செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

வெட்டுப்புலி குறித்து... சுரேஷ் என்பவர் எழுதிய விமர்சனம்... மேலும் படிக்க கீழே சொடுக்கவும்....

தமிழகத்தில் 1930 முதல் இப்போ வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் நடக்குது. பல தருணங்களில் உண்மை சம்பவங்களுக்கு நடுவில் கதை நடப்பது, சுவாரஸ்யமானது. எனக்கு புடிச்சிருந்த்து. என்னுடைய கதைகளும் அந்த மாதிரி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைவதால், எனது கருத்துக்கு ஒத்து வந்த மாதிரி இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சி முதல் கொள்ளைக்காரன் ஆட்சி வரை கதை சொல்லப்படுகிறது. நடுவில் அரசியல், சாதி, சாமி, மருத்துவம், சினிமா, மேல்படிப்பு, இந்திய பிரிவினை, காந்தியின் தொடக்கமும் கொலையும், சுதந்திர இந்தியாவின் தலைவர்களும், நேரு குடும்பமும், இந்திராவின் கொலையும், சஞ்சய் காந்தியின் குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையும், அவரது விசித்திரமான மரணமும், ராஜிவ்காந்தி மரணமும், அண்ணா பெரியாரும், எம்.ஜி.ஆர். கருணாநிதியும், கூடவே ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆர். சிவாஜியும், எம்.ஜி.ஆர். ரஜினியும், ரஜினி கமலும், ஸ்டாலின் அரசியலும், ஸ்டாலின் பெண் கடத்தலும், வைகோ மதிமுகவும் என எல்லாமே வரும்.

படிச்சு முடிச்ச போது ஏதோ வரலாறு புத்தகம் படிச்சு முடிச்ச மாதிரி இருந்திச்சு.

கதைக்கு நடுவில் வந்து இவ்வளவையும் அவங்க கதையோட சேத்து சொல்லறாங்க, இந்த கதையின் நாயக, நாயகியர். நாப்பது அம்பது வருடங்களாக ரெண்டு குடும்ப கிளைகளில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

ஒருத்தர் ஒரு ராத்திரிலே ஒரு சிறுத்தையை தனியா கொன்னுடுறார். அது பெரிய விஷயம். அதுக்காக ஒரு புதிய தீப்பட்டி கம்பெனி, அதை அவங்க கம்பெனி அடையாளமா உபயோகம் பண்ணிகுறாங்க. அதுதான் வெட்டுப்புலியின் துவக்கம்.





வெட்டுப்புலி – தமிழக வரலாறு ஒரு நாவலாய்

புது எழுத்துக்கு விருது

தஞ்சை தமிழ் பல்கலை கழகம் சிறந்த சிற்றிதழுக்காக வழங்கும் விருது ” புது எழுத்து” சிற்றிதழுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ 150000 /லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு. இதை தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து மனோன்மணி தனிப்பட்ட முயற்சியால் நடத்தி வருகிறார். மொழியாக்கங்கள் இலக்கிய விவாதங்களை அதிகமாக வெளியிடுகிறது புது எழுத்து.
நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு புது எழுத்து வெளியிட்ட சிறப்பு வெளியீடு மகத்தானது. முன் சொல்லப்பட்ட சாவின் சரித்திரம் என்ற மார்க்வெஸ்ஸின் குறுநாவலொன்று அசதாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. மிக அற்புதமான மொழி பெயர்ப்பு.

மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர் மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துகள்

LinkWithin

Blog Widget by LinkWithin