செவ்வாய், மே 01, 2012
செவ்வாய், ஏப்ரல் 24, 2012
சனி, மார்ச் 31, 2012
மூன்று முறை ஜே போடலாம்
இந்த மாத அம்ருதா இதழில்...‘வெட்டுப்புலி’ நாவல் குறித்து
ராஜ்ஜா
பள்ளிப் பருவத்திலே தபால் தலைகள் சேகரித்து வைத்துக் கொண்டு ஏதோ உலகமே என் மேசை கவயத்துக்குள் அடங்கிவிட்டதைப் போன்ற ஒரு பிரம்மை இருந்தது. அதே போல வத்திப்பெட்டி படங்கள். இரட்டைக்கிளி, புறா, சிங்கம், புலி, ஒட்டகம், காண்டா மிருகம், குள்ள வாத்து, ஓடும் ரயில், பஸ், சைக்கிள், கார், விமானம் என்று பல படங்கள் கட்டு கட்டாக, வங்கியி;ல் வைக்கப்பட்டிருக்கும்; பணத்தைப்போல கவயத்துக்குள் வைத்து அழகு பார்த்த காலம் அது. எல்லாம் கோலிகுண்டு விளையாடி ஜெயித்தவைதான்.
இந்த வத்திப்பெட்டி படங்கள் எல்லாவற்றையும் தூக்கி ஓரங்கட்டுவதைப்போல வெட்டுப்புலி படம் இருக்கும். அவ்வளவு அழகு. அவ்வளவு நேர்த்தி. அத்தோடு நம்மைப் போன்ற மானுடன் ஒருவன் கொடூரமான சிறுத்தை ஒன்றை தன்னந்தனியாக (ஒரே ஒரு வளர்ப்பு நாய் துணையோடு என்றும் சொல்லலாம்) பனங்காய் சீவும் அரிவாளால் வெட்டிச் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது உடம்பு புல்லரிக்கும். வீரத் தமிழன் அவன்.
வீரத் தமிழச்சி ஒருத்தி ஒரு புலியை முறத்தால் அடித்து விரட்டியது பற்றி தெரிந்து கொள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் முடிந்தது. ஆக இந்த வெட்டுப்புலி வீரனின் பராக்கிரமங்களைப் பற்றி நானும் என் சகாக்களும் பள்ளிப் பருவத்திலேயே வியந்து பாராட்டியிருக்கிறோம். எங்களின் பாராட்டுதல்கள் வெட்டுப்புலி படத்திற்கு மதிப்பையும் அதற்குரிய அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றன.
கோலி குண்டு விளையாட்டில் வத்திப்பெட்டி படங்களை வைத்து விளையாடும்போது, மற்ற பத்து படங்களுக்கு ஒரு வெட்டுப்புலி படம் சமம் என்று டமாரம் அடித்து சொல்லிவிட்டோம். எவனிடம் அதிக வெட்டுப்புலி படங்கள் இருக்கின்றனவோ அவன் ஒரு சின்ன ஜமீன்தாராகவே கருதப்பட்டான். ம்…அந்தப் பருவம் மீண்டும் கனவிலாவது வருமா?! இருந்தும் பழைய நினைப்பில் மிதந்து செல்வதில் கிடைக்கும் சந்தோ~ம் வேறு எதில் கிடைக்கும்?
இந்த மாதிரியான எழுதி சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி தமிழ் மகனின் ஐந்தாவது நாவலான ‘வெட்டுப்புலி’ கொடுக்கிறது. இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ நம் வாழ்வில் நடந்தது போலவே இருப்பதுதான் காரணம்.
“குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தான்;டி சட்டம் போடச் சொல்றாங்க,” (ப.92) என்று வெட்டுப்புலி நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒருவரான தசரத ரெட்டி சொல்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்தில் என் அப்பா என் அம்மாவிடம் மேற்சொல்லப்பட்ட கருத்தை சொல்லியிருக்கிறார். பின்பு நான் படித்து வளர்ந்து அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலையில் அமர்ந்த பிறகு இந்த நாவலின் இன்னொரு கதாபாத்திரமான ஆறுமுக முதலி தனக்கு புரியாத வி~யமாக சொல்கிறாரே “பார்ப்பான்கள் எல்லா வேலையிலும் சேர்ந்துவிட்டதாகவும், நூறு பேர் டாக்டருக்கு படித்தால் அதில் பார்ப்பான் அற்றவர்கள் இரண்டு பேர்தான் டாக்டர் படிக்;கிறார்கள் என்கிறார்களே இவர்களை யார் படிக்க வேண்டாம் என்றது? பார்ப்பான் எல்லாம் அரசு உத்யோகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வக்கீலாகவும் நீதிபதியாகவும் டாக்டராகவும் மாறிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் எதற்கு?” (ப.121) இதேபோல என் அப்பாவும் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கட்சி ஆரம்பித்தபின் பாவம் இந்த பார்ப்பனர்கள், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவனுக்கு அவுல் கிடைத்ததைப்போல, யார் யார் வாயிலோ மாட்டிக் கொண்டு எப்படி எல்லாம் மென்று துப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத் துள்ளியமாக தீட்டியிருக்கிறார் தமிழ்மகன்.
நாவலின் இறுதியில் பிரபா~pன் அப்பா தமிழ்ச்செல்வனிடம் சொல்கிறாரே “ஜெயலலிதா பிராமின்தானேனு சொல்லலாம். அந்தம்மாவே ‘நான் ஒரு பிராமின்’னு சொல்லிக்கலாம். பெருமையா. ஆனா சங்கராச்சாரிய அரெஸ்ட் பண்ண முடியுதே…கலைஞரால முடியுமா? எதுக்குச் சொல்றேன்னா கம்யூனலா யோசிக்கிறது போய் இப்ப சுயநலமா யோசிக்கிறாங்க…இல்லையா?” (ப.367). இந்த காலகட்டத்தில் என் அப்பா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இதே வார்த்தைகளை செல்லியிருப்பார்.
நான் கோடிட்டுக் காட்டியதையெல்லாம் படித்துவிட்டு தமிழ்மகனின் வெட்டுப்புலி ஏதோ ஒரு ஜாதியை வைத்து எழுதப்பட்டது என எண்ண வேண்டாம். எல்லா ஜாதிக்காரர்களும் இங்கு கதாபாத்திரங்கள்தான். அவரவர்களுக்குத் தகுந்தாற்போல வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை. லியோ டால்ஸ்டாயின் நாவலான போரும் அமைதியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பார்ப்பனர்கள் தலித் மக்களை எவ்வளவு கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்! மற்ற ஜாதிக்காரர்களும் இவர்களின் மனதினை எப்படி எல்லாம் புண்படுத்தியிருக்கிறார்கள். “ஒர்த்தனுக்கு தம் மேலயே மரியாதை இல்லாம போய்டுமா? ஜெகநாதபுரத்திலயும் இப்படித்தான் இருப்பாங்களா? இத்தனை நாளா எட்டாம போச்சே? அது சரி. பெரி வேப்ப மரத்தில காக்கா கூடு கட்டுது. நாய் குட்டி போடுது…காட்டு கலாக்கா காய்க்குது… அந்த மாரி லிஸ்ட்லதான் நாம இவனுங்களையும் பாக்குறோம். யாரு இதெல்லாத்தையும் நெனப்பு வெச்சி கவனிக்கிறாங்க? பறையனுக்கும் சீக்கு வரும். சக்கிலியனுக்கும் நம்மள மாரியே புள்ள பொறக்கும்னு அத்தனை நாளா யோசிக்கல. அவன் ஏதோ குடிசை போடத் தெரிஞ்ச மிருகமாட்டம் நினைக்கிறாங்க எல்லாரும். இயற்கையே அப்படித்தானா? பறையனுங்கன்னா பன்னிங்க மெரியாவா? இன்னாங்கடா இது அநியாயம்?” (ப.179) என்று கேட்பதிலாகட்டும், “வன்னியன் எவனுக்கும் சுயபுத்தி கெடையாது. சொல்புத்தி மட்டும்தான். ~த்திரியன்தான? அவன வெட்டுடான்னா வெட்டுவான். ஒரு தொழில் தெரியுமா அவனுக்கு சொந்தமா? ஆசாரிக்கு ஒரு தொழில் இருக்குது…செட்டியாருக்கு ஒரு தொழில். நாடானுங்க கடை வெக்கிறானுங்க…பாப்பானுங்க ஒடம்பு நோகாத வேலை எதுவோ அதை செய்வானுங்க…வெள்ளாளனுக்கு வௌசாயம்…நம்மளவனுக்கு கூலி வேலை செய்யறது புடிக்கும். எவனாவது ஆணையிட்டா அத செஞ்சு முடிப்பான்…ஒண்ணு, ரெண்டு இதல தப்பியிருக்கலாம்…சேரி ஆளுக்கு அடுத்த படியா உருப்படாம இருக்கிற கூட்டம் இதுதான்” (ப.365) என்று சொல்வதிலாகட்டும், தமிழ்மகன் என்ன புதிதாகச் சொல்லிவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதெல்லாம் காலம் காலமாக மக்கள் மக்களைப் பற்றி சொன்னதுதானே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் நம் தமிழ் நாட்டின் சரித்திரத்தை கோர்வையாக எழுத்து மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன என்று எண்ணும்போது, அதை இந்த நாவலின் மூலம் பதிவு செய்த தமிழ்மகனின் தில்லுக்கு மூன்று முறை ‘ஜே‘ போடலாம்.
சில நாவலாசிரியர்கள் சரித்திரக் கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் சமூகக்கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் விஞ்ஞானக் கதை எழுதுவார்கள். தமிழ்மகன் போன்ற ஒரு சிலரால்தான் சரித்திரத்தோடு சமூகத்தையும் விஞ்ஞானத்தையும் கைகோர்க்க வைத்து “ரிங் ஆப் ரிங் ஆப் ரோசஸ்” என்று பாட்டுப்பாடி ஆடவைக்கவும் முடியும்.
கதை என்னவோ மிகச் சிறிய கதைதான். சென்னா ரெட்டி என்பவர் சிறுத்தை ஒன்றை அரிவாளால் தாக்கியே கொல்கிறார். கூட இருந்தது அவரது நாய் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு 375 பக்கத்திற்கு ஒரு தமிழ் நாவல் வந்திருக்கிறது. எங்கேயும் தொய்வில்லாமல் போகிறது என்பதால்;…ஒரு நூற்றாண்டு செய்திகள் வாசகனுக்கு கிடைக்கிறது என்பதால்…இந்த கதாபாத்திரம் எங்க அப்பா, இந்த கதாபாத்திரம் எங்க தாத்தா, இதோ இது நான் தான் என்று சொல்லி புலகாங்கிதம் அடையவைக்கிறது என்பதால்…நம்முள் ஒரு எழுத்தாளன் இருந்து ‘அட! இதை நாமே எழுதியிருக்கலாமே’ என்று சொல்ல வைக்கிறது என்பதால்…தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையிலே சேர்க்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லி பெருமைப்பட முடிகிறது.
இந்த நாவலுக்கு அடித்தளமாக அமைவது வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதைதான் என்றாலும் ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலையும், அரசியலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சேர்த்து உன்னதமான படைப்பிலக்கியமாக உருவாக்கப் பட்டுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது. கதை நடக்கும் காலகட்டம் 1910-லிருந்து 2010-வரையாக இருந்தாலும், முப்பதுகளில் இருந்துதான் கதை கலைகட்ட ஆரம்பிக்கிறது. ஆக கடந்த முக்கால் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பெட்டகம் இது.
தமிழன்தான் எப்படியெல்லாம் பிரிந்துபோய் கிடக்கிறான் இந்த பாழாய்ப்போன சுயநலமிக்க அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு! நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டியின் மீது அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் வெட்டுப்புலி தாத்தாதான் என்று நினைக்கும் போது எவ்வளவு பெருமை கொள்ள முடிகிறது. உலகிலேயே எந்த தமிழனுக்கு இவ்வளவு பெருமை இருந்தது? வேறு யாருடைய படத்தை இப்படி கோடிக்கணக்கில் அச்சடித்திருக்க முடியும்? தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், முதலமைச்சரின் இருக்கையையே தங்களது லட்சியக் கனவாக கண்டு கொண்டிருக்கும் ‘கூத்தாடிகளும்’, தமிழனின் வாழ்வையே நாசப்படுத்தி, கொளுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாவல் சொல்கிறது. தொடரும்; இந்த பேராபத்துக்களில் இருந்து தமிழனையும் தமிழையும் காப்பாற்ற மீண்டும் ஒரு வெட்டுப்புலி தாத்தா, ‘இந்தியன்’ பட தாத்தா போல, ஜென்மம் எடுத்து வர வேண்டும் என்பதையே நாவல் சொல்லாமல் சொல்கிறது.
வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்றவாறே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு “சிதம்பரம் புள்ளை வெள்ளக்காரனை எதிர்த்து கப்பல் வுட்றேன்னாரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போட்டானுங்க. வாஞ்சிநாதன்னு ஒருத்தன் வெள்ளக்கார துரையைச் சுட்டுட்;டு அவனும் சுட்டுகிட்டு செத்தான். இதோ பகத்சிங்னு ஒருத்தன். தூக்குல கொண்டு போய் போட்டாங்க. காந்தி வந்துருக்காரு. பாவம்…கோட்டு போட்டுக்கிட்டிருந்தவர கோவணாண்டி ஆக்கிட்டாங்க,” (ப.23) என்று புலம்பித் தள்ளுகிறது ஒரு கதாபாத்திரம். இன்னொரு கதாபாத்திரமோ “வெள்ளைக்காரன் வேணாம்னும் சொல்றானுங்க. அவனைப்போலவே கிறாப் வெட்டிகிறானுங்க. அவன் பேசற பாi~யெ கத்துக்கிறானுங்க. அவன் சாப்பிடறத சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அவனை மட்டும் எங்க ஊரைவிட்டு போடாங்கிறானுங்க” (ப.61) என்று திட்டித் தீர்க்கிறது.
ஒரு காலத்தில், அதாவது பள்ளிப்பருவத்தில் “எம்.ஜி.ஆர். வாழ்க…சிவாஜி ஒழிக” என்று சகாக்களோடு தெருவில் சப்தம் போட்டுக் கொண்டு போனதுண்டு. கல்லூரி நாட்களிலே திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி துவங்கியபோது சகமாணவர்களோடு “மலையாளத்தான் ஒழிக…தமிழன் வாழ்க” என்று கூச்சலிட்டுக் கொண்டு போனதும் உண்டு. இரண்டு சமயங்களிலும் என் அப்பாவிடம் நான் உதை வாங்கியதுண்டு. முதலில் உதை…அப்புறம்தான் பேச்சு வார்த்தை. இது அப்பா நீதி. “ஏண்டா நாயே! அவனவன் வயித்துக்கு கூத்தடறான். அரசியல் பண்றான். எங்கேயாவது ஓரமா நின்னுகினு வேடிக்கை பார்ப்பியா…அதெவுட்டுட்டு வாழ்க ஒழிக கோ~மா போடற? படிச்சி மேல வர்ற வேலைய பாரு…போ…போ” என்று என் அப்பா சொன்னதை இன்றும் என் இரு கன்னங்களும் முதுகும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதேதான் நாவலிலும் நடக்கிறது. என்னைப் போன்று பலருக்கும் பூசை கிடைத்திருக்கும். தமிழ்மகனையும் சேர்த்துத்தான். நமக்கு நடப்பதைத்தானே நாம் திறம்பட பதிவு செய்ய முடியும்.
தமிழ்மகனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே அவர் கதை சொல்லும் திறனும் அவரது மொழிநடையும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய ‘எட்டாயிரம் தலைமுறை’ என்ற சிறுகதையைப் படித்துவிட்டு, அற்புதமானதொரு தமிழ்ச் சிறுகதை என்று வியந்து அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து நான் தொடர்ந்து எழுதி வரும் ‘காண்டெம்பரரி வைப்ஸ்’ (ஊழவெநஅpழசயசல ஏiடிநள – ழுஉவ-னுநஉ. 2009) என்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிட்டேன். உலகத்து தலை சிறந்த கதைகளில் அதுவும் ஒன்று என்பதை வாசகர்கள் எனக்கு அனுப்பியிருந்த பல ஈமெயில் கடிதங்கள் சொல்லின.
வித்தியாசமான படைப்புலகம்…அதி வித்தியாசமான மொழிநடை. இதுவே தமிழ்மகனிஸம். கல்லூரி நாட்களிலே இர்விங் வாலேஸ் (ஐசறiபெ றுயடடயஉந) எழுதிய நாவல்களை ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். படுக்கையறைக் காட்சிகளை தேவைக்கேற்ப அமைப்பதிலே வல்லவர் அவர். ‘வெட்டுப்புலி’யிலும் இரண்டு முறை தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு மூன்று பக்கங்களுக்கு (ப.125-127) ஒரு காட்சி -- ருசிகரமானதொரு காட்சி வருணிக்கப்படுகிறது. எந்த வித விரசமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்களாலேயே கிரங்கடித்திருக்கிறார். ஒரு செக்ஸ் காட்சியை இவ்வளவு துள்ளியமாக, நாசூக்காக வேறு எந்த தமிழ் எழுத்தாளராவது சொல்லியிருக்கிறாரா என்பது சந்தேகத்திற்குரியதே.
ஊர்வம்பு எழுதினாலும், சினிமா கொட்டகை பற்றி எழுதினாலும், குதிரை சவாரி பற்றி எழுதினாலும், புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையைப் பற்றி எழுதினாலும் தமிழ்மகனின் நடை தனி நடைதான்.
நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் ‘எண்டர் தி டிராகன்’ படம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் வரும் சண்டைகளை கேலிப் பொருளாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. பென்ஹர், சாம்சன் அண்ட் டிலைலா, டென் கமாண்ட்மென்ட்ஸ், காட் பாதர் போன்ற ஆங்கிலப் படங்கள் அவனுடைய ரசனைக்கு மெருகூட்டி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜனி, கமல் போன்றவர்கள் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமைகளை வேகமாக விலக்குகின்றன. இதேபோல் நமக்குள் அரசியலும், சினிமாவும் ஏற்படுத்தியிருந்த பல பிரமைகளை தமிழ்மகனின் வெட்டுப்புலி உடைத்தெறிகின்றது. “மாறிக்னே இருக்குதுபா ஒலகம்…ஒவ்வொரு பத்து வரு~த்துக்கு ஒருதரம் பாக்கறதுதான் பளிச்சுனு தெரியுது…செகண்டுக்கு செகண்டு மாறிக்னு இருக்குது தெரியுமா? ஜெர்மன் தாடிக்காரன் அதான் சொல்றான்…மாற்றம்தான் நிலையானதுனு” (ப.335) என்று நறுக்குத் தெறித்தாற்போல ஒரு கதாபாத்திரம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை ‘ஏக் தம்மில்’ படிக்கக்கூடிய இந்த நாவலில் காணலாம்.
ராஜ்ஜா
னு-88, புவேன்கரே வீதி,
உழந்தை கீரைப்பாளையம்
புதுச்சேரி – 605 004
செல்: 9443617124
ராஜ்ஜா
பள்ளிப் பருவத்திலே தபால் தலைகள் சேகரித்து வைத்துக் கொண்டு ஏதோ உலகமே என் மேசை கவயத்துக்குள் அடங்கிவிட்டதைப் போன்ற ஒரு பிரம்மை இருந்தது. அதே போல வத்திப்பெட்டி படங்கள். இரட்டைக்கிளி, புறா, சிங்கம், புலி, ஒட்டகம், காண்டா மிருகம், குள்ள வாத்து, ஓடும் ரயில், பஸ், சைக்கிள், கார், விமானம் என்று பல படங்கள் கட்டு கட்டாக, வங்கியி;ல் வைக்கப்பட்டிருக்கும்; பணத்தைப்போல கவயத்துக்குள் வைத்து அழகு பார்த்த காலம் அது. எல்லாம் கோலிகுண்டு விளையாடி ஜெயித்தவைதான்.
இந்த வத்திப்பெட்டி படங்கள் எல்லாவற்றையும் தூக்கி ஓரங்கட்டுவதைப்போல வெட்டுப்புலி படம் இருக்கும். அவ்வளவு அழகு. அவ்வளவு நேர்த்தி. அத்தோடு நம்மைப் போன்ற மானுடன் ஒருவன் கொடூரமான சிறுத்தை ஒன்றை தன்னந்தனியாக (ஒரே ஒரு வளர்ப்பு நாய் துணையோடு என்றும் சொல்லலாம்) பனங்காய் சீவும் அரிவாளால் வெட்டிச் சாய்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது உடம்பு புல்லரிக்கும். வீரத் தமிழன் அவன்.
வீரத் தமிழச்சி ஒருத்தி ஒரு புலியை முறத்தால் அடித்து விரட்டியது பற்றி தெரிந்து கொள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் முடிந்தது. ஆக இந்த வெட்டுப்புலி வீரனின் பராக்கிரமங்களைப் பற்றி நானும் என் சகாக்களும் பள்ளிப் பருவத்திலேயே வியந்து பாராட்டியிருக்கிறோம். எங்களின் பாராட்டுதல்கள் வெட்டுப்புலி படத்திற்கு மதிப்பையும் அதற்குரிய அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றன.
கோலி குண்டு விளையாட்டில் வத்திப்பெட்டி படங்களை வைத்து விளையாடும்போது, மற்ற பத்து படங்களுக்கு ஒரு வெட்டுப்புலி படம் சமம் என்று டமாரம் அடித்து சொல்லிவிட்டோம். எவனிடம் அதிக வெட்டுப்புலி படங்கள் இருக்கின்றனவோ அவன் ஒரு சின்ன ஜமீன்தாராகவே கருதப்பட்டான். ம்…அந்தப் பருவம் மீண்டும் கனவிலாவது வருமா?! இருந்தும் பழைய நினைப்பில் மிதந்து செல்வதில் கிடைக்கும் சந்தோ~ம் வேறு எதில் கிடைக்கும்?
இந்த மாதிரியான எழுதி சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி தமிழ் மகனின் ஐந்தாவது நாவலான ‘வெட்டுப்புலி’ கொடுக்கிறது. இந்த நாவலில் எழுதப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஏதோ நம் வாழ்வில் நடந்தது போலவே இருப்பதுதான் காரணம்.
“குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி. பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தான்;டி சட்டம் போடச் சொல்றாங்க,” (ப.92) என்று வெட்டுப்புலி நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒருவரான தசரத ரெட்டி சொல்கிறார். நான் சிறுவனாய் இருந்த காலத்தில் என் அப்பா என் அம்மாவிடம் மேற்சொல்லப்பட்ட கருத்தை சொல்லியிருக்கிறார். பின்பு நான் படித்து வளர்ந்து அரசு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலையில் அமர்ந்த பிறகு இந்த நாவலின் இன்னொரு கதாபாத்திரமான ஆறுமுக முதலி தனக்கு புரியாத வி~யமாக சொல்கிறாரே “பார்ப்பான்கள் எல்லா வேலையிலும் சேர்ந்துவிட்டதாகவும், நூறு பேர் டாக்டருக்கு படித்தால் அதில் பார்ப்பான் அற்றவர்கள் இரண்டு பேர்தான் டாக்டர் படிக்;கிறார்கள் என்கிறார்களே இவர்களை யார் படிக்க வேண்டாம் என்றது? பார்ப்பான் எல்லாம் அரசு உத்யோகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வக்கீலாகவும் நீதிபதியாகவும் டாக்டராகவும் மாறிவிட்டார்கள் என்ற வயிற்றெரிச்சல் எதற்கு?” (ப.121) இதேபோல என் அப்பாவும் சொல்லியிருக்கிறார்.
பெரியார் கட்சி ஆரம்பித்தபின் பாவம் இந்த பார்ப்பனர்கள், வெறும் வாயை மென்று கொண்டிருந்தவனுக்கு அவுல் கிடைத்ததைப்போல, யார் யார் வாயிலோ மாட்டிக் கொண்டு எப்படி எல்லாம் மென்று துப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை மிகத் துள்ளியமாக தீட்டியிருக்கிறார் தமிழ்மகன்.
நாவலின் இறுதியில் பிரபா~pன் அப்பா தமிழ்ச்செல்வனிடம் சொல்கிறாரே “ஜெயலலிதா பிராமின்தானேனு சொல்லலாம். அந்தம்மாவே ‘நான் ஒரு பிராமின்’னு சொல்லிக்கலாம். பெருமையா. ஆனா சங்கராச்சாரிய அரெஸ்ட் பண்ண முடியுதே…கலைஞரால முடியுமா? எதுக்குச் சொல்றேன்னா கம்யூனலா யோசிக்கிறது போய் இப்ப சுயநலமா யோசிக்கிறாங்க…இல்லையா?” (ப.367). இந்த காலகட்டத்தில் என் அப்பா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இதே வார்த்தைகளை செல்லியிருப்பார்.
நான் கோடிட்டுக் காட்டியதையெல்லாம் படித்துவிட்டு தமிழ்மகனின் வெட்டுப்புலி ஏதோ ஒரு ஜாதியை வைத்து எழுதப்பட்டது என எண்ண வேண்டாம். எல்லா ஜாதிக்காரர்களும் இங்கு கதாபாத்திரங்கள்தான். அவரவர்களுக்குத் தகுந்தாற்போல வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு பஞ்சமே இல்லை. லியோ டால்ஸ்டாயின் நாவலான போரும் அமைதியும் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பார்ப்பனர்கள் தலித் மக்களை எவ்வளவு கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்! மற்ற ஜாதிக்காரர்களும் இவர்களின் மனதினை எப்படி எல்லாம் புண்படுத்தியிருக்கிறார்கள். “ஒர்த்தனுக்கு தம் மேலயே மரியாதை இல்லாம போய்டுமா? ஜெகநாதபுரத்திலயும் இப்படித்தான் இருப்பாங்களா? இத்தனை நாளா எட்டாம போச்சே? அது சரி. பெரி வேப்ப மரத்தில காக்கா கூடு கட்டுது. நாய் குட்டி போடுது…காட்டு கலாக்கா காய்க்குது… அந்த மாரி லிஸ்ட்லதான் நாம இவனுங்களையும் பாக்குறோம். யாரு இதெல்லாத்தையும் நெனப்பு வெச்சி கவனிக்கிறாங்க? பறையனுக்கும் சீக்கு வரும். சக்கிலியனுக்கும் நம்மள மாரியே புள்ள பொறக்கும்னு அத்தனை நாளா யோசிக்கல. அவன் ஏதோ குடிசை போடத் தெரிஞ்ச மிருகமாட்டம் நினைக்கிறாங்க எல்லாரும். இயற்கையே அப்படித்தானா? பறையனுங்கன்னா பன்னிங்க மெரியாவா? இன்னாங்கடா இது அநியாயம்?” (ப.179) என்று கேட்பதிலாகட்டும், “வன்னியன் எவனுக்கும் சுயபுத்தி கெடையாது. சொல்புத்தி மட்டும்தான். ~த்திரியன்தான? அவன வெட்டுடான்னா வெட்டுவான். ஒரு தொழில் தெரியுமா அவனுக்கு சொந்தமா? ஆசாரிக்கு ஒரு தொழில் இருக்குது…செட்டியாருக்கு ஒரு தொழில். நாடானுங்க கடை வெக்கிறானுங்க…பாப்பானுங்க ஒடம்பு நோகாத வேலை எதுவோ அதை செய்வானுங்க…வெள்ளாளனுக்கு வௌசாயம்…நம்மளவனுக்கு கூலி வேலை செய்யறது புடிக்கும். எவனாவது ஆணையிட்டா அத செஞ்சு முடிப்பான்…ஒண்ணு, ரெண்டு இதல தப்பியிருக்கலாம்…சேரி ஆளுக்கு அடுத்த படியா உருப்படாம இருக்கிற கூட்டம் இதுதான்” (ப.365) என்று சொல்வதிலாகட்டும், தமிழ்மகன் என்ன புதிதாகச் சொல்லிவிட்டார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதெல்லாம் காலம் காலமாக மக்கள் மக்களைப் பற்றி சொன்னதுதானே என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் நம் தமிழ் நாட்டின் சரித்திரத்தை கோர்வையாக எழுத்து மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன என்று எண்ணும்போது, அதை இந்த நாவலின் மூலம் பதிவு செய்த தமிழ்மகனின் தில்லுக்கு மூன்று முறை ‘ஜே‘ போடலாம்.
சில நாவலாசிரியர்கள் சரித்திரக் கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் சமூகக்கதை எழுதுவார்கள். சில நாவலாசிரியர்கள் விஞ்ஞானக் கதை எழுதுவார்கள். தமிழ்மகன் போன்ற ஒரு சிலரால்தான் சரித்திரத்தோடு சமூகத்தையும் விஞ்ஞானத்தையும் கைகோர்க்க வைத்து “ரிங் ஆப் ரிங் ஆப் ரோசஸ்” என்று பாட்டுப்பாடி ஆடவைக்கவும் முடியும்.
கதை என்னவோ மிகச் சிறிய கதைதான். சென்னா ரெட்டி என்பவர் சிறுத்தை ஒன்றை அரிவாளால் தாக்கியே கொல்கிறார். கூட இருந்தது அவரது நாய் மட்டும்தான். இதை வைத்துக் கொண்டு 375 பக்கத்திற்கு ஒரு தமிழ் நாவல் வந்திருக்கிறது. எங்கேயும் தொய்வில்லாமல் போகிறது என்பதால்;…ஒரு நூற்றாண்டு செய்திகள் வாசகனுக்கு கிடைக்கிறது என்பதால்…இந்த கதாபாத்திரம் எங்க அப்பா, இந்த கதாபாத்திரம் எங்க தாத்தா, இதோ இது நான் தான் என்று சொல்லி புலகாங்கிதம் அடையவைக்கிறது என்பதால்…நம்முள் ஒரு எழுத்தாளன் இருந்து ‘அட! இதை நாமே எழுதியிருக்கலாமே’ என்று சொல்ல வைக்கிறது என்பதால்…தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையிலே சேர்க்கப்படவேண்டிய ஒன்று என்று சொல்லி பெருமைப்பட முடிகிறது.
இந்த நாவலுக்கு அடித்தளமாக அமைவது வெட்டுப்புலி தீப்பெட்டியின் கதைதான் என்றாலும் ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலையும், அரசியலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும் சேர்த்து உன்னதமான படைப்பிலக்கியமாக உருவாக்கப் பட்டுள்ளது மனதுக்கு நிறைவைத் தருகிறது. கதை நடக்கும் காலகட்டம் 1910-லிருந்து 2010-வரையாக இருந்தாலும், முப்பதுகளில் இருந்துதான் கதை கலைகட்ட ஆரம்பிக்கிறது. ஆக கடந்த முக்கால் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பெட்டகம் இது.
தமிழன்தான் எப்படியெல்லாம் பிரிந்துபோய் கிடக்கிறான் இந்த பாழாய்ப்போன சுயநலமிக்க அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு! நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீப்பெட்டியின் மீது அச்சடிக்கப்பட்ட ஒரே தமிழனின் படம் வெட்டுப்புலி தாத்தாதான் என்று நினைக்கும் போது எவ்வளவு பெருமை கொள்ள முடிகிறது. உலகிலேயே எந்த தமிழனுக்கு இவ்வளவு பெருமை இருந்தது? வேறு யாருடைய படத்தை இப்படி கோடிக்கணக்கில் அச்சடித்திருக்க முடியும்? தமிழனின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும், முதலமைச்சரின் இருக்கையையே தங்களது லட்சியக் கனவாக கண்டு கொண்டிருக்கும் ‘கூத்தாடிகளும்’, தமிழனின் வாழ்வையே நாசப்படுத்தி, கொளுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நாவல் சொல்கிறது. தொடரும்; இந்த பேராபத்துக்களில் இருந்து தமிழனையும் தமிழையும் காப்பாற்ற மீண்டும் ஒரு வெட்டுப்புலி தாத்தா, ‘இந்தியன்’ பட தாத்தா போல, ஜென்மம் எடுத்து வர வேண்டும் என்பதையே நாவல் சொல்லாமல் சொல்கிறது.
வரலாற்று உண்மைகள் அவரவர் ஆர்வங்களுக்கும் யூகங்களுக்கும் ஏற்றவாறே நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு “சிதம்பரம் புள்ளை வெள்ளக்காரனை எதிர்த்து கப்பல் வுட்றேன்னாரு. அவரைத் தூக்கி ஜெயில்ல போட்டானுங்க. வாஞ்சிநாதன்னு ஒருத்தன் வெள்ளக்கார துரையைச் சுட்டுட்;டு அவனும் சுட்டுகிட்டு செத்தான். இதோ பகத்சிங்னு ஒருத்தன். தூக்குல கொண்டு போய் போட்டாங்க. காந்தி வந்துருக்காரு. பாவம்…கோட்டு போட்டுக்கிட்டிருந்தவர கோவணாண்டி ஆக்கிட்டாங்க,” (ப.23) என்று புலம்பித் தள்ளுகிறது ஒரு கதாபாத்திரம். இன்னொரு கதாபாத்திரமோ “வெள்ளைக்காரன் வேணாம்னும் சொல்றானுங்க. அவனைப்போலவே கிறாப் வெட்டிகிறானுங்க. அவன் பேசற பாi~யெ கத்துக்கிறானுங்க. அவன் சாப்பிடறத சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அவனை மட்டும் எங்க ஊரைவிட்டு போடாங்கிறானுங்க” (ப.61) என்று திட்டித் தீர்க்கிறது.
ஒரு காலத்தில், அதாவது பள்ளிப்பருவத்தில் “எம்.ஜி.ஆர். வாழ்க…சிவாஜி ஒழிக” என்று சகாக்களோடு தெருவில் சப்தம் போட்டுக் கொண்டு போனதுண்டு. கல்லூரி நாட்களிலே திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து தனிக்கட்சி துவங்கியபோது சகமாணவர்களோடு “மலையாளத்தான் ஒழிக…தமிழன் வாழ்க” என்று கூச்சலிட்டுக் கொண்டு போனதும் உண்டு. இரண்டு சமயங்களிலும் என் அப்பாவிடம் நான் உதை வாங்கியதுண்டு. முதலில் உதை…அப்புறம்தான் பேச்சு வார்த்தை. இது அப்பா நீதி. “ஏண்டா நாயே! அவனவன் வயித்துக்கு கூத்தடறான். அரசியல் பண்றான். எங்கேயாவது ஓரமா நின்னுகினு வேடிக்கை பார்ப்பியா…அதெவுட்டுட்டு வாழ்க ஒழிக கோ~மா போடற? படிச்சி மேல வர்ற வேலைய பாரு…போ…போ” என்று என் அப்பா சொன்னதை இன்றும் என் இரு கன்னங்களும் முதுகும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதேதான் நாவலிலும் நடக்கிறது. என்னைப் போன்று பலருக்கும் பூசை கிடைத்திருக்கும். தமிழ்மகனையும் சேர்த்துத்தான். நமக்கு நடப்பதைத்தானே நாம் திறம்பட பதிவு செய்ய முடியும்.
தமிழ்மகனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே அவர் கதை சொல்லும் திறனும் அவரது மொழிநடையும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய ‘எட்டாயிரம் தலைமுறை’ என்ற சிறுகதையைப் படித்துவிட்டு, அற்புதமானதொரு தமிழ்ச் சிறுகதை என்று வியந்து அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து நான் தொடர்ந்து எழுதி வரும் ‘காண்டெம்பரரி வைப்ஸ்’ (ஊழவெநஅpழசயசல ஏiடிநள – ழுஉவ-னுநஉ. 2009) என்ற இலக்கிய பத்திரிகையில் வெளியிட்டேன். உலகத்து தலை சிறந்த கதைகளில் அதுவும் ஒன்று என்பதை வாசகர்கள் எனக்கு அனுப்பியிருந்த பல ஈமெயில் கடிதங்கள் சொல்லின.
வித்தியாசமான படைப்புலகம்…அதி வித்தியாசமான மொழிநடை. இதுவே தமிழ்மகனிஸம். கல்லூரி நாட்களிலே இர்விங் வாலேஸ் (ஐசறiபெ றுயடடயஉந) எழுதிய நாவல்களை ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். படுக்கையறைக் காட்சிகளை தேவைக்கேற்ப அமைப்பதிலே வல்லவர் அவர். ‘வெட்டுப்புலி’யிலும் இரண்டு முறை தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு மூன்று பக்கங்களுக்கு (ப.125-127) ஒரு காட்சி -- ருசிகரமானதொரு காட்சி வருணிக்கப்படுகிறது. எந்த வித விரசமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்களாலேயே கிரங்கடித்திருக்கிறார். ஒரு செக்ஸ் காட்சியை இவ்வளவு துள்ளியமாக, நாசூக்காக வேறு எந்த தமிழ் எழுத்தாளராவது சொல்லியிருக்கிறாரா என்பது சந்தேகத்திற்குரியதே.
ஊர்வம்பு எழுதினாலும், சினிமா கொட்டகை பற்றி எழுதினாலும், குதிரை சவாரி பற்றி எழுதினாலும், புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையைப் பற்றி எழுதினாலும் தமிழ்மகனின் நடை தனி நடைதான்.
நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் ‘எண்டர் தி டிராகன்’ படம் பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் வரும் சண்டைகளை கேலிப் பொருளாகப் பார்க்க ஆரம்பிக்கிறது. பென்ஹர், சாம்சன் அண்ட் டிலைலா, டென் கமாண்ட்மென்ட்ஸ், காட் பாதர் போன்ற ஆங்கிலப் படங்கள் அவனுடைய ரசனைக்கு மெருகூட்டி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜனி, கமல் போன்றவர்கள் அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த பிரமைகளை வேகமாக விலக்குகின்றன. இதேபோல் நமக்குள் அரசியலும், சினிமாவும் ஏற்படுத்தியிருந்த பல பிரமைகளை தமிழ்மகனின் வெட்டுப்புலி உடைத்தெறிகின்றது. “மாறிக்னே இருக்குதுபா ஒலகம்…ஒவ்வொரு பத்து வரு~த்துக்கு ஒருதரம் பாக்கறதுதான் பளிச்சுனு தெரியுது…செகண்டுக்கு செகண்டு மாறிக்னு இருக்குது தெரியுமா? ஜெர்மன் தாடிக்காரன் அதான் சொல்றான்…மாற்றம்தான் நிலையானதுனு” (ப.335) என்று நறுக்குத் தெறித்தாற்போல ஒரு கதாபாத்திரம் சொல்வது எவ்வளவு உண்மை என்பதை ‘ஏக் தம்மில்’ படிக்கக்கூடிய இந்த நாவலில் காணலாம்.
ராஜ்ஜா
னு-88, புவேன்கரே வீதி,
உழந்தை கீரைப்பாளையம்
புதுச்சேரி – 605 004
செல்: 9443617124
வெள்ளி, மார்ச் 30, 2012
100 ஆண்டுகளுக்குப் பிறகு...

தாதா சாகேப் பால்கே 1912- &ல் அரிச்சந்திரா என்ற படத்தை முதன் முதலாக இயக்கினார். இந்தியாவின் முதல் திரைப்படம். முதல் மவுனப் படம். முதல் கறுப்பு வெள்ளைப் படம் என்ற பல் முதல்கள் இருந்தாலும் அந்தப் படத்துக்கு அவர் ‘முதல்’ போட்டதுதான் பெரிய விஷயம். படத்தின் வியாபாரம் எப்படி இருக்கும் என்ற எந்த சாதக பாதகங்களும் தெரியாத நிலையில் அதில் பணத்தை போடுவதற்குப் பலரும் தயங்கினர். அந்தப் படத்துக்காக அவர் முயன்று செலவிட்டார். அப்படியும் அதில் நடிப்பதற்கு நடிகர்கள் கிடைக்கவில்லை. தன் குடும்ப உறுப்பினர்களை நடிகர்களாக்கினார்.
அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியான ஒரு படத்துக்கும் அதே சிரமம்.
சங்ககிரி ராசுகுமார் இயக்கிய ‘வெங்காயம்’ படம்தான் அது. தன் வீடு, தன் உறவினர்கள் வீடுகள், தன் தந்தை, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, மாமா, அத்தை, பாட்டி, தம்பிகள், தங்கைகள் அனைவரையும் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்.
படத்தில் முற்போக்குக் கருத்துகளைச் சொன்னார். சிறுவர்களை வைத்து அதைச் சாதித்திருக்கிறார் என்பதையெல்லாம்விட முக்கியமானது அவருடைய முயற்சி. பத்து கோடி, நூறு கோடி என்று பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தயங்கித் தயங்கி நுழையக்கூடிய சினிமா உலகம் ஒரு சாமானியனின் குடிசைத் தொழிலாக மாறியிருப்பது அசாதாரணமான முரண். படத்தைப் பார்த்துவிட்டு பாரதிராஜா, விக்கிரமன், சேரன், ஆர்.கே.செல்வமணி, ரோகிணி போன்ற பல இயக்குநர்கள் இந்த அரிய முயற்சியை மனம் திறந்து பாரட்டியதோடு, தகுந்த விளம்பரத்தோடு வெளியிடலாம் என்று படம் வெளியான இரண்டாவது நாளே படத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். சொல்லியபடியே இயக்குநர் சேரன் இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
எப்படி இந்தத் துணிச்சல் வந்தது? -சங்ககிரி ராச்குமாரைச் சந்தித்த போது கேட்டேன்.
‘‘துணிச்சல் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. இயலாமைதான் காரணம். என்னிடம் ஒரு கதை மட்டும் இருந்தது. அதுதான் என் மூலதனம். அதில் எந்த நடிகரையும் நடிக்க வைக்க என்னிடம் பொருளாதாரம் இல்லை. கதையில் மொத்தம் 105 பேர் நடிக்க வேண்டியிருந்தது. நாயகன், நாயகிக்கு மட்டும் இரண்டு பேரை வெளியில் இருந்து தேர்வு செய்தேன். மீதி 103 பேரும் என்னுடைய உறவினர்கள்தான். நானே க்தை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய பொறுப்புகளை செய்தேன். ஒரு கேரக்டரில் நடிக்கவும் வேண்டியிருந்தது. மேக் அப், சமையல் போன்ற பொறுப்புகளும்கூட எங்கள் குடும்பத்தினரே செய்தனர்.
ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு ஒரு போட்டோ எடுப்பதே ஆடம்பரமான விஷயமாக இருக்கும்போது ஒரு சினிமாவை எடுப்பதற்கான துணிச்சலைத் தந்தவர்கள் என் குடும்பத்தினர்தான். பத்தாயிரம், இருபதாயிரம், என்று கடன் வாங்கித்தான் படத்தை தயாரித்தேன். எப்போதெல்லாம் ரெட் ஒன் கேமிராவை வாடகைக்கு எடுக்க காசு கிடைக்கிறதோ அப்போதொல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அன்றைக்கு வயல் வேலைகளை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு எனக்கு உதவி செய்ய வந்து விடுவார்கள் என் குடும்பத்தினர். எல்லோரும் அவரவர் உடையில் வந்து நடித்தனர். அவர்களுடைய லுங்கிகள், டவுசர்கள், பாவாடைச் சட்டைகள்தான் காஸ்ட்யூம். நடிகர் சத்யராஜை அணுகி என் முயற்சியைச் சொன்ன போது அவர், அவராகவே ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்க சம்மதித்தார்.
குடும்பத்தினர் யாருக்கும் சினிமா அனுபவமோ, நடிப்பில் அனுபவமோ இல்லை. படத்தில் கூத்துக் கலைஞனாக நடித்து மக்களின் பாராட்டைப் பெற்றவர் என்னுடைய தந்தை’’ என்றார்.
படத்தில் பலரும் வெகு இயல்பாக நடித்திருந்தனர். குறிப்பாக ராச்குமாரின் அப்பா. கண்கலங்க வைத்துவிட்டார்.
சர்வதேச விருது பெறும் பல திரைப்படங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரானவைதான். நியூஸிலாந்தில் பாடல் காட்சி, தேவையில்லாத பிரம்மாண்டம், போன்றவற்றில் இருந்து தமிழ் சினிமாவை மீட்க முடியும் என்பதற்கு என்னால் முடிந்த நிரூபணம் இது’’ என்கிறார் ராசுகுமார்.
வெங்காயம்... உரிக்க உரிக்க பல உண்மைகளைச் சொல்லுகிறது.
சனி, மார்ச் 10, 2012
வெண்ணிற இரவுகள்
"இத்தனை நிர்மலமான வானத்தின் கீழ்தான் முட்டாள்களும் முசுடர்களும் இருக்கிறார்களா?' என்ற ஆச்சர்யத்தோடு தொடங்குகிறது இந் நாவல். அந்த முதல்வரியேகூட படிப்பதற்கான மனநிலையைத் தந்துவிடும் பலருக்கு. வெண்ணிற இரவுகளை வாசிப்பது என்பது வெண்ணிற இரவுகளில் வசிப்பது என்று பொருள். வாசிப்பது, வசிப்பது என்பது ஏதோ வார்த்தை ஜோடனை என்று நினைப்பவர்களுக்கு அதற்கான தாகத்தோடு இன்னும் அந்தக் குறுநாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது. நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.
சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு.
தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.
தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.
இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.
புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.
அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.
இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?
இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.
தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.
பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.
நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை
உண்மையில் ஒரு நாவலைப் படிப்பதற்கான மனநிலையும் தாகமும்கூட தேவையாகத்தான் இருக்கிறது. நான் முதன் முதலில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அதைப் பற்றிச் சிலாகித்துத்துச் சொல்ல ஒருத்தரும் இல்லை எனக்கு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தபோதும் என்னை அது ஈர்த்துக் கொண்டது. இருப்பினும் மொத்தமாக இது என்ன மாதிரியான கதை என்ற ஆர்வம் மட்டும்தான் அது.
சுமார் 20... 25 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம். 5 ரூபாய் விலையுள்ள அந்த அழகிய புத்தகத்தை என்.சி.பி.ஹெச். நண்பர் ஒருவரின் அறிமுகம் காரணமாக 20 சதவீதம் விலைக் கழிவுடன் வாங்க முடிந்ததில் அத்தனைத் திருப்தி. அப்போது ரஷ்ய எழுத்தாளர்களில் டால்ஸ்டாயும் கார்க்கியும் மட்டுமே அறிமுகமாகியிருந்தார்கள். "புத்துயிர்ப்பு'ம் "தாயு'ம் படித்திருந்தேன். கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் மனதில் நிறுத்துவது சிரமமாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபட ஆரம்பித்திருந்தது. கத்யூஸô, மாஸ்லவா, நெஹ்லூதவ், குருஷேவ், ப்ரஷ்னெவ், ஆந்த்ரபோவ் என்று அந்தப் பெயர்கள் மீது ஒருவித தூரத்துச் சொந்தங்கள் போல ஒரு பாசம் வந்திருந்தது எனக்கு.
தூரம் என்றால் பீட்டர்ஸ்பெர்க் தூரம்.
தொகுப்பில் வெண்ணிற இரவுகள் தவிர வேறு சில கதைகளும் இருந்தாலும் வெண்ணிற இரவுகளைத்தான் முதலில் படித்தேன். படித்துப் பார்த்த போது ஏற்கெனவே படித்திருந்த ரஷ்யக் கதைகளுக்கான அடையாளங்களோடு ஒரு தீவிரமான காதல் கதையாக மனதில் பதிவானது. செகாவ், துர்கேனிவ், நிகோலய் கோகல், ஷோலகவ், ஐத்மாத்தவ், வஷிலியேவிச், போன்ற பலருடைய கதைகளையும் படிக்க ஆரம்பித்து மாஸ்கோ நகரில் சுற்றித் திரிகிற மாதிரி பழகியிருந்தது மனசு.
இத்தகைய தருணத்தில் மீண்டும் ஒரு முறை வெண்ணிற இரவுகளைப் படித்தேன். அப்போது பலரும் என்னிடம் இந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று விசாரிப்பு வகையிலான சிபாரிசு செய்திருந்தார்கள். இந்த முறை சற்று நிதானமாகப் படித்தேன். முதல்முறை மொத்தத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று மட்டுமே பார்த்தேன். இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா என்பது மட்டுமே கதையென்று முடிவு செய்து படித்úது ஞாபகம் இருந்தது. இந்த முறை வரிகளில் கவனம். நம் கதாநாயகன் எப்படி தன்னைப் பற்றி வெளிப்படுத்துகிறான், நாஸ்தென்கா எப்படி தன் கதையைச் சொல்கிறாள் என்பதை கவனமாகப் பார்த்தேன். இப்படியெல்லாம் உணர்வுச் சிக்கல்கள் இருக்குமா என்ற வியப்பு. மனிதர்கள் இப்படியெல்லாம் ஏங்குவார்களா என்று ஆச்சர்யம். இரவு வெண்மையாக இருக்குமா என்ற சந்தேகம். பரிச்சயம் இல்லாத ஆணிடம் ஒரு பெண் நள்ளிரவில் சந்தித்து தன் சொந்தப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வாளா என்ற தர்க்க நியாயம்... இப்படியெல்லாம் சின்னச் சின்னத் தயக்கங்களும் நானும் தஸ்தயேவஸ்கி படித்திருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதும் பழக்கமாகியிருந்தது எனக்கு.
புதுவசந்தம் என்றொரு சினிமா வந்தது. டைரக்டர் விக்ரமன் இயக்கியது. அதில் ஒரு பெண் தன் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். அவன் வருவானா, எங்கிருக்கிறான் என்ற குழப்பங்கள். அவன் வரும் வரை அவளுக்கு அடைக்கலம் தந்து பாதுகாக்கிறார்கள் நான்கு நண்பர்கள். காதலன் வருகிறான். காதலனோடு செல்வதா? நண்பர்களோடு இருப்பதா என்று முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ""அட அப்படியே வெண்ணிற இரவுகள் கதைப்பா இது'' படம் பார்த்துவிட்டு வந்து நான் பெருமையாக நண்பர்களிடம் சொன்னேன். ரஷ்யக் கதையை தமிழ்நாட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சினிமாவோடு ஒப்பிட்டுப் பேச முடிந்தபோது பெருமிதமாக இருந்தது. அன்று இரவு மீண்டும் ஒரு முறை வேகமாகப் புரட்டினேன். சொன்னது சரிதானா என்று சரிபார்த்துக் கொள்கிற தற்காப்புக்காக.
அதன் பிறகு இரண்டு பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிற மாதிரியோ, இரண்டு பெண்கள் ஒரு பையனைக் காதலிக்கிற மாதிரியோ வந்த சினிமாக்களில் இந்தச் சாயல் தெரிவதை கவனித்தேன். இறுதியாக இயற்கை படம் வந்தபோது வெண்ணிற இரவுகளின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு மிகச் சிறப்பாக சினிமா ஆக்கியிருக்கிறார்கள் என்று வியந்து அந்தப் படத்தை பல முறை பார்த்தேன். நட்பையும் காதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் எத்தனைக் கதைகள். இதன் அடிப்படையில் எத்தனை நாவல்கள்? எல்லாமே வெண்ணஇற இரவுகளை நினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களாகவே இருந்தன.
இப்போதெல்லாம் வெண்ணிற இரவுகளை மிகநிதானமாகப் படிக்கிறேன். சில நாட்களில் வெண்ணிற இரவுகளின் ஒரு இரவை (ஒரு அத்தியாயம்) மட்டும் படித்துவிட்டு மூடிவிடுகிறேன். படித்த நேரத்தைவிட அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஏதோ ஒரு விஷயம் என்னை அந்த நாவலோடு பின்னிப் பிணைத்திருப்பதை அதைப் படிக்கிற அல்லது நினைக்கிற ஒவ்வொரு முறையும் கவனிக்கிறேன். இதயம்விட்டு இதயம் பாய்ந்து நம்மையும் அந்தக் கதாநாயகனாக்கிவிடுகிற பலம் அந்த நாவலுக்கு இருக்கிறது. 160 ஆண்டுகளாக ஒரு நாவல், அதைப் படிக்கிறவர்கள் எல்லோருக்குமான சொந்த அனுபவமாகத் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதன் வெற்றி என்ன? எத்தனையோ சினிமாக்களாக, வேறு வேறு கதைகளாக இது மாறிக் கொண்டே இருந்தாலும் தனித்துவமான மூலநதியாக பிரவகித்துக் கொண்டிருக்கிறது வெண்ணிற இரவுகள், காரணமென்ன?
இத்தனை ஆற்றல் மிகுந்த வார்த்தைகளை நம்மால் பிரயோகிக்க முடியுமா, இப்படியொரு உணர்வை நாம் சினிமா ஆக்கிவிடமுடியுமா என்ற முயற்சிகள்தான் இத்தனை கதைகளும் சினிமாக்களும் என்று தோன்றுகிறது எனக்கு.
தம்மிடம் பேசும் பழகும் பெண்கள் அனைவரையுமே நாஸ்தென்காவாக நினைத்துப் பாதுகாக்கிற குணம் கொண்டவர்களே வெண்ணிற இரவுகளை வாசிக்க உகந்தவர்களோ என்று நான் சில சமயம் நினைப்பதுண்டு. எனக்கான சில நாஸ்தென்காக்கள் நினைவுக்கு வருகிறார்கள். என்னைப் போல தஸ்தயேவஸ்கிக்கு உலகம் முழுக்கப் பல வாசகர்கள் இருப்பார்கள் என்பது உறுதி.
பலமுறை படித்திருந்தாலும் இப்போது வாசிக்கும்போது இரண்டு வரிகளுக்கு நடுவே புதைந்திருக்கும் உணர்வுகளை அசைபோட ஆரம்பித்திருக்கிறது மனம். முதல் முறை படித்ததற்கும் இப்போது படிப்பதற்கும் நடுவே இருபது ஆண்டுகள். இன்னொரு பத்து ஆண்டுகள் கழித்து என்ன கண்ணா மூச்சி காட்டுமோ? என்று எதிர்பார்ப்பும் பயமும் இருக்கிறது எனக்கு.
நூல் : வெண்ணிற இரவுகள்
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சிட்கோ
அம்பத்தூர் எஸ்டேட்,
சென்னை
புதன், மார்ச் 07, 2012
மௌனமே காதலாக..

காலத்தை ரீ வைண்ட் செய்து கண்முன் நிறுத்தியிருக்கிறது ‘தி ஆர்டிஸ்ட்’ திரைப்படம். இனி திரும்பவே முடியாத, கடந்து மறைந்துவிட்ட அன்றைய திரைக்கலைக்கு மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அகனாவிக்கியஸ். சற்றேறத்தாழ சதுரமான திரை (1.33:1 திரை), நொடிக்கு 22 ஃப்ரேமில் வேகமான சலன ஓட்டம், அந்தக் காலத்தைய அலங்கார எழுத்தில் சப்& டைட்டில், பியானோவில் வாசித்தது போன்ற பின்னணி இசை.. என மௌனப் படத்துக்கான சகல லட்சணங்களையும் கவனமாகக் கையாண்டு ஒரு காதல் காவியத்தைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
1920 &களில் மௌனப்படத்தில் நடிக்கும் கதாநாயகனை மையப்படுத்தியே கதையைப் பின்னியிருப்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.
ஜார்ஜ் வாலண்டைன் மௌனயுகத்தின் பிரபல கதாநாயகன். சாகஸ ஹீரோ. அவர் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகை பெப்பி மில்லர், அவரை இடித்து விடுகிறாள். திடுக்கிடும் நாயகன், பின்னர் சுதாரித்து, ரசிகையின் தோளில் பாந்தமாக கைபோட்டு போஸ் கொடுக்கிறார். அந்த அசந்த நேரத்தில் பெப்பி அவருடைய கன்னத்தில் முத்தமிட, மறுநாள் வெரைட்டி இதழில் ‘யார் அந்தப் பெண்?’ என்று படத்துடன் பிரசுரமாகிறாள். அந்தப் படமே ஹாலிவுட்டின் கினோகிராப் ஸ்டூடியோவில் நுழைவதற்குத் துருப்புச்சீட்டாக மாறுகிறது. ஜார்ஜ் அவளுக்குச் சிபாரிசு செய்கிறார். அந்தப் படத்தில் துணை நடிகையாக இடம்பெறுவதுடன், ஜார்ஜுடன் ஒரு காட்சியில் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் ஜார்ஜின் ஒப்பனை அறையில் தயங்கித் தயங்கி நுழைகிறாள் பெப்பி. அங்கு ஜார்ஜ் இல்லை. அங்கிருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் மைதீட்டும் பென்சிலால் தாங்க் யூ என்று எழுதுகிறாள். அவளுக்குப் பரவசமாக இருக்கிறது. அங்கு மாட்டியிருக்கும் ஜார்ஜின் கோட்டின் வலது கையில் தன் இடது கையை நுழைத்து அவளையே அவள் அணைத்துக்கொண்டு மெய்மறந்து நிற்கிறாள். காதலிப்பது எத்தனை அரிய கலை? அந்த நேரத்தில் ஜார்ஜ் அங்கே வர, உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன் என்று தெரிவிக்கிறாள்.
‘‘ஜெயிக்க வேண்டுமானால் எல்லோரும் செய்வதையே நீயும் செய்யக்கூடாது.. பிரத்யேகமாக ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று ஆலோசனை சொன்னபடியே அந்த மைதீட்டும் பென்சிலால் அவளுடைய உதட்டுக்கு மேலே செயற்கையாக ஒரு மச்சத்தை உருவாக்குகிறார். அந்தப் புள்ளி அவளுக்கு மேலும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்தச் செயற்கைப்புள்ளிதான் அவளுடைய நிரந்தர அடையாளமாகிற்து. அவளுடைய வாழ்க்கையே மாறுகிறது. துணை நடிகை என்று திரையில் பெயர்களின் நெரிலில் இடம்பெற்ற அவளுடைய பெயர் மெள்ள மெள்ள முதல் வரிசைக்கு நகர்ந்து முன்னணி நடிகையாகிறாள்.
இந்த நேரத்தில் கினோகிராப் முதலாளி ஜிம்மர் இனி மௌனப்படம் எடுக்கப்போவதில்லை என்ற முடிவை அறிவிக்கிறார். அதிர்ச்சியடைகிறார் ஜார்ஜ். ‘மௌனப்படம் இல்லையென்றால் வேறு என்ன படம் எடுக்க முடியும்?’ என்று கேட்கிறார். சப்தங்கள் கொண்ட சினிமாவைக் கற்பனை செய்யமுடியாமல் தானே சொந்தமாக ஒரு மௌனப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார் ஜார்ஜ். பெப்பி நாயகி.
படம் வெளியாகிறது. அதே நாளில் பெப்பி நாயகியாக நடித்த பேசும்படம் சக்கைபோடு போட, ஜார்ஜ் தயாரித்தப்படம் காற்றாடுகிறது. அந்த நேரத்தில் தன்னுடைய பிரபலத்துக்குக் காரணம், தான் பேசும்படத்தில் நடிக்க ஆரம்பித்ததனால்தான் என்ற அர்த்தத்தில் பெப்பி பேசுவதைக்கேட்டு அவள்மீது கோபமாகிறார் ஜார்ஜ். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத ஜார்ஜ் புழுங்குகிறார். கடனாளியாகி, குடிப்பழக்கத்தால் தன் மேல் கோட்டையும் அடகு வைக்கும் நிலைக்குப் போகிறார். அவரும் அவருடைய நாயும் மட்டும் சிறிய வீட்டில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். அந்த நாய்க்கும் ஒரு விருது கொடுக்கலாம்.
எந்த விஞ்ஞான வளர்ச்சியும் அந்தத் துறை சம்பந்தப்பட்ட கலைஞனை வாட்டி வதைப்பதை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறது. சினிமா வந்தபோது, நாடகக் கலைஞர்களையும் வினைல் போர்டு வந்தபோது சைன் போர்டு எழுதுபவர்களையும் கம்ப்யூட்டர் அனிமேஷன் வந்தபோது செல் அனிமேஷன் வரைந்தவர்களையும் விசைத்தறி வந்தபோது கைத்தறியாளர்களையும் காலம் மனரீதியாக ஏற்படுத்திய வலியை, மௌனத்தின் மூலம் காதல் நாடகமாகச் சொல்லியிருப்பது வித்தியாசமான முயற்சி.
பிரிட்டீஷ் அகாடமி ஃபிலிம் அவார்டு கமிட்டியின் ஏழு விருதுகளைத் தட்டிச்சென்ற ‘தி ஆர்ட்டிஸ்ட்’ இப்போது ஆஸ்கார் விருது பரிந்துரையில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த வார விருது அறிவிப்பில் கணிசமான விருதுகளை அள்ளப்போவதும் அதுதான் என்று ஹாலிவுட் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. (இது விருது அறிவிப்புக்கு முன் எழுதியது... ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றிருக்கிறது) நாயகி பெப்பியாக நடித்திருக்கும் பெரினிஸ் பெஜொ, அர்ஜென்டீனாவில் பிறந்தவர். அவருடைய தந்தை சினிமா தயாரிப்பாளர். ஆனால் உள்நாட்டு யுத்தம் காரணமாக மூன்று வயதிலேயே பிரான்ஸ§க்கு வந்துவிட்டவர். அங்குதான் இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் அகனா விக்கியஸை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள். இப்போது வயசு 35. சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள். அப்படியரு துறுதுறு. என்னமாக நடிக்கிறார்? ஜார்ஜ் ஏலம்விட்ட அவருடைய பொருட்களையெல்லாம் ரகசியமாக வாங்கி வந்து பாதுகாப்பதில் தொடங்கி, தீ விபத்தில் சிக்கிவிட்டார் என்ற செய்தியறிந்து பதைக்கும்போதுவரை ஒலியின் அவசியம் இல்லாமலேயே நெகிழ வைத்துவிடுகிறார்.
ஜார்ஜ் வாலன்டைனாக நடித்திருக்கும் ழான் டுஜார்டின், பிரான்ஸ் டி.வி.களில் நகைச்சுவை நடிகராக பிரபலமான இவர், உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகிவிட்டார். படத்தின் மௌனகுருவான ஹீரோ ஜார்ஜ் பேசும் ஒரே ஒரு வசனம் படத்தின் இறுதியில் இடம்பெறுகிறது.
நாயகி பெப்பி தன் அன்பாலும் அக்கறையாலும் தற்கொலைக்குத் துணிந்துவிட்ட ஜார்ஜை மீட்டு மீண்டும் நடிக்க வைக்கிறாள். இருவரும் ஆடும் நீண்ட நடனக் காட்சி ஒரே டேக்கில் ஓகே ஆகிறது. இருவருக்கும் மூச்சிறைக்கிறது. ஜார்ஜ் முதல் முறையாக தன் மூச்சின் சப்தத்தைத் திரையின் மூலமாகக் கேட்கத் தயாராகிறார்.
‘கட்’ என்கிறார் டைரக்டர். அதுதான் படத்தில் ஒலிக்கும் முதல் வசனம். காட்சி ஓகே என்றாலும் நடனத்தை மீண்டும் பார்க்கும் ஆவலில் இன்னொருதரம் ஆடமுடியுமா என்று இயக்குநர் கேட்கிறார்.
‘‘மகிழ்ச்சியாக’’ என்ற முதல் வசனத்தை ஜார்ஜ் பேசுகிறார். மாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
நன்றி: விகடன் பிப்ரவரி/ 2012
ஞாயிறு, மார்ச் 04, 2012
நிழலின் தனிமை

தேவிபாரதியின் நிழலின் தனிமை மிக அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்த நாவல்.
கதை என்ன என்று கேட்பவர்களுக்கு எளிமையான ஒரு பதில் உண்டு.
முப்பது ஆண்டுகளுக்கு முன் தன் சகோதரியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய ‘பெரிய மனுஷனை’ சந்திக்கிறான் அவளுடைய சகோதரன். அவன் வீட்டிலேயே வேலைபார்க்கும் வாய்ப்பு கிடைத்து அவனைத் தீர்த்துக்கட்டுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன.
அவனைக் கொல்வதற்காக தினம் தினம் அவன் எடுக்கும் பிரயத்தனங்கள் நாவலுக்குத் தரும் விறுவிறுப்பு அலாதியானது. அந்த விறுவிறுப்பைக் கடைசி பக்கம் வரைக்கும் கொண்டுவரும் அந்த மொழி நடை..
ஜான் பால்வின்னின் ‘கடல்’ நாவலும் மார்க்வெஸ்ஸின் ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட சாவின் சரித்திரமும்’ தஸ்தயேவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற நாவல்களைப் படித்தபோது நான் அடைந்த பரவசம் இந்த நாவலின் சில இடங்களில் கிடைத்தது. காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிப்பார்த்து தவிப்பை விவரிக்கும் விதம் மனத்திரையில் திகில் பரப்புகிறது.
சகோதரியை துன்புறுத்தியவனின் மகளை பாலியில்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நாவலின் நாயகன் ஒரு குற்றச்சங்கிலியைத் தொடங்கி வைக்கிறான். அது சகோதரிக்கு நேர்ந்த துன்பத்துக்குப் பிராயசித்தமாக இல்லாமல் குற்றத்துக்குப் பதிலாக இன்னொரு குற்றத்தை வைப்பதாக இருக்கிறது, ஆனால் பெரும்பான்மையினரின் பழி வாங்கல் அப்படித்தான் அமைந்து தொடர்கதையாக மாறிவிடுகிறது. ஆறப்போடப்பட்ட வன்மம், பழிவாங்கும் எண்ணத்தில் ஏற்படுத்தும் தடுமாற்றம்... காலம் நடத்தும் பாடம்.
பழைய துணி விற்பவன், அப்பாவிக் கணவன் என்ற சில பிரயோகங்கள் மனதில் ஏற்படுத்தும் சித்திரம் நீண்ட வர்ணனைகளைவிட வலிமையானவை.
2011&ல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நாவல் இது.
சனி, மார்ச் 03, 2012
வியாழன், பிப்ரவரி 23, 2012
ரெட்டைவால் விமர்சனம்
ரெட்டைவால் என்ற வலைப்பூவில் ஆண்பால் பெண்பால் விமர்சனம்
விமர்சனத்தில் ஒரு பகுதி
கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.
1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு - வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.
2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ்மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள்.
விமர்சனத்தில் ஒரு பகுதி
கதையின் பலம் இரண்டு விஷயங்கள்.
1. நேரடியான விவரிப்பாக அல்லாமல் சம்பவங்களூடாக பயணிக்கிறது கதை. அதுவும் ஒரே சம்பவங்களை பிரியா சொல்வதாகவும் பின்னர் அதையே அருண் சொல்வதாகவும் வருகிறது. ஒரே நிகழ்வு - வெவ்வேறு விதமான புரிதல்கள் என்கிற ரஷோமோன் வகை சொல்லாடல் மிகவும் ஆபத்தானது. தனக்கு வசதியான பார்வையை அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு இன்னொன்றை மேலோட்டமாக தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இதில் பெண்ணின் பார்வை ஆழமாகவும் அருணின் பார்வை சற்று நீர்த்தும் , அதனதன் பிரதிநித்துவம் கதையின் தன்மைக்கு நியாயம் சேர்க்கிறது. நாவலின் முடிவில் நிகழும் திருப்பம் கதையின் பார்வையை முற்றிலும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது.
2. எம்.ஜி.ஆர். - ஒரு தலைமுறையின் ஆதர்சத்தை தள்ளி நின்று பார்க்கவைக்காமல், அவர் வாழ்க்கையில் நடந்த வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத , அறியப்படாத சம்பவங்களை வைத்துப் பின்னியிருப்பது தமிழ்மகனின் சாமர்த்தியம். எம்.ஜி.ஆர் கும்பகோணத்தில் படித்த பள்ளிக்கூடம், தங்க பஸ்பம் செய்த இடம், தேர்தல் செலவுக்குக் கடன் வாங்கியது எல்லாம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் அத்தியாயங்கள்.
வியாழன், பிப்ரவரி 16, 2012
எம்ஜிஆரின் ஆவி!
ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து அதிஷா எழுதியிருக்கும் விமர்சனத்தில் இருந்து சில பகுதிகள்....
முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.
கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!
எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!
ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!
அதிஷாவின் முழு விமர்சனம்
முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.
கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!
எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!
ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!
அதிஷாவின் முழு விமர்சனம்
திங்கள், பிப்ரவரி 13, 2012
இது பாம்புக் கதை அல்ல
‘‘பாம்பு ரெண்டு நாளா சாப்பிடல சார்.. ஏதாவது தர்மம் பண்ணுங்க சார்’’ என்ற குரல் பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் இருந்து வந்தது.
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.
ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’
அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.
சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.
இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.
இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.
வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.
நன்றி:விகடன் பிப்.2012
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.
ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’
அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.
சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.
இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.
இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.
வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.
நன்றி:விகடன் பிப்.2012
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
Men are from Mars, Women are from Venus
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதாமுரளிதரன் உயிர்மைக்காக எழுதிய விமர்சனம்
இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.
எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.
முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.
கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.
அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.
ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.
ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.
இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.
இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.
என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.
இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.
எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.
முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.
கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.
அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.
ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.
ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.
இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.
இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.
என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.
புதன், பிப்ரவரி 01, 2012
அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?
அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
நன்றி: சுட்டி விகடன் feb 1-15
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
நன்றி: சுட்டி விகடன் feb 1-15
வியாழன், ஜனவரி 26, 2012
இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!

ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசம் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகுதூரம் விலகி வசித்துவரும் விருட்சங்களாகிப் போன அவர்களில் ஒருவர் கவிஞர் சேரன். அவர் தன் ‘காடாற்று’, மற்றும் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பலகலைக் கழகத்தில் சமூகவியல்& மானிடவியல் துறை பேராசிரியராக இருக்கும் அவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினோம்.
உங்களின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘காடற்று’ எத்தகைய பிரச்னைகளை முன் வைத்து எழுதப்பட்டவை?
இந்தத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த 2009 மே 16 போர் ஏற்படுத்திய இனப்படுகொலையின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் ‘காடாற்று‘ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இறந்து போனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆக வேண்டிய வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால் இலங்கையில் நடந்த படுகொலைக்கு அப்படி காடற்று செய்ய முடியாது. ‘போர்முடிந்துவிட்டது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது.. ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்.
இலங்கை பிரச்னையில் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள?
போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும்வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவியில்லாமல் போரில் அவர்கள் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், ‘கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அதை ‘கூண்டு’ என்ற தலைப்பிலே தமிழில் வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டிருப்பது விளங்கும். எத்தனை அப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிலவேளைகளில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
அதேபோல், வடகிழக்கு மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயனளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவுதான்.
வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?
அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமெர்த்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டியெடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாதல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுமக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.
இலங்கை வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தி திட்டங்களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் பொருளாதார பயன்கள் அதிகம். அங்கு அமைக்கப்படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக்கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும் அமெரிக்கவும், சீனாவும் அங்கு நடப்பதாகச் சொல்லும் பல நலத்திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கிறது.
லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதமிருப்போர் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.
1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்த காய்தல்,. உவத்தல் இல்லாத சுயவிமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இனிவரும் போராட்டம் பன்முகப்பட்ட& பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங்கை தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்..
3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல் பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.
4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப்போனதால் அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.
5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசியகீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவை இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.
நாடுகடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்?
கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் ‘நடந்த நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஒரு ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.
எலக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
செல்போன், இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஒரு இடத்தில் பரீட்சார்த்தமாக செய்து பார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்திலிருந்து பத்தாண்டுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலக்ட்ரானிக் ஓட்டுரிமையை துரிதப்படுத்தும். அதனால் வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த ‘நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறாம்.
உங்கள் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்திருப்பது குறித்து?
கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘யூ கெனாட் டர்ன் அவே’ என்ற தொகுப்பும் லஷ்மி ஹோம்ஸ்டரம்& சாஷா எபெல்லிங் மொழிபெயர்ப்பில் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ என்ற தொகுப்பும் வந்துள்ளன. இப்போது கவிஞர் ஆனந்த் என்னுடைய ஒரு கவிதைத் தொகுதியை மொழிபெயர்த்து வருகிறார்.
புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?
தமிழகச் சூழலில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு.. இருபது வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிட தமிழர்களின் இலக்கிய பங்களிப்புகள் வேறு. அந்தவிதத்தில் இது புதிய படைப்பனுபவத்தை முன்வைக்கிறது.
பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவில்லாத நிலை இருக்கிறதே?
பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன்.
பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.
இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கனத்த மௌனம்.
மேற்கூறிய யாவையும் சரி.
- இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்.
நன்றி: விகடன்
வெள்ளி, ஜனவரி 20, 2012
எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!
சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.
திங்கள், ஜனவரி 16, 2012
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
ஞாயிறு, ஜனவரி 08, 2012
திறமைக்கு மரியாதை
சனி, டிசம்பர் 31, 2011
சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்
சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.
லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?
சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:
- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.
லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.
- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.
ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.
- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.
பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.
சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.
தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
முழுவதும் படிக்க...
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.
லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?
சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:
- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.
லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.
- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.
ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.
- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.
பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.
சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.
தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
முழுவதும் படிக்க...
திங்கள், டிசம்பர் 26, 2011
ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.
படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:
ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.
எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.
அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.
ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..
வெள்ளி, டிசம்பர் 23, 2011
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)