ஆதர்ச தம்பதி
அறுபதுகளில் இருந்த அந்தத் தம்பதிகள் தங்களுடைய 40-வது திருமண நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். 
அவர்கள் முன் தேவதை ஒன்று தோன்றி, ""உங்களைப் போன்ற ஆதர்ச தம்பதிகளுக்குத் தலா ஒரு வரம் தர விரும்புகிறேன்'' என்றது. 
மனைவியோ ""நான் என் கணவருடன் உலக நாடுகள் முழுவதையும் சுற்றிவர விமான டிக்கெட் வேண்டும்'' என்றாள். 
அடுத்த வினாடி டிக்கெட்டுகள் வந்து சேர்ந்தன. 
அடுத்து கணவனின் முறை. தேவதை அவன் பக்கம் திரும்பியது. கணவன் ரகசியமாக தேவதையின் காதில் சொன்னான்: 
""என் மனைவிக்குப் பதிலாக என் கேர்ள் ஃப்ரண்ட் பெயருக்கு டிக்கெட்டை மாற்றித் தரமுடியுமா?''
 
 
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக