செவ்வாய், மே 31, 2011

அறிவியல் அறிவோம்

அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய இணைய தளம். அறிவியல் செய்திகளை அத்தனை எளிமையாக தருகிறார். அறிவியல் அறிவோம்.

ஞாயிறு, மே 29, 2011

என் விகடன் என் பேட்டி


கடந்த வார என் விகடனில் என் பேட்டி வெளியானது. என்னுடைய ஊரைப் பற்றிய சுருக்கமான நினைவுத் தொகுப்பு. என்னுடை எல்லா கதைகளுக்கும் ஏதோ கதாபாத்திரத்தையாவது இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் கிராமம் அது. சுருக்கமாக சொல்லியிருப்பினும் அதற்கு விகடன் குழுவினர் எடுத்துக் கொண்ட முயற்சி பிரமிப்பானது. என்னுடைய ஊருக்கு நிருபரும் போட்டோ கிராபரும் வந்திருந்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததையும் ஊரைப்பற்றி அக்கறையோடு விசாரித்தையும் பத்திரிகையாளனாக இருந்தும்கூட வியப்பாக எதிர் கொண்டேன்.

நடிகை ரேவதி முதன் முதலாக தன்னை திரையில் பார்த்தபோது அத்தனை பெரிய சைஸிஸ் தன்னைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக அவர் ஆரம்பத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.
லே அவுட்டில் காட்டியிருக்கும் கவனத்தைப் பார்க்கும்போது அதற்கு சற்றே குறைவான ஓர் அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது.






25.5.11 vikatan

வெள்ளி, மே 27, 2011

முகவரி மாறிவிட்டது

அ.முத்துலிங்கம் அவர்களின் வலைதள முகவரி மாறிவிட்டது. கீழ்கண்ட முகவரியை சொடுக்கவும்.

அ.முத்துலிங்கம்

ஞாயிறு, மே 01, 2011

கவர்னர் மாளிகையில் ஜெயந்தன் விருது!



எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செயல்படும் செந்தமிழ் அறக்கட்டளையின் முதலாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜெயந்தனின் அனைத்து கதைகளையும் தொகுத்து வெளியிடும் நிகழ்ச்சியும் சென்னை ராஜ்பவனில் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
பாதுகாப்பு கருதி நிறைய கட்டுப்பாடுகள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அசைந்தாலும் ஆபத்துபோல அமர்ந்திருந்தனர் பலரும். செல் போனை ஆப் செய்துவிடுங்கள், கையில் டிஜிடல் கேமிரா வைத்திருந்தால் அதை பாட்டரியை கழற்றிவிட்டு பைக்குள் வைத்துவிடுங்கள் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். தடவிப் பார்க்கும்போது என் பாக்கெட்டில் இருந்த ஹோமியோபதி மாத்திரை குப்பிகளைப் பார்த்துவிட்டு கொஞ்சம் யோசித்தார்கள். நான் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது.
பொதுவாக இலக்கிய நிகழ்ச்சி என்றால் விழா தொடங்கிய அடுத்த வினாடி முதல் எல்லோரும் வெளியே செல்லத் தொடங்கி, உள்ளே அரங்கத்துக்குள் இருப்பவரைக் காட்டிலும் அதிக அளவில் மக்கள் வெளியே புகைப் போக்கியபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இங்கே கவர்னர் எழுந்து போகும் வரை யாரும் எழுந்திருக்கவில்லை.
விழாவில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரது பேச்சுகள் சமூகமும் இலக்கியமும் என்பதைத் தொட்டுப் பார்த்துத் திரும்பின. தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன் ஜெயந்தனின் சிறுகதைகளையும் கவிதைகளையும் குறிப்பி்ட்டுப் பேசினார். இளம்பிறை தாம் தேர்வு செய்த கவிதைத் தொகுப்புகளை
உதயசந்திரன் தமிழர்கள் நிலைமை பற்றி குறிப்பிட்டார். நறுக்கென்று சுடுவதுபோன்ற பேச்சு அது. வெட்டுப்புலி நாவலை கடந்த ஆண்டே படித்ததாகக் குறிப்பிட்டு நாவலில் வரும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை விளைவித்ததா, சீர்குலைத்ததா என்ற அடிப்படையான கேள்வி இருப்பதாகச் சொன்னார். 380 பக்க நாவலை ஒருவரியில் சொல்லச் சொன்னால் இதைச் சொல்லிவிடலாம். அவருடைய வாசிப்பு பிரமிக்க வைத்தது.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர் எழுதுகிறார்கள். தோல்வியடைந்தவர்களின் வரலாற்றை இலக்கிய வாதிகள் எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னதுகூட என் நாவலுக்கு நெருக்கமாக இருந்தது.

பிரபஞ்சன்.. நாலரை நிமிடம்தான் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உங்கள் நாவலைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். காலையில் கூட மீண்டும் ஒரு தரம் படித்துக் கொண்டிருந்தேன் என்றார்.
நாலரை நிமிட உரையில் என் நாவலைப் பற்றி மூன்றரை நிமிடம் பேசினார். நாவலில் வரும் பல பத்திகளை அப்படியே சொல்லிக் கொண்டு போனது ஆச்சர்யமாக இருந்தது.
கவர்னர் பர்னாலா தமிழின் தொன்மையை பல மொழிகளில் தமிழின் ஆதிக்கத்தைப் பற்றி கூறினார்.
நாடகத்துக்கு வேலு சரவணனும் மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் முனுசாமியும் கவிதைக்கு கடற்கரய், அ.வெண்ணிலா, பொன். இளவேனில், பா.சத்தியமோகன் ஆகியோரும் சிறுகதைக்கு விஜயமகேந்திரன், ஜனநேசன் உயிர்வேலி ஆலா ஆகியோரும் விருது பெற்றனர்.
வரவேற்புரையை கவிஞர் தமிழ்மணவாளனும் நன்றியுரையை ஜெயந்தன் சீராளனும் நிகழ்த்தினர்.
சிறுகதை விருதுகளைத் தேர்வு செய்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசன் விழாவுக்கு வரவில்லை.

LinkWithin

Blog Widget by LinkWithin