செவ்வாய், பிப்ரவரி 22, 2011

புது எழுத்துக்கு விருது

தஞ்சை தமிழ் பல்கலை கழகம் சிறந்த சிற்றிதழுக்காக வழங்கும் விருது ” புது எழுத்து” சிற்றிதழுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ 150000 /லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு. இதை தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இருந்து மனோன்மணி தனிப்பட்ட முயற்சியால் நடத்தி வருகிறார். மொழியாக்கங்கள் இலக்கிய விவாதங்களை அதிகமாக வெளியிடுகிறது புது எழுத்து.
நோபல் பரிசு பெற்ற லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸுக்கு புது எழுத்து வெளியிட்ட சிறப்பு வெளியீடு மகத்தானது. முன் சொல்லப்பட்ட சாவின் சரித்திரம் என்ற மார்க்வெஸ்ஸின் குறுநாவலொன்று அசதாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருந்தது. மிக அற்புதமான மொழி பெயர்ப்பு.

மனோன்மணி தர்மபுரி மாவட்டத்தின் வரலாற்றாய்வில் ஈடுபாடு கொண்டவர் மனோன்மணிக்கும் புதுஎழுத்துக்கும் வாழ்த்துகள்

LinkWithin

Blog Widget by LinkWithin