திங்கள், டிசம்பர் 03, 2012

அழகான விருது.. கனமான பணமுடிப்பு.. நெகிழவைத்த அன்பு

சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ் தோழருமான ஜி.எஸ். மணி அவர்கள் நினைவாக மார்த்தாண்டம் தோழர்கள் நடத்தும் களம் அமைப்பின் சார்பாக டிசம்பர்2‍, தேதி ஆண்பால் பெண்பால் நாவலுக்கு விருது வழங்கப்பட்டது. தோழர்கள் பாபு, ஹசன், குமரவேல், மைக்கேல் போன்றவர்களின் அன்பு மறக்க முடியாதது.
தோழர் ஜி.எஸ். மணி அவர்களோடு பழகிய தோழர் எம்.எம்.அலி போராட்டக்கால நினைவுகளை பகிர்ந்துகொண்டார். போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மணி அவர்கள் ஆற்றில் குதித்துத் தப்பிச் சென்ற நிகழ்வு சிலிர்க்க வைத்தது. தோழர் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், மணிமாறன் ஆகியோர் என் நாவல் பற்றி நன்றாகப் பேசினார்கள். எம்.ஜி.ஆர் என்பது தமிழகத்தைப் பிடித்த ஆவி என்றார். எல்லா நடிகர்களுமே தம் பங்குக்கு நம்மைப் பேயாய் பிடித்து ஆட்டுகிறார்கள் என்றது சுவாரஸ்ய்மாக இருந்தது. அவர் சொன்ன பிறகுதான் அதுவும் சரிதான் என தோன்றியது.

அழகான விருது... தோழர் குமரவேல் வடிவமைத்தது. கனமான பணமுடிப்பு.. ரூ. 15,000/‍ நெகிழவைத்த அன்பு.. என 3-‍ம் தேதி காலை சென்னை வந்து இறங்கினேன். நாள் முழுதும் என்னுடனே இருந்த பாபு அவர்களுக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும். சிதாறல் சமணக் குகைக்கும் பேச்சிப்பாறை தொட்டி பாலத்துக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். சுமார் 14 மணி நேரம்தான் நான் மார்த்தாண்டத்தில் இருந்தேன். இரண்டு மூன்று நாள் இருந்த நிறைவு.

LinkWithin

Blog Widget by LinkWithin