் நம்பர் எண்ட்ரி பண்ணுங்க..
உங்க சிஸ்டம் எத்தனை ரேம்?
முன்னூறு கிலோ மீட்டர், அஞ்சு மணி நேரத்தில ரீச் பண்ணிட்டேன்
பொண்ணு எத்தனையாவது படிக்கிறா?
நூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா?
நானூறு பக்க நாவல்பா எப்படி ஒரு நாள்ல படிக்க முடியும்?
ஒரு லிட்டர் பெட்ரோல் அஞ்சு ரூபா குறைச்சிருக்கான்..
-இப்படி ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லாமல் நம்மால் ஒரு நாளையாவது கடந்துவிடமுடியுமா? முடியவே முடியாது. அப்படி இருக்க
வேண்டுமானால் கோமாவிலோ, வாய் பேசமுடியாமலோ இருந்தால்தான் சாத்தியம்.
பிரபஞ்சத்தை கணிதத்தால் விவரிப்பதுதான் சிறப்பானதும் நேர்மையானதுமாக இருக்கிறது. ஏனென்றால் கணிதத்தால் மட்டுமே
அதை எதிர் கொள்ள முடிவதாக இருக்கிறது. எண்ணிலடங்கா தத்துவங்களால் பிரபஞ்சத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால் அந்த
எல்லா தத்துவங்களுக்கும் அடிநாதமாக பிரமிப்பும் மிரட்சியும் இருக்கிறது.
பிரபஞ்சத்தில் இத்தனை சுமார் பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன. மனித மூளையில் சுமார் இரண்டு லட்சம் செல்கள் உள்ளன... என்று
கணிதப் புள்ளிவரங்கள் சொல்லுவதில் உள்ள இயல்பான உண்மையைக் கண்டு விதம்விதமாக பிரமித்ததின் விளைவே விதம்விதமான
தத்துவங்களுக்கு அடிப்படை. கணிதம்தான் ஆரம்ப படியாகவும் அதே சமயத்தில் நிலையானதாகவும் இருக்கிறது. நீள் வட்டம்,
வட்டம், சதுரம், கோணம், மின் கட்டணம், வங்கிக் கணக்கு, வட்டிக் கணக்கு, பத்திரிகையின் பிரிண்ட் ஆர்டர், ஓர் ஒளியாண்டின் தூரம்,
மேட்டூர் அணையில் நீர் மட்டம் எல்லா இடத்திலும் முதல் விஷயமாகக் கணிதத்தின் தேவையும் பிறகு பிற விஞ்ஞான, இலக்கிய,
வரலாற்று, அரசியல் அறிவும் தேவைக்கு ஏற்ப பங்கு பெறுகிறது. உதாரணத்துக்கு மேட்டூர் நீர் மட்டம் குறைந்து போனால்
கர்நாடகாவை பழிக்க வேண்டும் என்றோ பத்து யூனிட் மின்சார பயன்பாட்டு ஆயிரம் ரூபாய் பில் போட்டவனை கோர்ட்டுக்கு
இழுப்பதோ நடக்கிறது.
பிரபஞ்சத்தின், வாழ்வின் மிக அடிப்படை கணிதம். அதை ஒரு கதை போல சொல்லுவதில் இரா. நடராசன் எடுத்துக் கொண்ட முயற்சி
நல்ல பலனைத் தந்திருக்கிறது. கணிதத்தை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். கணித நூலை மொழி பெயர்க்கி
றவரோ, கணிதத்தைப் பாடமாக நடத்துபவரோ இதைச் சாதித்க முடியாது.
ஆதி மனிதனுக்கு கணிதத்தின் தேவை தன்னிடம் ஐந்து ஆடு இருப்பதை அடையாளம் வைத்துக் கொள்கிற சிறு சிறு கோடுகள் என்ற
அளவில்தான் இருந்திருக்கும். இந்திய, கிரேக்க, அரேபிய, பாபிலோனிய ஆரம்பகட்ட அறிஞர்கள் இன்றும் நம்மை வியக்க வைக்கி
றார்கள். உதாரணத்துக்கு ஓர் அரைவட்டத்தில் வரையப்படும் எல்லா கோணங்களும் 90 டிகிரியாகவே இருக்கும் என்று 2650
ஆண்டுகளுக்கு முன் தாலமி சொல்லியிருப்பது இன்றைக்கும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. அதே காலத்தைச் சேர்ந்த பிதாகரஸின் பு
கழ்பெற்ற தேற்றமான முக்கோணத்தின் இரு பக்கங்களில் வரையப்படும் சதுரங்கள் மூன்றாவது பக்கத்தின் மடங்குக்கு சமமாக
இருக்கும் என்ற உண்மையையும் அதைக் கண்டுபிடித்த ஆண்டையும் கவனியுங்கள்.
அதன் பிறகு எத்தனையோ கணித மேதைகள் இயற் கணிதத்துக்கும் திரிகோணமிதிக்கும் நுண்கணிதத்துக்கும் தொகை
கணிதத்துக்கும் வடிவ கணிதத்துக்கும் நிகழ்தகவு கணிதங்களுக்கும் வழிவகுத்தார்கள். அவர்கள் அத்தனை பேரின் பின்னணியையும்
அந்தக் கணித முறைகணித முறைகளுக்கான தேவையையும் மிகச் சுருக்கமமாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறார் நடராசன். கணித
வகுப்புகளில் இந்தக் கணிதத் தேவைகளைச் சொல்லி பாடம் நடத்தினால் கணிதப் பாடத்தில் பூஜ்ஜியம் வாங்கும் நிலை குறையும்.
மொட்டையாக "அல்ஜீப்ரா நோட்டை எடுங்க'' என்று சொல்லும் ஆசிரியர் இயற்கணிதம் பிறந்த கதையைச் சொல்லி அதற்கான
தேவை என்ன என்பதையும் வாழ்வில் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றும் சொன்னால் தேர்வில் நூற்றுக்கு நூறு
வாங்குவதை மாணவனே பார்த்துக் கொள்வான்.
சிறுவயதில் நான் படித்த ஒரு கணிதப் புதிர் இது:
ஜான் தன் நண்பன் டேவிட்டை பார்க்க சைக்கிளில் கிளம்புகிறான். ஜான் கிளம்பிய அதே நேரத்தில் டேவிட்டும் ஜான் வீட்டுக்குக் கி
ளம்புகிறான். இருவரின் சைக்கிளும் ஒரே வேகத்தில் பிரயாணிக்கின்றன. அதாவது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகம். இருவரின் வீடும்
20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்றன. இருவரும் இடையில் 10 வது கிலோ மீட்டரில் சந்திப்பார்கள்.
ஜான் சைக்கிளில் கிளம்பியபோது அவனுடனே சேர்ந்து அவனுடைய கிளியும் பறக்கிறது. சைக்கிள் செல்லும் பாதையிலேயே செல்கி
றது. அவன் டேவிட் வீட்டுக்குத்தான் செல்கிறான் என்று அதற்குத் தெரியும். அது மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் பறப்பதால்
சைக்கிளுக்கு முன்னே செல்கிறது. வழியில் டேவிட்டைப் பார்த்து அவன் சைக்கிளைத் தொட்டுவிட்டு மீண்டும் ஜானிடம் வருகிறது.
ஜானைத் தொட்டுவிட்டு மீண்டும் டேவிட்டை நோக்கிச் செல்கிறது. நண்பர்கள் இருவரும் சந்திக்கும்போது கிளி எத்தனை கிலோ மீட்டர்
தூரம் பறந்திருக்கும்? -இதுதான் புதிர்.
இரண்டு நண்பர்களும் சைக்கிளில் நகர்ந்து கொண்டே இருப்பதால் கிளி ஒவ்வொரு முறையும் எத்தனை கிலோ மீட்டர் பறந்த பிறகு
நண்பர்களை அடைந்தது என்பதைக் கணக்கிடுவது கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து அது எத்தனை முறை நண்பர்களுக்கு இடையே
பறந்தது என்று கணக்கிடுவதில் மண்டைக் காய்ந்து போய் தோல்வியை ஒப்புக் கொண்டேன்.
உண்மையில் புதிருக்கான விடை அந்தக் கேள்வியிலேயே இருந்தது.
நண்பர்கள் இருவரும் பத்து கிலோ மீட்டர் தூரம் பிரயாணித்தனர் என்றால் அவர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்தார்கள் என்று
அர்த்தம். ஏனென்றால் அவர்கள் பிரயாண வேகம் மணிக்கு பத்து கிலோ மீட்டர்.
அதே போல் கிளியும் ஒரு மணி நேரம்தான் பிரயாணித்ததும் ஒரு மணி நேரம்தான். அதனுடைய வேகம்தான் கேள்வியிலேயே இருக்
கிறதே?
இதைப் பற்றி ஒரு கிளைக் கதையும் உண்டு. இந்த நூற்றாண்டின் அமெரிக்க கணித மேதை ஜான் வான் நியுமன் என்பவரிடம் இந்தப்
புதிரைச் சொன்னபோது அவர், சிறிது நேரம் கண்ணை மூடிச் சிந்தித்துவிட்டு உடனடியாக பதிலைச் சொன்னார். புதிரைச் சொன்னவர்
"புதிரின் கேள்வியிலேயே விடை இருப்பது தெரியாமல் நிறைய பேர் வீணாகக் கணக்குப் போட்டு தோல்வியைத் தழுவுகிறார்கள்''
என்றாராம்.
நியுமன் "புதிரிலேயே விடையா? நான் கணக்குப் போட்டுத்தான் சொன்னேன்'' என்றாராம்.
நியுமன் ஒரு நாற்பது பக்க நோட்டு முழுக்க கணக்குப் போட்டு கண்டுபிடிக்க வேண்டிய விடையை ஒருசில வினாடியில்
கண்டுபிடித்துவிடக் கூடியவராக இருந்தார் என்பதற்கு இப்படி பல உதாரணங்கள் உண்டு.
ஆலிஸ் இன் வொண்டர் லேண்ட் என்ற சுவையான கதையைப் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ரொம்ப டயம் ஆகிவிட்டது என்று முயல்
ஒன்று ஓடும். ஆலிஸýக்கு ஆச்சர்ய மேற்படுத்தும் அந்த உலகைச் சுவாரஸ்யமாக விவரித்திருப்பார். அதை எழுதிய லூயிஸ் காரல் ஒரு
கணித மேதை. லாஜிக் கணிதத்தில் விற்பன்னர். கதையிலும் அப்படி நிறைய லாஜிக் விவாதம் வரும். ஒரு உதாரணம் தந்திருக்கிறார்
இரா. நடராசன். அதில் வரும் சூனியக்காரன், ஆலிஸிடம் "நான் உனக்கு ஒரு கவிதைத் தருகிறேன். அதைப் படித்தால் உனக்குக் கண்
ணீர் வரும், அல்லது..'' என்கிறான்.
"அல்லது?'' என்கிறாள் ஆலிஸ்.
"வராது'' என்கிறான்.
இரண்டு வாய்ப்புகளை எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.
புத்தகத்தை முடித்ததும் நடராசன் எனக்கு கணக்கு வாத்தியாராக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் ஏற்பட்டது. அல்லது இந்தப் பு
த்தகத்தையாவது அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது.
கணிதத்தின் கதை
இரா.நடராசன்
ரூ. 50
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாமம்பேட்டை,
சென்னை-18
-தமிழ்மகன்
ஞாயிறு, ஏப்ரல் 12, 2009
திரைக்குப் பின்னே- 28
இரண்டு முதல்வர்களும் ரம்பாவும்!
முதல்வரிடம் நேரடியாக முறையிட வேண்டிய கோரிக்கைகள் நடிகர்களுக்கு அடிக்கடி ஏற்படும். குங்குமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முறை முரசொலி அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனார். கமல்ஹாசன் சந்தித்தார். கடந்த மாதத்தில் ஒரு முறை நயன்தாரா முதல்வரைச் சந்தித்தார். இப்போது ரம்பா சந்தித்திருக்கிறார். இந்தியாவின் முதல்வர்கள் பலருக்கு அந்தந்த மாநிலத்து நடிகர்களுடன் இப்படியான நெருக்கமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்ததேவ், மாயாவதி, நிதிஷ்குமார், நரேந்திரமோடி போன்றவர்களை அவர்கள் மாநிலத்து நடிகர்கள் இப்படி கோரிக்கை வைக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஆந்திரத்தில் இதுபோல நடப்பதுண்டு. ராமராவுக்குப் பிறகு விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்று அங்கும் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை ரம்பா திடீரென்று ஒரு நாள் சென்று பார்த்தார். அப்போது நான் அவரை மிகுந்த பரபரப்புகளுக்கிடையே சந்தித்து "நீங்கள் தெலுங்கு தேசத்தில் சேரப் போகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் வெட்கப்பட்டுச் சிரித்தார்.
இப்போது கலைஞரைச் சந்தித்த போதும் ரம்பாவை எல்லோரும் அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இப்போதும் மறுத்துவிட்டார். ஆந்திரத்து முதல்வரை எதற்காகச் சந்தித்தாரோ அதே காரணத்துக்காகத்தான் இப்போது கலைஞரைச் சந்தித்திருக்கிறார் ரம்பா.
மரியாதை நிமித்தம்.
சிக்காத மனிதர்!
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைச் சுமக்கிறான். ஒருத்தனை சுயநலமி என்கிறோம், தலைகனம் பிடித்தவன், அப்பாவி, கர்வி, பொறுமையானவன், கோழை, வீராதி வீரன், கஞ்சன், திறமைசாலி என்று விதம்விதமாக வகைபிரித்திருந்தாலும் இந்தப் பிரிவுகளுக்குக் கட்டுப்படாமல் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் வகைகள்தான் எத்தனை?
டி.ராஜேந்தரைப் பார்க்கும்போது இப்படி எந்த வைக்குள்ளும் சிக்காத ஒரு மனிதராகவே இருக்கிறார் எனக்கு.

சிம்பு நடித்த ‘எங்க வீட்டு வேலன்', ‘சபாஷ் பாபு' படங்களுக்கு இடைப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு சிறுவர் இதழுக்காக சிம்புவைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். நண்பர் "வளர்தொழில்' ஜெயகிருஷ்ணன் புதிதாக ‘பிக்கிக்கா' என்ற சிறுவர் இதழை அப்போது துவங்கியிருந்தார். அந்த இதழுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பேட்டி. டி.ஆர். தன் மகனைப் பற்றி அவர் பிரமாதமாகச் சொன்னார். அவன் ஒரு பிறவிக் கலைஞன் என்றார். ரஜினி அடிக்கடி போன் செய்து அவனிடம் பேசுவார் என்றார். சிம்பு சிறிய இரு சக்கர சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். எதற்கோ அடம் பிடித்து அழுதார். சிம்பு என்னிடம் பேசும் மனநிலையிலேயே இல்லை. அவரை வெளியே தூக்கிச் செல்லுமாறு சொல்லிவிட்டு டி.ஆர்.தான் அவர் சார்பாகத் தகவல்களைச் சொன்னார்.
சிம்புவும் அவருடைய தந்தையும் கலந்து பேசியதாக அந்தப் பேட்டியை எழுதினேன். டி.ஆரிடம் பேசும்போது முடிவுக்கே வரமுடியாது. அவர் ஒரு வார்த்தையைச் சொல்லும்போது மிகுந்த தன்னடக்கமாகத் தோன்றும். "கையில சல்லிக் காசு இல்லாம ட்ரெய்ன்ல பாடி பிச்சை எடுத்துதான் சென்னைக்கு வந்தேன். அப்படியொரு ஏழ்மை" என்பார். அடுத்து "என்னைமாதிரி யாராவது வேகமாக ட்யூன் போட முடியுமா?" என்பார். அங்கேயே டேபிளில் தட்டி "இந்தாங்க இது ஒரு ட்யூன்.." இன்னொரு வகையில் தட்டி "இதோ இன்னொரு ட்யூன்... ஒரு நாளைக்கு ஆயிரம் ட்யூன்கூட போடுவேன்" என்பார்.
அன்றும் "என்னை மாதிரி டான்ஸ் ஸ்டெப் வைக்க முடியுமா? என்னை மாதிரி பாட முடியுமா?" என்று ஆடியும் பாடியும் காண்பித்தார். அவர் என்ன சொன்னாலும் பாராட்டுவதற்கு ஒரு சிறிய குழுவை அருகில் வைத்திருப்பதாகப்பட்டது. அவர்கள் அவருடைய செயலைப் பார்த்துச் சிரிப்பார்கள். பெருமிதமும் படுவார்கள். எது நிஜமான பாராட்டு, எது போலியானது என்பதைத் தெரிந்தே அவர் அவர்களை மொத்தமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இரக்க குணம் மிக்கவராகவும் தோன்றினார். உஷா வார இதழ் நடத்தும்போது சமையல்குறிப்பு, தலையங்கம், கேள்வி பதில், கவிதைகள், சுயசரிதை, சுயமுன்னேற்றக் கட்டுரை, அழகுக்குறிப்பு என அத்தனையையும் அவரே எழுதியபோது அவருடைய தன்னம்பிக்கையின் முழு வீச்சையும் பார்க்க முடிந்தது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, புகைப்படம், நடிப்பு, இசை, பாடல்கள், காஸ்ட்யூம் என சினிமாவில் கோலோச்சியது ஞாபகம் வந்தது.
அவருடைய வீட்டுக்குக் கீழேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து பத்திரிகை ஆபீஸ் செயல்பட்டது. பத்திரிகை விற்பனை ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. சர்குலேஷனை மேலே கொண்டு வர வேண்டும் என்று ஒரு முறை அவர் உறுதியாகச் கூறியிருக்கிறார். அன்று நடந்த நிகழ்ச்சியை அங்கு பணிபுரிந்த நண்பர் விவரித்தார்...
'அன்று மதிய வேளை பத்திரிகை ஊழியர்கள் எல்லாம் சாப்பிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். டேபிள், சேர், பீரோக்கள் எல்லாம் மாடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் "எங்கே எடுத்துச் செல்கிறீர்கள்?" என்றோம்.
"அண்ணன் சர்குலேஷனை மேலே கொண்டு போகணும்னு சொன்னாராம். அதான்.."
"அடக் கொடுமையே.. சர்குலேஷன் டிபார்ட்மென்டை மாடிக்கு மாற்றச் சொல்லலைடா. விற்பனையை மேலே கொண்டு போகணும்னு சொன்னாரு."
மீண்டும் பீரோவும் டேபிளும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
விஷயம் அறிந்து டி.ஆர். யாரையும் கண்டிக்கவில்லை. தம் ஊழியரை நினைத்துச் சிரித்தார்.
எமக்குத் தொழில் நடிப்பு!
90-களில் மோகன்லாலின் விசிறியாக இருந்தேன். அவர் நடித்த ‘சித்ரம்', ‘கிலுக்கம்', ‘ஏய் ஆட்டோ', ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்', அங்கிள் பன், ‘ஒண்ணுமுதல் பூஜ்ஜியம் வரா', ‘கிரீடம்'.. என சத்யம் தியேட்டரில் ரிலீஸான அவருடைய அத்தனை படத்தையும் உலகப் படவிழா வரிசை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகே பொடானிகல் கார்டனில் வேறொரு படப்பிடிப்புக்காகச் சென்ற போது அங்கே ஒரு மலையாளப் படத்துக்காக மோகன்லால் நடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக மோகன்லாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
உங்களிடம் பத்திரிகை நிருபர் என்பதைவிட நான் உங்கள் ஃபேன் என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமையாக இருக்கிறது என்றேன்.
"திடீரென்று வந்து நின்றால் நான் என்ன பேசுவது?" என்றார் அலுப்புடன்.
"பேட்டி போல அல்ல, அடுத்த ஷாட் வைக்கும் வரை பேசினால் போதும்" என்றேன்.
"தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" என்றபோது "எம்.ஆர்.ராதா" என்றார். எதிர்பார்க்காத பதிலாக இருந்ததாலும் அவருடைய ரசனைமீது ஈர்ப்பு ஏற்பட்டது.
முதல்வரிடம் நேரடியாக முறையிட வேண்டிய கோரிக்கைகள் நடிகர்களுக்கு அடிக்கடி ஏற்படும். குங்குமத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு முறை முரசொலி அலுவலகத்துக்கு ரஜினிகாந்த் வந்து கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனார். கமல்ஹாசன் சந்தித்தார். கடந்த மாதத்தில் ஒரு முறை நயன்தாரா முதல்வரைச் சந்தித்தார். இப்போது ரம்பா சந்தித்திருக்கிறார். இந்தியாவின் முதல்வர்கள் பலருக்கு அந்தந்த மாநிலத்து நடிகர்களுடன் இப்படியான நெருக்கமும் அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்ததேவ், மாயாவதி, நிதிஷ்குமார், நரேந்திரமோடி போன்றவர்களை அவர்கள் மாநிலத்து நடிகர்கள் இப்படி கோரிக்கை வைக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஆந்திரத்தில் இதுபோல நடப்பதுண்டு. ராமராவுக்குப் பிறகு விஜயசாந்தி, ரோஜா, ஜெயப்பிரதா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்று அங்கும் அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடுவை ரம்பா திடீரென்று ஒரு நாள் சென்று பார்த்தார். அப்போது நான் அவரை மிகுந்த பரபரப்புகளுக்கிடையே சந்தித்து "நீங்கள் தெலுங்கு தேசத்தில் சேரப் போகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் வெட்கப்பட்டுச் சிரித்தார்.
இப்போது கலைஞரைச் சந்தித்த போதும் ரம்பாவை எல்லோரும் அரசியலுக்கு வருகிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இப்போதும் மறுத்துவிட்டார். ஆந்திரத்து முதல்வரை எதற்காகச் சந்தித்தாரோ அதே காரணத்துக்காகத்தான் இப்போது கலைஞரைச் சந்தித்திருக்கிறார் ரம்பா.
மரியாதை நிமித்தம்.
சிக்காத மனிதர்!
யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுவாரஸ்யத்தைச் சுமக்கிறான். ஒருத்தனை சுயநலமி என்கிறோம், தலைகனம் பிடித்தவன், அப்பாவி, கர்வி, பொறுமையானவன், கோழை, வீராதி வீரன், கஞ்சன், திறமைசாலி என்று விதம்விதமாக வகைபிரித்திருந்தாலும் இந்தப் பிரிவுகளுக்குக் கட்டுப்படாமல் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் வகைகள்தான் எத்தனை?
டி.ராஜேந்தரைப் பார்க்கும்போது இப்படி எந்த வைக்குள்ளும் சிக்காத ஒரு மனிதராகவே இருக்கிறார் எனக்கு.

சிம்பு நடித்த ‘எங்க வீட்டு வேலன்', ‘சபாஷ் பாபு' படங்களுக்கு இடைப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு சிறுவர் இதழுக்காக சிம்புவைப் பேட்டி காணச் சென்றிருந்தேன். நண்பர் "வளர்தொழில்' ஜெயகிருஷ்ணன் புதிதாக ‘பிக்கிக்கா' என்ற சிறுவர் இதழை அப்போது துவங்கியிருந்தார். அந்த இதழுக்காகத்தான் இந்தப் பிரத்யேகப் பேட்டி. டி.ஆர். தன் மகனைப் பற்றி அவர் பிரமாதமாகச் சொன்னார். அவன் ஒரு பிறவிக் கலைஞன் என்றார். ரஜினி அடிக்கடி போன் செய்து அவனிடம் பேசுவார் என்றார். சிம்பு சிறிய இரு சக்கர சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். எதற்கோ அடம் பிடித்து அழுதார். சிம்பு என்னிடம் பேசும் மனநிலையிலேயே இல்லை. அவரை வெளியே தூக்கிச் செல்லுமாறு சொல்லிவிட்டு டி.ஆர்.தான் அவர் சார்பாகத் தகவல்களைச் சொன்னார்.
சிம்புவும் அவருடைய தந்தையும் கலந்து பேசியதாக அந்தப் பேட்டியை எழுதினேன். டி.ஆரிடம் பேசும்போது முடிவுக்கே வரமுடியாது. அவர் ஒரு வார்த்தையைச் சொல்லும்போது மிகுந்த தன்னடக்கமாகத் தோன்றும். "கையில சல்லிக் காசு இல்லாம ட்ரெய்ன்ல பாடி பிச்சை எடுத்துதான் சென்னைக்கு வந்தேன். அப்படியொரு ஏழ்மை" என்பார். அடுத்து "என்னைமாதிரி யாராவது வேகமாக ட்யூன் போட முடியுமா?" என்பார். அங்கேயே டேபிளில் தட்டி "இந்தாங்க இது ஒரு ட்யூன்.." இன்னொரு வகையில் தட்டி "இதோ இன்னொரு ட்யூன்... ஒரு நாளைக்கு ஆயிரம் ட்யூன்கூட போடுவேன்" என்பார்.
அன்றும் "என்னை மாதிரி டான்ஸ் ஸ்டெப் வைக்க முடியுமா? என்னை மாதிரி பாட முடியுமா?" என்று ஆடியும் பாடியும் காண்பித்தார். அவர் என்ன சொன்னாலும் பாராட்டுவதற்கு ஒரு சிறிய குழுவை அருகில் வைத்திருப்பதாகப்பட்டது. அவர்கள் அவருடைய செயலைப் பார்த்துச் சிரிப்பார்கள். பெருமிதமும் படுவார்கள். எது நிஜமான பாராட்டு, எது போலியானது என்பதைத் தெரிந்தே அவர் அவர்களை மொத்தமாக ஏற்றுக் கொண்டிருந்தார். இரக்க குணம் மிக்கவராகவும் தோன்றினார். உஷா வார இதழ் நடத்தும்போது சமையல்குறிப்பு, தலையங்கம், கேள்வி பதில், கவிதைகள், சுயசரிதை, சுயமுன்னேற்றக் கட்டுரை, அழகுக்குறிப்பு என அத்தனையையும் அவரே எழுதியபோது அவருடைய தன்னம்பிக்கையின் முழு வீச்சையும் பார்க்க முடிந்தது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, புகைப்படம், நடிப்பு, இசை, பாடல்கள், காஸ்ட்யூம் என சினிமாவில் கோலோச்சியது ஞாபகம் வந்தது.
அவருடைய வீட்டுக்குக் கீழேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து பத்திரிகை ஆபீஸ் செயல்பட்டது. பத்திரிகை விற்பனை ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை. சர்குலேஷனை மேலே கொண்டு வர வேண்டும் என்று ஒரு முறை அவர் உறுதியாகச் கூறியிருக்கிறார். அன்று நடந்த நிகழ்ச்சியை அங்கு பணிபுரிந்த நண்பர் விவரித்தார்...
'அன்று மதிய வேளை பத்திரிகை ஊழியர்கள் எல்லாம் சாப்பிடச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள். டேபிள், சேர், பீரோக்கள் எல்லாம் மாடிக்கு எடுத்துச் செல்ல ஆயத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள் "எங்கே எடுத்துச் செல்கிறீர்கள்?" என்றோம்.
"அண்ணன் சர்குலேஷனை மேலே கொண்டு போகணும்னு சொன்னாராம். அதான்.."
"அடக் கொடுமையே.. சர்குலேஷன் டிபார்ட்மென்டை மாடிக்கு மாற்றச் சொல்லலைடா. விற்பனையை மேலே கொண்டு போகணும்னு சொன்னாரு."
மீண்டும் பீரோவும் டேபிளும் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
விஷயம் அறிந்து டி.ஆர். யாரையும் கண்டிக்கவில்லை. தம் ஊழியரை நினைத்துச் சிரித்தார்.
எமக்குத் தொழில் நடிப்பு!
90-களில் மோகன்லாலின் விசிறியாக இருந்தேன். அவர் நடித்த ‘சித்ரம்', ‘கிலுக்கம்', ‘ஏய் ஆட்டோ', ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்', அங்கிள் பன், ‘ஒண்ணுமுதல் பூஜ்ஜியம் வரா', ‘கிரீடம்'.. என சத்யம் தியேட்டரில் ரிலீஸான அவருடைய அத்தனை படத்தையும் உலகப் படவிழா வரிசை மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகே பொடானிகல் கார்டனில் வேறொரு படப்பிடிப்புக்காகச் சென்ற போது அங்கே ஒரு மலையாளப் படத்துக்காக மோகன்லால் நடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா நடித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். மகிழ்ச்சியும் ஆச்சரியமுமாக மோகன்லாலிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
உங்களிடம் பத்திரிகை நிருபர் என்பதைவிட நான் உங்கள் ஃபேன் என்று சொல்லிக் கொள்வதில்தான் பெருமையாக இருக்கிறது என்றேன்.
"திடீரென்று வந்து நின்றால் நான் என்ன பேசுவது?" என்றார் அலுப்புடன்.
"பேட்டி போல அல்ல, அடுத்த ஷாட் வைக்கும் வரை பேசினால் போதும்" என்றேன்.
"தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?" என்றபோது "எம்.ஆர்.ராதா" என்றார். எதிர்பார்க்காத பதிலாக இருந்ததாலும் அவருடைய ரசனைமீது ஈர்ப்பு ஏற்பட்டது.
வெள்ளி, ஏப்ரல் 03, 2009
திரைக்குப் பின்னே-27
‘துள்ளுவதோ இளமை'?
‘துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானபோது தன் அழுத்தமான நடிப்பின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஷெரீன். ’விசில்', ’காப்பி ஷாப்' போன்ற சில படங்களில் நடித்தவர். அவருக்கு அனிமேட்டராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ ஆகவேண்டும் என்ற ஆசை அதிகமிருப்பதாகச் சொன்னார். இது இரண்டையும் விட சினிமாவில் அதிகம் சம்பாதிக்கலாமே என்று சொன்னேன்.
முகம் சுளித்தார். "எனக்கு போட்டோ ஷாப், த்ரி டி மாக்ஸ், மாயா போன்ற மென்பொருள் பயன்பாட்டில் பரிச்சயம் உண்டு. அனிமேஷன் பயின்றிருக்கிறேன். நான் படித்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஜர்னலிஸமும் இருந்தது. எனக்கு அனி மேட்டர் அல்லது பத்திரிகையாளர் ஆவதுதான் லட்சியம்'' என்றார்.
அதற்குள் அவருக்கு ஒரு கவர்ச்சியான நடிகை என்ற முத்திரை ஏற்பட்டுவிட்டது. அவருடன் அவருடைய அம்மா மட்டும் உண்டு. மகளை எப்படியாவது இந்திப் பட உலகுக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதாக இருந்தது அவருடைய பேச்சு.
ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தான் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்துவிட்டதாகச் சொல்லி அவருடைய காதலரோடு இணைந்து போஸ் கொடுத்தார். இணைந்து போஸ் கொடுத்தார் என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. கை கால் எல்லாம் பின்னிக் கொண்டும் முத்தமழை பொழிந்து கொண்டும் இருந்தனர் இருவரும். ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த அவர்கள் இந்தச் செயல்களை பத்திரிகையாளர் முன்னிலையில் நிறைவேற்றுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இருவரின் கையிலும் கோப்பைகள், சிகரெட்கள். ஒருவர் சிகரெட்டை இன்னொருவர் வாங்கிப் புகைத்துக் கொண்டனர்.
இருவரின் செயலும் ஏதோ முற்றும் அறிந்து முடிவுக்கு வந்துவிட்டதாக இருந்தது. ஒரு தீர்மானம் தெரிந்தது. உனக்கு நான், எனக்கு நீ என்பது சொர்க்கத்தில் உறுதியாகிவிட்டது என்பதாக நடந்து கொண்டனர். நீண்ட நாளைக்குத் தாங்குமா என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டோம். இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுப்பதாகச் சொன்னார்கள். படம் ஒருமாதிரியாக வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். மீண்டும் தன் தாயோடு வந்துதான் ’காபி ஷாப்' படத்தில் நடித்தார். இனிமேல் எல்லாம் சரியாகிவிட்டதாக அவருடைய அம்மா சொன்னார். மகளை இந்திக்கு அழைத்துச் செல்லும் நோக்கம் அவருக்கு அப்போதும் இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர்கள் மும்பையில் போய்த் தங்கி சினிமா வாய்ப்பு பெறப் போராடிக் கொண்டிருப்பதாகவும் சில பத்திரிகைத் தொடர்பாளர்கள் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக அதில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஷெரீன் பற்றி நினைக்கும் போது அவர் நடித்த முதல் படத்தின் தலைப்பும் சேர்ந்துதான் ஞாபகத்துக்கு வருகிறது.
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!
மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போவார்கள். மனிதர்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்களோ அதில் ஒரு அம்சத்தையாவது புரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். ஒருவன் தெரியாத்தனமாக கால் இடறி விழுந்தாலும் அவனைப் பார்த்துச் சிரிப்பது சற்றேறத்தாழ மனிதன் குகையில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. யாராவது விழுந்துவிட்டால்... சைக்கிளில் ட்யூப் படார் என்று வெடித்தால்.. உடனடியாகச் சிரிக்கிறோம். சொல்லப்போனால் எல்லாரையும் விட முதலாவதாக விழுந்தவர்தான் சிரிக்கிறார்.
சிரிக்க வைப்பதில் இன்னொரு சுலபமான அம்சம், யாரைப் பார்த்தாலும் முந்திக் கொண்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பது. மதன்பாப் முகம் முழுதும் ஒரு ரெடிமேட் சிரிப்பை வைத்திருப்பார். யார் வந்தாலும் கண்களை இடுக்கி, பற்கள் தெரிய, உடம்பெல்லாம் குலுங்க ஒரு சிரிப்பு சிரிப்பார். அது அவருடைய ட்ரேட் மார்க்.
நண்பர் ஒருவரோடு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, பேச்சோடு பேச்சாக உங்களின் இந்தச் சிரிப்புதான் உங்களுக்கு மைனஸ். இதை விட்டுத் தொலைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று நண்பர் கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் அதற்கும் ஒரு சிரிப்பைச் சிரித்து வைத்தார் மதன்பாப்.
அவருக்கு அதில் மிகுந்த வருத்தம். மறு நாள் போனில் "அப்கோர்ஸ் அவர் சொன்னது சரியா இருக்கலாம். இதுக்கப்புறம் நான் அதை விட்டுட்டு வேற ஒண்ணு ட்ரை பண்ணினா.. என்ன இது ஒழுங்காத்தான இருந்தாரு. இப்பல்லாம் முன்னமாதிரி இன்வால்வ்மென்ட் இல்லப்பா அவர்கிட்ட'னு சொல்லிட மாட்டாங்களா?'' என்றெல்லாம் சீரியஸாகப் பேசினார்.
அந்தச் சிரிப்பு அவருக்குப் பெரிய பலமா இல்லையா என்பதைத்தாண்டி அவரிடம் வேறு பலமான விஷயங்கள் இருந்ததைக் கண்டிருக்கிறேன். அவர் வெண்டிலோகிஸம் என்னும் கலையில் வல்லவர். சிறந்த கிடாரிஸ்ட். இசையில் நல்ல ஞானம் இருந்தது. நல்ல படிப்பாளி. ரசனையாக வாழத்தெரிந்தவர்.
ஒரு உதாரணம். அவருடைய அறையில் ஓர் அட்டையில் ’எடுத்ததெல்லாம் தோல்வியிலேயே முடிகிறதா? ... பின் பக்கம் பார்க்க...' என்று ஒரு அட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அட்டையின் பின் பக்கம் பார்த்தேன்.
’சிம்பிள், இன்னொரு தரம் முயற்சி செய்து பாருங்கள்' என்று எழுதியிருந்தது.
"பார்க்கிறவர்கள் ஏதோ முக்கியமான மந்திர வார்த்தை இருக்கப் போகிறது என்றுதான் திருப்புவார்கள். சிலருக்கு இதுவும் மந்திரச் சொல்லாக அமையலாம். இல்லாவிட்டால் குறைந்த பட்சம் தோல்வியில் துவண்டு போயிருந்தவருக்குச் சின்ன திசைதிருப்பலாகவாவது இருக்கும்'' என்றார் மதன்பாப். சிரிக்காமலேயே வெகுநேரம் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் சிரிப்பதெல்லாம் இடைவெளியை நிரப்புவதற்காகத்தான். அல்லது என்னடா கஷ்டகாலம் என்பதற்கும் அவருக்குச் சிரிப்புதான் கைகொடுக்கும்.
ஏனென்றால் பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் சிரிப்பது மட்டும்தான் எளிமையானது.
கூட்டு இயக்குநர் குடும்பம்!
உதவி இயக்குநர் இயக்குநராக மாறுகிற கட்டம் மிகுந்த தர்மசங்கடமானது. நேற்றுவரை ஒன்றோடு ஒன்றாக மசால் வடைக்கும் டீக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் சிங்கியடித்துக் கொண்டிருந்துவிட்டு இயக்குநரானதும் ஓர் உயரதிகாரியாக மாற வேண்டிய சூழல். கேப்டன் ஆஃப் த ஷிப், அதிகாரி மாதிரி ஆவதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அவர்கள் படுகிற அவஸ்தை சாதாரணமாக விவரிக்கத் தக்கதல்ல.
எனக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவர் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் தூங்கிய தன் நண்பரை, "எங்கேயோ மீட் பண்ணியிருக்கோம்ல'' என்று கேட்டுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த நண்பர் கண் கலங்காத குறையாக வருந்தினார். "நான் நல்ல வேலையில்தான் இருக்கிறேன். இயக்குநராகிவிட்ட நண்பரை வாழ்த்துவதற்காகச் சென்றால் இப்படியாகிவிட்டது" என்றார்.
சோதிடக் கிளி சீட்டெடுப்பது மாதிரிதான் யாரோ ஒரு உதவி இயக்குநர் பதவி உயர்வு பெறுகிறார். மற்றவர்களைவிட திறமை குறைந்தவர்கள்கூட முதலில் தேர்வாகிவிடுவதுண்டு. நல்ல திறமைசாலிகள் அவருக்கு உதவியாக இருக்க வேண்டியதிருக்கும்.
இயக்குநர் சீமானும் அவருடைய உதவியாளர்களும் இதற்கு விதிவிலக்கு. தமிழ் சினிமா உலகில் சாலிகிராமம் பக்கத்தில் சீமான் வீட்டைக் கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் அவருடைய உதவியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவருக்கு நூறு உதவியாளர்களாவது இருப்பார்கள். பெரிய வீடொன்றை வாடகை எடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த வீடு முழுக்க இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அனைவருமே உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுவார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணி வாக்கில் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். அப்பத்தான் எழுந்திருந்தார். படுக்கை பாய் எல்லாம் அப்படியே இருக்கிறது. இன்னும் சில உதவி இயக்குநர்கள் உறக்கத்திலேயே இருக்கிறார்கள்.
"அண்ணனுக்குப் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குடா'' என்றார் பொதுவாக.
கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கறி, மசாலா எல்லாம் வந்து இறங்கியது. யார் பணத்தில் என்பது தெரியவில்லை. "யார் பாக்கெட்டில் பணம் இருந்தாலும் அத்தனையும் பொது. தனியாக யாரும் பணத்தைக் கொண்டாடுவதில்லை'' என்றார்.
அநாவசியமான மரியாதைகள், கூழைக் கும்பிடுகள், போலி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அவர் இல்லம் சினிமா இயக்குநர்களால் நிரம்பி வழிந்தபடிதான் இருக்கிறது.
சினிமா சோஷலிஸம்?
‘துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானபோது தன் அழுத்தமான நடிப்பின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஷெரீன். ’விசில்', ’காப்பி ஷாப்' போன்ற சில படங்களில் நடித்தவர். அவருக்கு அனிமேட்டராகவோ அல்லது பத்திரிகையாளராகவோ ஆகவேண்டும் என்ற ஆசை அதிகமிருப்பதாகச் சொன்னார். இது இரண்டையும் விட சினிமாவில் அதிகம் சம்பாதிக்கலாமே என்று சொன்னேன்.
முகம் சுளித்தார். "எனக்கு போட்டோ ஷாப், த்ரி டி மாக்ஸ், மாயா போன்ற மென்பொருள் பயன்பாட்டில் பரிச்சயம் உண்டு. அனிமேஷன் பயின்றிருக்கிறேன். நான் படித்த இன்ஸ்ட்டிட்யூட்டில் ஜர்னலிஸமும் இருந்தது. எனக்கு அனி மேட்டர் அல்லது பத்திரிகையாளர் ஆவதுதான் லட்சியம்'' என்றார்.
அதற்குள் அவருக்கு ஒரு கவர்ச்சியான நடிகை என்ற முத்திரை ஏற்பட்டுவிட்டது. அவருடன் அவருடைய அம்மா மட்டும் உண்டு. மகளை எப்படியாவது இந்திப் பட உலகுக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்பதாக இருந்தது அவருடைய பேச்சு.
ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தான் தன் அம்மாவை விட்டுப் பிரிந்து வந்துவிட்டதாகச் சொல்லி அவருடைய காதலரோடு இணைந்து போஸ் கொடுத்தார். இணைந்து போஸ் கொடுத்தார் என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. கை கால் எல்லாம் பின்னிக் கொண்டும் முத்தமழை பொழிந்து கொண்டும் இருந்தனர் இருவரும். ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்கி இருந்த அவர்கள் இந்தச் செயல்களை பத்திரிகையாளர் முன்னிலையில் நிறைவேற்றுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இருவரின் கையிலும் கோப்பைகள், சிகரெட்கள். ஒருவர் சிகரெட்டை இன்னொருவர் வாங்கிப் புகைத்துக் கொண்டனர்.
இருவரின் செயலும் ஏதோ முற்றும் அறிந்து முடிவுக்கு வந்துவிட்டதாக இருந்தது. ஒரு தீர்மானம் தெரிந்தது. உனக்கு நான், எனக்கு நீ என்பது சொர்க்கத்தில் உறுதியாகிவிட்டது என்பதாக நடந்து கொண்டனர். நீண்ட நாளைக்குத் தாங்குமா என்று பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டோம். இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுப்பதாகச் சொன்னார்கள். படம் ஒருமாதிரியாக வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். மீண்டும் தன் தாயோடு வந்துதான் ’காபி ஷாப்' படத்தில் நடித்தார். இனிமேல் எல்லாம் சரியாகிவிட்டதாக அவருடைய அம்மா சொன்னார். மகளை இந்திக்கு அழைத்துச் செல்லும் நோக்கம் அவருக்கு அப்போதும் இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர்கள் மும்பையில் போய்த் தங்கி சினிமா வாய்ப்பு பெறப் போராடிக் கொண்டிருப்பதாகவும் சில பத்திரிகைத் தொடர்பாளர்கள் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகளாக அதில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஷெரீன் பற்றி நினைக்கும் போது அவர் நடித்த முதல் படத்தின் தலைப்பும் சேர்ந்துதான் ஞாபகத்துக்கு வருகிறது.
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!
மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போவார்கள். மனிதர்கள் எதற்கெல்லாம் சிரிப்பார்களோ அதில் ஒரு அம்சத்தையாவது புரிந்து வைத்திருப்பவர்களாக இருப்பார்கள். ஒருவன் தெரியாத்தனமாக கால் இடறி விழுந்தாலும் அவனைப் பார்த்துச் சிரிப்பது சற்றேறத்தாழ மனிதன் குகையில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அதை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. யாராவது விழுந்துவிட்டால்... சைக்கிளில் ட்யூப் படார் என்று வெடித்தால்.. உடனடியாகச் சிரிக்கிறோம். சொல்லப்போனால் எல்லாரையும் விட முதலாவதாக விழுந்தவர்தான் சிரிக்கிறார்.
சிரிக்க வைப்பதில் இன்னொரு சுலபமான அம்சம், யாரைப் பார்த்தாலும் முந்திக் கொண்டு ஒரு சிரிப்பை உதிர்ப்பது. மதன்பாப் முகம் முழுதும் ஒரு ரெடிமேட் சிரிப்பை வைத்திருப்பார். யார் வந்தாலும் கண்களை இடுக்கி, பற்கள் தெரிய, உடம்பெல்லாம் குலுங்க ஒரு சிரிப்பு சிரிப்பார். அது அவருடைய ட்ரேட் மார்க்.
நண்பர் ஒருவரோடு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, பேச்சோடு பேச்சாக உங்களின் இந்தச் சிரிப்புதான் உங்களுக்கு மைனஸ். இதை விட்டுத் தொலைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று நண்பர் கூறிவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் அதற்கும் ஒரு சிரிப்பைச் சிரித்து வைத்தார் மதன்பாப்.
அவருக்கு அதில் மிகுந்த வருத்தம். மறு நாள் போனில் "அப்கோர்ஸ் அவர் சொன்னது சரியா இருக்கலாம். இதுக்கப்புறம் நான் அதை விட்டுட்டு வேற ஒண்ணு ட்ரை பண்ணினா.. என்ன இது ஒழுங்காத்தான இருந்தாரு. இப்பல்லாம் முன்னமாதிரி இன்வால்வ்மென்ட் இல்லப்பா அவர்கிட்ட'னு சொல்லிட மாட்டாங்களா?'' என்றெல்லாம் சீரியஸாகப் பேசினார்.
அந்தச் சிரிப்பு அவருக்குப் பெரிய பலமா இல்லையா என்பதைத்தாண்டி அவரிடம் வேறு பலமான விஷயங்கள் இருந்ததைக் கண்டிருக்கிறேன். அவர் வெண்டிலோகிஸம் என்னும் கலையில் வல்லவர். சிறந்த கிடாரிஸ்ட். இசையில் நல்ல ஞானம் இருந்தது. நல்ல படிப்பாளி. ரசனையாக வாழத்தெரிந்தவர்.
ஒரு உதாரணம். அவருடைய அறையில் ஓர் அட்டையில் ’எடுத்ததெல்லாம் தோல்வியிலேயே முடிகிறதா? ... பின் பக்கம் பார்க்க...' என்று ஒரு அட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அட்டையின் பின் பக்கம் பார்த்தேன்.
’சிம்பிள், இன்னொரு தரம் முயற்சி செய்து பாருங்கள்' என்று எழுதியிருந்தது.
"பார்க்கிறவர்கள் ஏதோ முக்கியமான மந்திர வார்த்தை இருக்கப் போகிறது என்றுதான் திருப்புவார்கள். சிலருக்கு இதுவும் மந்திரச் சொல்லாக அமையலாம். இல்லாவிட்டால் குறைந்த பட்சம் தோல்வியில் துவண்டு போயிருந்தவருக்குச் சின்ன திசைதிருப்பலாகவாவது இருக்கும்'' என்றார் மதன்பாப். சிரிக்காமலேயே வெகுநேரம் என்னிடம் பேசியிருக்கிறார். அவர் சிரிப்பதெல்லாம் இடைவெளியை நிரப்புவதற்காகத்தான். அல்லது என்னடா கஷ்டகாலம் என்பதற்கும் அவருக்குச் சிரிப்புதான் கைகொடுக்கும்.
ஏனென்றால் பலர் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் சிரிப்பது மட்டும்தான் எளிமையானது.
கூட்டு இயக்குநர் குடும்பம்!
உதவி இயக்குநர் இயக்குநராக மாறுகிற கட்டம் மிகுந்த தர்மசங்கடமானது. நேற்றுவரை ஒன்றோடு ஒன்றாக மசால் வடைக்கும் டீக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் சிங்கியடித்துக் கொண்டிருந்துவிட்டு இயக்குநரானதும் ஓர் உயரதிகாரியாக மாற வேண்டிய சூழல். கேப்டன் ஆஃப் த ஷிப், அதிகாரி மாதிரி ஆவதில் தவறில்லை. ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில் அவர்கள் படுகிற அவஸ்தை சாதாரணமாக விவரிக்கத் தக்கதல்ல.
எனக்குத் தெரிந்த இயக்குநர் ஒருவர் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் தூங்கிய தன் நண்பரை, "எங்கேயோ மீட் பண்ணியிருக்கோம்ல'' என்று கேட்டுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த நண்பர் கண் கலங்காத குறையாக வருந்தினார். "நான் நல்ல வேலையில்தான் இருக்கிறேன். இயக்குநராகிவிட்ட நண்பரை வாழ்த்துவதற்காகச் சென்றால் இப்படியாகிவிட்டது" என்றார்.
சோதிடக் கிளி சீட்டெடுப்பது மாதிரிதான் யாரோ ஒரு உதவி இயக்குநர் பதவி உயர்வு பெறுகிறார். மற்றவர்களைவிட திறமை குறைந்தவர்கள்கூட முதலில் தேர்வாகிவிடுவதுண்டு. நல்ல திறமைசாலிகள் அவருக்கு உதவியாக இருக்க வேண்டியதிருக்கும்.
இயக்குநர் சீமானும் அவருடைய உதவியாளர்களும் இதற்கு விதிவிலக்கு. தமிழ் சினிமா உலகில் சாலிகிராமம் பக்கத்தில் சீமான் வீட்டைக் கண்டு பிடித்தவர்கள் எல்லோரும் அவருடைய உதவியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். அவருக்கு நூறு உதவியாளர்களாவது இருப்பார்கள். பெரிய வீடொன்றை வாடகை எடுத்துத் தங்கியிருக்கிறார். அந்த வீடு முழுக்க இளைஞர்கள் தங்கியிருக்கிறார்கள். அனைவருமே உதவியாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ளுவார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினோரு மணி வாக்கில் நான் அவருடைய அறைக்குச் சென்றேன். அப்பத்தான் எழுந்திருந்தார். படுக்கை பாய் எல்லாம் அப்படியே இருக்கிறது. இன்னும் சில உதவி இயக்குநர்கள் உறக்கத்திலேயே இருக்கிறார்கள்.
"அண்ணனுக்குப் பிரியாணி சாப்பிடணும்னு ஆசையா இருக்குடா'' என்றார் பொதுவாக.
கொஞ்ச நேரத்தில் ஆட்டுக்கறி, மசாலா எல்லாம் வந்து இறங்கியது. யார் பணத்தில் என்பது தெரியவில்லை. "யார் பாக்கெட்டில் பணம் இருந்தாலும் அத்தனையும் பொது. தனியாக யாரும் பணத்தைக் கொண்டாடுவதில்லை'' என்றார்.
அநாவசியமான மரியாதைகள், கூழைக் கும்பிடுகள், போலி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை. இதெல்லாம் சரியாக வருமா என்று நான் யோசித்தேன். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அவர் இல்லம் சினிமா இயக்குநர்களால் நிரம்பி வழிந்தபடிதான் இருக்கிறது.
சினிமா சோஷலிஸம்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)