வியாழன், டிசம்பர் 06, 2007
















சேவை: மனம் இருந்தால் "மார்க்' உண்டு!






மன வளர்ச்சி குன்றியோர் காப்பகங்கள் பல உருவாகியுள்ளன. ஆனால் அவர்களை அவர்களே காத்துக் கொள்வதற்கான பயிற்சிகளும் அளிக்கப்படும் அமைப்புகள் அவற்றில் சிலவே.

இத்தகையவர்களுக்காகக் கடந்த 22 ஆண்டுகளாக சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கி வந்த ஸ்பாஸ்டிக் சொûஸட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, இப்போது "வித்யாசாகர்' என்ற பெயரில் இயங்கத் தொடங்கியிருக்கிறது. ஏன் இந்தப் பெயர் மாற்றம் என்று அவர்களிடம் காரணம் கேட்ட போது, ""பெயரில்கூட அவர்களின் மன வளர்ச்சியை நினைவுபடுத்தி காயப்படுத்த வேண்டாம் என்பதால்தான்'' என்கிறார் ஜெயந்தி நடராஜன். இந்த அமைப்பின் விற்பனை மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவைச் சேர்ந்தவர் இவர். இத்தகையவர்களுக்கான வேலைவாய்ப்புகளுக்காகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறார்.




""கடந்த 22 ஆண்டுகளாக மூளை முடக்குவாதம் சம்பந்தமான ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்காகவும் மாணவர்களைப் பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த நாங்கள் இப்போது அவர்களுக்கு இலவசமாகத் தொழிற் பயிற்சிகள் அளிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.

எந்தப் பணி இடத்திலும் ஆங்கிலத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதற்கான பயிற்சியை அளிக்கிறோம். கணினி சம்பந்தமான குறைந்தபட்ச திறன் இப்போது எல்லா துறைகளிலும் தேவையாகிவிட்டது. அதற்கான பயிற்சியையும் "பிஹேவியரல் ஸ்கில்' எனப்படும் நடத்தைத் திறனுக்கான பயிற்சியையும் அளிக்கிறோம். இவையாவும் இரண்டு மாத இலவச பயிற்சித் திட்டங்களாகும். நடத்தைத் திறன் என்பது உளவியல் ரீதியாக அவர்களை செழுமைப்படுத்துவதாகும். பழகும் தன்மை, செய்தியை விளங்க வைக்கும் திறமை போன்றவை சம்பந்தமானது.




18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட உடல் ஊனமுற்ற யாவரும் இதில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் எல்லா திறமையும் இருந்தும் போட்டியை எதிர் கொள்வதற்கான மனோ தைரியம் இல்லாதவர்கள் இருக்கும் சூழலில் எங்களிடம் பயிற்சி பெறுபவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கை ஒளி உண்மையில் பிரமிக்க வைக்கிறது'' என்கிறார் அவர்.

மனசுகள் முடங்காதவரை எதுவும் யாரையும் எதுவும் முடக்கிவிடமுடியாதுதானே? மனம் இருந்தால் "மார்க்' உண்டு!

புதன், டிசம்பர் 05, 2007

இம்போர்ட்டட் சரக்கு:

மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''












ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

இம்போர்ட்டட் சரக்கு!:

பாவத்தின் விளைவு



உபதேசங்களை வாரி வழங்கினார் ஒரு சாமியார். பயபக்தியாய் தினமும் கேட்டுவந்தான் ஒரு சீடன். ஒருமுறை சாமியாரிடம், ""நமக்கு கடவுள்தான் எல்லாம். கடவுளை எப்போதும் நம்பு. அவர் எப்போதும் உன்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னீர்களே... நேற்றடித்த பெரும்புயலில் என் குடிசை விழுந்துவிட்டது'' என்று கோபமாகச் சொன்னான் சீடன்.

""அது நீ செய்த பாவத்தின் விளைவு'' என்றார் சாமியார்.

""உங்கக் குடிசையும்தான் விழுந்துவிட்டது. அது உங்கள் பாவத்தின் விளைவா?'' திரும்பக் கேட்டான் சீடன்.

புன்னகை மாறாமல் சீடனை ஆசிர்வதித்தபடியே சொன்னார்: ""நல்லவர்களையும் கடவுள் சோதிப்பதுண்டு.''







மனம் எனும் பூதம்!



மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: நியாயமான பயம்!



டாக்ஸியில் உட்கார்ந்திருந்த மில்டன் டிரைவரிடம் ஏதோ சந்தேகம் கேட்கும் நோக்கத்தில் அவன் தோளைத் தட்டி அழைத்தான். அவ்வளவுதான். டிரைவர் மிரண்டு போய் ப்ளாட்பார்ம் மீதும் மரங்களை உராய்ந்தும் தாறுமாறாய் காரை ஓட்டி காரை தடாலென நிறுத்தினான்.

""என்ன மிஸ்டர்... சும்மா இப்படி கூப்பிட்டதற்கு இவ்வளவு பயந்துட்டீங்களே?'' என்றான் மில்டன்.

""இது உங்கள் தவறு இல்லை. நான் இதுவரைக்கும் சவ வண்டிக்குத்தான் டிரைவராக இருந்தேன். எனக்குப் பின்னால் பிணத்தைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. அதனால்தான்'' என்றான் டிரைவர்.





இம்போர்ட்டட் சரக்கு: கண்டுபிடிச்சேன்... கண்டுபிடிச்சேன்...

மனநல காப்பகத்தில் தம் உறவினரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான் அவன். தலைமை மருத்துவரைப் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறீர்கள்? என்று விசாரித்தான்.

தலைமை மருத்துவர் விவரித்தார். எளிய சோதனை மூலம் கண்டுபிடிப்போம். இந்த பாத் டப்பில் நீரை நிரப்புவோம். பிறகு ஒரு ஸ்பூன், ஒரு டீ கப், ஒரு பக்கெட் மூன்றையும் அருகில் வைத்து விடுவோம். பாத் டப்பில் உள்ள நீரை அகற்றச் சொல்வோம்.

கேள்வி கேட்டவன், ""புரிந்து விட்டது. பக்கெட் மூலம் நீரை வேகமாக அப்புறப்படுத்துபவன் மனநலம் பாதிக்கப்படாதவன் அப்படித்தானே?''

""இல்லை. நார்மல் ஆசாமியாக இருந்தால் பாத் டப்பில் கீழே இருக்கும் ப்ளக்கை அகற்றி நீரை அப்புறப்படுத்துவான். ...ஓ.கே. உங்களுக்கு அந்த ஜன்னலோர படுக்கை போதுமா பாருங்கள்!''

செவ்வாய், டிசம்பர் 04, 2007

இம்போர்ட்டட் சரக்கு: 18

காது கேட்கலை!

வெளியூருக்கு வந்த இடத்தில் டேவிட்டின் கார் ரிப்பேர் ஆகிவிட்டது. தந்தைக்கு ட்ரங்கால் போட்டான். ""அப்பா அவசரமாக 200 டாலர் வேண்டும்''

""சரியா கேக்கல.... என்னப்பா சொல்றே?''

""200 டாலர்.... 200!

""லைன் சரியா இல்ல. சுத்தமா கேக்கல''

""கார் ரிப்பேர்... 200 டாலர் வேணும்''

""சாரிப்பா... கேக்கல''

டெலிபோன் ஆபரேட்டர் இடைமறித்து... ""உங்கள் மகன் சொல்வது எனக்கு நன்றாகக் கேட்குது'' என்றான்.

""அப்படி இருந்தா நீயே 200 டாலரைக் கொடு'' என்று போனை வைத்துவிட்டார் தந்தை.

இம்போர்ட்டட் சரக்கு 17

ஆதர்ச தம்பதி


அறுபதுகளில் இருந்த அந்தத் தம்பதிகள் தங்களுடைய 40-வது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் முன் தேவதை ஒன்று தோன்றி, ""உங்களைப் போன்ற ஆதர்ச தம்பதிகளுக்குத் தலா ஒரு வரம் தர விரும்புகிறேன்'' என்றது.

மனைவியோ ""நான் என் கணவருடன் உலக நாடுகள் முழுவதையும் சுற்றிவர விமான டிக்கெட் வேண்டும்'' என்றாள்.

அடுத்த வினாடி டிக்கெட்டுகள் வந்து சேர்ந்தன.

அடுத்து கணவனின் முறை. தேவதை அவன் பக்கம் திரும்பியது. கணவன் ரகசியமாக தேவதையின் காதில் சொன்னான்:

""என் மனைவிக்குப் பதிலாக என் கேர்ள் ஃப்ரண்ட் பெயருக்கு டிக்கெட்டை மாற்றித் தரமுடியுமா?''

திங்கள், டிசம்பர் 03, 2007

இம்போர்ட்டட் சரக்கு!:15,16

மைக்ரோ கதை: மன்னரும் மாம்பழமும்!

அவன் ஒரு சாப்பாட்டு ராமன். மன்னரின் விருந்துக்கு அவனையும் அழைத்திருந்தனர். கூச்ச நாச்சமில்லாமல் சாப்பிட்டான். மூன்று பந்தி காலியாகும் வரை முதல் பந்தியில் அமர்ந்த அவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். மன்னர் அவனுடைய சாப்பாட்டுப் பிரியத்தைத் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்க முடியாமல் எழுந்தான் அவன். மன்னர் கிண்டலாக, ""இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே?'' என்றார்.

""ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது'' என்றான் அவன்.

அந்த நேரம் பார்த்து ஒரு தட்டு நிறைய மாம்பழத் துண்டுகளை எடுத்துச் சென்றான் ஒருவன். சாப்பாட்டு ராமனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. உடனே அவனுக்கு மாம்பழத்துண்டுகளைப் பரிமாறச் சொன்னார் மன்னர். அவனும் ஏழெட்டுத் துண்டுகளை உள்ளே தள்ளினான்.

""இப்போதுதான் ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது என்றாய். பிறகு எப்படிச் சாப்பிட முடிந்தது?'' } மன்னர் கேட்டார்.

""மன்னரே... உங்கள் சந்தேகம் நியாயம்தான். ஆனால் நெரிசலான சாலையில் திடீரென்று மன்னர் வருகிறார் என்றால் மக்கள் எல்லோரும் ஒதுங்கி நின்று மன்னருக்கு வழிவிடுவதில்லையா? அப்படித்தான் இதுவும்'' என்றான் சாப்பாட்டு ராமன்.

துணிச்சல் மிக்கவன்!

ஒரு கிராமத்தானும் அவனுடைய மனைவியும் பொருட்காட்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு ஹெலிகாப்டரில் பறப்பதற்கு க்யூ நிற்பதைப் பார்த்தனர். விவசாயி, ""பறப்பதற்கு எவ்வளவு?'' என்றான். ""ஒரு ரவுண்ட் சென்றுவர பத்தாயிரம் ரூபாய்'' என்றான் விமானி. ""ரொம்ப அதிகம்'' என்று விலகிச் சென்ற விவசாயியிடம், ""சரி.. உங்கள் இருவரையும் இலவசமாகவே அழைத்துச் செல்கிறேன். ஆனால் உங்கள் இருவரில் யாராவது ஒருவர் பயந்து அலறினாலும் பத்தாயிரம் ரூபாய் தந்துவிட வேண்டும்'' என்றான்.

இந்த டீலுக்கு சம்மதித்தான் விவசாயி. எப்படியாவது பணத்தைக் கறந்துவிட வேண்டும் என்ற வெறியில் ஏடாகூடமாக ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றான் விமானி. எவ்வளவு பயமுறுத்தியும் ஒரு சத்தமும் இல்லை. வெறுத்துப் போய் தரையிறக்கினான்.

""சத்தமே போடவில்லையே... உண்மையிலேயே உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்'' என்றான் விமானி.

விவசாயி, ""என் மனைவி கீழே விழுந்த நேரத்தில் உண்மையிலேயே கத்திவிடலாம் என்றுதான் நினைத்தேன். பிறகு அடக்கிக் கொண்டேன்'' என்றான் பெருமிதமாக.

சனி, டிசம்பர் 01, 2007

இம்போர்ட்டட் சரக்கு!: 13,14

ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

இம்போர்ட்டட் சரக்கு!: மனம் எனும் பூதம்!




மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 11,12

ஹாலிவுட் நடிகை

ஒரு புதிய ஹாலிவுட் நடிகை ஒரு சீன சிறுவனை வீட்டு வேலைக்காரனாக நியமித்தாள். அவனிடம் அவன் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லும்போது கூறினாள். ""நீ என் அறைக்குள் வருவதற்கு முன் எப்போதும் அறை கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும். ஏனெனில் சில நேரங்களில் நான் உடை அணிந்துகொண்டிருக்கலாம்.''

சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளது அறைக்கதவை திறந்தான். அப்போது அந்த நடிகை அவனிடம் கேட்டாள்:

""கதவை முதலில் தட்டிவிட்டு வரவேண்டும் என்று சொன்னேனா இல்லையா? திடீரென நுழைந்துவிட்டாய். நான் ஆடை அணிந்துகொண்டிருந்தால் என்னாவது?''

""ஆடை அணிகிறீர்களா? இல்லையா? என சாவித்துவாரத்தின் வழியாக பார்த்துவிட்டுத்தானே வருகிறேன்'' என்றான் அவன்.

இம்போர்ட்டட் சரக்கு :நடக்கும் நாய்

ஜோசப் அந்த அதிசய நாயைக் கண்டு வியந்து போனான். தண்ணீர் மீது சர்வசாதாரணமாகத் தாவி ஓடுவதைக் கண்டான். தண்ணீரின் மீது நடக்கும் நாய் என்றால் ஆச்சர்யம்தானே? உடனே அதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து, தன் நண்பர்களுக்கும் காட்ட விரும்பினான்.

தண்ணீரின் மீது ஓடி, நீர்வாத்துகளை அது பிடித்து வந்து கரையில் போடுவதை நண்பனுக்குக் காட்டினான்.

நண்பன் எந்தவித வியப்பையும் காட்டாமல் இருப்பதைப் பார்த்து, ""இது உனக்கு ஆச்சர்யமாக இல்லையா?'' என்றான்.

""ஆமாம். இதிலென்ன ஆச்சர்யம்? உன் நாய்க்கு நீச்சலே தெரியவில்லை. சும்மா சும்மா நீரின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது'' என்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 9,10

வேலை நேரம்!

ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''

இம்போர்ட்டட் சரக்கு!: மனைவி அமைவதெல்லாம்


மனைவியோடு தேம்ஸ் நதியின் ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான் தாமஸ். திடீரென்று கால் இடறி ஆற்றில் விழுந்துவிட்டாள் அவனுடைய மனைவி. கடவுளிடம் வேண்டினான் தாமஸ். அவனுடைய வேண்டுதலைக் கேட்டு கடவுள் அவன் முன் தோன்றினார்.

அவனைச் சோதிக்கும் விதமாக நடிகை ஜெனிபர் லோபஸ்ûஸ அவன் முன் நிறுத்தி ""இவள்தானே உன் மனைவி?'' என்றார்.

தாமஸ் ஒரு கணம் திகைத்தாலும் அடுத்த கணமே ""ஆமாம்'' என்று சொன்னான்.

கடவுளுக்கு ஆத்திரம் தாளவில்லை. ""இப்படிப் பொய் சொல்கிறாயே? இவளா உன் மனைவி?'' என்றார்.

""இவள் என் மனைவி இல்லைதான். அப்படி நான் மறுத்தால் அடுத்து நீங்கள் மடோனாவைக் கொண்டு வருவீர்கள். அவரையும் மறுத்தால் அதைத் தொடர்ந்து என் மனைவியைக் கொண்டு வருவீர்கள். என் நேர்மையைப் பாராட்டி மூவரையும் எனக்கு வழங்குவீர்கள். அதற்கு பயந்துதான். ஏதோ ஒன்றோடு போகட்டும் என்று ஜெனிபரையை ஓ.கே. சொல்லிவிட்டேன்'' என்றான் தாமஸ்

இம்போர்ட்டட் சரக்கு: 8,9

வேலை நேரம்!
ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''


எத்தனைக் காகங்கள்?

ஒருநாள் மாலை அக்பர், பீர்பால் மற்றும் அமைச்சரவைச் சகாக்கள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.

அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம். ""நம் ராஜ்ஜியத்தில் எத்தனைக் காகங்கள் இருக்கும் என்று இங்கு யாராவது சரியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

சட்டெனச் சொன்னார் பீர்பால்.

""18 ஆயிரத்து முன்னூற்று அறுபத்து மூன்று''

பீர்பால் இப்படிக் குருட்டாம் போக்கில் பதில் சொல்வது அக்பருக்குப் பிடிக்கவில்லை.

""ஒருவேளை அதிகமாக இருந்தால்?''

""நமது ராஜ்ஜியத்துக்குப் புதிதாக வந்த விருந்தினராக இருக்கும்''

பீர்பாலின் சமாளிப்பு புரிந்தது.

""சரி.. ஒரு வேளை குறைவாக இருந்தால்?''

""உங்கள் புகழ் பரப்ப பக்கத்து ராஜ்ஜியத்துக்குச் சென்றிருக்கும்''

பீர்பாலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார் அக்பர்.

இம்போர்ட்டட் சரக்கு: 6,7

செவிச் "செல்வம்'

அவர் பெரிய செல்வந்தர். நெடுங்காலமாகக் காது கேட்காமல் அவதிபட்டு வந்தார். காது மிஷின் மாட்டிக் கொள்வதில் சின்ன தயக்கம் இருந்ததே அதற்குக் காரணம்.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை என டாக்டரை அணுகினார். அவரும் வெளியே யாருக்கும் தெரியாதபடியான மிகச் சிறிய காது மிஷின் வந்திருப்பதைத் தெரிவித்து அதையே பொருத்தினார்.

ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் செல்வந்தர். ""இந்தக் காது எந்திரம் மிகப் பிரமாதமாக வேலை செய்கிறது. வாழ்த்துகள்'' என்றார்.

உங்கள் வீட்டில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே?'' என்றார் டாக்டர்.

செல்வந்தர் வெறுப்பாகப் பதில் சொன்னார்: ""இதுவரை வீட்டில் எனக்குக் காது கேட்கிற விஷயத்தைச் சொல்லவில்லை. இந்த ஒரு மாதத்திலேயே மூன்று முறை உயிலை மாற்றி எழுதும்படி ஆகிவிட்டது.''


இம்போர்ட்டட் சரக்கு: மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''

வியாழன், நவம்பர் 29, 2007

இம்போர்ட்டட் சரக்கு: 3,4,5



யுத்தம்


""அப்பா யுத்தங்கள் எப்படி ஆரம்பிக்கின்றன'' என்றான் ஆதம்.

""அதுவா? வந்து... இப்போ ரெண்டு நாடு இருக்கிறது. இரண்டுக்கும் இடையே முன் விரோதமே கிடையாது. திடீர்னு ஒரு நாட்டுக்கு இன்னொரு நாட்டைப் பிடிக்கணும்னு...''

""சின்னப் பையன் புரியாமக் கேட்டா இப்படியா சொல்றது?'' என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் அம்மா.

""சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா...'' என்றார் அப்பா.

""பேச்சுக்குச் சொல்ற லட்சணமா இது? என்ன உளர்றீங்க?'' என்றார் அம்மா.

""வாயை மூடு. நானா உளர்றேன்? அறிவுக் கெட்டவளே''

""யாருக்கு அறிவில்லைன்னு ஊருக்கே தெரியுமே! அன்னைக்கு நூறு ரூபாய் நோட்டை யார் கோட்டை விட்டது?''

""அதிகமா பேசினால் என்ன நடக்கும்னு தெரியாது''

தட்டு முட்டு சாமான்கள் பறந்தன. பையன் கத்தினான்: ""நிறுத்துங்க... நிறுத்துங்க... யுத்தம் எப்படி ஆரம்பமாகும்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு.''

இம்போர்ட்டட் சரக்கு

ரிச்சர்ட் அவனுடைய நண்பனிடம் குறைபட்டுக் கொண்டிருந்தான்: ""என் மனைவி கத்த ஆரம்பித்துவிட்டால் எங்கள் வீட்டில் எல்லோருமே "கப் சிப்'தான். என்னுடைய குழந்தைகள்... ஏன் எங்கள் நாய்கூட அமைதியாகிவிடும்.''

நண்பன் கேட்டான்: ""நீ கத்த ஆரம்பித்தால்?''

""அதே கதைதான். ஆனால் நான் எங்கள் வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றின் முன்னால் கத்துவேன். அவையும் பதிலுக்கு என்னிடம் கத்துவதில்லை.''


எதிரி!

மரணப்படுக்கையில் இருந்த வில்லியம் தன் மனைவியை அருகே அழைத்தான். கனிந்த குரலில் ""நான் இறந்த பிறகு நீ ஜானை திருமணம் செய்து கொள்'' என்றான்.

""ஐயோ அவர் உங்கள் எதிரி ஆயிற்றே?'' என்றாள் ரீட்டா.

""ஆமாம். இத்தனை ஆண்டுகள் நான் பட்ட அவஸ்தைகளை அவனும் படட்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்'' என்றான் வில்லியம் தெளிவாக.

இம்போர்ட்டட் சரக்கு!: இதுவும் அப்படித்தான்!

மேரி சாவகாசமாக ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தாள். சரேலென உள்ள நுழைந்தான் ஜிம். ""பெப்பர் போடு... பெப்பர் பெப்பர்'' என்றான் பதட்டமாக. மேரி பெப்பர் போட்டாள்.

""உப்பு... உப்பு போடு... சீக்கிரம்'' என்றான் மீண்டும் பதட்டமாக. அவள் உப்பைத் தூவிவிட்டுப் பார்த்தாள்.

""திருப்பிப் போடு... ஐயோ திருப்பிப் போடு'' என்றான் அவசரமாக. அவள் திருப்பிப் போடுவதற்குள் ""என்ன ஆச்சு உனக்கு. சீக்கிரமாகத் திருப்பிப் போடு'' என்றான்.

""எண்ணெய் ஊற்றவில்லையே... அடச்சே... மறந்துவிட்டாயா?'' என்றான் ஆவேசமாக.

மேரிக்கு அதற்கு மேல் தாளவில்லை. ""உங்களுக்கு என்ன ஆச்சு என்று புரியவில்லை. எதற்காக இப்படிப் பதட்டப்படுகிறீர்கள். ஒரு ஆம்லெட் போடுவதற்குக் கூட எனக்குத் தெரியாதா?'' என்றாள்.

""எனக்கு மட்டும் கார் ஓட்டுவதற்குத் தெரியாதா? நான் கார் ஓட்டும்போது இப்படித்தானே நீயும் கூப்பாடு போடுகிறாய்?'' என்றான் ஜிம்.

இம்போர்ட்டட் சரக்கு:1,2

கனவு!


அன்று வாலன்டைன்ஸ் டே. பரபரப்பாகக் கண் விழித்தாள் ஸ்டெல்லா. தன் காதல் கணவன் மார்ட்டினை உசுப்பி எழுப்பி, ""காதலர் தினத்துக்கு நீங்கள் எனக்கு வைர நெக்லஸ் பரிசளிப்பதாகக் கனவு கண்டேன். இந்தக் கனவுக்கு என்ன அர்த்தம்'' என்றாள் பரவசத்தோடு.

மார்ட்டின் ""சாயங்காலம் சொல்கிறேன்'' என்றான்.

மாலை வீடு திரும்பும்போது மார்ட்டினின் கையில் அழகிய சிறிய பார்சல். பூரித்துப் போனாள், ஸ்டெல்லா. ""காலையில் கேட்டாயே'' என்பதற்குள் அவசர, அவசரமாக வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

உள்ளே "கனவுகளும் அதற்கான பலன்களும்' என்ற புத்தகம் இருந்தது.



இம்போர்ட்டட் சரக்கு: கெட்ட செய்தி!

டாக்டரிடம் ஓடோடி வந்தான் சில்வெஸ்டர். ""சார், என் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?''

""ஒரு கெட்ட செய்தியும் ஒரு ரொம்ப கெட்ட செய்தியும் இருக்கிறது'' என்றார் டாக்டர்.

""முதலில் கெட்ட செய்தியைச் சொல்லுங்கள்''

""இன்னும் நீங்கள் 24 மணிநேரம்தான் உயிர்வாழ்வீர்கள் என்கிறது மெடிக்கல் ரிப்போர்ட்''

""ஐயோ... அப்படியானால் ரொம்ப கெட்ட செய்தி என்ன?''

""இதைச் சொல்வதற்காக நான் உங்களை நேற்றிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன்'' என்றார் டாக்டர்.

அலசல்: இதுதான்டா படம்!

கடந்த வார தினசரிகளில் இப்படியான சில விளம்பரங்களைப் பார்த்திருக்கலாம்.

"மிரட்டும் திகில்', "எரிமலைகள்', "மீளமுடியாத மிரட்டல் உலகம்', "அமேசான் காட்டு அழகி', "ஹாரி பாட்டரும் ஃபீனிக்ஸ் கட்டளையும்...' இவை எல்லாம் தமிழ் சாயம் பூசப்பட்ட ஆங்கிலப் படங்களின் தலைப்புகள்.

ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் தலைப்புகளுக்கும் இவற்றுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமிருப்பதில்லை. உதாரணத்துக்கு "எரிமலைகள்' படத்தின் ஆங்கிலத் தலைப்பு ஊஹய்ற்ஹள்ற்ண்ஸ்ரீ ச்ர்ன்ழ். "அமேசான் காட்டு அழகி'க்கோ ஆங்கிலத் தலைப்பு அச்ழ்ண்ஸ்ரீஹய் ற்ட்ழ்ண்ப்ப்ள் என்று போட்டிருக்கிறார்கள். அமேசான் எங்கே இருக்கிறது, ஆப்ரிக்கா எங்கிருக்கிறது என்ற பூகோளக் குழப்பமெல்லாம் கூடவே கூடாது.



இராம. நாராயணன்


தலைப்புதான் இப்படி என்றால் படத்தில் இடம் பெறும் வசனங்கள் அதைவிட அதிர வைக்கின்றன. ஒரு சீனப் படத்தின் தமிழ் வடிவத்தில் ""இன்ன மாரீ... கண்டுக்காம போறீயே... சும்மா ஒரு தபா வந்துட்டுப் போப்பா'' என்று வசனம். கேரக்டர்களின் பெயர்களையும் தமிழ்ப்படுத்தி, அவர்களின் பேச்சையும் மெட்ராஸ் வட்டார வழக்குக்கு மாற்றி அமர்க்களம் பண்ணயிருந்தார்கள்.

""அசல் தமிழ்ப்படம் பார்க்கிற மாதிரி இருக்கில்ல?'' என்று சிலாகிப்பவர்களும் இருக்கிறார்கள். ""இவ்வளவு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியையெல்லாம் தமிழில் யாரும் எடுக்கப் போவதில்லை. நடிகர்கள்தான் நமக்குத் தெரியாத ஆசாமிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிற தமிழாவது நம்ம ஸ்டைலில் இருப்பதால்தான் தமிழ்ப் படத்தைப் பார்த்து ரசிப்பதுபோல் இப்படங்களைப் பார்த்து ரசித்துப் பார்க்க முடிகிறது'' என்கிறார் சண்டைப் படங்களாகத் தேடிப் பார்க்கும் ரசிகர் ஒருவர்.

இவருடைய கருத்தை ஆமோதிப்பதுபோல இருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணனின் குரலும். ""இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் ஆங்கிலப் படங்களையும் தமிழ்ப்படங்கள் அளவுக்கு ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஆங்கிலப் படங்களை நேரடியாக மொழி மாற்றம் செய்தால் இந்த அளவுக்கு ரிலீஸ் செய்ய முடியாது. ஒரு சில பிரிண்டுகள் மட்டும் எடுத்து ஒவ்வொரு நகரத்திலும் ரிலீஸ் செய்வோம். இப்போது 50, 60 பிரிண்டுகள் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிகிறது. சுமாரான தமிழ்ப் படத்தைவிட இவை அதிக அளவுக்கு லாபம் ஈட்டுகின்றன.







ஆங்கிலப் படத்தை ஆங்கிலத்திலேயே ரிலீஸ் செய்யும்போது அவை சென்னை, போன்ற பெரு நகரங்களில் மட்டும்தான் ரசிக்கப்படுகிறது. ஆனால் இவற்றையோ குக்கிராமங்களில்கூட ரசிக்கிறார்கள். அப்படி ரசிக்கப்படுவதற்குக் காரணம், மாடுலேஷன். அதைப் பலரும் ரசிக்கும் வண்ணம் கலோக்கியலாக செய்வது பலருக்கும் சுலபமாகப் புரிவதாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. இங்கு சென்னையிலும் மும்பையிலும் இப்படி டப்பிங் செய்வதற்கான நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்கிறார் அவர்.

மொழி மாற்றம் செய்யும் வசனகர்த்தாவாக இருக்கும் கவிஞர் பிறைசூடன், ""மொழி மாற்று படம் என்பது, அவர்களின் வசனத்தை நம் மொழியில் மாற்றுவதுதான். சிலர் ஆங்கில படத்தின் ஹீரோ "நான் ஒரு தடவை சொன்னா ஐநூறு தடவை சொன்ன மாதிரி' என்றெல்லாம் வசனம் எழுதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் வசனம் எழுதும் படங்களுக்கு ஒரிஜினல் வசனத்தை வாங்கி அதை திரையில் அவர்களின் உதட்டசைவுக்கு ஏற்ப வசனங்களை தமிழில் எழுதுகிறேன்'' என்கிறார்.






நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்களின் இந்திய உரிமைகளை வாங்கி விநியோகித்தவரும் பிரபல பட அதிபருமான ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது,""நான் ஆங்கிலப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்வதில்லை. அது படத்தின் ஜீவனையே குலைத்துவிடும். நல்ல படத்துக்கு மொழி ஒரு தடையே இல்லை. பல நல்ல படங்கள் இங்கு பல நாட்கள் ஓடியுள்ளன. "பென்ஹெர்', "டென் கமான்மென்ட்ஸ்', "சாம்ஸன் அண்ட் டிலைலா', "எண்டர் தி ட்ராகன்', ஜாக்கிசான் படங்கள் போன்றவை ஆங்கிலத்திலேயே சக்கை போடு போட்டன. ஆங்கிலத்தில் "டைட்டானிக்' படம் ஏவிஎம். ராஜேஸ்வரி தியேட்டரில் 7 லட்ச ரூபாய் ஷேர் கலெக்ட் செய்தது. அது ரெக்கார்ட். இப்படி தமிழில் டப் செய்வதற்கு விருப்பமில்லாததாலேயே இப்போது ஆங்கிலப் படங்களை விநியோகிப்பதை நிறுத்திவிட்டேன்.

எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ பேசிய வசனத்தை சீனாவில் ஒருவன் சியாங்கோ பியாங்கோ என்று அவனுடைய மாடுலேஷனில் அடித்துவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும்தான் இப்படி மொழி மாற்றம் செய்கிறார்கள். மற்ற பிராந்தியங்களில் இப்படிச் செய்வதில்லை. இதனால் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் குறைந்து கொண்டு வருகிறது'' என்றார் அவர்.

டப்பிங் படங்கள் "டப்'புக்காக எடுக்கும் படங்களாக இல்லாமல் இருந்தால் சரிதான்.

தமிழ்மகன்

சில்லுன்னு ஒரு 'வெயில்'!






பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது "வெயில்' படம். "சில்' தேசத்தில் "சூடான' படத்தைத் திரையிட்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் நாயகர்களில் ஒருவரான பசுபதியும் விழாவுக்குச் சென்றுவந்தவர்களில் ஒருவர். "தூள்'- "விருமாண்டி' படங்களில் முரட்டுத்தனமான வில்லன், "மஜா'- "மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களில் அப்பாவித்தனமான காமெடியன், "ஈ' படத்தில்

சமூகப் பொறுப்புள்ள தீவிரவாதி என்று

குறுகிய காலத்தில் பன்முகம் காட்டியவர் பசுபதி. "வெயில்' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வாழ்நாள் முழுதும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்ட மனிதனாக மிகச் சிறப்பாகத் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்தச் சிரத்தைதான் அவரை கேன்ஸ் விழாவரை இட்டுச் சென்றது

என்றால் மிகையில்லை. ஒரு கத்திரி வெயில் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.

படவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

பிரான்ஸில் உள்ள ஒரு சின்ன நகரம்தான் கேன்ஸ். சினிமாவுக்கான விருது என்றால் ஆஸ்கர் விருதுதான் முக்கியமானது என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஹாலிவுட்டில் தயாராகும் படங்களுக்கான விருது. ஆனால் கேன்ஸ் படவிழா உலகப் படங்களுக்கான கெüரவம். இது அறுபதாவது ஆண்டு விழா. நாம் சுதந்திரம் அடைந்த ஆண்டில் இருந்து அந்த படவிழாவும் ஆரம்பமானது. இரு நாடுகளுக்குமான 60-ம் ஆண்டு விழாவாக இந்தியப் படங்களின் திரையீடு கொண்டாடப்பட்டது. அறுபது ஆண்டுகளில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமை "வெயிலு'க்குக் கிடைத்தது.

இந்தியாவில் இருந்து மொத்தம் எத்தனை படங்கள் இந்த ஆண்டு கலந்து கொண்டன?

மொத்தம் 8 படங்கள் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஒரு மலையாளப் படம், ஒரு வங்காளம், 3 இந்தி, ஒரு தமிழ், ஒரு ஆங்கில மொழிப்படம், இது தவிர இன்னொரு படமும் திரையிடப்பட்டது. எனக்குச் சரியாக நினைவில்லை. மணிரத்னத்தின் "குரு' படம் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. "வெயிலு'க்காக நான், ஷங்கர், டைரக்டர் வசந்தபாலன் ஆகியோர் கலந்து கொண்டோம். பிரகாஷ்ராஜ் அவருடைய படத்தின் புரமோஷன் பணிகளுக்காக வந்திருந்தார். "குரு'வுக்காக மணிரத்னம் வந்திருந்தார். மற்றும் பிஜு, ரித்து பர்னேஷ் போன்றவர்கள் வந்திருந்தனர்.




சர்வதேச படங்கள் நிறைய பார்த்திருப்பீர்கள். நம்முடைய படங்களை அவற்றோடு ஒப்பிட முடிகிறதா?

சர்வதேச படங்களோடு ஒப்பிடும்போது நம்முடைய படங்கள் சவால்விடும்படியாகத்தான் இருக்கின்றன. நான் சொல்வது தொழில்நுட்பத் துறையில். இந்தப் படவிழாவுக்கு வந்த 8 படங்களில் 7 படங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்றிய படங்கள்தான். படத்தின் கதைகளை நாம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று பார்க்கிறோம். இது போன்ற படவிழாக்களுக்காகத் தயாரிக்கப்பட்டால் நாம் இன்னும் சிறப்பாகவே படங்களை உருவாக்க முடியும்.

வெயிலுக்குப் பிறகு படங்களைத் தேர்வு செய்வதில் அதீத கவனம் செலுத்துகிறீர்கள்... அடுத்து நடிக்கும் படத்தைப் பற்றி அறிவிப்பு வரவில்லையே?

"மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்குப் பிறகே நான் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன். "மஜா', "ஈ', "வெயில்' மூன்று படங்கள்தான் நடித்தேன்.

இனிமேல் தேர்வு செய்யப்படும் வேடங்கள் ஹீரோ, அல்லது ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

அப்படியில்லை. வெயிலுக்குப் பிறகு 16 பேர் கதாநாயக வேடத்துக்குக் கேட்டார்கள். நான் எதையுமே சம்மதிக்கவில்லை. நல்ல ரோல்தான் தேவை, கதாநாயக அந்தஸ்து இல்லை. என் கதாபாத்திரத்தைக் கேட்டு முதலில் நான் இன்ஸ்பயர் ஆனால்தான் மக்கள் இன்ஸ்பயர் ஆவார்கள். அதற்காகத்தான் காத்திருக்கிறேன்.

வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?

சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தேன். ஆனால் தமிழ்தான் எனக்கு வசதியாக இருக்கிறது. வேறு மொழிகளில் எனக்காக மற்றவர்கள் குரல் கொடுப்பதும் எனக்குச் சரிபட்டு வரவில்லை.




தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து சினிமாவுக்கு வந்தது உங்களுடைய பலம். சினிமாவுக்கும் நாடகத்துக்கும் நீங்கள் உணரும் வித்தியாசம்?

நடிப்பு எல்லா இடத்திலும் ஒன்றுதான். சினிமாவில் மிஷினுக்கு முன்னால் நடிக்கிறோம். நாடகத்தில் மக்களுக்கு முன்னால் நடிக்கிறோம். சினிமாவில் டேக் வாங்கலாம். மக்களுக்கு முன்னால் ரெண்டாவது டேக் வாங்க முடியாது. மற்றபடி நடிப்புக்கு எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் ஒன்றுதான்.

படவிழாவில் வெயிலுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. தமிழக அல்லது இந்திய சூழல் பற்றித் தெரியாத பன்னாட்டு திரைக்கலைஞர்களின் கூட்டம் அது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் படத்தால் ஈர்க்கப்பட்டுப் போனார்கள். படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பலர் கண்ணீரை கர்ச்சீப்பில் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் பலர் அப்படியே சிலையாக இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு பெண்மணி கண்ணீரோடு வந்து கையைப்பிடித்துக் கொண்டு, "இப்படியெல்லாம் இருக்கிறதா உங்கள் நாட்டில்' என்று பரிதாபம் பொங்க கேட்டார். "எங்கள் நாடு கலவையான பிரச்சினைகள் கொண்ட நாடு. அதில் இப்படியான பிரச்சினைகளும் ஒன்று' என்று விளக்கினேன். பிரச்சினைகள் வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் மனதின் அலைவரிசை உலகம் முழுதும் ஒன்றுதானே?

-தமிழ்மகன்

புதன், நவம்பர் 28, 2007

காலம்தோறும் அதிசயங்கள்!




நயாகரா நீர் வீழ்ச்சியை உலக அதிசயம் என்கிறார்கள். நீர் விழுவதா அதிசயம்? நீர் விழாமல் இருப்பதுதானே அதிசயம்?

-ஆஸ்கார் ஒயில்ட்

உலகத்தைக் கண்டு காலந்தோறும் மனிதன் வியந்து வந்திருக்கிறான். சரித்திரக் காலத்தில் மனிதன் வியந்த அதியசங்களிலிருந்துதான் பட்டியல்கள் ஏற்படுத்தப்பட்டும் போற்றப்பட்டும் வருகின்றன. கி.மு. காலத்தில் "உலக அதிசயங்கள் ஏழு' என முதன் முதலாகப் பட்டியலிட்டு உலகத்தை வியந்தவர்கள் எகிப்து தேசத்தவர்கள் என்கிறது வரலாற்றுப் புள்ளிவிவரம். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் எகிப்தின் அலக்ஸôண்ட்ரியா மியூஸியத்தில் அமர்ந்து இந்தப் புராதன அதிசயங்களைப் பட்டியலிட்டவர்கள் அன்றைய வரலாற்று அறிஞர்கள் ஹீரோடோடஸ் மற்றும் காலிமாச்சூஸ் ஆகியோர். அவர்களின் பட்டியல் பிரதிகள் கிடைக்கப் பெறாவிட்டாலும் அதை மேற்கோள்காட்டி எழுதப்பட்ட பல புராதன ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.



அந்தப் புராதன ஏழு அதிசயங்கள் இவை:

1. பிரமிட்- (கி.மு.2650- 2500) எகிப்து மன்னர்களுக்காகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கல்லறை. இன்னமும் இருக்கிறது.

2. பாபிலோன் தொங்கும் தோட்டம்- (கி.மு.600) 56 மைல் நீளம், 80 அடி அகலம் 320 அடி உயரத்தில் இத் தோட்டம் அமைக்கப்பட்டது. நில நடுக்கத்தால் முதலாம் நூற்றாண்டில் சிதிலமாகிவிட்டது.

3. கிரேக்கத்தில் உள்ள ஆர்டிமிஸ் கோயில்- (கி.மு.550) 120 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இது, கி.மு. 356}ல் நடந்த போரின்போது அழிந்தது.

4. ஒலிம்பியாவின் ஜீயஸ் சிலை- (கி.மு.435) 12 மீட்டர் உயரமிருந்த இச் சிலை கி.பி. 5-ம் நூற்றாண்டில் தீ விபத்தால் சிதைந்து போனது.

5. மாஸþலீயம் ஆஃப் மாஸþலோஸ் கட்டடம்- (கி.மு.351) 45 மீட்டர் உயரம். இக் கட்டடத்தின் நான்கு சுவர்களும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.



6. கொலோஸஸ் ஆஃப் ரோட்ஸ்- (கி.மு.292-280) ஹீலியஸ் கடவுள் சிலை. கிட்டத்தட்ட இப்போது நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலையின் உயரம் இருந்தது. கி.மு. 224-ல் நிலநடுக்கத்தால் அழிந்தது.

7. அலெக்ஸôண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம்- (மூன்றாம் நூற்றாண்டு) 135 மீட்டர் உயரம் இருந்த இது, கி.பி. 1303-ல் நிலநடுக்கத்தால் அழிந்தது.

-அதாவது புராதன உலக அதிசயத்தில் எஞ்சியிருப்பது பிரமிடு மட்டும்தான்.

அதன் பிறகு உலக அதிசயங்களைப் பட்டியலிட்டவர்களும் ஏழு ஏழாகவே பட்டியலிட ஆரம்பித்தார்கள். இடைக்காலத்தின் ஏழு அதிசயங்களாவன: 1. ஸ்டோன்ஹென்ஜ் (இங்கிலாந்தில் உள்ள கல் கோயில்), கோலோஸியம் (ரோமாபுரியில் உள்ள பழங்கால ஸ்டேடியம்), காடாகோம்ப்ஸ் ஆஃப் கோம் எல் úஸôகாஃபா (அலக்ஸôண்ட்ரியாவில் உள்ள அரசக் கல்லறைகள்), சீனப் பெருஞ்சுவர், நான்ஜிங் கோபுரம் (சீனாவில் உள்ள பளிங்கு கோபுரம்), ஹாகியா சோபியா (துருக்கி- இஸ்தான்புல்லில் உள்ள பிரம்மாண்ட மசூதி), பிசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்.





அட, நமது தாஜ்மகால் இந்தப்பட்டியலில் எங்கே என்கிறீர்களா?

சுற்றுலா பயண ஏழு அதிசயங்கள் பட்டியலில்தான் அது இடம் பெற்றிருக்கிறது.

அதில் பிரமிட், சீனப் பெருஞ்சுவர், தாஜ்மகால், செரங்கட்டி மைக்ரேஷன், காலாபாகோஸ் தீவுகள், கிரான்ட் கன்யான், மாச்சு பிக்சு (பெரு நாட்டில் உள்ள சிகரம்) ஆகிய சுற்றுலாத் தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.




இதே போல் ஏழு இயற்கை அதிசயங்களில் எவரெஸ்ட் சிகரம், நயாகரா போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. அண்டர் வாட்டர் அதிசயங்கள், சிகாகோவின் ஏழு அதிசயங்கள் என்று நிறைய ஏழு அதிசயங்கள் சுற்றுலா வளர்ச்சிக்காக வர்த்தக நோக்கத்தில் பட்டியலிட்டபடி இருக்கிறார்கள்.

நவீன ஏழு அதிசயங்களில் இண்டெர் நெட் இடம் பிடித்துள்ளது. நவீன ஏழில் மற்றவை சீனாவில் உள்ள பொடாலா அரண்மனை, ஜெருசலேமின் பழைய நகரம், துருவப் பகுதியில் உள்ள ஐஸ் தொப்பிகள், ஹவாய் தீவுகள், மெக்ஸிகோவில் உள்ள சிதிலமாகிப்போன மாயன் கட்டடங்கள், ஆப்ரிக்காவில் ஆண்டுதோறும் காட்டுவிலங்குகள், நாடுவிட்டு நாடு பயணிக்கும் நீண்ட பயணமான "கிரேட் மைக்ரேஷன் ஆஃப் செரங்கட்டி' ஆகியவை நவீன உலகில் கண்டெடுத்துத் தொகுப்பட்ட அதிசயங்கள்.

யோசித்துப் பார்த்தால் பிரபஞ்சப் பெருவெளியில் பூமியே ஒரு அதிசய தூசுதானே?

தமிழ்மகன்

சனி, நவம்பர் 24, 2007

விளையாட்டான விஷயமல்ல...!





காரை எடுத்துக் கொண்டு சீறிப் பாயலாம். சாலையில் எதிர் வருகிறவர்களை எல்லாம் ஏற்றிக் கொல்லலாம். சாலை ஓரங்களில் செல்பவர்களையும் காரை ஏற்றிக் கொல்லலாம். எவ்வளவு பேரை கொன்று குவிக்கிறீர்களோ அவ்வளவு வெகுமதி உண்டு. பிடிக்க வரும் போலீசாரையும் போலீஸ் ஜீப்புகளையும் துவம்சம் செய்தால் கூடுதல் மதிப்பு.... இது குழந்தைகளுக்கான ஒரு விடியோ விளையாட்டு. என்ன கொடுமை சார் இது? என்று தலையில் அடித்துக் கொள்பவர்கள். அடுத்த விளையாட்டைப் பாருங்கள்.


சாதாரண ரோட் சைட் ரெüடியாக இருந்து படிப்படியாகக் கொலை, கற்பழிப்பு, ஆட்கடத்தல், என படிநிலைகளைக் கடந்து "அவுட் சைடர்', "பைட்டர்', "அண்டர் பாஸ்', "பாஸ்' "டான்' என உயர்ந்து மாஃபியாவின் "பிக் டான்' பதவியைப் பிடிப்பது எப்படி என்பதுதான் இந்த விளையாட்டு. இன்னொரு டானை ஒழித்துக் கட்டுவது எப்படி.. அரசியல் தலைவர்களை அடித்து நொறுக்குவது எப்படி... இதையெல்லாம் "இன்டராக்டீவ்' முறையில் கற்பிக்கும் இந்த விளையாட்டுக்குப் பெயர் "காட்ஃபாதர்'.மார்லன் பிராண்டோ நடித்த "காட்பாதரை' தழுவிய விளையாட்டு இது.


"என் குழந்தை கம்ப்யூட்டர் கேம் விளையாடுகிறான்' என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது இந்த விளையாட்டுகளுக்காகத்தான்.

"இயற்கை', "ஈ' படங்களை இயக்கியவரும் இப் படங்களுக்கு முன்னால் "தேள்' என்ற 3டி படத்தை உருவாக்கியவருமான இயக்குநர் ஜனநாதனிடம் இது குறித்துக் கேட்டோம்.

""விடியோ கேம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இப்படியான கொடூர விளையாட்டுகள் சரித்திரத்தில் ஏராளம் இருந்திருக்கின்றன. கொடுங்கோல் அரசர்கள் மனிதர்களையும் சிங்கத்தையும் மோதவிட்டு ரசித்ததாகப் படிக்கிறோம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஆட்சியின் பாடத்திட்டத்தில் உதாரணத்துக்கு இப்படி ஒரு கணக்கு... உன் துப்பாக்கியில் ஆறு தோட்டாக்கள் இருக்கின்றன. நான்கு யூதர்களை சுட்டு வீழ்த்திவிட்டாய். இப்போது உன்னிடம் எத்தனை குண்டுகள் பாக்கியிருக்கும்? இது ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்குக் கணக்குப் பாடம்.

குழந்தைகள் மனதில் வன்முறையை- வெறியை வளர்க்க வேண்டுமென்றே விளையாட்டுகள் ஆரம்பித்தன. அது எல்லாமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டன. ஹாலிவுட் திரைப்படங்கள் அந்த வன்முறையைக் கையிலெடுத்துக் கொண்டன. எங்கோ அமேசான் காட்டில் கிடக்கும் முதலையை ஹெலிகாப்டர், துப்பாக்கிகள் போன்ற தொழில்நுட்பங்களோடு சென்று கொன்றுவிட்டு வருவதைத் திரைப்படங்களாக எடுப்பார்கள். பாம்புகளை வேட்டை ஆடுவதைப் படமாக்குவார்கள். இயற்கையை நேசிக்க விடாத, காட்டை அழிக்கிற படங்கள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன. ஹிட்லர் செய்த வேலையை ஹாலிவுட் படங்கள் செய்ய ஆரம்பித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தப் படங்களின் பெயர்களிலேயே விடியோ கேம்கள் உருவாக ஆரம்பித்தன. திரைப்படங்களுக்கு இருந்த சென்சார்கூட இந்த கேம்களுக்குக் கிடையாது. குழந்தைகள் பார்க்கக் கூடாத காட்சிகள் என்று திரைப்படங்களில் வெட்டுவார்கள். ஆனால் இவற்றில் காட்டப்படும் வன்முறைக்கு எல்லையே கிடையாது. தலை துண்டித்துக் கிடக்கும் காட்சிகள், வெட்டப்பட்டு வீசி எறியப்படும் கால்கள்- கைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் விடியோவில் தாராளம். என்ன படத்தில் ஹீரோ செய்வதை இங்கே குழந்தைகள் தாங்களே செய்கின்றன.

பல நேரங்களில் ஹாலிவுட் படங்களைவிட அதைச் சார்ந்து தயாரிக்கப்பட்ட விடியோ கேம் சி.டி.கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. அவற்றுக்கு உலகமெங்கும் அவ்வளவு வரவேற்பு இருக்கிறது. உதாரணத்துக்கு "ஹாரிபாட்டர்' பட சி.டி.க்கும் புத்தகத்துக்கும் கடை திறப்பதற்கு முன்னரே கடை வாசலில் காத்திருந்த கூட்டத்தைப் பார்த்தோமே... படத்தைவிட அதிக லாபம் சம்பாதித்த சி.டிகளுக்கு இது ஓர் உதாரணம். இது போல நூற்றுக்கணக்கான சி.டி.கள் நிழல் உலகில் நடமாடுகின்றன. அந்த சி.டி.யில் காட்டப்படும் தாதாக்களைப் போல இந்த சி.டி. வியாபாரத்திலும் பைரேட்டட் தாதாக்கள் இருக்கிறார்கள். விளையாட்டு, விபரீதமாகிக் கொண்டிருப்பது உண்மைதான்'' என்கிறார் ஜனநாதன்.

யோகா கிளாஸ், தியான வகுப்புகள் என்று அமைதியை தேடிப் போய்க் கொண்டிருக்கும் பெற்றோர்கள் கவனிக்க...!

தமிழ்மகன்

திங்கள், நவம்பர் 19, 2007

ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!







இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது "பேசாமொழி' ஆவணப்படம்.






இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட "பகீர்' கருத்துகள் இவை.

தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான "காளிதாஸ்' படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?

1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே "லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?





இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.

அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?

நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் "கீசகவதம்' என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.

ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?

பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.

இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.

தமிழ்மகன்

அன்புடன் கெளதமி..!


கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை மனம் திறக்கிறார் நடிகை கெளதமி.



"நம்மவர்' படத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் இருப்பது போலவும் அவருக்குக் கெளதமி துணையாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கும். அது அவர்களின் நிஜவாழ்க்கையின் ஒத்திகையாக அமைந்துபோனது காலத்தின் விளையாட்டு. நிஜத்தில் கெளதமிக்கு கேன்சர். கமல் உடனிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெளதமியைக் கமலின் அலுவலகத்தில் சந்தித்தோம்.






எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை? என்ற எளிமையான கேள்வியோடு (பதில் அத்தனை எளிமையானது அல்ல!) பேட்டியை ஆரம்பித்தோம்.

நல்லதாக நடந்தாலும் அவ்வளவு நல்லதாக நடக்கவில்லை என்றாலும் வாழ்க்கை இனிமையானது. அழகானது. அதை அப்படியே எதிர்கொள்வதில்தான் எல்லா ஆனந்தமும் ஒளிந்திருக்கிறது. தத்துவமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுவாக எந்தத் தத்துவத்தையும் படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்வது என்னை மேலும் குழப்பிவிடுகிறது. என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், அம்மா- அப்பாவின் அடுத்தடுத்த மரணம்.

கேன்சர்... எதுவும் நிரந்தரமல்ல என்ற பளீரென்ற நிதர்சனம் தந்த பாடம். என் குழந்தையைத் தாங்க வேண்டிய பொறுப்பு... சொல்லப் போனால் அது பொறுப்பு மட்டுமல்ல; அடுத்த தலைமுறையை வழிநடத்துகிற மிக அன்பான கடமை. எல்லாச் சோகமும் சோகமும் அல்ல, எல்லா மகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அல்ல. இந்த எல்லா அனுபவங்களையும் என் சொந்த அனுபவத்தில் இருந்துதான் கற்றேன்.

இந்த மாற்றத்துக்கான விதை சிறுவயதிலேயே உங்களுக்கு இருந்ததாகச் சொல்ல முடியுமா?


என் தந்தை சேஷகிரி ராவ் ஒரு மருத்துவர். ரேடியாலஜிஸ்ட். இந்திய ராணுவத்தில் போர்க்காலங்களில் பணியாற்றியவர். போரின் கோரத்தாண்டவம் அப்பாவுக்கு வாழ்க்கையின் கேள்விக்குப் பதில் தேட வைத்திருக்கிறது. ரமணருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தபோது அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரில் அப்பாவும் ஒருவர். அப்பாவுக்கு ரமணர் மீது மிகுந்த மரியாதை இருந்தது. ஜெ. கிருஷ்ணமூர்த்தி, யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களிடம் அப்பாவுக்கு நல்ல பழக்கம் இருந்தது. ஆன்மீக ரீதியான தேடலுடனும் கடவுள் மறுப்பாளராகவும் அப்பா இருந்தார். இந்தச் சூழலில்தான் நான் வளர்ந்தேன்.

பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது... ஒருநாள் என்னுடைய ஆசிரியை "நீ கோவிலுக்குப் போவாயா, சர்ச்சுக்குப் போவாயா' என்று கேட்டார். எனக்கு நிஜமாகவே அதைப் பற்றித் தெரியவில்லை. நான் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று அவருக்கு போன் செய்தேன். ""உன்னைத்தானே கேட்டார்கள். உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதைச் சொல்லு'' என்று கூறிவிட்டார்.

நான் என் குழந்தையையும் அப்படித்தான் வளர்க்கிறேன்... (உதவியாளரை அழைத்து மூன்றாம் வகுப்பு படிக்கும் தம் மகள் சுபலஷ்மியை வரவழைக்கிறார். மகளிடம் where is God? என்கிறார். குழந்தை ஆள்காட்டி விரலால் நெற்றியைக் காட்டுகிறது. முத்தம் கொடுத்து அனுப்பிவிட்டு, நம்மைப் பார்க்கிறார். தாம் சொன்னதை உறுதிபடுத்திய புன்னகை.)

இந்த ஒற்றுமைதான் உங்களையும் கமலையும் இணைத்ததாகச் சொல்லலாமா?

ஆமாம். அவரிடம் இதுபோல எந்த விஷயத்தையும் பேசலாம். மதம், சினிமா, பெண்கள், சமுதாயம், இலக்கியம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆரோக்கியமான விவாதங்கள் தினம் தொடரும். "அட நாம இப்படி யோசிக்கவில்லையே' என்ற ஆச்சர்யம் தினமும் கிடைக்கிறது.

கேன்சர் விழிப்புணர்வு, ரத்ததான முகாம், பெண்கள் கருத்தரங்கு என்று அடிக்கடி பார்க்க முடிகிறது. இது சம்பந்தமான வேறு எதிர்காலத் திட்டங்கள்...?

கமல் நற்பணி இயக்கத்தினர் இதோ இந்த மாதம் முழுக்கவே ரத்ததான முகாம் நடத்துகிறார்கள். பல இதய அறுவைச் சிகிச்சைகளுக்கு உதவியிருக்கிறார்கள். மருத்துவ முகாம் நடத்துகிறார்கள். நூலகம் கட்டித் தருகிறார்கள். அவர்கள் பலத்தோடு எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாகப் பாடுபடவேண்டும் என்று விரும்புகிறேன். ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்ட முதியவர்கள்... இந்த இரண்டு தரப்பினரும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. பெண்களுக்கு கவுன்சிலிங் தர விருப்பம் இருக்கிறது. எங்கெல்லாம் ஆதரவு கேட்டு கைகள் நீளுகிறதோ, அத்தனையையும் கைதூக்கிவிட விருப்பம் இருக்கிறது. ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தெரியும். யாரையும் குற்றம் சாட்டாத, கருணையோடு அணுகுகிற பக்குவம் எனக்குப் பிடிபட்டிருக்கிறது. இதைச் சேவைக்கான முதல் கட்டமாக நினைக்கிறேன்.

மற்றபடி பொழுது எப்படிப் போகிறது..?

இன்னும் இரண்டு மணிநேரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிற மாதிரிதான் வேலைகள் இருக்கிறது. கமல் சார் அலுவலகத்தைப் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுக்க கவனிக்கிறேன். நற்பணி இயக்க பணிகளுக்கு நேரம் ஒதுக்குகிறேன். என் குழந்தையை நானேதான் பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறேன், கூட்டி வருகிறேன். தசாவதாரம் படத்தில் கமலுக்கான பத்துவகையான காஸ்ட்யூம் தயாரிக்கும் முக்கிய வேலையும் செய்கிறேன். நான் நடிக்க விரும்புகிறேனா என்பது பலருக்குத் தெரியாது. அந்தத் தயக்கத்தின் காரணமாகவும் என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். நல்ல கதையாக இருந்தால் நடிக்கவும் விருப்பமிருக்கிறது. என்னவேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே வாழ்க்கையை அலங்கரிக்கத்தான். ஏனென்றால் வாழ்க்கை அழகானது.


-தமிழ்மகன்

17-11-2007

LinkWithin

Blog Widget by LinkWithin