வெள்ளி, ஜனவரி 20, 2012

எழுத்தாளர்களும் நடிகை வடிவுக்கரசியும்- ஒரு சவால்!

சனிக்கிழமை (21.01.12) இரவு எட்டுமணிக்கு ஒருவார்த்தை ஒரு லட்சம் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் எழுத்தாள்ர்கள் சுற்று இடம்பெறுகிறது. சாருநிவேதிதா, அஜயன்பாலா, அராத்து ஆகியோருடன் நான் பங்கேற்று இருக்கிறேன்.
எழுத்துத் திறமைக்கும் மொழி அறிவுக்கும் போட்டி மனப்பான்மைக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் நால்வருமே திணறினோம் என்பதுதான் சரி. பத்தாயிரம் ரூபாய் சுற்றில் கூட வெல்ல முடியவில்லை ஒரு லட்ச ரூபாயை இதுவரை வென்றவர் நடிகை வடிவுக்கரசி மட்டும்தான் என்றார்கள்.
இந்தப் போட்டியில் வெல்வது ஒரு பயிற்சிதான். அந்தப் பயிற்சியில்லாவிட்டால் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றவர்கள் வந்தாலும் ஜெயிப்பது கடினம்தான்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Blog Widget by LinkWithin