(காதல் கதை)
தமிழ்மகன்
எட்டாயிரம் தலைமுறைக்கு முன்னால் எங்கள் பரம்பரையில் நிகழ்ந்த கதை இது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டோ, இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்றோ, எங்கள் குடும்ப வாரிசுகள் அன்றி வேறு யாருடனும் இதைப் பகிர்ந்து கொள்வதில்லை.
ஏறத்தாழ எட்டாயிரத்து ஒன்றாம் தலைமுறையில் இது வெளியுலகுக்குத் தெரிய வருகிறது. ராமானுஜர் தனக்குப் புண்ணியம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொர்க்கத்துக்குப் போகும் மந்திரத்தை கோபுரத்தில் ஏறி மக்களுக்குச் சொன்னதுபோல நானும் சொல்லும் முடிவுக்கு வந்துவிட்டேன்.
முந்தாநாள் நடந்த இந்திய சுதந்திரத்தைப் பற்றியே ஆளுக்கொரு முரண்பாடுகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்த எட்டாயிரம் தலைமுறைக் காதலில் எத்தனை கண்கள் காதுகள் மூக்குகள் ஜோடிக்கப் பட்டிருக்கும் என்று பயப்பட வேண்டாம். இதில் என் மூதாதையரின் சொந்தக் கற்பனைகளோ சொந்தச் சரக்கோ வந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என்பதோடு நான் அறிந்தவரை என் தாத்தா என் அப்பாவிடம் சொல்லியதைத்தான் சத்தியமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
ஓர் உண்மை இந்த சயநல யுகத்தில் மூன்று தலைமுறையாக ஒரேமாதிரியாக இருப்பதே அசாதாரணம் எனும் பட்சத்தில் இதற்க முந்தைய அப்பழுக்கற்ற மனிதர்களின் புயத்திலும் அதற்கு முந்தைய மொழியே உருவாகாத காலத்திலும் எந்தக் கற்பனையும் கலப்படாகியிருக்காது என்றே உறுதியாகத் தோன்றுகிறது.
விஷயத்துக்கு வருவோம்.
என் தாத்தா ஏழாயிரத்தித் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்பதாவது தடவையாக இந்தக் கதையை என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் ஒட்டுக் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு புதிய வாரிசு உருவாகும்போதும் நெல்லைப் பரப்பி அதில் வாரிசு எண்ணை எழுதும் வழக்கம் எங்கள் மரபில் இருந்து வருகிறது. ஒரு தலைமுறைக்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிட்டாலும் இருபத்தி நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.
சொல்லப்போனால் அப்போது தமிழ்மொழிகூட எழுத்துக்களை உருவாக்கி யிருக்கவில்லை. எழுத்து என்ன எழுத்து ? தமிழன் ஒரு கோடு போடுவதற்குக் கூட அறிந்திருக்கவில்லை. காட்டெருமை ஒன்றைக் கல்லால் அடித்து வீழ்த்தி ரத்தம் சொட்டச் சொட்ட அதை குகைக்கு இழுத்து வந்தபோது மண்புழுதியில் ரத்தத்தால் ஏற்பட்ட கோடு அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. விரலால் காட்டெருமையின் ரத்தத்தைத் தொட்டு குகையிலும் இங்கும் அங்கும் கோடுகள் போட்டான். அவனுக்கு பிரமிப்பு தாளவில்லை. திகைத்துப் போய் அந்தக் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ரத்தத்தை இப்படி விரயமாக்குவதற்காக சக கூட்டாளிகளின் கோபமான கர்ஜனைக்கு ஆளானான் அவன். அந்த கர்ஜனையைத் தமிழ் கர்ஜனை என்றுதான் இன்று நினைக்கத் தோன்றுகிறது.
மொழியோ ஆடையோ கலாபூர்வமான சிந்தனைகளோ இன்றி அந்தக் கூட்டத்தினர் வாழ்ந்த பிரதேசமே கூட எது என்று இன்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதியா, அதற்கும் மேலே இருக்கும் பிராந்தியமா என்று தெரியவில்லை.
நல்ல நிலவொளியில் காட்டெருமை இறைச்சியைப் புசித்துவிட்டு குகைவாசலில் ஆளுக்கொரு தினுசாய் மல்லாந்திருந்த வேளையில், எதிர்ப்பாறையில் சாய்ந்திருந்த இளம்பெண் நிலவொளியின் பிரதிபலிப்பில் ஒளிவிளிம்பாகத் தெரிந்தாள், ரத்தக்கோடு போடும் நம் கதாநாயகனுக்கு.
ஆரம்பத்தில் எதேச்சையாகப் பார்த்த அவனுக்கு அந்தப் பெண்ணின் ஒளிவளைவுகளில் எதோ வசியம் ஏற்பட்டு மீண்டும் மீண்டும் பார்த்தான். இதற்கு முன்பெல்லாம் பசிநேரத்தில் அகப்படும் ஏதோ கிழங்குவகையோ முயலோ அவளை அப்படிப் பார்க்கத் துாண்டியிருந்தாலும் இது வித்தியாசமான பார்வை என்பது அவனுக்குப் புரிந்தது. மற்றவர் யாரும் தன்னுடைய நடவடிக்கையை வித்தியாசமாகப் பார்க்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான் அவன். இனப்பெருக்க வேட்கை போன்ற வழக்கமான உணர்வுகள்போல் அவள்மீது தாவாமல் வெறுமனே ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது நோக்கமாக இருந்தது.
இது என்னமாதிரியான உணர்வு என்பதை அவனது மூளையால் இனம்காண முடியாமல் மகா அவஸ்தையோடு திடாரென்று கத்தினான். ஒருவிதமான ஊளை. காலைப் பின்னிக்கொண்டு பாறைமீது சாந்திருந்த பெண்ணுக்கு இந்த ஊளைச்சத்தம் தன்பொருட்டு எழுந்ததுதான் என்பது புரிந்து சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.
அவளுடைய தோரணையும் நிலவொளி அவள்மீது ஏற்படுத்தி யிருக்கும் ஒளித்தடயமும் நம் கதாநாயகனைப் பரிதாபமான நிலைக்குத் தள்ளியது. அவளை... அவள் இருக்கும் காட்சியை எப்படியாவது பதிவுசெய்ய வேண்டும் என்ற பொருள்படும் படியான ஒன்று அவன் மூளையில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. சிந்தனையின் அழுத்தத்தால் திணறினான்.
அவளை எழுதுகோலால் கவிதையாக வடிக்கவோ, இசைக்கருவி கொண்டு சங்கீதமாக வாசிக்கவோ, ஒரு துாரிகைகொண்டு ஓவியமாக்கவோ அவன் நினைத்திருக்கக் கூடும்!
ஆவேசமாக ஒரு கூரான கல்லை எடுத்தான். மிகுந்த சிரமப்பட்டு அவன் அமர்ந்திருந்த பாறையின்மேல் பெருக்கல் குறி போன்ற ஒன்றைக் கீறினான். அந்தப் பெருக்கல் குறிக்கு மேலே ஒரு வட்டம் போட்டான். அவள் அமர்ந்திருக்கும் காட்சியைத்தான் அப்படிப் பதிவாக்கினான்.
அவன் அடைந்த பூரிப்பில் தலை, நாடி, வயிறு என்று பல இடங்களில் தானே பிறாண்டிக் கொண்டான்.
ஒரு பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி மனிதன் படைத்த முதல் படைப்பு அது. மனிதன், கல் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தெரிந்த தொழிலாளியாகி, இப்போது கலைஞனாகவும் மாறிவிட்டான் என்பதைக் கொண்டாடத் தெரியாத அவனுடைய சகக் கூட்டம் மிதப்பான குறட்டையில் அயர்ந்து கிடந்தது.
நம் கதாநாயகனின் படைப்புசார் பூரிப்பால் ஏற்பட்ட குதியாட்டம் நம் நாயகிக்கு 'இது என்னடா இம்சை ' என்பது போன்ற கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் அப்படியே முட்டிபோட்டு நகர்ந்தவாறே நம் நாயகனை நெருங்கி, அவன் பாறையில் ஏற்படுத்தி யிருந்த படைப்பை, சித்திரத்தை, அவனது கிறுக்கலைப் பார்த்தாள். அவள் கண்களில் திகைப்பு. அவன் படைத்தது என்ன என்று புரிந்துவிட்டது அவளுக்கு. முதல் வாசகி, முதல் ரசிகை, முதல் விமர்சகி.
எத்தனையோ இஸங்களாக, இலக்கியச் சர்ச்சைகளாக, காப்பியங்களாக தமிழும், அதன் இலக்கியங்களும் காலவோட்டத்தில் செய்யவிருக்கிற அதியற்புதமான மாற்றங்களை யூகிக்கமுடியாத ஆதிமனித ஆச்சர்யம் அது. பாராட்டும் விதத்திலோ நன்றி தெரிவிக்கும் பொருட்டோ பூனைபோல அவனை உரசினாள் அவள்.
மறுநாட் காலை முட்புதர்களை அகற்றிக் கொண்டிருந்தான் நாயகன்.
அந்த மனிதக் கூட்டம் வசித்துவந்த குகைப் பகுதியில் நிரந்தரமான ஒரு பெருந்தொல்லை நிலவி வந்தது. விலங்குகளிடமிருந்து ஏற்பட்ட தொல்லையைவிட கொடுமையானதாக இருந்தது அது. எந்த விலங்கும் ஒருமுறை கல்லால் அடித்துக் கொன்றபின் மீண்டும் உயிர்கொண்டு வருவதில்லை.
அந்த இனம் பாடுபட்டுக் கொண்டிருந்தது முட்செடிகளால். குகையைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கும் அந்த முட்செடிகளால் நாம் வசிப்பிடம் இன்றி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக சைகைகளால் தீர்மானமாகச் சொல்லி யிருந்தாள் அவர்களின் குழுத்தலைவி. அப்போது தாய்வழி சமூகஅமைப்பு நிலவியது. ஆகவே பசியாறுதல், இனப்பெருக்கம் செய்தல், ஓய்வெடுத்தல் போன்ற இயல்பான உணர்ச்சிகளோடு, தீ மூட்டுதல், முட்செடிகளை அழித்தல் போன்ற கடமைகளும் அவலர்களுக்கு இருந்தது. இந்த இனக்கரிசனம் காரணமாக உந்தப்பட்டு புதர்களை வேரடிமண்ணாக அழித்துக் கொண்டிருந்தான் நாயகன்.
நம் நாயகியும் அங்கே வந்துசேர்ந்தாள். அந்தப் பெருக்கல்குறி ஓவியம் அவன்மீது அவளுக்கு மரியாதையை ஏற்படுத்தி யிருந்தது. எதிர்பார்க்காத வண்ணம் அவனைநோக்கிப் பற்களைக் காட்டினாள். நம் நாயகனுக்கு அது ஓநாயின் சீற்றத்தை ஞாபகப் படுத்தியது. பயந்துதான் போனான். ஆனால் அது சீற்றம் இல்லை என்று உடனடியாக விளங்கி விட்டது. காலையில் புதிதாகப் பார்ப்பதற்கு அடையாளம் போல அப்படிச் செய்தாள். பதிலுக்கு நாயகனும் அப்படிச் செய்தான். பிற்காலங்களில் இந்த வழக்கத்துக்கு 'பு ன் ன கை ' என்று பெயரிட்டனர்.
நாயகன் வெட்டியெறிந்த செடிகளில் வண்ணமயமான ஒரு பகுதி அவளை வசீகரித்தது. அது அந்தத் தாவரத்தின் பூ என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் இன்னும் சற்று நெருங்கிவந்து அந்தப் பூக்களை மட்டும் தனியே கிள்ளி எடுத்தாள் கைநிறையப் பூக்களோடு அவள் நிற்பது அவனுக்குப் பயங்கரமான.கிளர்ச்சியை உண்டுபண்ணியது. மீண்டும் ஒரு சித்திரம் தீட்டும் நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். உடனே அவளை அந்தப் பூக்களோடு குகைவாசலுக்கு இழுத்துவந்தான். ஒரு கூரான கல்லை எடுத்து சித்திரம் கீறத் தொடங்கினான். குச்சி உருவ சித்திரம். அவனுடைய படைப்புத் தவிப்பின் நேர்த்தி அதில் மிளிர்ந்தது. கீறி முடியும் தறுவாயில்தான் தங்களைச் சுற்றி தம் இன மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது அவர்களுக்கு.
தலைவி மிகுந்த ஆவேசத்தோடு ஒரு கல்லை எடுத்து நாயகன்மீது எறிந்தாள். சுற்றி நின்றிருந்த மற்றவர்களும் உடனே ஆளுக்கொரு கல்லை எடுத்தனர். தங்கள் குல எதிரியாகக் கருதிவந்த முட்செடியின் ஒரு பகுதியை ஒரு பெண் கையில் சுமந்து கொண்டிருப்பதும் அதை ஒருவன் குகையில் சித்திரமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும் ஒரு பேராபத்தின் முன்னறிவிப்பாகத் தோன்றியது அவர்களுக்கு.
எல்லோரும் சொல்லிவைத்தது மாதிரி கற்களை எறியத் தொடங்கினர். உருட்டுக்கட்டை கொண்டு அவர்களைக் கொன்றுவிடும் நோக்கத்தில் சிலர் பாய்ந்தனர். பூக்களை வைத்திருந்த நாயகனுக்கும் நாயகிக்கும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து புரிந்தது. இருவரும் ஓட ஆரம்பித்தனர்.
தங்கள் கூட்டத்தை விட்டு வெகுதுாரம் ஓடினர். வேறொரு குகையில் வாழ்க்கையைத் தொடங்கினர். முட்செடிகளைப் பயிரிட்டு மகிழ்ந்தனர். பின்னாட்களில் அது ரோஜா என்று பெயர்பெற்றது. இப்போதும் காதலின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகிறது.
புதுக் குகையில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு (8000 - 1 தலைமுறைக்கு முன்) ஏகப்பட்ட சைகைகளின் மூலமாகவும், சித்திரக் கோட்டோவியங்கள் மூலமாகவும் தங்கள் கதையைச் சொன்னான் நம் நாயகன். இந்தக் கதையின் அடையாளமாகத்தான் எங்கள் வீட்டுத் தொட்டியில் ஒரு ரோஜாச்செடி இருக்கிறது இப்போதும்.
(காதலர் தின சிறப்புக் கதை)
திங்கள், அக்டோபர் 22, 2007
செவ்வாய், அக்டோபர் 16, 2007
வனமும் இனமும்!


"ஆட்டோ சங்கர்' நெடுந்தொடருக்குப் பிறகு சந்தனக் கட்டை வீரப்பன் கதை(சந்தனக்காடு)யை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. இந்த இரண்டுத் தொடர்களையும் இயக்கியிருப்பவர் வ. கெüதமன். சர்ச்சைக்குரிய மனிதர்களை கதாநாயகர்களாக்கி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையாகியிருக்கிறது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, "இத் தொடர் வெளிவந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் இயக்குநர் கெüதமனைச் சந்தித்தோம்.
ஆட்டோ சங்கர், வீரப்பன் என்று நிஜ மனிதர்களின் கதையையே தொடர்களாக்கிக் கொண்டிருப்பதற்குப் பிரத்யேகக் காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
அது நிஜக் கதையாகவோ, புனைகதையாகவோ இருப்பதுபற்றி எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஜெயகாந்தனின் "சினிமாவுக்குப் போன சித்தாளு' கதையை குறும்படமாகத் தயாரித்தேன். அது புனைகதைதான். ஆனால் நிஜமாகவே தமிழகத்தில் அப்படியொரு சூழல் இல்லையென்று சொல்ல முடியுமா? சொல்லுங்கள், அது ஒரு புனைகதை மட்டுமேதானா? படைப்பு நிஜ உலகை பிரதிபலிப்பதாக இருப்பதைப் போலவே நிஜக்கதையை படமாக்குவதையும் நான் அதே பார்வையில்தான் பார்க்கிறேன்.
இது சமூகத்தின் பார்வையில் குற்றவாளிகளாகப் பார்க்கப்பட்ட வர்களை ஹீரோக்களாக்குவதாக அமையாதா?
கதைக்கு ஹீரோ என்பது ஒரு வசதிக்காகச் சொல்கிற வார்த்தைதான். என்னைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு அறிமுகமான அளவுக்கு வில்லன்கள் இல்லை என்பதுதான். ஆட்டோ சங்கரோ, வீரப்பனோ முதலில் சில அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலேயே ஊக்குவிக்கப்பட்டவர்கள்தான். பிரச்சினை என்று வந்தபோது கைவிடப்பட்டவர்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களின் பிரச்சினைகளை அவர்களே எப்பாடு பட்டேனும் சமாளிக்க வேண்டியதாகவும் ஆனது. அவர்கள் தள்ளப்பட்ட சூழல்தான் முக்கியமே தவிர அதில் இடம் பெறும் ஹீரோக்கள் அல்ல.
சந்தனக்காடு தொடரில்....
"சந்தனக்காட்டை' எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தினீர்கள்?
ஏறத்தாழ சந்தனக் காட்டுப் பகுதியில்தான். வீரப்பன் படுத்த, நடந்த, ஓடிய இடங்களில்தான் முழுபடப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ரத்தமும் சந்தனமும் மணந்த காட்டுப் பகுதிகளில் படம் பிடித்திருக்கிறோம். இதுவரை மேட்டூர், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம், ஏமனூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். வீரப்பன் பிறந்த கிராமமான செங்கம்பாடி (இது கர்நாடகாவில் இருக்கும் தமிழ் கிராமம்)யிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?
காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு என்பதால் தினமும் அதிகாலை 4 மணிக்கு தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து புறப்பட்டால்தான்
விடியற்காலையில் படப்பிடிப்பைத் தொடங்க முடிகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதி. திக்கு திசை தெரியாமல் போய்விடும் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது. வனவிலங்குகள் அதிகம் கண்ணில்படுகின்றன. கரடிகள், குரங்குகள், மான்கள், பாம்புகள், விஷப் பூரான்கள், காட்டு எருதுகள் பல வற்றைப் பார்த்தோம். படமாக்கியிருக்கிறோம்.
வீரப்பனைப் பற்றிய தகவல்களை எங்கே சேகரித்தீர்கள்?
வீரப்பனைப் பற்றி மற்ற யார் சொல்வதையும்விட அவனை பார்த்த அவனுடன் பேசிய மக்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்பது என் கணிப்பு. நான் சந்தித்த சில பெண்கள் கர்நாடக, தமிழக காவல்துறையினரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். "நாங்கள் தாயும் மகளுமாகக் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டோம். எங்களுக்கு நேர்ந்த வேதனையைக் கேட்டு நாங்கள் கற்பழிக்கப்பட்ட ராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனை தரைமட்டமாக்கிய எங்கள் அண்ணன் அவர்' என்கிறார்கள்.
படப்பிடிப்பில் சந்தனக்காடு...
அதே போல சுள்ளி பொறுக்க வந்து வழி தவறிவிட்ட பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டு கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து, "ஆடு வாங்கி ரெண்டை நாலாக்கிப் பொழைச்சுக்கோ' என்று அறிவுரை சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். இப்படி மனிதநேயம் பாராட்டும் விஷயங்கள் ஏராளம் வீரப்பன் வாழ்க்கையில் இருக்கின்றன. ஏற்கெனவே மீடியா மூலமும் காவல்துறை மூலமும் தெரிந்த விஷயங்களும் உண்டு.
வீரப்பனின் மனைவி இந்தத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து?
நான் டேப்பில் பதிவு செய்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வீணான கற்பனை. அதுவும் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன் என்று கூறியிருக்கிறார். நான் ஒன்பது மாதங்களுக்கு முன்பு பேசினேன். அவர் பயப்படும் அளவுக்கு எதுவும் இத் தொடரில் இல்லை என்பதை பலமுறை தொலைபேசியில் விளக்கிவிட்டேன். டி.வி.டி. ஒன்றும் கொடுத்தனுப்பினேன். விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புகிறோம். வழக்கு முடிவும் எங்களுக்குச் சாதகமாகத்தான் வந்திருக்கிறது.
"சந்தனக்காடு' தொடர் மூலம் சொல்லவிரும்பும் செய்தி?
உண்மையை உடைத்துச் சொல்ல முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருக்கிறோம். வனமும் இனமும் சிதைந்த வரலாறு இது. மனித நேயம் நிறைந்த வீரப்பனுடைய பிற்காலத்தையும் இன்னொரு பக்கத்தையும் சொல்ல விரும்புகிறோம்.
தமிழ்மகன்
சர்ச்சை: கற்றது தமிழ்..! பெற்றது?


கற்றது தமிழ் என்றால் பெற்றது என்னவாக இருக்கும்?
இவனுக்கென்ன பைத்தியமா என்ற பட்டப் பெயரும் குறைந்த சம்பளமும் அவமானங்களும்தான் அவனுக்கு வாய்க்கும் விஷயங்களாக இருக்கும் என்கிறது "கற்றது தமிழ்' திரைப்படம்.
"தமிழ் எம்.ஏ.' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இப்படம் இப்போது வரிச்சலுகை கிடைக்காதோ என்ற கவலையில் "கற்றது தமிழ்' என வெளியாகி, தமிழ் பேசும் நல்லுலகை உலுக்கியிருக்கிறது.
படத்தின் இயக்குநர் ராம், ""நான் எந்த ஊர் என்பது அத்தனை சரியாகச் சொல்ல முடியாது. வணிகவரித் துறையில் அப்பாவுக்கு வேலை. இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் ஊர் என்று நிறைய மாறிவிட்டேன். நான் ஊர்களில் இருந்ததைவிட ரயில் பெட்டிகளில்தான் அதிகம் வசித்திருப்பதாகச் சொல்வேன். மதுரையில் இளங்கலை தமிழும் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முதுகலை தமிழும் படித்தேன்.
பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், ராஜ்குமார் சந்தோஷி போன்றவர்களின் திரைப் படங்களுக்குப் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் படிப்பவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்பதைப் படத்தின் மையமாக வைத்து தமிழ் படித்தவனின் வாழ்க்கைத் தரம் சார்ந்த பார்வையைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். நான் சந்தித்த ஒருவனின் கதை அல்ல இது. பலரின் கதை... பலரின் அனுபவம்.
சொல்லப்போனால் இது தமிழ் படித்தவனின் கதை மட்டுமல்ல, இது கலைத்துறை படிப்பு படித்தவர்களின் கதையாகவும்தான் சொல்லியிருக்கிறேன்.
பிறதுறை மாணவர்களுக்கும் கலைத்துறை மாணவர்களுக்குமான மனவியல் சிக்கல் இது. கோவிந்த் நிகிலானி என் ஆதர்ஷ இயக்குநர். "ஒவ்வொரு செய்தியிலிருந்தும் ஒவ்வொரு வசனத்திலிருந்துமே ஒரு படத்தை உருவாக்கிவிடமுடியும்' என்பார் அவர். அப்படியான ஒரு படைப்புதான் "கற்றது தமிழ்'.
படத்தைப் பார்த்துவிட்டு பாலுமகேந்திரா பூரித்துப் போனார். ""ஆசியாவின் முதல் ஐந்து படங்களைச் சொல்ல வேண்டுமானால் அதில் "கற்றது தமிழ்' நிச்சயம் இடம் பிடிக்கும். டப்பிங் செய்திருக்கும் உத்தி, திரைக்கதை உத்தி எல்லாமே தமிழ் சினிமாவுக்குப் புதிது'' என்றார். பார்த்திபன் பார்த்துவிட்டு இந்தியாவின் சிறந்த இயக்குநர் என்ற இடம் இவருக்கு உண்டு என்றார். தனுஷ், ""இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்காமல் போய்விட்டேனே'' என்கிறார். பெயர் தெரியாத எத்தனையோ பேர் போன் செய்து பாராட்டுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது'' என்றார் இயக்குநர் ராம்.
படத்தில் ஒரு காட்சி:
""நீ ஏன் தமிழ் படிக்க வந்தாய்? என்று கேட்கிறார் பேராசிரியர். ஏதாவது டிகிரி இருந்தா லோன் தருவாங்க''னு படிக்கிறேன்.
இன்னொரு மாணவனைக் கேட்கிறார்.
வேற கோர்ஸ் சேருவதற்கு மார்க் இல்லை என்கிறான்.
நாயகன் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துவிட்டு தமிழ் படிக்க வந்திருப்பது தெரிகிறது. ""ஏதாவது என்ஜீனியரிங் காலேஜில் சேராமல் இங்கு ஏண்டா வந்தாய்'' என்கிறார். தமிழ் படிக்கும் ஆசையில் வந்தேன் என்கிறான்.
-இப்படி ஆரம்பிக்கிறது கதை.
ஆனால் படித்து முடித்ததும் இரண்டாயிரம் வருஷமா இருக்கிற தமிழைப் படித்த படத்தின் நாயகனுக்கு இரண்டாயிரம் சம்பளம்தான் கிடைக்கிறது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படிப்புக்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. இந்த வித்தியாசம் அதிர்ச்சியூட்டுகிறது. கூடவே அவனுடைய வாழ்வின் சிக்கல். நேசித்த படிப்பும் அவனைக் காப்பாற்றவில்லை. காதலும் கை கூடவில்லை... மனநலம் பாதிக்கப்படுகிறது... மரணத்தை நோக்கிப் போகிறான் இப்படி முடிகிறது படம்.
படமாக்கியிருக்கும் நேர்த்தியும் திரைக்கதையின் வலிமையும் இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாலும் விமர்சனங்களும் படத்துக்கு உண்டு. பொழுது போக்குக்குக்கான படங்களுக்கு இல்லாத சிக்கலை இது போன்ற சீரியஸ் படங்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பது வாடிக்கைதான்.
""தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. பெரிய சம்பளம் கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம்'' என்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன். தமிழ் படித்தால் மூன்று விதங்களில் வேலை வாய்ப்பு உண்டு. தமிழாசிரியர் ஆகலாம். கல்லூரியில் பேராசிரியராகலாம். பண்பாடு- கலாசாரத் துறைகளில் பணியாற்றலாம். செம்மொழி அந்தஸ்து கிடைத்த பிறகு நிறைய நூல்கள் பதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன. எல்லாக் கல்விக்கும் போல இதிலும் மேற்படிப்புகளுக்கு ஏற்பதான் வேலை வாய்ப்பு. இது இல்லாமல் அரசு நடத்தும் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகள் எழுதலாம். 40 ஆயிரம் இடங்களுக்கான சர்வீஸ் கமிஷன் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழ் படித்தவர்கள் எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே?
எழுத்தாளர்கள், வசனகர்த்தாக்கள் இருக்கிறார்கள். வைரமுத்து, மு.மேத்தா, கபிலன், முத்துக்குமார் தமிழில் பட்டம் வாங்கியவர்கள்தானே? மு.வ. எழுதி சம்பாதித்தவர்தானே? அகிலன் எழுதி சம்பாதித்தவர்தானே? கல்கி, ஜெயகாந்தன் என்று எத்தனை எழுத்தாளர்கள்... எத்தனை துணை வேந்தர்கள்? படத்தை எடுத்த டைரக்டரே தமிழ் எம்.ஏ. படித்தவர் என்கிறார்கள். இப்போது அவர் டைரக்டராக உயர்ந்திருக்கிறாரே... தெரியாத்தனமாக தமிழ்படித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். தமிழ்தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் ஏன் உயர முடியவில்லை என்று தெரியவில்லை.
என்ஜீனியரிங் படித்துவிட்டு 2000 ரூபாய் சம்பளம்கூட கிடைக்காதவர்கள் இருக்கிறார்களே... பொதுவாக வேலை வாய்ப்பு இன்மையும் சம்பளம் குறைவாக இருப்பதும் வேறு சமூக பிரச்சினைகள்... அந்தப் பிரச்சினை தமிழுக்கும் இருக்கிறது, கெமிஸ்ட்ரிக்கும் இருக்கிறது'' என்கிறார் பெரியார்தாசன் உறுதியாக.
வெள்ளி, அக்டோபர் 12, 2007
பால்- சைவமா? அசைவமா?
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சைவ- அசைவ உணவு குறித்துப் பேச்சு எழுந்தது.
பாலும் அசைவம்தான் என்றார் காந்திஜி. பால் சாப்பிடுவது மாட்டின் இறைச்சியைச் சாப்பிடுவது போலத்தான் என்பது அவருடைய வாதம்.
""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாய்ப் பாலும் அசைவம்தான். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே நர மாமிசம் சாப்பிடுபவர்கள்தான்'' என்றார் ராதாகிருஷ்ணன்.
சமயோசிதமான பதில் காந்திஜியை மிகவும் கவர்ந்து விட்டது.
பாலும் அசைவம்தான் என்றார் காந்திஜி. பால் சாப்பிடுவது மாட்டின் இறைச்சியைச் சாப்பிடுவது போலத்தான் என்பது அவருடைய வாதம்.
""நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தாய்ப் பாலும் அசைவம்தான். அப்படிப் பார்த்தால் நாம் எல்லோருமே நர மாமிசம் சாப்பிடுபவர்கள்தான்'' என்றார் ராதாகிருஷ்ணன்.
சமயோசிதமான பதில் காந்திஜியை மிகவும் கவர்ந்து விட்டது.
சிஸ்டர்ஸ் ஃப்ரம் 'செவன் சிஸ்டர்ஸ்'!

இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் அருணாச்சல பிரதேசம், அஸ்ஸôம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மலை மாநிலங்கள் நமக்கு லாட்டரி சீட்டு வகையில்தான் பழக்கம். ஆனால் இன்று இந்த ஏழு மாநிலங்களிலிருந்தும் புறப்பட்டிருக்கும் இளைஞர்கள் இப்போது உலகமெங்கும் பணியாற்றுகிறார்கள். சென்னையிலும் இப்போதெல்லாம் தடுக்கி விழுந்தால் இந்த "ஏழு சகோதரி' பிரதேசத்தில் இருந்து வந்த சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள். என்ன காரணம்?
பெங்களூரில் உள்ள ஒரு பிபிஓ நிறுவனத்தின் தலைவர் நாகராஜன், தங்கள் நிறுவனத்தில் கணிசமான அளவு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றுவதாகக் கூறுகிறார். ""அவர்களைத் தேர்வு செய்ததற்குக் காரணம் நிஜமாகவே அவர்கள் பேசும் நல்ல ஆங்கிலத்துக்காகத்தான். நல்ல தரமான ஆங்கிலம் அவர்களுக்குக் கால் சென்டர், பிபிஓ சென்டர், ஃபிரண்ட் ஆபிஸ் போன்ற வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய துறையில் அவர்களுக்குப் பிரகாசமான வரவேற்பைத் தந்திருக்கிறது. இப்போது புதுதில்லி, பெங்களூர் நிறுவனங்களில் இவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருக்கிறது. சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இன்னும் பெருக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் நாகராஜன்.
பெங்களூரில் இருக்கும் சன்னிஸ் நிறுவன அதிபர் அர்ஜுன் சஜ்ஜானி, ""ஆங்கிலம் ஒரு காரணம். கூடவே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். வேலை செய்வதற்காக வெகு தூரத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பதால் இவர்கள் அடிக்கடி தங்கள் பாட்டிமார்களையும் உறவினர்களையும் நோய்வாய்ப்படுத்துவதோ, சாகடிப்பதோ இல்லை. ஒழுங்காக வேலைக்கு வந்துவிடுகிறார்கள்'' என்கிறார்.
வடகிழக்கு மாகாணத்தவர்களுக்கு எப்படி இந்தத் திடீர் மவுசு?
""வடகிழக்குப் பிராந்திய இளைஞர்களுக்கு அவர்களின் தாய்மொழியைவிட ஆங்கிலம் நன்றாகத் தெரிவதற்கு கிருஸ்துவ மிஷினரிகள்தான் காரணம்'' என்கிறார் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் நூலகரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான ரெங்கையா முருகன். வடகிழக்கு மாநில பழங்குடியினர் பற்றிய மிக முக்கியமான கள ஆய்வை நிகழ்த்தியிருப்பவர் இவர்.
""கிருஸ்துவ அமைப்புகள் தொடர்பு மொழியாகப் பயன்படுத்துவது ஆங்கிலத்தைத்தான். பழங்குடியினருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிப்பதை முக்கிய செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். சென்ற தலைமுறையினர்தான் அங்கெல்லாம் அவர்களின் தாய் மொழியில் பேசுகிறார்கள். இளைய தலைமுறையின் பரிவர்த்தனை எல்லாம் ஆங்கிலத்தில்தான். அங்கு அவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் வெளிமாநிலத்துக்குச் செல்கிறார்கள். அதே போல் அங்குள்ள இளைஞர்களுக்குத் தென்னிந்தியாவில் படிப்பதும் வேலைபார்ப்பதும் மிகப் பெரிய கனவாக இருக்கிறது. காரணம், இங்கே படித்த இளைஞர் என்றால் அவர்களுக்கு வரதட்சணையே பிரம்மாண்டமாக இருக்கும்.
பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் பேசுவதாலும் மங்கோலிய முகத்தோற்றத்தாலும் அவர்களுக்கு ஒரு சர்வதேச அடையாளம் கிடைக்கிறது. கொஞ்சகாலம் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றுகிறவர்கள் உடனே வெளிநாட்டுக்குத் தாவிவிடுகிறார்கள்'' என்கிறார் ரெங்கையா முருகன்.
சென்னையில் அஜுபா சொல்யூஷன் என்ற பிபிஓ நிறுவனத்தின் பைனான்ஸ் இயக்குநராக இருக்கும் ஷங்கர் நரசிம்மன், ""தில்லியோடு ஒப்பிடும்போது சென்னையில் வடகிழக்கு இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் கடந்த ஆண்டு மட்டும் எஸ்.ஐ.ஈ.டி., இந்துஸ்தான் கல்லூரிகளில் இருந்து இதுவரை 15 பேர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருக்கின்றனர். இது அவர்களின் வருகையைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இருப்பதாகத்தான் உணர்த்துகிறது'' என்கிறார்.
எங்கோ மலை முகட்டில் பிறந்தவர்களுக்கு ஆங்கிலம் என்ற மொழி இத்தனை பெரிய அங்கீகாரத்தைத் தந்திருப்பது ஆச்சர்யம்தான். கூடவே சிறிய வருத்தம். தங்கள் மொழி, கலாச்சார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அது.
-தமிழ்மகன்
டேல் ஆஃப் தி வீக்
வயதான அந்தப் பாதிரியார் அவரது நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியையும் தமது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் அந்த முதியவரின் படுக்கை அறைக்கே வந்திருந்தனர். இருவரும் அவருக்கு இருபுறமும் அமர்ந்தனர். இருவரின் கைகளையும் பிடித்தபடி தமது இறுதி நிமிடங்களின் போது இருவரையும் கூடவே இருக்குமாறு கேட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்தவாறு இருந்தார்.
இருவரும் குழப்பமாக அமர்ந்திருந்தனர். எதற்காக இப்படியொரு வேண்டுகோள் என்று இருவருக்கும் புரியவில்லை. இறுதியாக செரிடியன் கேட்டார், ""எதற்காக பாதர் எங்கள் இருவரையும் தங்கள் கடைசி நிமிடங்களின்போது தங்களின் இருபுறமும் இருக்குமாறு வேண்டுகிறீர்கள்?'' என்றார்.
பாதிரியார் மரணத்தறுவாயில் மெல்ல முனகினார்.
""யேசு இரண்டு திருடர்களுக்கு மத்தியில்தான் தன் உயிரை விட்டார். அதே மாதிரி இறப்பதற்கு ஆசைப்பட்டேன்.''
இருவரும் குழப்பமாக அமர்ந்திருந்தனர். எதற்காக இப்படியொரு வேண்டுகோள் என்று இருவருக்கும் புரியவில்லை. இறுதியாக செரிடியன் கேட்டார், ""எதற்காக பாதர் எங்கள் இருவரையும் தங்கள் கடைசி நிமிடங்களின்போது தங்களின் இருபுறமும் இருக்குமாறு வேண்டுகிறீர்கள்?'' என்றார்.
பாதிரியார் மரணத்தறுவாயில் மெல்ல முனகினார்.
""யேசு இரண்டு திருடர்களுக்கு மத்தியில்தான் தன் உயிரை விட்டார். அதே மாதிரி இறப்பதற்கு ஆசைப்பட்டேன்.''
புதன், அக்டோபர் 10, 2007
மஸ்தானா... சரிதானா?


அலசல்:
திரைப்படத்தில் ஒரு காட்சி...
மூன்று பெண்கள் மிகுந்த பதட்டத்துடன் வந்து ஆட்டோ பிடிக்கிறார்கள். என்னவோ ஏதோ என்று பதறிப் போகிறார் ஆட்டோ டிரைவர்.
""சூர்யாவ கடத்திகிட்டுப் போயிட்டாங்க. அவ வாழ்க்கை என்ன கதியாகும்னே தெரியல...''
""ஆமா... அவ அண்ணனும் ஜெயில்ல இருக்கான்... தூக்குல போட்டுடுவாங்க போல இருக்கு''
ஆட்டோ டிரைவர் மேலும் பதறுகிறார்.
""மாமியார்காரியும் அவளோட புருஷன் கிட்ட இருந்து பிரிச்சுட்டா. சொந்தமா தொடங்கிய பிசினஸýம் சரியா வரலை. எதிரிங்க ஒரு பக்கம் கொலை செய்ய அலையறாங்க''
இவ்வளவு பிரச்சினைகளுடன் இருக்கும் அந்தப் பெண்ணைச் சமாளிப்பதற்காகச் செல்பவர்களை உடனே அவர்கள் சொல்லும் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டுமே என்று வேகவேகமாக ஓட்டிச் செல்வார். இறங்கும்போது ""பரவாயில்லை முன்னாடியே கொண்டு வந்து விட்டுட்டான் அம்பி... இன்னும் பத்து நிமிஷம் இருக்கு சீரியல் ஆரம்பிப்பதற்கு'' என்றவாறு இறங்கிச் செல்வார்கள்.
""அடிப்பாவிகளா சீரியலுக்கா இந்த டென்ஷன் பண்ணீங்க'' என்று அலுத்துக் கொள்ளுவார் ஆட்டோ டிரைவர். ஆட்டோ டிரைவராக நடித்தவர் விவேக். இப்போது மனத்திரையில் அந்த ஆட்டோவை ஓட்டிப் பாருங்கள்...
ஆனால் இப்படிக் காமெடியாகத்தான் இருக்கிறது சீரியலுக்கும் மக்களுக்குமான உறவு.
எந்த சானல் என்றில்லாமல் எல்லா சானல்களுக்கும் பொது அம்சமாக இருக்கிறது இந்த மெகா தொடர்கள். எல்லா தொடர்களிலும் கோர்ட்- கேஸ், போலீஸ், ஆள் கடத்தல், பரம்பரைப் பகை, கொலை வெறி, பழி வாங்கல், அளவுக்கதிகமான நேர்மை எல்லாமே இருக்கிறது. நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம்தான் வித்தியாசம்.
தமிழக சானல்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை சன் டி.வி.யைத்தான் சேரும். அதைப் போலவே செய்தி, அதைப் போலவே சீரியல்கள், அதைப் போலவே சினிமா விமர்சனம், அதைப் போலவே காமெடி நிகழ்ச்சிகள், அதைப் போலவே "டாக் ஷோ' என்றே எல்லோரும் பாதை வகுத்துக் கொண்டார்கள். எல்லோரும் அதைப் போல செய்வதில் ஆர்வம் காட்டி இந்தப் போராட்டத்தில் தோல்வி கண்டிருந்த நேரத்தில் எங்கள் வழி தனிவழி என இலக்கணம் வகுத்தது விஜய் டி.வி.
இவர்கள் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார்கள். "கலக்கப் போவது யாரு', "ஜோடி நம்பர் ஒன்', "சூப்பர் ஸிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கினர்.
விளைவு? அதே நிகழ்ச்சிகள் இப்போது ஏறத்தாழ எல்லா சானல்களிலும். "ஜோடி நம்பர் ஒன்' சன் டி.வி.யில் "மஸ்தானா மஸ்தானா'வாக மாறியிருக்கும். கலைஞர் டி.வி.யாக இருந்தால் "மானாட மயிலாட'வாக மாறியிருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த ஸ்டீரியோ-டைப் இழுவைகளுக்கு தனித்துவமாக முயற்சி செய்யும் தன்மை இல்லாததுதான் காரணம். வெற்றி பெற்ற நிகழ்ச்சியை உல்டா செய்வதிலேயே சானல்கள் அக்கறை காட்டுகின்றன. ஒரு காலத்தில் தமிழில் வெளிவந்து கொண்டிருந்த வார இதழ்களின் அட்டையைப் பிரித்துவிட்டால் எல்லா இதழ்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன என்று சொன்ன நிலை இன்று சானல்களுக்கு.
வெற்றி பெற்ற சானல்களில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களையே எவ்வளவு செலவானாலும் சரி நம் சானலுக்கு இழுத்துவா என்ற போக்கும் இருக்கிறது.
இதற்கு என்ன காரணம்...? ""தமிழ் சானல்கள் எல்லாம் பெரும்பாலும் முதலாளிகளின் கையிலேயே இருக்கிறது. அவர்களின் ரசனை எப்போதும் வெற்றி பெற்ற விஷயங்களைப் பின் தொடர்வதிலேயே இருக்கும். படைப்பாளிகளை நம்பி நிகழ்ச்சிகளை ஒப்படைக்கும் நிலை இன்னும் இங்கு வரவில்லை. மக்கள் தொலைக்காட்சி ஓரளவுக்கும் அதிகமாகவே தமிழர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
காப்பியடிப்பது தப்பில்லை. வெளிநாட்டு சானல்களில் இருந்து காப்பியடிக்க நினைத்தாலாவது இந்த நிலைமை மாறும். தமிழக காடுகளைப் பற்றியும் அங்கிருக்கும் உயிரினங்கள் பற்றியும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தால் யாரும் பார்க்க மாட்டார்களா என்ன? போட்டியில் தோல்வி அடைந்த சிறுவர்கள் கதறி அழுது கொண்டு செல்வதும், எங்கோ அவர்களின் பெற்றோர்கள் கோவிலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருப்பதும் என்ன கேலி கூத்து இது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
""கடந்த பொது தேர்தலின் போது ஜெயலலிதாவுக்காகப் பிரசாரம் செய்த சிம்ரன், கோவை சரளா போன்ற பலரும் இப்போது கலைஞர் டி.வி.யில் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சன் டி.வி.யில் புறக்கணிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் இப்போது அங்கே பிரதான செய்தி ஆதாரங்களாக இருக்கிறார்கள்.
தொலைக் காட்சிகளில் பளிச் சென்று தெரிகிற புதுமை இது ஒன்றுதான்!'' -தொலைக்காட்சி சானலில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர் ஒருவரின் புலம்பல் இது.
""சீக்கிரத்திலேயே இந்தத் தொடர்கள் மக்களுக்கு போரடித்துவிடும். அல்லது இதுமாதிரி நன்கு விற்கக்கூடிய நிகழ்ச்சிகளை ஒன்று போல எல்லோரும் தயாரிக்க ஆரம்பிப்பார்கள்'' என்கிறார் லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் பேராசிரியர் ச.ராஜநாயகம்.
""பொதுவாக மக்களும் சேர்ந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு இப்போது பெரிய வரவேற்பு இருப்பதால் எல்லோருமே அதையே செய்கிறார்கள். ஒரு சினிமா ஓடினால் அதே போல சினிமா தொடர்ந்து வருவதுபோலத்தான் இதுவும். இது இங்கு மட்டுமல்ல, லாப நோக்கமுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். இது தமிழ்நாட்டுக்கானது இந்தியாவுக்கானது என்று நினைக்க வேண்டியதில்லை. சொல்லப் போனால் சில நாடுகளில் வெற்றி பெற்ற ஃபார்முலாவைப் பின்பற்றி அதே போல படம் எடுப்பதும் நிகழ்ச்சி தயாரிப்பதும் இந்தியாவைவிட அதிகமாகவே இருக்கிறது'' என்கிறார் அவர்.
""படைப்புக்கும் வணிகத்துக்குமான பொதுவான போராட்டம்தான் இப்போது டி.வி.யின் போக்குக்கும் காரணமாக இருக்கிறது. தரமான சினிமாக்கள் என்று ஒருபக்கம் முயற்சிகள் நடப்பதுபோல இதிலும் தரமான நிகழ்ச்சிகள் என்று கலந்து உருவாகும்'' என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஒரு சினிமா இயக்குநர்.
அப்படி நடந்தா சரிதான்.
தமிழ்மகன்
சனி, அக்டோபர் 06, 2007
ராகசுதாவிலிருந்து, நிர்மலானந்தாவுக்கு...
திரையுலகில் பிரபலமாக இருந்துவிட்டு திடீரென்று ஒரு நடிகை சந்நியாசம் மேற்கொண்டால், வழக்கமாக எல்லோருக்கும் ஏற்படும் முதல்கேள்வி ""எதுக்காக வாழ்க்கை மீது அப்படி ஒரு வெறுப்பு?''
மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் சந்நியாசியாக இருக்கிறார் நடிகை ராகசுதா, சரியாகச் சொன்னால் சுவாமி நிர்மலானந்தா. ""பலர் என்னிடம் அப்படித்தான் கேட்டார்கள். நான் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசத்துக்கு வரவில்லை. வாழ்க்கை மீது உள்ள அளவுகடந்த விருப்பத்தால் சந்நியாசி ஆகியிருக்கிறேன்.
வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தனிமனித விரக்தி காரணமாகச் சந்நியாசத்தை மேற் கொள்பவர்கள் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்திவிடுகிறார்கள்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு பலித்தது. பல தமிழ்ப்படங்களில் நடித்தேன். "தங்கத்தின் தங்கம்' எனக்குப் பெரிய பிரேக். தொடர்ந்து கன்னடப் பட உலகில் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மலையாளத்திலும். கடைசியாக வெளியான "தம்பி' படம் வரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன். வீடும், காரும் போன்ற லெüகீக கனவுகள் எல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்று. ஆக, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகும் நிலைமை ஏற்படவேயில்லை. நான்கைந்து ஆண்டுகளாக நான் பல தியான வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பதஞ்சலி யோகா முதல் நான் செல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஞானத்தைத் தேடி அலைந்தேன். தனவணிகன் என்ற ஒரு சிற்றிதழில் மகா அவதார் பாபாவின் தீட்ஷை பெற்றவர் என்ற தலைப்பில் நித்தியானந்தர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இயல்பான ஆர்வத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தியான வகுப்பு எடுப்பதாக அறிந்து அங்கு சென்றேன். நித்தியானந்தரை முதலில் நேரில் பார்த்தது அங்குதான். என்னையும் அறியாமல் அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினேன். தொடர்ந்து திருவண்ணாமலையில் அவருடைய தியான வகுப்புக்குச் சென்றேன்.
ஆன்மிக ஆனந்தம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நித்தியானந்தரின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை அவர் ஆன்மிக விஞ்ஞானம் என்கிறார். எப்படி விஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறதோ அப்படியே ஆன்மிகமும் இருக்கிறது. இது உங்களுக்குப் புரியாது, இது சரிபட்டுவராது என்று யாரையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது யார் கூட்டினாலும் வரக்கூடிய ஒரே விடை போலத்தான் ஆன்மிக ஆனந்தமும். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஐரோப்பியன் கூட்டினாலும் அமெரிக்கன் கூட்டினாலும் ஈரான் காரன் கூட்டினாலும் கிடைக்கக் கூடிய ஒரே பதில் போல ஆன்மிகப் பலனும் கிடைக்கவேண்டியது அவசியம். விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில் ரிஸர்ச் அண்ட் டெவலப்மென்ட் நடப்பதுபோல ஆன்மிகத்திலும் த & ஈ தேவைப்படுகிறது. நம் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளாதது இல்லை இப்போதைய பிரச்னை. நம் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளாததுதான் பிரச்னையே.
நான் நைஷ்டீக பிரம்மச்சர்யம் மேற் கொண்டு இங்கு ஆச்சார்யாவாக இருக்கிறேன். தியான வகுப்புகள் எடுக்கிறேன். தியான வகுப்பு எடுப்பவர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறேன். நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னுடைய பெற்றோர், சகோதரி, பெரியம்மா கே.ஆர்.விஜயா, திரைப்படத்துறை நண்பர்கள் நடிகர்கள் சரத், ஸ்ரீமன், நடிகைகள் வினோதினி, மெüனிகா, டைரக்டர் பாலுமகேந்திரா ஆகியோர் நன்றாக அறிவார்கள்.
ஆகவே நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வாழும் கலையின் ஓர் அங்கம்.
-தமிழ்மகன்
மைசூரிலுள்ள பரமஹம்ச நித்தியானந்தரின் நித்தியானந்த பீடத்தில் சந்நியாசியாக இருக்கிறார் நடிகை ராகசுதா, சரியாகச் சொன்னால் சுவாமி நிர்மலானந்தா. ""பலர் என்னிடம் அப்படித்தான் கேட்டார்கள். நான் வாழ்க்கையை வெறுத்து சந்நியாசத்துக்கு வரவில்லை. வாழ்க்கை மீது உள்ள அளவுகடந்த விருப்பத்தால் சந்நியாசி ஆகியிருக்கிறேன்.
வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து தனிமனித விரக்தி காரணமாகச் சந்நியாசத்தை மேற் கொள்பவர்கள் ஆன்மிகத்தைக் கொச்சைப்படுத்திவிடுகிறார்கள்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற என் கனவு பலித்தது. பல தமிழ்ப்படங்களில் நடித்தேன். "தங்கத்தின் தங்கம்' எனக்குப் பெரிய பிரேக். தொடர்ந்து கன்னடப் பட உலகில் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தேன். மலையாளத்திலும். கடைசியாக வெளியான "தம்பி' படம் வரை தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தேன். வீடும், காரும் போன்ற லெüகீக கனவுகள் எல்லாம் எனக்குச் சாத்தியமாயிற்று. ஆக, எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போகும் நிலைமை ஏற்படவேயில்லை. நான்கைந்து ஆண்டுகளாக நான் பல தியான வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பதஞ்சலி யோகா முதல் நான் செல்லாத யோகா வகுப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஞானத்தைத் தேடி அலைந்தேன். தனவணிகன் என்ற ஒரு சிற்றிதழில் மகா அவதார் பாபாவின் தீட்ஷை பெற்றவர் என்ற தலைப்பில் நித்தியானந்தர் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. இயல்பான ஆர்வத்தில் அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் தியான வகுப்பு எடுப்பதாக அறிந்து அங்கு சென்றேன். நித்தியானந்தரை முதலில் நேரில் பார்த்தது அங்குதான். என்னையும் அறியாமல் அவர் பாதத்தைத் தொட்டு வணங்கினேன். தொடர்ந்து திருவண்ணாமலையில் அவருடைய தியான வகுப்புக்குச் சென்றேன்.
ஆன்மிக ஆனந்தம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது நித்தியானந்தரின் அணுகுமுறையாக இருக்கிறது. அதை அவர் ஆன்மிக விஞ்ஞானம் என்கிறார். எப்படி விஞ்ஞானம் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் அனைவருக்கும் பயனளிக்கக் கூடியதாகவும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறதோ அப்படியே ஆன்மிகமும் இருக்கிறது. இது உங்களுக்குப் புரியாது, இது சரிபட்டுவராது என்று யாரையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது யார் கூட்டினாலும் வரக்கூடிய ஒரே விடை போலத்தான் ஆன்மிக ஆனந்தமும். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். ஐரோப்பியன் கூட்டினாலும் அமெரிக்கன் கூட்டினாலும் ஈரான் காரன் கூட்டினாலும் கிடைக்கக் கூடிய ஒரே பதில் போல ஆன்மிகப் பலனும் கிடைக்கவேண்டியது அவசியம். விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில் ரிஸர்ச் அண்ட் டெவலப்மென்ட் நடப்பதுபோல ஆன்மிகத்திலும் த & ஈ தேவைப்படுகிறது. நம் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளாதது இல்லை இப்போதைய பிரச்னை. நம் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளாததுதான் பிரச்னையே.
நான் நைஷ்டீக பிரம்மச்சர்யம் மேற் கொண்டு இங்கு ஆச்சார்யாவாக இருக்கிறேன். தியான வகுப்புகள் எடுக்கிறேன். தியான வகுப்பு எடுப்பவர்களுக்கான வகுப்புகள் எடுக்கிறேன். நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை என்னுடைய பெற்றோர், சகோதரி, பெரியம்மா கே.ஆர்.விஜயா, திரைப்படத்துறை நண்பர்கள் நடிகர்கள் சரத், ஸ்ரீமன், நடிகைகள் வினோதினி, மெüனிகா, டைரக்டர் பாலுமகேந்திரா ஆகியோர் நன்றாக அறிவார்கள்.
ஆகவே நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வாழும் கலையின் ஓர் அங்கம்.
-தமிழ்மகன்
சரண்யாவாகிய நான்...

"காதல் கவிதை', "நீ வருவாய் என' படத்திலிருந்து சுமார் ஒரு டஜன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் "காதல்' சரண்யா.
"காதல்' படத்தில் சந்தியாவின் தோழியாக வந்தவர் இப்போது கதாநாயகி ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரம் டு கதாநாயகி வரையான பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...
சினிமாவுக்கு வருவதற்கு எல்லாருக்கும் ஏதாவது சந்தர்ப்பம் இருந்திருக்கும்... உங்களுக்கு?
அகத்தியன் சார் இயக்கிய காதல் கவிதை படத்தில் இஷா கோபிகருடன் நடிப்பதற்கு நான்கைந்து சிறுமிகள் தேவைப்படுகிறார்கள் என்று எங்கள் குடும்ப நண்பர் சொன்னார். அப்படித்தான் சினிமாவுக்கு நான் அறிமுகமானேன்.
காதல் படத்தில் முதலில் நீங்கள்தான் நாயகியாகத் தேர்வானீர்களாமே?
ஆமாம். "காதல்' படத்தில் நாயகியாக என்னைத்தான் தேர்வு செய்தார்கள். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பிறகு சந்தியாவைப் பார்த்ததும் படக்குழுவினர் அவர் அந்த வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டார்கள். படத்தில் முதல் பகுதியில் பள்ளிக்கூட மாணவியாக நடிப்பதற்கு வேண்டுமானால் நான் பொருத்தமாக இருப்பேன். பிற்பகுதியில் மணமானப் பெண்ணாக நடிப்பதற்கு என்னுடைய தோற்றம் சரியாக இருக்காது என்று கூறிவிட்டனர்.
அந்தப் படத்திலேயே கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்குச் சம்மதித்திருக்கிறீர்கள். எப்படி?
வருத்தம் இல்லாமல் இருக்குமா? அதே படத்தில் ஃப்ரண்ட் வேடம் இருக்கிறது என்று கேட்டபோது அழுகையே வந்துவிட்டது. நல்ல கதை- நல்ல பேனர்... ஏதோ ஒரு வேடத்தில் நடித்தால் போதும் என்ற ஆசையும் இருந்தது. சம்மதித்து மதுரைக்கு ரயிலேறி விட்டோம். தூக்கமே இல்லை. அழுதபடியே ஷூட்டிங் போன முதல் பெண் நானாகத்தான் இருக்கும். படம் நடிக்க ஆரம்பித்ததும் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது.
சந்தியாவும் என் வயது தோழியாக மாறிவிட்டார். செம ஜாலியாக அரட்டை அடித்து கதாநாயகி வேடம் கிடைக்காத துக்கம் முழுக்கவே மறைந்துவிட்டது எனக்கு. படம் வெளியீட்டுக்கு நெருங்க நெருங்க படத்தைப் பற்றி வந்த எதிர்பார்ப்புகள் மறுபடி எனக்குள் ஏமாற்ற உணர்வை உண்டாக்கின. அதுவும் படம் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றதும் ஒவ்வொருவரும் படத்தைப் பற்றிப் பாராட்ட பாராட்ட எனக்கு மீண்டும் தாளமுடியாத துக்கம்.
இப்போதாவது அந்தத் துக்கத்தில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா இல்லையா?
"காதல்' திரைப்படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கிலும் வெற்றி. அந்தப் படத்தைப் பார்த்து தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பரத்துடன் நடிக்க முடியாமல் போன ஏக்கம் அங்கு தெலுங்கு பரத்துடன் கதாநாயகியாக நடித்தபோது தீர்ந்தது. இப்போது தமிழில் "திருத்தம்', "இளவட்டம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன்.
இப்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டு அஞ்சல் வழியில் பிபிஏ படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இனி முழு மூச்சாக நடிக்க முடியும் என்ற தீவிரம் வந்திருக்கிறது. பரீட்சை லீவில் நடிப்பதற்கும் முழு நேரமாக நடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நிறைய வேடங்களில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான நேரம் இருக்கிறது என்ற நிதானமும் மனதில் இருக்கிறது. துக்கமெல்லாம் போயே போச்சு...
என்ன மாதிரி வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
"அம்முவாகிய நான்' படத்தில் பாரதி ஏற்றிருந்த பாத்திரம் துணிச்சலானதாக இருந்தது. அது போன்ற கான்ட்ரோவர்ஸியான வேடங்களை நான் எதிர்பார்க்கிறேன்.
-தமிழ்மகன்
புதன், அக்டோபர் 03, 2007
காமிராவும் நானும்..!


கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது.
சினிமாவின் சகலத் துறைகளிலும் பெண்கள் வெற்றிக் கோப்பைகள் அள்ளிவரும் காலம் இது. ப்ரியா இயக்கும் "கண்ணா மூச்சி ஏனடா' படத்தின் ஒளிப்பதிவாளரும் ஒரு பெண்தான். பெயர் ப்ரீத்தா.
"மொழி' படத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ராதாமோகன் இயக்க இருக்கும் படமான "அபியும் நானும்' படத்துக்கான லொகேஷன் தேர்வுக்காக மூணாறு சென்று திரும்பிய ஓய்வான உற்சாகத்தில் இருந்தார் அவர்.
அவரிடம்...
ஆண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் பெண்கள் சினிமாவுக்கு வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சினிமா ஆண்கள் சூழ் உலகமாக இருப்பதுதான் காரணம். நீங்கள் எப்படிச் சினிமாவுக்கு வந்தீர்கள்..?
சொல்லப் போனால் நான் கணக்குப் பாடத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய தந்தையார் ஐ.ஐ.டி. மாணவராக இருந்தும்கூட எனக்குக் கணக்கு எட்டிக் காயாகத்தான் இருந்தது. சி.பி.எஸ்.சி. சிலபûஸத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்டேட் போர்டுக்கு மாறினேன். அதிலும் கணக்குப் பாடத்தைத் தவிர்த்தேன். சயின்ஸ் குரூப். மேற்கொண்டு படிப்பதற்கு எது விருப்பம் என்பது எனக்குத் தோராயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அப்போது அதைச் சொன்னால் எவ்வளவுபேர் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை. ஏனென்றால் எனக்குச் சினிமாதான் பிடித்திருந்தது.
சினிமாவைப் பிடிப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே?
ஆமாம். என் மாமா பி.சி. ஸ்ரீராம் அவர்களுக்கு நிறைய சினிமா காட்சிகளுக்கு அழைப்பு வரும். சிறுவயதிலிருந்தே சினிமா ப்ரிவியூ பார்க்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. எல்லாப் படங்களையும் பார்ப்பேன். வழக்கமான சினிமா பார்க்கும் ஆசைதான் அது. ஆனால் "நாயகன்' படம் பார்த்தபோது அது தமிழிலும் இப்படிப் படங்கள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. அதன் பிறகுதான் எமக்குத் தொழில் சினிமா என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா படிப்புகளுக்கான அறிவிப்பு வந்தது. அங்கு போய் சேர்ந்ததும்தான். சினிமா பயணத்திற்கான சரியான பாதையைக் கண்டேன். கையில் காமிராவைப் பிடித்ததும் மனசுக்குள் ஏற்பட்ட அந்த உணர்வு... கூட்டுப் புழு, பட்டாம்பூச்சியானது போன்ற மாற்றம் அது. நம்மை வெளிப்படுத்துவதற்கான கருவி இதுதான் என்ற சுதாரிப்பு...
அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் காமிராவுக்கான மேற்படிப்பைப் படித்தேன். அங்கு சென்ற போதுதான் இங்கு எவ்வளவு வசதிகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
உதாரணத்துக்கு அங்கு இன்னமும் பீட்டா காமிராவில்தான் படப்படிப்பு நடத்த வேண்டும். இங்கோ வெகுகாலமாக செல்லுலாய்டில் படம்பிடிக்கிற அனுமதி இருந்தது. சொல்லித் தருவதிலும் இங்கு பலரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அப்போது எனக்கு இங்கே ஜி.பி. கிருஷ்ணா, ஸ்ரீனிவாசன் போன்ற சிறந்த பேராசிரியர்கள் பாடம் எடுத்தார்கள்... நம் இன்ஸ்டிடியூட்டை கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.
படிப்பு முடிந்ததும்...?
பி.சி.சார் கிட்டதான் வேலைக்குச் சேர்ந்தேன். "குருதிப் புனல்' தொடங்கி "மே மாதம்' வரை 5 படங்கள் அவருடன் பணியாற்றினேன். எல்லாவிதமான படங்களும் அதில் இடம்பெற்றன. எனக்கு அது சரியான பயிற்சிக் களமாக இருந்தது.
நீங்கள் சொந்தமாக ஒளிப்பதிவு செய்ய ஆரம்பித்த அனுபவங்கள்?
முதலில் விளம்பரப் படங்களில் பணியாற்ற ஆரம்பித்தேன். ஐசிஐசிஐ பாங்க் விளம்பரங்கள் செய்தேன். "என்னை மறந்ததேன்' என்று டீ கோப்பை ஒன்று கண்ணீர் மல்கும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அது நான் படமாக்கியதுதான். இப்படி 10- 15 விளம்பரப் படங்களில் பணியாற்றினேன். அதன் பிறகு பென்டபோர் சார்பாக அனிதா சந்திரசேகர் இயக்கிய 'ஓய்ர்ஸ்ரீந் ஓய்ர்ஸ்ரீந் ஐ ஹம் ப்ர்ர்ந்ண்ய்ஞ் ற்ர் ம்ஹழ்ழ்ஹ்' ஆங்கிலப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். நல்ல படம். "பகீர் ஆஃப் வெனீஸ்' என்ற இந்தி படத்துக்குப் பணியாற்றினேன். அதைத் தொடர்ந்து "கண்ணா மூச்சி ஏனடா' இவை இரண்டுமே விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதைத் தொடர்ந்து இப்போது ராதாமோகனின் "அபியும் நானும்'.
இதுவரை இரண்டு பெண் இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறீர்கள். இப்போது தமிழில் அபியும் நானும் படத்துக்காக ஆண் இயக்குநருடன் பணியாற்ற இருக்கிறீர்கள்.... இதில் ஏதாவது சிக்கல்...?
எல்லாத் துறைகளிலுமே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன. இது சினிமாவுக்கு மட்டுமானது இல்லை. சினிமா டென்ஷனான துறை. அதற்கான ஏச்சும் பேச்சும் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஆண் பெண் பேதமில்லை. அதிகம் திட்டிய பெண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்ட ஆண் இயக்குநர்களும் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ், ராதாமோகன் யூனிட் சொல்லவே வேண்டாம். ப்ரியாவுடன் "கண்ணா மூச்சி..'யில் பணியாற்றியதைவிட மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
டைரக்ஷன் செய்யும் ஆசை இருக்கிறதா?
நான் உண்டு, என் காமிரா உண்டு என்று இருக்கிறேன். எனக்குத் தெரியாத வேலையை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.
தமிழ்மகன்
சனி, செப்டம்பர் 29, 2007
நெய்தல் ராஜா!

சினிமாவில் லொகேஷன் தேர்வு செய்வது என்பது முக்கியமான வேலை. படத்தின் ஆதாரம் கதை நடக்கும் களம். அதைச் சரியாகத் தேர்வு செய்துவிட்டால் பாதி சுவாரஸ்யத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.
"கடலும் கடல் சார்ந்த' பகுதியில் படப்பிடிப்பு என்றால் மீனவர்களின் ஒத்துழைப்பும் கடலின் ஒத்துழைப்பும் வேண்டும். அதற்கு பட்டினப்பாக்கம் ஜெயராமனின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்கிறது கோலிவுட். சென்னை டூ கன்யாகுமரி வரை உள்ள கடற்பகுதியில் எங்கு படப்பிடிப்பு என்றாலும் இவரைத்தான் அணுகுகிறார்கள். 50- க்கும் மேற்பட்ட கடல்சார் படங்களில் இவருடைய பங்களிப்பு உண்டு. கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் படங்கள் முதல் பல முக்கிய படங்கள் இவர் தேர்ந்தெடுத்த லொகேஷனில் உருவாகியிருக்கின்றன. தமிழ்நாடு மீனவர் பேரவையின் சென்னை மாவட்டத் தலைவராக இருக்கும் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
கடலும் சினிமாவும் நீங்களும் இணைந்த அந்த இனிய சந்திப்பு எப்படி, எப்போது நிகழ்ந்தது?
பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்த மணிவண்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் சிட்டாடல் வீடியோஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள்தான் "சங்கர்லால் துப்பறிகிறார்' தொடர் மூலமாக என்னை கேமிரா முன்னால் நிறுத்தியவர்கள். அதைத் தொடர்ந்து என் வகுப்புத் தோழர் ஆனந்தி ஃபிலிம்ஸ் மோகன் நடராஜன் மூலம் சத்யராஜ் நடித்த "பங்காளி' படத்தில் வில்லனாக நடித்தேன்.
அதில் கடற்கரை ஒட்டிய காட்சிகள் எடுக்கும்போது சில ஏற்பாடுகள் செய்து கொடுத்தேன். அப்படித்தான் நானும் சினிமாவும் கடற்கரையும் இணைந்தோம். முதலில் "நெருப்பு' என்ற படத்துக்காக ஆலம்பரைக் கோட்டை, கோவளம் பகுதியில் காட்சிகள் எடுப்பதற்கு லொகேஷன் தேர்வு செய்து கொடுத்தேன். அன்று தொடங்கிய கடல் லொகேஷன் வேலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் பணியாற்றிய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய படங்கள் எவை?
"இயற்கை' படத்துக்குப் பணியாற்றியதைச் சொல்லலாம்.
ஷங்கரின் "பாய்ஸ்' படம் பட்டினம்பாக்கம் பகுதியில் பாடல் காட்சிக்காக எடுத்த காட்சிகள் மறக்க முடியாதவை. இடத்தையே வேறொரு இடம் போல மாற்றிக் காட்டிவிட்டார். "செல்லமே' படத்தில் ரீமாசென்னை கொலை செய்வதற்காக நடிகர் பரத் கடலுக்குள் அழைத்துச் செல்லும் காட்சி மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி. படக்குழுவினர் ஒரு படகிலும் பரத், ரீமாசென் ஒரு படகிலும் இருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக இருபது மீனவர்களை இன்னொரு படகில் நிறுத்தி வைத்திருந்தேன். மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து' படத்தில் பாரதிராஜா மீனவர்கள் மத்தியில் பேசுவதுபோல ஒரு காட்சி. சுமார் இரண்டாயிரம் படகுகளின் பின்னணியில் 5000 பேர் திரண்டு நடித்தனர். அதை மிக இயல்பாக எடுக்க முடிந்ததற்குக் காரணம்,
மீனவர்கள் என் மீது வைத்திருக்கும் பாசம்தான். கே.வி. ஆனந்த் இயக்கிய "கனா கண்டேன்' படத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஒன்று வரும். அதற்கான ஏற்பாடுகள் செய்ததோடு அந் நிலையத்தின் செக்யூரிட்டியாகவும் நடித்தேன். "கிழக்குக் கடற்கரை சாலை' படத்தில் முழு லொகேஷனுமே நான் தேர்வு செய்ததுதான். விஜய் நடித்த "கில்லி' படத்தில் கபடி ஆட்டத்துக்கான செட், லைட் ஹவுஸ் செட் எல்லாம் போட்டோம். கிளைமாக்ஸில் பெரிதும் பேசப்பட்ட காட்சியாக அது அமைந்தது. கமல் நடித்த "வேட்டையாடு விளையாடு' படத்தின் பாடல் காட்சிக்குக் கடல் நடுவே படகில் பாடிக் கொண்டே லைஃப் ஜாக்கெட்டோடு கடலில் குதிப்பதுபோல காட்சி வரும்.
அதில் கமலும் கமலினி முகர்ஜியும் அணிந்த அந்த லைஃப் ஜாக்கெட்டை அவர்களின் ஞாபகமாக நான் என் வரவேற்பறையில் வைத்திருக்கிறேன். இப்போது "தசாவதாரம்' படத்துக்காக என்னுடைய படகைக் கொடுத்தேன். அதைச் சரித்திரக்கால டைப்பில் மாற்றி படத்துக்குப் படமாக்கினார்கள். அதையும் இப்போது ஞாபகமாக வைத்திருக்கிறேன். சிம்பு நடித்த "தொட்டி ஜெயா', "வல்லவன்'... இப்போது நடித்துவரும் "கெட்டவன்' படங்களுக்கும் நான் கடற்கரை லொகேஷன்கள் பிடித்துக் கொடுத்தேன். இப்படி நிறைய சொல்லலாம்.
லொகேஷன் பிடித்துக் கொடுப்பதோடு படங்களிலும் நடித்து வருவதாகச் சொல்கிறீர்கள்... என்னென்ன படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
"தர்மசீலன்', "அரிச்சந்திரா', "பவித்ரா', "நினைவிருக்கும் வரை', "நேசம்', "புதுமைப்பித்தன்', "கடவுள்', "மதுர', "திருப்பாச்சி', "சிவகாசி' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறேன். "கடவுள்' படத்தில் இறைவன் என்னிடம் தோன்றி என் கடையில் சாப்பிட்டுவிட்டு காசு தராமல் போவார். காசு கேட்கும்போது "அப்படீன்னா... அது நடக்குமா பறக்குமா'ன்னு கேட்பார். "இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க?' என்பேன். மிகவும் ரசிக்கப்பட்ட காட்சி அது.
அதேபோல் "புதுமைப்பித்த'னில் போலி அரசியல்வாதியாக நடித்த வடிவேலு எல்லா பொருள்களிலும் கலப்படம் மிகுந்துவிட்டதாக தீக்குளிப்பதாகச் சொல்வார். "அண்ணே கவலைப்படாதீங்க... கலப்படம் இல்லாத பெட்ரோல் வாங்கியாந்திருக்கேன். நல்லா தீக்குளிங்க' என்பேன். இப்படி மக்களுக்கு ஞாபகப்படுத்தும் காட்சிகள் சிலவற்றைச் சொல்லலாம்.
கடல் படப்பிடிப்பில் மிகவும் பயந்து போன சம்பவம் ஏதாவது?
"போக்கிரி' படத்துக்காகக் கடல் நடுவே படப்பிடிப்பு. முதல் நாள் லோகேஷன் பார்த்துவிட்டு வந்த போது கடல் அமைதியாகத்தான் இருந்தது. மறுநாள் படப்பிடிப்பின் போது அலைகள் படுஆவேசமாக இருந்தது. பாதுகாப்புக்காக மீனவர்களை வைத்திருந்தபோதும் இயற்கையின் சீற்றம் அச்சுறுத்தியது. எங்கள் கடல்மீது நாங்களே அச்சம் கொள்ளும் இத்தகைய அனுபவங்கள் சுனாமி திகிலுக்குப் பிறகுதான். காரணம், சுனாமியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டு நூலிழையில் உயிர் தப்பியவன் நான்.
தமிழ்மகன்
வியாழன், செப்டம்பர் 27, 2007

வேரோடும்...வேரடி மண்ணோடும்...
தமிழ்மகன்
ஒரு சமூகம் தன் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு நிற்பது எப்பேர்பட்ட பரிதாபம்? விவசாய நாடான இந்தியா, தம் பாரம்பர்ய விவசாய உத்திகளைக் கைவிட்டு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. இதன் பூர்வீக விதை நெல்கள் இப்போது இந்தியாவில் இல்லை. களைக் கொல்லி, பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் அனைத்துமே இந்திய விவசாயத்தில் இருந்ததில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ஏற்பட்ட இந்த மாற்றம் (தடுமாற்றம்?) இன்று பல நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.
இவை பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி வெளியாகி இருக்கிறது "வேர்களைத் தொலைத்துவிடாதீர்கள்' என்ற ஆவணப் படம். எஸ்.ஏ.இ. திரைப்படக் கல்லூரி மாணவர் கே.அமர்நாத் ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார். இன்று இந்தியா முழுதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இப் படம் குறித்து அவரிடம் பேசினோம்.
இப்படியொரு படம் தயாரிக்க வேண்டும் என்பதற்கான ஆதார எண்ணம் எப்படி ஏற்பட்டது?
நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆம்பூரை அடுத்த குடியாத்தம் அருகே என் கிராமம். தொழிற்சாலை ரசாயனக் கழுவுகளும் பயிர்களுக்கு நாமாகப் பயன்படுத்திய ரசாயனமும் பயிர்த் தொழிலைப் பாழாக்கிவிட்டதை என் கண் முன்னாலேயே கண்டேன். இப்போது நான் விவசாயியாக இல்லை. என் தந்தையார் காலத்திலேயே விவசாயம் எங்கள் பகுதியில் அதன் மகத்துவத்தை இழக்க ஆரம்பித்துவிட்டது. இந்தச் சுயபாதிப்பு அடிப்படைக் காரணம். இது குறித்து மேற்கொண்டு தகவல் தேடிய போது அது என் சுயபாதிப்பைக் கடந்த விஷயமாகி விட்டது.
இந்த ஆவணப் படத்தின் சிறப்புத் தன்மையாக நீங்கள் கருதுவது எதை?
விவசாயிகளுக்கும் படித்த மேதாவிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் இந்தியாவின் 80 சதவீத மக்களின் ஜீவாதாரமான பிரச்சினை பொருட்படுத்தப்படாமல் இருப்பதற்குக் காரணம். வலுவாக இதைப் பற்றிப் பேசக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காக வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன். செயற்கை உரங்கள் எதற்காகத் தயாரிக்கப்பட்டன. எதற்காகப் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவை இந்தியாவில் சந்தைபடுத்தப்பட்டன என்ற தகவல்களோடு அவற்றால் ஏற்படும் நோய்களையும் இந்த ஆவணப் படத்தில் மிகச் சிறப்பாகப் பட்டியல் இட்டிருக்கிறார்.
செயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டது ஏன்? குறிப்பாக என்ன நோய்கள் ஏற்பட்டன?
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வல்லரசுகளின் வெடி மருந்து தொழிற்சாலைகளுக்கு வேலை இல்லாமல் போனது. அமோனியாவையும் நைட்ரஜனையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவை யூரியாவாகவும் அமோனியம் சல்பேட்டாகவும் வேறு சில உரங்களாகவும் சந்தைப்படுத்தப்பட்டன. பயிர்கள், ஊக்க மருந்து செலுத்தப்பட்ட ஓட்டப்பந்தய வீரனைப் போல தன் தன்மையில் வீரியத்தைக் காட்டின.
விளைவு... அதை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டது. உணவுப் பொருட்களில் ஏற்பட்ட அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் அடர்த்தியினால் சர்க்கரை நோய்... அதற்காக நாம் சாப்பிடும் மருந்துகளால் மேலும் பக்க விளைவுகள்... சங்கிலித் தொடர் போல ரசாயனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டோம். ரசாயனங்கள் நமது பாரம்பர்ய பயிர்களை மட்டுமன்றி நம் மண்ணையும் பாழாக்கிவிட்டது.
இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளிடம் இந்த ஆவணப்படம் எப்படி சென்றடைந்தது?
அது யாரிடம் எப்படிச் செல்கிறது என்பது என் கையிலேயே இல்லை. திடீரென்று பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ விவசாயிகள் யாராவது பேசும்போதுதான் இது அங்கெல்லாம் சென்றிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறேன். நம்மாழ்வாரும் விவசாயிகளின் அழைப்பின் பேரில் நேரில் சென்று விளக்கம் தருகிறார். இந்த ஆவணப்படத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தயாரித்திருக்கிறேன்.
சில இடங்களில் அவர்களாகவே அவர்கள் மொழியில் பின்னணிக் குரல் கொடுத்தும் சப் டைட்டில் போட்டும் திரையிடுகிறார்தகள். மேற்கு வங்கத்தில் "சேவா' என்ற விவசாய அமைப்பும் கேரளத்தில் "தானல்' அமைப்பும் கர்நாடகத்தில் "நாகரிகா' அமைப்பும் ஆந்திரத்தில் "அந்த்ரா' என்ற அமைப்பும் தமிழகத்தில் "இயற்கை உழவு' என்ற அமைப்பும் இதை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் இருக்கின்றன.
இதனால் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
நிச்சயமாக. பல கிராமங்களில் இயற்கை உரங்கள் மூலமே பயிர்செய்வோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இதை முழுமையாக உணர முடியும்.
வேறு ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறீர்களா?
சுனாமி பாதிப்பை உணர்த்தும் ஆவணப் படத்தை ரவுண்ட் டேபிள் அமைப்பினருக்காக தயாரித்தேன். இண்டெர்நெட்டில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் இளைஞர்களின் நிலையைச் சொல்லும் படத்தையும் தயாரித்தேன். வனப் பாதுகாப்பை வலியுறுத்தும் படம் ஒன்றை உதகையில் இருக்கும் அயல்நாட்டு அமைப்பினருடன் சேர்ந்து தயாரித்து வருகிறேன். ஈஷா யோகா அமைப்பினர் நாடெங்கும் லட்சக் கணக்கில் மரம் நடுவதைப் பற்றியும் படமெடுக்கும் திட்டம் உண்டு. விளம்பரப் படம், சினிமா இவற்றிலும் தடம் பதிக்கும் ஆர்வமிருக்கிறது.
சனி, செப்டம்பர் 22, 2007
ஒரு நாள் தரிசனம்!
பெண்ணால் முடியும் என்பது எல்லாத் துறைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவதுபோலவே சினிமா துறையிலும் சமீபகாலமாகச் சாத்தியப்பட்டு வருகிறது. டி.பி.ராஜலட்சுமி முதல் "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியா வரை சினிமாவில் இயக்குநர்களாகத் தங்களைப் பதிவு செய்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
சமீபத்திய பதிவாக டைரக்ஷனுக்கான தங்க மெடல் வாங்கி திரையில் தடம் பதிக்க வருகிறார் யூ. அபிலாஷா. பாரம்பர்யமிக்க பிரசாத் ஸ்டூடியோவின் ஃபிலிம் அண்ட் டி.வி. அகாதமியில் படித்து வெளியேறும் முதல் பேட்ச் மாணவர்களுக்கான புராஜக்டில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர்.
இன்றைய மாணவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினியர், எம்.பி.ஏ., டாக்டர் போன்ற துறைகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கும்போது உங்களைச் சினிமா துறையை நோக்கி திருப்பிய அம்சம் எது?
சொல்லப் போனால் சினிமா ஆர்வம்தான் எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே சினிமா பார்ப்பவர்களாக இருக்கிறோம். மற்ற என்ஜினியர், டாக்டர் கனவுகள் எல்லாம் சிலருடைய அறிவுரையின் பேரில் ஏற்படுவதாக இருக்கிறது. கதை கேட்பதும் பாடுவதும் ஆடுவதும் குழந்தையிலேயே ஏற்படும் ஆர்வங்கள். பின்னாளில் அது மாறிப் போய்விடும். ஆனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் அணையாமல் வைத்திருந்தேன். அதுதான் என்னை இதைப் படிக்கவும் வைத்தது.
உங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்...?
நான் கோவையைச் சேர்ந்தவள். அப்பா, அம்மா, தம்பி எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். நான் முதலில் பி.காம் படித்தேன். டைரக்ஷனுக்கான இந்த இரண்டாண்டு படிப்பை முடித்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பிப் பார்த்த படங்கள் மூலமாக பெற்ற அனுபவம் இங்கே படிப்புக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
நிச்சயமாக. மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. இங்கே இரானிய படங்கள், ஆப்ரிக்க, பிரெஞ்சு படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது மனிதர்களின் ஆதாரமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிந்தது. நிறைய படங்கள் பார்ப்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற பேதம் இல்லாமல் எல்லாவற்றையுமே நான் பார்க்கிறேன்.
கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற வகைகளில் உங்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
தமிழில் படம் இயக்க வேண்டுமானால் அது கமர்ஷியலாகத்தான் இருந்தாக வேண்டும். கமர்ஷியல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உதாரணத்துக்கு என் படத்தில் பாடல் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சி இல்லாத படத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்முடைய கூத்து முறைகளிலேயே வசனக் காட்சிக்கு இணையாக பாடல்கள் இடம் பெற்றன. ஆகவே பாடல் காட்சி என்பது நம் கலாசாரத்தோடு வருகிற அம்சம். வித்தியாசமான முயற்சியாக பாடல் இல்லாத படங்களை ஒன்றிரண்டு தரலாம். பத்திய சாப்பாடாக ஏதோ இரண்டு நாள் உப்பில்லாமல் சாப்பிடுவது போலத்தான் அது.
இங்கே நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள்... அவற்றுக்கும் நம்முடைய படங்களுக்குமான பெரிய வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?
பெரும்பாலும் எங்களுக்குத் திரையிட்டவை எல்லாம் ரியலிஸ்டிக் படங்கள்தான். மிகவும் இயல்பாக நகரும் காட்சிகள், மிகவும் உண்மையான பிரச்சினைகள், வாழ்வின் அடிநாதமான கேள்வியை எடுத்துச் சொல்பவையாக அவை இருந்தன. தமிழ் சினிமாவில் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதிரடி மாற்றங்களும், ஹீரோயிஸத்தை வலியுறுத்துபவையாகவும் உள்ளன. ஆனால் இவை இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
உங்களுக்கு வகுப்பெடுக்கத் திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்?
நடிகர் ஓம்பூரி, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், லெனின், கேமிராமேன் கே.வி. ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.
நீங்கள் தேர்வு செய்த கதை எத்தகையது?
தனிமையில் வாடும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமிக்கு கிராமத்து எழிலைச் சுற்றிக் காட்டுகிறான்
ஒரு சிறுவன். அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நாடோடிக் கலைஞன். மறுநாளே அவர்கள் வேறு ஊருக்குப் போய் விடுகிறார்கள். அந்தச் சிறுமிக்கு அந்த ஒரு நாள் அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. படத்தின் தலைப்பாக "ஒரே ஒருநாள்' என்று வைத்தேன். எனக்கும் ஒரு தம்பி இருப்பதால் இந்த உணர்வுகளைச் சொல்வது சுலபமாக இருந்தது. ஆனால் சினிமா ஒரு டீம் ஒர்க். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். என்னுடைய வெற்றியையும் என் டீமில் இருக்கும் அனைவருக்குமானதாகத்தான் நான் கருதுகிறேன்.
தமிழ்மகன்
பெண்ணால் முடியும் என்பது எல்லாத் துறைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவதுபோலவே சினிமா துறையிலும் சமீபகாலமாகச் சாத்தியப்பட்டு வருகிறது. டி.பி.ராஜலட்சுமி முதல் "கண்ணாமூச்சி ஏனடா' ப்ரியா வரை சினிமாவில் இயக்குநர்களாகத் தங்களைப் பதிவு செய்தவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
சமீபத்திய பதிவாக டைரக்ஷனுக்கான தங்க மெடல் வாங்கி திரையில் தடம் பதிக்க வருகிறார் யூ. அபிலாஷா. பாரம்பர்யமிக்க பிரசாத் ஸ்டூடியோவின் ஃபிலிம் அண்ட் டி.வி. அகாதமியில் படித்து வெளியேறும் முதல் பேட்ச் மாணவர்களுக்கான புராஜக்டில் முதல் பரிசு வென்றிருக்கிறார் இவர்.
இன்றைய மாணவர்கள் சாஃப்ட்வேர் என்ஜினியர், எம்.பி.ஏ., டாக்டர் போன்ற துறைகளுக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கும்போது உங்களைச் சினிமா துறையை நோக்கி திருப்பிய அம்சம் எது?
சொல்லப் போனால் சினிமா ஆர்வம்தான் எல்லோருக்கும் இயல்பானதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே சினிமா பார்ப்பவர்களாக இருக்கிறோம். மற்ற என்ஜினியர், டாக்டர் கனவுகள் எல்லாம் சிலருடைய அறிவுரையின் பேரில் ஏற்படுவதாக இருக்கிறது. கதை கேட்பதும் பாடுவதும் ஆடுவதும் குழந்தையிலேயே ஏற்படும் ஆர்வங்கள். பின்னாளில் அது மாறிப் போய்விடும். ஆனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நான் அணையாமல் வைத்திருந்தேன். அதுதான் என்னை இதைப் படிக்கவும் வைத்தது.
உங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்...?
நான் கோவையைச் சேர்ந்தவள். அப்பா, அம்மா, தம்பி எல்லாம் அங்குதான் இருக்கிறார்கள். நான் முதலில் பி.காம் படித்தேன். டைரக்ஷனுக்கான இந்த இரண்டாண்டு படிப்பை முடித்திருக்கிறேன்.
நீங்கள் விரும்பிப் பார்த்த படங்கள் மூலமாக பெற்ற அனுபவம் இங்கே படிப்புக்குப் பயனுள்ளதாக இருந்ததா?
நிச்சயமாக. மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தன. இங்கே இரானிய படங்கள், ஆப்ரிக்க, பிரெஞ்சு படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது மனிதர்களின் ஆதாரமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எப்படிச் சொல்கிறார்கள் என்பதை ஒப்பிட முடிந்தது. நிறைய படங்கள் பார்ப்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற பேதம் இல்லாமல் எல்லாவற்றையுமே நான் பார்க்கிறேன்.
கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம் என்ற வகைகளில் உங்களின் ஆர்வம் எப்படி இருக்கிறது?
தமிழில் படம் இயக்க வேண்டுமானால் அது கமர்ஷியலாகத்தான் இருந்தாக வேண்டும். கமர்ஷியல் என்பதை எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்றால் உதாரணத்துக்கு என் படத்தில் பாடல் காட்சிகள் இருக்கும். பாடல் காட்சி இல்லாத படத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. நம்முடைய கூத்து முறைகளிலேயே வசனக் காட்சிக்கு இணையாக பாடல்கள் இடம் பெற்றன. ஆகவே பாடல் காட்சி என்பது நம் கலாசாரத்தோடு வருகிற அம்சம். வித்தியாசமான முயற்சியாக பாடல் இல்லாத படங்களை ஒன்றிரண்டு தரலாம். பத்திய சாப்பாடாக ஏதோ இரண்டு நாள் உப்பில்லாமல் சாப்பிடுவது போலத்தான் அது.
இங்கே நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள்... அவற்றுக்கும் நம்முடைய படங்களுக்குமான பெரிய வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?
பெரும்பாலும் எங்களுக்குத் திரையிட்டவை எல்லாம் ரியலிஸ்டிக் படங்கள்தான். மிகவும் இயல்பாக நகரும் காட்சிகள், மிகவும் உண்மையான பிரச்சினைகள், வாழ்வின் அடிநாதமான கேள்வியை எடுத்துச் சொல்பவையாக அவை இருந்தன. தமிழ் சினிமாவில் பெரும் பாலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், அதிரடி மாற்றங்களும், ஹீரோயிஸத்தை வலியுறுத்துபவையாகவும் உள்ளன. ஆனால் இவை இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் இயல்பாகவும் விறுவிறுப்பாகவும் கதை சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
உங்களுக்கு வகுப்பெடுக்கத் திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்?
நடிகர் ஓம்பூரி, எடிட்டர் சுரேஷ் அர்ஸ், லெனின், கேமிராமேன் கே.வி. ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.
நீங்கள் தேர்வு செய்த கதை எத்தகையது?
தனிமையில் வாடும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமிக்கு கிராமத்து எழிலைச் சுற்றிக் காட்டுகிறான்
ஒரு சிறுவன். அந்தச் சிறுவனின் தந்தை ஒரு நாடோடிக் கலைஞன். மறுநாளே அவர்கள் வேறு ஊருக்குப் போய் விடுகிறார்கள். அந்தச் சிறுமிக்கு அந்த ஒரு நாள் அனுபவம் மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. படத்தின் தலைப்பாக "ஒரே ஒருநாள்' என்று வைத்தேன். எனக்கும் ஒரு தம்பி இருப்பதால் இந்த உணர்வுகளைச் சொல்வது சுலபமாக இருந்தது. ஆனால் சினிமா ஒரு டீம் ஒர்க். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருந்தால்தான் வெற்றி சாத்தியம். என்னுடைய வெற்றியையும் என் டீமில் இருக்கும் அனைவருக்குமானதாகத்தான் நான் கருதுகிறேன்.
தமிழ்மகன்
செவ்வாய், ஆகஸ்ட் 07, 2007
ஜுலை - ஆகஸ்ட் 2007
சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்
தமிழ்மகன்
ஐசக் அசிமோவ், காரல் சேகன் போன்றவர் விஞ்ஞான புனைகதைகளின் மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். ராபின் குக், மருத்துவத்துறையை மட்டும் களமாகக் கொண்டு ஜனரஞ்சக சயின்ஸ் பிக்சன் எழுதியவர்களில் முக்கியமானவர்.ஆனால் சோவியத் விஞ்ஞானப்புனைகதைகள், எழுத்துக்கள் மற்ற எல்லா சயின்ஸ் பிக்சன் கதைகளை விடவும் கருத்தாக்கத்தில் வேறுபட்டு விளங்குகின்றன. எதிர்கால மனித சமூகம் குறித்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிக அக்கறை இக்கதைகளினூடே மெல்லிய இழையாகச் சொல்லப்பட்டிருப்பது அவர்களின் தனித்தன்மையாக இருக்கிறது.
டால்ஸ்டாய், ஆன்டன்செகாவ், தஸ்தயேவஸ்கி, இவான் தூர்கனேவ், கார்க்கி போன்ற மனித உறவுகள் போற்றும் மகத்தான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது சோவியத் இலக்கியம். அது இந்த விஞ்ஞானப் புனைகதைகளிலும் வெளிப்பட்டிருப்பதுதான் நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்துகிறது.ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்கள் சோவியத்தில் எழுந்த மகத்தான மாற்றத்தை எதிர்மறை நோக்கோடு கதைகள் புனைவதற்கு (1984) எடுத்துக்கொண்டதில் இருக்கிற எதிர்பிரவா நெடியும் கூட இந்தக் கதைகளில் வீசவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
குறிப்பாக, ‘மர்மப் பகைவர்கள்’. இக்கதையை அரியாத்நா க்ரோமவா எழுதியிருக்கிறார். 1916ல் பிறந்தவர். 1967 வரை விஞ்ஞானக் கதைகள் எழுதி மக்களின் வரவேற்பைப் பெற்றவர்.வேறொரு நட்சத்திர மண்டலத்தில் புதிய கிரகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் ஆறு பேரைச் சுற்றிச் சுழலும் கதை. வீக்தர், காஸிமீர், விளாதில்லாவ், கரேல், தலானவ், யூங்... அந்த ஆறுபேர்.கரேல் ஒரு வித்தியாசமான நோயால் அவதியுறுகிறான். ‘நான், நானாக இல்லை... என்னுள் வேறு யாரோ இருந்து செயல்படுத்துகிறார்கள்’ என்கிறான். அந்த நோயின் கடுமை அவனை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.அது நோய்தானா மனவலிமைக் குன்றியதால் தற்கொலை செய்து கொண்டானா என்று யோசிப்பதற்குள் பூமிக்குத் தரையிரங்குவோமா என்றே எல்லாருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது.கதை சூடுபிடிக்கிறது. விண்வெளித் தோழர்கள் பாதிக்கப்பட்டது ‘கிளேகு’கள் காரணமாக, அந்தக் கிளேகுகளை உருவாக்கி அதை உருவாக்கிவிட்டவர்கள், அந்தக் கிரகத்தில் உள்ள ஒருசாரார்தான் என்பதும் தெரியவருகிறது. கடைசியில் அவர்களே அந்த நோய்க்கு ஆளாகி நிலத்துக்குக் கீழே பதுங்குக் குழியில் ஒளிந்து கிடக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. கொஞ்சம் தம் ‘ஆந்தராக்ஸ்’ பயங்கரத்தைக் கற்பனை செய்து கொண்டால் போதும் பயங்கரம் புரிந்துவிடும்.ஏழு ஆண்டுகளாகப் பதுங்குக் குழியில் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள், எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூமியாளர்களிடம் இறைஞ்சுகிறார்கள். பூமியிலிருந்து வந்தவர்களோ அந்த நோய்க்கு ஆளாகித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் காப்பாற்றிக் கொண்டு இரக்கமற்ற முறையில் ‘கிளேகு’களைப் பிரயோகித்துவிட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையோடு அங்கிருந்து அவர்கள் பூமிக்குப் புறப்படுகிறார்கள்.ஒரு குழு இன்னொரு குழுவின் மீது நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல் அதனால் அவர்களே மாட்டிக் கொள்ளும் பயங்கரம் போன்றவை விறுவிறுப்பும், அறிவுறுத்தலும் கலந்து சுவாரஸ்யமாகக் கதையை நடத்துகிறது. வேற்று கிரக மொழிகளைப் புரிந்துகொள்ள உதவும் ‘லிங்’ மொழி பெயர்ப்புக் கருவி, எனர்ஜிங் மாத்திரையின் செயல்பாடுகள் அறிவியல் எதிர்காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.‘பாறைச் சூறாவளித் துறைமுகம்’
இதே போன்ற நிகழ்வை ஒத்த இன்னொரு புனைகதை, கேன்ரிஹ் அல்த்தோவ் எழுதியது.வேற்று கிரகத்துக்குச் சென்ற ஸோரஹ் அந்தக் கிரகத்தை படம் பிடித்து அனுப்பியதோடு ஏராளமான செய்திகளையும் அனுப்புகிறான். அங்கே பாறைக்குழம்புகள் சூறாவளியாகத் தாவிச் சுழல்கின்றன.ஒரே இடத்தில் மட்டும் ஒரு வட்டம் இந்தப் பாறைக்குழம்புகள் இன்றி இருக்கிறது. கொல்லப்போனால், பாறைக்குழம்புகள் அந்த இடம் வரை வந்துவிட்டுத் திரும்பிவிடுகின்றன. ஸோரஹ் அந்த வட்டத்தால் கவரப் பெற்று விண்களத்தை அங்கே இறக்குகிறான். அதன்பிறகு அவனிடத்தில் இருந்து ஒரு தகவலும் இல்லை.பூமியில் விண்வெளித் தகவல்களை இனம் காணும் ஆராய்ச்சியாளரின் கண்ணோட்டத்தில்தான் கதையே தொடங்குகிறது. அந்த விதத்தில் இது சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கிறது.என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதை தகவல் குறியீடுகளை வைத்து கணிக்க வேண்டிய கடமை. என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைச் சுவாரஸ்யமான விஞ்ஞான தகவல்களோடு முன்வைக்கிறார் ஆசிரியர். ஸோரஹ் இடம் இருந்து மீண்டும் தகவல்கள் வரும் என்று முடிகிறது கதை.மிஹயீல் விளாதிமீரவ் -வின் ‘கண்ணாடிப் பிரதிபலிப்புத் தீவு? நம் பூமியிலேயே இன்னும் வாழ்ந்தறியாத தீவைப் பற்றியது.ஒரு பத்திரிகை நிருபருக்கு இன்னும் மனிதன் கால்பதிக்காத தீவில் ஒரு மாதம் தங்கியிருந்து அந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று ‘அஸைன்மெண்ட்’ கொடுக்கிறார் பத்திரிகை ஆசிரியர்.ரப்பர் போன்ற மீன்களை உண்டு, பற்கள் உள்ள பறவைகள், கடிக்காத கொசுக்கள் எல்லாமே நிருபர் ஜானி மெல்வினை அச்சுறுத்துகின்றன. இரண்டு மூன்று நாட்களிலேயே உடல் ஜீவனற்றுப் போகிறது. விளக்கற்ற கும்மிருட்டும், யாருமற்றத் தனிமையும் வாட்டத் தொடங்குகிறது.வாழ்க்கை வெறுத்து, ஜீவனற்று நடைபோட்ட நேரத்தில் தீவின் மறுமுனையில் கூடாரம் ஒன்றுதென்படுவதைக் காண்கிறான். அதில் ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் முடிவு கட்டத்தில் இறந்துகிடக்கிறார். உலகப் போர் மூண்டுவிட்டால் அவரை அழைத்துச் செல்வதற்கான கப்பல் வராமல் போனது தெரியவருகிறது. அந்தத் தீவில் உள்ள பாக்டீரீயாக்களும் வித்தியாசமானவை. இறந்த உடலை சிதைக்காதவை. அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை நிருபரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. பெரிய ராயல்டி தொகை கிடைக்கிறது.அந்தத் தீவில் உள்ள உயிரினங்களின் வித்தியாசமான தோற்றத்துக்கும் சுவைக்கும் காரணம் ஜீன்களின் கண்ணாடிப் பிரதிபலிப்புத் தன்மைதான் என்று முடிக்கிறார். எல்லா உயிரினங்களும் அதனுடைய இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதற்கான சுவாரஸ்யம் ஒரு விஞ்ஞான விளக்கத்தோடு முடிவடையும்போது அது முழுமையான விஞ்ஞான புனைகதையாக மாறுகிறது.
இது தவிர இலியாவர்ஷாவ்ஸ்கிய் எழுதிய வேற்று உலகினர், ‘இருவர் போர்’, அனத்தோலிய் த்னெப்ரோவ் எழுதிய நண்டுகள் தீவில் திரிகின்றன. பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய் (இருவர்) எழுதிய செப்பமாக அமைந்த கிரகம் மிகயீல் யேம்த்ஸெவ், யெரெமேய், பர்னோவ் (இருவர்) எழுதிய ‘வெண்பனிப் பந்து’ ஆகிய புனைகதைகளும் இதில் உள்ளன.சுவாரஸ்யமான எதிர்கால விஞ்ஞானக் கணிப்புகளும் சமூக நோக்கும், விறுவிறுப்பான மொழி நடையும் இந்தக் கதைகளின் ஆதாரபலமாக இருக்கின்றன. அதற்குக் காரணம் மொழி பெயர்ப்பின் பலம்.மொழி பெயர்த்திருப்பவர் சோவியத் இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்த மண்ணின் சுவையோடு தமிழ் மண்ணுக்குத் தந்த பூ. சோமசுந்தரம். ருஷ்ய மொழிநடையை மெருகு குலையாமல் தமிழுக்குத் தந்தவர்களில் முக்கியமானவர். ருஷ்ய இலக்கியங்களை அனுபவித்து ரசிக்கும் கவிஞர் யூமா. வாசுகி இந்த நூல் பதிப்புக்கு ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்.ஒரு நல்ல நூல் நல்லவிதமாக நாலுபேரிடம் சேருவதற்கு இவர்களின் பங்களிப்பும் முக்கியமாகிறது.பாறைச் சூறாவளித் துறைமுகம்கேன்ரிஹ் அல்த்தோவ்மிஹயீல் விளாதீமிரவ்அரியாத்நா க்ரோமவாஇலியா வர்ஷாவ்ஸ்க்கிய்அனத்தோலிய் த்னெப்ரோவ்பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய்மிஹயீல் யேம்த்ஸெவ், யெரெமேய் பர்னோவ்ஆகிய சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்.மொழிபெயர்ப்பு : பூ. சோமசுந்தரம்,வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 125/-
சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்
தமிழ்மகன்
ஐசக் அசிமோவ், காரல் சேகன் போன்றவர் விஞ்ஞான புனைகதைகளின் மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள். ராபின் குக், மருத்துவத்துறையை மட்டும் களமாகக் கொண்டு ஜனரஞ்சக சயின்ஸ் பிக்சன் எழுதியவர்களில் முக்கியமானவர்.ஆனால் சோவியத் விஞ்ஞானப்புனைகதைகள், எழுத்துக்கள் மற்ற எல்லா சயின்ஸ் பிக்சன் கதைகளை விடவும் கருத்தாக்கத்தில் வேறுபட்டு விளங்குகின்றன. எதிர்கால மனித சமூகம் குறித்தும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிக அக்கறை இக்கதைகளினூடே மெல்லிய இழையாகச் சொல்லப்பட்டிருப்பது அவர்களின் தனித்தன்மையாக இருக்கிறது.
டால்ஸ்டாய், ஆன்டன்செகாவ், தஸ்தயேவஸ்கி, இவான் தூர்கனேவ், கார்க்கி போன்ற மனித உறவுகள் போற்றும் மகத்தான இலக்கியப் பாரம்பரியம் கொண்டது சோவியத் இலக்கியம். அது இந்த விஞ்ஞானப் புனைகதைகளிலும் வெளிப்பட்டிருப்பதுதான் நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்துகிறது.ஜார்ஜ் ஆர்வெல் போன்றவர்கள் சோவியத்தில் எழுந்த மகத்தான மாற்றத்தை எதிர்மறை நோக்கோடு கதைகள் புனைவதற்கு (1984) எடுத்துக்கொண்டதில் இருக்கிற எதிர்பிரவா நெடியும் கூட இந்தக் கதைகளில் வீசவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
குறிப்பாக, ‘மர்மப் பகைவர்கள்’. இக்கதையை அரியாத்நா க்ரோமவா எழுதியிருக்கிறார். 1916ல் பிறந்தவர். 1967 வரை விஞ்ஞானக் கதைகள் எழுதி மக்களின் வரவேற்பைப் பெற்றவர்.வேறொரு நட்சத்திர மண்டலத்தில் புதிய கிரகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும் ஆறு பேரைச் சுற்றிச் சுழலும் கதை. வீக்தர், காஸிமீர், விளாதில்லாவ், கரேல், தலானவ், யூங்... அந்த ஆறுபேர்.கரேல் ஒரு வித்தியாசமான நோயால் அவதியுறுகிறான். ‘நான், நானாக இல்லை... என்னுள் வேறு யாரோ இருந்து செயல்படுத்துகிறார்கள்’ என்கிறான். அந்த நோயின் கடுமை அவனை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.அது நோய்தானா மனவலிமைக் குன்றியதால் தற்கொலை செய்து கொண்டானா என்று யோசிப்பதற்குள் பூமிக்குத் தரையிரங்குவோமா என்றே எல்லாருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது.கதை சூடுபிடிக்கிறது. விண்வெளித் தோழர்கள் பாதிக்கப்பட்டது ‘கிளேகு’கள் காரணமாக, அந்தக் கிளேகுகளை உருவாக்கி அதை உருவாக்கிவிட்டவர்கள், அந்தக் கிரகத்தில் உள்ள ஒருசாரார்தான் என்பதும் தெரியவருகிறது. கடைசியில் அவர்களே அந்த நோய்க்கு ஆளாகி நிலத்துக்குக் கீழே பதுங்குக் குழியில் ஒளிந்து கிடக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. கொஞ்சம் தம் ‘ஆந்தராக்ஸ்’ பயங்கரத்தைக் கற்பனை செய்து கொண்டால் போதும் பயங்கரம் புரிந்துவிடும்.ஏழு ஆண்டுகளாகப் பதுங்குக் குழியில் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள், எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள் என்று பூமியாளர்களிடம் இறைஞ்சுகிறார்கள். பூமியிலிருந்து வந்தவர்களோ அந்த நோய்க்கு ஆளாகித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் காப்பாற்றிக் கொண்டு இரக்கமற்ற முறையில் ‘கிளேகு’களைப் பிரயோகித்துவிட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமையோடு அங்கிருந்து அவர்கள் பூமிக்குப் புறப்படுகிறார்கள்.ஒரு குழு இன்னொரு குழுவின் மீது நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல் அதனால் அவர்களே மாட்டிக் கொள்ளும் பயங்கரம் போன்றவை விறுவிறுப்பும், அறிவுறுத்தலும் கலந்து சுவாரஸ்யமாகக் கதையை நடத்துகிறது. வேற்று கிரக மொழிகளைப் புரிந்துகொள்ள உதவும் ‘லிங்’ மொழி பெயர்ப்புக் கருவி, எனர்ஜிங் மாத்திரையின் செயல்பாடுகள் அறிவியல் எதிர்காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.‘பாறைச் சூறாவளித் துறைமுகம்’
இதே போன்ற நிகழ்வை ஒத்த இன்னொரு புனைகதை, கேன்ரிஹ் அல்த்தோவ் எழுதியது.வேற்று கிரகத்துக்குச் சென்ற ஸோரஹ் அந்தக் கிரகத்தை படம் பிடித்து அனுப்பியதோடு ஏராளமான செய்திகளையும் அனுப்புகிறான். அங்கே பாறைக்குழம்புகள் சூறாவளியாகத் தாவிச் சுழல்கின்றன.ஒரே இடத்தில் மட்டும் ஒரு வட்டம் இந்தப் பாறைக்குழம்புகள் இன்றி இருக்கிறது. கொல்லப்போனால், பாறைக்குழம்புகள் அந்த இடம் வரை வந்துவிட்டுத் திரும்பிவிடுகின்றன. ஸோரஹ் அந்த வட்டத்தால் கவரப் பெற்று விண்களத்தை அங்கே இறக்குகிறான். அதன்பிறகு அவனிடத்தில் இருந்து ஒரு தகவலும் இல்லை.பூமியில் விண்வெளித் தகவல்களை இனம் காணும் ஆராய்ச்சியாளரின் கண்ணோட்டத்தில்தான் கதையே தொடங்குகிறது. அந்த விதத்தில் இது சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கிறது.என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதை தகவல் குறியீடுகளை வைத்து கணிக்க வேண்டிய கடமை. என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதைச் சுவாரஸ்யமான விஞ்ஞான தகவல்களோடு முன்வைக்கிறார் ஆசிரியர். ஸோரஹ் இடம் இருந்து மீண்டும் தகவல்கள் வரும் என்று முடிகிறது கதை.மிஹயீல் விளாதிமீரவ் -வின் ‘கண்ணாடிப் பிரதிபலிப்புத் தீவு? நம் பூமியிலேயே இன்னும் வாழ்ந்தறியாத தீவைப் பற்றியது.ஒரு பத்திரிகை நிருபருக்கு இன்னும் மனிதன் கால்பதிக்காத தீவில் ஒரு மாதம் தங்கியிருந்து அந்த அனுபவத்தை எழுத வேண்டும் என்று ‘அஸைன்மெண்ட்’ கொடுக்கிறார் பத்திரிகை ஆசிரியர்.ரப்பர் போன்ற மீன்களை உண்டு, பற்கள் உள்ள பறவைகள், கடிக்காத கொசுக்கள் எல்லாமே நிருபர் ஜானி மெல்வினை அச்சுறுத்துகின்றன. இரண்டு மூன்று நாட்களிலேயே உடல் ஜீவனற்றுப் போகிறது. விளக்கற்ற கும்மிருட்டும், யாருமற்றத் தனிமையும் வாட்டத் தொடங்குகிறது.வாழ்க்கை வெறுத்து, ஜீவனற்று நடைபோட்ட நேரத்தில் தீவின் மறுமுனையில் கூடாரம் ஒன்றுதென்படுவதைக் காண்கிறான். அதில் ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் முடிவு கட்டத்தில் இறந்துகிடக்கிறார். உலகப் போர் மூண்டுவிட்டால் அவரை அழைத்துச் செல்வதற்கான கப்பல் வராமல் போனது தெரியவருகிறது. அந்தத் தீவில் உள்ள பாக்டீரீயாக்களும் வித்தியாசமானவை. இறந்த உடலை சிதைக்காதவை. அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை நிருபரின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. பெரிய ராயல்டி தொகை கிடைக்கிறது.அந்தத் தீவில் உள்ள உயிரினங்களின் வித்தியாசமான தோற்றத்துக்கும் சுவைக்கும் காரணம் ஜீன்களின் கண்ணாடிப் பிரதிபலிப்புத் தன்மைதான் என்று முடிக்கிறார். எல்லா உயிரினங்களும் அதனுடைய இயல்பான தன்மையிலிருந்து மாறுபட்டிருப்பதற்கான சுவாரஸ்யம் ஒரு விஞ்ஞான விளக்கத்தோடு முடிவடையும்போது அது முழுமையான விஞ்ஞான புனைகதையாக மாறுகிறது.
இது தவிர இலியாவர்ஷாவ்ஸ்கிய் எழுதிய வேற்று உலகினர், ‘இருவர் போர்’, அனத்தோலிய் த்னெப்ரோவ் எழுதிய நண்டுகள் தீவில் திரிகின்றன. பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய் (இருவர்) எழுதிய செப்பமாக அமைந்த கிரகம் மிகயீல் யேம்த்ஸெவ், யெரெமேய், பர்னோவ் (இருவர்) எழுதிய ‘வெண்பனிப் பந்து’ ஆகிய புனைகதைகளும் இதில் உள்ளன.சுவாரஸ்யமான எதிர்கால விஞ்ஞானக் கணிப்புகளும் சமூக நோக்கும், விறுவிறுப்பான மொழி நடையும் இந்தக் கதைகளின் ஆதாரபலமாக இருக்கின்றன. அதற்குக் காரணம் மொழி பெயர்ப்பின் பலம்.மொழி பெயர்த்திருப்பவர் சோவியத் இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அந்த மண்ணின் சுவையோடு தமிழ் மண்ணுக்குத் தந்த பூ. சோமசுந்தரம். ருஷ்ய மொழிநடையை மெருகு குலையாமல் தமிழுக்குத் தந்தவர்களில் முக்கியமானவர். ருஷ்ய இலக்கியங்களை அனுபவித்து ரசிக்கும் கவிஞர் யூமா. வாசுகி இந்த நூல் பதிப்புக்கு ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார்.ஒரு நல்ல நூல் நல்லவிதமாக நாலுபேரிடம் சேருவதற்கு இவர்களின் பங்களிப்பும் முக்கியமாகிறது.பாறைச் சூறாவளித் துறைமுகம்கேன்ரிஹ் அல்த்தோவ்மிஹயீல் விளாதீமிரவ்அரியாத்நா க்ரோமவாஇலியா வர்ஷாவ்ஸ்க்கிய்அனத்தோலிய் த்னெப்ரோவ்பொரீஸ், அர்க்காதிய் ஸ்த்ருகாத்ஸ்கிய்மிஹயீல் யேம்த்ஸெவ், யெரெமேய் பர்னோவ்ஆகிய சோவியத் எழுத்தாளர்களின் அறிவியல் புனைகதைகள்.மொழிபெயர்ப்பு : பூ. சோமசுந்தரம்,வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,அம்பத்தூர், சென்னை - 98, விலை : ரூ. 125/-
வியாழன், ஏப்ரல் 12, 2007
செவ்வாய், நவம்பர் 07, 2006
செவ்வாய், செப்டம்பர் 26, 2006
வியாழன், செப்டம்பர் 21, 2006
பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!
சென்ற இதழ் தொடர்ச்சி
பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!
"சிந்தனையாளர்' வே.ஆனைமுத்து
"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும் பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும் பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்களே?
பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.
அதிபர் ஸ்டாலினை சந்திப்பதற்காக பெரியார் ரஷ்யா சென்றிருந்தார். அந்த நாளில் அவர் எழுதிய டைரி குறிப்புகள் உங்களிடம் இருப்பதாக ஒரு தகவல் அறிந்தோம்... அது பற்றி?
பெரியார் ரஷ்யாவுக்குப் புறப்பட்டது 1931-ம் ஆண்டு நவம்பர் மாதம். 1932-ம் அண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை ரஷ்யாவில் தங்கியிருந்தார். 90 நாட்கள். அதில் எனக்குக் கிடைத்தது முப்பது நாள் டைரி மட்டுமே. அதில் எந்தெந்த ஊருக்குப் போனேன். யார், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று எழுதியிருக்கிறார். இவர் அங்கு சென்றிருந்த நாளில் மாதா கோவிலை புல்டோசர் வைத்த இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கோவிலையும் இடித்துத் தள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அப்புறம் இடிப்பதை நிறுத்திவிட்டார்களாம். அதை குடோனாகவோ, லைப்ரரியாவோ, பள்ளிக்கூடமாகவோ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதையெல்லாம் பெரியார் எங்களிடம் சொன்னார். ஆனால் கோவில்களுக்கு சொத்து இருக்கக் கூடாது என்று பறிமுதல் செய்து விட்டார்கள்.சில கோவில்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அங்கு நரைத்த தலையர்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்போது மாதா கோவிலை இடித்தவர்கள், பிறகு லெனின் சிலையையும், ஸ்டாலின் சிலையையும் இடித்தார்களே...
அதன் பிறகு வந்த தலைவர்கள் கொள்கையைத்தக்க வைப்பதைவிட, பதவிகளை தக்கவைப்பதை முதன்மையாகக் கொண்டார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். அதையும் ரஷ்யாவில் அனுமதித்தார்கள். மதம் உள்ளே நுழைந்ததும் அது சோவியத் அரசாங்கத்தையே மாய்க்க காரணமாகிவிட்டது. இப்போது அங்கிருந்து வருகிறவர்கள் நாங்கள் அங்கே மிகவும் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். விபசாரம் நடக்கிறது, கொலை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது...
பெரியாருடன் பழகியதில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்லுவீர்கள்?
பெரியார் நூல்களை தொகுக்கும் பணியில் இருந்தபோது, "இரங்கல் செய்திகள்' என்று ஒரு பகுதியைத் தொகுத்தேன். இரங்கல் செய்திகள் என்றால் தலைவர்கள் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கைகள். காந்தி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கையைப் படித்துக் கொண்டு வந்தபோது, திடீர் என்று, ""நாகம்மாள் செய்தி இதில் இல்லையா?''னு கேட்டார். "கவனக் குறைவாக விட்டுவிட்டோமே' என்று வருத்தப்பட்டு, அன்று இரவே அதை தேடி எடுத்து எழுதிக் கொண்டு வந்து படித்துக் காட்டினேன். நான் படித்துக்காட்டியது 73 ஜூலை மாதம், இவர் நாகம்மைக்கு இரங்கல் கடிதம் எழுதியது 33 மே மாதம். 40 வருஷ இடைவெளி. என்ன ஆச்சர்யம்!நான் முதல் பாராவைப் படிக்கிறேன். இவர் இரண்டாவது பாராவை அப்படியே சொல்கிறார். "'நாகம்மையார் மறைவு எனக்கு துணை போயிற்றென்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற் றென்று சொல்வேனா? அதரவு போயிற்றென்று சொல்வேனா? அடிமை போயிற்றென்று சொல்வேனா? எல்லாம் போயிற்றென்று சொல்வேனா?'' என்று சொல்லிக் கொண்டே அழுதார். எனக்கும் அழுகை வந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.
"பெரியார்' என்ற பெயரிலேயே திரைப்படம் தயாராகிறதே...?
அந்தப் படம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஞான ராஜசேகரன் என்னுடன் கலந்து பேசினார். அவர் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கேட்டார். 2005ல் திருவனந்தபுரத்தில் அவர் பதவியில் இருந்தார். அப்போது நான் அங்கு வைக்கம் போராட்டம்பற்றி ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போதும் சந்தித்தார்.
-தமிழ்மகன்
படங்கள்: பாலா
பெரியாரின் ரஷ்யப் பயண டைரிக் குறிப்பு!
"சிந்தனையாளர்' வே.ஆனைமுத்து
"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும் பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும் பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற ஆரம்பித்திருக்கிறார்களே?
பெரியாருடைய தத்துவம் என்பது தமிழர்களை - திராவிடர்களை எல்லா ஆழிவுகளிலிருந்தும் மீட்க வேண்டும் என்பதுதான். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இல்லை, அணுக்குப் பெண் அடிமையில்லை, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை வேண்டும், படிப்பு - வேலை வாய்ப்பும் - பதவியும் எல்லா வகுப்பினருக்கும் விகிதாசாரப்படி கிடைக்க வேண்டும்... போன்றவைதான் பெரியாரின் கொள்கைகள். இது எதுவுமே இன்னும் சீராகாத நிலையில் அவருடைய தத்துவங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது, இத்தகைய கொள்கைகளால் வீழ்ந்தோம் என்பது பொருத்தமற்றது. பெரியாருடைய கொள்கைகள் என்னவென்று தெரியாதவர்கள்தான் அவருடைய கொள்கைகள் தேவையில்லை என்று சொல்கிறார்கள். ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.1970-ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர். சந்திரசேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாடு சம்பந்தமான அராய்ச்சியாளர் அவர். வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர். அவர், பெரியாரைச் சந்தித்து, ""மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?'' என்றார்.""பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள், சரியாகிவிடும்'' என்றார். கேட்டவருக்கும் புரியவில்லை.""உன் மனைவிக்கும் வேலை, உன் மகளுக்கும் வேலை. அவர்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிட மாட்டார்கள். ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்தும் போய்விடும்'' என்றார் பெரியார். ஆச்சர்யப்பட்டுப் போனார் அந்த அறிஞர்.""உலகத்தில் வேறு யாரும் சொல்லாத ஈங்களின் ஒரிஜினல் ஆலோசனை ஆது'' என்று கூறினார். அவரைப் பிற்போக்குவாதி என்பதும், அவருடைய கருத்துகளினால்தான் வீழ்ச்சியடைந்தோம் என்பதும் நேர்மையான குற்றச்சாட்டாகத் தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நாங்களும் ஒரு காரணம். பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் என்ன என்பதை - அவருடைய வரலாற்றை - முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. சமுதாயம், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாகக் கொண்டு வரவில்லை. நான் கொண்டுவந்த "பெரியார் சிந்தனைகள்' தொகுதி என்பது ஒரு பகுதி... கொஞ்சம்தான். முழுமையாக வெளிவரவில்லை. இப்போது அவருடைய கருத்துக்களை விமர்சனம் பண்ணுகிறார்கள். அவருடைய எதோ ஒரு வாக்கியத்தைப் பிடித்துக்கொண்டு விமர்சனம் செய்கிறார்கள். "பறைச்சி எல்லாம் ஜாக்கெட் போட்டுகிட்டாப்பா' அப்படீனு பெரியார் பேசியதாக ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு பேசுகிறார்கள். நடந்தது என்ன தெரியுமா? அப்போது காமராஜரை ஆதரித்துப் பெரியார் பேசுகிறார். "காமராஜர் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள். ரவிக்கை போடக்கூடாத நிலையில் ருந்த அந்த சமுதாயப் பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இது காமராஜர் ஆட்சியின் சாதனை' என்றுதான் பெரியார் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் இருந்ததால் சொல்கிறேன்.1950 வரை நாடார்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் வீட்டில் யாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். 1920ம் செங்கல்பட்டு மாநாட்டில் நாடார்களை அழைத்து சோறாக்கச் சொன்னவர் பெரியார். அவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவராக இருக்க முடியும். ஆகவே, பெரியார் சொன்னதின் மையக்கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் பேசும் விமர்சனங்கள் பிழையானவை.
அதிபர் ஸ்டாலினை சந்திப்பதற்காக பெரியார் ரஷ்யா சென்றிருந்தார். அந்த நாளில் அவர் எழுதிய டைரி குறிப்புகள் உங்களிடம் இருப்பதாக ஒரு தகவல் அறிந்தோம்... அது பற்றி?
பெரியார் ரஷ்யாவுக்குப் புறப்பட்டது 1931-ம் ஆண்டு நவம்பர் மாதம். 1932-ம் அண்டு பிப்ரவரியில் இருந்து மே மாதம் வரை ரஷ்யாவில் தங்கியிருந்தார். 90 நாட்கள். அதில் எனக்குக் கிடைத்தது முப்பது நாள் டைரி மட்டுமே. அதில் எந்தெந்த ஊருக்குப் போனேன். யார், யாரையெல்லாம் சந்தித்தேன் என்று எழுதியிருக்கிறார். இவர் அங்கு சென்றிருந்த நாளில் மாதா கோவிலை புல்டோசர் வைத்த இடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு கோவிலையும் இடித்துத் தள்ள வேண்டாம் என்று முடிவெடுத்து அப்புறம் இடிப்பதை நிறுத்திவிட்டார்களாம். அதை குடோனாகவோ, லைப்ரரியாவோ, பள்ளிக்கூடமாகவோ வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்களாம். அதையெல்லாம் பெரியார் எங்களிடம் சொன்னார். ஆனால் கோவில்களுக்கு சொத்து இருக்கக் கூடாது என்று பறிமுதல் செய்து விட்டார்கள்.சில கோவில்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அங்கு நரைத்த தலையர்கள் மட்டும் போய்க்கொண்டிருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்போது மாதா கோவிலை இடித்தவர்கள், பிறகு லெனின் சிலையையும், ஸ்டாலின் சிலையையும் இடித்தார்களே...
அதன் பிறகு வந்த தலைவர்கள் கொள்கையைத்தக்க வைப்பதைவிட, பதவிகளை தக்கவைப்பதை முதன்மையாகக் கொண்டார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் மதப்பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். அதையும் ரஷ்யாவில் அனுமதித்தார்கள். மதம் உள்ளே நுழைந்ததும் அது சோவியத் அரசாங்கத்தையே மாய்க்க காரணமாகிவிட்டது. இப்போது அங்கிருந்து வருகிறவர்கள் நாங்கள் அங்கே மிகவும் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள். விபசாரம் நடக்கிறது, கொலை நடக்கிறது, சூதாட்டம் நடக்கிறது...
பெரியாருடன் பழகியதில் மறக்க முடியாத சம்பவம் என்று எதைச் சொல்லுவீர்கள்?
பெரியார் நூல்களை தொகுக்கும் பணியில் இருந்தபோது, "இரங்கல் செய்திகள்' என்று ஒரு பகுதியைத் தொகுத்தேன். இரங்கல் செய்திகள் என்றால் தலைவர்கள் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கைகள். காந்தி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் மறைவுக்கு அவர் விடுத்த அறிக்கையைப் படித்துக் கொண்டு வந்தபோது, திடீர் என்று, ""நாகம்மாள் செய்தி இதில் இல்லையா?''னு கேட்டார். "கவனக் குறைவாக விட்டுவிட்டோமே' என்று வருத்தப்பட்டு, அன்று இரவே அதை தேடி எடுத்து எழுதிக் கொண்டு வந்து படித்துக் காட்டினேன். நான் படித்துக்காட்டியது 73 ஜூலை மாதம், இவர் நாகம்மைக்கு இரங்கல் கடிதம் எழுதியது 33 மே மாதம். 40 வருஷ இடைவெளி. என்ன ஆச்சர்யம்!நான் முதல் பாராவைப் படிக்கிறேன். இவர் இரண்டாவது பாராவை அப்படியே சொல்கிறார். "'நாகம்மையார் மறைவு எனக்கு துணை போயிற்றென்று சொல்வேனா? ஓர் அமைச்சு போயிற் றென்று சொல்வேனா? அதரவு போயிற்றென்று சொல்வேனா? அடிமை போயிற்றென்று சொல்வேனா? எல்லாம் போயிற்றென்று சொல்வேனா?'' என்று சொல்லிக் கொண்டே அழுதார். எனக்கும் அழுகை வந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.
"பெரியார்' என்ற பெயரிலேயே திரைப்படம் தயாராகிறதே...?
அந்தப் படம் பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஞான ராஜசேகரன் என்னுடன் கலந்து பேசினார். அவர் வாழ்க்கையில் முக்கியமான சம்பவங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கேட்டார். 2005ல் திருவனந்தபுரத்தில் அவர் பதவியில் இருந்தார். அப்போது நான் அங்கு வைக்கம் போராட்டம்பற்றி ஆய்வுக்காகச் சென்றிருந்தேன். அப்போதும் சந்தித்தார்.
-தமிழ்மகன்
படங்கள்: பாலா
வெள்ளி, செப்டம்பர் 08, 2006
பெரியார் சிந்தனைகள் மீண்டும் வெளிவரும்
பெரியாருடன் பழகிவந்த தொண்டர்களில் குறிப்பிடத் தக்கவர், சிந்தனையாளர் தோழர் ஆனை முத்து. பெரியார் எழுதிய கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாகப் பதிவு செய்த பெருமை அவருக்கு உண்டு.
"பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த மூன்று தொகுதிகள் இன்றும் பெரியாருக்கான ஆதார பொக்கிஷமாக விளங்கி வருகின்றன. ஜெராக்ஸ் போன்ற வசதி இல்லாத காலகட்டத்தில் கைகளால் எழுதி, தொகுத்து வெளியிடப்பட்ட சுமார் 3400 பக்கங்கள் கொண்ட நூல் அது. அந்தத் தொகுதிகளை பெரியார் சரிபார்த்துக் கொடுத்த அந்த நெகிழ்ச்சியான, முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.
பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எற்பட்டது?
1970-ம் ஆண்டு திருச்சியில் சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். அதை பெரியார்தான் துவக்கி வைத்தார். (07.03.1970)
பெரியாரை தலைப்புவாரியாகப் பேசவைத்து அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். மீண்டும் 72-ல், அதையே விரிவாகச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். பெரியாரின் பேச்சு, எழுத்து அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தனையாளர் கழகம் மூலம் தீர்மானம் போட்டோம்.
பொருளடக்கம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் காண்பித்தேன். அது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது தெரிந்து, மீண்டும் ஒரு மாதம் ஆலோசித்து மற்றொரு பொருளடக்கம் தயாரித்துக் காண்பித்தேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. "ஆரம்பிச்சுடுங்க' என்றார்.
திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார்.
72 ஜனவரியில் ஆரம்பித்து 73 செப்டம்பர் 13-ல் முடித்தேன்.
இடைவிடாமல் படித்து எதை எதை பதிப்பிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்வேன். அச்சுக்குப் போகவேண்டிய பத்திகளை சிவப்பு மையால் "மார்க்' செய்து விடுவேன். அவ்வளவையும் நானே எழுத வாய்ப்பில்லையே. அவற்றையெல்லாம் நகல் எடுக்கிற வேலையை 73 பேரை வைத்து செய்தோம். அதை பெரியாரிடம் காட்டினேன். அதை சில இடங்களில் படிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் அப்படி கேட்ட 500 பக்கங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். கடைசி பக்கத்தில் "சிந்தனையாளர் கழகம் இதை நூலாக வெளியிட உரிமை அளிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உரிமை எழுதிக் கொடுத்தது ஆகஸ்டில். அச்சுக்குக் கொடுத்தது செப்டம்பர் 17-ல்.
நவம்பர் 30-ம் தேதி வாக்கில் 400 பக்கங்கள் அச்சாகியிருந்தது. இந்தப் பக்கங்கள் வரை பெரியார் பார்த்து விட்டார். இந்தப் பக்கங்களைப் பெரியார் பார்த்தது கடலூரில் வக்கீல் ஜனார்த்தனம் வீட்டில். பின்னர் அவர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகி, இப்போது சென்னையில்தான் இருக்கிறார்.
அடுத்த 25 நாட்களில் பெரியார் இறந்துவிட்டார் (24.12.73).
பிறகு 74-ஜூலையில் "ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்' மூன்று தொகுதிகளை வெளியிட்டோம். புத்தகம் தயாரிக்க நாங்கள் இரண்டு முறைகளைக் கையாண்டோம். ஒன்று நன்கொடை வசூலிப்பது. இரண்டு, முன்பதிவு செய்வது. முன்பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம். இரண்டுக்குமே ஒத்துழைப்பு இல்லை. வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் அச்சிட வேண்டியதாக இருந்தது. மூவாயிரம் பிரதிகள் அடிக்க 60 ஆயிரம் ரூபாய் ஆனது. இரண்டு ரூபாய் வட்டி. புரோநோட்டு எழுதிக் கொடுத்து தலைவர், பொருளாளர், செயலாளர் கையெழுத்துப் போட்டோம்.
79- ஆண்டுதான் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. கடனை அடைத்து, மீதி இருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து மலையாளத்தில் 200 பக்க அளவில் பெரியார் சிந்தனைகளை வெளியிட்டோம். அதற்குத் தலைப்பு "நானும் நீங்களும் -பெரியார் ஈ.வெ.ரா.' திருவனந்தபுரத்தில் வெளியிட்டோம். விற்பனை உரிமையை அங்கிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் கொடுத்தோம். 2000 பிரதிகளுக்கு 20 அயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவரோ, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனாலும், பொருளாதார வசதி இல்லாததாலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
1980 -ல் நிறையபேர் ஈ.வெ.ரா. சிந்தனைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். எப்படியும் அடுத்த அண்டில் "பெரியார் சிந்தனைகள்' தொகுதிகள் மறுபதிப்பு உறுதியாக வெளிவரும்.
பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் நீங்கள். அந்த அனுபவங்களையும் அதன் பயன்களையும் விவரிக்க முடியுமா?
மத்திய அரசு பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், சட்டத்திலேயே அதில் இடம் இருப்பதை முதன்முத-ல் நான்தான் எடுத்துச் சொல்ல அரம்பித்தேன். சட்ட நூல்களில் எனக்கிருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். 1975-ல் இதைச் சொன்னேன். அதை யாரும் அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.
1978ல் இந்தியா முழுக்க இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினேன். 1982 வரை நான்கு அண்டுகள் இடைவிடாமல் இந்தியா முழுவதும் சுற்றினேன். எல்லா கட்சித் தலைவர்கள், மந்திரிகள், எம்.பி.க்களைச் சந்தித்து இப்படி சட்டத்தில் இடம் இருப்பதையும், நாம் முயற்சி செய்தால் பெற்றுவிடலாம் என்றும் விளக்கிச் சொன்னேன்.
பி.பி. மண்டல் என்பவரைத்தான் முதலில் சந்தித்தேன். அரியானாவைச் சேர்ந்தவர். அவர் அப்போது எம்.பி.யாக இருந்தார். அடுத்து தனிக்லால் மண்டல் என்ற மாகாண அமைச்சரைச் சந்தித்தேன். அவர் பீகார் ஜமீந்தார். ஜனதாதள அமைச்சர். அமைச்சர் நான் சொன்ன கருத்தை எற்றுக்கொண்டு, நான் சென்னையில் போட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்து பானுபிரதாப் சிங் என்ற விவசாய அமைச்சரைச் சந்தித்தேன். அரியானா, பஞ்சாப், உ.பி., பீகார் எம்.பி.க்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன்.
எங்களின் மார்க்சிய, பெரியாரிய பொது உடைமைக் கட்சிதான் சென்னையில் 78-ம் அண்டு ஜூன் 24-ந் தேதி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் மாநாட்டை நடத்தியது. பிறகு 79 மார்ச்சில் புதுடில்யில் பெரிய ஊர்வலம் நடத்தினேன். அதே அண்டு நவம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றும் டில்லியில் நடத்தினேன். 2000 பேர் கைதானோம்.
வடமாநிலங்களில் இருந்தபோது எங்கு தங்குவீர்கள்?
சத்திரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், எம்.பி. வீடுகளிலும் தங்கினோம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டோம். நான்கு ஆண்டுகள் ஓடின. சந்நியாசி வாழ்க்கைதான். எப்படியாவது இட ஒதுக்கீடு சம்பந்தமான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும் என்று போராடினேன்.
இங்கிருந்து இதற்காகப் புறப்பட்டுப் போனது எத்தனை பேர்?
சேலத்தில் சித்தையன் என்று ஐரு பெரியவர் இருந்தார். இப்ப இறந்து விட்டார். பெரியாருடைய அண்ணனின் மருமகன் சேலம் ராஜு, முத்துச்சாமி என்று ஒருவர், இவர்களுடன் நான். நான்கு பேரும்தான் சுற்றுவோம். அதற்காக லாபம் என்னவென்றால் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இப்போது கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக 1991-ல் இருந்து போராடி வருகிறோம்.
"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும், பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும், பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற அரம்பித்திருக்கிறார்களே?
(அடுத்த வாரம்)
"பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்ற தலைப்பில் வெளியான அந்த மூன்று தொகுதிகள் இன்றும் பெரியாருக்கான ஆதார பொக்கிஷமாக விளங்கி வருகின்றன. ஜெராக்ஸ் போன்ற வசதி இல்லாத காலகட்டத்தில் கைகளால் எழுதி, தொகுத்து வெளியிடப்பட்ட சுமார் 3400 பக்கங்கள் கொண்ட நூல் அது. அந்தத் தொகுதிகளை பெரியார் சரிபார்த்துக் கொடுத்த அந்த நெகிழ்ச்சியான, முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவர்.
பெரியாருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி எற்பட்டது?
1970-ம் ஆண்டு திருச்சியில் சிந்தனையாளர் கழகம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். அதை பெரியார்தான் துவக்கி வைத்தார். (07.03.1970)
பெரியாரை தலைப்புவாரியாகப் பேசவைத்து அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதுதான் அந்த அமைப்பின் நோக்கம். மீண்டும் 72-ல், அதையே விரிவாகச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். பெரியாரின் பேச்சு, எழுத்து அனைத்தையும் தொகுத்து வெளியிடலாம் என்று சிந்தனையாளர் கழகம் மூலம் தீர்மானம் போட்டோம்.
பொருளடக்கம் ஒன்றைத் தயாரித்து அவரிடம் காண்பித்தேன். அது அவருக்கு அவ்வளவு திருப்தியாக இல்லை என்பது தெரிந்து, மீண்டும் ஒரு மாதம் ஆலோசித்து மற்றொரு பொருளடக்கம் தயாரித்துக் காண்பித்தேன். அது அவருக்கு திருப்தியாக இருந்தது. "ஆரம்பிச்சுடுங்க' என்றார்.
திருச்சி பெரியார் மாளிகையில் இருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார்.
72 ஜனவரியில் ஆரம்பித்து 73 செப்டம்பர் 13-ல் முடித்தேன்.
இடைவிடாமல் படித்து எதை எதை பதிப்பிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்துக் கொள்வேன். அச்சுக்குப் போகவேண்டிய பத்திகளை சிவப்பு மையால் "மார்க்' செய்து விடுவேன். அவ்வளவையும் நானே எழுத வாய்ப்பில்லையே. அவற்றையெல்லாம் நகல் எடுக்கிற வேலையை 73 பேரை வைத்து செய்தோம். அதை பெரியாரிடம் காட்டினேன். அதை சில இடங்களில் படிக்கச் சொல்லிக் கேட்டார். அவர் அப்படி கேட்ட 500 பக்கங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார். கடைசி பக்கத்தில் "சிந்தனையாளர் கழகம் இதை நூலாக வெளியிட உரிமை அளிக்கிறேன்' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். உரிமை எழுதிக் கொடுத்தது ஆகஸ்டில். அச்சுக்குக் கொடுத்தது செப்டம்பர் 17-ல்.
நவம்பர் 30-ம் தேதி வாக்கில் 400 பக்கங்கள் அச்சாகியிருந்தது. இந்தப் பக்கங்கள் வரை பெரியார் பார்த்து விட்டார். இந்தப் பக்கங்களைப் பெரியார் பார்த்தது கடலூரில் வக்கீல் ஜனார்த்தனம் வீட்டில். பின்னர் அவர் ஐகோர்ட் ஜட்ஜ் ஆகி, இப்போது சென்னையில்தான் இருக்கிறார்.
அடுத்த 25 நாட்களில் பெரியார் இறந்துவிட்டார் (24.12.73).
பிறகு 74-ஜூலையில் "ஈ.வெ.ரா. பெரியார் சிந்தனைகள்' மூன்று தொகுதிகளை வெளியிட்டோம். புத்தகம் தயாரிக்க நாங்கள் இரண்டு முறைகளைக் கையாண்டோம். ஒன்று நன்கொடை வசூலிப்பது. இரண்டு, முன்பதிவு செய்வது. முன்பதிவு செய்வதற்கு ரூ.100 கட்டணம். இரண்டுக்குமே ஒத்துழைப்பு இல்லை. வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் அச்சிட வேண்டியதாக இருந்தது. மூவாயிரம் பிரதிகள் அடிக்க 60 ஆயிரம் ரூபாய் ஆனது. இரண்டு ரூபாய் வட்டி. புரோநோட்டு எழுதிக் கொடுத்து தலைவர், பொருளாளர், செயலாளர் கையெழுத்துப் போட்டோம்.
79- ஆண்டுதான் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. கடனை அடைத்து, மீதி இருந்த பணத்தில் ஒரு பகுதியை எடுத்து மலையாளத்தில் 200 பக்க அளவில் பெரியார் சிந்தனைகளை வெளியிட்டோம். அதற்குத் தலைப்பு "நானும் நீங்களும் -பெரியார் ஈ.வெ.ரா.' திருவனந்தபுரத்தில் வெளியிட்டோம். விற்பனை உரிமையை அங்கிருந்த புத்தக விற்பனையாளர் ஒருவரிடம் கொடுத்தோம். 2000 பிரதிகளுக்கு 20 அயிரம் ரூபாய் கொடுத்திருக்க வேண்டும். அவரோ, ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டார். இதனாலும், பொருளாதார வசதி இல்லாததாலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.
1980 -ல் நிறையபேர் ஈ.வெ.ரா. சிந்தனைகளை மீண்டும் வெளியிட வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். எப்படியும் அடுத்த அண்டில் "பெரியார் சிந்தனைகள்' தொகுதிகள் மறுபதிப்பு உறுதியாக வெளிவரும்.
பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு சம்பந்தமாக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தவர் நீங்கள். அந்த அனுபவங்களையும் அதன் பயன்களையும் விவரிக்க முடியுமா?
மத்திய அரசு பதவிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், சட்டத்திலேயே அதில் இடம் இருப்பதை முதன்முத-ல் நான்தான் எடுத்துச் சொல்ல அரம்பித்தேன். சட்ட நூல்களில் எனக்கிருந்த ஆர்வம்தான் இதற்குக் காரணம். 1975-ல் இதைச் சொன்னேன். அதை யாரும் அப்போது காதில் போட்டுக்கொள்ளவில்லை.
1978ல் இந்தியா முழுக்க இது சம்பந்தமாக ஆர்வம் உள்ளவர்களைச் சந்தித்துப் பேசினேன். 1982 வரை நான்கு அண்டுகள் இடைவிடாமல் இந்தியா முழுவதும் சுற்றினேன். எல்லா கட்சித் தலைவர்கள், மந்திரிகள், எம்.பி.க்களைச் சந்தித்து இப்படி சட்டத்தில் இடம் இருப்பதையும், நாம் முயற்சி செய்தால் பெற்றுவிடலாம் என்றும் விளக்கிச் சொன்னேன்.
பி.பி. மண்டல் என்பவரைத்தான் முதலில் சந்தித்தேன். அரியானாவைச் சேர்ந்தவர். அவர் அப்போது எம்.பி.யாக இருந்தார். அடுத்து தனிக்லால் மண்டல் என்ற மாகாண அமைச்சரைச் சந்தித்தேன். அவர் பீகார் ஜமீந்தார். ஜனதாதள அமைச்சர். அமைச்சர் நான் சொன்ன கருத்தை எற்றுக்கொண்டு, நான் சென்னையில் போட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டார். அடுத்து பானுபிரதாப் சிங் என்ற விவசாய அமைச்சரைச் சந்தித்தேன். அரியானா, பஞ்சாப், உ.பி., பீகார் எம்.பி.க்களை எல்லாம் சந்தித்துப் பேசினேன்.
எங்களின் மார்க்சிய, பெரியாரிய பொது உடைமைக் கட்சிதான் சென்னையில் 78-ம் அண்டு ஜூன் 24-ந் தேதி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் மாநாட்டை நடத்தியது. பிறகு 79 மார்ச்சில் புதுடில்யில் பெரிய ஊர்வலம் நடத்தினேன். அதே அண்டு நவம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றும் டில்லியில் நடத்தினேன். 2000 பேர் கைதானோம்.
வடமாநிலங்களில் இருந்தபோது எங்கு தங்குவீர்கள்?
சத்திரங்களிலும், நண்பர்கள் வீடுகளிலும், எம்.பி. வீடுகளிலும் தங்கினோம். ரோட்டு கடைகளில் சாப்பிட்டோம். நான்கு ஆண்டுகள் ஓடின. சந்நியாசி வாழ்க்கைதான். எப்படியாவது இட ஒதுக்கீடு சம்பந்தமான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டும் என்று போராடினேன்.
இங்கிருந்து இதற்காகப் புறப்பட்டுப் போனது எத்தனை பேர்?
சேலத்தில் சித்தையன் என்று ஐரு பெரியவர் இருந்தார். இப்ப இறந்து விட்டார். பெரியாருடைய அண்ணனின் மருமகன் சேலம் ராஜு, முத்துச்சாமி என்று ஒருவர், இவர்களுடன் நான். நான்கு பேரும்தான் சுற்றுவோம். அதற்காக லாபம் என்னவென்றால் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. இப்போது கல்வியில் இட ஒதுக்கீட்டுக்காக 1991-ல் இருந்து போராடி வருகிறோம்.
"திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றும், பெரியாருடைய கருத்துகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தாது என்றும், பெரியார் ஒரு பிற்போக்குவாதி என்றும் கூற அரம்பித்திருக்கிறார்களே?
(அடுத்த வாரம்)
செவ்வாய், செப்டம்பர் 05, 2006
வெள்ளி, செப்டம்பர் 01, 2006
உலாவிப்பாருங்கள் நண்பர்களே...
கவிஞர் கடற்கரய், அவருடைய பெயரிலேயே 'ப்ளாக்' துவங்கியுள்ளார் உலாவிப்பாருங்கள் நண்பர்களே...
புதன், ஆகஸ்ட் 30, 2006
பெரியாரைப் புரிந்து கொள்ளுதல்
விஷால் என்பவர் நான் எழுதிய பெரியார் படத்தின் நேர்காணலுக்கு மறு மொழி அளித்துள்ளார். பெரியார் தன் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட சாதியைத் தாக்குவதன்றி உருப்படியாக ஒன்றும் செய்ததில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பதிலாக இந்தக் கட்டுரை.
ஆறாம்திணை இணைய இதழில் வெளியான கட்டுரை இது.
ஈ.வெ.ரா. எனும் பெரியார்
-மதுசூதனன்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தும் ஏதேனும் ஓர் இயக்கத்தின் தலைமையில் இருந்தவர் எனலாம். அவர் இறப்புக்குப் பின்னரும் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்றவற்றின் முகிழ்ப்புக்கும் -யக்கநிலைக்கும் நிலைபேறாக்கத்துக்கும் பெரியார் வழிவந்த ஆளுமை முக்கிய இடம் பெறுகிறது. தமிழக அரசியலின் சமகால திசைப்போக்கு திமுக x அதிமுக இடையிலான உறவு x முரண் என்னும் தொடர்ச்சியின் ஓட்டத்துக்கும் கூட பெரியார் என்னும் ஆளுமை பயன்பட வேண்டியுள்ளது. அதாவது பெரியார் என்ற சிந்தனையாளரின்- தலைவரின் கீழ் இயங்கிய தொண்டர்களின் தோன்றல்களில் தான் இன்றைய திராவிட அரசியலின் நீட்சி. இதனால்தான் திமுக x அதிமுக x மதிமுக என தொடரும் கட்சிகளில் 'பெரியார்' திருவுருவம் இன்றுவரை லேபிலாக பயன்படுகிறது.
பெரியாரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பெரியார் குறித்த ஒரே மாதிரியான பிப்பத்தையே கட்டமைக்கின்றனர். அதாவது நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், இடஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர், பெண்விடுதலை பேசியவர் என்பவைதான் இந்த பிம்பத்தின் மூலம் வெளிப்படும் பெரியாரின் பரிமாணங்கள். இதுவரையான விவாதங்களும் சர்ச்சைகளும் இந்த அம்சங்களில் மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அல்லது சுருக்கப்பட்டுவிட்டன.
பெரியார் உருவான சூழலை, அவர் தீவிரமாக இயக்கிய தமிழ்ச்சூழலை பின்னோக்கில் பார்க்கும்போது பெரியாரை அவ்வளவு எளிதாக மேற்குறித்த அம்சங்களுக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அவரது வாழ்வும் சிந்தனையும் அதன் வழியிலான செயற்பாடுகளும் ஒரே தன்மையிலான நேர்கோட்டுப் பாதையில் அமையவில்லை. சிக்கலான முரண்கள் நிறைந்த ஆனால் பலபரிமாணங்கள் நிரம்பியவையாகவே உள்ளன. எந்த ஒற்றைவரையறைக்குள் ஆட்படாத கலகத்தன்மை வாய்ந்த பண்பைக் கொண்டிருந்தது. நிலவும் ஆதிக்க அதிகார சித்தாந்தப்பிடிமானங்களுக்கு எதிராக -யக்கும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. இந்தத் தீவிரம் அவரது வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் கன்னட தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய கன்னட பலிஜா நாயுடு வகுப்பினர் 'நாயக்கர்' பட்டப் பெயர்பூண்டு குடியேறிய இடத்தையே தாய் நாடாகக் கருதி வாழ்ந்து வந்தனர். இம்மாதிரி குடும்பத்தில் வந்தவர்தான் வேங்கடப்ப நாயக்கர். -வர் ஈரோடு நகரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே ரொம்பவும் சிரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையின் உயரத்துக்கு வந்தவர். சிறந்த வியாபாரியாக எல்லோராலும் பாராட்டப்படும் நபராக வளர்ந்தார். இவரது மனைவி சின்னத்தாய் அம்மாள். -வர்களுக்கு மகனாக 1879 செப் 17-ல் பெரியார் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஈ.வே. ராமசாமி. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் -ரண்டு சகோதரிகள் உடன்பிறந்தோர்.
சிறுவயதிலேயே செல்லமாக வளர்ந்தார். ஆனாலும் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக வளர்ந்து வந்தார். வேங்கடப்ப நாயக்கரின் சிறிய தாயார் ஈவெராவைத் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். சிறிது காலம் அவரது வளர்ப்பில் வளர்ந்தார். ரொம்பவும் சிரமப்பட்ட வாழ்க்கையை அவருடைய சிறிய தாயார் வீட்டில் வாழ்ந்தார். கட்டுப்பாடற்று திரிந்து கொண்டு வந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். அங்கு படிக்க வந்த பலதரப்பட்ட மாணவர்களுடனும் சாதிபேதமின்றி சகஜமாக பழகி வந்தார். செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்த பையன் அந்தஸ்தும் பெருமையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து முரடனாகி திரிகிறான் என்று அவருடைய பெற்றோர்கள் கவலைக்கொண்டனர். பாட்டியிடமிருந்து மகனை மீண்டும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். இவரைத் திருத்துவதற்காக பல தண்டனை முறைகளை கடைப்பிடித்தனர். ஆனால் இவர் தனக்கு சரியென்று பட்டதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்.
மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவதை இவர் நிறுத்ததாதல், தண்டனைகளும் நிறுத்தப்படவில்லை. எதையும் சகித்துக் கொள்ளும் மனவலிமையை சிறுவயது முதல் வளர்த்துக் கொண்டார். ஓருமுறை பிற்காலத்தில் சிறுவயது காலத்தை இவ்வாறு நினைவுபடுத்தினார். "காலில் விலங்கு இடப்பட்டேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாட போய்விடுவேன்''
இது போன்ற மனவுறுதி சிறுவயது முதல் ஈ,வே.ராவுக்குள் வளர்ந்து வந்தது. சிறிது காலம் ஆங்கில வழிப் பாடசாலையில் ஈ.வே.ரா சேர்க்கப்பட்டார். ஆனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. புராணம் தலைவிதி பக்தி போன்றவை குறித்து ஏதாவது விவாதம் செய்து கொண்டேயிருப்பார். பக்திமான்களை வம்புச்சண்டைக்கு இழுப்பார். பக்திமான் குடும்பத்தில் இப்படி ஒரு பிள்ளையா? என்று எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் ஈ,வே.ராவிடம் விவாதம் செய்வது அதனோடு தனது ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்பது இயல்பாக வளர்ந்து வந்தது. 12 வயதிலிருந்து 19 வயதுக்குள் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை தூண்டிவிடப்பட்டு வளர்ந்து வந்தது.. ஈ.வே.ரா சிந்தனையில் நாத்திகக் கொள்கை படிப்படியாக உருப்பெறத் தொடங்கியது.
தந்தையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். தனது திறமையால் வியாபாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார். தனியே வியாபாரத்தை கவனித்து அதைப் பெருக்க ஆரம்பித்தார். அதேநேரம் இளைஞனுக்குரிய மைனர் விளையாட்டுகளிலும் ஈடுபடத் தொடங்கினார். ஈ.வே.ராவின் தவறான போக்கை தடுத்து நிறுத்த அவருக்கு கால்கட்டு போட வேண்டுமென முடிவு செய்தனர். ஆனால் ஈ.வே.ரா மாமன் மகள் நாகம்மாவையே தான் திருமணம் செய்ய முடியுமென உறுதியாக இருந்தார். அதன்படி அவரையே திருமணமும் செய்துக் கொண்டார். மேலும் வர்த்தகம் பெருகியது. ஈ.வே.ராவுக்கு நண்பர்கள் கூட்டமும் பெருகியது.
தனது 25வது வயதில் ''தந்தையிடம் கோபித்துக் கொண்டு துறவறம் மேற்கொண்டார். காசியில் சில காலம் வாழ்ந்தார். இந்த வாழ்வு அவரது சிந்தனையில் பகுத்தறிவில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தியது. புராண இதிகாசங்களை ஆழ்ந்து படிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் அவருக்கு கற்றுக் கொடுத்தது. பின்னர் ஒருவாறு வீடு திரும்பினார்.
முற்றிலும் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1905-1919 வரையிலான காலம் ஈ.வே.ராவுக்கு 'வர்த்தகம்' சமூக ஊழியர் என்ற தகுதிகளை வழங்கியது. பல்வேறு பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வரத்தொடங்கின. ஈரோட்டில் ஈ.வே.ரா முக்கியமான நபராக உயர்ந்தார், வளர்ந்தார். நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 24 பதவிகளில் ஈ.வே.ரா முக்கிய பொறுப்புகளில் இருந்தார். வர்த்தகம் பொதுத் தொண்டு இவற்றின் மூலம் ஈ.வே.ரா ஆக்கபூர்வமான தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரஸ் கொள்கையில் படிப்படியாக ஆர்வம் கொண்டார். 1914ஆம் ஆண்டிலிருந்து ஈ.வே.ரா ஈரோட்டிலும் சென்னையிலும் காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார். சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இதே நேரம் நீதிக்கட்சியினருடன் கூட ருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். அக்கால முக்கியமான தலைவர்கள் அனைவருடனும் நெருங்கி பழகி வந்தார். பிரமாணர் x பிரமாணரல்லாதார் என்ற சிந்தனை நீதிக்கட்சியினரால் ஆழமாகவே அன்று முன்வைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கையாகவும் சிந்தனையாகவுமே இயங்கத் தொடங்கியது.
சென்னை மாகாணத்தை குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலைப் பாதித்த காரணங்களால் பிராமணர் x பிரமாணரல்லாதார் பிரச்சனை முக்கியமானதாக இருந்தது. இது பல்வேறு தளங்களிலும் வெளிப்பட்டது. பிராமணர் அல்லதார் நலன்களைக் காக்கும் பிரதிநிதியென்று ஜஸ்டிஸ் கட்சிக்குமிடையில் வேற்றுமை நிலவியது மட்டுமல்லாது, காங்கிரசுக்குள்ளும் பிராமணர் அல்லாதார் தேசியம் என்று குறிப்பிடக்கூடிய உட்போக்கு ஒன்றும் -ருந்தது. ஆக இந்த சமூக முரண்பாட்டுத்தன்மை ஈ.வே.ராவின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே பின்னர் அமைந்தது.
1919ஆம் ஆண்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ஈ.வே.ரா செயல்பட்டார். மேலும் தேசிய அரசியலிலும் முக்கியமான நிகழ்வுகள் அன்றைய காலக்கட்டத்தில் நடைப்பெறத்துவங்கின. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இது மக்களிடையே பலத்த கிளர்ச்சியை உருவாக்கியது. ஈ.வே.ரா ஈரோடு நகரசபை தலைவர் பதவி உட்பட 29 பதவிப் பொறுப்புகளிலிருந்து -ராஜினாமா செய்தார். அதே போன்று சேலம் நகரசபைத் தலைவர் பொறுப்பை ராஜாஜியும் ராஜினாமா செய்தார்.
ஈ.வே.ரா காங்கிரசில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். தனது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு காந்தி பக்தராக மாறினார். கதராடை அணியத் தொடங்கினார். ஈ.வே.ரா குடும்பமே சமூக சேவைக் குடும்பமாக மாறியது. 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இங்கு தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் முடிவை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல தீவிரமாக -றங்கினார். மேலும் கள்ளுகடை மறியலிலும் தீவிரமாக பங்குக் கொண்டார். ஒருமாத சிறைத் தண்டனையும் பெற்றார்.
இதன்பிறகு ஈ.வே.ரா தீவிர சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். அதற்கேற்ற மனவுறுதியையும் சிந்தனையும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். காந்திஜி , ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகி தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார். 1924ஆம் ஆண்டில் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஈரோட்டு இல்லத்தை அலுவலகமாக்கிச் செயற்பட்டார். இதனால் ஈரோடு அரசியலில் முக்கிய இடம் பெறத் தொடங்கியது.
1924 மேயில் திருவனந்தபுரம் வைக்கம் நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நடமாடவோ அவற்றை கடந்து செல்லவோ உரிமை கிடையாது. இதற்கு எதிராக இந்த மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் வேகம் கொண்டது. ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். இந்த வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற வேட்கையை வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த சமூகநீதி சமூக சமத்துவம் பற்றிய விருப்பமும் போராட்ட மனவுறுதியும் செயலாக வெளிப்பட்டது.
வ.வே.சு. ஐயர் காந்திய வழிப்படி நெல்லை மாவட்டம் சேரமாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். இங்கு பிராமணப்பிள்ளைகளுக்கு தனிச்சாப்பாடு, பாயசம் என்றும் பிராமணர் அல்லாத பிள்ளைகளுக்கு சோறும், சாப்பாடும் மட்டும்தான் என்று தனிதனியாக பந்தி பரிமாறப்பட்டு வந்தது. இது ஒரு பெரும் பிரச்சனையாக காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.
வவேசு ஐயர் இப்பிரச்சனையில் தனது நிலையில் உறுதியாக இருந்தார். பாரபட்சம் காட்டுவது நியாயம் என்றே கருதிவந்தார். ஈ.வே.ரா, திருவிக உள்ளிட்ட தலைவர்கள் குருகுலத்தில் நடைபெறும் இந்த இழிச்செயல் கண்டு கொதித்தார்கள். இது வெறுமனே சமபந்தி போஜன விஷயம் மட்டுமல்ல, இது ஒரு சாதி இன்னொரு சாதியைவிட உயர்ந்ததென்ற பிரச்சனை. இந்த வேறுபாடு ஒழிய வேண்டும். பிராமணர், பிரமாணரல்லாதவரிடையே ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் போதாது, அவர்களை பஞ்சமர்களும் தங்களைச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டும் என ஈ.வே.ரா வாதிட்டார். ஆனால் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இப்பிரச்சனையில் கொள்கை சார்ந்து செயற்பட பின்வாங்கியது.
இந்த குருகுலப் பிரச்சனை ஈ.வே.ரா வாழ்க்கையிலும் சிந்தனையிலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பாதையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வே.ரா விலகிச் செல்லும் போக்கை துரிதப்படுத்தியது. மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். அதற்குத்தான் பாடுபட வேண்டுமென்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. வைக்கம் பேராட்டம், குருகுலப் போராட்டம் ஈ.வே.ராவின் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
தமிழ்நாட்டில் தன் கருத்துகளை வெளியிடுவதற்காக 1925 முதல் 'குடியரசு' என்ற பத்திரிகையை தொடங்கினார். சமூகநீதி, சமூக சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய நோக்கங்களைக் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மேற்கிளம்ப குடியரசு தனது கடமையாகக் கொண்டு செயற்பட்டது.
1926ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியிட்ட குடியரசு இதழில் ஈ.வே.ரா எழுதிய சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்னும் தலையங்கம் அவருடைய கொள்கைப் பிரகடனமாகக் கருதலாம். இதையடுத்து சுயமரியாதை -யக்கம் தொடங்கினார். 1928லிருந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் இறங்கினார். 1927ஆம் ஆண்டில் 'நாயக்கர்' என்ற சாதிப்பெயரை ஈ.வே.ராமசாமி கைவிட்டதிலிருந்து ஈ.வே.ரா என்றே அழைக்கப்பட்டார்.
"ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் -ருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். -தைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு -ல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்'' என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்க எவ்வெவ்வழியில் பாடுபட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அனைத்து வகையான அடிமைத்தனங்கள், கட்டுத்தளைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு புதிய சமுதாயம் சமத்துவ சமுதாயம் சுயமரியாதை சமுதாயம் உருவாகவேண்டுமென்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
''நமது நாடு -ன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் -ருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் மதஅமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.
இதையெல்லாம்விட மோசம் மிகமிக் கீழ்த்தரமான மூடநம்பிக்கை அமைப்பிலேயே நமதுநாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்குப் போதிய கல்வி -ல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பிலும் நமது நாடு இருந்து வருகிறது.
இவ்வளவு பேதநிலை அமைப்பு உள்ள நாட்டில் ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. அதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?''
இவ்வாறு 'சமுதாய மாற்றம்', 'விடுதலை, சுதந்திரம்' பற்றிய சிந்தனைகளை உரத்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் மக்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கம் தமிழ்ச்சமுதாயத்தில் அதுவைர ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
''நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரில்தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையென்றால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.'' என ஈவெரா தெரிவிக்கும் கருத்தில் உள்ள நியாயத்தை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
1926-30 இடையிலான காலம் ராமசாமியின் அரசியல் சாதிஒழிப்பு பற்றிய சிந்தனை இலட்சிய வடிவம் பெற்றது. 1931-1937காலக்கட்டம் அவரது வாழ்க்கையில் வேறுபட்ட பரிமாணம் பெற்றது எனலாம். 11 மாதங்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சோவியத் ரஷ்யாவின் அனுபவங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின்பால் தீவிர ஈர்ப்புக் கொண்டவராகவும் அவரது சிந்தனயைலும் செயற்பாட்டிலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
13.11.1938-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெராவுக்கு 'பெரியார்' என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். பெண்ணினத்தின் விடுதலைக்காக அவரளவு சிந்தித்த சிந்தனையாளர் வேறுயாரும் இருக்க முடியாது. தீவிர பெண்ணியவாதிக்குரிய உத்வேகம் கலகம் அவரிடம் அன்றே இருந்தது. பெண் ஏன் அடிமையானாள்? என்ற அறிவியல் பூர்வமான நூலை 1934ல் எழுதி வெளியிட்டார். 1930ல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக் துண்டறிக்கையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று துணிவாக அழைப்புவிடுத்தவர். மேலும் கர்ப்பப் பைகளை எடுக்கச்சொல்லி பெண்களுக்கு அன்றைக்கே அறைகூவல்விடுத்த தீவிர பெண்ணியவாதியாகவும் இருந்துள்ளார்.
1938-ல் ராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் அரசு இந்தியை கட்டாய பாடமாக்க அதனை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்தினார்.. கிளர்ச்சியின் இறுதியில் தனிநாடுக் கோரிக்கையும் எழுகிறது. இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்று 1939 டிசம்பரில் விடுதலை பெறுகிறார். தொடர்ந்து திராவிடக் கோரிக்கையை வலியுறுத்துகிறார். நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவரது செல்வாக்கால் சிறிது காலம் நீதிக்கட்சி உயிர்வாழ்கிறது. ஆனாலும் படிப்டியாக நீதிக்கட்சி தனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறது. -ந்நிலையில் 1944-ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
1947 சுதந்திரதினத்தை துக்கநாளாக அனுசரிக்கும்படி ஈவெரா கோருகிறார். ஆனால் -ந்தக் கருத்தில் அண்ணாதுரை உடன்பாடு கொள்ளவில்லை. அவர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார். 1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திமுக தோன்றுகிறது. 1950-ல் வகுப்புரிமையை வலியுறுத்தி ஈவேரா இயக்கம் நடத்துகிறார். 1952ல் ராஜாஜி தலைமையிலான ஆட்சி வருகிறது. அப்போது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1954ல் ராஜாஜி பதவி விலக வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகிறது.
1954ல் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ஈவெரா காமராஜருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956ல் மொழிவாரி மாநில உருவாக்கம் நடைபெற்றமையால் தமிழ்நாடே திராவிட நாடு என்கிற நிலைக்குச் செல்கிறார். தொடர்ந்து 1957ல் அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறைச்சென்றார். 1960களில் தமிழ்நாடு தமிழருக்கே என்று அறிவிப்பு செய்கிறார். இந்திய தேசியப்படம் எரிக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மீண்டும் கைதாகிறார். தொடர்ந்து பல்வேறுவகையிலான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். 1967-ல் காங்கிரஸ் தோல்வி அடைந்து திமுக ஆட்சிக்கு வருகிறது.
பின்னர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனாலும் ஈவெரா 24.12.1973-ல் மரணமுற்றார்.
ஆக பெரியாரின் ஐம்பது ஆண்டுகால -யக்கத்தின் களம் மிக விரிவானது. அதனூடு வளர்ந்த அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழகச் சூழலில் பெரும் தாக்கம் செலுத்தியது. பகுத்தறிவு என்கிற ஒளியால் எங்கும் ஒளிப்பாய்ச்ச முற்பட்டார்.
''பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்'' என்று பகுத்தறிவின் தேவையை உணர்ந்து தனது செயற்பாடுகளின் சிந்தனையின் மூலச் சரடாகவும் பகுத்தறிவை ஒவ்வொரு கணமும் பகுத்தறிவின் ஒளி கொண்டும் எதையும் பரிசோதித்து முன்னேறிக் கொண்டிருந்தார்.
பெரியாரது வாழ்வனுபவங்களும் அரசியல் செயற்பாடுகளும் எப்போதும் கலகத்தன்மைக் கொண்டதாகவே உள்ளது. ஆட்சி அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு அயோக்கியவானாக வாழ்வதை அடியோடு வெறுத்தார். அதனால் தான் அவர் கடைசி வரை தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவு கொண்ட விளக்கம் கொடுத்தார். விடுதலையின் விரிதளம் நோக்கிய செயற்பாட்டுக்கு எப்போதும் தீவிரமாகவும் துணிவாகவும் உழைக்க வேண்டுமென்பதில் உறதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
திராவிட அரசியல் வழிவந்த தலைவர்களுள் பெரியார் அவரது வாழ்வனுபவத்தாலும் சொல்-செயல் இரண்டாலும்கூட மற்றையவர்களில் இருந்து வேறுபட்டவராகவே -ருந்துள்ளார். மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்கச் சொல்லும் நபராகவே இருந்துள்ளார். விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்று மட்டும் குறிப்பிடுகிறார். ''உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம்தான் உண்மையாய் வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுவதில் இருந்து அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது புலப்படும்.
தமிழ்நாட்டு சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஈவெ.ராமசாமி என்ற பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னோக்கிப் பார்க்கும் போது அவர் எளிதாக எந்தவொரு குறித்த வரையறைக்குள்ளும் சிறைபிடிக்கக்கூடியவர் அல்லர் என்பது நிதர்சனமான உண்மை.
ஆறாம்திணை இணைய இதழில் வெளியான கட்டுரை இது.
ஈ.வெ.ரா. எனும் பெரியார்
-மதுசூதனன்
இருபதாம் நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஓர் நீண்ட தொடர்ச்சியை பேணிக்கொண்டு வந்த ஒரு நபர் ஈ.வே.ரா. தமிழ் பேசும் பகுதிகளில் நீண்டகாலமாக தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தும் ஏதேனும் ஓர் இயக்கத்தின் தலைமையில் இருந்தவர் எனலாம். அவர் இறப்புக்குப் பின்னரும் தமிழக சமூக அரசியல் பண்பாட்டு இயக்கத்தில் அவரது தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல 'திராவிட அரசியல்', 'திராவிட இயக்கம்', 'திராவிட கருத்துநிலை' போன்றவற்றின் முகிழ்ப்புக்கும் -யக்கநிலைக்கும் நிலைபேறாக்கத்துக்கும் பெரியார் வழிவந்த ஆளுமை முக்கிய இடம் பெறுகிறது. தமிழக அரசியலின் சமகால திசைப்போக்கு திமுக x அதிமுக இடையிலான உறவு x முரண் என்னும் தொடர்ச்சியின் ஓட்டத்துக்கும் கூட பெரியார் என்னும் ஆளுமை பயன்பட வேண்டியுள்ளது. அதாவது பெரியார் என்ற சிந்தனையாளரின்- தலைவரின் கீழ் இயங்கிய தொண்டர்களின் தோன்றல்களில் தான் இன்றைய திராவிட அரசியலின் நீட்சி. இதனால்தான் திமுக x அதிமுக x மதிமுக என தொடரும் கட்சிகளில் 'பெரியார்' திருவுருவம் இன்றுவரை லேபிலாக பயன்படுகிறது.
பெரியாரின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பெரியார் குறித்த ஒரே மாதிரியான பிப்பத்தையே கட்டமைக்கின்றனர். அதாவது நாத்திகர், பார்ப்பன எதிர்ப்பாளர், இடஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர், பெண்விடுதலை பேசியவர் என்பவைதான் இந்த பிம்பத்தின் மூலம் வெளிப்படும் பெரியாரின் பரிமாணங்கள். இதுவரையான விவாதங்களும் சர்ச்சைகளும் இந்த அம்சங்களில் மட்டுமே சுருங்கிவிடுகின்றன. அல்லது சுருக்கப்பட்டுவிட்டன.
பெரியார் உருவான சூழலை, அவர் தீவிரமாக இயக்கிய தமிழ்ச்சூழலை பின்னோக்கில் பார்க்கும்போது பெரியாரை அவ்வளவு எளிதாக மேற்குறித்த அம்சங்களுக்குள் மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. அவரது வாழ்வும் சிந்தனையும் அதன் வழியிலான செயற்பாடுகளும் ஒரே தன்மையிலான நேர்கோட்டுப் பாதையில் அமையவில்லை. சிக்கலான முரண்கள் நிறைந்த ஆனால் பலபரிமாணங்கள் நிரம்பியவையாகவே உள்ளன. எந்த ஒற்றைவரையறைக்குள் ஆட்படாத கலகத்தன்மை வாய்ந்த பண்பைக் கொண்டிருந்தது. நிலவும் ஆதிக்க அதிகார சித்தாந்தப்பிடிமானங்களுக்கு எதிராக -யக்கும் தீவிரத்தன்மை கொண்டிருந்தது. இந்தத் தீவிரம் அவரது வாழ்க்கை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் கன்னட தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் குடியேறிய கன்னட பலிஜா நாயுடு வகுப்பினர் 'நாயக்கர்' பட்டப் பெயர்பூண்டு குடியேறிய இடத்தையே தாய் நாடாகக் கருதி வாழ்ந்து வந்தனர். இம்மாதிரி குடும்பத்தில் வந்தவர்தான் வேங்கடப்ப நாயக்கர். -வர் ஈரோடு நகரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயதிலேயே ரொம்பவும் சிரமப்பட்டு படிப்படியாக வாழ்க்கையின் உயரத்துக்கு வந்தவர். சிறந்த வியாபாரியாக எல்லோராலும் பாராட்டப்படும் நபராக வளர்ந்தார். இவரது மனைவி சின்னத்தாய் அம்மாள். -வர்களுக்கு மகனாக 1879 செப் 17-ல் பெரியார் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஈ.வே. ராமசாமி. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் -ரண்டு சகோதரிகள் உடன்பிறந்தோர்.
சிறுவயதிலேயே செல்லமாக வளர்ந்தார். ஆனாலும் பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமல் தன்னிச்சையாக வளர்ந்து வந்தார். வேங்கடப்ப நாயக்கரின் சிறிய தாயார் ஈவெராவைத் தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். சிறிது காலம் அவரது வளர்ப்பில் வளர்ந்தார். ரொம்பவும் சிரமப்பட்ட வாழ்க்கையை அவருடைய சிறிய தாயார் வீட்டில் வாழ்ந்தார். கட்டுப்பாடற்று திரிந்து கொண்டு வந்தார்.
திண்ணைப் பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினார். அங்கு படிக்க வந்த பலதரப்பட்ட மாணவர்களுடனும் சாதிபேதமின்றி சகஜமாக பழகி வந்தார். செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்த பையன் அந்தஸ்தும் பெருமையும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து முரடனாகி திரிகிறான் என்று அவருடைய பெற்றோர்கள் கவலைக்கொண்டனர். பாட்டியிடமிருந்து மகனை மீண்டும் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். இவரைத் திருத்துவதற்காக பல தண்டனை முறைகளை கடைப்பிடித்தனர். ஆனால் இவர் தனக்கு சரியென்று பட்டதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்.
மற்ற சாதிப் பையன்களுடன் சேர்ந்து விளையாடுவதை இவர் நிறுத்ததாதல், தண்டனைகளும் நிறுத்தப்படவில்லை. எதையும் சகித்துக் கொள்ளும் மனவலிமையை சிறுவயது முதல் வளர்த்துக் கொண்டார். ஓருமுறை பிற்காலத்தில் சிறுவயது காலத்தை இவ்வாறு நினைவுபடுத்தினார். "காலில் விலங்கு இடப்பட்டேன். ஒருதடவை பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். இரு தோள்களிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்து கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாட போய்விடுவேன்''
இது போன்ற மனவுறுதி சிறுவயது முதல் ஈ,வே.ராவுக்குள் வளர்ந்து வந்தது. சிறிது காலம் ஆங்கில வழிப் பாடசாலையில் ஈ.வே.ரா சேர்க்கப்பட்டார். ஆனால் படிப்பில் கவனம் செல்லவில்லை. புராணம் தலைவிதி பக்தி போன்றவை குறித்து ஏதாவது விவாதம் செய்து கொண்டேயிருப்பார். பக்திமான்களை வம்புச்சண்டைக்கு இழுப்பார். பக்திமான் குடும்பத்தில் இப்படி ஒரு பிள்ளையா? என்று எல்லோரும் திட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் ஈ,வே.ராவிடம் விவாதம் செய்வது அதனோடு தனது ஆற்றலை வளர்த்துக் கொள்வது என்பது இயல்பாக வளர்ந்து வந்தது. 12 வயதிலிருந்து 19 வயதுக்குள் அவரிடம் பகுத்தறிவுச் சிந்தனை தூண்டிவிடப்பட்டு வளர்ந்து வந்தது.. ஈ.வே.ரா சிந்தனையில் நாத்திகக் கொள்கை படிப்படியாக உருப்பெறத் தொடங்கியது.
தந்தையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். தனது திறமையால் வியாபாரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றார். தனியே வியாபாரத்தை கவனித்து அதைப் பெருக்க ஆரம்பித்தார். அதேநேரம் இளைஞனுக்குரிய மைனர் விளையாட்டுகளிலும் ஈடுபடத் தொடங்கினார். ஈ.வே.ராவின் தவறான போக்கை தடுத்து நிறுத்த அவருக்கு கால்கட்டு போட வேண்டுமென முடிவு செய்தனர். ஆனால் ஈ.வே.ரா மாமன் மகள் நாகம்மாவையே தான் திருமணம் செய்ய முடியுமென உறுதியாக இருந்தார். அதன்படி அவரையே திருமணமும் செய்துக் கொண்டார். மேலும் வர்த்தகம் பெருகியது. ஈ.வே.ராவுக்கு நண்பர்கள் கூட்டமும் பெருகியது.
தனது 25வது வயதில் ''தந்தையிடம் கோபித்துக் கொண்டு துறவறம் மேற்கொண்டார். காசியில் சில காலம் வாழ்ந்தார். இந்த வாழ்வு அவரது சிந்தனையில் பகுத்தறிவில் பலவித மாறுதல்களை ஏற்படுத்தியது. புராண இதிகாசங்களை ஆழ்ந்து படிக்கவும் விவாதத்தில் ஈடுபடவும் அவருக்கு கற்றுக் கொடுத்தது. பின்னர் ஒருவாறு வீடு திரும்பினார்.
முற்றிலும் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். 1905-1919 வரையிலான காலம் ஈ.வே.ராவுக்கு 'வர்த்தகம்' சமூக ஊழியர் என்ற தகுதிகளை வழங்கியது. பல்வேறு பதவிகளும் பொறுப்புகளும் அவரைத் தேடி வரத்தொடங்கின. ஈரோட்டில் ஈ.வே.ரா முக்கியமான நபராக உயர்ந்தார், வளர்ந்தார். நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 24 பதவிகளில் ஈ.வே.ரா முக்கிய பொறுப்புகளில் இருந்தார். வர்த்தகம் பொதுத் தொண்டு இவற்றின் மூலம் ஈ.வே.ரா ஆக்கபூர்வமான தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார்.
காங்கிரஸ் கொள்கையில் படிப்படியாக ஆர்வம் கொண்டார். 1914ஆம் ஆண்டிலிருந்து ஈ.வே.ரா ஈரோட்டிலும் சென்னையிலும் காங்கிரஸ் கூட்டங்களில் பேசினார். சில கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இதே நேரம் நீதிக்கட்சியினருடன் கூட ருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். அக்கால முக்கியமான தலைவர்கள் அனைவருடனும் நெருங்கி பழகி வந்தார். பிரமாணர் x பிரமாணரல்லாதார் என்ற சிந்தனை நீதிக்கட்சியினரால் ஆழமாகவே அன்று முன்வைக்கப்பட்டது. இது ஒரு கோரிக்கையாகவும் சிந்தனையாகவுமே இயங்கத் தொடங்கியது.
சென்னை மாகாணத்தை குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலைப் பாதித்த காரணங்களால் பிராமணர் x பிரமாணரல்லாதார் பிரச்சனை முக்கியமானதாக இருந்தது. இது பல்வேறு தளங்களிலும் வெளிப்பட்டது. பிராமணர் அல்லதார் நலன்களைக் காக்கும் பிரதிநிதியென்று ஜஸ்டிஸ் கட்சிக்குமிடையில் வேற்றுமை நிலவியது மட்டுமல்லாது, காங்கிரசுக்குள்ளும் பிராமணர் அல்லாதார் தேசியம் என்று குறிப்பிடக்கூடிய உட்போக்கு ஒன்றும் -ருந்தது. ஆக இந்த சமூக முரண்பாட்டுத்தன்மை ஈ.வே.ராவின் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே பின்னர் அமைந்தது.
1919ஆம் ஆண்டில் சென்னை மாகாண சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் தலைவராக ஈ.வே.ரா செயல்பட்டார். மேலும் தேசிய அரசியலிலும் முக்கியமான நிகழ்வுகள் அன்றைய காலக்கட்டத்தில் நடைப்பெறத்துவங்கின. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது. இது மக்களிடையே பலத்த கிளர்ச்சியை உருவாக்கியது. ஈ.வே.ரா ஈரோடு நகரசபை தலைவர் பதவி உட்பட 29 பதவிப் பொறுப்புகளிலிருந்து -ராஜினாமா செய்தார். அதே போன்று சேலம் நகரசபைத் தலைவர் பொறுப்பை ராஜாஜியும் ராஜினாமா செய்தார்.
ஈ.வே.ரா காங்கிரசில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார். காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். தனது ஆடம்பர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு காந்தி பக்தராக மாறினார். கதராடை அணியத் தொடங்கினார். ஈ.வே.ரா குடும்பமே சமூக சேவைக் குடும்பமாக மாறியது. 1920ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இங்கு தான் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் முடிவை கிராம மட்டம் வரை கொண்டு செல்ல தீவிரமாக -றங்கினார். மேலும் கள்ளுகடை மறியலிலும் தீவிரமாக பங்குக் கொண்டார். ஒருமாத சிறைத் தண்டனையும் பெற்றார்.
இதன்பிறகு ஈ.வே.ரா தீவிர சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறத் தொடங்கினார். அதற்கேற்ற மனவுறுதியையும் சிந்தனையும் வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். காந்திஜி , ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் பழகி தன்னிகரற்ற தலைவராக உயர்ந்தார். 1924ஆம் ஆண்டில் ஈ.வே.ரா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஈரோட்டு இல்லத்தை அலுவலகமாக்கிச் செயற்பட்டார். இதனால் ஈரோடு அரசியலில் முக்கிய இடம் பெறத் தொடங்கியது.
1924 மேயில் திருவனந்தபுரம் வைக்கம் நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் நடமாடவோ அவற்றை கடந்து செல்லவோ உரிமை கிடையாது. இதற்கு எதிராக இந்த மக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் வேகம் கொண்டது. ஈ.வே.ரா கைது செய்யப்பட்டார். இந்த வைக்கம் போராட்டம் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உரிமைகளுக்காக போராட வேண்டுமென்ற வேட்கையை வெளிப்படுத்தியது. இந்தப் போராட்டத்தில் ஈ.வே.ரா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு இருந்த சமூகநீதி சமூக சமத்துவம் பற்றிய விருப்பமும் போராட்ட மனவுறுதியும் செயலாக வெளிப்பட்டது.
வ.வே.சு. ஐயர் காந்திய வழிப்படி நெல்லை மாவட்டம் சேரமாதேவியில் குருகுலம் நடத்தி வந்தார். இங்கு பிராமணப்பிள்ளைகளுக்கு தனிச்சாப்பாடு, பாயசம் என்றும் பிராமணர் அல்லாத பிள்ளைகளுக்கு சோறும், சாப்பாடும் மட்டும்தான் என்று தனிதனியாக பந்தி பரிமாறப்பட்டு வந்தது. இது ஒரு பெரும் பிரச்சனையாக காங்கிரசில் விவாதிக்கப்பட்டது.
வவேசு ஐயர் இப்பிரச்சனையில் தனது நிலையில் உறுதியாக இருந்தார். பாரபட்சம் காட்டுவது நியாயம் என்றே கருதிவந்தார். ஈ.வே.ரா, திருவிக உள்ளிட்ட தலைவர்கள் குருகுலத்தில் நடைபெறும் இந்த இழிச்செயல் கண்டு கொதித்தார்கள். இது வெறுமனே சமபந்தி போஜன விஷயம் மட்டுமல்ல, இது ஒரு சாதி இன்னொரு சாதியைவிட உயர்ந்ததென்ற பிரச்சனை. இந்த வேறுபாடு ஒழிய வேண்டும். பிராமணர், பிரமாணரல்லாதவரிடையே ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் போதாது, அவர்களை பஞ்சமர்களும் தங்களைச் சமமானவர்கள் என்று ஏற்க வேண்டும் என ஈ.வே.ரா வாதிட்டார். ஆனால் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் இப்பிரச்சனையில் கொள்கை சார்ந்து செயற்பட பின்வாங்கியது.
இந்த குருகுலப் பிரச்சனை ஈ.வே.ரா வாழ்க்கையிலும் சிந்தனையிலும் அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் பாதையிலும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈ.வே.ரா விலகிச் செல்லும் போக்கை துரிதப்படுத்தியது. மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். அதற்குத்தான் பாடுபட வேண்டுமென்ற வேட்கை அவரை உந்தித் தள்ளியது. வைக்கம் பேராட்டம், குருகுலப் போராட்டம் ஈ.வே.ராவின் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது.
தமிழ்நாட்டில் தன் கருத்துகளை வெளியிடுவதற்காக 1925 முதல் 'குடியரசு' என்ற பத்திரிகையை தொடங்கினார். சமூகநீதி, சமூக சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய நோக்கங்களைக் குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் மேற்கிளம்ப குடியரசு தனது கடமையாகக் கொண்டு செயற்பட்டது.
1926ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதியிட்ட குடியரசு இதழில் ஈ.வே.ரா எழுதிய சுயராஜ்யமா? சுயமரியாதையா? என்னும் தலையங்கம் அவருடைய கொள்கைப் பிரகடனமாகக் கருதலாம். இதையடுத்து சுயமரியாதை -யக்கம் தொடங்கினார். 1928லிருந்து சுயமரியாதைப் பிரச்சாரத்தில் இறங்கினார். 1927ஆம் ஆண்டில் 'நாயக்கர்' என்ற சாதிப்பெயரை ஈ.வே.ராமசாமி கைவிட்டதிலிருந்து ஈ.வே.ரா என்றே அழைக்கப்பட்டார்.
"ஈ.வே.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் -ருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். -தைத்தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு -ல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்'' என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்து சமுதாயத் தொண்டாற்ற வந்தவர்.
மானமும் அறிவும் உள்ள சமுதாயத்தை உருவாக்க எவ்வெவ்வழியில் பாடுபட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அனைத்து வகையான அடிமைத்தனங்கள், கட்டுத்தளைகள், ஒடுக்குமுறைகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு புதிய சமுதாயம் சமத்துவ சமுதாயம் சுயமரியாதை சமுதாயம் உருவாகவேண்டுமென்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.
''நமது நாடு -ன்றைக்கும் சாதி அமைப்பின் கீழ் -ருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் மதஅமைப்பின் கீழ் இருந்து வருகிறது. அதுபோலவே நமது நாடு இன்னும் பொருளாதார பேத அமைப்பிலேயே இருந்து வருகிறது.
இதையெல்லாம்விட மோசம் மிகமிக் கீழ்த்தரமான மூடநம்பிக்கை அமைப்பிலேயே நமதுநாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்குப் போதிய கல்வி -ல்லாத அமைப்பில், கல்வியிலும் பேதநிலை உள்ள கல்வி அமைப்பிலும் நமது நாடு இருந்து வருகிறது.
இவ்வளவு பேதநிலை அமைப்பு உள்ள நாட்டில் ஜனநாயகம் என்றால் இதன் பொருள் என்ன? நாட்டில் ஒரு பெரும் சூதாட்டம் நடந்து வருகிறது. அதில் வலுத்தவன் ஆட்சியாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?''
இவ்வாறு 'சமுதாய மாற்றம்', 'விடுதலை, சுதந்திரம்' பற்றிய சிந்தனைகளை உரத்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் மக்களிடையே பெரும் மாறுதல்களை ஏற்படுத்தத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கம் தமிழ்ச்சமுதாயத்தில் அதுவைர ஏற்படுத்தாத தாக்கத்தை ஏற்படுத்தியது.
''நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கிற நிபந்தனையின் பேரில்தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளானாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையென்றால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.'' என ஈவெரா தெரிவிக்கும் கருத்தில் உள்ள நியாயத்தை எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
1926-30 இடையிலான காலம் ராமசாமியின் அரசியல் சாதிஒழிப்பு பற்றிய சிந்தனை இலட்சிய வடிவம் பெற்றது. 1931-1937காலக்கட்டம் அவரது வாழ்க்கையில் வேறுபட்ட பரிமாணம் பெற்றது எனலாம். 11 மாதங்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதில் சோவியத் ரஷ்யாவின் அனுபவங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையின்பால் தீவிர ஈர்ப்புக் கொண்டவராகவும் அவரது சிந்தனயைலும் செயற்பாட்டிலும் அதன் தாக்கத்தைக் காணக்கூடியதாக இருந்தது.
13.11.1938-ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஈவெராவுக்கு 'பெரியார்' என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். பெண்ணினத்தின் விடுதலைக்காக அவரளவு சிந்தித்த சிந்தனையாளர் வேறுயாரும் இருக்க முடியாது. தீவிர பெண்ணியவாதிக்குரிய உத்வேகம் கலகம் அவரிடம் அன்றே இருந்தது. பெண் ஏன் அடிமையானாள்? என்ற அறிவியல் பூர்வமான நூலை 1934ல் எழுதி வெளியிட்டார். 1930ல் சுயமரியாதை இயக்க மாநாட்டுக் துண்டறிக்கையில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று அழைக்கப்படுவோர் சிறப்பாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று துணிவாக அழைப்புவிடுத்தவர். மேலும் கர்ப்பப் பைகளை எடுக்கச்சொல்லி பெண்களுக்கு அன்றைக்கே அறைகூவல்விடுத்த தீவிர பெண்ணியவாதியாகவும் இருந்துள்ளார்.
1938-ல் ராஜாஜி தலைமையில் நடந்த காங்கிரஸ் அரசு இந்தியை கட்டாய பாடமாக்க அதனை எதிர்த்து பெரியதொரு கிளர்ச்சியினை நடத்தினார்.. கிளர்ச்சியின் இறுதியில் தனிநாடுக் கோரிக்கையும் எழுகிறது. இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்று 1939 டிசம்பரில் விடுதலை பெறுகிறார். தொடர்ந்து திராவிடக் கோரிக்கையை வலியுறுத்துகிறார். நீதிக்கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவரது செல்வாக்கால் சிறிது காலம் நீதிக்கட்சி உயிர்வாழ்கிறது. ஆனாலும் படிப்டியாக நீதிக்கட்சி தனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறது. -ந்நிலையில் 1944-ல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
1947 சுதந்திரதினத்தை துக்கநாளாக அனுசரிக்கும்படி ஈவெரா கோருகிறார். ஆனால் -ந்தக் கருத்தில் அண்ணாதுரை உடன்பாடு கொள்ளவில்லை. அவர் சுதந்திரத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டார். 1949ல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவின் தலைமையில் திமுக தோன்றுகிறது. 1950-ல் வகுப்புரிமையை வலியுறுத்தி ஈவேரா இயக்கம் நடத்துகிறார். 1952ல் ராஜாஜி தலைமையிலான ஆட்சி வருகிறது. அப்போது ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபடுகிறார். 1954ல் ராஜாஜி பதவி விலக வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகிறது.
1954ல் காமராஜர் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். அப்போது ஈவெரா காமராஜருக்கும் காங்கிரசுக்கும் ஆதரவு தருகிறார். 1956ல் மொழிவாரி மாநில உருவாக்கம் நடைபெற்றமையால் தமிழ்நாடே திராவிட நாடு என்கிற நிலைக்குச் செல்கிறார். தொடர்ந்து 1957ல் அரசியல் நிர்ணய சட்டத்தை எரிக்கும் போராட்டம் நடத்தி சிறைச்சென்றார். 1960களில் தமிழ்நாடு தமிழருக்கே என்று அறிவிப்பு செய்கிறார். இந்திய தேசியப்படம் எரிக்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டு மீண்டும் கைதாகிறார். தொடர்ந்து பல்வேறுவகையிலான போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். 1967-ல் காங்கிரஸ் தோல்வி அடைந்து திமுக ஆட்சிக்கு வருகிறது.
பின்னர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து பல்வேறு கிளர்ச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார். ஆனாலும் ஈவெரா 24.12.1973-ல் மரணமுற்றார்.
ஆக பெரியாரின் ஐம்பது ஆண்டுகால -யக்கத்தின் களம் மிக விரிவானது. அதனூடு வளர்ந்த அவரது சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழகச் சூழலில் பெரும் தாக்கம் செலுத்தியது. பகுத்தறிவு என்கிற ஒளியால் எங்கும் ஒளிப்பாய்ச்ச முற்பட்டார்.
''பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு. இதில் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்'' என்று பகுத்தறிவின் தேவையை உணர்ந்து தனது செயற்பாடுகளின் சிந்தனையின் மூலச் சரடாகவும் பகுத்தறிவை ஒவ்வொரு கணமும் பகுத்தறிவின் ஒளி கொண்டும் எதையும் பரிசோதித்து முன்னேறிக் கொண்டிருந்தார்.
பெரியாரது வாழ்வனுபவங்களும் அரசியல் செயற்பாடுகளும் எப்போதும் கலகத்தன்மைக் கொண்டதாகவே உள்ளது. ஆட்சி அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு அயோக்கியவானாக வாழ்வதை அடியோடு வெறுத்தார். அதனால் தான் அவர் கடைசி வரை தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. அனைத்து மூடநம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவு கொண்ட விளக்கம் கொடுத்தார். விடுதலையின் விரிதளம் நோக்கிய செயற்பாட்டுக்கு எப்போதும் தீவிரமாகவும் துணிவாகவும் உழைக்க வேண்டுமென்பதில் உறதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
திராவிட அரசியல் வழிவந்த தலைவர்களுள் பெரியார் அவரது வாழ்வனுபவத்தாலும் சொல்-செயல் இரண்டாலும்கூட மற்றையவர்களில் இருந்து வேறுபட்டவராகவே -ருந்துள்ளார். மொழிப்பற்று, நாட்டுப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று ஆகியவற்றை விட்டொழிக்கச் சொல்லும் நபராகவே இருந்துள்ளார். விடுதலைக்கு மிகவும் அவசியமான பற்றாக ஒன்றே ஒன்று மட்டும் குறிப்பிடுகிறார். ''உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம்தான் உண்மையாய் வேண்டும்'' என்று அவர் குறிப்பிடுவதில் இருந்து அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பது புலப்படும்.
தமிழ்நாட்டு சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றில் ஈவெ.ராமசாமி என்ற பெரியாரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பின்னோக்கிப் பார்க்கும் போது அவர் எளிதாக எந்தவொரு குறித்த வரையறைக்குள்ளும் சிறைபிடிக்கக்கூடியவர் அல்லர் என்பது நிதர்சனமான உண்மை.
செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006
குறுங்கதை- கடவுளின் கருணை!
குட்டிக் கதை என்றால் அது குழந்தைகளுக்கான கதைகள் என்றும் டெக்காமரான் கதைகளை சொல்ல ஆரம்பித்து அது வேறுமாதிரியான 'குட்டிக் கதைகளாக உறுமாறிப் போனதாலும் இதைக் குறுங்கதை என்று சொல்லியிருக்கிறேன். இவ்வளவு குட்டி கதைக்கு இவ்வளவு நீளமான விளக்கம் தேவையா என்று யோசிக்க வேண்டாம். இனி தொடர்ந்து நான் எழுதப் போகும் எல்லா குட்டிக் கதைகளுக்கும் சேர்த்து இது...
கடவுளின் கருணை!
''கணவன் மனைவிதான் என்று உறுதி செய்துவிட்டீர்களா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''பண்ணிட்டோ ம் சார். ஹஸ்பண்ட் உயிர் இப்பதான் பிரிஞ்சது. சாகறதுக்கு முன்னாடி அவரே சொன்னார்.'' பைக் ஆக்ஸிடண்டில் இறந்தவர்களின் முகத்தைத் திறந்து காட்டியபடியே பதில் சொன்னார் கான்ஸ்டபிள்.லாரி டயருக்கு அடியில் ரத்தம் இன்னும் ஈரம் காயாமல் இருந்தது.
''ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தர் தவிக்காம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் செத்துப் போனதும் கடவுளோட கருணைதான்'' ஆகாயத்தைப் பார்த்து நன்றி சொன்னார் இன்ஸ்பெக்டர்.
திடீரென செல்போன் ஒலி. இறந்து கிடந்தவரின் பாக்கெட்டிலிருந்து சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் எடுத்தார். ''அரை மணிநேரத்தில வர்றோம்னு சொல்லிட்டு எங்கப்பா போனீங்க? தம்பி இங்க அழுதுகிட்டே இருக்கான்'' என்றது ஒரு சிறுமியின் குரல்.
கடவுளின் கருணை!
''கணவன் மனைவிதான் என்று உறுதி செய்துவிட்டீர்களா?'' என்றார் இன்ஸ்பெக்டர்.
''பண்ணிட்டோ ம் சார். ஹஸ்பண்ட் உயிர் இப்பதான் பிரிஞ்சது. சாகறதுக்கு முன்னாடி அவரே சொன்னார்.'' பைக் ஆக்ஸிடண்டில் இறந்தவர்களின் முகத்தைத் திறந்து காட்டியபடியே பதில் சொன்னார் கான்ஸ்டபிள்.லாரி டயருக்கு அடியில் ரத்தம் இன்னும் ஈரம் காயாமல் இருந்தது.
''ஒருத்தர பிரிஞ்சு ஒருத்தர் தவிக்காம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் செத்துப் போனதும் கடவுளோட கருணைதான்'' ஆகாயத்தைப் பார்த்து நன்றி சொன்னார் இன்ஸ்பெக்டர்.
திடீரென செல்போன் ஒலி. இறந்து கிடந்தவரின் பாக்கெட்டிலிருந்து சப்தம் கேட்டது.
இன்ஸ்பெக்டர் எடுத்தார். ''அரை மணிநேரத்தில வர்றோம்னு சொல்லிட்டு எங்கப்பா போனீங்க? தம்பி இங்க அழுதுகிட்டே இருக்கான்'' என்றது ஒரு சிறுமியின் குரல்.
சனி, ஆகஸ்ட் 12, 2006
யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.


பெரியார் படத்தில் பெரியாராக சத்யராஜ் நடிக்கிறார். சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய தலைவரின் வாழ்க்கைப் பதிவு என்பதால் பல அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களைத் தேடிப் பிடிக்கவேண்டிய நெருக்கடி இயக்குநர் ஞான. ராஜசேகரனுக்கு.
கல்கி, ராஜாஜி, கோவை ராமராதன், நாகம்மை, கண்ணம்மை போன்றவர்களின் வேடங்களுக்கு ஆட்கள் கிடைத்துவிட்டார்கள், அண்ணா வேடத்துக்கு இன்னும் ஆள் கிடைக்கவில்லையாம்.கிடைத்தவரைக்கும் இதோ:-
யார் யார், யாரென்று கண்டுபிடியுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)