செவ்வாய், மார்ச் 05, 2013

அழைப்பு

வணக்கம் நண்பர்களே,
வரும் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கோவையில் என் வனசாட்சி நாவலை அறிமுகப்படுத்த முக்கியமான படைப்பு ஆளுமைகள் இசைந்துள்ளார்கள். கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், திலகபாமா, மு.சி.கந்தையா, பால நந்தகுமார் போன்ற பலர் அதில் பேசுகிறார்கள்.
பால நந்தகுமார் எனக்குக் கிடைத்த அரிய வாசகர். அவருடைய முயற்சியில்தான் அங்கு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் மகளுக்குத் திருமணம் செய்யும் கவனத்துடன் அவர் விழா ஏற்பாடுகளை செய்கிறார்.
அவர் தொடங்கியிருக்கும் மலைச் சொல் என்ற கலை, பண்பாட்டு சமூக அமைப்பின் முதல் நிகழ்வு இது.
வந்து வாழ்த்தி, விவாதிக்க வேண்டுகிறேன்.
இடம்: மெட்ரோ பார்க் இன், ராஜவீதி.

LinkWithin

Blog Widget by LinkWithin