சனி, டிசம்பர் 01, 2007

இம்போர்ட்டட் சரக்கு!: 13,14

ஜெயித்தது எப்படி?

விக்டருக்கு அது முதல் வழக்கு. எப்படியும் ஜெயித்து விட வேண்டும் என்று தீவிரமாக வாதாடினான். ஆனால் சாட்சியங்கள் சரியாக இல்லை. எப்படியும் தீர்ப்பு தம் கட்சிக்காரருக்குச் சாதகமாக இருக்காது என்று தெரிந்து விட்டது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். தம் கட்சிக்காரரை அழைத்து ""நான் நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டேன்'' என்றான் விக்டர்.

""அடப்பாவி... அவர் மிகவும் நேர்மையான நீதிபதி. வேறு வினையே வேண்டாம்'' என்று பதறினான் அந்த பிசினஸ்மேன். விக்டரோ லஞ்சம் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இரண்டாம் நாள் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. பிசினஸ்மேன் விடுதலை ஆனான். பிசினஸ்மேன் ""எப்படி?'' என்றான்.

""நான் வெகுமதி அனுப்பி வைத்தது உண்மைதான். ஆனால் அத்துடன் எதிர்க்கட்சி வக்கீலின் விசிட்டிங் கார்டை அல்லவா இணைத்து அனுப்பினேன்?'' தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னான் விக்டர்.

இம்போர்ட்டட் சரக்கு!: மனம் எனும் பூதம்!




மார்ட்டின் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நடுக்கடலில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சுறாமீன் அவனது படகை முட்டித் தள்ளியது. படகு 10 அடி உயரத்துக்குப் பறந்தது. கீழே விழுந்து கொண்டிருந்தபோது ""கடவுளே காப்பாற்று'' என்றான் அனிச்சையாய். உடனே அவன் அந்தரத்தில் அப்படியே உறைந்தபடி இருந்தான். கடவுள் அவன் முன் தோன்றினார். ""உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்தது மாதிரி சுறாமீனுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டால் அது தன்னைக் கொல்லாதென்று நினைத்தான் மார்ட்டின். ""சுறாவுக்கும் கடவுள் நம்பிக்கை தா'' என்றான்.

""சரி'' என்றார் கடவுள்.

அடுத்த வினாடி சுறா, ""கடவுளே எனக்கு இரை தந்ததற்கு நன்றி'' என்றது. மார்ட்டின் சுறாவின் வயிற்றுக்குள் சென்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 11,12

ஹாலிவுட் நடிகை

ஒரு புதிய ஹாலிவுட் நடிகை ஒரு சீன சிறுவனை வீட்டு வேலைக்காரனாக நியமித்தாள். அவனிடம் அவன் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லும்போது கூறினாள். ""நீ என் அறைக்குள் வருவதற்கு முன் எப்போதும் அறை கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும். ஏனெனில் சில நேரங்களில் நான் உடை அணிந்துகொண்டிருக்கலாம்.''

சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளது அறைக்கதவை திறந்தான். அப்போது அந்த நடிகை அவனிடம் கேட்டாள்:

""கதவை முதலில் தட்டிவிட்டு வரவேண்டும் என்று சொன்னேனா இல்லையா? திடீரென நுழைந்துவிட்டாய். நான் ஆடை அணிந்துகொண்டிருந்தால் என்னாவது?''

""ஆடை அணிகிறீர்களா? இல்லையா? என சாவித்துவாரத்தின் வழியாக பார்த்துவிட்டுத்தானே வருகிறேன்'' என்றான் அவன்.

இம்போர்ட்டட் சரக்கு :நடக்கும் நாய்

ஜோசப் அந்த அதிசய நாயைக் கண்டு வியந்து போனான். தண்ணீர் மீது சர்வசாதாரணமாகத் தாவி ஓடுவதைக் கண்டான். தண்ணீரின் மீது நடக்கும் நாய் என்றால் ஆச்சர்யம்தானே? உடனே அதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து, தன் நண்பர்களுக்கும் காட்ட விரும்பினான்.

தண்ணீரின் மீது ஓடி, நீர்வாத்துகளை அது பிடித்து வந்து கரையில் போடுவதை நண்பனுக்குக் காட்டினான்.

நண்பன் எந்தவித வியப்பையும் காட்டாமல் இருப்பதைப் பார்த்து, ""இது உனக்கு ஆச்சர்யமாக இல்லையா?'' என்றான்.

""ஆமாம். இதிலென்ன ஆச்சர்யம்? உன் நாய்க்கு நீச்சலே தெரியவில்லை. சும்மா சும்மா நீரின் மீது ஓடிக் கொண்டிருக்கிறது'' என்றான்.

இம்போர்ட்டட் சரக்கு: 9,10

வேலை நேரம்!

ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''

இம்போர்ட்டட் சரக்கு!: மனைவி அமைவதெல்லாம்


மனைவியோடு தேம்ஸ் நதியின் ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான் தாமஸ். திடீரென்று கால் இடறி ஆற்றில் விழுந்துவிட்டாள் அவனுடைய மனைவி. கடவுளிடம் வேண்டினான் தாமஸ். அவனுடைய வேண்டுதலைக் கேட்டு கடவுள் அவன் முன் தோன்றினார்.

அவனைச் சோதிக்கும் விதமாக நடிகை ஜெனிபர் லோபஸ்ûஸ அவன் முன் நிறுத்தி ""இவள்தானே உன் மனைவி?'' என்றார்.

தாமஸ் ஒரு கணம் திகைத்தாலும் அடுத்த கணமே ""ஆமாம்'' என்று சொன்னான்.

கடவுளுக்கு ஆத்திரம் தாளவில்லை. ""இப்படிப் பொய் சொல்கிறாயே? இவளா உன் மனைவி?'' என்றார்.

""இவள் என் மனைவி இல்லைதான். அப்படி நான் மறுத்தால் அடுத்து நீங்கள் மடோனாவைக் கொண்டு வருவீர்கள். அவரையும் மறுத்தால் அதைத் தொடர்ந்து என் மனைவியைக் கொண்டு வருவீர்கள். என் நேர்மையைப் பாராட்டி மூவரையும் எனக்கு வழங்குவீர்கள். அதற்கு பயந்துதான். ஏதோ ஒன்றோடு போகட்டும் என்று ஜெனிபரையை ஓ.கே. சொல்லிவிட்டேன்'' என்றான் தாமஸ்

இம்போர்ட்டட் சரக்கு: 8,9

வேலை நேரம்!
ஜானுக்கு சாலையின் நடுவே வெள்ளைப் பெயிண்ட் அடிக்கும் வேலை கிடைத்தது. முதல் நாள் ஆறு மைல் தூரம் வெள்ளைக் கோடு போட்டார். இரண்டாவது நாள் மூன்று மைல் தூரம் கோடு போட்டார். அடுத்த நாள் ஒரு மைல் தூரம்தான் போட முடிந்தது. சூப்ரவைஸர் கூப்பிட்டுக் கேட்டார்.

""ஏன் இப்படிக் குறைந்து கொண்டே போகிறது?''

""எப்போதும்போல் வேகமாகத்தான் அடிக்கிறேன். பெயிண்ட் கேன், முதல்நாள் அடிச்ச இடத்திலே இருந்தால் திரும்பத் திரும்ப தொட்டுக்கிட்டுத்தான வரணும்?''


எத்தனைக் காகங்கள்?

ஒருநாள் மாலை அக்பர், பீர்பால் மற்றும் அமைச்சரவைச் சகாக்கள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது வானில் ஏராளமான காகங்கள் பறந்தன.

அக்பருக்கு திடீரென ஒரு சந்தேகம். ""நம் ராஜ்ஜியத்தில் எத்தனைக் காகங்கள் இருக்கும் என்று இங்கு யாராவது சரியாகச் சொல்ல முடியுமா?'' என்று கேட்டார்.

சட்டெனச் சொன்னார் பீர்பால்.

""18 ஆயிரத்து முன்னூற்று அறுபத்து மூன்று''

பீர்பால் இப்படிக் குருட்டாம் போக்கில் பதில் சொல்வது அக்பருக்குப் பிடிக்கவில்லை.

""ஒருவேளை அதிகமாக இருந்தால்?''

""நமது ராஜ்ஜியத்துக்குப் புதிதாக வந்த விருந்தினராக இருக்கும்''

பீர்பாலின் சமாளிப்பு புரிந்தது.

""சரி.. ஒரு வேளை குறைவாக இருந்தால்?''

""உங்கள் புகழ் பரப்ப பக்கத்து ராஜ்ஜியத்துக்குச் சென்றிருக்கும்''

பீர்பாலின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினார் அக்பர்.

இம்போர்ட்டட் சரக்கு: 6,7

செவிச் "செல்வம்'

அவர் பெரிய செல்வந்தர். நெடுங்காலமாகக் காது கேட்காமல் அவதிபட்டு வந்தார். காது மிஷின் மாட்டிக் கொள்வதில் சின்ன தயக்கம் இருந்ததே அதற்குக் காரணம்.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லை என டாக்டரை அணுகினார். அவரும் வெளியே யாருக்கும் தெரியாதபடியான மிகச் சிறிய காது மிஷின் வந்திருப்பதைத் தெரிவித்து அதையே பொருத்தினார்.

ஒரு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் செல்வந்தர். ""இந்தக் காது எந்திரம் மிகப் பிரமாதமாக வேலை செய்கிறது. வாழ்த்துகள்'' என்றார்.

உங்கள் வீட்டில் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்களே?'' என்றார் டாக்டர்.

செல்வந்தர் வெறுப்பாகப் பதில் சொன்னார்: ""இதுவரை வீட்டில் எனக்குக் காது கேட்கிற விஷயத்தைச் சொல்லவில்லை. இந்த ஒரு மாதத்திலேயே மூன்று முறை உயிலை மாற்றி எழுதும்படி ஆகிவிட்டது.''


இம்போர்ட்டட் சரக்கு: மகிழ்ச்சியின் நிறம் எது?

அந்த சர்ச் களை கட்டியிருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடு. மணமகளும் மணமகனும் திருமண ஆடையில் மகிழ்ந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்திருந்த பீட்டர் தன் அம்மாவிடம் கேட்டான்:

மணமகள் எதற்கு வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்?

சற்றே யோசித்த அம்மா, ""மகிழ்ச்சியின் நிறம் வெண்மை. இது அவளுடைய மகிழ்ச்சியான நாள். அதனால் வெள்ளை உடை அணிந்திருக்கிறாள்'' என்றார்.

பீட்டர் கொஞ்ச நேரம் மணமகளைக் குழப்பமாகப் பார்த்துவிட்டு மீண்டும் கேட்டான்:

""அப்படியானால் மணமகன் கருப்பு கோட் அணிந்திருக்கிறாரே அது?''

LinkWithin

Blog Widget by LinkWithin