திங்கள், ஆகஸ்ட் 17, 2009

என் நூல் வெளியீடு

திரைக்கு பின்னே என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் புத்தகமாக வெளியாகிறது. உயிர்மை வெளியீடு. வெளியீடு விழா அழைப்பு.

உயிர்மை பதிப்பகம் மதுரையில் ஆகஸ்ட் 30, 2009 ஞாயிறு காலை 9.30 மணிக்கு உயிரோசை இணைய இதழின் ஓராண்டு நிறைவு விழாவினையும் மாபெரும் புத்த்க வெளியீட்டு விழாவினையும் நடத்தவிருக்கிறது. தமிழின் முண்ணனி எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் வெளியிடப்படும் நூல்கள் அனைத்தும் கடந்த ஓராண்டில் உயிரோசையில் எழுதப்பட்ட தொடர்களின் தேர்ந்தெடுக்கபட்ட ஆக்கங்களின் நூல்வடிவமாகும். ஒரு இணைய இதழ் ஓராண்டின் நிறைவில் தான் வெளியிட்ட ஆக்கங்களிலிருந்து பத்து நூல்களை வெளியிடுவது இதுவரை இணைய தளவரலாற்றில் நிகழ்ந்திராத ஒரு சாதனை. முற்றிலும் மாறுபட்ட துறைகளையும் பார்வைகளையும் சார்ந்து இந்த நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இது உயிரோசையில் கடந்த ஓராண்டில் வெளிவந்த ஆக்கங்களில் சிறிய பகுதி மட்டுமே. தொடர்ந்து பல நூல்கள் இந்த வரிசையில் வெளிவர உள்ளன.
இத நிகழ்வில் உயிரோசையின் வாசகர்களை பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் மதுரை புத்தக கண்காட்சி வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6 வரை மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் மாலை வேலைகளில் சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், எம்.யுவன், சுகுமாரன் உள்ளிட்ட எழுத்தாளர்களை சந்தித்து உரையாடலாம்.
புத்தக கண்காட்சி நடைபெறும் நாட்களில் உயிர்மை-உயிரோசை வாசகர்கள் எல்லா நாட்களிலும் என்னை மதுரையில் சந்திக்கலாம்.
எனது தொடர்பு எண்: 9444366704
நிகழ்ச்சி நிரல்
மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

நாள்: 30.8.20009, ஞாயிறு காலை 9.30 மணி
இடம்: ஹோட்டல் சுப்ரீம்

110. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
மதுரை-625001
முதல் அமர்வு

நூல் வெளியீட்டு விழா

தலைமை: கே.வைத்தியநாதன்ஆசிரியர், தினமணி
1. கடலில் ஒரு துளி ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை: தமிழவன்
2. கிராமத்து தெருக்களின் வழியேஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்
கருத்துரை: சுந்தர் காளி
3. இடம்-காலம்-சொல்ஆசிரியர்: இந்திரஜித்
கருத்துரை: சமயவேல்
4. வேறு வேறு உலகங்கள்ஆசிரியர்:அ.ராமசாமி
கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்
5. செல்லுலாயிட் சித்திரங்கள்ஆசிரியர்: தமிழ்மகன்
கருத்துரை: நடிகர் சண்முகராஜா
6. தெய்வங்கள் எழுகஆசிரியர்: வாஸந்தி
கருத்துரை: மனோஜ்
7. இன்னும் மிச்சமிருக்கும் இருள்ஆசிரியர்: மாயா
கருத்துரை: அ.ராமசாமி
8. தமிழுணர்வின் வரைபடம்ஆசிரியர்: தமிழவன்
கருத்துரை. ந.முருகேச பாண்டியன்
9. இன்றிரவு நிலவின் கீழ்நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்தமிழில்: ஆர். அபிலாஷ்
கருத்துரை: யுவன் சந்திர சேகர்
10. சினிமாவின் மூன்று முகங்கள்ஆசிரியர்: சுதேசமித்திரன்
கருத்துரை: சுகுமாரன்
இரண்டாம் அமர்வு
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்
உயிரோசையை முன் வைத்து



சிறப்புரைகள்
சாருநிவேதிதா
எஸ்.ராமகிருஷ்ணன்

LinkWithin

Blog Widget by LinkWithin