சனி, ஆகஸ்ட் 02, 2008

கற்றதனால்

"அப்புறம்'' என்றேன்.

"அட, எல்லாத்தையும் விளாவாரியாச் சொல்லணும் உனக்கு... அப்புறம் அவ்வளவுதான்'' என்றான் சிதம்பரம்.

"அடச்சீ... அப்புறம் இன்னா ஆச்சு சொல்லுடா?''

அர்த்தமாய் என்னைக் கூர்ந்துவிட்டு "பீடிக்கு ஒரு ரூபா தர்றியா'' என்றான்.

"ம்...''

சிதம்பரம் சுற்றிலும் ஒரு நோட்டம் பார்த்துக் கொண்டு, வடிகட்டிய குரலில், "நைட் ஒம்போது மணிக்கு அவன் வாழைத் தோப்புக்கா போறதைப் பார்த்தேன். கொஞ்ச நேரங்கழிச்சு அந்தப் பொண்ணு...''

"நைட்ல்யா?''

"பகல்லகூடத்தான் நடக்குது. அதுக்கு வேற இடம் இருக்குது.''

"அது எங்கடா?''

"இன்னா நீ...? நானும் வந்ததில இருந்து பாக்றேன். கிளறிக்கினே இருக்கியே. பட்டணத்தில் நீ பாக்காத ஆளா?''
பட்டணத்தில் பார்க்கத்தான் முடியும். பத்து பேராய்ச் சேர்ந்து நின்று கொண்டு போகிற, வருகிற பெண்களுக்கு மார்க் போடமுடியும். கவலையே இல்லாமல் தொளதொளவென்று பனியன் போட்டுக்கொண்டு ஆறடி உயரத்தில் செவேல் என்று போய்க் கொண்டிருக்கும் மேற்கத்திய பெண்கள் தாராளமாய் எண்பது, தொண்ணூறுரென்று மார்க் வாங்கியிருக்கிறார்கள். இந்தியப் பிரஜைகள் எங்களின் அளவு கோலில் ஐம்பதைத் தாண்டியதில்லை.

பஸ்ஸில் அவசரத்தில் இடித்துவிட்டதாகப் பாசாங்கு செய்வோம்.
ஹாஸ்டலில் நடிகைகளின் படங்களை ஒட்டி வைப்போம்.
எனது சர்வீஸில் வேறு ஒன்றும் முடிந்ததில்லை. முடிய வைக்கத் தைரியமில்லை.

"பட்டணத்தில் இந்த அளவுக்கு முடியாதுடா... சரி சொல்லு'' என்றேன்.

"காது குத்தறியே..? சரி துட்டு குடு. நிறைய வேல நடக்குது பழனிக்கிட்ட சொல்லு நாளலர்ந்து மாட்டுக்கு நா தண்ணி காட்ட மாட்டேன். கதயா இருக்குதே? மாட்டைப் புடிச்சிக்கட்டிட்டுப் போய்க்கினேகிறாரு ஐயா... மாட்டுக்காரன் தானே மாட்டுக்கு தண்ணி காட்டணம்?''

"பழனிகிட்ட சொல்றேன்... அப்புறம்?''

"என்னது அப்புறம்? உனக்கு வேற வேல கிடையாது. மாட்டுக்குத் தவுடு வெக்கணும்... ஐய துட்டு குடு.. நாளிக்குச் சொல்றேன்'' என்றான்.

சிதம்பரம் சுவாரஸ்யம் இழந்துவிட்டான். இனி சொல்ல மாட்டான். சமயத்தில் அப்படி லேசாக உலுக்கினால் போதும் கதையாகக் கொட்டுவான். ஐம்பது வயசு ஆறுமுக நாயகரிலிருந்து பதினைஞ்சு வயது குமார் வரைக்கும் சொல்லுவானó.

அவனை அனுப்பினேன்.

மணி மூன்றிருக்கும். மேகத்தின் அடர்த்தியால் ஆறு மணி மாதிரி இருந்தது. உடம்பு சூடாக இருந்தது. கிளைமேட் காரணமாகவா சிதம்பரம் சொன்னா சாமாச்சாரங்கள் காரணமாகவா தெரியவில்லை.
பம்ப்}செட்டிலிருந்து வெளியே வந்து சிறுநீர் கழிந்துவிட்டு சுற்றிலும் பார்த்தேன். அரை கிலோ மீட்டர் சுற்றுப் பரப்புக்குப் பச்சை.

வரப்பில் நோக்கமில்லாமல் மெல்லச் சுற்றிக் கொண்டு வந்தபோது கொஞ்ச தூரத்தில் வளையல் சத்தம் கேட்டது. புல்லறுக்கும் சத்தம். எங்கிருந்து வருகிறதென்று கண்டுபிடிக்க முடிந்தது.
அவள் புல்லறுத்துக் கொண்டிருந்த வரப்பில் நானும் நடக்க ஆரம்பித்தேன். சிதம்பரம் சொன்ன கதைகள் என்னை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதாக உணர முடிந்தது. இருந்தாலும் திரும்பிச் செனஅறு விட முடியவில்லை.

புல்லறுத்துக் கொண்டிருந்தவளின் பின்னால் போய்ச் சப்தமின்றி நின்றேன். கண்ணாடி இல்லாமலேயே என் முகம் சிவந்து போயிருப்பதை உணர முடிந்தது. லப்}டப் ஓசைதான் பிரதானமாக இருந்தது.
திடுக்கிட்டவள் மாதிரி திரும்பிப் பார்óத்தாள். "அப்பப்பா... யாரோனு பயந்துட்டேன்'' என்று ஒதுங்கி நின்றாள்.
புல்லறுக்கிறியா?'' என்றேன். எனக்குள்ளே வேறு எவனோ புகுந்துகொண்டு பேசுவது மாதிரி இருந்தது.

"பார்த்தாயா தெர்லயா?'' என்று சிரித்து விட்டு மறுபடி அறுக்க ஆரம்பித்தான்.

நானும் நடக்க ஆரம்பித்தேன். அவளை விட்டு விலக, நல்ல வாய்ப்பு நழுவி விட்டது மாதிரி இருந்தது. சட்டென்று திரும்பி அழைக்கலாமா என்றிருந்தது.

பம்ப் -செட்டில் யாருமில்லை. இனி யாரும் வருவதற்கும் இல்லை. இதெல்லாம் ஊரில் சகஜமாக நடக்கிறதென்று சிதம்பரம் உறுதியாகச் சொல்கிறான்.

ஒருமுறை கனைத்துக் கொண்டேன். எங்கே கூப்பிட்டு விடுவேனோவென்று எனக்கே பயமாக இருந்தது.
பயப்படாமல் கூப்பிட்டுக் பார்க்கலாமா? நீ கூடவா இப்படி? என்று அவள் கேட்டுவிட்டால்? ச்சே... அப்படியெல்லாம் கேட்பதற்கு அவளுக்குத் தெரியாது. ஊரில் யாரிடமாவது சொல்லி விடுவார்களா?
எனக்கும் அவளுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கால்களை நிறுத்த முடியவில்லை. கால் ஒருபுறமும், மனசு மறுபுறமும் நடந்து கொண்டிருந்தது.

மழை சடசடவென்று தூற ஆரம்பித்தது. வேகமாக செட்டை நோக்கி ஓடினேன்... அதானே óமழைக்கு ஒதுங்குவதற்கு இதை விட்டால் வேறு எந்த இடம் இருக்கிறது? அவளும் இங்கு தானó வந்தாக வேண்டும்.
திரும்பிப் பார்த்தேன். அவளும் ஓடிவருவது தெரிநóதது. கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

மழை பிடித்துக் கொண்டால் யாரும் வருவதற்கில்லை. திக்திக்கென்றிருந்தது.

இனóனும் சிறிது நேரத்தில் உள்ளே நுழைவாள். எப்படிப் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று உடனே தயாரிக்க முடியவில்லை.

ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்துக் காட்டலாமா? வேறு நல்ல யோசனையாய்த் தோன்றவில்லை. நாகரிகமாய் ஏதாவது? இதில் நாகரிகம் என்ன வேண்டியிருந்தது?

காலேஜில் பெண்களை வசியம் பண்ண சில உத்திகளை கணேசன் சொல்லியிருக்கிறான். ஒன்றுமே ஞாபகத்துக்கு வரவில்லை.

யாரோனு பயந்திட்டேன் என்றாளே... அப்படியென்றால் நான் என்றால் பயப்பட மாட்டாளா? வரட்டும்...
மழை சோவென்று பொழிந்து கொண்டிருந்தது.

இனóனும் என்ன செய்றா?

மெல்ல வாசல் பக்கம் போய் எட்டிப் பார்த்தபோது தொப்பலாக நனைந்தபடி பக்கத்திலிருந்த மரத்தடியில் நின்றிருந்தாள். கையிரண்டையும் மார்புக்குக் குறுக்கே இறுக்கமாகக் கட்டிக்கொண்டு கால்களைச் சேர வைத்தபடி குளிரிக்கொண்டிருந்தாள்.

பதினேழு வயதிருந்தால் அதிகம். ஏன் இப்படித் தயங்குகிறாள் என்று தெரியவில்லை. நானும்தான்!
கட்டிலில் அமர்ந்து ஏதோ வார இதழை இப்படியும், அப்படியும் திருப்பினேன். மனது இன்னும் என்னிடம் வந்து சேரவில்லை.

புத்தகத்தைப் புரட்டுவதை நிறுத்திவிட்டுக் கூர்ந்து கவனித்தேன். சடசடவென்று சேறு தெறிக்க ஓடிவருகிற சத்தம் கேட்டது. எழுந்து நின்று கொண்டேன்.

"அப்பாடி'' என்று ஓடிவந்து நினóறவர் முருகேச முதலியார்.
நல்லவேளையாகத் தப்பித்தோம்!

"இன்னாப்பா நீ மட்டுந்தான் இருக்கியா?'' என்றார்.

"ஆமா''

"பட்டணத்துல படிச்சியே... அங்கேயே ஒரு வேலை பாத்து சேர்ந்துடக்கூடாது?... எங்க பொழைப்புதான் நாய்ப் பொழப்பா இருக்குது. மழைல மோட்டார் பத்திக்கப் போதுனு ஓடியாந்தேன்... நீயேன் நிறுத்தாத இருக்குறே... நிறுத்திடு'' என்றார்.

அவள் போய் விட்டிருப்பாளா?

"பி.ஏ... தானே?'' என்றார்.

"ஆமா''

"வேலைக்கு டிரை பண்ணியா?'' எனóறார்.

"ட்ரை பண்றேன்...''

"அபóபப்பா... இன்னா குளிரு'' என்று வாசல் பக்கம் போய் நின்றவர், அது யாரு? நம்ம ஏழுமலை பொண்ணு இல்ல?''

அப்போதுதான் கவனித்தவன் மாதிரி பாவனஐ செய்தேன்.

"ஏம்மா மீனாட்சி...'' என்று உரக்கக் கூப்பிட்டுவிட்டு, ""இன்னாப்பா நீ? மழைய நனைஞ்சிங்கடக்குது பேசாம இருந்திட்டியே?...'' என்று என்னிடம் கேட்டார்.

மறுபடியும், அவள் பக்கம் திரும்பி, "உள்ள வாம்மா'' என்றார் அவள் வருவது தெரிந்து.

"அதுதான் படிக்காத பொண்ணு... நீ மட்டும் தனியா இருக்கிறேன்னு வெக்கப்படுது... படிச்சவன உனுக்கினனா வெட்கம்? உள்ள வந்து நில்லும்மானு சொல்றதானே?... இடி கிடி உழுந்தா என்னா ஆவறது?'' எ
"அதுதான் படிக்காத பொண்ணு... நீ மட்டும் தனியா இருக்கிறேன்னு வெக்கப்படுது... படிச்சவனஅ உனுக்கினóனா வெட்கம்? உள்ள வந்து நில்லும்மானு சொல்றதானே?... இடி கிடி உழுந்தா என்னா ஆவறது?'' என்றார் பதட்டமாய்.

"சாரி. நா கவனிக்கவே இல்ல'' என்றேன்.

ரஷ்ய நூல்கள்

சிலர் மனிதர்கள் ஆனார்கள்!


தமிழ்மகன்

உலகத்தின் தலைசிறந்த 100 எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அதில் குறைந்த பட்சம் ஒரு டஜன் எழுத்தாளர்களையாவது ரஷ்யா மொழிக்கு ஒதுக்கித் தரவேண்டியிருக்கும். ஒருவேளை இந்தப் பட்டியலைத் தயாரிக்கும் பணியை ஒரு முரட்டுத்தனமான முதலாளித்துவ சிந்தனையாளனும் கூடவே பிற்போக்குவாதியாகவும் இருப்பவனிடம் காலம் ஒப்படைக்குமாயின் மேலே சொன்ன கணக்கில் ஒன்றிரண்டைத்தான் குறைக்க முடியும்.
வெளிநாட்டு இலக்கியங்கள் என்றாலே ஆரம்ப தரிசனமாக ரஷ்ய இலக்கியங்களை மட்டுமே படிக்க முடிந்த என் போன்ற ஆசாமிகளுக்கு இந்தப் பட்டியல் இன்னமும் நீளமானதாக இருக்கும்.
இந்த மூன்று தரப்பு எழுத்தாளர் பட்டியலிலும் தவிர்க்கமுடியாத படைப்பிலக்கியங்களை அல்லது எழுத்தாளர்களைப் பார்போம்.

"குற்றமும் தண்டனையும்', "வெண்ணிற இரவுகள்', "சூதாடி'} தஸ்தயேவஸ்கி

"போரும் அமைதியும்', "அன்னா கரீனினா', "புத்துயிர்ப்பு', இரண்டு ஹூஸôர்கள்} டால்ஸ்டாய்

செம்மணி வளையல்} அலெக்ஸôண்டர் குப்ரின்

மேல்கோட்டு} நிகோலய் கோகல்

தந்தையும் தனயரும், வசந்த கால வெள்ளம்} இவான் துர்கேனிவ்

அலெக்சேய் டால்ஸ்டாய்} நிகிதாவின் இளம்பருவம்

நாய்க்கார சீமாட்டி உள்ளிட்ட சிறுகதைகளும் குறுநாவல்களும்} ஆன்டன் செகாவ்

புரட்சிக்கு முந்தைய எழுத்தாளர்களில் இந்த ஏழுபேரை தவிர்த்துவிட்டு யாருமே பட்டியல் தயாரிக்க முடியாது. இந்த எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு பொதுத் தன்மையாக உள்மனசிக்கல்கள், நினைவோட்டம், ஆறா மனத்துயர், நேர்மைக்கும் குற்ற உணர்வுக்குமான போராட்டம் ஆகியவை மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையோடும் அதே சமயம் தேவையான கிண்டலோடும் சொல்லப்பட்டிருக்கிறது.

தஸ்தயேவஸ்கியின் மன உலகம் வறுமையும் ஏராளமான மனசிக்கலும் நிறைந்ததாக இருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத காதல் பித்து தலைக்கேறித் தவிக்கும் நாயகர்கள் இவருடைய பாத்திரங்களாக இருக்கிறார்கள். காதலியின் அன்புக்காகக் காதலியையே இழக்கத் துணிபவனும் (வெண்ணிற இரவுகள்), காதலிக்காக மலை உச்சியிலிருந்து கீழே குதிப்பதாக வாக்குறுதி தருபவனும் (சூதாடி) இவருடைய கதை மாந்தர்களாக இருக்கிறார்கள்.

டால்ஸ்டாய் மேட்டுக்குடியில் பிறந்து அங்கு நிலவும் போலித்தனமான நாகரீக வேடிக்கைகளையும் பணமிருந்தும் நிராசைகளும் குற்ற உணர்வால் நிம்மதியில்லாமல் இருக்கும் போக்கும் இவரது களம். வேட்கை காரணமாக வாழ்வில் இடறி அதைத் தொடர்ந்து ஏற்படும் சிடுக்குகள் நிறைந்த படிநிலைகளை அன்னா கரீனினாவிலும் புத்துயிர்ப்பிலும் மிகச் சிறப்பாகச் சித்திரித்திருக்கிறார் டால்ஸ்டாய். ஒரு வாழ்க்கை முறை ஒருவரின் குணத்தை எந்த அளவுக்குத் தூக்கிப் போடுகிறது என்பது நெஹ்லூதவ் மீசை அரும்பிய இளைஞனாய் இருக்கும்போது கத்யூஷாவிடம் ஏற்படும் காதலுக்கும் பிறகு ராணுவப் பயிற்சிக்குப் போய் வந்த பிறகு அவளை அவன் எதிர் கொள்வதற்கும் இருக்கும் வேறுபாடு உணர்த்துகிறது. ராணுவம் அவனுக்குள் இருந்த காதலை காமமாக உருமாற்றி அனுப்பும் ரசாயனத்தை என்னவென்பது? கத்யூஷாவும் வேசையாக மாறி மாஸ்லவாவாக மாறும்போது ஒரு மலர் கருங்கல்லாக மாறிப்போனதை உணர முடிகிறது. எப்படிப் பழகிக் கொள்கிறோமோ அதுதான் வாழ்க்கையாகவும் எப்படி வாழ்கிறோமோ அதுதான் பழக்கமாகவும் மாறிப்போகிற விந்தை அது.
"செம்மணி வளையல்', "வசந்தகால வெள்ளம்' கதைகளும் காதலின் வலியைப் பிரிவின் துயரைச் சொல்லும் வலிமையான கதைகள். இந்தக் கதைகளின் இறுதிப்பக்கங்களை ஏதேச்சையாகப் புரட்டும்போதும் மனம் கனத்துப் போய் கண்ணீர் துளிர்ப்பது அனிச்சை செயல்போலவே ஆகிவிட்டது எனக்கு. தந்தையரும் தனயரும் கதையின் நாயகன் பஸôரவ் பாத்திரத்தைப் படைப்பதற்காக என்னிடமிருந்த அனைத்து வண்ணங்களையும் இழந்துவிட்டேன் என்று துர்கேனிவ் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பது நாவலைப் படித்தோருக்குத் தெரியும். பஸôராவ்வின் மிடுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். நோய் முற்றி இறக்கும் தறுவாயில் கடுமையான ஜுரத்தில் பேசிக் கொண்டிருப்பான் பஸôரவ். அப்போது, ""ஜுரத்தில் நான் உளறுவதுபோல் இருந்தால் தயவு செய்து எனக்கு நினைவூட்டுங்கள். நிறுத்திக் கொள்கிறேன். எனக்கு உளறுவது பிடிக்காது'' என்பான். நாவலைப் படித்து முடிப்பவர் இரண்டு நாளைக்காவது பஸôரவ் போல இருப்பார்கள். அல்லது இருக்க நினைப்பார்கள். தலைமுறை இடைவெளியை மிகச் சிறப்பாக சித்தரித்த நாவல்களில் இதுவும் ஒன்று.
புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் கார்க்கியின் "பிறந்தான் மனிதன்', "வழித்துணைவன்', "கிழவி இùஸரிக்கில்' உள்ளிட்ட பல சிறுகதைகளையும் "தாய்' நாவலையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ், பாஸý அலியவா, மிகைல் ஷோலகவ் போன்றவர்கள் அன்பையும் காதலையும் போராட்ட வாழ்வையும் சொன்ன மிக முக்கியமான எழுத்தாளர்கள். வஷிலி வஷிலியேவிச் எழுதிய "அதிகாலை அமைதியில்', ஓஸ்திரோவிஸ்கியின் "வீரம் விளைந்தது', மற்றும் "உண்மை மனிதன் கதை', "போர் இல்லாத இருபது நாட்கள்' போன்ற பல நாவல்கள் புரட்சிக்குப் பிந்தைய அல்லது நாஜி படையெடுப்பு காலத்தை ரத்தமும் சதையுமாகக் கண் முன் காட்டுபவை.
அதிலும் அதிகாலை அமைதியில் நாவலில் ஆறு பெண்கள் ஒரு நாஜி ராணுவப் பிரிவை எப்படி எதிர் கொண்டு போராடுகிறார்கள் என்பது உள்ளத்தை உலுக்கும். பார்வை இழந்த ஓஸ்திரோவ்ஸ்கியின் முதல் கையெழுத்துப் பிரதி தொலைந்து போன நிலையில் மீண்டும் எழுதப்பட்டது என்ற செய்தி போரின் கொடுமையினும் கொடுமை. விமானவிபத்தில் காலிழந்து பனியில் தவழ்ந்து வந்து மீண்டும் விமான ஓட்டியாக மாறும் உண்மை மனிதனின் கதை மட்டும் என்னவாம்? உலகின் சிறந்த படைப்புகளைச் சேகரிக்கும் முரட்டு முதலாளித்துவ சிந்தனையாளருக்கு இந்தப் பாராவில் உள்ள சிலரைச் சேர்த்துக் கொள்வதில் சங்கடங்கள் இருக்கலாம்.
என்னுடைய அனுபவத்தில் இன்றைய (40 வயதுக்கு மேற்பட்ட) தமிழ் எழுத்தாளர்களில் இந்தப் படைப்புகளைத் தவறவிட்டவர்கள் சொற்பமானவர்களே இருப்பர். காரணம் இந்த அத்தனைப் புத்தகங்களுமே சோவியத் ரஷ்யாவால் மிகக் குறைந்தவிலையில் மிகத் தரமான புத்தக ஆக்கங்களாக அளிக்கப்பட்டவை. இந்தியாவின் பல மொழிகளில் இந்தப் புத்தகங்களை அவர்கள் மொழியாக்கம் செய்திருப்பதன் காரணமாக இந்தியா முழுவதிலுமே 40 வயதைக் கடந்த எழுத்தாளர்களின் ஆதார நூல்களாக இவை இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.
இப்போது அவர்கள் காப்காவையும் கார்ஸியா மார்க்வெஸ்ûஸயும் சார்த்தர், ஆல்பெர் காம்யு, சினுவ ஆச்சிபி, ஓரான் பாமுக் பற்றியும் பேசுபவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லோரும் (வீக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தில் சொல்வதுபோல) இதிலிருந்து வந்தவர்கள்தான். (இல்லை என்பவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்து இந்தக் கூடாரத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.)


படைப்பிலக்கியம் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் ரஷ்ய நூல்களே எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தன. "இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்', "நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்', "மக்கள் தொகைத் தந்துவத்தின் அடிப்படைகள்' போன்ற நூல்கள் பலமான தத்துவ பலத்தையும் விஞ்ஞான அடிப்படையிலான சமூகப் பார்வையும் எனக்குள் ஏற்படுத்தியது.
"மனித இனங்கள்', "நான் ஏன் என் தந்தையைப் போல இருக்கிறேன்', "தேனிக்கள்', யா.பெரல்மானின் "பொழுது போக்கு பெüதீகம்', "பொழுதுபோக்கு வானவியல்', "சார்பியல் தத்துவம்தான் என்ன?' போன்ற விஞ்ஞான நூல்கள் எனக்கு அறிவியல் மீது இருந்த அச்சத்தைப் போக்கி வாழ்வின் சுவாரஸ்யங்களாக்கின. "ஹிஸ்ட்ரி ஆஃப் த ஏன்ஸியன்ட் வேர்ல்ட்', "குடும்பம் தனிச் சொத்து அரசு' போன்ற நூல்களை கண்ணைத் திறந்துவிட்ட நூல்கள் என்று எப்போதும் சொல்வேன்.


குழந்தைகளுக்கான நூல்களும் ரஷ்யா வெளியிட்டதுபோல் வெறெந்த நாடும் அத்தனை குறைந்த விலையில் வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. நிறைய புத்தகங்கள் 50 காசிலிருந்து ஒரு ரூபாய்க்குள். டால்ஸ்டாய் எழுதிய குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் என்ற சிறுநூல் என் மனதில் ஓவியமாகப் பதிந்து கிடக்கிறது. இரண்டு நண்பர்கள், அக்ரூட் கொட்டை திருடிய சிறுவன், காளான் பொறுக்கும் சிறுமிகள், சிங்கமும் நாய்க்குட்டியும் போன்றவை வார்த்தைகளும் சித்திரங்களுமாக பதிவாகியுள்ளன. இயற்கை விஞ்ஞானிகளின் கதைகள் நூலில் காகங்களுக்கு மூன்றுக்கு மேல் எண்ணத் தெரியுமா? போன்ற சுவாரஸ்யமான சந்தேகங்கள், எலியை வளர்த்த பூனைகள் போன்ற இயற்கை ஆய்வுகள் மறக்கவும் கூடுமோ? சிறுவயதில் "அப்பா சிறுவனாக இருந்தபோது' நூலைப் படிக்கக் கொடுத்து வைக்காதவர்கள் தங்கள் மகிழ்ச்சியின் ஒரு பகுதியை இழந்தவர்கள்தான்.
இப்போது இதில் பல புத்தகங்கள் என்னிடம் கைவசம் இல்லை. பல நூல்கள் படித்து பல ஆண்டுகள் ஆனவை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுத உட்கார்ந்ததும் அத்தனையும் அந்த நூல்களை வாங்கிய தருணத்திலிருந்து அவற்றை தாகத்தோடு படித்த காலங்கள் வரை கண்முன் வந்துவிட்டுப் போகின்றன. நூலாசிரியரின் பெயரோ, கதாபாத்திரங்களின் பெயரோ, நூலின் பெயரோ சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. அப்படிச் செய்வது என்னை வளர்த்த அந்த நூல்களுக்கு செய்யும் அவமானம் என்று தோன்றியது. இது உணர்ச்சிவசப்பட்ட (உணர்ச்சியை வசப்படுத்த முடியாத?) நிலையில் சொல்லப்படுவதாக நினைக்கவும் வேண்டியதில்லை.
சோவியத் ரஷ்யர்கள் அமெரிக்காவுடன் போட்டியிட்டு அவர்களுக்குச் சவாலாக வானிலிலும் செயற்கை கோள் சாதனைகளிலும் ராணுவக் கருவிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றிலும் கல்வியுலும் மின்மயமாக்கல் விஷயத்திலும் அணுக்கரு உலை, ஆகாய விமானம் போன்ற இதர தொழில்நுட்பங்களிலும் அளப்பறிய சாதனை புரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சாதனையில் எல்லாம் பெரிய சாதனையாக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உலகமெங்கும் இருந்த எத்தனையோ பேரை மனிதர்களாக்குவதற்கு அவை உதவியிருக்கின்றன.... உதவிக் கொண்டிருக்கின்றன.

ஜெயந்தி

தமிழ்மகன்


மாமியார் மருமகள் சண்டை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இந்த உலகில்
உண்டு. ஆனால் வைஜெயந்தி என்ற பெயரால் ஒரு பிரளயம் ஏற்பட வாய்ப்புண்டா?
சண்முகம் வீட்டில் ஏற்பட்டது.
சண்முகத்தின் தங்கை பெயர் வைஜெயந்தி. டெலிபோன் இன்டெக்ஸ் புத்தகத்தில்
அவள் பெயரை "வி' என்ற ஆங்கில எழுத்துக் குறிக்கும் இடத்தில் குறித்து
வைப்பது நியாயந்தானே? நாத்தனாரின் பெயரை அங்குதான் எழுதி வைத்திருந்தாள்
அர்ச்சனா. சண்முகத்தின் அம்மாவுக்கு அந்த தர்க்க நியாயங்கள் புரியவில்லை.
"ஏண்டி அம்மா உன் அண்ணன் பெயரையெல்லாம் முதல் பக்கத்தில எழுதிட்டு என்
பொண்ணு பேரை கடைசி பக்கத்தில எழுதியிருக்கே'' என்று ஆரம்பித்தார்.
அர்ச்சனாவுக்குகூட இந்தக் கேள்வி கேட்கப்பட்ட ஆரம்ப நிமிடத்தில், ஏதோ
தவறாக அப்படி எழுதிவிட்டோமோ என்ற அச்சம்தான் முதலில் ஏற்பட்டது.
வள்ளியம்மாவின் குரல் தீட்சண்யம் அப்படி. கொஞ்ச நேரம் கழித்துத்தான்
அண்ணனின் பெயர் "அன்பு' என்பதே உறைத்தது.
அர்ச்சனாவுக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது. இந்த இரண்டின் கலவை
ஒருவித அலட்சியப் போக்கை அவளிடம் ஏற்படுத்தியது. பதில் சொல்ல விருப்பமே
இல்லாமல் முந்தானையை மட்டும் ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக் கொண்டு
இரண்டு மாதங்களுக்கு முந்தைய வார இதழை எடுத்து வைத்து வாசிக்க
ஆரம்பித்தாள்.
இதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று விவரிக்க வேண்டியதில்லை. இந்திரா
காந்தி} மேனகா காந்தி ஜோடியிலிருந்து இசக்கியம்மா- காந்திமதி ஜோடி
வரைக்கும் இது சற்றேறக் குறைய மனஸ்தாபமாகவோ, வார்த்தை வெடிப்புகளாகவோ
ரசாயன மாற்றமடையும். இங்கே வார்த்தை வெடிப்பு.
இந்தச் சச்சரவுகளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத } அந்த நேரத்தில்
அவனுடைய மேலாளரிடம் ஏதோ அவசர ஆவணத்தைக் கண்டெடுத்துக் கொடுக்க முடியாத
பரிதவிப்பில் ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டிருந்த சண்முகம், இவர்களின்
பேச்சில் சிக்கி மேலும் வதைபட்டுக் கொண்டிருந்தான்.
ஒன்றுமில்லை "வரட்டும் அவன்'' என்று வள்ளியம்மா பெருமூச்சோடு
ஆவேசப்பட்டார். அவருடைய முந்தானையை அவரும் உதறினார், சொருகினார்.
"வந்தா என்ன பண்ணிடுவாராம்?''
"வாலை ஒட்ட வெட்டச் சொல்றேன்.. இரு... இரு.''
"எங்க குடும்பத்தில யாருக்கும் வாலெல்லாம் இல்ல.. எத்தனையோ லட்சம்
வருஷமா நாங்க வால் இல்லாமத்தான் இருக்கோம். உங்க குடும்பத்தைப் பத்தி
எனக்குத் தெரியாது'' என்று பரிணாம இலக்கணப்படி அர்ச்சனா ஏதோ சொன்னாள்.
பதிலுக்குத் திட்டுகிறாள் என்று உத்தேசமாகப் புரிந்து கொண்டு
வள்ளியம்மாவும் "லட்சம் வருஷமா வாலில்லாதவளோட லட்சணம் தெரியாது? நாங்க
கோடி வருஷமா வாலில்லாமத்தான் இருக்கோம்'' என பதிலடி கொடுத்தாள்.
கோடி ஆண்டுகளுக்கு முன்னால் குரங்குகளே கிடையாது என்பது தெரிந்ததால்
அர்ச்சனாவால் மேற்கொண்டு தம் மாமியாரிடம் பேசி ஜெயிக்க முடியாது என்ற
முடிவுக்கு வந்தாள்.
அவளுக்கு பழைய வார இதழே பரவாயில்லை என்று படிக்க ஆரம்பித்தாள்.
தட்டில் மத்தியானம் சாப்பாட்டைப் போட்டு வைத்த போதும் வள்ளியம்மா
சாப்பிடவல்லை. அர்ச்சனா அதைப்பற்றிக் கவலைப்படாமல் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தாள். வள்ளியம்மா மகன் வருகிற வரைக்கும் சாப்பிடாமல் இருக்க
வேண்டும் என்ற வைராக்கியத்தோடு ஈ மொய்க்கும் தட்டுக்குப் பக்கத்திலேயே
சுருண்டு படுத்துக் கொண்டாள்.
அன்று பார்த்து சண்முகம் மிகவும் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான்.
அம்மா இப்படி தன் கோபம் பொருட்டு சுருண்டு படுத்திருக்காங்களா? எப்போதும்
போல் ஏழு மணிக்கெல்லாம் தூங்கிவிட்டாங்களா என்று சந்தேகிக்க அவனுக்கு
அவகாசம் இல்லை. விட்டால் நின்று கொண்டே தூங்கிவிடும் அளவுக்கு சோர்வு.
சண்முகத்துக்கு சாப்பாடு போட்டபடி, "கோடி வருஷமா எங்க குடும்பத்தில
வாலில்லாம இருக்கோம்கிறாங்களே எனக்குத் தெரிஞ்சு வாலில்லாத டைனோஸôர்
கேள்விபட்டதே இல்ல'' என பேச்சைத் தொடங்கினாள் அர்ச்சனா. இப்படி மொட்டை
ராஜா குட்டையில் விழுந்தான் கதையாக ஆரம்பிப்பது அர்ச்சனாவின் வழக்கம்.
அதிலும் மாமியாரைப் பற்றி இப்படி ஜாடையாக ஆரம்பிக்கும் ஒரு
வழக்கம்மட்டும்தான் உண்டு.
சண்முகம் திடுக்கிட்டு சுருண்டு கிடந்த அம்மாவையும் அவருக்குப்
பக்கத்தில் உலர்ந்து ஈ மொய்த்துக் கிடந்த சாப்பாட்டுத் தட்டையும்
பார்த்தான்.
"என்னது டைனோஸôர்?''
"உங்கம்மாதான் சொன்னாங்க. உங்க குடும்பத்தில கோடி வருஷமா வால்
கிடையாதுன்னு. ஏதாவது அர்த்தமிருக்கா பாருங்க.. இப்படித்தான் பேசறாங்க''
"புரியற மாதிரிதான் சொல்லேன்?''
"நீங்க வந்ததும் என் வாலை ஒட்ட நறுக்கறேன்னு சொன்னாங்க. மனுஷனுக்கு ஏது
வாலு? மனுஷனுக்கு குறைஞ்சது லட்சம் வருஷமா வால் கிடையாது... அதாவது
வாலில்லாம போனதாலதான் அவன் மனுஷன்...''
"இன்னும்கூட எனக்குப் புரியல. என்ன பிரச்சினை?''
""எனக்குந்தான் புரியல''
சண்முகத்தின் அம்மா படுத்திருந்த இடத்தில் இருந்து குபுக் என்று
ஒருவிம்மலும் மூக்குறிஞ்சலும் கேட்டது.
"அம்மா நீயாவது சொல்லேன்...''
"நான் என்னடாப்பா சொல்றது? என்னை எங்கயாவது ஆசரமத்தில சேர்த்துடு..''
சொல்லி முடிப்பதற்குள் குபுக் என்று இன்னொரு டம்ளர் கண்ணீர் பொங்கி
முந்தானைக்குப் போனது.
"இதெல்லாம் என்னங்க?'' என்றாள் அர்ச்சனா.
"யாராவது சொன்னாத்தானே பிரச்சினை என்னன்னு தெரியும்?''
"உலகமே புரியாதவங்களா இருக்காங்க. அதுதான் பிரச்சினை'' என்பதை
ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, ""நான் பாம்பேல வளர்ந்தவ. எனக்கு மாமியார்
முன்னாடி கால் மேல கால் போட்டு உட்கார கூடாதுனு தெரியாது. அதுக்கு என்ன
பிரச்சினை பண்ணாங்கன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அதுமாதிரிதான்
இதுவும். ஸில்லி'' என்றாள்.
"இன்னைக்கு என்ன நடந்தது?''
"ஏபிசிடி'ல "வி' எத்தனாவது எழுத்து?''
உண்மையிலேயே சண்டையின் ரிஷிமூலம் தெரிந்து கொள்வதில் ஒரு கணம் தீவிர
ஆர்வப்பட்டான் சண்முகம். சண்டை ஒரு சுவாரஸ்யமான புதிராக இருப்பதும்
இயல்பானதாக இருப்பதும் அவனை சோர்விலிருந்து விடுவித்தது. ஆனால் இத்தகைய
தருணத்தில் சீரியஸôக இருக்க வேண்டும் போல் முகத்தை வைத்துக் கொண்டான்.
அந்த ஆர்வத்தினால் மனதுக்குள்ளேயே கூட்டி "22-வது எழுத்து'' என்றான்.
ஏதோ அந்த இருபத்து ரெண்டோட இன்னொரு இருபத்து ரெண்டைக் கூட்டி இரண்டால்
வகுக்கவும் என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தான். அவளோ அந்த விடையை
விட்டுவிட்டு "உங்கம்மா "வி' தான் இங்கிலீஸ் எழுத்துல முதல்ல
வரணுங்கிறாங்க''
அம்மாவுக்கு அப்படியொரு மொழி ஆர்வம் இருக்க வாய்ப்பே இல்லை என்று
அவனுக்குத் தெரியும். அப்படி அம்மா ஆசைப்பட்டால் அதற்காக அர்ச்சனாவும்
மல்லுக்கு நின்று அதற்குத் தடையாகவும் இருக்க மாட்டாள் என்பதும்
சண்முகத்துக்குத் தெரியும்.
அம்மாவிடமும் நியாயம் கேட்கிற தொனியில் ""வி'தான் முதல்ல வரணும்னு
சொன்னியாமா?'' என்றான் நம்பிக்கையே இல்லாமல்.
"இல்லாததும் பொல்லாததும் சொல்றாப்பா.. நான் அதெல்லாம் சொல்லவே இல்ல''
"வைஜெயந்தினா ஆல்பபெட் பிரகாரம் கடைசியிலதான வரும். ஏன் முதல்ல வரலைனு
கேட்கிறாங்க''
"ஏன் அர்ச்சனா இதெல்லாமா பிரச்சினை? அவங்க ஏதோ தெரியாம சொல்றாங்க.''
"அதுக்குப் பொண்ணு பொறந்தப்பவே அனுசுயா, அன்பரசினு வெச்சிருக்கணும்.''
மாமியார் பக்கம் திரும்பி ""ஏன் வையெந்தினு வெச்சீங்க?'' என்றாள்.
வள்ளியம்மாவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. காலையில் என்ன நடந்தது
என்பதைத்தான் சொல்கிறாளா வேறெதாவது புதிதாகக் கதைகட்டுகிறாளா என்று
குழம்பிப் போனார். "என் பொண்ணுக்கு என்ன பேர் வைக்கணும்னுலாம் நீயொன்னும்
சொல்ல வேண்டியதில்லை'' என்றார் வெடுக்கென்று.
பிரச்சினை வேறொன்றாக மாறுவதற்குள் சண்முகம் சுதாரிக்க வேண்டியிருந்தது.
அகரவரிசைப்படி ஒரு பெயர் எந்தெந்த இடத்தில் இடம் பெறுகிறது என்பதைப்
பற்றி அம்மாவிடம் விளக்கிக் கூற ஆரம்பித்து, பாதியில் ஏற்பட்ட
அயர்ச்சியால் "இனிமேல் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சண்டை போடாதே
அர்ச்சனா'' என்று முடித்துவிட்டான்.
"என்கிட்ட ஏன் சொல்றீங்க? உங்க அம்மாகிட்ட சொல்லுங்க... உலகத்தில என்ன
நடக்குதுனு தெரியாம பேசறாங்க. எனக்கு அது எரிச்சலா இருக்கு. அதுதான்
பிரச்சினை''
"அதுதான் பிரச்சினைனு தெரியுதில்ல? அப்புறம் அதை சமாளிக்கிறதில என்ன கஷ்டம்?''
"அவருக்கு முன்னாடியே போய் சேர்ந்திருக்கணும். வேண்டாம்பா என்னை யாரும்
சமாளிக்க வேணாம்... நான் என் பொண்ணு வீட்லயே போய் இருந்துகிறேன்''
"அம்மா.. உன்னை சமாளிக்கிறதைபத்திச் சொல்ல. பிரச்சினையை சமாளிக்கிறதபத்தி.''
"ரெண்டும் ஒண்ணுதாம்பா'' என்று தம் சிறிய துணி மூட்டையை கையில்
எடுத்துக் கொண்டார். அர்ச்சனாவுக்கு ஏன் எரிச்சல் வருகிறது என்று
சண்முகத்துக்கு நன்றாகப் புரிந்தது.
"காலைல பேசலாம் படும்மா''
இரண்டு பேரின் கண்களிலும் சண்முகம் யார் பக்கம் என்பதைத் தெரிந்து
கொள்கிற தவிப்பு இருந்தது. ஜெயிக்கப் போவது யாரு என்று உரசிப் பார்க்கிற
உத்தி. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் சண்டையை ஆரம்பிக்கிறார்களா
என்பதும் பல்லாயிரம் ஆண்டு கேள்வி.
இந்தப் பிரச்சினையை எந்த இடத்தில் இருந்து களைவது... மொட்டை மாடியில்
சிகரெட் கொளுத்தி நடந்தான். சென்ற தலைமுறையாக இருந்தால் "அடிச்
செருப்பாலே நாயே'' என்று இடுப்பில் நாலு உதை உதைத்து பொண்டாட்டியை ஒரு
மூலையில் உட்கார வைத்திருப்பார்கள். இப்போது மனைவியின் கன்னத்தில்
அறைந்தால் ஓராண்டு சிறை. அம்மாவின் கடைசி காலம் நிம்மதியாக இருக்க
வேண்டும் என்று மகன் எதிர்பார்ப்பது நியாயமும் கடமையாகவும் இருக்கிறது.
ஆனால் அம்மாவின் நிம்மதி எந்தக் கிளி வயிற்றுக்குள் ஒளிந்திருக்கிறதோ?
அர்ச்சனா மாடிக்கு வந்து, "நல்லா தூங்கறாங்க. குறட்டை வேற'' என்றாள்.
"எப்படியாவது பிரச்சினையில்லாம பார்த்துக்கக் கூடாதா?''
".....''
"உலகம் புரியணும்னு சொல்றியே... அது என்ன? பிகார்ல இருக்கிற ராம்நாத்
யாதவ்ங்கிறவனோட கொலை வழக்கப்பத்தி தெரிஞ்சுக்கிறதா? இல்ல கலிபோர்னியாவில
இருக்கிற ராபர்ட்டோட கள்ளக்கடத்தல் விவகாரத்தைப் பத்தித்
தெரிஞ்சுக்கிறதா? இதோ இந்த நேரத்தில உலகத்தில ஏதோ ஒரு மூலையில நடந்த
ரயில் விபத்தில இறந்து போன ஐந்து வயசு சிறுமிக்காக வருத்தப்பட்றதா?...
சொல்லு அர்ச்சனா? இது எதுவுமே நம்ம உலகத்தில இல்ல. நம் உலகத்தில சோமாலியா
பஞ்சம் இல்ல... ஜப்பான் பூகம்பம் இல்ல... உலகம்னு நாம
சொல்லிக்கிட்டிருக்கிற "நம்ம உலக'த்தில இப்ப 600 கோடி பேரா இருக்காங்க?
மிஞ்சிப்போனா சில பத்து பேர்கள்... அல்லது சில நூறு பேர்கள்.''
அர்ச்சனா கையை மேலே உயர்த்தி உடலை முறித்துச் நக்கலாகச் சிரித்தாள்.
"இதுக்குப் போயா இவ்வளவு தீவிர சிந்தனை... வந்து படுங்க. பொம்பளைங்க
அப்படித்தான். அதிலயும் மாமியார் மருமகன்னா இப்படி ஏதாவது
இருந்துகிட்டுத்தான் இருக்கும். இதில ஆம்பளைங்க யார் பக்கமும் நிற்காம
இருந்தாலே பாதி பிரச்சினை சரியாகிடும்.''
சிகரெட்டைப் பிடுங்கி தூர எறிந்தாள். "நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள்
பட வேண்டிய சிந்தனையெல்லாம் நமக்கு எதுக்கு? அதுவும் இந்தியாவில இருக்கிற
என்னைப் போன்ற பெண்ணுக்கு எதுக்கு?'' என்றபடி கீழே இறங்கினாள்.
நைட்டியில் மொட்டை மாடியின் நிலவொளியில் அவள் சொல்வது தேவவாக்கு போல இருந்தது.
அவள் சொல்வதை அப்பாவித்தனமாக நம்புகிறவனைப் போல பாவனை செய்து கொண்டு
அவளுக்குப் பின்னால் நடந்தான். தான் அழைக்காமலேயே அவன் தன் பின்னால்
வருவது அவளுக்குப் பூரிப்பாக இருந்தது.
கூடத்தில் அம்மா நிம்மதியாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது
சண்முகத்துக்கு.

tamilmagan2000@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin