வயதான அந்தப் பாதிரியார் அவரது நாட்டின் பிரதமரையும் ஜனாதிபதியையும் தமது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இருவரும் அந்த முதியவரின் படுக்கை அறைக்கே வந்திருந்தனர். இருவரும் அவருக்கு இருபுறமும் அமர்ந்தனர். இருவரின் கைகளையும் பிடித்தபடி தமது இறுதி நிமிடங்களின் போது இருவரையும் கூடவே இருக்குமாறு கேட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்தவாறு இருந்தார். 
இருவரும் குழப்பமாக அமர்ந்திருந்தனர். எதற்காக இப்படியொரு வேண்டுகோள் என்று இருவருக்கும் புரியவில்லை. இறுதியாக செரிடியன் கேட்டார், ""எதற்காக பாதர் எங்கள் இருவரையும் தங்கள் கடைசி நிமிடங்களின்போது தங்களின் இருபுறமும் இருக்குமாறு வேண்டுகிறீர்கள்?'' என்றார். 
பாதிரியார் மரணத்தறுவாயில் மெல்ல முனகினார். 
""யேசு இரண்டு திருடர்களுக்கு மத்தியில்தான் தன் உயிரை விட்டார். அதே மாதிரி இறப்பதற்கு ஆசைப்பட்டேன்.''
 
 
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக