வெள்ளி, டிசம்பர் 25, 2009

வெட்டுப்புலி நூல் வெளியீட்டு விழா-தினமணி




உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​ திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​


சமகால படைப்புகள் பாடத்திட்டத்தில் கூடாது: தினமணி ஆசிரியர்

சென்னை, ​​ டிச.25: "சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறக் கூடாது' என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:

""எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான் படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​ இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​ இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?

காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​ குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​ எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பதுதான் யதார்த்த உண்மை.​ ​அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​ குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத் திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.​ சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின் தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​ இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின் தரமும் தாழ்ந்துவிடும்.

நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​ அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்'' என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு​ பி​ரபஞ்சன் அழைப்பு

First Published : 26 Dec 2009 01:44:55 AM IST

Last Updated :

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள்

வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​ உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​

கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​ நூலாசிரியர் தமிழ்மகன்.​​

சென்னை, ​​ டிச.25: ""இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்று திரைப்படத் துறையினருக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அழைப்பு விடுத்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

""இலக்கிய அறிவு இல்லாத எங்களை எதற்கு இந்த விழாவுக்கு அழைத்தீர்கள்?'' என்று இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

இலக்கியத்தோடு பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே அவர்களை மனுஷ்ய புத்திரன் அழைத்துள்ளார்.​ 1960}70}ம் ஆண்டுகளில் படைப்பாளிகள் ஓவியர்களோடு இணைந்து பணியாற்றினார்கள்.​ அதன் மூலம் சிறந்த ஓவியர்கள் உருவானார்கள்.​ சிறந்த படைப்புகளும் உருவாகின.

அதுபோல,​​ திரைப்படத் துறையினரும்,​​ படைப்பாளிகளும் இணைந்து பணியாற்றினால் சிறந்த படைப்புகள் உருவாகும்.​ சிறந்த இயக்குநர்களும் உருவாக முடியும்.​ இலக்கியத் துறையில் இருந்து திரைப்படத் துறைக்குச் சென்ற பலர் சாதனை படைத்துள்ளனர்.

ஆண் }​ பெண் உறவுச் சிக்கல்களை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை.​ அதனால்தான் சமுதாய முன்னேற்றம் தடைபடுகிறது.​ அதனை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் தனது "அவரவர் வழி' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்' என்றார் பிரபஞ்சன்.​ முன்னதாக 11 எழுத்தாளர்கள் எழுதிய 12 நூல்களை "தினமணி' ஆசிரியர் கே.​ வைத்தியநாதன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர்கள் பிரபஞ்சன்,​​ சாரு நிவேதிதா,​​ பாரதி மணி,​​ தேவேந்திர பூபதி,​​ சுகுமாரன்,​​ திரைப்பட இயக்குநர்கள்​​ தங்கர்பச்சான்,​​ எஸ்.பி.​ ஜனநாதன்,​​ வெற்றிமாறன்,​​ அறிவழகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

வெளியிடப்பட்ட நூல்களும்,​​ எழுத்தாளர்களும்:​ "தாழப்பறக்காத பரத்தையர் கொடி' }​ கட்டுரைகள் ​(பிரபஞ்சன்),​​ "என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' }​ கட்டுரைகள்,​​ "அதீதத்தின் ருசி' }​ கவிதைகள் ​(மனுஷ்ய புத்திரன்),​​ "வெட்டுப் புலி' }​ நாவல் ​(தமிழ்மகன்),​​ "அவரவர் வழி' }​ சிறுகதைகள் ​(சுரேஷ்குமார் இந்திரஜித்),​​ "தண்ணீர் யுத்தம்' }​ சுற்றுச் சூழல் கட்டுரைகள் ​(சுப்ரபாரதி மணியன்),​​ "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்' }​ நாவல் ​(வா.மு.​ கோமு),​​ "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது' }​ குறுநாவல்கள் ​(வ.ஐ.ச.​ ஜெயபாலன்),​​ "கானல் வரி' }​ குறுநாவல் ​(தமிழ் நதி),​​ "நீலநதி' }​ சிறுகதைகள் ​(லஷ்மி சரவணக்குமார்),​​ "நகரத்துக்கு வெளியே' }​ சிறுகதைகள் ​(விஜய் மகேந்திரன்),​​ "வேட்கையின் நிறம்' கவிதைகள் ​(உமா ஷக்தி).

வெளியிடப்பட்ட 12 நூல்கள் பற்றி 12 பேர் விமர்சன உரையாற்றினார்கள்.​ கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

LinkWithin

Blog Widget by LinkWithin