வியாழன், மார்ச் 05, 2009

ஒரு அழைப்பு

அன்புடன் அழைக்கிறேன்


எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி


பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா



இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6
நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை


வரவேற்புரை திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்
அறிமுகவுரை திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புரை பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்

மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு
வாழ்த்துரைகள் திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்
ஏற்புரை திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை
நன்றியுரை திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்

நன்றி, அனைவரும் வருக!




போட்டி முடிவுகள்


சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.

உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:


முதல் பரிசு (ரூ.20,000) திரு. தமிழ்மகன், தமிழ்நாடு
இரண்டாம் பரிசு (ரூ. 10,000) திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன், தமிழ்நாடு
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)
இந்தியா திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு
இலங்கை திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை
வட அமெரிக்கா திரு. வ. ந. கிரிதரன், கனடா
ஆசியா-பசிபிக் திரு. கே. பாலமுருகன், மலேசியா

ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

LinkWithin

Blog Widget by LinkWithin