திங்கள், ஆகஸ்ட் 07, 2006

""மூன்று விதமான மனிதர்களின்
வாழ்க்கையை, பெரியார் வாழ்ந்திருக்
கிறார்.
வியாபாரி, காங்கிரஸ்காரர்,
சுயமரியாதை போராளி. இதுதான்
அந்த மூன்று கட்டங்கள். அவருடைய 95
அண்டு கால வாழ்க்கையில் முக்கி
யமான சம்பவங்களைத் தொகுத்து
இரண்டரை மணி நேர சினிமாவுக்குள்
அடக்கு வது மிகப் பெரிய
சவாலாகத்தான் இருக்கிறது.

பெரியாரின் கதை நீண்டதாக இருந்தாலும் «அதற்கு திரைக்கதை
அமைத்து வசனம் ஊழுதுகிற சிரமமான வேலையை எங்களுக்கு பெரியாரே
செய்து கொடுத்து விட்டார்'' என்று பேச ஆரம்பித்தார் "பெரியார்'
இயக்குநர் ஞான.ராஜசேகரன்."

"என்னது, அவருடைய கதைக்கு அவரே திரைக்கதை, வசனம் ஊழுதி
விட்டாரா?'' என்று ஆர்வமானோம்.

சிரித்துவிட்டுத் தொடர்கிறார்.
""தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை முக்கிய சம்பவங்களையும் அவரே மிக அழகான மொழி நடையில் திரைக்கதை போல எழுதியிருக்கிறார்
என்பதைத்தான் அப்படிச் சொன்னேன். நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை
என்பதற்கு ஒரு உதாரணத்தைச் செல்றேன். பெரியார் காசியிலே சாமியா
ராகச் சுற்றித்திரிந்தார் என்று ஒரு தகவல் கேள்விப்பட்டிருப்பீர்கள். தான்
சாமியார் ஆனதற்கான காரணத்தையும் அவரே விவரித்திருக்கிறார்.

பிராமணர்களுக்கு விருந்து எற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விருந்தில் உரை எமாற்றிக் கொண்டிருக்கும் நபர்
ஒருவர் கலந்து கொள்ள வந்திருப்பது தெரிகிறது. அவரைக் கையும் க
ளவுமாகப் பிடித்துத் தாக்கினேன். தீட்டுப்பட்டு விட்டதாக பிராமணர்கள்
சாப்பிடாமல் சென்றுவிட்டனர். விஷயம் என் தந்தை வெங்கட நாயக்கரிடம் செல்கிறது. அந்த அன்னதானத்தை
எற்பாடு செய்தவரே அவர்தான். ஒன்றும் நடக்காதது போல் நேராக மண்டிக்கு வந்து அமர்ந்திருந்த என்னிடம்
விசாரித்தார்.."ஒ.சி. சாப்பாடு சாப்பிட வந்தவர்கள்
தானே? சாப்பிடாமல் போனால் என்ன?' என்றேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. செருப்பைக் கழற்றி 7 அல்லது 8 அடி
அடித்தார்'
என்று விவரித்திருந்தார் பெரியார்.

அந்தக் கோபத்தில் காசியில் சுற்றித் திரிந்துவிட்டு ஆந்திராவில் தந்தையின்
நண்பர் எலூர் சுப்ரமணியம் என்பவரின் வீட்டில் வந்து தங்கியிருந்த போது
அவருடைய தந்தை அங்கு அவரைத் தேடி வந்ததைப் பற்றி எழுதுகிறார்.

மகனைப் பிரிந்த வேதனையில் அவர் தேடாத ஆடமில்லை. பிள்ளையை பறி
கொடுத்து விட்டோம் என்ற முடிவுக்கே வந்து விடுகிறார். ஆனால் பிள்ளையைப் அந்தத் தவக்கோலத்தில் பார்த்ததும்
அவருக்கு சிரிப்பு வந்தது. பதிலுக்கு தானும் சிரித்ததாக எழுதியிருக்கி
றார். பிறகு "செருப்பால் அடிச்சதாலதானே ஒடி வந்துட்ட? நாங்கள்
விசாரிக்காத ட்ராமா கம்பெனி இல்ல, தாசிவீடு இல்லை' என்று அழ
ஆரம்பிக்கிறார் தந்தை.
ஆக, படம் எடுப்பதற்கு அதன் ஹீரோவே எங்களுக்கு முழு ஸ்கிரிப்டையும் டயலாக்கோடு தந்திருக்கிறார். ஆதுதான் என்னைப் படமெடுக்கத் தூண்டியது -
இயக்குகிறது' என்று பரவசப்படுகிறார் ராஜசேகரன்.

அனால் ஆந்தக் காட்சியைப் படமெடுப்பதற்குப் பட்டபாடு இன்னொரு
சுவாரஸ்யம்.""இந்தக் காட்சியில் பெரியாராக
சத்யராஜும், தந்தை வெங்கட நாயக்கராக தெலுங்கின் முன்னணி
நடிகர் சத்யநாராயணாவும் நடித்தார்கள்.இருவருமே அந்தக் கேரக்டரை
உள்வாங்கிக் கொண்டு, பிரிந்தவர் கூடிய நெகிழ்ச்சியில் உணர்ச்சி
வசப்பட்டு அழுகிறார்களே தவிர, பெரியார் வர்ணித்ததுபோல சிரித்துக்
கொள்ள முடியவில்லை.

"இந்தக் காட்சியில் என்னால் சிரிக்க முடியவில்லை. மன்னித்துவிடுங்கள்'
என்கிறார் சத்யநாராயணா. காரணம், அவர் பெரியாரின்
தந்தையாகவே மாறிவிட்டார். வேறுவழியில்லாமல் சிரித்துக் கொள்வது
போல் இல்லாமல் கண்கலங்கிப் போவதை மட்டுமே படம் பிடித்தோம்''
என்று கூறி விட்டு, படத்தில் ""நகைச்சுவைக் காட்சிகளுக்கும் பஞ்சம்
இருக்காது. பெரியார் எவ்வளவு சீரியசான மனிதரோ, அந்த அளவுக்கு
நகைச்சுவை உணர்வும் மிக்கவராக இருந்தார்'' என்றார்.
பெரியார் வீட்டைவிட்டுப் போகும்போது அணிந்திருந்த அத்தனை நகைகளையும் தந்தையிடம் திருப்பிக் கொடுக்கிறார். "எல்லா நகையும் அப்படியே இருக்கே... எப்படி சாப்பிட்டே இவ்வளவு நாளா?'
என்று கேட்கிறார் தந்தை. மகன் அளிக்கும் பதில்: "நீங்களும்,
அம்மாவும் இரோட்டில் செய்த அன்னதானம் அத்தனையையும் வட்டியும்
முதலுமா வசூல் செஞ்சுட்டேன்.''"

"பெரியார் பெரிய சிந்தனையாளராக இருந்தார். ரஸ்ஸல் சொன்னார்,
இங்கர்சால் சொன்னார், வள்ளுவர் சொன்னார் போன்ற மேற்கோள்களைப்
பயன்படுத்தாமல் ஒவ்வொரு பிரச்சினையிலும் தான் எற்படுத்திக்
கொண்ட அபிப்ராயங்களையே சிந்தனைகளாகச் சொல்-வந்தார்.மகாத்மா காந்தியிடம் அவர் வர்ணாசிரம கொள்கை எதிர்ப்பு
காரணமாகத்தான் பிரிகிறார். படத்தில் முக்கியமான காட்சி இது.அவருடைய நண்பர் ராமநாதனுடன் மாட்டு வண்டியில் போய்க்
கொண்டிருக்கிறார்.

காந்திஜி, வர்ணாசிரமத்தை ஆதரிச்சுப் பேசியிருக்காரே...? பேப்பரைப் பார்த்
தீங்களா...? என்கிறார் ராமநாதன்.""படிங்க... கேட்கலாம்'' என்கிறார்
பெரியார். ராமநாதன் பேப்பரைப் படிக்கிறார்.""ஒவ்வொரு குலத்தார்களும்
அவர்களுக்கான தொழிலைச் சரிவரச் செய்தாலே அவர்கள் உயர்ந்தவர் அ
கிறார்கள். இதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது?''

பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்- அங்கே போய்க்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.அவனிடம் "தம்பி எனக்கு ஒரு
சந்தேகம். ஒழுங்கா செருப்பு தைக்கிறவன், ஒழுங்கா க்ஷவரம் செய்றவன்,
ஒழுங்கா மந்திரம் சொல்றவன் ஊல்லாம் ஒண்ணா?' என்று கேட்கிறார்.""தாத்தா ஈனக்கு மூளை கெட்டுப்
போச்சா? மந்திரம் சொல்றவங்க ஒசத்தி. க்ஷவரம் பண்றவர் அவருக்குக்
கீழே, செருப்பு தைக்கிறவர் அதற்குக் கீழே'' என்கிறான் சிறுவன்.உடனே பெரியார் பெங்களூரில் தங்கி இருந்த காந்திஜியை சந்திக்கிறார்.

"நீங்க உயர்ந்த எண்ணத்தில் சொல்றீங்க. ஆனா ரோட்டில் நடக்கிற
சின்னப் பையன் கூட இதை நம்பமாட்டான்' என்கிறார்.பெரியார் தன் ஆசைகளை தத்துவங்களாகச் சொன்னதில்லை.
நாட்டு நடப்பைத்தான் தன் சிந்தனையாகச் சொன்னார் என்பதற்கு ஆது
ஐரு உதாரணம்.

காந்திஜி, பெரியார் பேச்சு தொடர்கிறது. "உயர்ஜாதியில் ஒரு நல்லவர் கூடவா இல்லை?' என்கிறார் காந்தி."எனக்குத் தெரியலை' என்கிறார்
பெரியார்."என் கோபால கிருஷ்ணகோகலே
இல்லையா?' என்கிறார்.
"தங்களைப் போன்ற மகாத்மாவுக்கே ஒருத்தர் தான் நல்லவரா தெரிகி
றார்...' என்று பதில் தருகிறார்.காந்திஜிக்கு பெரியார் கருத்தில்
சம்மதமில்லை. "நாம் எல்லாம் சேர்ந்து நம் சமுகத்தில்
இருக்கும் குறைகளை நீக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது' என்கிறார்.
"மதத்தை வைத்துக் கொண்டு நிரந்தர சீர்திருத்தம் எதையும் செய்துவிட
முடியாது. அப்படி ஐரு சீர்திருத்தம் செய்ய நினைத்து அது மேல்சாதி
க்காரர்களின் நலனுக்கே எதிராக அமைந்தால் அவர்கள் உங்களை
உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள்' என்கிறார்.

1948-ல் காந்திஜிக்கு அதுதான் நடந்தது''என்றார் ஆயக்குநர்
ஞான.ராஜசேகரன்.
ராஜசேகரன் "பாரதி' படத்தைப் போல பலமடங்கு ஆதாரங்களுடன் படத்தை
உருவாக்கி வருவது அவருடைய பேச்சில் தெரிந்தது.-பர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ருவாகி வரும் இப்படத்துக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்கிறார்.
லெனின் எடிட்டிங் செய்கிறார்.
வித்யாசாகர் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். கலையை
ஜே.கே.வும், ஆடை வடிவமைப்பை சகுந்தலா ராஜசேகரனும் செய்கி
றார்கள்.இடுபாடும், திறமையும் உள்ள கலைஞர்களின் கூட்டணியில் வளர்ந்து வருகிறார் பெரியார்.

காரைக்குடியில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
அடுத்து இரோட்டிலும் காசியிலும் படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள்."நிழல்கள்' ரவி கோவை அய்யாமுத்துவாகவும், இயக்குநர்
ஆர்த்தி குமார் ராஜாஜியாகவும், ஊல்.ஏ.சி. நரசிம்மன் திரு.வி.க.வாகவும்
சந்திரசேகர் ராமநாதனாகவும் நாகம்மையாக ஜோதிர் மயி, தங்கை
கண்ணம்மையாக லாவண்யா, தாயாராக மனோரமாவும் நடிக்கி
றார்கள். காந்திஜியாக கேரளாவைக் சேர்ந்த ஜார்ஜ்பால் நடிக்கிறார்.பெரியாருக்கு சினிமா பிடிக்காது,
ஆனால் "பெரியாரை' சினிமாவுக்குப் பிடித்துவிட்டது தெரிகிறது.
- தமிழ்மகன்

2 கருத்துகள்:

பாவூரான் சொன்னது…

தகவலுக்கு நன்றி

Balamurugan சொன்னது…

படம் வெற்றிகரமாக ஓடாது என்பதை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்

LinkWithin

Blog Widget by LinkWithin