ஆண்பால் பெண்பால் நாவல் குறித்து அதிஷா எழுதியிருக்கும் விமர்சனத்தில் இருந்து சில பகுதிகள்....
முதலிரவைப்பற்றி இவ்வளவு விலாவாரியாக எந்த எழுத்தாளரும் ஆராய்ச்சி செய்திருப்பார்களா தெரியவில்லை. நாவல் முதலிரவிலிருந்தே துவங்குகிறது. ஒரே முதலிரவுதான் அதே படுக்கைதான்.. அதே காத்திருப்பு.. மாமா அத்தைகளின் சில்மிஷபேச்சு.. ஊதுபத்தி.. பால் பழம்.. எல்லாமே அதேதான். ஆனால் அந்த சூழல் பெண்களுக்கு எப்படியிருக்கும் ஆண்களுக்கு என்னமாதிரியான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதையெல்லாம் பயங்கரமான ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பாரோ என்னவோ.. ஜஸ்ட் ஒரே வார்த்தைதான் ‘’பிரமாதம்!’’.
கணவன் மனைவிக்காக எது செய்தாலும் ஏதோ தியாகம் செய்கிற எண்ணத்தோடேயே செய்வதும், அவன் செய்வதெற்கெல்லாம் மனைவி அப்படியே தலையில் வைத்து கொண்டாட வேண்டும் , அல்லது அதிக மார்க்கு போடவேண்டும் என்று நினைப்பதையும் மிகச்சரியாக உணர்த்தியிருப்பதாகவே எண்ணுகிறேன். மனைவியும் கணவனின் சின்ன சின்ன தவறுகளை எத்தனை நாளானாலும் மறக்காமல் நினைவில் வைத்திருந்து திட்டுவதையெல்லாம் அன்றாடம் நாம் பார்க்க கூடிய ஒன்றுதான்! கதையில் ‘’முதல் சந்திப்பிலேயே எம்ஜிஆர் பாட்டை சிவாஜி பாட்டு என்று தவறாக சொல்லிவிடுகிற கணவனை இரண்டு ஆண்டுகள் கழித்து அதை நினைவு படுத்தி மனைவி சண்டையிடுவதை’’ உதாரணமாக சொல்லலாம்!
எம்ஜிஆரின் ஆவியின் ஊடாக தமிழகத்தின் அவர் ஏன் கொண்டாடப்படுகிறார்? அவர் தமிழர்தானா? அவர் ஆட்சியின் போது செய்த கேலிக்கூத்தான விஷயங்கள்? கட்சி நடத்த காசில்லாமல் கஷ்டப்பட்டது? அவர் நிஜமாகவே சிங்கம் வளர்த்தாரா? பெண்களுக்கு ஏன் எம்ஜிஆர் மேல் அப்படி ஒரு மோகம்? என எம்ஜிஆர் என்னும் மாபெரும் ஆளுமை குறித்து ஆங்காங்கே நிறைய ருசிகரமான தகவல்களை தூவி விட்டிருக்கிறார். அது நாவலின் போக்கை எவ்விதத்திலும் பாதிக்காமல் போகிற போக்கில் அப்படியே ஜாலியாக போகிறது! தமிழ்மகன் நிச்சயமாக சிவாஜி ரசிகராகத்தான் இருக்க வேண்டும். நூல் முழுக்க எம்ஜிஆரை படாத பாடு படுத்துகிறார்.. முக்கியமாக எம்ஜிஆர் ஆவியின் அறிமுகமே அவருடைய அழுகையிலிருந்தே தொடங்குது! நக்கலுக்காகவே பல இடங்களில் எம்ஜிஆர் பாடல்கள் வேறு!
ஒரு முழுநாவலையும் கடைசி ஒரு அத்தியாயம் வேறு மாதிரி மாற்றிப்போடுவது ஆச்சர்யமூட்டுகிறது. சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தினை படிக்கும் போது ஒருவிதமான படபடப்பும் பரிதவிப்பும் நமக்கும் பற்றிக்கொள்கிறது. இத்தனைக்கும் துப்பாக்கி சூடோ பரபர சேஸிங்கோ கிடையாது.. இருந்தும் விவரிக்க முடியாத உணர்வு அது!
அதிஷாவின் முழு விமர்சனம்
வியாழன், பிப்ரவரி 16, 2012
திங்கள், பிப்ரவரி 13, 2012
இது பாம்புக் கதை அல்ல
‘‘பாம்பு ரெண்டு நாளா சாப்பிடல சார்.. ஏதாவது தர்மம் பண்ணுங்க சார்’’ என்ற குரல் பஸ்ஸின் ஜன்னல் ஓரத்தில் இருந்து வந்தது.
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.
ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’
அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.
சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.
இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.
இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.
வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.
நன்றி:விகடன் பிப்.2012
நான் திரும்பி குனிந்து பார்ப்பதை அறிந்து, பாம்புகள் தவிர வேறெதையும் பத்திரப்படுத்தி வைக்க முடியாத அந்தப் பிரத்யேக மூங்க¤ல் கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காண்பித்தான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இதுவரை நான் எந்தப் பாம்பையும் பார்த்ததில்லை. என் கையில் உரசும் தூரத்தில் பாம்பின் தலை இருந்தது.
‘‘கடிச்சிடப் போகுதுப்பா.. தள்ளிப்புடி..’’
‘‘கடிக்காது சார்... ரெண்டு நாளா அதுவே சாப்புடாம பட்னியா கெடக்குது சார்’’
அதுதான் மேலும் பயமுறுத்தியது. இருக்கிற பசியில் கவ்வியெடுத்துவிட்டால்..?
பாம்பின் தலை மீது ஒரு தட்டுத் தட்டி அதை சீறும்படி செய்தான் பாம்பாட்டி.
‘‘பாம்புக்குப் பசி எடுத்தா என்னை என்னப்பா பண்ண சொல்றே?’’
‘‘முட்டை வாங்கித்தந்தா சாப்பிட வெச்சுடுவேன் சார்’’
அவனுக்கு இருபத்தைந்து மதிப்பிடலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவதில் காட்டிய அலட்சியத்தால் இன்னொரு பத்து வயது கூடுதலாகத் தெரிந்தான்.
ஐந்து ரூபாய் கொடுத்து அனுப்பிவைத்தேன். பஸ் கிளம்புகிற மாதிரி தெரியவ¤ல்லை. பஸ்ஸில¢ என்னைத் தவிர வேறு யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறங்கி வ¤சாரிக்கலாம் என கீழே வந்தேன். பேருந்து அலுவலகத்தில் கொட்டாவி விட¢டுக் கொண்டிருந்தவர், வாயை அவசரப்பட்டு மூடும் எத்தனம் எதுவும் இல்லாமல் ‘‘ஆ.....றுமணிக்கித்தான்’’ என்றார். ஆ....றுமணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருந்தது.
நேரத்தைக கடதத உடனடியாக அங்கு செய்ய முடிவது ஒரு டீ குடிப்பதுதான். ஆனால் அதற்கு அவசியம இருக்கவில்லை. அந்தப் பாம்பாட்டி பாம்பின் பக்கத்தில் முட்டையை வைத்துக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பாம்பு எப்படித்தான் முடடையை விழுங்குமா என்று ஆச்சர்யமாக இருந்தது.
அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
‘‘உடம்பு சரியில்ல இவனுக்கு. முன்னெல்லாம் லொடுக்குனு முழுங்கிட்டு ஓட்டை மட்டும் வெளிய துப்பிடுவான்... பாம்பு டாக்டர் யார்ன்னா தெரிமா சார் உனுக்கு?’’
‘‘எதுக்கு பாம்பை வெச்சுக்கிட்டு அவஸ்தை பட்றே..? காட்லவுட்டா பொழைச்சு போவுது’’
அவன் துயரம் கொட்டும் பார்வையோடு என்னைப் பார்த்தான்.
‘‘என்னவுட்டா அதுக்கு யாரும் இல்ல சார்... அதுவாத்தான் என்னைத் தேடி வந்துச்சி. அதான் சார்¢ பிரச்னை. நம்மளைத்¢ தேடி வந்த ஜீவனைத் தொரத்தி அடிச்சா எங்க சார் போவும¢?’’
ஆரம்பத்திலிருநதே அவனுடைய போக்கு விபரீதமாகத்தான் இருந்தது. பாம்புக்கு உடம்பு சரியில்லை என்பதும் பாம்பு டாக்டர் இருக்காங்களா என்பதும் பாம்புதான் என்னைத் தேடி வந¢தது என்பதும் எல்லாமே ஆர்வம்தருவதாக இருந்தது. ஆ..று மணி வரைக்கும் இவனே போதும். அவனுக்குப் பக்கத்த¤ல் பேருந்து திண்டில் உட்கார்ந்தேன்.
‘‘நான் பாம்பாட்டி கெடையாது சார். கொளுத்து வேலதான செஞ்சிக்னு இருந்தன். வூடு கட்றதுக்கு பக்தா நாயுடு சூளை பிரிக்கும்போது நிறைய பாம்பு கெடக்குதுன்னு சொன்னாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட சூளை சார். இப்பத்தான் வீடு கட்றதுக்கு வேலை வந்துது. கட்டுவேலை பாத்துகுனு இருந்தவன் பராக்கு பாக்கறதுக்குப் போனேன். பாம்பைப் பார்த்துட்டு எல்லாரும் பயந்து ஓடினப்ப நானு முன்னாடிப் போயி சின்னதும் பெருசுமா பதனாறு நல்ல பாம்பை அடிச்சுப் போட்டேன். அதாங்க பர்ஸ்ட்டு.. அப்¢புறம் எங்க பாம்பு புடிக்கணும்னாலும் என்னைத்தான் கூப்புடுவங்க.’’
அதன் பிறகு அவன் சொன்னது இதுதான்.
சித்திரையின் சொந்த ஊர்¢ செங்கல்பட்டு அருகே ச¤றுனியம். புதிதாக மணமாகி வனிதா என்ற அழகான இளம் மனைவி. கணவன் இபபடி பொழுதுக்கும் பாம்பு பிடிக்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதில் அவளுக்கு எரிச்சல¢ இருந¢தது. ஒரு சினிமா இல்லை. விசேஷம் இல்லை...
அன்றைக்கு பாம்பு பிடிக்க வருமாறு அழைத¢தான¢ பாளையம். குடிசையின் வாசலில் இருந்து அவன் விளித்த அபயக்குரலில்¢ இருந்த பதற்றத்தைச் சித்திரையால¢ அனுமானிக்க முடிந்தது. சித்திரை இன்றைய சம்பாத்தியத்துக்கு வழ¤ க¤டைத¢துவிட்ட சந்தோஷத்துடன் லுங்கியை அவிழ்த்து இறுக்கிக் கட்டுவதற்குள் வனிதா குறுக்கே வந்தாள். ‘‘எங்க கௌம்பறே இப்போ? நீ பாம்பு புடிக்கப் போனியனா நான் என் ஆத்தா வூட்டுக்கு பஸ¢ ஏறிடுவேன்¢.. சொல்லிட்டேன்’’ தீர்¢மானமாகச் சொன்னாள்.
சித்திரை மனைவியின் பேச்சைத் தட்டமுடியாமல் ‘‘அவன்கிட்டே வரமுடியாதுன்னு சொல்லிட¢டு வந்துட்றேன்’’ என்றபடிதான் வெளியே வந்தான். பாளையத்தின் பதற்றமான முகத்தைப் பார்த்தபோது அவனால் ‘எங்கே இருக்குது?’ என்பதாகத்தான் கேட்கமுடிந்தது.
வீட்டின் கட்டிலுக்கு அடியில் பாம்பைப் பார்த்தததாகச் சொன்னான் பாளையம். ஆவேசமாக வெளியில் வந்த வன¤தா, புடவை முந்தானையை உதறிய வேகத்தையும் கொண்டையை முடிந்து கொண்ட வேகத்தையும் பார்த்தபோது அவள் புறப்பட்டுப் போய்விடுவாள் போலத்தான் இருந்தது. அவள் போகவில்லை.
வனிதாவின் அம்மா இதுவிஷயமாக மருமகனைத் திருத்துவதற்கு வந்தாள்.
‘‘நாகதோஷம் பொல்லாததுப்பா.... நாகாத்தம்மன் கோயில்ல நாப்பது நாள் வெளக்கு வெச்சு பூஜை பண்ணாக்கா சரியாயிடும்.’’
‘‘நான் இங்க சோறு இல்லாத, தண்ணி இல்லாத கஷ்டப்பட்றேன். பாம்பு புடிக்கிறனாங் காட்டியும¢ ஏதோ செலவுக்கு வந்துக்குனுக்கிது.. அதையும் வுட்டுட்டு இன்னா பண்ண சொல்றே?’’ என்ற தர்க்கரீதியான கேள்வியை மாமியாரிடம் கேட்டான்.
அவன் பாம்பு பிடிப்பதை விடுவதாக இல்லை என்பது அடுத்த ஆறு மாதத்தில் உறுதியாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்குக் கிளம்பிப்போய்விடுவதும் வருவதுமாக இருந்தாள்.
வனிதா அவனிடம் பட்டாணி வாசனை வருவதாகவும் அது பாம்புகளுக்கான வாடை என்றும் ஒருதரம் அருவருப்பாகச்¢ சொன்னாள். அவள் அப்படிச் சொன்னது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
நடுவே ஒருதரம¢ சித்திரையை பாம்பு தீண்டிவிட்டது. வாயில் நுரைதள்ளி ஒருவழியாகப் ப¤ழைத்துவந்தான். அத்துடன் அவன் பாம்பு பிடிப்பதை விட¢டுவிடுவான் என்று வனிதா எதிர்பார்த்தாள். ஆனால் அதன் பிறகு அவனுக்கு பயம் சுத்தமாகப் போய்விட்டது. அடுத்தமுறை அவனை பாம்பு தீண்டிய போது விஷமே ஏறவில்லை. பாம்பு கடித்த இடத்தில¢ கொஞ்சம் சுண்ணாம்பு மட்டும் தடவிவிட¢டு சும்மா இருந்துவிட்டான். அவனைக் கடித்த பாம்புதான் இறந்து போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்.
வனிதா அவனே பாம்பாக மாறிவிட்டது போன்று அவனை நெருங்கவே பயந்தாள். எல்லா பாம்புகளும் அவனுக்குத் தண்ணி பாம்பு போலத்தான். அவள் பாம்புக்கு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தாள். அதனால் ஒருநாள் முடிவாக அவனைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாள்.
இதுதான் அவன் சொன்னக் கதை.
அவன் இன்னும¢ சொல்லிக் கொண்டிருப்பவன் போலத்தான் இருந்தான். அதற்குள் பஸ்ஸை எடுக்கவே நான்தான் கிளம்பிவிட்டேன்.
இந்தக் கதை இன்னொரு இடத்தில் இருந¢து மறுபடியும் தொடரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
சென்னையில் தேவநேய பாவாணர் அரங்கங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் பாம்புகள் குறித்துப் பேசுவதாகச் சொல்லி நண்பர் அழைத்துச் சென்றார். சிறிய அரங¢கம¢. மேடையில் இருப்பவர்களையும் சேர்த்துப் பதினாறு பேர் இருந்தனர். ஒருவர் வேட்டி சட்டை அண¤ந்து தனியாகத் தெரிந்தார். காலில் மாட்டியிருந்த ரப்பர் செருப்பின் ஒரு பட்டை நீல நிறத்திலும் ஒரு பட்டை பச்சையிலும் இருந¢தது. முன் வரிசையில் அமர்ந்து கொண்டு அவருக்காகத்தான் மேடையல் இருப்பவர் பிரத்யேகமாகப் பேசுவது போல வேகமாக தலையசைத்து, பேசுபவரை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
பாம்புகள் குறித்து அன¢று பேசியவர் சொல்லியதில் இரண்டு முக்கியமான வ¤ஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
பாம்புக்குக் கால்கள் இல்லை என்றுதான் இதுவரை ந¤னைத்திருந்தேன். சில பாம்புகளுக்கு இரண்டு சிறிய கால்கள் இருக்கின்றன. அவற்றில் நகங்களும் உண்டு என்றார்.
அப்படியா என அங்கிருந்தவர்களில் பனிரெண்டு பேர் அவசரமாக ஆச்சர்யப்பட்டு கேட்டனர்¢. மீதி மூன்றுபேருக்கும்கூட ஆச்சர்யம் இருந்தது. ஆனால் கேட்க தயங்கியவர்¢களாக இருந்தனர்.
அவை எப்போதும் அதன் உடலுக்குள் புதைந்தபடியே இருக்கும். எதையாவது பற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் போதுதான் அவற்றைப் பயன்படுத்துகின்றன. நல்ல பாம்பு தன் இணையைச் சேரும்போது அந்தக் கால்கள் மூலம்தான் இணையைப் ப¤டித்துக் கொள்கிறது என்றார்.
ஒரு பாம்பைக்¢ கொன்றுவிட்டால் அதன் இணை கொன்றவர்களைப் பழிவாங்குவதற¢கு வருமா என்று ஒருவர் கேட்டார். எனக்கு அது அபத்தமான கேள்வியாக இருந்தது. ஒரு நடிகை பாம்பாக ஒரு படத்தில் நடித்தார். அவள் தேவைப்படும¢ நேரங்களில் பெண்ணாகவும் பாம்பாகவும் மாறிக் கொள்ளும் வசதி கொண்டவளாக இருப்பாள். பெண்ணாக இருக்கும் தருணங்களில் கவர்ச்சியான உடை அண¤ந்துவந்து தன் பாம்புக்¢ கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்ப்பாள். பாம்பு வந்¢து பழி வாங்குவது அந்த அளவுக்குத்தான் நம¢பகத்தன்மை கொண்டதாக இருந்தது.
ஆனால் அந்¢தப் பாம்பு ஆய்வாளர் பாம்புகளைக் கொன்றால் வேறு ஒரு பாம்பு அந்த இடத்தைத் தேடி வருவதுண்டு என்றார்.
‘‘பாம்புகள் இனப்பெருக்கத்துக்க்கான வேட்கை கொள்ளும்போது பிரோமோன் என்ற வாசனையை வெளியிடுகிறது. அந்¢த வாசனையைக்¢ கொண்டே பாம்புகள் தங்கள் ஜோடியைக் கண்டடைகின்றன. பாம்புகளை நாம் தாக்கும்போது தன்னிச்சையாக பாம்பின் உடம்பில் இருந்¢து பிரிமோஸ் வெளியாகிவிடுகிறது. அந்த வாசனைக்காக அடுத்த நாளில¢ அந்த இடத்¢துக்கு ஒரு பாம்பு தேடி வருவதற்கான வாய்ப்பு ந¤றைய உண்டு. அதையே மக்கள் பாம்பு பழி வாங்க வந்ததாக நினைத்துக் கொள்கிறார¢கள்’’ என்ற தகவலைச் சொன்னார¢. இந்¢த இரண்டு தகவல்களும் ‘அன்று பெற்றவை’யாக இருந்தன.
அதையட்டி ஒரு சம்பவத்தைச் சொன்னார். ‘‘க¤ராமத்து வீடு ஒன்றில் மனிதனை ஒரு பாம்பு தீண்டிவிட¢டது. அவன் இறந்¢து போய்விட்டான். அங்கிருந்த பாம்பைக்¢ கண்டுபிடித்து அடித்துக் கொன்றுவிட்டார்கள். அடுத்த ஒரு வாரம் அதே வீட்டில் அவன் மனைவியும் இன்னொரு பாம்பு கடித்து இறந்து போய்விட்டாள். மக்கள் உடனே நாகதோஷம¢ என்று கிளப்பிவிட்டார¢கள். பாம்பை அடித்துவிட்டால் அந்த இடத்தில் வேறு வாசனை திரவியத்தை அந்த இடத்தில் தெளித்துவிட்டாலே போதும். அந¢தக் காலத்தில் பாம்பை அடித்தால் மஞ்சளைக் கரைத்துத்¢ தெளிக்கும் சடங்குகள் இருந்தன’’ அவர் பேசிக்கொண்டு போனார்¢.
கூட்டத்தில் வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தவர்,. ‘‘எங்க ஊர்ல பாம்பு புடிக்கிறவன் ஒருத்தன் இருந்தான். அவனுக்குப் பாம்பு கடிச்சா விஷம் ஏர்¢றது இல்ல. சும்மா கொஞ்சம்¢ சுண்ணாம்பு தடவிப்பான். அவ்ளதான். அதெப்படி?’’ ஏதோ புதிர்போட்டுவிட்டு வ¤டைகண்டுபிடிக்கச் சொன்னவர் மாதிரி கேட்டார்.
‘‘ஏற்கெனவே சின்னச் சின்ன பாம்புகள் கடித்து விஷம் பழகியவர்களுக¢கு நம் உடம்பிலேயே விஷ முறிவு உருவாகிவிடும்.. அதே போல ஒரு நல்ல பாம்பு அடுத்தடுத்து யாரையாவது தீண்டினாலும் இரண்டாவதாகக் கடிபட்டவருக¢கு விஷத்தின¢ வீரியம் கம்மியாகத்தான் இருக்கும்.. மூன்றாவது பாம்பு தீண்டியதும் பதறாமல் இருக்க வேண்டும். பதறினால் ரத்தவோட்டம் அதிகமாக இருக்கும். விஷம் வேகமாக பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் சொல்கிற நபர் இப்படி ஏதாதொரு காரணத்தால் தப்பித்திருக்கலாம’’ என்று பொறுமையாக பதில் சொன்னார்¢.
அந்த பதில் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ‘‘அவன் எம காதகனாச்சே... பதறவே மாட்டான்...’’ என சமாதானம் சொல்லிக் கொண்டார்.
கூட்டம் முடிந்¢து அந்¢தச் சிறிய குழு மெள்ள கலைந்தபோது வேட்டிக்காரரிடம் எனக்குப் பேசுவதற்கு வ¤ஷயம் இருப்பது போல¢ இருந்தது.
‘‘நீங்க சித்திரையைப் பத்தித்தான¢ சொன்னீங்களா?‘‘ என்று ஆரம்பித்தேன்.
‘‘அட அவனைத் தெரியுமா... அவனை எப்பிடித் தெரியும்?’’
‘‘செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்.’’
‘‘அவன் பொண்டாட்டி பாம்பு கடிச்சு செத்துப் போன பொறவு அவன் ஊர¢லயே தங¢கறத¤ல¢ல.. அவனாச்சு அவன் பாம்பாச்ச¤.. எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பான்... நான¢ இங¢க டி.வி.எஸ்.ல பேரிங் வாங்கறதுக்கு வந்தேன் ... பாத்தாக்கா பாம்பபத்தி பேசறதா ‘போடு’ல எழுதி வெச்சிருந்தாங்க. சரி இன்னான்னு பாக¢கறதுக்கு வந்தேன்.. செங்கல்பட¢டு வந¢தா ச¤றுன¤யத¢துக¢கு வாங¢க. இப¢ப பஸ¢ உட¢டுக¢க¤றானுங¢க. சம்பந்தம் வூடுன்னா யார்ன்னாலும் சொல்லுவாங்க..’’ &மூன்று விஷயங்களை மூன்று சிறிய நிறுத்தங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாகச் சொன்னார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்..
அவருடைய அன்பான அழைப்பை என் காது ஏற்கவே இல¢லை. வன¤தா கோபிச்சுக்க¤ட¢டுப் போனதாகச் சொன்னது ஏன் என்ற சந்தேகம் வ¤ஷம் மாதிரி இறங்க¤யது.
இந்தக் கதையைத் தொடங்குவதற்கு எனக்கு முதல்வரி கிடைத்துவிட்டது.
வனிதாவை அந்தப் பாம்புதான் கடித்தது என்று தெரிந்தும் சித்திரை அதைச் செல்லமாக வளர்ப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.
... இனிமேல்தான் எழுத வேண்டும் இந்தக் கதையை.
நன்றி:விகடன் பிப்.2012
வெள்ளி, பிப்ரவரி 10, 2012
Men are from Mars, Women are from Venus
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கவிதாமுரளிதரன் உயிர்மைக்காக எழுதிய விமர்சனம்
இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.
எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.
முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.
கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.
அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.
ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.
ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.
இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.
இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.
என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.
இரண்டு முற்றிலும் வெவ்வேறான அகவுலகங்கள் சந்திக்கும் திருமணம் என்கிற மையப்புள்ளி, அதில் ஏற்படும் உரசல்கள், முரண்கள், உளவியல் சிக்கல்கள் பற்றி ஆங்கிலத்தில் எக்கச்சக்கமாகவும் ஒப்பீட்டளவில் தமிழில் குறைவாகவும் அபுனைவு புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆண்-பெண் இடையிலான உறவுச் சிக்கலகள் பற்றி புனைவுகள் பல வந்திருந்தாலும் அவை ஒன்று ஆணின் பார்வையிலோ அல்லது பெண்ணின் பார்வையிலோ அமைந்தவையாகவே இருந்திருக்கின்றன.
எனக்கு தெரிந்த வரையில் ஆண், பெண் இருவரது பார்வைகளையும் பதிவு செய்யும் மிகச்சில புனைவு முயற்சிகளில் தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் நாவல் முக்கியமான முயற்சி என்று சொல்லலாம்.
முதலில் பெண்பாலின் குரலாகவும் பிறகு ஆண்பாலின் குரலாகவும் விரியும் இந்த நாவலின் இரண்டு பகுதிகளிலும் இரண்டு குரல்களுக்கும் அப்பாற்பட்டு மெலிதாக, பூடகமாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு குரல் ஆணினுடையதா, பெண்ணினுடையதா என்று முதல் வாசிப்பில் சரியாக கணிக்க இயலவில்லை. ஆனால் அந்த குரல்தான் இரண்டு அகவுலகங்களும் எப்படி முற்றிலும் வெவ்வேறாக இயங்குகின்றன என்பதை அருணின், ப்ரியாவின் அகவுலகங்கள் மூலம் ஒரு மாயக்கண்ணாடியைப் போல காட்டிக்கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு, முதல் இரவு அன்று அருண் சட்டையை கழற்றுவதை அவன் புணர்ச்சிக்கு தயாராகிவிட்ட்து போல ப்ரியா புரிந்து கொள்வதற்கும் பின்னால் அருண் அவனுடைய நிலமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்த்தாகச் சொன்னதற்குமிடையில் ஒலிக்கும் குரலில்தான் உண்மை ஒளிந்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் முழுக்க இது போன்ற அகவுலகங்களுக்கிடையிலான உளவியல் முரண்களால் நிரம்பியிருக்கிறது. மனோத்த்துவ நிபுணர் பீட்டர் செல்வராஜின் அறிவுரைப் படி அருண் பிரியாவிடம் ’கிளுகிளுப்பாக’ பேசுவதும், அவை ப்ரியாவால் மூர்க்கமாக நிராகரிக்கப்படுவதும் இன்னொரு உதாரணம். இருவருக்குமிடையிலான உடல் ரீதியான உறவு பற்றி இருவரும் வெளிப்படுத்தும் புரிதல்கள், எதிர்பார்ப்புகள் அவை அங்கீகரிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் தருணங்கள் இந்த முரண்களின் உச்சமாக நாவலில் வெளிப்படுவதாக தோன்றுகிறது.
கிட்ட்த்தட்ட நாவல் முழுவதும் ப்ரியா ஒரு சராசரி பெண்ணாகவும் அருண் ஒரு பெருந்தன்மையான ஆணாகவும் உலவுகிறார்கள். வெண்குஷ்டம் ஒரு பெரிய விஷயமில்லை என்று ப்ரியாவை சமாதானப்படுத்துவது, அவளது மனச்சிதைவைப் புரிந்து கொண்டு பரிதாப்ப்ப்படுவது என்று அருண் ஒவ்வொருமுறையும் அவனது பெருந்தன்மையை கடைவிரித்துக் காட்டும் ஒரு மனோநிலையுடனேயே இருக்கிறான். மாறாக ப்ரியா அவனை ச்சிரேகா, அருணா ஆகியோரோடு இணைத்து சந்தேகப்படுவது, அவளது தங்க செயின் பறிக்கப்பட்ட போது அதை பெரிது படுத்தாமல் இருக்கும் அருணை அப்போதும் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு தோற்றுப் போனவனாக கருதுவது என்று சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். நாவலின் இறுதியில்தான் இந்த பிம்பங்கள் உடைகின்றன. பெருந்தன்மைகளால் நிறுவப்பட்ட பீட்த்திலிருந்து அருண் மெல்ல மெல்ல சரிவதும் தனது குரல் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்த விரும்பாத ப்ரியாவை வாசகர் சரியாகவும், கிட்த்தட்ட முழுமையாகவும் அடையாளம் காண்பதும் நாவலின் இறுதியிலேயே நடக்கிறது.
அருண் சொல்வது போல கதையின் முழுத்தன்மையையும் நாவலின் இரண்டாவது பகுதியின் 19வது அத்தியாயத்தில் வரும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது, அதற்குக் காரணம் அருண்தான் என்கிற செய்தி மாற்றிவிடுகிறது. ஆனால் அதற்கு முன்னோட்டமாக அருணின் சராசரித் தனத்துக்கு சான்றாக சில விஷயங்களை நாவலாசிரியர், அல்லது நாவலில் ஒலிக்கும் மூன்றாவது குரல் வெளிப்படுத்திவிடுகின்றன. ச்சிரேகாவை அருணுடன் இணைத்து ப்ரியா சந்தேகப்படுவதை அவளது மனச்சிதைவின் ஒரு பகுதியாகவே வாசகர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ச்சிரேகாவுடன் சினிமா போனபோது நடந்த விஷயங்கள் வாசகருக்கு தேவையற்றவை என்று கடந்துவிடுகிறான் அருண். ப்ரியாவின் சந்தேகங்களுக்கு மனச்சிதைவு காரணமில்லை. ஆனால், ப்ரியா அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்த காரணத்தாலேயே அவளை டிடெக்டிவ் ஏஜென்சி வைத்து வேவு பார்க்கும் அளவுக்கு சந்தேக மனப்பான்மை கொண்ட அருணின் நடவடிக்கை அந்த சமயத்தில் இயல்பான ஒரு விஷயமாக அருணால் முன்னிறுத்தப்படுகிறது. ப்ரியாவின் வெண்குஷ்ட்த்தை பெரிதுபடுத்தாதன் மூலம் பெருந்தன்மையாக தெரியும் அருண், மகப்பேறு மருத்துவர் அவனை சோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்று சொல்லும் போது வெளிப்படுத்தும் அதிர்ச்சியின் மூலம் சராசரியான ஆணாகிறான்.
ப்ரியாவை குழந்தை பாக்கியம் வேண்டி குடும்பத்தோடு திருப்பதிக்கு அழைத்துச் செல்ல விழைகிறான் அருண். பேருந்து நிலையத்தில் ஒரு சின்ன பையனோடு எம்.ஜி.ஆர் குறித்து ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனக்கு மாதவிலக்கு வந்துவிட்ட்தாக சொல்லி திருப்பதி செல்லாமல் தவிர்த்துவிடுகிறாள். சம்பவம் நடக்கும் போது, அல்லது அந்த சம்பவத்தை வாசகர்கள் படிக்கும் போது ப்ரியாவின் இந்த நடவடிக்கை மனச்சிதைவு நோயின் வெளிப்பாடாகவே தோன்றும். ஆனால் திருமணமான எட்டாவது மாத்த்திலேயே அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதற்கு அருண் காரணம் என்கிற செய்தியோடு இந்த சம்பவத்தை பொருத்திப் பார்க்கும் போது ப்ரியாவின் நடவடிக்கைக்கு பின்னிருக்கும் உளவியல் காரணங்கள் புரியலாம். எனக்கு தெரிந்த ஒரு தம்பதிக்கு இறுதிவரை குழந்தை இல்லை. ஒரு முப்பது வயது ஆகும் போது அந்த பெண்ணின் மீது சாமி இறங்கியது. அந்த பெண் இறக்கும் வரை அவர் மீது சாமி இறங்கிக் கொண்டிருந்த்து. அந்த பெண்ணின் கணவர் சிறுமியரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அடிக்கடி மாட்டிக்கொள்பவர் என்கிற செய்தியோடு அந்த பெண் மீது சாமி இறங்கும் செய்தியையும் பொருத்திப் பார்க்கும் போது பல உண்மைகள் புரிந்த்து.
ப்ரியாவிற்கு எம்.ஜி.ஆர் ஒரு அரண். சிறு வயதிலேயே வந்துவிட்ட வெண்குஷ்டம் பற்றிய பயத்தை விலக்க பாட்டி எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்தார். பிறகு பல சமயங்களில், பல பிரச்னைகளிலிருந்து அவமான்ங்களிலிருந்து தப்பிக்க ப்ரியா எம்.ஜி.ஆரை துணைக்கு அழைத்திருக்கிறாள், அல்லது எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கிறாள். பீட்டர் செல்வராஜிடம் தனக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயத்தை உளறிவிடகூடாது என்கிற காரணத்துக்காகவே எம்.ஜி.ஆராக அங்கு மாறியிருக்கிறாள். கணவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற மாமனாரின் ஜோக்கினால் சீண்டப்பட்ட சுயத்தை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் உதவியை நாடியிருக்கிறாள். ஆனால் ப்ரியாவுக்கும் அருணுக்கும் மிடையில் நடக்கும் பிரிவுக்கு எம்.ஜி.ஆர் காரணமில்லை. அருண் சொல்வது போல குழந்தைப் பேறு இல்லாத்துதான் ஆரம்பம், அதன் பிறகு குழந்தை பேறு இல்லாத எம்.ஜி.ஆரின் ஆவி பாதிப்பு.
இரு வேறு அகவுலகங்களுக்கிடையிலான சிக்கல்களை இந்த நாவல் பல இடங்களில் மிகத்துல்லியமாக அடையாளம் காண்கிறது. தனது பெருந்தன்மைக்கான ஸ்கோரை எப்போதும் ப்ரியா குறைத்துப் போடுவதாக அருண் அடிக்கடிக் குறைப்பட்டுக் கொள்கிறான். ஒரே ஒரு இட்த்தில் தான் ப்ரியாவுக்கு எவ்வ்ளவு மார்க் போடுவது என்று குழம்புகிறான். ஒரு உறவில் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கொருவர் மார்க் போட்டுக்கொள்ளும் விதம் கடுமையாக வேறுபடுவதாக சொல்கிறார் Men are from Mars, Women are from Venus என்கிற புத்தகத்தை எழுதிய ஜான் கிரே. ஒரு பெரிய விஷயத்தை செய்துவிட்டு வேறு எதுவும் செய்யாமலேயே கூட நிறைய மார்க்க் வாங்கிவிடலாம் என்று ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு குட்டி குட்டியாக நிறைய விஷயங்கள் தேவைப்படுகிறது, என்கிறார் கிரே. இது அருணின் விஷயத்திலும் நடக்கிறது. கிரே சொல்வது போல தீர்வு காணப்படும் வரை ஆண்கள் பிரச்னைகளிலிருந்து விலகிக்கொள்கிறார்கள் என்பதும் அருணுக்கு பொருந்தும். அவர்கள் நண்பர்களிடம் அடைக்கலமாகிறார்கள், அருண் ரகுவிடம் அடைக்கலமாவது போல. குழந்தையின்மையின் முழு வலியையும் பிரக்ஞைய்யும் ப்ரியா சுமக்கிறாள். அதனாலேயே அவளுக்கு பாதிப்பு அதிகம்.
இரண்டு குரல்களாக, இரண்டு பகுதிகளாக நாவல் விரிந்தாலும், ப்ரியாவின் குரல் முழுமையாக வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை. தன்னுடைய பிரச்னைகளுக்கு காரணமாக அருணை காட்டிவிட்டு ப்ரியா இயல்பாக இருந்திருக்கலாம். ஆனால் அது சராசரி ஆணின் குணம். அதை ப்ரியா செய்யவில்லை. மாறாக, பல குழப்பங்களில், உள்மனப்போராட்டங்களில் சிக்கி அதன் காரணமாக மனநல மருத்துவமனையில் சென்று முடிகிறாள். அறிவால் செலுத்தப்படுகிறோமா உணர்வால் செலுத்தப்படுகிறோமா என்கிற கேள்வி நிறைய பெண்களைப் போல ப்ரியாவையும் துரத்துகிறது. உணர்வால் செலுத்தப்படுகிற அறிவாளியாகவே அவள் இருக்கிறாள் – நிறைய பெண்களைப் போல. ப்ரியாவின் குரல்ல்லாத வேறொரு குரலின் மூலம் ப்ரியாவை முழுமையாக வெளிப்படுத்துவதுதான் இந்த நாவலின் வெற்றி. அது அருணின் குரல் என்றும் சொல்ல முடியாது. பல இடங்களில் அருண் தன்னை பெருந்தன்மையான கணவனாக காட்டிக்கொள்வதில் கவனமாக இருக்கிறான். குழந்தையின்மை பற்றிய ரகசியத்தை அவன் நாவலின் இறுதியில் போட்டு உடைப்பது கூட ப்ரியாவின் தியாகத்தை வெல்லும் நோக்கத்தில்தான்.
என்னைப் பொருத்தவரையில் இது அருணின் குரலை மிகுதியாக்க் கொண்ட ப்ரியாவின் நாவல்.
புதன், பிப்ரவரி 01, 2012
அஞ்சலி ஆசையாகக் கேட்டது எதை?
அஞ்சலிக்கு வயது ஐந்து. இரவு படுத்திருந்த தன் அப்பாவின் மீது ஏறி அமர்ந்தபடி ‘‘நான் ஒன்று கேட்பேன் வாங்கித் தருவாயா அப்பா?’’ என ஆசையாகக் கேட்டாள். அவள் அப்படி என்ன ஆசைப்படுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள அப்பாவுக்குமட்டுமின்றி அவளுடைய அம்மாவுக்கும் அண்ணனுக்கும்கூட ஆசையாகத்தான் இருந்தது.
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
நன்றி: சுட்டி விகடன் feb 1-15
‘‘நிச்சயமாக உனக்கு வாங்கித் தருவேன்’’ என வாக்குறுதி கொடுத்தார் அப்பா. அதன்பிறகு அவள் சொன்னதுதான் எல்லோரையும் பெரும் சுவாரஸ்யத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கிவிட்டது. அஞ்சலியின் அப்பா, அம்மா, அண்ணன் மாக்ஸ் மூவரும் பெரும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாகிவிட்டது.
‘‘எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தாலும் அதன் பெயர் தெரியாதே’’ என்றாள் அஞ்சலி.
‘‘அப்படியானால் அதை எப்படி எங்களால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆயாசமாகிவிட்டது.
குழந்தை அஞ்சலிக்கு அவள் விரும்புவதை எப்படியாவது விளக்கிச் சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை அவளுடைய கண்கள் அலைபாய்வதை வைத்து அறிந்து கொள்ள முடிந்தது.
‘‘பரவயில்லை குட்டி... நீ யோசித்து நாளைக்குச் சொல். நாளைக்கே வாங்கித் தருகிறேன்’’ குழந்தைக்கு நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னார் அப்பா. அவளுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கவில்லை. அவள் விரும்பும் அவளுக்கே பெயர் தெரிந்திருக்காத அந்தப் பொருள்தான் தேவையாக இருந்தது.
விளக்கை அணைத்துவிட்டு கண்ணயர ஆரம்பித்த நேரத்தில் அஞ்சலி ‘‘அப்பா நான் கண்டுபிடித்துவிட்டேன்.. உடனே விளக்கைப் போடுங்கள்’’ என உற்சாகமாகக் குரல் கொடுத்தாள். இவ்வளவு நேரமாக அவள் தூங்காமல் யோசனையில் இருந்திருக்கிறாள்.
‘‘விளக்கு இல்லாமல் சொல்ல முடியாதா?’’ அப்பா கேட்டார்.
‘‘இல்லையப்பா விளக்கைப் போட்டால்தான் அதை உங்களுக்குக் காட்ட முடியும்’’
‘‘ஓ... நம் வீட்டில் ஏற்கெனவே இருக்கும் பொருள்தானா... இருக்கும் பொருளை இன்னொரு முறை எதற்குக் கேட்கிறாய்?’’
விளக்கைப் போட்டுவிட்டு அவளைப் பார்த்தார். அவள் படுத்திருந்த நிலையிலேயே தன் சிறிய ஆள்காட்டி விரலை உயர்த்தி விட்டத்தைக் காட்டினாள்.
விட்டத்தில் எதுவுமே இல்லை.
‘‘எதுவுமே இல்லாததை அப்பாவால் எப்படி வாங்கித் தரமுடியும்?’’ மாக்ஸ் யோசனையோடு கேட்டான்.
‘‘மேலே இருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?’’
அவள் உறுதியாகச் சொல்வதைப் பார்த்து இன்னும் கூர்ந்து பார்த்தனர். மூவரின் கண்பார்வைக்கும் தட்டுப்படாமல் அங்கே மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு அப்பா கட்டிலின் மீது ஏறி நின்று உற்றுப் பார்த்தார்.
‘‘அப்பா நான் சொன்னது மேலே சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியைத்தான்’’ என் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மகள்.
‘‘உனக்கு எதற்கு மின்விசிறி?‘‘ மாக்ஸால் யூகிக்கவே முடியவில்லை.
‘‘அவள் இதே மாதிரியான சிறிய பொம்மை மின்விசிறியைக் கேட்கிறாள்’’ என்றார் அம்மா.
‘‘அப்படியா?’’ மகளின் தலையை வருடியபடி அப்பா கேட்டார்.
அவள் ‘இல்லை’ என்பதாக மறுத்துவிட்டு, ‘‘நான் கேட்பது இந்த மின்விசிறியோ, பொம்மை மின்விசிறியோ இல்லை. அது இது போல இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னேன். ஆனால் நான் கேட்பது இது இல்லை.’’
மின்விசிறி போல இருக்கும் வேறு ஒரு பொருளை மூவரும் கற்பனை செய்து பார்த்தனர்.
எதுவுமே நினைவுக்கு வராத நிலையில் அப்பா, ‘‘அது சுழலக்கூடியதா?‘‘ என்று கேட்டார்.
சற்றே யோசித்துவிட்டு, ‘‘அது சுழலக்கூடியது அல்ல, ஆனால் சுழற்றினால் சுழலும்தான்’’ என்றாள்.
அடுத்து, ‘‘பம்பரமா?‘‘ என்றான் மாக்ஸ்.
‘‘இல்லை. அது பம்பரம்போல இருக்காது.’’
‘‘கடற்கரையில் காற்றடித்தால் சுழலுமே அந்தக் காற்றாடியா?’’
அவளுக்கு அலுப்பாக இருந்தது அண்ணனின் கேள்விகள்.. ‘‘அதெல்லாம் இல்லவே இல்லை’’
‘‘நீ சரியாக சொன்னால்தானே அப்பாவால் வாங்கித்தரமுடியும்?’’ அம்மாவின் சமாதானமும் அவளுக்குக் கோபமூட்டுவதாகத்தான் இருந்தது.
மாக்ஸ் தன் புத்தகத்தில் இருந்த மின்விசிறியை எடுத்துக் காண்பித்து, ‘‘இதைப் போல இருக்குமா?’’ என்றான்.
அஞ்சலியின் எரிச்சல் எல்லை மீறியது.. ‘‘நான் சொல்வது இந்தமாதிரி இருக்காது.. அந்த மாதிரிதான் இருக்கும்’’ என்றபடி மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை மீண்டும் காட்டினாள். அவளுடைய குட்டிக் கண்கள் கோபத்தைக் கக்கின.
இரண்டு மின்விசிறிகளுக்கும் குறிப்பாக என்ன வித்தியாசம் என்று எல்லோருமே தீவிரமாக ஆராய்ந்தனர். அவர்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
‘‘இது வேறு நிறத்திலும் அது வேறு நிறத்திலும் இருப்பது உங்கள் யாருக்குமே தெரியவில்லையா?’’ என்றாள் ஆவேசமாக.
அவர்கள் வீட்டு விசிறி காப்பிக் கொட்டை நிற விசிறி. மாக்ஸ் காண்பித்தது வெள்ளைநிற விசிறி.
‘‘ஓ.. நீ சொல்லும் பொருள் காப்பிக் கொட்டை நிறத்தில் இருக்குமா?’’
தலையை மேலும் கீழுமாக ஆசையாக அசைத்தாள். இவர்களுக்குப் புரிய வைத்துவிட்ட திருப்தி அவளுடைய முகத்தில். ஆனாலும் குழந்தை என்ன சொல்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமலே இருந்தது.
இரண்டு நாள் கழித்து இரவில் படுக்கப் போன நேரத்தில் மீண்டும் இதுகுறித்துப் பேச்சு ஆரம்பித்தது. ‘‘நான் சொன்னது சுவையாக இருக்கும்’’ என்றாள்.
‘‘நீ சொன்னது சாப்பிடக்கூடியதா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?’’ அப்பா பாதி விஷயம் தெளிவாகிவிட்டது போல சொன்னார்..
‘‘எதை முதலில் சொல்லவேண்டும் என்று எனக்கு முதலில் தெரியவில்லை’’
அவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
இப்போது ஓரளவுக்கு விளங்கியது. அவள் சொல்வது காப்பி நிறத்திலும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அது மேற்புறத்தில் காப்பி நிறத்திலும் உள்ளே வேறு நிறத்திலும் இருக்கும் என்றாள். பிறகு அதை நீ எப்போது, எந்த இடத்தில் சாப்பிட்டாய் என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்தது. போண்டா, பஜ்ஜி, பிட்ஜா என்று வரிசைப்படுத்திப் பார்த்தும் பயனில்லை.
அது எதுவுமே இல்லை என தொடர்ந்து தலையசைத்து மறுத்துவிட்டாள். அவள், ‘‘அதை ஹோட்டலில் சாப்பிடவில்லை’’ என்பதை மட்டும் உடனடியாகத் தெளிவுபடுத்தினாள்.
‘‘தோசையா?’’
‘‘சாக்லெட்டா?’’
‘‘போர்ன்விட்டாவா?, பூஸ்ட்டா?’’
ஆளுக்கொரு கேள்வி கேட்டனர். கேள்விகள் திசைமாறிப்போவதைப் பார்த்து, ‘‘அது வட்டமாக இருக்கும்.. குடிக்கும் பொருள் அல்ல’’ முடிந்த அளவு அவள் விளக்குவதற்கு முயற்சி செய்தும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையே என அப்பாவுக்கு வருத்தமாக இருந்தது.
அது அவளுடைய இயலாமையா, தங்களுடைய இயலாமையா என்பது தெரியவில்லை. வட்டமாக, காப்பி நிறத்தில் இருக்கும் சாப்பிடும் பொருள் என்ன என்று அப்பா தன் அலுவலகத் தோழர்களிடமும் மாக்ஸ் அவனுடைய வகுப்பு மாணவர்களிடமும் கேட்டுப் பார்த்தனர். இறுதியாக தான் யூகித்த தின்பண்டம் சரியாக இருக்கும் என்று அதைக் கையோடு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா..
‘‘இதுதானே நீ கேட்டது?’’ பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தார். அது ஒரு ‘பிலம் கேக்’. வட்டவடிவமான காப்பிநிற திட உணவு. உள்ளே வேறு நிறத்திலும் அது இருந்தது. அஞ்சலி அப்பாவையும் கேக்கையும் மாறி, மாறிப் பார்த்தாள். ‘‘இதுவும் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால் நான் சொன்னது இது இல்லை. அது இதைப் போலவே இருக்கும்.. இதைவிட மெல்லியதாக இருக்கும்’’
அஞ்சலி ஆசைப்பட்டதை அவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது.
அவள் கேட்டது தமிழர் உணவு வகை. அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யப்படுவது. நகரங்களில் மெல்ல வழக்கொழிந்து போய்விட்ட ஒன்று. அதை அவர்கள் தங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபோது நேரில் கண்டனர்.
‘‘இதுதான்.. இதுதான்‘‘ என அஞ்சலி துள்ளிகுதித்தாள்.
‘‘அட இதுவா?‘‘ என்றாள் அஞ்சலியின் அம்மா. மாக்ஸ§க்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.
‘‘எதற்கு அதிரசத்தைப் பார்த்து எல்லோரும் இத்தனை ஆச்சர்யப்படுகிறீர்கள்‘‘ என்று அஞ்சலியின் பாட்டி வியப்பாகக் கேட்டார். எல்லோரும் சேர்ந்து நடந்ததையெல்லாம் அவரிடம் சொல்ல ஆரம்பித்தனர்.
நன்றி: சுட்டி விகடன் feb 1-15
வியாழன், ஜனவரி 26, 2012
இலங்கையில் மாற்றம் புலம்பெயர்ந்தவர்களால் நடக்கும்!

ஒருவருக்கு இரண்டு தாய் இருப்பதற்கான சாத்தியங்களைப் போன்றதுதான் இரண்டு தேசம் இருப்பதும். தொடர்ச்சியான இலங்கை இனப் படுகொலைகள் இரண்டு தேச சாத்தியம் பெற்ற லட்சோப லட்சம் புலம்பெயர்ந்தோரை உருவாக்கியது. வேரைவிட்டு வெகுதூரம் விலகி வசித்துவரும் விருட்சங்களாகிப் போன அவர்களில் ஒருவர் கவிஞர் சேரன். அவர் தன் ‘காடாற்று’, மற்றும் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ நூல்கள் வெளியீட்டு விழாவுக்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். கனடாவில் விண்சர் பலகலைக் கழகத்தில் சமூகவியல்& மானிடவியல் துறை பேராசிரியராக இருக்கும் அவரிடம், இன்றைய புலம்பெயர்ந்தோர் நிலை குறித்துப் பேசினோம்.
உங்களின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘காடற்று’ எத்தகைய பிரச்னைகளை முன் வைத்து எழுதப்பட்டவை?
இந்தத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் இலங்கையில் நடந்த 2009 மே 16 போர் ஏற்படுத்திய இனப்படுகொலையின் தாக்கத்தின் விளைவாக எழுதப்பட்டவை. அதனால்தான் ‘காடாற்று‘ என்று பெயரிட்டேன். காடாற்று என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இறந்து போனவர்களுக்குச் செய்யும் சடங்கு. இறந்துபோனவர்கள் பற்றிய சோகத்துக்கும் இழப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆக வேண்டிய வேண்டிய அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்கான சடங்கு அது. ஆனால் இலங்கையில் நடந்த படுகொலைக்கு அப்படி காடற்று செய்ய முடியாது. ‘போர்முடிந்துவிட்டது.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அடுத்து ஆக வேண்டிய அபிவிருத்தி வேலைகளில் நீங்கள் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்’ என்று அரசு விரும்புகிறது.. ஆனால் அது அப்படி இல்லை என்பதுதான் என் கவிதைகளின் மையம்.
இலங்கை பிரச்னையில் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள?
போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும்வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது. இந்திய உதவியில்லாமல் போரில் அவர்கள் வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் இல்லை. இலங்கையின் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரின் கூற்றும் இதை உறுதிபடுத்தியிருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையும் இதை தெளிவுபடுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் கார்டன் வைஸ், ‘கேஜ்’ என்ற தன் நூலில் அதை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அதை ‘கூண்டு’ என்ற தலைப்பிலே தமிழில் வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயல்பட்டிருப்பது விளங்கும். எத்தனை அப்பாவி மனிதர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த உடன்படிக்கையால்தான் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தன.
சிலவேளைகளில் இவ்வளவு உயிரிழப்பு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று இந்தியாவும் சர்வதேச அமைப்புகளும் யோசிக்கக்கூடும். ஆயினும், போரின் விளைவுகளையும் வழிமுறைகளையும் நியாயப்படுத்துவதற்கான காரணங்களைத் தேடுவதுதான் இந்தியாவின் இப்போதைய நோக்கமாக இருக்கிறது.
அதேபோல், வடகிழக்கு மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை இவர்களாகவே முடிவு செய்து நடவடிக்கைகள் எடுத்து வருவது தமிழர்களுக்குப் பெரும்பாலும் பயனளிப்பதாக இல்லை. இப்போது இந்திய அரசு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்துள்ளது. அதிலும்கூட பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் குறைவுதான்.
வீடு கட்டித்தருவதை ஏதோ ஒரு கட்டட நிறுவனம் செய்துதானே ஆகவேண்டும்? அது பன்னாட்டு நிறுவனமாக இருப்பதில் என்ன தவறு?
அபிவிருத்தித் திட்டங்கள் அந்தப் பிராந்திய மக்களின் நலன்களுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும் என்பார் அமெர்த்தியா சென். மலைகளைக் குடைந்து கனிமங்களை வெட்டியெடுப்பது நல்லது என்பது பொதுவாக சரியான கருத்துதான். அது அங்கு வாழும் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாதல்லவா? சத்தீஸ்கரில் அதுதானே நடக்கிறது? கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பொதுமக்களின் நலனை எதிபார்க்கவே முடியாது.
இலங்கை வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் பல அபிவிருத்தி திட்டங்களில் அமெரிக்க, சீன கார்ப்பரேட் நிறுவனங்கள் அடையும் பொருளாதார பயன்கள் அதிகம். அங்கு அமைக்கப்படும் காற்றாலைகள் மலேசியாவில் இருக்கும் சீனர்களின் நிறுவனம். இந்தியாவும் அமெரிக்கவும், சீனாவும் அங்கு நடப்பதாகச் சொல்லும் பல நலத்திட்டங்களைப் போருக்குப் பிறகு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே அந்த நிறுவனங்களின் நலன்களுக்காகத்தான். மக்கள் நலன் அதில் குறைவாகவே இருக்கிறது.
லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு மீதமிருப்போர் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் இந்தச் சூழலில் தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஐந்து முக்கிய அம்சங்களைச் சொல்ல வேண்டும்.
1. கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த போராட்ட வழிமுறைகள், வெற்றிகள், தோல்விகள் குறித்த காய்தல்,. உவத்தல் இல்லாத சுயவிமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும்.
2. இனிவரும் போராட்டம் பன்முகப்பட்ட& பரந்துபட்ட ஜனநாயகத்தை உள்ளடக்கிய அனைத்துத் தரப்பு இலங்கை தமிழரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் அமைப்பாக இருக்க வேண்டும்..
3. இந்தப் போராட்டத்தினால் புலம் பெயர்ந்து இருக்கும் தமிழர்கள், பல்வேறு நாடுகளில் வசித்துவரும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் அனைவரும் ‘உணர்வுத் தோழமை‘ என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியில் தோள் கொடுக்க வேண்டும். அது, குறுகிய கட்சி நோக்கில் இல்லாமல் பொதுமக்கள் தளத்தில் அமைய வேண்டும்.
4. சர்வதேச அமைப்புகளான ஐ.நா. போன்றவை மீது நம்பிக்கை நீர்த்துப்போனதால் அந்த அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் தேவை.
5. இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்போர்ட், ஒரு தேசியகீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய அடையாளம் தேவை இருக்கிறது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டியிருக்கிறது.
நாடுகடந்த தேசிய அடையாளத்தை நோக்கிப் பயணிப்பது என்றால்?
கடந்த வாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜெய்ப்பூரில் ‘நடந்த நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை’ பற்றி பேசியிருக்கிறார். அதுபோன்ற ஒரு ஓட்டுரிமை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் வாய்க்கும் பட்சத்தில் இலங்கை அதிபர் தேர்தலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பொதுவாக இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்தான் அதிபர் தேர்தலில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பத்து லட்சம் புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் சூழலில் அவர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் எனில் மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.
எலக்ட்ரானிக் ஓட்டுரிமை சாத்தியமாக எத்தனை காலம் ஆகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
செல்போன், இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் வசதிகள் இந்தியாவிலேயே ஒரு இடத்தில் பரீட்சார்த்தமாக செய்து பார்த்ததாக அறிகிறேன். குறைந்தது ஐந்திலிருந்து பத்தாண்டுக்குள் இது பரவலாக சாத்தியமாகலாம். வரிசையில் நின்று ஓட்டளிப்பதில் மக்களுக்கு இருக்கும் மனச்சோர்வு, அக்கறையின்மை போன்றவை இந்த எலக்ட்ரானிக் ஓட்டுரிமையை துரிதப்படுத்தும். அதனால் வேகமாக இந்த மாற்றம் நிகழ்ந்துவிடும். இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் ஏற்கெனவே இந்த ஓட்டளிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாங்கள் கற்பனை செய்துவைத்திருந்த ‘நாடு கடந்த தேசியம்’ சாத்தியமாவதற்கு இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறாம்.
உங்கள் கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்திருப்பது குறித்து?
கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் ‘யூ கெனாட் டர்ன் அவே’ என்ற தொகுப்பும் லஷ்மி ஹோம்ஸ்டரம்& சாஷா எபெல்லிங் மொழிபெயர்ப்பில் ‘எ செகண்ட் சன் ரைஸ்’ என்ற தொகுப்பும் வந்துள்ளன. இப்போது கவிஞர் ஆனந்த் என்னுடைய ஒரு கவிதைத் தொகுதியை மொழிபெயர்த்து வருகிறார்.
புகலிடச் சூழல் அனுபவங்கள் படைப்பின் செயல்பாடுகளை எப்படி பாதிக்கிறது?
தமிழகச் சூழலில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து படைக்கிற இலக்கியம் வேறு.. இருபது வயது வரை ஒரு தேசம், பிறகு இன்னொரு தேசம், இன்னொரு சூழல், இன்னொரு தேசிய கீதம், இன்னொரு நாட்டுடன் விசுவாசம் என்று வாழும் புகலிட தமிழர்களின் இலக்கிய பங்களிப்புகள் வேறு. அந்தவிதத்தில் இது புதிய படைப்பனுபவத்தை முன்வைக்கிறது.
பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்று இன்னமும் தெளிவில்லாத நிலை இருக்கிறதே?
பலரும் பல இடங்களில் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதற்கு ஒரு ‘மல்டிபிள் சாய்ஸ் கேள்வி’ மூலமாக பதில் சொல்ல விரும்புகிறேன்.
பிரபாகரன் இருக்கிறார். திரும்பிவருவார்.
இல்லை. அவர் மாவீரர் ஆகிவிட்டார்.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
கனத்த மௌனம்.
மேற்கூறிய யாவையும் சரி.
- இந்த ஐந்து பதில்களில் நான் ஐந்தாவது பதிலை டிக் செய்கிறேன்.
நன்றி: விகடன்
வெள்ளி, ஜனவரி 20, 2012
எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!
சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.
திங்கள், ஜனவரி 16, 2012
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.
இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.
’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் வாழ்த்துக்கள்.
ஞாயிறு, ஜனவரி 08, 2012
திறமைக்கு மரியாதை
சனி, டிசம்பர் 31, 2011
சொல்வனத்தில் வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம்
சொல்வனம் இதழில் இது வெட்டுப்புலிக்கான இரண்டாவது விமர்சனம். அருணகிரி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் முத்தாய்ப்பாக இடம்பெற்ற விமர்சனம் என்றும் நினைக்கிறேன். ஒவ்வொரு பத்தாண்டின் ஆரம்பத்திலும் அந்தப் பத்தாண்டை ஒருகழுகுப் பார்வையில் வேகமாக ஓட்டிப் பார்ப்பது துருத்திக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.
லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?
சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:
- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.
லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.
- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.
ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.
- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.
பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.
சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.
தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
முழுவதும் படிக்க...
நூலுக்கு முன்னுரை தருவது நூலின் இயல்பைப் புரிந்தகொண்டு படிக்க ஒரு லகு தன்மையைத் தரும். அதையேதான் நான் பத்து பகுதிகளாகப் பிரித்துதருவதற்கு முயன்றேன். கதை சொல்வதில் ஒரு உத்தியாக அதைச் செய்தேன்.
மற்றபடி நாவலைபல்வேறு தளங்களில் வைத்து அலசி ஆராய்ந்திருக்கிறார் அருணகிரி.
இந்த நாவல் குறித்து எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது திராவிட அரசியல், தமிழ்சினிமா, வெட்டுப்புலி தீப்பெட்டியின் வரலாறு என்று மூன்றும் இந்த நாவலில் பின்னிப் பிணைந்திருக்கிறது. தவிர நான்காவதாக காலம் என்ற நான்காவது அம்சமும் இந்த நாவலில் இருக்கிறது.. அது பிரமிப்பானது என்று கூறினார்.
அருணகிரியும் அதையே இன்னொருவிதமாக சொல்லியிருக்கிறார்.
அருணகிரி அவர்களின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்.
லஷ்மண ரெட்டி வெள்ளைக்காரன் குதிரையில் திருட்டுத்தனமாய் ஏறி சவாரி விடுவதன் பரவச விவரிப்பில் கதை தொடங்குகிறது. அருமையான தொடக்கம். வரலாற்றின் சம்பவங்களால் அடித்துச்செல்லப்படும் அவரது வாழ்க்கை கதையின் முடிவில் ஈஸி சேரில் கொண்டு வந்து அவரைப் போடுகிறது. பெரியார் பக்தராய்த்தொடங்கும் லட்சமண ரெட்டி பிற்காலத்தில் ”தான் மட்டுமேயான ஒரு இயக்கமாக மாறிப்போகிறார். ஒருகாலத்தில் ஊரையே எதிர்க்கத்துணிந்தவர், பேரனுக்கு ”ராஜேஷ் என்று பெயர் வைத்தது நாராசமாய் இருந்தாலும்” ஒன்றும் சொல்ல சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுகிறார். அந்த அபத்தமான இடத்தில் நின்று கொண்டு காலம் அமைதியாய்ப் புன்னகைக்கிறது. அந்தப்புன்னகையை நமக்கு அடையாளம் காட்டும் கணத்தில் படைப்பூக்கத்தின் சாராம்சமான ஓர் இடத்தை”வெட்டுப்புலி” தொட்டு விடுகிறது. வெற்றிகரமான ஒரு புனைவிற்கு வேறு என்ன வேண்டும்?
சொல்வனத்தில்...
வெட்டுப்புலி
அருணகிரி | இதழ் 62 |
வெட்டுப்புலி கடந்த எண்பதாண்டு தமிழக வரலாற்றை வரலாற்று சம்பவங்களின் வழியாகப்பேச முனைந்திருக்கிறது. அரசியல் அளவில் இது திராவிட இயக்கங்களின் வளர்ச்சியின் வரலாறும் ஆகும். கடந்த நூற்றாண்டு தமிழக சமூக அரசியல் நூல் பந்தில் வெட்டுப்புலி சின்னா ரெட்டி எங்கோ இருக்கும் ஒரு முனைதான். ஆனால் அதை உருவத்தொடங்கியதில் ஒரு முக்கால் நூற்றாண்டும் வெளியே வந்து விழுகிறது.
பிராமணரல்லாத சாதிகளில் செல்வ வளமும் நிலம் உடை ஆதிக்கமும் கொண்ட சாதிகளை எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களில் நிகழும் சம்பவங்களின் வழியாகக் கதையை நகர்த்திக்கொண்டு போகிறது. மூன்று சாதிகள் இவ்வாறு பேசப்படுகின்றன:
- வெட்டுப்புலி இளைஞனான சின்னா ரெட்டியின் உறவான தசரத ரெட்டியின் மகன் லஷ்மண ரெட்டி.
லஷ்மண ரெட்டி காலப்போக்கில், குறிப்பாக தனது ஆதர்சமான ஈவேராவின் மறைவுக்குப்பின், பார்வையாளராகவும் அனுதாபியுமாக மட்டுமே ஆகி விட்டவர். லஷ்மண ரெட்டி ஈவேரா தவிர வேறு யாரும் ஆதர்சம் இல்லை. அவரது சிந்தனைப்போக்கு அவரைத்தாண்டி அவர் மகன் நடராஜனின் வாழ்க்கையில் படர்ந்து விளையாடுகிறது.
- சினிமா எடுக்க ஆசைப்படும் ஆறுமுக முதலி. இது திராவிட சினிமா களம் எனலாம். இங்கும் ஆறுமுக முதலியைத்தாண்டி அவரது மகன் சிவகுருவையே சினிமா மோகம் கடுமையாய் புரட்டிப்போடுகிறது. சினிமா மோகம் அவன் வாழ்க்கையைத்தடம் புரள வைக்கிறது.
ஆறுமுக முதலியின் அண்ணா கணேச முதலி கடும் பிராமண வெறுப்பாளர். சென்னையில் மாம்பலத்தில் கிரயம் பிரித்து எதுத்துக்கொண்ட பெரிய சொந்த வீட்டில் வசதியாய் வாழ்ந்தாலும் எல்லாவற்றிலும் பிராமண சதியைக் காண்பவர். இவர் திராவிட இயக்கத்தின் மைய நீரோட்டமானதொரு தளம். கணேச முதலி மகன் நடேசன் பெரியார் பக்தனாகவும் தியாகராசன் அண்ணா பக்தனாகவும் ஆகிறார்கள்.
- மணி நாயுடு - இது திராவிட காண்ட்ராக்ட் வியாபார களம் எனலாம். வரதராஜுலு நாயுடுவின் ஜமீன் பரம்பரையில் வந்த இவர் திராவிட அரசியலில் எல்லா இடங்களிலும் பெருகும் லஞ்சத்தின் அங்கமாகிப்போனவர். ஊரில் கைதேர்ந்த திருடனான படவேட்டான் திருடிக்கொண்டு வந்த தங்க முருகன் சிலையை வைத்து தொடர்கிறது இந்த ஜமீன் பரம்பரையின் ஏறுமுகம்.
பரம்பரைச் செல்வமும் சமூக செல்வாக்கும் நிறைந்த இந்த மூன்று குடும்பங்களையும் திராவிட இயக்கத்தளத்தில் பிணைக்கும் ஒரே அம்சம் அவர்களது பிராமண வெறுப்பு. அந்த வெறுப்பு ரெட்டி குடும்பத்தில் 1930-களின் உரையாடல் ஒன்றின் வழியாக கதையில் வெளியாகும் இடம் திராவிட இயக்க விதைக்குள் இருந்த ஜீவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ”குருவிகாரன், பள்ளி, பறையன், செட்டி, கம்மான் எல்லாம் சமம்னு சட்டமே வரப்போவுதாம்” என்று சொல்லக்கேட்கும் தசரதரெட்டியின் மனைவி மங்கம்மா அதிர்ச்சியில் “மேலும் முன்னேறணும்னு நினைப்பானா குருவிக்காரனும் நாமும் சமம்னு சொல்வானா?” என்று கேட்க, தசரத ரெட்டி ”குருவிக்காரனும் நாமும் சமமாயிடணும்னு இல்லடி, பாப்பானும் நாமும் சமம்னு சொல்றதுக்குத்தாண்டி சட்டம் போடச்சொல்றாங்க” என்கிறார்.
சூத்திரர்கள் கோவிலுக்குள் எந்த அளவுக்கு போக முடியுமோ அது வரை தாழ்த்தப்பட்ட அரிஜன மக்கள் போகலாம் என்று காந்தியடிகள் கூறியபோது ஈவேரா ஆவேசமாய் இவ்வாறு அறிவிக்கிறார்: ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது”.
தசரத ரெட்டி மங்கம்மாவுக்கு சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் ஈவேரா மொழியில் ஆவேசமாய் வெளிவரப்போகும் பிற்கால வார்த்தைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
முழுவதும் படிக்க...
திங்கள், டிசம்பர் 26, 2011
ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி பொறியியல் படித்த ஓர் இலக்கிய இளைஞர்.
படைப்பிலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் நல்ல படிப்பாளி. நவீன பிசிராந்தையார் நட்பு போல கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செல் போனில் மட்டுமே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வெட்டுப்புலி நாவலின் தீவிரமான வாசகர் அவர். ஆண்பால் பெண்பால் வெளியீட்டுவிழா மேடையில்தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அவரை நூலை பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்ற வேண்டும் என்று கேட்டு போனில்தான் அழைப்பு விடுத்தேன். மிகச் சரியாக விழாவுக்கு வந்துவிட்டார். விழாவைப் பற்றி அவருடைய வலைதளத்தில் எழுதியது இது:
ஒரு நாள் மாலை பவாவுடன் மிகத் தீவிரமாக, அப்போது நான் அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த வெட்டுப் புலி என்ற நாவலைப் பற்றி மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தேன். பவா என்னிடம் பேசிக் கொண்டே, அவரது கைப்பேசியில் யாரையோ அழைத்து, இதோ பேசுங்கள்! என்று என்னிடம் கொடுத்தார். யாரிடம்? என்று கேட்டதற்கு, இப்போது நீங்கள் பாராட்டிக் கொண்டிருந்தீர்களே, வெட்டுப் புலி நாவல், அதை எழுதியவர் என்று சொன்னார்.
அப்படித்தான் எழுத்தாளர் தமிழ்மகன் எனக்கு அறிமுகமானார். ஓரு எழுத்தாளராக ஏற்கனவே அவர் நிறைய எழுதியிருந்தாலும் கூட நான் படித்தது அவரது புகழ்பெற்ற நாவலான வெட்டுப் புலிதான். உங்களில் கூட யாரேனும் அந்த பழைய தீப்பெட்டியினை பார்த்திருக்கலாம். அதன் அட்டையில் ஒரு புசி ஒரு மனிதனை தாக்க பாய்ந்து கொண்டிருக்கும். அம்மனிதனோ, தன்னிடம் இருக்கும் ஒரு கதிர் அரிவாளை வைத்து அந்தப் புலியை தாக்க முயலுவான். அவன் காலடியில் ஒரு நாய் அமர்ந்து அந்தக் காட்சியினை பார்த்துக் கொண்டிருக்கும். வெட்டுப் புலி தீப்பெட்டி என்று என் பள்ளி நாட்களில் மிகவும் புகழ் பெற்ற தீப்பெட்டி அது.
எனது பள்ளி நாட்களில் தீப்பெட்டிகளின் அட்டைகளை சேகரித்து வைப்பது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. இப்போது போல வேக்ஸ் தீப்பெட்டியெல்லாம் அன்று கிடையாது. மேலும், தீக்குச்சி தயாரிப்பதற்கான மருந்து மிகவும் தட்டுப்பாடான காலம் என்பதாலும், ஒரு ப்ராண்டிற்கு இவ்வளவுதான் மருந்து சப்ளை என்பதாலும், பல நூறு தீப்பெட்டிகள் எனக்கு கிடைத்தன. அதுவும், குறிப்பாக பழனி, ஶ்ரீவில்லிப்புத்தூர், சாத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும்போது என் கற்பனைக்கு எட்டாத தீப்பெட்டி அட்டையெல்லாம் எனக்கு கிடைத்தது.
சார்லி சாப்லின், மவுண்ட் எவரெஸ்ட், முகமது அலி, சிவாஜி கணேசன் நடித்திராத அவரின் பல வேடங்களின் வரைபடங்கள் என சேகரிக்க சேகரிக்க அற்புத பொக்கிஷமாக சேர்ந்து கொண்டே போனது. வெட்டுப் புலி மிகச் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்று என்பதால் என் சேகரிப்பில் வெட்டுப் புலி இல்லை.
ஆனால், அந்த வெட்டுப் புலியின் படத்துக்கு பின் இருக்கும் கதையை பற்றி என் இளம் வயதில் எங்கோ பேசியிருப்பது எனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்த நாய்தான் கடைசியில் அவனை புலியிடம் இருந்து காப்பாற்றியது என்று டீ வாங்கி வர செல்லும் போது சோமு கடையில் சொன்னார்கள். என் நினைவிலிருந்து மறைந்து போயிருந்த வெட்டுப் புலி இத்தனை நாட்கள் கழித்து இந்த வெட்டுப்புலி நாவல் மூலம் மீண்டு வந்தது.
அதன் கதையை நான் சொல்லப் போவதில்லை. அது நிச்சயம் படித்து பார்க்க வேண்டிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு நாவல். ஆனால், கலைஞர், எம்.ஜி.ஆர் இருவரது ஆட்சியையும் பார்த்த, கமல், ரஜினியின் ஆரம்பக் காலப் படங்களைப் பார்த்து வளர்ந்த என்னைப் போன்ற நாற்பதுகளில் இருப்பவர்கள் நிச்சயம் அந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பார்கள்.
எனது மனங்கவர்ந்த வெட்டுப் புலியின் நாவலாசிரியர் தமிழ்மகன் என்னை சில வாரங்களுக்கு முன் அழைத்து அவரின் அடுத்த புத்தகமான ஆண்பால் பெண்பால் நாவலை வெளியிட அழைத்தார். ஒப்புக் கொண்டு சென்று விழாவினில் கலந்து கொண்டேன்.
அவ்விழாவில் நான் பேசியதைப் பற்றி தமிழ்மகன் அவர்கள் அவரின் வலைப் பக்கத்தில் http://www.tamilmagan.in/2011_12_05_archive.html குறிப்பிட்டுள்ளார்.
ஆண்பால் பெண்பால் புத்தக வெளியீட்டு விழா..
வெள்ளி, டிசம்பர் 23, 2011
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
வெட்டுப்புலி என்கிற சூப்பர்ஹிட் நாவலை எழுதிய தமிழ்மகனின் புதிய நாவல். வெளியீட்டன்று போக முடியவில்லை. அதனால் அடுத்த நாளே புத்தகத்தை வாங்கி விட்டேன். சென்ற நாவலைப் போன்றே வித்யாசமான நாவல். கதை கருவிலும், சொல்லப்பட்ட விதத்திலும்.பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும், ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார் ஆசிரியர் தமிழ்மகன்.
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
ஆண்பால் ..பெண்பால் பற்றி கேபிள் சங்கர்
வியாழன், டிசம்பர் 22, 2011
வாழ்த்து
2011-ம் ஆண்டு எழுத்தாளர்களையும் இளம் எழுத்தாளர்களையும் ஒரு சேர அங்கீகரித்திருக்கிறது.
கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பூமணி - விஷ்ணுபுரம் விருது
சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது
தேவதச்சன்- விளக்கு விருது
வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது
சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது
ஜெயமோகன் - முகம் விருது
அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
கௌரவிக்கப்பட வேண்டிய பலரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பூமணி - விஷ்ணுபுரம் விருது
சு.வெங்கடேசன் - சாகித்ய அகாதமி விருது
தேவதச்சன்- விளக்கு விருது
வண்ணநிலவன், வண்ணதாசன்- சாரல் விருது
சு.வேணுகோபால் - பாஷா பரிஷத் விருது
ஜெயமோகன் - முகம் விருது
அனைவருக்கும் அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்

தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.
‘யாரோ எழுதிய இந்த நாவலில் மிகுந்திருக்கும் அதிகப்படியான குழப்பங்கள் குறித்து என்னுடைய விளக்கம்’ என்று நாவல் தொடங்குவதற்கு முன்பாகவே பதினாறு பக்க படா நீளமான விளக்கம் ஒன்றினை தருகிறார் தமிழ்மகன். உண்மையில் இந்த விளக்கம்தான் குழப்புகிறதே தவிர, நாவல் தெளிவான நீரோடையாகவே பாய்ச்சல் கொள்கிறது. இந்த நாவலை எழுதியது நானல்ல என்று வாக்குமூலம் கொடுக்கிறார் நாவலாசிரியர். அதற்கேற்ப நாவலின் முதல் பாகம் ‘பிரியா சொல்வதாக பிரமிளா எழுதியது’ என்றும், இரண்டாம் பாகம் ‘அருண் சொல்வதாக ரகு எழுதியது’ என்றும் இருக்கிறது. நாவலை எழுதியவர் தமிழ்மகனல்ல என்றால் யாருக்கு ராயல்டி தருவது என்று முன்னுரைக்கு வந்து குழம்புகிறார் மனுஷ்யபுத்திரன். இவ்வாறாக கதை தொடங்குவதற்கு முன்பாக நடக்கும் புதிர் விளையாட்டே சுவாரஸ்யத்துக்கு சுழி போடுகிறது.
இந்நாவலில் சொல்லப்படும் முதலிரவு, பர்ஃபெக்டான முதலிரவு. இதுவரை ‘அந்த’ அனுபவம் இல்லாத இருவர் தனித்து இரவைக் கழிப்பதில் எதிர்கொள்ளும் சங்கடங்கள். அங்கே நடக்கும் சிறு சிறு அசைவுகளையும் கூட ஆண்மனம் எதிர்கொள்வதற்கும், பெண்மனம் எதிர்கொள்வதற்குமான வேறுபாடுகள் என்று நுட்பமான சித்தரிப்புகளில் கவர்கிறார் தமிழ்மகன்.
‘நாம் எதை அடைய விரும்புகிறோமோ, அதுவாகவே மாறிப்போய் விடுகிறோம்’ என்று காந்தியோ, காப்மேயரோ அல்லது யாரோ சொல்லியிருக்கிறார்கள். ‘நாம் எதை அதிகமாக வெறுக்கிறோமோ, ஒருகாலத்தில் அதை நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்’ என்று இந்த கதையைப் படித்தால் உணர்ந்துக் கொள்ள முடிகிறது. நாயகி ப்ரியாவுக்கு எம்.ஜி.ஆர் என்றால் உயிர். நாயகனுக்கும் சரி. நாவலாசிரியருக்கும் சரி, அவர் வேப்பங்காய். ஆனால் பாருங்கள். ப்ரியா பைத்தியம் பிடித்து எம்.ஜி.ஆர் தமிழர் என்று நிரூபிக்க எங்கெல்லாம் பயணிக்கிறாளோ, என்னவெல்லாம் செய்கிறாளோ.. அத்தனையையும் நாவலாசிரியர் செய்திருக்கிறார். இவரே கும்பகோணத்துக்கு போயிருப்பார். எம்.ஜி.ஆர் படித்த பள்ளி, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்ட கோயில் என்று எல்லாவற்றுக்கும் சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணக் காப்பக அலுவலகங்களுக்கு சென்று தேடியிருக்கிறார். ஆனால் பிரியாவுக்கு மட்டும் மனநிலை சரியில்லை என்று காதுகுத்துகிறார். எனக்கென்னவோ ப்ரியாவை விட பெரிய எம்.ஜி.ஆர் பைத்தியமாக தமிழ்மகனைதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு இளம்பெண்ணுக்கு வெண்குஷ்டம் வருகிறது. இதையடுத்து இயல்பாக தோன்றும் தாழ்வு மனப்பான்மை. மனச்சிதைவு. அதன் வாயிலாக அப்பெண்ணுக்கு தோன்றும் மாயத்தோற்றங்கள். திருமணக் குழப்பங்கள், இறுதியில் விவாகரத்து, மனநோய் காப்பகம் என்று போகிறது கதை.
இந்தக் கதைக்கு ரோஷோமான் பாணியில் கதை சொல்லும் வடிவத்தை அமைத்திருக்கிறார் ஆசிரியர். முதல் பாகம் முழுக்க சொல்லப்படும் அதே கதைதான், இரண்டாம் பாகத்திலும். அதே காட்சிகள், கிட்டத்தட்ட வசனங்களும் கூட அதே. விருமாண்டி மாதிரியேதான். விருமாண்டியிலாவது கேமிரா கோணங்களில் வித்தியாசம் காட்டமுடியும். இது அச்சில் இருக்கும் நாவல். இங்கேதான் தமிழ்மகனின் சாமர்த்தியம் மிளிருகிறது. ஒரே கதையை திரும்பப் படிக்கும் அலுப்பு சற்றுக்கூட ஏற்பட்டுவிடாத வகையில் மொழியை லகான் பிடித்து கட்டுப்படுத்துகிறார்.
இரண்டு பாகங்களுக்கும் தலா இருபது அத்தியாயங்கள். இருவருக்கும் மனப்பிளவு மனநோயின் காரணமாக என்றே முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம் வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு பத்தியில் போகிறபோக்கில் கொளுத்திப்போடும் ஒரு மேட்டரில் கதையின் ஆதாரத்தன்மையே யூ டர்ன் அடிக்கிறது. மிக முக்கியமான இந்த சஸ்பென்ஸை கூட வெளியீட்டுவிழாவில் ஒரு பெண்கவிஞர் சூறைத்தேங்காய் உடைப்பது மாதிரி போட்டு உடைத்துவிட்டார். மனம் பிறழ்ந்த பெண் மனம், பெருந்தன்மையான ஆண் மனம் என்று ஆணாதிக்கப் பார்வையில் கதை எழுதிவிட்டாரே தமிழ்மகன் என்று ஆரம்பத்தில் ஏற்பட்ட கோபம் முழுக்க இறுதியில் கரைந்து, உருகிப் போய்விடுகிறது.
பெண்கள் எம்.ஜி.ஆரை ரசிப்பது உடல்சார்ந்த ஈர்ப்பின் காரணமாகதான் என்று பொதுவான ஒரு அபிப்ராயம் உண்டு. ஒரு ஆண் எம்.ஜி.ஆரை எப்படிப் பார்க்கிறானோ, அதே மாதிரி இயல்பான ரசனைதான் பெண்ணுடையதும் என்பதை பிரச்சாரநெடி இல்லாமல் சொல்லியிருப்பது சிறப்பு. அதே மாதிரி காமம் என்கிற ஒற்றை விஷயத்தை அணுகுவதில் ஆண், பெண் இருவருக்குமான 360 டிகிரி கோணத்தையும் இண்டு, இடுக்கு விடாமல் அலசித் துவைத்திருப்பது, நாவலாசிரியரின் நீண்டகால அனுபவத்தை(?) வெளிப்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் கதையில் தமிழ்மகனே ஒரு பாத்திரமாக வருகிறார். நாயகன் இவரை போற்றுகிறார் (செக்ஸ் பத்தி நல்லா எழுதறாரு). நாயகி இவரை வெறுக்கிறார் (அந்தாளுக்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது).
முதல் பாகத்தில் ஒருவரும், இரண்டாம் பாகத்தில் அடுத்தவருமாக இரண்டே பேர் இருநூற்றி ஐம்பது பக்கத்துக்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தால் போர் அடிக்காதா? அதிலும் வசனங்கள் மிகவும் குறைவு. போர் அடிக்கவேயில்லை என்று நான் வேண்டுமானால் கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறேன். சரியான மொழிநுட்பத்தை கைகொண்டால் எவ்வளவு வறட்சியான விஷயங்களையும் எப்படி வெகுசுவாரஸ்யமாக்க முடியும் என்பதை இந்த நாவல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
‘ஆண்பால், பெண்பால்’ ஒரு குடும்பக் கதை. அதில் அரசியல் இருக்கிறது. வரலாறு இருக்கிறது. ஒரு நாவல் இலக்கியமாக கதை மட்டும் போதாது, நல்ல களத்தையும் அடையாளம் காணவேண்டும் என்று பாடமெடுத்திருக்கிறது இந்நாவல். தமிழ்மகனின் முந்தைய சூப்பர் ஹிட் ‘வெட்டுப்புலி‘’’’க்கு முற்றிலும் மாறுபட்ட கதை என்றாலும், அது பாய்ந்தது எட்டு அடி, இது பாய்ந்திருப்பது முப்பத்தி இரண்டு அடி.
நூல் : ஆண்பால் பெண்பால்
ஆசிரியர் : தமிழ்மகன்
விலை : ரூ.200
பக்கங்கள் : 256
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
தொலைபேசி : 91-44-24993448. இணையத்தளம் : www.uyirmmai@gmail.com
ஆண்பால் பெண்பால் - யுவகிருஷ்ணா விமர்சனம்
புதன், டிசம்பர் 21, 2011
செவ்வாய், டிசம்பர் 20, 2011
வெள்ளி, டிசம்பர் 16, 2011
புதன், டிசம்பர் 07, 2011
திங்கள், டிசம்பர் 05, 2011
ஆறு கோணங்களில் ஆண்பால் பெண்பால்
ஆண்பால் பெண்பால் நாவல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளியீட்டு விழாவின் போதே அறுபத்தைந்து எழுபது பிரதிகள் வரை விற்றுவிட்டதாக மனுஷ்யபுத்திரன் மறுநாள் காலை சொன்னதில் இருந்து விழாவின் வெற்றியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டில் மைக் இல்லாமல் ஒரு புத்தக வெளியீட்டுவிழா நடைபெற்றது என்ற விதத்தில் இந்த விழா மறக்க முடியாத விழாவாக மாறிவிட்டது.
புக் பாயிண்ட் அரங்கத்துக்கான மைக் வைத்திருக்கும் அந்த மர்ம நபர் கூட்டம் ஆரம்பிக்கும்போது தலைமறைவாகிவிட, செல்போன், ஈ மெயில் போன்ற எந்த தொழில்நுட்பத்துக்கும் அகப்படாமல் போகவே, உரத்தகுரலில் பேசி எல்லோரும் அரங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.
வரவேற்புரை நிகழ்த்திய கவிஞர் மனுஷ்யபுத்திரன் முகம் தெரியாத அந்த மைக் ஆசாமி மீதும் புக் பாயிண்ட் நிர்வாகத்தின் மீதும் மிகுந்த கோபமடைந்தார்.
வெட்டுப்புலி நாவல் வெளியான ஆண்டிலேயே மறுபதிப்புக்கு போனது வலைப்பூக்களினால்தான் என்று பாராட்டினார்.
தலைமைதாங்கி நடத்திய எழுத்தாளர் சா.கந்தசாமி, நாம் மைக் பற்றி பேசுவதற்கா வந்தோம், நாவல் பற்றி பேசுவோம் என்று ஆரம்பித்து விழாவின் இறுக்கத்தைத் தளர்த்தினார். பத்திரிகையாளர்கள் கதைகளின் அருமைபற்றித் தெரியாதவர்களாக இருப்பதில் ஆரம்பித்து பத்திரிகையில் இருப்பவர்களின் எழுத்தில் தனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்ததை தமிழ்மகன் தகர்த்திருக்கிறார் என்றார்.
பாரதி, புதுமைப்பித்தன், டி.எஸ்.சொக்கலிங்கம், சி.சு செல்லப்பா, கு. அழகிரிசாமி, கல்கி, பிரபஞ்சன், வண்ணநிலவன், விந்தன், ஜி.முருகன் போன்ற பலரும் பத்திரிகையாளர்கள்தான். கடந்த நூறாண்டு பத்திரிகை வரலாற்றில் இரண்டு டஜன் பேர்கூட தேறவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம்.
நாவலின் கதை என்ன என்பதைச் சொல்லாமல் நாவலின் எளிமை, உத்தி என அவர் அரை மணிநேரம் வரை பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
வெறும் 500 சொற்களை வைத்தே இத்தனை அழுத்தமான அடர்த்தியான நாவலை படைத்திருப்பதற்காகப் பாராட்டினார்.
ஞாநி முன்னுரையை மட்டுமே படித்ததாகச் சொன்னார். இந்த நாவலை நான் எழுதவில்லை என்று அழுத்தம் திருத்தமாக ஆதாரபூர்வமாக நான் விவாதித்திருப்பதை ஞாநி சிலாகித்தார். அந்த முன்னுரையும் சேர்த்து நாவலின் ஒரு பகுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
நூலை வெளியிட்ட திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர்கு.கருணாநிதியின் பேச்சு மிகமிக எதார்த்தமாக இருந்தது. சிறுவயதில் எம்.ஜி.ஆருக்கு மாலை போட்ட அனுபவத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்த நேரம். பெரிய கூட்டம் அவருக்கு மாலை போட காத்திருக்கிறது. அவருக்கு மாலை போடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். இவரை எடுத்துக் கொஞ்சியபடி, உன் பெயர் என்ன என்று கேட்கிறார். இவர் கருணாநிதி என்கிறார். எம்.ஜி.ஆர் முகத்தில் சிறிய அதிர்ச்சி... அல்லது வியப்பு.ஒரு முத்தம் தந்து கீழே இறக்கிவிடுகிறார். எம்.ஜி.ஆரின் கரங்கள் என் மீது பட்ட காரணத்தினாலேயே மக்கள் அவரை எப்படிக் கொண்டாடினார்கள் என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவர் வாயில் சர்க்கரை போட்ட பாட்டியை நினைவுகூர்ந்தார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முன்னரே தெரிந்திருந்தால் இதை நாவலில் சேர்த்திருப்பேன். நாவலுக்கு இந்த மாதிரி விஷயங்கள்தான் எனக்குத் தேவையாக இருந்தது. நாவலில் நான் எந்த மாதிரி விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து அவர் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.
நூலை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜனநாதன், விழாவுக்கு வருவாரா என்பதே சந்தேகமாக இருந்தது. அன்று காலையில்தான் அவருடைய பால்ய சினேகிதர் இறந்து போய்விட்டதாகவும் நெடுநாளாக அவனைப் பார்க்காமல் இருந்துவிட்டேன். பலமுறை அவன் போன் செய்திருந்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மத்தியானம் என்னிடம் தெரிவித்தார். அவரை வற்புறுத்தி அழைப்பதற்கு சங்கடமாக இருந்தது. அந்த மனநிலையிலும் அவர் வந்திருந்தது என்னை நிலைகுலைய வைத்தது.
எந்த விஷயமும் மைக் மூலமாக வெளி உலகுக்குச் சென்றடைவதில்லை. இங்கு இந்தக் கூட்டத்தைக் கேட்டவர்கள் அடுத்து இருப்பவர்களுக்குச் சொல்வதன் மூலமே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நல்ல நாவல் அப்படித்தான் வெளியே பிரபலமாகும் என்றார்.

கரு.பழனியப்பன் பேச்சு அரங்கத்தைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும். அவர்தான் எம்.ஜி.ஆரைப் பற்றி இந்த நாவலில் இடம் பெற்ற அத்தனை விவகாரத்தையும் தீவிரமாக எடுத்து வைத்தவர். அவர் சொன்ன டிராகுலா உதாரணம் ரசிக்கும்படி இருந்தது.
நாவலில் மொத்தம் ஐந்தே காட்சிகள்தான் என்று அவர் சினிமா போல விவரித்தார். அதையே ஆண் ஒரு முறை சொல்லி முடிக்கிறான். பிறகு பெண் ஒரு முறை சொல்லி முடிக்கிறாள்... ஆனால் எப்படி சுவாரஸ்யமாக சொல்ல முடிந்தது இவரால்? எனக் கேட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது என்பதை என் நாவல் மூலமாகவே நிரூபிக்க நினைத்தார். அதற்காகத்தான் இந்த நாவலுக்கு அப்படியொரு முன்னுரையையே நான் எழுத வேண்டியதாக இருந்தது. எம்.ஜி.ஆரை நாவலின் ஒரு பாத்திரமாக அமைத்திருப்பதின் வெற்றியை அவர் பெரிதும் பாராட்டினார். நிறைய தெரிந்தவர்களாக இருப்பவர்கள் சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்களா என்பதை நாவலில் வரும் ரகு கதாபாத்திரத்தோடும் எழுத்தாளர் சுஜாதாவோடும் ஒப்பிட்டது அவருடைய நுண்ணிய வாசிப்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.
ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல்ரீதியான சிக்கலைப் பற்றி பேச ஆரம்பித்தார் கவிதா முரளிதரன். கோர்வையாக அவருடைய கருத்துகளை எழுதியே எடுத்துவந்திருந்தார். கதையின் க்ளைமாக்ஸில் இருந்து நாவலை அவர் விமர்சிக்க ஆரம்பித்தார். நாவலின் க்ளைமாக்ûஸ சொல்லிவிடுவதால் இந்த நாவலின் சுவாரஸ்யம் குறைந்துவிடாது என்று அவர் நம்பிக்கையாக கூறியது எனக்குப் பிடித்திருந்தார். கணவன் அருண், மனைவி பிரியா இருவருக்குமான பிரச்சினை என்பது நாவலின் கடைசி அத்தியாயத்தில் அடியோடு மாறிப்போய்விடுவதாக அவர் சொன்னது அவருடைய கவனமான வாசிப்பைக் காட்டியது.
நாவலில் சொல்லப்பட்ட உளவியல் சிக்கல்களை அவற்றின் பெயர்களோடு சொன்னார் பெரியார்தாசன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இருக்கும் உளவியல் நோய்க்கூறு எத்தகையது என்று அவர் விவரித்தார். மிக நீண்ட உரை. அழமானது. நாவலில் நான் ஒரு பத்தியில் மிகக் கடுமையான வாக்கிய அமைப்பை எழுதியிருந்தேன். அதைக் குறிப்பு எதுவும் இல்லாமல் அப்படியே சொன்னார். இத்தனைக்கும் நாவலை அவருக்கு விழா நாளுக்கு முதல்நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டுபோய் சேர்த்தேன். இரவே நாவலை படித்து முடித்துவிட்டு கதாபாத்திரங்களை அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
ஏறத்தாழ எல்லாருமே வெட்டுப் புலி நாவல் பற்றி ஒருவரியாவது பேசினார்கள். எல்லா புகழும் மனுஷ்யபுத்திரனுக்கே.
அந்த நாவலின் கரு என்ன என்பதை நான்கு வரியில் சொன்னேன். உடனே எழுதித்தாருங்கள் என்று அவர் என்னை ஊக்குவித்தார். வெட்டுப்புலியை எழுதியது அப்படித்தான். ஆண்பால் பெண்பால் பற்றி இரண்டுவரிதான் சொன்னேன். இதோ இப்படியொரு விழா நடத்தி பெருமைபடுத்திவிட்டார்.
என் மீது அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்.
விழாவில் பேசிய எல்லோரும் ஒருவர் சொன்னது போல இன்றி இன்னொருவிதமான கோணத்தில் அலசியிருந்தனர். அரசியல்ரீதியாக, பாலியல்ரீதியாக, உளவியல்ரீதியாக, பெண்ணிய நோக்கில், இலக்கிய நோக்கில், சினிமா பார்வையில் என விதவிதமாக இருந்தது.
ஆண்பால் பெண்பால் பற்றிய என்னுடைய கோணம் என்னுடைய நாவலாக வந்திருக்கிறது என்று என் ஏற்புரையில் சொன்னேன்.
புதன், நவம்பர் 30, 2011
ஆண்பால் பெண்பால்

மூன்றாண்டு உழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன். ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும் இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு, பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா? இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன். எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஏன் ஆரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.வரும் டிசம்பர் மூன்றாம் தேதி ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு மணிக்கு ஆண்பால் பெண்பால் வெளியாகிறது. நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சனி, நவம்பர் 19, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)