வெள்ளி, பிப்ரவரி 27, 2009

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:

சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை:
எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு

தினமணியில் செய்தி 27.02.09

சென்னை, பிப். 26: மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைவாக நடத்தப்பட்ட "அறிவியல் புனைகதை-2009' போட்டியில், எழுத்தாளர் தமிழ்மகனுக்கு முதல் பரிசு (ரூ.20 ஆயிரம்) கிடைத்துள்ளது.
2008-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா நினைவாக அவரது குடும்பத்தினரும், ஆழி பதிப்பகமும் இணைந்து இப்போட்டியை நடத்தின.
இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் இரா.முருகன், ஊடகவியலாளர் சந்திரன், எழுத்தாளர் அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திவாகர் ஆகியோர் பரிசுக்குரிய கதைகளை தேர்வு செய்தனர்.
அதன்படி, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய "கிளாமிடான்' சிறுகதை முதல் பரிசு பெற்றது.
தி.தா.நாராயணன் இரண்டாவது பரிசு பெறுகிறார். நளினி சாஸ்திரி, ஆர்.எம்.நெüஷத் (இலங்கை), வ.ந.கிரிதரன் (கனடா), கே.பாலமுருகன் (மலேசியா) ஆகியோர் சிறப்பு ஆறுதல் பரிசு பெறுகின்றனர்.
பரிசளிப்பு விழா மார்ச் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதுநிலை உதவி ஆசிரியர்
முதல் பரிசு பெற்றுள்ள தமிழ்மகன் (43), தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது இயற்பெயர் பா.வெங்கடேசன். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், மாக்சிம், அஞ்சலி ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மகன், க.பாலகிருஷ்ணன்-பார்வதி தம்பதியின் மகன் ஆவார்.

LinkWithin

Blog Widget by LinkWithin