புதன், ஜனவரி 23, 2013

36- வது புத்தகத் திருவிழா


36-வது புத்தகக் கண்காட்சியில்  இரண்டு தவணையாக வாங்கிய நூல்கள் இவை. இன்னும் இரண்டு தரம் போக வேண்டி இருக்கலாம்.
புத்தகங்களைப் பார்ப்பதும் தேர்ந்தெடுப்பதும் மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களில் நண்பர்களைத் தேர்வு செய்வதும் போன்றது. நம் ரசனையையும் சமூக தரிசனத்தையும் பொருத்த விஷயம் அது.

பாரதி கருவூலம்
(ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துகள்)
அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டுன்ஷ் (தமிழில்: சுகுமாரன்)
பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ (தமிழில்: சுகுமாரன்)
சித்தன் போக்கு -பிரபஞ்சன்
நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் (தொகுப்பு: யுவன் சந்திரசேகர்)
சின்ன விஷயங்களின் கடவுள்- அருந்ததி ராய்
புகை நடுவில்- கிருத்திகா

காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்,
629001

பசுமை நினைவுகள்- ரஸ்கின் பாண்ட் (ஆங்கிலத்திலிருந்து தமிழில்: அ.சு. இளங்கோவன்)
மக்கள் குரல்- பைரேந்திரகுமார் பட்டாச்சாரியா (அஸ்ஸாமி நாவல்- தமிழில்: சரோஜினி பாக்கியமுத்து)
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள் தொகுப்பு வெங்கட் சாமிநாதன்
சாகித்திய அகாதமி, 
குணா பில்டிங்ஸ்,
443, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-18

நேனோ- மோகன் சுந்தரராஜன்
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி- சாலீம் அலி தமிழில்: நாக.வேணுகோபாலன்
தந்தைப் பெரியார் வாழ்வும் தொண்டும் - இரா.இரத்தினகிரி
தார்பாரி ராகம்- ஸ்ரீ லால் சுக்ல (தமிழில்: சரஸ்வதி ராம்நாத்)
சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (தமிழில்: ஹேமா ஆனந்ததீர்த்தன்)
அபராஜிதா - விபூதி பூஷண் பந்தோபாத்யாய (தமிழில்: திலகவதி)


நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா,
நேரு பவன்,
5, இன்ஸ்ட்டிட்யூஷனல் ஏரியா,
பேஸ்- 2
வசந்த் குஞ்ச், புது தில்லி- 110070.


இக்கால தமிழ் மரபு- கு.பரமசிவம்
சொல்வழக்கு கையேடு- மொழி அறக்கட்டளை
தமிழ் நடைக் கையேடு

அடையாளம் பதிப்பகம்,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநந்தம் -621310

ஆறாவடு - சயந்தன்
மணல் கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன்
மேகதூதம் - காளிதாஸர் (தமிழில்: மதுமிதா)
தமிழினி,
25 ஏ, தரைத்தளம், 
ஸ்பென்ஸர் பிளாஸா முதல் பகுதி,
769, அண்ணா சாலை,
சென்னை-2


கதிரேசன் செட்டியாரின் காதல்- மா.கிருஷ்ணன்

மதுரை பிரஸ்,
60, பி.கோதண்டராமர் கோயில் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-33.

தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில் நாடன்

விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோயமுத்தூர்-641001.

என் கதை- வே. ராமலிங்கப் பிள்ளை

சந்தியா பதிப்பகம்,
புதிய எண்: 77, 53-வது தெரு,
9-வது அவின்யூ
அசோக் நகர்,
சென்னை-600083.

அறிஞர் அண்ணா சிறுகதைகள் தொகுப்பு: சாயுபு மரைக்காயர்

கங்கை புத்தக நிலையம்,
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர்,
சென்னை- 17.

தானும் அதுவாக பாவித்து- எஸ்.சங்கரநாராயணன்

சொல்லங்காடி,
2/35, அறிஞர் அண்ணா காலனி,
தெற்கு மாடவீதி,
திருவொற்றியூர்,
சென்னை_ 19.

வெள்ளி, ஜனவரி 11, 2013

ரெட்டை வால் வலைப்பூவில்

ரெட்டை வால் வலைப்பூவில் வனசாட்சி நாவல் குறித்த முதல் விமர்சனம் வந்திருக்கிறது.. சிறப்பாக நாவலை உள்வாங்கி இருக்கிறார். நண்பருக்கு நன்றி.

விமர்சனத்தைப் படிக்க...

திங்கள், ஜனவரி 07, 2013

வனசாட்சி குறித்து...






ஜனவரி 6-ம் தேதி மாலை சென்னை புக் பாயிண்டில் உயிர்மையின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஒன்பது நூல்களையும் அய்யா நெடுமாறன் வெளியிட்டார். இயக்குநர் லிங்குசாமி என்னுடைய வனசாட்சி நாவலை பெற்றுக்கொண்டு பேசினார்.
அதிகார இடைத்தரகர்களின் கேவலமான சுயநலத்துக்காக மக்கள் எப்படி பலியாகிறார்கள் என்பது நாவலின் அடிநாதம்.
நாவலின் பின் அட்டைக் குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் இப்படி எழுதி இருக்கிறார்..


’’கழுத்தில் வைக்கப்படும் நுகத்தடிகளில் சர்க்கஸ் ரிங் மாஸ்டரின்
சாட்டைகளில், மணவறையில் கட்டப்படும் தாலிகளில், அலுவலகத்தில் தரப்படும்
அப்பாயின்மென்ட் ஆர்டர்களில்... எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கின்றன
அதிகாரத்தின் நுணுக்கமான ரேகைகள். நாம் அதை மௌனமாக அனுமதிக்கப் பழகி
இருக்கிறோம். அது அதிகார துஷ்பிரயோக மாறாதவரை நமக்குக் கவலை இல்லை. உலகமே
அதிகாரத் தரகர்களின் கையில் சிக்கிச் சிதைந்து போயிருக்கிறது.
அசடர்களிடம் அதிகாரம் குவியும்போது துயரத்தின் விளைவு அதிகமாக இருக்கும்.
கூடவே கொஞ்சம் நகைச்சுவையும்.
இந்த நாவல் சுமார் 200 ஆண்டு தேயிலைத் தோட்டப் பின்னணியில் அதை அலசுகிறது.’’

அதிகாரத்தின் ஆணவ முகம் நாளுக்கு நாள் கோராமாகிக்கொண்டே போகிறது. விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசும்போது அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஒருத்தரிடம் பணிவாகவும் இன்னொருவரிடம் திமிராகவும் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது என்றார். அவர் சிவகாமியின் உண்மைக்கு முன்னும் பின்னும் நாவல் குறித்துதான் சொன்னார். ஆனால் அவர் என் நாவல் குறித்து பேசியது போலவே இருந்தது.

அதிகார அடுக்கு ஒரு அதிகாரியை இன்னொரு அதிகாரியிடம் மண்டியிட வைக்கிறது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை அடிக்கொருதரம் அவர்கள் விழுந்துவிழுந்து காட்ட வேண்டி இருக்கிறது. மீசையில் மண் ஒட்டாததை நிரூபிப்பதற்காகவே அவர்கள் தொடர்ந்து குப்புற விழுகிறார்கள். அவர்கள் தங்கள் அடிமைகளை அச்சுறுத்த நினைத்து அவர்களுக்கு எல்லையற்ற நகைச்சுவையைத்தான் தருகிறார்கள். அடிமைகளில் மிகச் சிலரே அதை ரசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

வனசாட்சி நாவலின் முதல் பாகம்.. முன்பனிக் காலம்.
19-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிருந்து சாரை சாரையாக தமிழ் மக்கள் இலங்கைக்கு தோட்ட வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைச் சொல்கிறது. ஒரு குழு இங்கிருந்து இலங்கை தோட்டத்தைச் சென்று அடைவதோடு முதல் பாகம் முடிகிறது.

இரண்டாவது பாகம் பின்பனிக் காலம்.

ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இலங்கையில் வேலைபார்த்துவந்த பத்து லட்சம் தோட்டத் தொழிலாளர்களில் பாதிப் பேர் அங்கிருந்து திருப்பி அனுப்பப் படுவதை சொல்கிறது.

மூன்றாவது பகுதி.. இலையுதிர் காலம்.

திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட கோளாறில் மகள் வேறு குடும்பவ் வேறாகப் பிரிந்து போன ஒரு குடும்பம் பற்றிச் சொல்கிறது. இலங்கையில் தொலைந்துபோன அந்தப் பெண் இயக்கத் தொடர்பு ஏற்பட்டு முள்ளி வாய்க்கால் போரில் வீரமரணம் அடைவது வரை செல்கிறது.

மீண்டும் என் நாவலில் சமகாலச் சரித்திரத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன். சமூகம் வேறாகவும் கதை வேறாகவும் என்னால் கற்பனை செய்யவே முடியவில்லை. புனைவும் நிஜமும் பிணையும் புள்ளியாக இருப்பதே என் படைப்புகள்.. மற்ற எல்லாரையும்விட பட்டவர்த்தனமாக அதை நான் செய்கிறேன்.

அதனால்தான் இதில் சேன நாயக்க முதல் ராஜபக்‌ஷே வரை.. சாஸ்திரி முதல் ராஜீவ் காந்தி வரையில் சொல்ல வேண்டி இருக்கிறது.

வாசகர்கள் வர வேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்..











LinkWithin

Blog Widget by LinkWithin