செவ்வாய், டிசம்பர் 21, 2010

சொர்க்கத்தின் பாதை





என் கதைகளை ஆர்வத்துடன் மலையாளத்தில் மொழிபெயர்த்தவர் சைலஜா ரவீந்திரன். இவர் விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மாதவன் நாயரின் தங்கை மகள். பழகுவதிலும் அன்பு செலுத்துவதிலும் அத்தனை இனிமை. தமிழ்ச் சங்கத்தினர் அறை ஏற்பாடு செய்வதில் சற்றே காலம் தாழ்த்தியதை அறிந்ததும் தனது வீட்டுக்கே வந்து தங்கும்படியும் அல்லது தானே ஹோட்டலில் அறை எடுத்துத்தருவதாகவும் பேச ஆரம்பித்துவிட்டார்.
புத்தகத் தயாரிப்பு அவருக்குப் பிடித்திருந்தது. எழுத்தாளர் மாநாடு என்று அறிவித்திருந்தும் 100 பேர்தான் அரங்கத்தில் இருந்தனர். நான் பேசும்போது, தில்லி தமிழ்ச் சங்கத்தினர் போல இவர்களும் குடும்ப விழாவாக செயல்படுத்தி குழந்தைகள், மனைவயரோடு விழா எடுத்தால் கலகலப்பாக இருக்கும் என்றேன்.
பேசிவிட்டு இறங்கி வந்ததும் நீல.பத்மநாபன், சங்கத்தின் வேறு செயல்பாடுகளை வாழ்த்திப் பேசியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டார்.
சங்க நிர்வாகி வானமாமலை சங்க விழாவுக்கு 50 பேர் கூடினாலே அது மகத்தான விழாதான் எங்களுக்கு என்றார்.
கேரள தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு என்று அரங்கின் முன்னால் பலகை போட்டுவிட்டு இப்படி திருப்தி அடைந்துவிடுகிறார்களே என்று இருந்தது.
திட்டமிட்டால் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று தோன்றியது.
தமிழிலிருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் புத்தகங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது பரஸ்பர இலக்கிய பரிமாற்றமாக இருக்கும் என்று மேடையில் சொன்னேன். ஆண்டுக்கு பத்துப் புத்தகங்களை அப்படி வெளியிட்டால் அது தமிழுக்கு ஆற்றும் மிகப் பெரிய சேவையாக இருக்கும். ஆரம்பத்தில் தமிழ் சங்கத்துக்கென இணையதளம் ஒன்று ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் வைத்தேன்.
நீல.பத்மநாபன், ஆ.மாதவன், ஜெயமோகன், சுகுமாரன் போன்ற எழுத்தாளர்களும் காலச்சுவடு போன்ற இலக்கிய இதழும் சங்கத்தின் அருகில் இருக்கும்போது இன்னும் சிறப்பாக செயல்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.
சனிக்கிழமை இரவு கூட்டம் முடிந்து அறைக்குச் சென்று தங்கினோம். மறுநாள் காலை சென்னையை நோக்கி பயணம்.

திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வழியாக மதுரையை அடைந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். திருவனந்தபுரமத்திலிருந்து செங்கோட்டை வரும்போது சாலையின் ஓரத்திலேயே ஒரு சிறிய மலையாறு நமக்கு வழிகாட்டியபடி வருகிறது. சாலைமமட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் அதற்கு சொர்க்கப்பாதை என்று பெயர் வைக்கலாம். காரைவிட்டு இறங்கி அங்கேயே தங்கிவிடலாம் என்று கணப்பித்து ஏற்படுகிறது.
மொழிவாரி மாநிலமாக பிரிக்காமல் இனவாரி மாநிலமாக பிரித்திருந்தால் சேரநாடும் இப்போது நம்மோடு இருந்திருக்கும். "கடவுளின் சொந்த தேசம்' தமிழ்நாட்டில் இருந்திருக்கும்.


படங்கள்
ஷைலஜாவுடன்
நீல.பத்மனபானுடன்

LinkWithin

Blog Widget by LinkWithin